header photo

Sunday, September 27, 2009

சுப்பு vs. லக்ஷ்மி...

சுப்புவும், லக்ஷுவும் சரியான ஜோடிங்க..! இரண்டு பேரும் அதிர்ந்து பேச மாட்டாங்க. சுப்பு வாழைப்பழத்தில ஊசி ஏத்துறாப்ல பேசுற ஆளு. கோபமா இருக்கிறப்போ செய்யுற வேலையும் சரி, பேசுற பேச்சும் சரி மிக மிக மிக நிதானமா இருக்கும். அவ்ளோ அழுத்தம்.

லக்ஷு சுப்புவ திட்டுறது அந்தம்மாவுக்கே கேக்காது. ச்சே ச்சே பயம் கியம் எல்லாம் கிடையாதுங்க. சமையல்கட்டில மட்டும் பாத்திரம் கொஞ்சம் அதிரும்.. அவ்ளோதான். இதுங்க ஆடுற கண்ணா மூச்சி இருக்கே, சொல்லி மாளாதுங்க.

மாடுலார் கிச்சன் லெவலுக்கு.. நின்னுக்கிட்டே சமைக்கிறதுக்கு அளவுக்கு மிஞ்சின லவ்வோட லக்ஷுக்கு சுப்பு வசதியா அமைத்துக் கொடுத்த சமையலறை. இரவுச் சாப்பாடு முடிச்சு சுப்பு கட்டைய நீட்டி கொறட்டை விடுற சமயத்தில, லக்ஷு அடுப்புக்கு பின் பக்கமா மேல, சாதமும், தேங்காயும் கலந்து எலிக் கூட்டத்துக்கு சாப்பாடு வச்சிட்டு படுப்பாங்க.

லக்ஷு படுத்துறங்கியதும் சுப்பு எழுந்திரிச்சு எலிப்பொறில பாஷாணம் வச்சு அடுப்புக்கு கீழ லக்ஷு கண்ணில படாம வச்சுட்டு தூங்க போவாருங்க. பொறி வைக்கிற நாள்ல எல்லாம், வழக்கமா எழுந்திருக்கிற நாலு மணிக்கு அரை மணி நேரம் முன்னாடியே எழுந்திரிச்சு, லக்ஷு விழிக்கறதுக்கு முன்னாடியே, பொறில மாட்டி உசிர விட்ட எலிக்கு இறுதிக்கிரியை முடிச்சு அடக்கம் பண்ணிடுவாருங்க.

ஒரு வேளை தப்பித் தவறி லக்ஷு கண்ணில இது பட்டிச்சோ நாள் ஃபுல்லா உண்ணாவிரதம், வாய்க்குள்ள திட்டு, பாத்திர உருட்டுன்னு ஒரு வழி பண்ணிடுவாங்க. சுப்பு ஒண்ணும் தெரியாத அப்பாவி மாதிரி ரொம்ப நிதானமா வேலைய பார்த்துட்டிருப்பாருங்க.

சுப்பு ஒண்ணும் லேசுப்பட்ட ஆள் இல்லைங்க. பூஜா ரூம்னு கூட பார்க்காமலே, மாஸ் மர்டர் பண்ண ப்ளான் பண்ற ஆளுங்க. நல்லெண்ணெய் பாட்டில் எடுத்து ஒரு இத்துனூண்டு எண்ணெய விட்டு, பாட்டில தொறந்து பூஜா ரூம்ல எங்கயோ ஒரு மூலைல வச்சிடுவாரு. இதுக்கு அங்க இருக்கிற சிவபெருமான் குடும்பமும்.. இன்ன பிற கடவுள்களும் சாட்சி.. லக்ஷ்மி உட்பட.

பாவம் கரப்பான் பூச்சிக் கூட்டம், இந்தாளோட சூது தெரியுமா வாது தெரியுமா. கூட்டம் கூட்டமா உள்ள போய் மசங்கிக் கிடப்பாங்க. சுப்பு நிதானமா எடுத்துக்கிட்டு போயீ தோட்டத்தில குழி வெட்டி அத்தனை கரப்பான் பூச்சிக்கும் உசிரோட ஒரே சமாதியா கட்டிடுவாருங்க. ஆள் மிச்சம் புடிக்கிறதிலயும் கில்லாடிங்க.

