header photo

Monday, September 28, 2009

சுப்பு vs. லக்ஷு... செகண்ட் டே..

ஃபர்ஸ்ட் டே பார்க்காதவங்க இங்கே க்ளிக்கவும்..

ஊர்ல வாலிபால் ஆடுற வாலிபப் பசங்க கூட போய் போட்டிக்கு மல்லுக்கட்டிட்டு நெஞ்ச நிமிர்த்திக்கிட்டு வீட்டுக்கு வருவாருங்க நம்ம சுப்பு. லக்ஷு ஒரு மூலைல சுருண்டுக்கிட்டு இவாவே இடுப்பை புடிச்சிக்கிட்டு, இவாக்கு இடுப்பு புடிக்குதுன்னு முனகிட்டிருப்பா பாருங்க.. ரொம்ப தமாஷா இருக்குமுங்க.

சுப்பு மிகவும் மென்மையான குரல்ல "நான் வாலிபால் ஆடிட்டு வந்தா உனக்கு தவறாம இடுப்பு பிடிச்சுக்குமே புள்ள".. ன்னு சொல்லிக்கிட்டே, சமையல்கட்டில நுழைஞ்சு இவருக்கும், லக்ஷுக்கும் சேர்த்து மிளகு ரசம் ரெடி பண்ணுவாருங்க.

லக்ஷு கொஞ்சம் தலைய நிமிர்த்தி, "தெரியுதில்ல.. அப்புறம் எதுக்கு பந்தாட்டம் இந்த வயசில"ன்னு நொடிச்சிக்கிட்டு.. திரும்ப சுருண்டுக்குவாங்க. சுப்பு ரொம்ப நிதானமா மிளக தட்டி... புளிய கரைச்சிட்டிருப்பாருங்க அடுப்பங்கரைல.

சுப்பு வீட்ல இருக்கிற சமயத்தில முக்கால்வாசி நேரம் பஞ்சாங்கம் கூடவே இருப்பாருங்க. என்ன பண்றது, அந்தாளு அஜெண்டா அதுதான். எப்போ நெல்லு விதைக்கணும், எப்போ நாத்து நடணும், எப்போ அறுவடை பண்ணனும் எல்லாம் அந்த அஜெண்டா பார்த்துத்தான் முடிவு பண்ணுவாரு.

அக்கம் பக்கத்தில உள்ளவங்க ஒரு நாள்ல பத்து வாட்டி வந்து 'பல்லி மேற்கால சொல்லிச்சு', 'கிழக்கால சொல்லிச்சு', கிழக்குமில்ல, வடக்குமில்ல, வடகிழக்குமில்ல ஒரு மாதிரியான கோணத்தில சொல்லிச்சு.. என்னன்னு பார்த்து சொல்லுன்னா.. கவனமா பஞ்சாங்கத்த பார்த்து பல்லி சொன்ன மற்றும் விழுந்த பலன் சொல்றது இந்தாளோட பொழுது போக்கு. சுப்பு வீட்டில் இல்லாத சமயத்தில இந்த உபதொழிலுக்கு ப்ராக்ஸி அடியேள்தான் ஹிஹி.

பாத்திரம் அறிஞ்சு பணம் கடன் கொடுக்கிறதில சுப்பு கில்லாடிங்க. லக்ஷு கொஞ்சம் விட்டேத்தியாதான் இருப்பா இதிலயும். சுப்பு பஞ்சாங்கத்த குடைஞ்சுக்கிட்டு இருக்கிறப்போ யாராவது வந்து தலைய சொறிஞ்சுக்கிட்டு, ஐஞ்சு, பத்துன்னு கடன் கேட்டா, பாத்திரம் சரியா இருந்தா "புள்ள"ன்னு கூப்டறதுகுள்ள, லக்ஷு பணத்த நீட்டிக்கிட்டு ரெடியா நிப்பாங்க.

பாத்திரம் சரியா இல்லைன்னா, பஞ்சாங்கத்தில ரொம்ப ஆழ்ந்து போய் "சிவன் ஆணை, என் கிட்ட ஐஞ்சு பைசா கூட இல்லை" அப்டின்னு சத்தியம் பண்ணுமுங்க. லக்ஷு வாய்க்குள்ள முணுமுணுன்னு திட்டி நொடிச்சுக்கிட்டு, வந்தவங்களுக்கு டீ, காப்பியாவது கொடுக்கலாம்னு சமையல்கட்டுக்கு போவா.

