header photo

Friday, September 25, 2009

கனவுடன் மெய்ப்பாடும்....












___________________
ஆறறிவும் அஃறிணையும்...

ஆடையணிந்த ஆறறிவு..
ஐயறிவுயிரின் அம்மணத்தில்..
அமுங்கி விட்டதாகவே தோன்றுகிறது..!

ஐயறிவில் இயல்பான அன்பு..
ஆறில் விகாரமாவது..
வேற்றுமைப் புணர்ச்சியாலாம்..!

அன்பறிவித்தலை..
அன்பை.. பறித்து.. வித்தல்..
எனவும் கொள்வர்..
ஆறறிஞர்..!

அடச்சே என்பதல்ல..
அம்மணம்..
அடடே என்பதாகும்.. !

ஆடையற்றிருக்கும் மெய்..
அம்மணமன்று..!
மெய்யுற்றிருக்கும் மனமே..
அம்மணம்..!

____________________
உ(ய)யிரிலக்கணம்

அவள்.. அவன்.. அவர் உயர்திணை.. சரி..
அது.. அவை.. அஃறிணை சரி..
'அதுகள்' எவ்விதம் உயர்திணை..?
இல்லை அஃறிணை எனில்..
உனக்கென்ன அக்கறை..?!

கழுதைப்பால் கள்ளிப்பால்..
கறுப்பால் வெளுப்பால்..
பெண்பால் ஆண்பால்..
பிறப்பால் உழைப்பால்..
வேற்றுமை கண்டால்..
அவன்பால்.. இவன்பால்..
எவர்பால் இருப்பினும்..
அன்பால் பண்பால்..
பலவும் பாலின்பால்..
ஒற்றுமை கொண்டால்..
பாற்கடைகள்.. ஒன்றாகி..
பெயருமன்றி வினையுமன்றி..
பாலின் வெண்மைதனில்..
அடைமொழிகள் புணரும்கால்..
வரும்காலம்.. ஓருலகம்..
ஒரு கை பார்க்கலாம்..!

____________________




70 ஊக்கம்::

vasu balaji said...

/ஐயறிவில் இயல்பான அன்பு..
ஆறில் விகாரமாவது..
வேற்றுமைப் புணர்ச்சியாலாம்..!/

வார்த்தைகள் இல்லை பாராட்ட.

/அடச்சே என்பதல்ல..
அம்மணம்..
அடடே என்பதாகும்.. !/

ஒப்பு சொல்ல முடியாத வார்த்தை ஜாலத்தில் எல்லாம் கடந்த நிலை.

/ஆடையற்றிருக்கும் மெய்..
அம்மணமன்று..!
மெய்யுற்றிருக்கும் மனமே..
அம்மணம்..!/

எழுதினா இப்படி எழுதணும்மா. பிரமாதம்.

vasu balaji said...

/அவள்.. அவன்.. அவர் உயர்திணை.. சரி..
அது.. அவை.. அஃறிணை சரி..
'அதுகள்' எவ்விதம் உயர்திணை..?
இல்லை அஃறிணை எனில்..
உனக்கென்ன அக்கறை..?!/

பளார்.

/அவன்பால்.. இவன்பால்..
எவர்பால் இருப்பினும்..
அன்பால் பண்பால்..
பலவும் பாலின்பால்..
ஒற்றுமை கொண்டால்..
பாற்கடைகள்.. ஒன்றாகி..
பெயருமன்றி வினையுமன்றி..
பாலின் வெண்மைதனில்..
அடைமொழிகள் புணரும்கால்..
வரும்காலம்.. ஓருலகம்..
ஒரு கை பார்க்கலாம்..!/

உன்னில் பாரதி வந்தானோ?

vasu balaji said...

வார்த்தைச் சாட்டையால்
வக்கிரங்களுக்கு
வரி வரியாய்த் தழும்புகள்!

பாராட்ட வார்த்தையில்லை ப்ரியா

நசரேயன் said...

ஒண்ணுமே புரியலையே ..ஒண்ணுமே புரியலையே ..

அது சரி(18185106603874041862) said...

//

ஆடையணிந்த ஆறறிவு..
ஐயறிவுயிரின் அம்மணத்தில்..
அமுங்கி விட்டதாகவே தோன்றுகிறது..!

ஐயறிவில் இயல்பான அன்பு..
ஆறில் விகாரமாவது..
வேற்றுமைப் புணர்ச்சியாலாம்..!

அன்பறிவித்தலை..
அன்பை.. பறித்து.. வித்தல்..
எனவும் கொள்வர்..
ஆறறிஞர்..!

அடச்சே என்பதல்ல..
அம்மணம்..
அடடே என்பதாகும்.. !

ஆடையற்றிருக்கும் மெய்..
அம்மணமன்று..!
மெய்யுற்றிருக்கும் மனமே..
அம்மணம்..!
//

ஃபன்டாஸ்டிக்!!

அது சரி(18185106603874041862) said...

