பிள்ளையார் கோயில்.. நிழல் பரப்பும் அரசமரம்.. திராட்சைத் தோப்புகள்.. வயல்வெளிகள்.. தோட்டங்கள்.. பசுமையினூடே கரு நாகமாய்.. தார் வீதிகள்.. வீதியுடன் முட்டி.. முச்சந்தி.. அடையாளமாய் ஆலமரம்.. எதிரே ஒரு பென்ச் போட்ட உணவகம்.. பக்கத்தில் போஸ்ட் ஆஃபீஸ்.. ஃபார்மஸி.. மளிகைக் கடை.. சைக்கிள் பஞ்சர் பார்க்கும் கடை.. அதற்கும் ஒரு எதிர்க் கடை.. அதையொட்டி நெருப்புத் துண்டுகள் அடங்கிய ஒரே ஒரு இஸ்திரிப் பெட்டியை மட்டுமே நம்பிய சலவைக் கடை.. கொள்ளி அருகிலேயே உண்டென்று படபடத்து காற்றிலாடும் கிடுகினாலான சுவர்கள்..
வடக்கே நீளும் பிரதான வீதி.. அங்கே பாரதி கேட்ட.. காணி நிலம்.. தூணில் அழகியதாய் நல்மாடம்.. மாளிகை.. கேணி.. தென்னைமரம்.. கீற்று.. இளநீர்.. முத்துச் சுடர் போல நிலவொளி.. குயிலோசை.. தென்றல்... தவிர.. வாழை... மா.. பலா.. மல்லிகை.. செம்பருத்தி.. வெண்டை.. கத்தரி.. அரைக்கீரை.. முளைக்கீரை.. அருகம்புல்லுடன்.. கோரைப்புல்லும்.. குரோட்டன்ஸ்.. மற்றும் சில புதர்களும்.. நல்ல பாம்புடன்.. சாரைப் பாம்பும்.. கீரியும்.. பூனையும்.. நன்றி நவில நாய்கள் பலவும்.. கூடிக் கரைய காகங்களும்.. காகம் கரைதலில்.. கடிதம் வருமென மல்லிகையாய் மலரும் அம்மாவின் அழகிய வதனமும்.. ஞாயிறும்.. சூரிய நமஸ்காரமும்.. முழி விசேஷமும்.. பஞ்சாங்கமும்..
வாத்தியார்.. வைத்தியர்.. வக்கீல்.. வெட்டி ஆஃபீஸர்.. வேறுபாடின்றி.. காலைக் கருக்கலில்.. மாலை மயக்கத்தில்.. தோட்டத்தில் பணி புரிவோர்.. வீக்கென்ட்.. ஸ்ட்ரெஸ்.. பிரஷர்.. டிப்ரெஷன்.. டென்ஷன்.. சைக்கியாட்ரிஸ்ட்.. சைக்காலாஜிஸ்ட்.. சைக்கோ.. போன்ற சொற்கள் அறியாத அழகிய உலகம்..
அதிகாலை ஐந்து மணி டியூஷன்.. எட்டிலிருந்து இரண்டு வரை பாடசாலை.. மூன்றிலிருந்து ஆறரை வரை டியூஷன்.. ஹோம் வொர்க் பண்ணும் பொழுதோ, கை கால் கழுவும் பொழுதோ.. காலையில் வாரிய முடியை சரி செய்யும் பொழுதோ.. தூங்கி விழும் பொழுதோ.. தூங்கும் பொழுதோ.. அரை வயிறேனும் என்று அரற்றியபடி அம்மாவின் கையால் ஊட்டப்படும் பால் மற்றும் சாதம்..
தென்னை மட்டையில்.. கிரிக்கெட் பேட்.. காம்பவுண்ட் சுவர் வரை நாலு.. சுவர் தாண்டி வீதியில் செல்லும் சொட்டையில் அடித்தால் சிக்ஸர்... மாமரக் கிளையில் அணிலுக்கும்.. கிளிகளுக்கும் போட்டியாக.. உப்பும்.. மிளகாய்ப் பொடியும்.. நானும்..
தீபாவளிக்கோ... தைப் பொங்கலுக்கோ.. சிவராத்திரிக்கோ உறங்கியபடியே பார்க்கும் பாதித் திரைப்படம்.. சாப்பிட்டபடியோ.. சாப்பிட மறந்தோ.. படிக்கும்.. சுஜாதா.. கல்கி.. பாலகுமாரன்.. நிற்க.. கணக்கில் நூறு.. வகுப்பில் முதல்.. மூஞ்சி பளிச்.. எதுவும் வேண்டாம்.. முடி ஒரு இன்ச் வளர்ந்து விட்டது.. வாரா வாரம் காரணம் சொல்லி.. திருஷ்டி கழிக்கும் அம்மா..
