header photo

Monday, October 12, 2009

சமுதாயப் புழுக்கள்..

சமுதாயப் பூச்சுக்கேற்ப..
வண்ணமணிந்துறங்கும்..
பச்சோந்திகள்..

பட்டாம் பூச்சியின்..
இயற்கை வண்ணம்..
உறுத்துவதாக..
உளறிக் கொண்டிருக்கும்..
உலக்கைக் கொழுந்துகள்..

நயம் செய்வதாகச் சொல்லி..
சுயம் என்பதைக் கெடுத்து..
நலத்தைக் கடையில் வைத்து..
சுயநலத்தைச் சிரமேற்கொண்டு..
பொதுநலம் பேசித் திரியும்..
போதகர்களின் பேதகத்தால்..

வண்ணத்துப் பூச்சிகள் பல..
நிறத்தை உதிர்க்க முடிவெடுத்து..
சிறகிழந்து கம்பளிப் பூச்சிகளாய்..
மயிருமிழந்து புழுக்களாய்...
நெளிந்து கொண்டிருப்பது..
சமுதாயச் சிறப்பென்றும்..
சிறகுடனிருப்பது சீர்கேடென்றும்..

இன்னும் பற்பல சொற்கள்..
தோண்டிக் கொண்டிருக்கிறார்கள்..
புழுக்களைப் புதைத்து..
போன்சாய்ச் செடிகளுக்கு..
உரமிடலாமென்ற..
உயரிய நோக்குடன்.. !

___

68 ஊக்கம்::

vasu balaji said...

கவிதைக்கு படம் உருவகமா? படம் சொல்லும் கருத்து கவிதையாக வந்திருக்கிறதா? எதுவாயினும் உலக்கைக் கொழுந்துகளுக்கு உலக்கையிடி.

ஈ ரா said...

//சுயநலத்தைச் சிரமேற்கொண்டு.
பொதுநலம் பேசித் திரியும்..
போதகர்களின் பேதகத்தால்..//

//புழுக்களைப் புதைத்து..
போன்சாய்ச் செடிகளுக்கு..
உரமிடலாமென்ற..
உயரிய நோக்குடன்.. !//

கவிதையும், படமும் பிரமாதம்...

ஈரோடு கதிர் said...

சரியாத்தான் சொல்லியிருக்கீங்க

பிரபாகர் said...

//புழுக்களைப் புதைத்து..
போன்சாய்ச் செடிகளுக்கு..
உரமிடலாமென்ற..
உயரிய நோக்குடன்.. //

ப்ரியா,

அருமையான ஓர் கவிதை உங்களிடமிருந்து... வார்த்தைகளில் விளையாடியிருக்கிறீர்கள்....

வாழ்த்துக்கள்.

பிரபாகர்.

நாளும் நலமே விளையட்டும் said...

நம்மில் யார் நம் சமூகத்தில் நிலவும் அர்த்தமற்ற,பயனற்ற வேற்றுமைகளை களையும் நோக்கம் கொண்டு செயல்படுகிறோம்?

அறிவியல் வளர்ச்சி மூலம் நமது மூட எண்ணங்களை எளிதில் பரப்புவதில் நமக்கு சளைத்தவர் யார்?

நாம் எங்கு இருக்கிறோமோ அதற்கு தகுந்தது போல் நம் எண்ணங்களையே மாற்றி கொள்ளும் இந்த கயமை எப்போது நம்மை விட்டு நீங்கும்?

R.Gopi said...

//சமுதாயப் பூச்சுக்கேற்ப..
வண்ணமணிந்துறங்கும்..
பச்சோந்திகள்..

பட்டாம் பூச்சியின்..
இயற்கை வண்ணம்..
உறுத்துவதாக..
உளறிக் கொண்டிருக்கும்..
உலக்கைக் கொழுந்துகள்..//

ய‌ப்பா... இப்போ இங்க லகலகவோட கோப‌ம் கொழுந்து விட்டு எரியுதே... யார் யார் உல‌க்கை அடி வாங்க‌ போறாங்க‌ளோ??