கடன் கேக்க வந்த ஆளு "இந்தாளு கிட்ட ஒரு பைசா பெயராது"ன்னு கிளம்பி போய் கேட் தாண்டுறதுக்குள்ள, ஆஹா சுப்பு உன்னை புடிச்சிட்டேன்ல கையும் களவுமான்னு, நான் குஷியா ஓடிப் போய் "ஏன் அப்பப்பா, இப்போ பொய்தானே சொன்னா?"ன்னு கேட்டா.. ஹெஹெஹெ..ன்னு நக்கலா ஒரு சிரிப்பு சிரிச்சு, "நான் என்ன பொய் சொன்னேன்? என் கிட்ட பணம் இல்லைனுதான் சொன்னேன், பணம் பூஜா ரூம்ல அலமாரில இல்ல இருக்கு.. என்ன புள்ள நான் சொல்றது பொய்யா"ன்னு லக்ஷுவ சாட்சிக்கு கூப்டுவாருங்க.

லக்ஷு உர்ர்ர்ர்-ன்னு மூஞ்சிய வச்சுக்கிட்டு, "ஆமாமா"ன்னு நொடிக்கிறது, பெருமையாவா இல்ல கடுப்பாலயான்னு இப்போ கூட எனக்கு தெரியாதுங்க.

தமாஷ் தொடரும்...

....

40 ஊக்கம்::

vasu balaji said...

/ சுப்பு வீட்டில் இல்லாத சமயத்தில இந்த உபதொழிலுக்கு ப்ராக்ஸி அடியேள்தான் ஹிஹி./

=)). நிஜம்மாவா. இருக்கிறத அப்புடியே சொல்லுவியா. கூட நாலஞ்சு பிட்ட சேர்த்து போட்டு விடுவியாம்மா?

vasu balaji said...

/ஹெஹெஹெ..ன்னு நக்கலா ஒரு சிரிப்பு சிரிச்சு/

அடங்கொன்னியா. ’ஹெ ஹெ மாட்டிக்கிறா மாதிரி’ன்னு போட்டதுக்கு ஆதி மூல காரணம் இப்பல்லா தெரியுது!

vasu balaji said...

/லக்ஷு உர்ர்ர்ர்-ன்னு மூஞ்சிய வச்சுக்கிட்டு, "ஆமாமா"ன்னு நொடிக்கிறது, பெருமையாவா இல்ல கடுப்பாலயான்னு இப்போ கூட எனக்கு தெரியாதுங்க./

கண்ணுமுன்னாடி பார்க்கறாப்பல இருக்கு. ஹூம். நானெல்லாம் எப்பொ இப்புடி எழுதப் போறனோ:(

ஹேமா said...

பல்லி சொல்றதுக்கெல்லாம் பஞ்சாங்கம் ...நம்ம தாத்தாங்க எல்லாம் ரொம்பக் கில்லிங்க.

இராகவன் நைஜிரியா said...

இப்போதைக்கு ஓட்டுப் போட்டுட்டேன். பின்னூட்டத்தை அப்புறம் போடுறேன். வேலை அதிகமாக இருப்பதால், அப்பாலிக்கா வரேன்.

R.Gopi said...

ரெம்ப ரவுசு மற்றும் லொள்ளுங்கோ...

ஆமாம்... இப்போ எல்லாம் பல்லியை பார்த்து ஏதாவது கேக்கறீயளா?

Thenammai Lakshmanan said...

பிரியா
தாத்தா பாட்டி பற்றி நல்லா எழுதுறீங்க
சுப்பு லெஷு பேர் சொல்ல ஒரு பேத்தி

ப்ரியமுடன் வசந்த் said...

விச் விச் .....

ப்ரியமுடன் வசந்த் said...

// "நான் என்ன பொய் சொன்னேன்? என் கிட்ட பணம் இல்லைனுதான் சொன்னேன், பணம் பூஜா ரூம்ல அலமாரில இல்ல இருக்கு.. என்ன புள்ள நான் சொல்றது பொய்யா"ன்னு லக்ஷுவ சாட்சிக்கு கூப்டுவாருங்க.//

இப்போதான் தெரியுது இந்த பிரியாக்காவோட நக்கலு நையாண்டி எங்க இருந்து வந்துச்சுன்னு......