எல்லாம் இருந்தும்.. எல்லாம் இருந்தும்.. ஏன் என்று நினைத்த நாள் ஒன்று....
தாத்தா வீட்டின் கேட் அருகே.. அழகாய்ப் படர்ந்த முல்லைக் கொடி.. வீதியில் நடப்பவை என் கண்ணுக்குத் தெரியும்.. என்னை வீதிக்குத் தெரியாத ஒரு ஒன் வே செட் அப்..
யானை வரும் பின்னே.. மணி ஓசையாய்.. குரல்கள்.. கோஷங்கள்.. சாரை சாரையாய்.. பெண்கள்.. ஆண்கள்.. குமரிகள்.. கிழவிகள்.. கத்தியபடியே.. மடியிலிருந்த சில்லறை வாரி தெருவில் இறைத்த பெண்மணி.. அதை மிதித்தும்.. தாண்டியும் சென்ற ஏழை.. பாழை.. நடுத்தர வர்க்கம்.. ஏன்..?
பள்ளித் தலத்தில்.. படத்தில் கண்டவை.. மனதில் பதியாது.. மணியைப் பார்த்து.. பாய்ந்து ஓடி.. படித்து.. படித்து.. படித்து.... பள்ளித் தோழிகளிருவர் காணாது போய்.. படையில் சேர்ந்ததும்.. வாத்தியார் மகன் அந்தர்த்யானம் ஆகித் தமிழ் ஆர்மியில் சேர்ந்ததும்... பாரியாருடன் வாத்தியார் படையெடுத்தும் பலனின்றிப் போனதும்.. ஏன்..?
(தொடரும்..)
வடக்கே நீளும் பிரதான வீதி.. அங்கே பாரதி கேட்ட.. காணி நிலம்.. தூணில் அழகியதாய் நல்மாடம்.. மாளிகை.. கேணி.. தென்னைமரம்.. கீற்று.. இளநீர்.. முத்துச் சுடர் போல நிலவொளி.. குயிலோசை.. தென்றல்... தவிர.. வாழை... மா.. பலா.. மல்லிகை.. செம்பருத்தி.. வெண்டை.. கத்தரி.. அரைக்கீரை.. முளைக்கீரை.. அருகம்புல்லுடன்.. கோரைப்புல்லும்.. குரோட்டன்ஸ்.. மற்றும் சில புதர்களும்.. நல்ல பாம்புடன்.. சாரைப் பாம்பும்.. கீரியும்.. பூனையும்.. நன்றி நவில நாய்கள் பலவும்.. கூடிக் கரைய காகங்களும்.. காகம் கரைதலில்.. கடிதம் வருமென மல்லிகையாய் மலரும் அம்மாவின் அழகிய வதனமும்.. ஞாயிறும்.. சூரிய நமஸ்காரமும்.. முழி விசேஷமும்.. பஞ்சாங்கமும்..
வாத்தியார்.. வைத்தியர்.. வக்கீல்.. வெட்டி ஆஃபீஸர்.. வேறுபாடின்றி.. காலைக் கருக்கலில்.. மாலை மயக்கத்தில்.. தோட்டத்தில் பணி புரிவோர்.. வீக்கென்ட்.. ஸ்ட்ரெஸ்.. பிரஷர்.. டிப்ரெஷன்.. டென்ஷன்.. சைக்கியாட்ரிஸ்ட்.. சைக்காலாஜிஸ்ட்.. சைக்கோ.. போன்ற சொற்கள் அறியாத அழகிய உலகம்..
அதிகாலை ஐந்து மணி டியூஷன்.. எட்டிலிருந்து இரண்டு வரை பாடசாலை.. மூன்றிலிருந்து ஆறரை வரை டியூஷன்.. ஹோம் வொர்க் பண்ணும் பொழுதோ, கை கால் கழுவும் பொழுதோ.. காலையில் வாரிய முடியை சரி செய்யும் பொழுதோ.. தூங்கி விழும் பொழுதோ.. தூங்கும் பொழுதோ.. அரை வயிறேனும் என்று அரற்றியபடி அம்மாவின் கையால் ஊட்டப்படும் பால் மற்றும் சாதம்..
தென்னை மட்டையில்.. கிரிக்கெட் பேட்.. காம்பவுண்ட் சுவர் வரை நாலு.. சுவர் தாண்டி வீதியில் செல்லும் சொட்டையில் அடித்தால் சிக்ஸர்... மாமரக் கிளையில் அணிலுக்கும்.. கிளிகளுக்கும் போட்டியாக.. உப்பும்.. மிளகாய்ப் பொடியும்.. நானும்..