முதல் கவிதை ரொம்ப நல்லாருக்கு...

Unknown said...

//
அடச்சே என்பதல்ல..
அம்மணம்..
அடடே என்பதாகும்.. !
//

ஐந்தறிவுகளின் அம்மணம்
பார்த்து அடச்சே என்றா சொல்கிறோம்?..
உமது பாடலில் சொற்குற்றம் இல்லை.
பொருட்குற்றம் உளது..
( பதில் சொல்றேன்னு திட்டிப்புடாதீய தாயீ.. )

ஆரூரன் விசுவநாதன் said...

//பாற்கடைகள்.. ஒன்றாகி..
பெயருமன்றி வினையுமன்றி..
பாலின் வெண்மைதனில்..
அடைமொழிகள் புணரும்கால்..
வரும்காலம்.. ஓருலகம்..
ஒரு கை பார்க்கலாம்..!//

ரசனைக்குரியது மட்டுமல்ல.......
சிந்தனைக்குரியதும் கூட.

தொடர்ந்து எழுதுங்கள்....

வாழ்த்துக்கள்

அன்புடன்
ஆரூரன்

ப்ரியமுடன் வசந்த் said...

மாஸ்...

ஈரோடு கதிர் said...

//ஆடையணிந்த ஆறறிவு..
ஐயறிவுயிரின் அம்மணத்தில்..
அமுங்கி விட்டதாகவே தோன்றுகிறது..!//

மனம் இந்த வரிகளிலேயே நிலைகொண்டு தவிக்கிறது

அருமை பிரியா

மணிப்பக்கம் said...

// ஐயறிவில் இயல்பான அன்பு..
ஆறில் விகாரமாவது..
வேற்றுமைப் புணர்ச்சியாலாம்..! //

என்னடா இது .. என்ன நடக்குது ...
நம்பவே முடியல பிரியா ...

திமுக - ல சேர்த்து உட்டுடவா ... கவிஞி பஞ்சமாம் அங்கே ...

கடவுளே, இன்னும் நம்ப முடியல நான் எங்கே இருக்கேன்னு ...
சனிகிழமை இன்னும் ஆரம்பிக்கல, அதுக்குள்ள போதை யாயிருச்சு ...

5அறிவில் இயல்பானது, 6-ல் விகாரமானது ....
வேற்றுமை புணர்ச்சியாலாம் ...?

I LOVE THIS TOTALLY .... !

எப்படி ... இப்படி ... அவ்ளோ ....

வாழ்த்துக்கள்...!

R.Gopi said...

இந்த கவிதையை பற்றி என்ன‌ சொல்ல‌...

மிக‌ மிக‌ ந‌ன்றாக‌ உள்ள‌து...

நீங்க‌ள் எழுதுவ‌தில் இப்போது புதிய‌ நிலையை அடைந்திருக்கிறீர்க‌ள்.. உங்க‌ள் எழுத்து மிக‌வும் ப‌ண்ப‌ட்டு இருக்கிற‌து...

என் ம‌ன‌மார்ந்த‌ வாழ்த்துக்க‌ள் ல‌க‌ல‌க‌...இந்த வாழ்த்து ரொம்ப‌ கொற‌ச்ச‌ல்தான்...

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...

/ஐயறிவில் இயல்பான அன்பு..
ஆறில் விகாரமாவது..
வேற்றுமைப் புணர்ச்சியாலாம்..!/

வார்த்தைகள் இல்லை பாராட்ட.

/அடச்சே என்பதல்ல..
அம்மணம்..
அடடே என்பதாகும்.. !/

ஒப்பு சொல்ல முடியாத வார்த்தை ஜாலத்தில் எல்லாம் கடந்த நிலை.

/ஆடையற்றிருக்கும் மெய்..
அம்மணமன்று..!
மெய்யுற்றிருக்கும் மனமே..
அம்மணம்..!/

எழுதினா இப்படி எழுதணும்மா. பிரமாதம்.//

ரொம்ப ரொம்ப நன்றிங்க.. இப்டி வார்த்தை ஜாலம் எல்லாம் கடந்த நிலைன்னு ஏதோ சொல்லி பயமுறுத்தாதீங்க சார்..

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...

உன்னில் பாரதி வந்தானோ?//

வந்துட்டாலும்..

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...

வார்த்தைச் சாட்டையால்
வக்கிரங்களுக்கு
வரி வரியாய்த் தழும்புகள்!

பாராட்ட வார்த்தையில்லை ப்ரியா//

அதான் எல்லா வார்த்தையும் யூஸ் பண்ணிட்டீங்களே.. இப்போ வார்த்தை இல்லைனா எப்டி..

கலகலப்ரியா said...

//நசரேயன் said...

ஒண்ணுமே புரியலையே ..ஒண்ணுமே புரியலையே ..//

எனக்கும் இப்டிதான்பா.. இலக்கணம் சுத்தி சுத்தி மீன் புடிப்பாங்க.. புரியவே புரியாது.. அதுக்காக இப்டியா புலம்பறது.. வீதில தலைய பிச்சிக்கிட்டு புலம்பற மாதிரி படம் வருதே..