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...

/ சுப்பு வீட்டில் இல்லாத சமயத்தில இந்த உபதொழிலுக்கு ப்ராக்ஸி அடியேள்தான் ஹிஹி./

=)). நிஜம்மாவா. இருக்கிறத அப்புடியே சொல்லுவியா. கூட நாலஞ்சு பிட்ட சேர்த்து போட்டு விடுவியாம்மா?//

ச்சே ச்சே.. இந்த மேட்டர் ல அப்போ எல்லாம் ரொம்ப சீரியஸ் சார்..

//அடங்கொன்னியா. ’ஹெ ஹெ மாட்டிக்கிறா மாதிரி’ன்னு போட்டதுக்கு ஆதி மூல காரணம் இப்பல்லா தெரியுது!//

அது சரி..

//கண்ணுமுன்னாடி பார்க்கறாப்பல இருக்கு. ஹூம். நானெல்லாம் எப்பொ இப்புடி எழுதப் போறனோ:(//

ஏன் சார் நல்லாதானே எழுதுறீங்க..

கலகலப்ரியா said...

//ஹேமா said...

பல்லி சொல்றதுக்கெல்லாம் பஞ்சாங்கம் ...நம்ம தாத்தாங்க எல்லாம் ரொம்பக் கில்லிங்க.//

சரிதாங்க..

கலகலப்ரியா said...

//இராகவன் நைஜிரியா said...

இப்போதைக்கு ஓட்டுப் போட்டுட்டேன். பின்னூட்டத்தை அப்புறம் போடுறேன். வேலை அதிகமாக இருப்பதால், அப்பாலிக்கா வரேன்.//

அது சரி.. நன்றிங்கோ..

கலகலப்ரியா said...

//R.Gopi said...

ரெம்ப ரவுசு மற்றும் லொள்ளுங்கோ...

ஆமாம்... இப்போ எல்லாம் பல்லியை பார்த்து ஏதாவது கேக்கறீயளா?//

இப்போல்லாம் பல்லிய பார்க்கறதே இல்லிங்கோ...

கலகலப்ரியா said...

//thenammailakshmanan said...

பிரியா
தாத்தா பாட்டி பற்றி நல்லா எழுதுறீங்க
சுப்பு லெஷு பேர் சொல்ல ஒரு பேத்தி//

ஹிஹி.. நன்றிங்க..

கலகலப்ரியா said...

//பிரியமுடன்...வசந்த் said...

விச் விச் .....//

என்னப்பா சொல்றா..

//
இப்போதான் தெரியுது இந்த பிரியாக்காவோட நக்கலு நையாண்டி எங்க இருந்து வந்துச்சுன்னு......//

அது சரி..

ப்ரியமுடன் வசந்த் said...

////பிரியமுடன்...வசந்த் said...

விச் விச் .....//

என்னப்பா சொல்றா.. //

நாந்தான் பல்லின்னு வச்சுக்கோங்களேன் எந்ததிசைன்னு தெர்ஞ்சா பலன் சொல்லுங்க பார்ப்போம்.... ஹெஹெஹெ

கலகலப்ரியா said...

//பிரியமுடன்...வசந்த் said...

////பிரியமுடன்...வசந்த் said...

விச் விச் .....//

என்னப்பா சொல்றா.. //

நாந்தான் பல்லின்னு வச்சுக்கோங்களேன் எந்ததிசைன்னு தெர்ஞ்சா பலன் சொல்லுங்க பார்ப்போம்.... ஹெஹெஹெ//

அதான் நினைச்சேன்.. பஞ்சாங்கம் கூட கைல இல்லையே.. இருந்தாலும் பெப்ரவரில நீ சாம்பார் சாப்டுவாப்பா.. அது மட்டும் தெரியுது..

கலகலப்ரியா said...

பல்லிக்கே பலன் சொல்ல வேண்டி வந்திடிச்சே..

ப்ரியமுடன் வசந்த் said...

:))))

ப்ரியமுடன் வசந்த் said...