//நயம் செய்வதாகச் சொல்லி..
சுயம் என்பதைக் கெடுத்து..
நலத்தைக் கடையில் வைத்து..
சுயநலத்தைச் சிரமேற்கொண்டு..
பொதுநலம் பேசித் திரியும்..
போதகர்களின் பேதகத்தால்..//

என்ன ஆச்சு... ப‌திவுல‌ இம்புட்டு சூடு.... ஆனால் நியாய‌மான‌வைதான்...

//வண்ணத்துப் பூச்சிகள் பல..
நிறத்தை உதிர்க்க முடிவெடுத்து..
சிறகிழந்து கம்பளிப் பூச்சிகளாய்..
மயிருமிழந்து புழுக்களாய்...
நெளிந்து கொண்டிருப்பது..
சமுதாயச் சிறப்பென்றும்..
சிறகுடனிருப்பது சீர்கேடென்றும்..

இன்னும் பற்பல சொற்கள்..
தோண்டிக் கொண்டிருக்கிறார்கள்..
புழுக்களைப் புதைத்து..
போன்சாய்ச் செடிகளுக்கு..
உரமிடலாமென்ற..
உயரிய நோக்குடன்.. !//

ல‌க‌ல‌க‌... என்ன‌வோ நென‌ச்சேன்... ஆனா, இது சூப்ப‌ர்... உங்க‌ளின் எழுத்து மிக‌ மிக‌ மெருகேறி வ‌ருகிற‌து என்று ச‌மீப‌த்தில் சொன்னேன்... அத‌ன் தொட‌ர்ச்சியாக‌ ம‌றுப‌டியும் சொல்கிறேன்... ரொம்ப‌ ந‌ல்லா எழுத‌றீங்க‌ ல‌க‌ல‌... (கலாய்க்க மட்டுமல்ல, எழுத்தில் கலக்கவும் தெரியும் என்று நிருபித்திருக்கிறீர்கள்...)

என் ம‌ன‌மார்ந்த‌ வாழ்த்துக்க‌ள்...ப்ரியா....

பூங்குழலி said...

வண்ணத்துப் பூச்சிகள் பல..
நிறத்தை உதிர்க்க முடிவெடுத்து..
சிறகிழந்து கம்பளிப் பூச்சிகளாய்..
மயிருமிழந்து புழுக்களாய்...
நெளிந்து கொண்டிருப்பது..
சமுதாயச் சிறப்பென்றும்..
சிறகுடனிருப்பது சீர்கேடென்றும்

மிக அருமையாய்

ஹேமா said...

ப்ரியா,உலகமே சுயநலத்தோடுதான் சுழல்கிறது இப்போ.அதுவும் எங்கள் சின்ன வட்டம் விட்டு எப்போ வெளி உலகைப் பார்க்க நேரிட்டதோ அப்போதே உலகம் அருவருப்பாகிவிட்டதுபோன்ற உணர்வு.

சூர்யா ௧ண்ணன் said...

//புழுக்களைப் புதைத்து..
போன்சாய்ச் செடிகளுக்கு..
உரமிடலாமென்ற..
உயரிய நோக்குடன்.. !//

அருமையான வரிகள்! நல்ல கவிதை!

இராகவன் நைஜிரியா said...

// நயம் செய்வதாகச் சொல்லி..
சுயம் என்பதைக் கெடுத்து..
நலத்தைக் கடையில் வைத்து..
சுயநலத்தைச் சிரமேற்கொண்டு..
பொதுநலம் பேசித் திரியும்..
போதகர்களின் பேதகத்தால்..//

அருமை. அருமை. வார்த்தைகளில் விளையாடிவிட்டீர்கள்.

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...

கவிதைக்கு படம் உருவகமா? படம் சொல்லும் கருத்து கவிதையாக வந்திருக்கிறதா? எதுவாயினும் உலக்கைக் கொழுந்துகளுக்கு உலக்கையிடி.//

ரொம்ப நன்றி வானம்பாடி..

கலகலப்ரியா said...