கலகலப்ரியா said...

//அது சரி said...

//

ஆடையணிந்த ஆறறிவு..
ஐயறிவுயிரின் அம்மணத்தில்..
அமுங்கி விட்டதாகவே தோன்றுகிறது..!

ஐயறிவில் இயல்பான அன்பு..
ஆறில் விகாரமாவது..
வேற்றுமைப் புணர்ச்சியாலாம்..!

அன்பறிவித்தலை..
அன்பை.. பறித்து.. வித்தல்..
எனவும் கொள்வர்..
ஆறறிஞர்..!

அடச்சே என்பதல்ல..
அம்மணம்..
அடடே என்பதாகும்.. !

ஆடையற்றிருக்கும் மெய்..
அம்மணமன்று..!
மெய்யுற்றிருக்கும் மனமே..
அம்மணம்..!
//

ஃபன்டாஸ்டிக்!!//

ரொம்ப ரொம்ப நன்றி விக்ரமாதித்தன்

கலகலப்ரியா said...

//அது சரி said...

முதல் கவிதை ரொம்ப நல்லாருக்கு...//

இரண்டாவது சகிக்கலைன்னு சொல்றதோட அழகு இது.. =)).. நன்றிங்..

கலகலப்ரியா said...

//rajesh said...

//
அடச்சே என்பதல்ல..
அம்மணம்..
அடடே என்பதாகும்.. !
//

ஐந்தறிவுகளின் அம்மணம்
பார்த்து அடச்சே என்றா சொல்கிறோம்?..
உமது பாடலில் சொற்குற்றம் இல்லை.
பொருட்குற்றம் உளது..
( பதில் சொல்றேன்னு திட்டிப்புடாதீய தாயீ.. )//

அப்பனே.. அம்மணம் என்பதை ஐந்துக்கும் ஆறுக்கும் பொதுவில் வை... சரி ஆயிடும்..

கலகலப்ரியா said...

//ஆரூரன் விசுவநாதன் said...

//பாற்கடைகள்.. ஒன்றாகி..
பெயருமன்றி வினையுமன்றி..
பாலின் வெண்மைதனில்..
அடைமொழிகள் புணரும்கால்..
வரும்காலம்.. ஓருலகம்..
ஒரு கை பார்க்கலாம்..!//

ரசனைக்குரியது மட்டுமல்ல.......
சிந்தனைக்குரியதும் கூட.

தொடர்ந்து எழுதுங்கள்....

வாழ்த்துக்கள்

அன்புடன்
ஆரூரன்//

ரொம்ப நன்றி ஆரூரன்..

கலகலப்ரியா said...

//பிரியமுடன்...வசந்த் said...

மாஸ்...//

நசரேயன் பதில் படிக்கவும்.. :((.. இன்னா பாஷை ஐயா இது..

கலகலப்ரியா said...

//கதிர் - ஈரோடு said...

//ஆடையணிந்த ஆறறிவு..
ஐயறிவுயிரின் அம்மணத்தில்..
அமுங்கி விட்டதாகவே தோன்றுகிறது..!//

மனம் இந்த வரிகளிலேயே நிலைகொண்டு தவிக்கிறது//

சரி சரி மேற்கொண்டு படிங்க.. =)

// அருமை பிரியா//

நன்றி..

கலகலப்ரியா said...

//மணிப்பக்கம் said...

// ஐயறிவில் இயல்பான அன்பு..
ஆறில் விகாரமாவது..
வேற்றுமைப் புணர்ச்சியாலாம்..! //

என்னடா இது .. என்ன நடக்குது ...
நம்பவே முடியல பிரியா ...

திமுக - ல சேர்த்து உட்டுடவா ... கவிஞி பஞ்சமாம் அங்கே ...

கடவுளே, இன்னும் நம்ப முடியல நான் எங்கே இருக்கேன்னு ...
சனிகிழமை இன்னும் ஆரம்பிக்கல, அதுக்குள்ள போதை யாயிருச்சு ...

5அறிவில் இயல்பானது, 6-ல் விகாரமானது ....
வேற்றுமை புணர்ச்சியாலாம் ...?

I LOVE THIS TOTALLY .... !

எப்படி ... இப்படி ... அவ்ளோ ....

வாழ்த்துக்கள்...!//

என்ன மணி இது.. திமுக.. கவிஞின்னு ஆரம்பிச்சீங்க சரி.. போதை ஆயிரிச்சின்னு சொல்லிட்டு.. பாராட்டினா.. போதைல உளர்றீங்கன்னு நினைச்சிக்க மாட்டாங்களா அவ்வ்வ்வ்வ்.... :((

ரொம்ப நன்றி.. எனக்கு போதை ஆயிரிச்சி இந்த பாராட்டுக்கள்ல ..