தீபாவளிக்கோ... தைப் பொங்கலுக்கோ.. சிவராத்திரிக்கோ உறங்கியபடியே பார்க்கும் பாதித் திரைப்படம்.. சாப்பிட்டபடியோ.. சாப்பிட மறந்தோ.. படிக்கும்.. சுஜாதா.. கல்கி.. பாலகுமாரன்.. நிற்க.. கணக்கில் நூறு.. வகுப்பில் முதல்.. மூஞ்சி பளிச்.. எதுவும் வேண்டாம்.. முடி ஒரு இன்ச் வளர்ந்து விட்டது.. வாரா வாரம் காரணம் சொல்லி.. திருஷ்டி கழிக்கும் அம்மா..
எல்லாம் இருந்தும்.. எல்லாம் இருந்தும்.. ஏன் என்று நினைத்த நாள் ஒன்று....
தாத்தா வீட்டின் கேட் அருகே.. அழகாய்ப் படர்ந்த முல்லைக் கொடி.. வீதியில் நடப்பவை என் கண்ணுக்குத் தெரியும்.. என்னை வீதிக்குத் தெரியாத ஒரு ஒன் வே செட் அப்..
யானை வரும் பின்னே.. மணி ஓசையாய்.. குரல்கள்.. கோஷங்கள்.. சாரை சாரையாய்.. பெண்கள்.. ஆண்கள்.. குமரிகள்.. கிழவிகள்.. கத்தியபடியே.. மடியிலிருந்த சில்லறை வாரி தெருவில் இறைத்த பெண்மணி.. அதை மிதித்தும்.. தாண்டியும் சென்ற ஏழை.. பாழை.. நடுத்தர வர்க்கம்.. ஏன்..?
பள்ளித் தலத்தில்.. படத்தில் கண்டவை.. மனதில் பதியாது.. மணியைப் பார்த்து.. பாய்ந்து ஓடி.. படித்து.. படித்து.. படித்து.... பள்ளித் தோழிகளிருவர் காணாது போய்.. படையில் சேர்ந்ததும்.. வாத்தியார் மகன் அந்தர்த்யானம் ஆகித் தமிழ் ஆர்மியில் சேர்ந்ததும்... பாரியாருடன் வாத்தியார் படையெடுத்தும் பலனின்றிப் போனதும்.. ஏன்..?
(தொடரும்..)
52 ஊக்கம்::
கண்ணீர்... :(
வலிகளுடனான ஒரு பாதை முடிவில்லாது விரிகிறது.....
,
சிறிய சொற்றொடர்கள் வித்தியாசமான வாசிப்பனுபவம்.
ஹைக்கூ போலவா இது?..
கீபோர்ட்..மவுஸ்..டச்பேட்..ஸ்பீக்கர்...
A,,B,,C,,அ..ஆ..இ..ஈ..வெப்கேம்..சாட்..ஈமெயில்..ஜிமெயில்..மெசெஞ்செர்..இண்டெர்னெட்...லேப்டாப்..கவிதை.
கவிதை..கதை..நையாண்டி...நக்கல்...தமிழிஷ்...தமிழ்மணம்..ஓட்டு..
பரிந்துரை..மகுடம்...நைனா...நான்..
எல்லாமே டூப்...இந்த பின்னூட்டம்தான் டாப்பு...
ஆஹா. தொடர் இடுகையா? அழகான அறிமுகம். புதிதாய் ஒரு ஆரவாரமற்ற ஊருக்குள் வந்த பிரமிப்ப. அது என்ன நவீனத்துவம் வேணும்னாலும் இருக்கட்டும், இந்த உத்தி நல்லா இருக்கு. ஏனில்..திடுக்.
/கூடிக் கரைய காகங்களும்.. காகம் கரைதலில்.. கடிதம் வருமென மல்லிகையாய் மலரும் அம்மாவின் அழகிய வதனமும்.. ஞாயிறும்.. சூரிய நமஸ்காரமும்.. முழி விசேஷமும்.. பஞ்சாங்கமும்../
ம்ம்ம்.
/டென்ஷன்.. சைக்கியாட்ரிஸ்ட்.. சைக்காலாஜிஸ்ட்.. சைக்கோ.. போன்ற சொற்கள் அறியாத அழகிய உலகம்../
ஹூம்.:(
/தூங்கி விழும் பொழுதோ.. தூங்கும் பொழுதோ.. அரை வயிறேனும் என்று அரற்றியபடி அம்மாவின் கையால் ஊட்டப்படும் பால் மற்றும் சாதம்../
இப்புடியெல்லாம் பழசை கிளறி விடப்படாது.
/மாமரக் கிளையில் அணிலுக்கும்.. கிளிகளுக்கும் போட்டியாக.. உப்பும்.. மிளகாய்ப் பொடியும்.. நானும்../
வாலு.