அந்தாளு கரப்பான் பூச்சிங்களுக்கு சமாதி கட்டறப்போ லக்ஷு பின்னாடி கைய கோர்த்துக்கிட்டு, முணுமுணுன்னு இல்லாத சாபம் எல்லாம் போட்டு சுப்புவ திட்டிக்கிட்டு அங்கிட்டும் இங்கிட்டும் நடந்துக்கிட்டிருக்குமுங்க. அன்னைக்கும் கண்டிப்பா உண்ணாவிரதம் கடைப்பிடிக்கப்படும்.

யாரு இந்த சுப்புலக்ஷ்மி ஜோடின்னு பார்க்கறீங்களா.. என்னோட தாத்தா அண்ட் பாட்டி தானுங்க.. இவங்கள பத்தி ஒரே இடுகைல சொல்ல முடியும்னு நினைக்கறீங்க?.. நோ வே.. வெயிட் ப்ளீஸ்..

சுப்புலக்ஷ்மி
_____/\_____

27 ஊக்கம்::

vasu balaji said...

/பூஜா ரூம்னு கூட பார்க்காமலே, மாஸ் மர்டர் பண்ண ப்ளான் பண்ற ஆளுங்க. நல்லெண்ணெய் பாட்டில் எடுத்து ஒரு இத்துனூண்டு எண்ணெய விட்டு, பாட்டில தொறந்து பூஜா ரூம்ல எங்கயோ ஒரு மூலைல வச்சிடுவாரு./

/பாவம் கரப்பான் பூச்சிக் கூட்டம், இந்தாளோட சூது தெரியுமா வாது தெரியுமா. கூட்டம் கூட்டமா உள்ள போய் மசங்கிக் கிடப்பாங்க. சுப்பு நிதானமா எடுத்துக்கிட்டு போயீ தோட்டத்தில குழி வெட்டி அத்தனை கரப்பான் பூச்சிக்கும் உசிரோட ஒரே சமாதியா கட்டிடுவாருங்க./

:>. இதுக்கா இப்புடி பீதிய கெளப்பறது?

vasu balaji said...

இந்த நல்லெண்ணெய்ல அப்புடி என்ன இருக்கோ தெரியலையே. கரப்பான் பூச்சில இருந்து ஜோதிகா வரைக்கும் இதுக்கு விளுந்துடுறாங்க.:))

vasu balaji said...

நல்ல அறிமுகம். அடுத்த எபிசோட் இளுபடாம போடுங்க.

ஹேமா said...

ப்ரியா எனக்கும் என் அம்மம்மா ஞாபகம் வருது.மிச்சக் கதைக்காக வெயிட்டிங்.

கருணாகார்த்திகேயன் said...

பிரியா ..

அழகா இருந்தது.... வலது பக்கம் உள்ள "ஒவியம்" ...

அன்புடன்
கருணாகார்த்திகேயன்

Unknown said...

// பூஜா ரூம்னு கூட பார்க்காமலே, மாஸ் மர்டர் பண்ண ப்ளான் பண்ற ஆளுங்க. நல்லெண்ணெய் பாட்டில் எடுத்து ஒரு இத்துனூண்டு எண்ணெய விட்டு, பாட்டில தொறந்து பூஜா ரூம்ல எங்கயோ ஒரு மூலைல வச்சிடுவாரு.பாவம் கரப்பான் பூச்சிக் கூட்டம், இந்தாளோட சூது தெரியுமா வாது தெரியுமா. கூட்டம் கூட்டமா உள்ள போய் மசங்கிக் கிடப்பாங்க //


ஆஹா... கரப்பான் பூச்சிய சாவடிக்க அருமையான ஐடியா....!! நன்றி சுப்பு தாத்தா....

பித்தனின் வாக்கு said...

நல்ல பதிவு.

ஆரூரன் விசுவநாதன் said...

very interesting..........


continue......

regards
arur

R.Gopi said...

சரியான ஜோடியாக வாழ்ந்து காட்டிய சுப்புலக்ஷ்மி தம்பதியருக்கு தலை வணங்குகிறேன்...

ரொம்ப வெயிட் பண்ண வைக்காம, சீக்கிரம் எழுதுங்க...

வலது பக்கம் உள்ள புதிய‌ படம் பட்டைய கெளப்புதே லகலக...

ஈரோடு கதிர் said...

ஆஹா... தாத்தா பாட்டி கதையா... கலக்குங்க

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...

:>. இதுக்கா இப்புடி பீதிய கெளப்பறது?//

நம்ம பீதி நம்மளுக்கு..

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...