கலகலப்ரியா said...

//R.Gopi said...

இந்த கவிதையை பற்றி என்ன‌ சொல்ல‌...

மிக‌ மிக‌ ந‌ன்றாக‌ உள்ள‌து...

நீங்க‌ள் எழுதுவ‌தில் இப்போது புதிய‌ நிலையை அடைந்திருக்கிறீர்க‌ள்.. உங்க‌ள் எழுத்து மிக‌வும் ப‌ண்ப‌ட்டு இருக்கிற‌து...

என் ம‌ன‌மார்ந்த‌ வாழ்த்துக்க‌ள் ல‌க‌ல‌க‌...இந்த வாழ்த்து ரொம்ப‌ கொற‌ச்ச‌ல்தான்...//

ரொம்ப நன்றி கோபி..

க.பாலாசி said...

//ஐயறிவில் இயல்பான அன்பு..
ஆறில் விகாரமாவது..
வேற்றுமைப் புணர்ச்சியாலாம்..!//

//பாலின் வெண்மைதனில்..
அடைமொழிகள் புணரும்கால்..
வரும்காலம்.. ஓருலகம்..
ஒரு கை பார்க்கலாம்..!//

எல்லாமே அழகான வார்த்தைகள்....

சிங்கக்குட்டி said...

கூல்.. நல்லா இருக்குங்க :-)

சூர்யா ௧ண்ணன் said...

ஐயோ! சூப்பருங்க!
உங்கள மாதிரி எழுத வராது எனக்கு..,
என் கவிதை கடையை மூடிவிட வேண்டியதுதான்!

எழுதினா இப்படித்தான் எழுதனும்னு, சொல்லாமல் சொல்லிட்டிங்க..,
(இதுதான் பைசா செலவில்லாமல் பயிற்சி தரேன்னு சொன்னதற்கு அர்த்தமா? )

(தாமதமாக வந்துவிட்டேன். மன்னிக்கவும்..)

Sanjai Gandhi said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...
ரொம்பாஆஆஆஆ பெரிய கவுஜாயினி ஆய்ட்டிங்க.. பாதி கூட புரியலை.. ஆனாலும் ஒரு “கை” பார்ப்போம்.. :))

thiyaa said...

அருமையான படைப்பு

கலகலப்ரியா said...

//க.பாலாஜி said...

//ஐயறிவில் இயல்பான அன்பு..
ஆறில் விகாரமாவது..
வேற்றுமைப் புணர்ச்சியாலாம்..!//

//பாலின் வெண்மைதனில்..
அடைமொழிகள் புணரும்கால்..
வரும்காலம்.. ஓருலகம்..
ஒரு கை பார்க்கலாம்..!//

எல்லாமே அழகான வார்த்தைகள்....//

ரொம்ப நன்றி பாலாஜி..

கலகலப்ரியா said...

//சிங்கக்குட்டி said...

கூல்.. நல்லா இருக்குங்க :-)//

நன்றி.. :)

கலகலப்ரியா said...

//சூர்யா ௧ண்ணன் said...

ஐயோ! சூப்பருங்க!//

நன்றிங்கோ..

// உங்கள மாதிரி எழுத வராது எனக்கு..,//

தோடா என்னை மாதிரி நீங்க எழுதினா.. உங்கள மாதிரி யார் எழுதுவா..

// என் கவிதை கடையை மூடிவிட வேண்டியதுதான்!//

ஏன் நல்லாதானே போய்க்கிட்டிருக்கு.. நமக்கு போர் அடிச்சா வந்து கலாய்க்க வேணமா.. அதுக்காவது கடைய மெயின்டேய்ன் பண்ண வேண்டியதுதான்...

// எழுதினா இப்படித்தான் எழுதனும்னு, சொல்லாமல் சொல்லிட்டிங்க..,
(இதுதான் பைசா செலவில்லாமல் பயிற்சி தரேன்னு சொன்னதற்கு அர்த்தமா? )//

ச்சே ச்சே.. பதிலுக்கு பதில் சொல்றதுக்குதான் நாம பயிற்சி தர முடியும்.. மத்தச் சரக்கு பற்றாக்குறை..

//(தாமதமாக வந்துவிட்டேன். மன்னிக்கவும்..)//

வந்துட்டீங்கள்ல.. அப்புறம் என்ன.. சரி மன்னித்து விட்டோம்..

கலகலப்ரியா said...

கலகலப்ரியா said...

//SanjaiGandhi said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...
ரொம்பாஆஆஆஆ பெரிய கவுஜாயினி ஆய்ட்டிங்க..//
நீங்களே கவி ஆறப்போ.. நாம ஆக மாட்டோமா..ஹெஹே

// பாதி கூட புரியலை.. ஆனாலும் ஒரு “கை” பார்ப்போம்.. :))//
இந்த ஸ்கூல் பழக்கம் ப்ளாக் வரைக்கும்... புரியற மாதிரியா படைச்சிருக்கான் தலைய..