சிரிச்சு முடியலை..நன்றிக்கா டெய்லி இதுமாதிரி ரவுசு பண்ணிட்டே இருங்க

கலகலப்ரியா said...

//பிரியமுடன்...வசந்த் said...

சிரிச்சு முடியலை..நன்றிக்கா டெய்லி இதுமாதிரி ரவுசு பண்ணிட்டே இருங்க//

aahaa.. seri.. rousuthane.. panniduvom..

துபாய் ராஜா said...

சுப்பு தாத்தா வாலிபால் ஆடிட்டு வரும்போது லஷ்மி பாட்டிக்கு இடுப்பு பிடிக்க காரணமென்ன ??!!

பிரியலையே ப்ரியாக்கா.....

துபாய் ராஜா said...

பெரியவங்க பஞ்சாங்கம் பார்க்கிறதை சொல்லி பழைய நினைவுகளை கேந்தி கெளப்புட்டிங்க....

அது சரி(18185106603874041862) said...

//
சுப்பு வீட்டில் இல்லாத சமயத்தில இந்த உபதொழிலுக்கு ப்ராக்ஸி அடியேள்தான் ஹிஹி.
//

ஆஹா....கைவசம் இப்படி பல திறமைய வச்சிருப்பீங்க போலருக்கே...கொஞ்சம் கத்துக் கொடுங்க...நானும் எதுனா கடை போடறேன்...:)))

அது சரி(18185106603874041862) said...

//
அக்கம் பக்கத்தில உள்ளவங்க ஒரு நாள்ல பத்து வாட்டி வந்து 'பல்லி மேற்கால சொல்லிச்சு', 'கிழக்கால சொல்லிச்சு', கிழக்குமில்ல, வடக்குமில்ல, வடகிழக்குமில்ல ஒரு மாதிரியான கோணத்தில சொல்லிச்சு.. என்னன்னு பார்த்து சொல்லுன்னா.. கவனமா பஞ்சாங்கத்த பார்த்து பல்லி சொன்ன மற்றும் விழுந்த பலன் சொல்றது இந்தாளோட பொழுது போக்கு.
//

பலன் யாருக்கு....பல்லிக்கா வந்தவங்களுக்கா? :0))

அது சரி(18185106603874041862) said...

//
பாத்திரம் அறிஞ்சு பணம் கடன் கொடுக்கிறதில சுப்பு கில்லாடிங்க.
//

அடகுக்கடை நடத்தினாரா? :)

அது சரி(18185106603874041862) said...

//
தமாஷ் தொடரும்...
//

ரட்டும்...

Unknown said...

பாவம் சுப்பு தாத்தாவும்... லச்சுமி பாட்டியும்....!! உட்டுறுங்க அம்முனி அவிகள.......!!

பித்தனின் வாக்கு said...

// லக்ஷு உர்ர்ர்ர்-ன்னு மூஞ்சிய வச்சுக்கிட்டு, "ஆமாமா"ன்னு நொடிக்கிறது, பெருமையாவா இல்ல கடுப்பாலயான்னு இப்போ கூட எனக்கு தெரியாதுங்க.//

பாதிவீட்டுல இப்படிதான் பண்ணறாங்க, இது எதுக்கு இன்னமும் புரியலை. ஆனாலும்ரொம்ப அலுத்தமானவங்க. கடைசி வரைக்கும் மூச்சுவிட மாட்டாங்க. பதிவு நல்லா இருக்கு, இன்னும் கொஞ்சம் நகைச்சுவை கலந்துருக்கலாம்,அல்லது மாடுலெசன் மாத்தி இருக்கலாம்.

பித்தனின் வாக்கு said...

படம் காட்டுறாங்களே படம் மிகவும் அருமை. இம்ம் இப்ப எல்லாரும் யாரும் இப்படி ஜிமிக்கி தொங்கட்டான் போடுவது இல்லை என நினைக்கின்றேன். அழகாய் தாவணி (கரு நீலம் பிளஸ்,கருப்பு தாவணியும்) லூசாக தலைவாரி தொங்கட்டான் ஆட மல்லிகையும் மணக்க பார்த்து தலை குப்புற விழுந்தவன் இன்னமும் எந்திரிக்கவில்லை.