//ஈ ரா said...

//சுயநலத்தைச் சிரமேற்கொண்டு.
பொதுநலம் பேசித் திரியும்..
போதகர்களின் பேதகத்தால்..//

//புழுக்களைப் புதைத்து..
போன்சாய்ச் செடிகளுக்கு..
உரமிடலாமென்ற..
உயரிய நோக்குடன்.. !//

கவிதையும், படமும் பிரமாதம்...//

மிக்க நன்றி ஈ ரா..

கலகலப்ரியா said...

//கதிர் - ஈரோடு said...

சரியாத்தான் சொல்லியிருக்கீங்க//

நன்றி கதிர்..

கலகலப்ரியா said...

//பிரபாகர் said...

//புழுக்களைப் புதைத்து..
போன்சாய்ச் செடிகளுக்கு..
உரமிடலாமென்ற..
உயரிய நோக்குடன்.. //

ப்ரியா,

அருமையான ஓர் கவிதை உங்களிடமிருந்து... வார்த்தைகளில் விளையாடியிருக்கிறீர்கள்....

வாழ்த்துக்கள்.

பிரபாகர்.//

வாங்க பிரபாகர்.. ரொம்ப நன்றி..

கலகலப்ரியா said...

//நாளும் நலமே விளையட்டும் said...
நாம் எங்கு இருக்கிறோமோ அதற்கு தகுந்தது போல் நம் எண்ணங்களையே மாற்றி கொள்ளும் இந்த கயமை எப்போது நம்மை விட்டு நீங்கும்?//

இது வேற டிராக் மாதிரி இருக்கே.. எண்ணங்களை மாற்றிக் கொள்வது கயமையா..? தெரியலைங்க..

கலகலப்ரியா said...

//R.Gopi said... //

ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி கோபி... இப்டிப் பாராட்டுற மனசு எனக்கும் வேணும் அப்டின்னு என் கிட்ட வேண்டிக்கிறேன்.. =))

கலகலப்ரியா said...

//பூங்குழலி said...

வண்ணத்துப் பூச்சிகள் பல..
நிறத்தை உதிர்க்க முடிவெடுத்து..
சிறகிழந்து கம்பளிப் பூச்சிகளாய்..
மயிருமிழந்து புழுக்களாய்...
நெளிந்து கொண்டிருப்பது..
சமுதாயச் சிறப்பென்றும்..
சிறகுடனிருப்பது சீர்கேடென்றும்

மிக அருமையாய்//

வாங்க பூங்குழலி.. < இந்தப் பெயர் எனக்குப் பிடித்த பெயர்.. ரொம்ப நன்றி வருகைக்கு..

கலகலப்ரியா said...

//ஹேமா said...

ப்ரியா,உலகமே சுயநலத்தோடுதான் சுழல்கிறது இப்போ.அதுவும் எங்கள் சின்ன வட்டம் விட்டு எப்போ வெளி உலகைப் பார்க்க நேரிட்டதோ அப்போதே உலகம் அருவருப்பாகிவிட்டதுபோன்ற உணர்வு//

வாங்க ஹேமா.... பெரிய வட்டத்தில் இருந்து கொண்டும் புழுக் கூடுகளையே அவதானித்துக் கொண்டிருந்தா அருவெறுப்பு தோன்றத்தான் செய்யும்..

பூச்சினிடையே கண்ணை உறுத்தா வண்ணம் சுய வண்ணம் மாறாது பறந்து கொண்டிருக்கும் வண்ணத்துப் பூச்சி நான்..! அழகிய உலகம்.. !

கலகலப்ரியா said...

//சூர்யா ௧ண்ணன் said...

//புழுக்களைப் புதைத்து..
போன்சாய்ச் செடிகளுக்கு..
உரமிடலாமென்ற..
உயரிய நோக்குடன்.. !//

அருமையான வரிகள்! நல்ல கவிதை!//

ரொம்ப நன்றி சூர்யா..

கலகலப்ரியா said...

//இராகவன் நைஜிரியா said...