கலகலப்ரியா said...

//தியாவின் பேனா said...

அருமையான படைப்பு//

நன்றி தியா..

துபாய் ராஜா said...

கலகலப்ரியா
கவிதை கூட
எழுதுறாங்களே
ஆச்சர்யக்குறி....

:))

கலகலப்ரியா said...

//துபாய் ராஜா said...

கலகலப்ரியா
கவிதை கூட
எழுதுறாங்களே
ஆச்சர்யக்குறி....

:))//

ஓஓஓஓஒ.. அப்போ இவ்ளோ நாள் எழுதின கவிதைய படிக்கலையா.. இல்ல எழுதினது கவிதை இல்லைங்கிறீங்களா.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

நாளும் நலமே விளையட்டும் said...

ஆடையற்றிருக்கும் மெய்..
அம்மணமன்று..!
மெய்யுற்றிருக்கும் மனமே..
அம்மணம்..!

இந்த வரிகளுக்கு கொஞ்சம் விளக்கம் தாங்களேன்?

எல்லோரும் பாராட்டராங்களா? எதோ விஷயம் இருக்குன்னு மட்டும் தெரியுது.
என்னான்னு புரியல!

அம்மணம் (நிர்வாணம்) எல்லாம் அறிந்த நிலை! இப்படி எல்லாம் போயடலியே?

கலகலப்ரியா said...

//நாளும் நலமே விளையட்டும் said...

ஆடையற்றிருக்கும் மெய்..
அம்மணமன்று..!
மெய்யுற்றிருக்கும் மனமே..
அம்மணம்..!

இந்த வரிகளுக்கு கொஞ்சம் விளக்கம் தாங்களேன்?

ல்லோரும் பாராட்டராங்களா? எதோ விஷயம் இருக்குன்னு மட்டும் தெரியுது.
என்னான்னு புரியல!

அம்மணம் (நிர்வாணம்) எல்லாம் அறிந்த நிலை! இப்படி எல்லாம் போயடலியே?

//

இது பத்தி ஒரு பெரிய கட்டுரையே எழுதலாமுங்க.. ஆனாலும் கொஞ்சம் ட்ரை பண்றேன்.. இது நீங்க சொன்ன "எல்லாம் அறிந்த நிலை இல்லைங்க.." ஒரு விஷயத்த உள்ளத உள்ளபடியே சொல்றதுன்னு எடுத்துக்கலாம்.. மனசில ஒண்ண வச்சுக்கிட்டு வெளில ஒண்ணு பேசறப்போ.. அங்க ஒரு மாஸ்க்.. ஆடை.. அலங்கார வார்த்தை வருது.. அது தவிர்த்து வெறுமனே நிஜத்த சொன்னா தேவலாம்னு நினைக்கறேன்.. அத எப்படி சொல்லணும்கிறது அவங்க அவங்க அணுகுமுறையைப் பொறுத்தது..

ப்ரியமுடன் வசந்த் said...

யக்கோவ்,,,ஆன்லைன்லயா இருக்கீக.....

நாளும் நலமே விளையட்டும் said...

உங்க விளக்கம் கொஞ்சம் புரிஞ்சமாதிரிதான் இருக்கு!

கலகலப்ரியா said...

//பிரியமுடன்...வசந்த் said...

யக்கோவ்,,,ஆன்லைன்லயா இருக்கீக.....
//

ஆமாங்கோ..

கலகலப்ரியா said...

//நாளும் நலமே விளையட்டும் said...

உங்க விளக்கம் கொஞ்சம் புரிஞ்சமாதிரிதான் இருக்கு!
//

புரியலன்னா என்னனு கேக்கலாமுங்க.. நோ ப்ராப்ளம்.. ஹிஹி..

நாளும் நலமே விளையட்டும் said...

ஆமாம், உங்களுக்கு எப்படி இவ்வளவு அழகான டெம்ப்ளட் எல்லாம் கிடைக்குது?

கலகலப்ரியா said...

//நாளும் நலமே விளையட்டும் said...

ஆமாம், உங்களுக்கு எப்படி இவ்வளவு அழகான டெம்ப்ளட் எல்லாம் கிடைக்குது?//

சிறு தேடுதல் முயற்சிதானுங்க..

நாளும் நலமே விளையட்டும் said...

இவ்வளவு விரைவா பதில் இப்பதான் பார்கிறேன்.

கலகலப்ரியா said...

//நாளும் நலமே விளையட்டும் said...

இவ்வளவு விரைவா பதில் இப்பதான் பார்கிறேன்.
//

=)) நான் இன்னும் பந்தா பண்ண ஆரம்பிக்கலைங்க... ஆப்பிள் ஜூஸ் + கூலிங் கிளாஸ் மிஸ்ஸிங்..

ப்ரியமுடன் வசந்த் said...

////நாளும் நலமே விளையட்டும் said...