இந்த நல்லெண்ணெய்ல அப்புடி என்ன இருக்கோ தெரியலையே. கரப்பான் பூச்சில இருந்து ஜோதிகா வரைக்கும் இதுக்கு விளுந்துடுறாங்க.:))//

எத போயீ எதுக்கு ஒப்பிடுறது.. ஜோதிகாவின் ரசிகப் பெருமக்கள் உங்களை மன்னிக்கட்டும்..

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...

நல்ல அறிமுகம். அடுத்த எபிசோட் இளுபடாம போடுங்க.//

வாட் அன் இன்சல்ட்.. வாட் எ பிரஷர்...

கலகலப்ரியா said...

//ஹேமா said...

ப்ரியா எனக்கும் என் அம்மம்மா ஞாபகம் வருது.மிச்சக் கதைக்காக வெயிட்டிங்.//

நன்றி ஹேமா..

கலகலப்ரியா said...

//லவ்டேல் மேடி said...

ஆஹா... கரப்பான் பூச்சிய சாவடிக்க அருமையான ஐடியா....!! நன்றி சுப்பு தாத்தா....//

ஆ...! தப்பு பண்ணிட்டேனே.. ! லக்ஷு என்னை மன்னிச்சிடு.. அவ்வ்வ்வ்... :(

கலகலப்ரியா said...

//பித்தன் said...

நல்ல பதிவு.//

நன்றிங்க..

கலகலப்ரியா said...

//ஆரூரன் விசுவநாதன் said...

very interesting..........


continue......

regards
arur//

ty..

கலகலப்ரியா said...

//R.Gopi said...

சரியான ஜோடியாக வாழ்ந்து காட்டிய சுப்புலக்ஷ்மி தம்பதியருக்கு தலை வணங்குகிறேன்...

ரொம்ப வெயிட் பண்ண வைக்காம, சீக்கிரம் எழுதுங்க...

வலது பக்கம் உள்ள புதிய‌ படம் பட்டைய கெளப்புதே லகலக...//

சரிங்க.. நன்றிங்க..

கலகலப்ரியா said...

//கதிர் - ஈரோடு said...

ஆஹா... தாத்தா பாட்டி கதையா... கலக்குங்க
//

ஆமாம் கதிர்.. அவங்க உள் விவகாரப் பூசல் பற்றிய இடுகை.. ஹிஹி..

கலகலப்ரியா said...

//கார்த்திகேயன். கருணாநிதி said...

பிரியா ..

அழகா இருந்தது.... வலது பக்கம் உள்ள "ஒவியம்" ...

அன்புடன்
கருணாகார்த்திகேயன்//

நன்றிங்க..

பின்னோக்கி said...

//நல்லெண்ணெய் பாட்டில் எடுத்து

கரப்பான் பூச்சிக்கும் நல்லெண்ணைக்கும் இவ்வளவு சண்டை இருக்குற விஷயம் எனக்கு தெரியாது. இன்னைக்கே வீட்டுல டிரை பண்ணிட்டு சொல்றேன்.

ப்ரியமுடன் வசந்த் said...

எனக்கு கண் சரியா தெரியலியோ எல்லாரும் வல்து பக்கம் உள்ள ஓவியம் நல்ல்லா இருக்குன்றாங்க எங்க இருக்கு?

ப்ரியமுடன் வசந்த் said...

சுப்பு நம்மள மாதிரியே இருக்கியே தாத்தா.....

கலகலப்ரியா said...

//பின்னோக்கி said...

//நல்லெண்ணெய் பாட்டில் எடுத்து

கரப்பான் பூச்சிக்கும் நல்லெண்ணைக்கும் இவ்வளவு சண்டை இருக்குற விஷயம் எனக்கு தெரியாது. இன்னைக்கே வீட்டுல டிரை பண்ணிட்டு சொல்றேன்.//

நீங்களுமா..

கலகலப்ரியா said...

//பிரியமுடன்...வசந்த் said...

எனக்கு கண் சரியா தெரியலியோ எல்லாரும் வல்து பக்கம் உள்ள ஓவியம் நல்ல்லா இருக்குன்றாங்க எங்க இருக்கு?//

Profile pic la irukkira statue pola.. (enakke theriyathu.. hihi..)

துபாய் ராஜா said...

சுப்பு தாத்தா,லஷ்மி பாட்டி அறிமுகமே அட்டகாசம்.

வாழ்த்துக்கள் ப்ரியா.

கலகலப்ரியா said...

//துபாய் ராஜா said...

சுப்பு தாத்தா,லஷ்மி பாட்டி அறிமுகமே அட்டகாசம்.

வாழ்த்துக்கள் ப்ரியா.//

நன்றி துபாய் ராஜா..