// நயம் செய்வதாகச் சொல்லி..
சுயம் என்பதைக் கெடுத்து..
நலத்தைக் கடையில் வைத்து..
சுயநலத்தைச் சிரமேற்கொண்டு..
பொதுநலம் பேசித் திரியும்..
போதகர்களின் பேதகத்தால்..//

அருமை. அருமை. வார்த்தைகளில் விளையாடிவிட்டீர்கள்.//

நன்றி நன்றி.. ரொம்ப நன்றி.. அடிக்கடி காணாம போயிடுறீங்க.. பின்னூட்டம் எல்லாம் மிஸ்ஸிங்.. அவ்வ்வ்வ்வ்..

vasu balaji said...

/பூச்சினிடையே கண்ணை உறுத்தா வண்ணம் சுய வண்ணம் மாறாது பறந்து கொண்டிருக்கும் வண்ணத்துப் பூச்சி நான்..! அழகிய உலகம்.. !/

பின்னூட்டத்தில் ஒரு வைரம். எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. தன்னம்பிக்கை கொடுக்கிறதாக உணர்கிறேன். இதுக்கு ஒரு பாராட்டு பிடிங்கம்மா.

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...

/பூச்சினிடையே கண்ணை உறுத்தா வண்ணம் சுய வண்ணம் மாறாது பறந்து கொண்டிருக்கும் வண்ணத்துப் பூச்சி நான்..! அழகிய உலகம்.. !/

பின்னூட்டத்தில் ஒரு வைரம். எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. தன்னம்பிக்கை கொடுக்கிறதாக உணர்கிறேன். இதுக்கு ஒரு பாராட்டு பிடிங்கம்மா.//


பாராட்டுக்கு நன்றிங்க சார்.. நீங்க வைரத்த எடுத்துட்டு பாராட்டு சொல்லிட்டு போனா எப்டி சார்.. அப்டியே பேங்க் அக்கௌன்ட்ல அமௌண்ட போட்டுட்டு போங்க..

*இயற்கை ராஜி* said...

கவிதை அருமை

விக்னேஷ்வரி said...

அருமை.

அன்பேசிவம் said...

ப்ரியா, அட்டகாசம். அழமான வரிகள், நிறைய விஷயங்களோடு ஒத்துபோகிறது. அருமை தொடர்ந்து எழுதுங்கள்.

Jackiesekar said...

நல்லா இருந்தது பிரியா வாழ்த்துக்கள்

vasu balaji said...

/பாராட்டுக்கு நன்றிங்க சார்.. நீங்க வைரத்த எடுத்துட்டு பாராட்டு சொல்லிட்டு போனா எப்டி சார்.. அப்டியே பேங்க் அக்கௌன்ட்ல அமௌண்ட போட்டுட்டு போங்க../

அய்யோ நான் கொண்டு போகல. அநியாயமா இருக்கே. வைரம்னு பாராட்டினா தப்பா. யப்பா.

☀நான் ஆதவன்☀ said...

தெரியாம உள்ள வந்துட்டேன். வெளிய எப்படி போறதுன்னு தெரியலையே......

☀நான் ஆதவன்☀ said...

கவிதை எனக்கு புரியாதுன்னு சொன்னேன். தப்பா எடுத்துகாதீங்க :)

துபாய் ராஜா said...

நாட்டுநடப்போடு ஒத்துப்போகும் நயமான கவிதை.

நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மாந்தரை நினைத்துவிட்டால்....

துபாய் ராஜா said...

//சமுதாயப் பூச்சுக்கேற்ப..
வண்ணமணிந்துறங்கும்..
பச்சோந்திகள்..

பட்டாம் பூச்சியின்..
இயற்கை வண்ணம்..
உறுத்துவதாக..
உளறிக் கொண்டிருக்கும்..
உலக்கைக் கொழுந்துகள்..//

சரியான சாட்டையடி ப்ரியா... ஆனா இவங்களுக்குத்தான் உறைக்காதே...

துபாய் ராஜா said...