ஈரோடு கதிர் said...

//சுப்பு வீட்டில் இல்லாத சமயத்தில இந்த உபதொழிலுக்கு ப்ராக்ஸி அடியேள்தான் ஹிஹி.//

அதுசரி... அதுதான் இப்படியா?

சிங்கக்குட்டி said...

அந்த பல்லிக்கு என்ன கோவமோ?

நல்ல நக்கலான பதிவு :-))

அது சரி(18185106603874041862) said...

எங்கப்பா ஆளையே காணோம்...இந்தக் கடைக்கு செவ்வாய் விடுமுறையா??

கலகலப்ரியா said...

நன்றி துபாய் ராஜா .. (காரணம் சுப்புவுக்கே தெரியல..)

வாங்க சூனா பானா (கடை போடுறதிலையே இருக்கீங்களே.. சுப்பு அடகுக் கடை வச்சிருக்கல.. ஆனா நீங்க ட்ரை பண்ணலாமே.. அந்த பல்லிக் கதைய விடுங்க.. அதெல்லாம் சின்னப் புள்ளத்தனம்..)

லவ்டேல் மேடி.. நானும் அவங்கள கை விட்டா எப்டி..

பித்தன் நீங்க சொல்றது வாஸ்தவம்.. தாத்தா பாட்டிய வச்சு ரொம்ப காமெடி பண்ணக் கூடாதுன்னுதான் அடக்கி வாசிச்சேன்.. (ஒரு ஜிமிக்கில இவ்ளோ பெரிய சோகக் கதை இருக்கா..)

கதிர்.. என்னது இப்டியா..? கொஞ்சம் விளக்கமா சொன்னாதானே புரியும்..

சிங்கக் குட்டி.. இது நக்கலா.. கடவுளே..

கலகலப்ரியா said...

//அது சரி said...

எங்கப்பா ஆளையே காணோம்...இந்தக் கடைக்கு செவ்வாய் விடுமுறையா??//

இல்ல சூனா பானா.. ஒரு சோக நிகழ்வு..! அதனால வர முடியல..!

அது சரி(18185106603874041862) said...

//
கலகலப்ரியா said...
//அது சரி said...

எங்கப்பா ஆளையே காணோம்...இந்தக் கடைக்கு செவ்வாய் விடுமுறையா??//

இல்ல சூனா பானா.. ஒரு சோக நிகழ்வு..! அதனால வர முடியல..!

October 1, 2009 11:24 AM
//

ஓ...I'm Sorry to hear that...Hope for the things to get normal soon....

அது சரி(18185106603874041862) said...

அப்புறம்...என் பேரு சூனா பானா இல்ல...அழகா "அது சரி"ன்னு பேரு இருக்கும் போது அப்புறம் என்ன சூனா பானா??

(தவிர, சூனாபானான்னு இன்னொரு பதிவர் இருக்காருன்னு நினைக்கிறேன்...யார்னா போலி சூனாபானான்னு என்னை போட்டு கும்மிடப் போறாங்க...)

கலகலப்ரியா said...

ty..

//(தவிர, சூனாபானான்னு இன்னொரு பதிவர் இருக்காருன்னு நினைக்கிறேன்...யார்னா போலி சூனாபானான்னு என்னை போட்டு கும்மிடப் போறாங்க...)//

அது சரி.. இப்டி மாத்தி மாத்தி சொல்லிட்டிருந்தா நாம என்ன பண்ண முடியும்.. கும்முறவங்க கும்மிக்கிட்டேதான் இருப்பாய்ங்க.. :-s

ப்ரியமுடன் வசந்த் said...

யாரு கண்ணு பட்டுச்சுன்னு தெரியலியே மக்கா

எங்க அக்கா இடுகையே போடக்காணோம்

என்னாச்சுக்கா?

கலகலப்ரியா said...

//பிரியமுடன்...வசந்த் said...

யாரு கண்ணு பட்டுச்சுன்னு தெரியலியே மக்கா

எங்க அக்கா இடுகையே போடக்காணோம்

என்னாச்சுக்கா?//

ம்ம்.. வந்துக்கிட்டே இருக்கேன்.. நன்றிப்பா.. இப்டி கவலைப்பட ஒரு ஆள் இருக்கே..