இவ்வளவு விரைவா பதில் இப்பதான் பார்கிறேன்.
//

=)) நான் இன்னும் பந்தா பண்ண ஆரம்பிக்கலைங்க... ஆப்பிள் ஜூஸ் + கூலிங் கிளாஸ் மிஸ்ஸிங்..//

பொய் பொய்...இந்த ஆத்தா பண்ற அலும்புக்கு அளவேயில்லைங்கோ......பின்னூட்டமெல்லாம் எல்லா இடுகையிலயும் படிச்சுப்பாருங்கங்கோ.....

கலகலப்ரியா said...

//பிரியமுடன்...வசந்த் said...

////நாளும் நலமே விளையட்டும் said...

இவ்வளவு விரைவா பதில் இப்பதான் பார்கிறேன்.
//

=)) நான் இன்னும் பந்தா பண்ண ஆரம்பிக்கலைங்க... ஆப்பிள் ஜூஸ் + கூலிங் கிளாஸ் மிஸ்ஸிங்..//

பொய் பொய்...இந்த ஆத்தா பண்ற அலும்புக்கு அளவேயில்லைங்கோ......பின்னூட்டமெல்லாம் எல்லா இடுகையிலயும் படிச்சுப்பாருங்கங்கோ.....//

அட... வேலை வெட்டின்னு போற நேரம் தவிர.. இங்க இருக்கிறப்போ.. சட்டு சட்டுன்னு பதில் போட்டுடுவோமுங்க.. வசந்து.. இப்டி சேம் சைட் கோல் போடலாமாப்பா..

ப்ரியமுடன் வசந்த் said...

சரி சரி

சுவிஸ்ல எல்லாரையும் கேட்டதா சொல்லுங்க

வரும்போது அந்த சுவிஸ் பேங்க்ல இருக்குற பணத்துல எனக்கு 0.25 % எடுத்துட்டு வந்துடுங்க...

கலகலப்ரியா said...

//பிரியமுடன்...வசந்த் said...

சரி சரி

சுவிஸ்ல எல்லாரையும் கேட்டதா சொல்லுங்க

வரும்போது அந்த சுவிஸ் பேங்க்ல இருக்குற பணத்துல எனக்கு 0.25 % எடுத்துட்டு வந்துடுங்க...//

feedjit punniyam.. athai oorukke sollanumaappaa.. raasaa.. yenpaa.. yean..?

ப்ரியமுடன் வசந்த் said...

ஏனுங் க்கா ஏன் தமிழ் பொண்ணு சுவிஸ்ல வேலை செய்றாங்கன்னு நினைக்கும்போது பெருமையாத்தான இருக்கு...எங்களுக்கு எல்லாம் சான்ஸ் கிடைக்கலன்னு பொறாமையா இருக்குறதும் நிஜம்தான்

கலகலப்ரியா said...

//பிரியமுடன்...வசந்த் said...

ஏனுங் க்கா ஏன் தமிழ் பொண்ணு சுவிஸ்ல வேலை செய்றாங்கன்னு நினைக்கும்போது பெருமையாத்தான இருக்கு...எங்களுக்கு எல்லாம் சான்ஸ் கிடைக்கலன்னு பொறாமையா இருக்குறதும் நிஜம்தான்//

அது சரி.. என்னதான் இருந்தாலும் நம்ம ஊர் போல வருமாப்பா... அக்கரைப் பச்சை...

ப்ரியமுடன் வசந்த் said...

நல்லா இருக்கு எல்லாம் சுத்தி பாத்து அனுபவிச்சுட்டு அக்கரைப்பச்சைன்னு சொல்றீங்களே நியாயமா?

பணம் கிடைக்குது தானே...அது நம்ம ஊர்ல கம்மியாத்தானே கிடைக்குது...அதுக்காக நாம் குடுக்குற விலை ஜாஸ்தி பாசம்,அன்பு எல்லாத்தையும் விட்டுட்டு இப்பிடி அடிச்சுபோட்டா கூட யாருன்னு கேக்க கூட ஆளில்லாத இடத்துல வந்து இருக்கும் போதும் மன்சு கஷ்டமா இருக்கு....எப்போ பிப்ரவரி வரும்ன்னு இருக்கு ....சீக்கிரம் ஊருக்கு போகணும் அம்மா கையால சாம்பார் சாதம் சாப்பிடணும்....

கலகலப்ரியா said...

//பிரியமுடன்...வசந்த் said...

நல்லா இருக்கு எல்லாம் சுத்தி பாத்து அனுபவிச்சுட்டு அக்கரைப்பச்சைன்னு சொல்றீங்களே நியாயமா?