//நயம் செய்வதாகச் சொல்லி..
சுயம் என்பதைக் கெடுத்து..
நலத்தைக் கடையில் வைத்து..
சுயநலத்தைச் சிரமேற்கொண்டு..
பொதுநலம் பேசித் திரியும்..
போதகர்களின் பேதகத்தால்..//

ஆஹா.. ஆஹா.. எதுகை, மோனை அருமை. வார்த்தைகளை அழகாக சுழற்றியிருக்கிறீர்கள்.

துபாய் ராஜா said...

//வண்ணத்துப் பூச்சிகள் பல..
நிறத்தை உதிர்க்க முடிவெடுத்து..
சிறகிழந்து கம்பளிப் பூச்சிகளாய்..
மயிருமிழந்து புழுக்களாய்...
நெளிந்து கொண்டிருப்பது..
சமுதாயச் சிறப்பென்றும்..
சிறகுடனிருப்பது சீர்கேடென்றும்..

இன்னும் பற்பல சொற்கள்..
தோண்டிக் கொண்டிருக்கிறார்கள்..
புழுக்களைப் புதைத்து..
போன்சாய்ச் செடிகளுக்கு..
உரமிடலாமென்ற..
உயரிய நோக்குடன்.. !//

நாட்டுநடப்பை புட்டு புட்டு வைத்துவிட்டீர்கள். தெருவெங்கும்,ஊரெங்கும், நகரமெங்கும் ஃபிளெக்ஸ் போர்டில் பொறிக்கவேண்டிய வார்த்தைகள்....

நாளும் நலமே விளையட்டும் said...

நம் எண்ணங்கள் மாறுவதை தான் நீங்கள் சொல்றீங்கனு நினைச்சேன்.

எண்ணங்கள் மாறுவது நம்மையும் மற்றவரையும் உயர்த்துனா அது கயமை இல்ல.
இன்னைக்கு ஒரு மாதிரி பேசி நாளைக்கு ஒரு மாதிரி பேசி?
இங்க பேச்சு எப்படி மாறுது?(எண்ணங்கள் மாறாமையா)

கீழ்மையான எண்ணம் கொண்டவர்கள் தான் இப்படி தங்கள் சுயத்தை அடிக்கடி மாற்றிக்கொள்ள முடியும்னு நான் நினைக்கிறேன்.

எது எப்படியோ நான் இந்த விளையாட்டுக்கு வரல.
எனக்கு ஒன்னும் தெரியாது!

கலகலப்ரியா said...

//இய‌ற்கை said...

கவிதை அருமை//

நன்றி இயற்கை.. வாங்க.. ரொம்ப நாளா ஆள காணோம்..

கலகலப்ரியா said...

//விக்னேஷ்வரி said...

அருமை.//

வாங்க விக்னேஷ்வரி.. நன்றி..

கலகலப்ரியா said...

//முரளிகுமார் பத்மநாபன் said...

ப்ரியா, அட்டகாசம். அழமான வரிகள், நிறைய விஷயங்களோடு ஒத்துபோகிறது. அருமை தொடர்ந்து எழுதுங்கள்.//

ரொம்ப நன்றி முரளி..

கலகலப்ரியா said...

//jackiesekar said...

நல்லா இருந்தது பிரியா வாழ்த்துக்கள்//

நன்றி ஜக்கி..

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...

/பாராட்டுக்கு நன்றிங்க சார்.. நீங்க வைரத்த எடுத்துட்டு பாராட்டு சொல்லிட்டு போனா எப்டி சார்.. அப்டியே பேங்க் அக்கௌன்ட்ல அமௌண்ட போட்டுட்டு போங்க../

அய்யோ நான் கொண்டு போகல. அநியாயமா இருக்கே. வைரம்னு பாராட்டினா தப்பா. யப்பா.//

செரி செரி.. டென்ஷன் ஆவாதீங்க... இவ்ளோ பயம்லாம் உடம்புக்கு ஆவாது.

கலகலப்ரியா said...

//☀நான் ஆதவன்☀ said...

கவிதை எனக்கு புரியாதுன்னு சொன்னேன். தப்பா எடுத்துகாதீங்க :)//

இதில நான் என்ன தப்பா எடுத்துக்கிறது.. கவிதைன்னு போட்டு.. நான் இன்னைக்கு கடைக்கு போயி கொய்யாக்கா வாங்கி வந்தேன்னு போட்டாலே.. புரியலைன்னு ரெடிமேட் பதில்தான் சொல்லுறாய்ங்க.. கவிதைன்னாலே புரியாதுன்னு அகராதில எழுதி இருக்காங்க போல..

நீங்க தப்பா எடுத்துக்கிடாதீய.. =))

கலகலப்ரியா said...

//துபாய் ராஜா said...

நாட்டுநடப்போடு ஒத்துப்போகும் நயமான கவிதை.

நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மாந்தரை நினைத்துவிட்டால்....//

ஆஹா.. இந்தப் பாட்டு போட்டு ஒரு இடுகை போடணும்னு நினைச்சேன்.. நன்றிங்கோ..

கலகலப்ரியா said...

//துபாய் ராஜா said...

//நயம் செய்வதாகச் சொல்லி..
சுயம் என்பதைக் கெடுத்து..
நலத்தைக் கடையில் வைத்து..
சுயநலத்தைச் சிரமேற்கொண்டு..
பொதுநலம் பேசித் திரியும்..
போதகர்களின் பேதகத்தால்..//

ஆஹா.. ஆஹா.. எதுகை, மோனை அருமை. வார்த்தைகளை அழகாக சுழற்றியிருக்கிறீர்கள்.//

நன்றி நன்றி... ரொம்ப நன்றி ராஜா..

கலகலப்ரியா said...

//துபாய் ராஜா said...

நாட்டுநடப்பை புட்டு புட்டு வைத்துவிட்டீர்கள். தெருவெங்கும்,ஊரெங்கும், நகரமெங்கும் ஃபிளெக்ஸ் போர்டில் பொறிக்கவேண்டிய வார்த்தைகள்....//

ஏதாவது புண்ணியம் இருக்கும்கிறீங்க.. =)).. கன்னாபின்னான்னு அறிக்கை பறக்கும்.. =))

கலகலப்ரியா said...

//நாளும் நலமே விளையட்டும் said...

நம் எண்ணங்கள் மாறுவதை தான் நீங்கள் சொல்றீங்கனு நினைச்சேன்.//

எங்கயோ.. ஏதோ.. புரியாத நிலை.. சரி விடுங்க.. சரியா போய்டும்..பின்னூட்டத்துக்கு ரொம்ப நன்றி..

ப்ரியமுடன் வசந்த் said...

வந்துட்டேன்ன்ன்,,,,,

இயற்கையா சிரிக்கிற காலம் போயி செயற்கையா சிரிக்கும் காலமாயிடுச்சு..

நீ 1001 செஞ்சா நான் 1501 செய்வேன்ற நிலைமையில் இருக்கிறோம்...

சுயத்தை இழந்து கயம் மட்டுமே இருக்கு மனசில்...

இப்போ போயி ....

போங்கக்கா..போயி...வேலைய பாருங்க...நம்ம சொல்லியா திருந்த போறாய்ங்க...

கலகலப்ரியா said...

//பிரியமுடன்...வசந்த் said...

வந்துட்டேன்ன்ன்,,,,,//

உக்காரு..

இது நம்ம மனசில இருக்கிற குப்பைய கொஞ்சம் இறக்கி வைக்கிறதுக்காக கிறுக்கி வைக்கிறது வசந்து.. மத்தபடி மத்தவங்கள திருத்துற தகுதி நமக்கில்ல.. ஹிஹி..

அது சரி(18185106603874041862) said...