பணம் கிடைக்குது தானே...அது நம்ம ஊர்ல கம்மியாத்தானே கிடைக்குது...அதுக்காக நாம் குடுக்குற விலை ஜாஸ்தி பாசம்,அன்பு எல்லாத்தையும் விட்டுட்டு இப்பிடி அடிச்சுபோட்டா கூட யாருன்னு கேக்க கூட ஆளில்லாத இடத்துல வந்து இருக்கும் போதும் மன்சு கஷ்டமா இருக்கு....எப்போ பிப்ரவரி வரும்ன்னு இருக்கு ....சீக்கிரம் ஊருக்கு போகணும் அம்மா கையால சாம்பார் சாதம் சாப்பிடணும்....//

ஐயோ சாமி.. ஊருக்கு போயீ சாம்பார் சாதம் சாப்பிடுப்பா... ! இந்தப் புள்ளாண்டானுக்கு புரியற விஷயமில்ல இது... !

ப்ரியமுடன் வசந்த் said...

இனிமே வர மாட்டேனுங்க.... உங்க பேச்சு கா

கலகலப்ரியா said...

//பிரியமுடன்...வசந்த் said...

இனிமே வர மாட்டேனுங்க.... உங்க பேச்சு கா//

ச்சோ... இந்த புள்ளைய இப்டி பண்ணி வச்சிருக்காங்களே.. இப்டி கோச்சுக்கப்டாதுப்பா.. ப்ளாக் லோகம் தாங்குமாப்பா.. என்னை மாதிரி சமர்த்தா இருந்துக்கோப்பா..

அது சரி(18185106603874041862) said...

//
கலகலப்ரியா said...
//அது சரி said...

முதல் கவிதை ரொம்ப நல்லாருக்கு...//

இரண்டாவது சகிக்கலைன்னு சொல்றதோட அழகு இது.. =)).. நன்றிங்..

September 26, 2009 7:40 AM
//

நைசா முக்காடு போட்டுக்கிட்டு எஸ்கேப் ஆகிடலாம்னு பார்த்தேன்...முடியாது போலருக்கே :0))

ம்ம்ம்ம்...நேத்தி நைட்டு படிச்சி பார்த்தேன்...புரிஞ்சதா புரியலையான்னு சரியா புரியலை....சரி விஸ்கி ரொம்ப அடிச்சிட்டோம் போலன்னு இன்னிக்கு காலைல படிச்சி பார்த்தேன்...ம்ஹூம்....

எனக்கு ரெண்டாவது கவிதை என்ன சொல்ல வருதுன்னு புரியலீங்க...நானெல்லாம் நாலாங்கிளாஸ் ஃபெயிலு......:0)))

கலகலப்ரியா said...

//எனக்கு ரெண்டாவது கவிதை என்ன சொல்ல வருதுன்னு புரியலீங்க...நானெல்லாம் நாலாங்கிளாஸ் ஃபெயிலு......:0)))//

சரி விடுங்க.. இன்னும் தெளியல போல.. =))

அது சரி(18185106603874041862) said...

//
கலகலப்ரியா said...
//எனக்கு ரெண்டாவது கவிதை என்ன சொல்ல வருதுன்னு புரியலீங்க...நானெல்லாம் நாலாங்கிளாஸ் ஃபெயிலு......:0)))//

சரி விடுங்க.. இன்னும் தெளியல போல.. =))

September 26, 2009 11:07 PM
//

தெளிஞ்சா மட்டும் புரிஞ்சிருமாக்கும்.....நாலாங்கிளாஸ்ல ஃபெயில் ஆனது ஆனது தான?? எனக்கு புரிஞ்சது அவ்வளவு தான்....:0)))

Unknown said...

கலக்கல் கவிதை சகோதரி....!! நீங்க தமிழ் டீச்சரா....? கவிதையே இலக்கணமா இருக்கே...

கயல் said...

மெச்சூரிட்டி மெச்சூரிட்டுன்னு சொல்லுவாங்களே! அது என்னன்னு இப்போ தாங்க புரியுது! கோர்க்கப்பட்ட வார்த்தைகளும் சரி செதுக்கப்பட்ட கருத்தும் சரி பாராட்டுதலுக்கு அப்பாற்பட்டவை! சிரிக்கலாம்முன்னு வந்தேன் சிந்திக்க வச்சுட்டீங்க!வாழ்த்துக்கள் பிரியா!

ஈ ரா said...

மிகச் சிறந்த வரிகள்... திரும்ப திரும்ப படிக்க வைத்து முதல் கவிதையும், இரண்டாவது கவிதையின் முதல் பத்தியும்.. (புரிந்துதான் ).

நகைச்சுவைக் கட்டுரைகள், கனமான கவிதைப் பிரயோகம் - இருவேறு துருவங்களையும் அனாயாசமாக எட்டிப் பிடிக்கிறீர்கள் சம காலத்தில் ..

வாழ்த்துக்கள்...

Sanjai Gandhi said...

////SanjaiGandhi said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...
ரொம்பாஆஆஆஆ பெரிய கவுஜாயினி ஆய்ட்டிங்க..//
நீங்களே கவி ஆறப்போ.. நாம ஆக மாட்டோமா.. ஹே//

ஹிஹி.. இது தான் பெரிய கவிஞருக்கான பெரிய தகுதி.நீயே ஆகறப்போ நான் ஆக மாட்டேனா என கேட்பது.. என்னைப் போன்ற மண்டபத்து சரக்கு விற்பவர்களை எல்லாம் உங்களுடன் ஒப்பிட்டுக் கொள்வது நியாயமா.. முறையா.. இது தகுமா? :))

கலகலப்ரியா said...