வண்ணத்துப் பூச்சிகளின் காலம்
முடிந்து நாளாயிற்று...
தன் வீட்டு குரோட்டன்ஸ் செடி வளர்க்க
வண்ணத்துப் பூச்சிகள் மட்டுமல்ல...
எதை வேண்டுமானாலும் உரமாக்குவார்கள்...பூச்சிகள் புழுக்களாக்கப்படும்...புழுக்கள் நசுக்கப்படும்...கருநாகங்களுக்கு காலம் ஒரு நாள் பதில் சொல்லும்...ஆனால்....காத்திருக்கத் தான் நேரமில்லை...காத்திருக்கும் ஒவ்வொரு மணித் துளியும் மற்றுமொரு கல்லறை நிறைக்கப்படுகிறது....

ஆ.ஞானசேகரன் said...

//இன்னும் பற்பல சொற்கள்..
தோண்டிக் கொண்டிருக்கிறார்கள்..
புழுக்களைப் புதைத்து..
போன்சாய்ச் செடிகளுக்கு..
உரமிடலாமென்ற..
உயரிய நோக்குடன்.. !//


நல்ல வரிகள் ப்ரியா.... பாராட்டுகள்

Unknown said...

பூச்சுகளற்ற உவமைகள் மூலம்
பூச்சிகள் சொல்லும் உண்மைகள் அருமை.

மணிப்பக்கம் said...

:) கல கல .. கலக்கல் பிரியாவா ஆயிட்டிங்க! ;)

கலகலப்ரியா said...

//அது சரி said... //

ஆஹா.. கிட்ட கிட்ட உரை எழுதின மாதிரி இருக்கு.. =).. பட்டாம்பூச்சிகளின் காலம் இன்னும் முடிந்து விடவில்லை என்று நம்புவோமாக.. அவ்வ்வ்வ்வ்வ்...

கலகலப்ரியா said...

//ஆ.ஞானசேகரன் said...

//இன்னும் பற்பல சொற்கள்..
தோண்டிக் கொண்டிருக்கிறார்கள்..
புழுக்களைப் புதைத்து..
போன்சாய்ச் செடிகளுக்கு..
உரமிடலாமென்ற..
உயரிய நோக்குடன்.. !//


நல்ல வரிகள் ப்ரியா.... பாராட்டுகள்//

நன்றி ஞானசேகரன்..

கலகலப்ரியா said...

//rajesh said...

பூச்சுகளற்ற உவமைகள் மூலம்
பூச்சிகள் சொல்லும் உண்மைகள் அருமை.//

ரொம்ப நன்றி ராஜேஷ்..

கலகலப்ரியா said...

//மணிப்பக்கம் said...

:) கல கல .. கலக்கல் பிரியாவா ஆயிட்டிங்க! ;)//

வாங்க மணி.. ரொம்ப நன்றி..

R.Gopi said...

லகலக‌

பதிவுக்கு சம்ப‌ந்தமில்லாத பின்னூட்டம்தான்... இருப்பினும் ஒரு ஸ்பெஷல் அழைப்பு விடுத்துள்ளேன்..

தீபாவளி வாழ்த்தும், பதிவின் கடைசியில் உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் கிஃப்டும் வைத்துள்ளேன்.. வருகை தந்து மறுக்காமல் பெற்றுக்கொள்ளவும்...

உங்களுக்கும், குடும்பத்தார் மற்றும் ந‌ண்ப‌ர்க‌ள் அனைவ‌ருக்கு இனிய‌ தீபாவ‌ளி ந‌ல்வாழ்த்துக்க‌ள்... http://edakumadaku.blogspot.com/2009/10/blog-post.html

கலகலப்ரியா said...

அவ்வ்வ்வ்வ்.. வார்த்த வரல.. காத்துதான் வருது.. ரொம்ப நன்றி கோபி..

vasu balaji said...

விகடன் படைப்புக்களில் தேர்வாகியிருக்கிறது. பாராட்டுகள் மீண்டும் மீண்டும்.

கலகலப்ரியா said...

nanringo..!

Unknown said...

அடா... அடா... அடா... கவித... கவித.....!! படம் ரொம்ப அழகு .....

கலகலப்ரியா said...

//லவ்டேல் மேடி said...

அடா... அடா... அடா... கவித... கவித.....!! படம் ரொம்ப அழகு .....//

நன்றி மேடி..

அன்புடன் நான் said...

இன்னும் பற்பல சொற்கள்..
தோண்டிக் கொண்டிருக்கிறார்கள்..
புழுக்களைப் புதைத்து..
போன்சாய்ச் செடிகளுக்கு..
உரமிடலாமென்ற..
உயரிய நோக்குடன்.. //

கவிதை அருமை பாராட்டுகள்.

Radhakrishnan said...

மிகவும் அசத்தலான கவிதை. அருமையான எண்ணங்களுடன் வந்திருக்கிறது, அதுவும் போன்சாய் மரத்துக்கு உரமிடலாமென சொன்ன வரி சொல்லும் அர்த்தம் அதிகம்.

கலகலப்ரியா said...

//சி. கருணாகரசு said...

இன்னும் பற்பல சொற்கள்..
தோண்டிக் கொண்டிருக்கிறார்கள்..
புழுக்களைப் புதைத்து..
போன்சாய்ச் செடிகளுக்கு..
உரமிடலாமென்ற..
உயரிய நோக்குடன்.. //

கவிதை அருமை பாராட்டுகள்.//

நன்றி கருணாகரசு..

கலகலப்ரியா said...

//Rads said...

மிகவும் அசத்தலான கவிதை. அருமையான எண்ணங்களுடன் வந்திருக்கிறது, அதுவும் போன்சாய் மரத்துக்கு உரமிடலாமென சொன்ன வரி சொல்லும் அர்த்தம் அதிகம்.//

நன்றிங்க..

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

நம்ம ஊர் பெண்களை மையப் படுத்தி எழுதியதா இது? தொப்புள் க்கொடி உறவுகளை வைத்தா? இல்லை மெய்யாலுமே புழு - பூச்சிகளை வைத்தா? என்னங்க பண்ணறது - உங்க ரேஞ்சுக்கு யோசிக்க முடியலைங்க.. எனக்கு புரிஞ்சவரைக்கும், இது நல்லாயிருக்கு..

கலகலப்ரியா said...

//Chandhana said...

நம்ம ஊர் பெண்களை மையப் படுத்தி எழுதியதா இது? தொப்புள் க்கொடி உறவுகளை வைத்தா? இல்லை மெய்யாலுமே புழு - பூச்சிகளை வைத்தா? என்னங்க பண்ணறது - உங்க ரேஞ்சுக்கு யோசிக்க முடியலைங்க.. எனக்கு புரிஞ்சவரைக்கும், இது நல்லாயிருக்கு..//

ம்ம் :).. நம்ம சமுதாயத்த வச்சுதான் சந்தனா.. ஆண், பெண் பாகுபாடின்றி .. பலியெடுக்கப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்..

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

கொய்யா ரேஞ்சுக்கு டவுட் கேட்டாலும் பொறுமையா சொல்லறீங்க :)) இப்போ புரிஞ்ச மாதிரி இருக்கு.. வார்த்தைகள் புரிஞ்சாலும், மையப் பொருள் புரிஞ்சாத் தானே கவிதைக்கு அழகு.. அப்போத்தான் ஆழ்ந்து ரசிக்க முடியும்.. மறுபடியும் படிச்சுப் பார்த்தேன்.. ரொம்ப நன்றி..

கலகலப்ரியா said...

//Chandhana said...

கொய்யா ரேஞ்சுக்கு டவுட் கேட்டாலும் பொறுமையா சொல்லறீங்க :)) இப்போ புரிஞ்ச மாதிரி இருக்கு.. வார்த்தைகள் புரிஞ்சாலும், மையப் பொருள் புரிஞ்சாத் தானே கவிதைக்கு அழகு.. அப்போத்தான் ஆழ்ந்து ரசிக்க முடியும்.. மறுபடியும் படிச்சுப் பார்த்தேன்.. ரொம்ப நன்றி..//

பொறுமையா படிக்கிற உங்களுக்குத்தான் நன்றி சொல்லணும்.. தவிர.. கொய்யா எனக்கு ரொம்பப் புடிக்குமே..!