//அது சரி said...

//
கலகலப்ரியா said...
//எனக்கு ரெண்டாவது கவிதை என்ன சொல்ல வருதுன்னு புரியலீங்க...நானெல்லாம் நாலாங்கிளாஸ் ஃபெயிலு......:0)))//

சரி விடுங்க.. இன்னும் தெளியல போல.. =))

September 26, 2009 11:07 PM
//

தெளிஞ்சா மட்டும் புரிஞ்சிருமாக்கும்.....நாலாங்கிளாஸ்ல ஃபெயில் ஆனது ஆனது தான?? எனக்கு புரிஞ்சது அவ்வளவு தான்....:0)))//

பெயில்ன்னு நான்தான் நம்பிட்டேன்ல அப்புறம் என்ன.. திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டு.. புரிய வைக்கறதுன்னா ஒரு கட்டுரை எழுதி உங்க சைட்ல பேஸ்ட் பண்றத தவிர வேற வழி இல்ல..

கலகலப்ரியா said...

//லவ்டேல் மேடி said...

கலக்கல் கவிதை சகோதரி....!! நீங்க தமிழ் டீச்சரா....? கவிதையே இலக்கணமா இருக்கே...//

ஐயோ இல்ல சாமி.. இங்க தமிழ் டீச்சருங்க தமிழ் சொல்லிக் கொடுக்கிற லெட்சணம் இருக்கே... கொடுமை... :((..

கலகலப்ரியா said...

//கயல் said...

மெச்சூரிட்டி மெச்சூரிட்டுன்னு சொல்லுவாங்களே! அது என்னன்னு இப்போ தாங்க புரியுது! கோர்க்கப்பட்ட வார்த்தைகளும் சரி செதுக்கப்பட்ட கருத்தும் சரி பாராட்டுதலுக்கு அப்பாற்பட்டவை! சிரிக்கலாம்முன்னு வந்தேன் சிந்திக்க வச்சுட்டீங்க!வாழ்த்துக்கள் பிரியா!//

ஆஹா.. 'மெச்சூரிட்டியையும்' படிச்சிட்டு கம்னு இருந்தீங்களா.. அவ்வ்வ்வ்.. ரொம்ப நன்றி கயல்...

கலகலப்ரியா said...

//ஈ ரா said...

மிகச் சிறந்த வரிகள்... திரும்ப திரும்ப படிக்க வைத்து முதல் கவிதையும், இரண்டாவது கவிதையின் முதல் பத்தியும்.. (புரிந்துதான் ).

நகைச்சுவைக் கட்டுரைகள், கனமான கவிதைப் பிரயோகம் - இருவேறு துருவங்களையும் அனாயாசமாக எட்டிப் பிடிக்கிறீர்கள் சம காலத்தில் ..

வாழ்த்துக்கள்...//

ஹிஹி.. நன்றி ஈரா... நம்ம மல்டிபிள் பர்சனாலிட்டி பத்திதான் சொல்லி இருக்கேன்ல..

கலகலப்ரியா said...

//SanjaiGandhi said...

////SanjaiGandhi said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...
ரொம்பாஆஆஆஆ பெரிய கவுஜாயினி ஆய்ட்டிங்க..//
நீங்களே கவி ஆறப்போ.. நாம ஆக மாட்டோமா.. ஹே//

ஹிஹி.. இது தான் பெரிய கவிஞருக்கான பெரிய தகுதி.நீயே ஆகறப்போ நான் ஆக மாட்டேனா என கேட்பது..//

aah..! reconfirmed aaaaa...! daangsngo..

// என்னைப் போன்ற மண்டபத்து சரக்கு விற்பவர்களை எல்லாம் உங்களுடன் ஒப்பிட்டுக் கொள்வது நியாயமா.. முறையா.. இது தகுமா? :))
//

தப்புதான் சாமியோ...

இராகவன் நைஜிரியா said...

ஓ... இந்த இடுகையை நான் கவனிக்கவேயில்லை.

வெரி வெரி சாரி... சின்ன குழப்பம். வீடு மாறினோம். எதைப் படிச்சோம். எதை விட்டோம் எனப் புரியாமல் விடு பட்டுவிட்டது.

கலகலப்ரியா said...

//இராகவன் நைஜிரியா said...

ஓ... இந்த இடுகையை நான் கவனிக்கவேயில்லை.

வெரி வெரி சாரி... சின்ன குழப்பம். வீடு மாறினோம். எதைப் படிச்சோம். எதை விட்டோம் எனப் புரியாமல் விடு பட்டுவிட்டது.//

அது சரி.. வீடு மாறலாம்.. ஆள் மாறலாமா..