/தாத்தா வீட்டின் கேட் அருகே.. அழகாய்ப் படர்ந்த முல்லைக் கொடி.. வீதியில் நடப்பவை என் கண்ணுக்குத் தெரியும்.. என்னை வீதிக்குத் தெரியாத ஒரு ஒன் வே செட் அப்../
லக்கி.
/பாரியாருடன் வாத்தியார் படையெடுத்தும் பலனின்றிப் போனதும்.. ஏன்..?/
மேக்கொண்டு நீதாம்மா சொல்லணும்.
//மாமரக் கிளையில் அணிலுக்கும்.. கிளிகளுக்கும் போட்டியாக.. உப்பும்.. மிளகாய்ப் பொடியும்.. நானும்..//
எழுத்து நடை சூப்பர்!
//தீபாவளிக்கோ... தைப் பொங்கலுக்கோ.. சிவராத்திரிக்கோ உறங்கியபடியே பார்க்கும் பாதித் திரைப்படம்.. சாப்பிட்டபடியோ.. சாப்பிட மறந்தோ.. படிக்கும்.. சுஜாதா.. கல்கி.. பாலகுமாரன்.//
பெரிய கொசு வத்தி பத்த வச்சுட்டிங்க போல..,
நல்லா இருக்குங்க..,
ஆஹா! நான் தான் முதல் பின்னூட்டமா?
தலைவா! பாலா சார்! எங்க போய்ட்டிங்க!
//"கூட்டுக் களியினிலே.."//
தலைப்பு அற்புதம் ..,
கலங்கடித்த இடுகை
//.. ஏன்..?//
இந்த 'ஏன்'க்குள் ஆயிரம் வலிகள் அடைகாத்திருக்கின்றன..
என்றாவது பிரசவிக்கும்...
//கொள்ளி அருகிலேயே உண்டென்று படபடத்து காற்றிலாடும் கிடுகினாலான சுவர்கள்..//
//அங்கே பாரதி கேட்ட.. காணி நிலம்.//
//காகம் கரைதலில்.. கடிதம் வருமென மல்லிகையாய் மலரும் அம்மாவின் அழகிய வதனமும்.//
//வாரா வாரம் காரணம் சொல்லி.. திருஷ்டி கழிக்கும் அம்மா..//
--)
நன்றாக இருந்தது...
வார்த்தைகளும், வர்ணனைகளும் அருமை.பால்யகால நினைவுகளை எழுப்பி விட்டீர்கள் என்றாலும் எல்லாவற்றையும் மீறி ஏதோ ஒரு சோகம் ஏற்படுகிறது....
ஜன்னல் வழி பார்த்தபடி பிரயாணிப்பதுபோல் வேகமாய் காட்சிகள்..தொடருங்கள்.
மிகப்பிடித்திருந்தது எழுதிய விதம்.
பாரியாருடன் வாத்தியார் படையெடுத்தும் பலனின்றிப் போனதும்.. ஏன்..?//
பாரியாருடன் வாத்தியார் படையெடுத்த்தால் கிட்டிய "விடுதலை".. இது... என்ற வியப்பு ஒருநாள் நம்மை ஆர்ப்பரிக்கலாம் அல்லவா?
நன்று!!!
இந்த இடுகைக்கு பொறுமையா பின்னூட்டம் போடணும். படிச்சுட்டேன். அலுவலகத்தில் கொஞ்சம் வேலை இருக்கு.
நேரம் கிடைக்கும் போது பின்னூட்டம் போடுகின்றேன். அதுவரை பொறுத்துக் கொள்ளுங்க.
//யானை வரும் பின்னே.. மணி ஓசையாய்.. குரல்கள்.. கோஷங்கள்.. சாரை சாரையாய்.. பெண்கள்.. ஆண்கள்.. குமரிகள்.. கிழவிகள்.. கத்தியபடியே.. மடியிலிருந்த சில்லறை வாரி தெருவில் இறைத்த பெண்மணி.. அதை மிதித்தும்.. தாண்டியும் சென்ற ஏழை.. பாழை.. நடுத்தர வர்க்கம்.. ஏன்..?//
விடையில்லா இந்த கேள்விக்குள் எத்தனை வேதனைகளோ?.....
இடுகை நன்று....
//தென்னை மட்டையில்.. கிரிக்கெட் பேட்.. காம்பவுண்ட் சுவர் வரை நாலு.. சுவர் தாண்டி வீதியில் செல்லும் சொட்டையில் அடித்தால் சிக்ஸர்..//
நெஞ்சில் வலியை உண்டாக்கிய இடுக்கை
ஆஹா.. சிங்கம் களம் இறங்கிருச்சே,,, மிச்ச கதை எனக்கு தெரியும் .. PDF காப்பி நூறு ரூபாய் இந்திய மதிப்பில்.
உங்களின் வித்தியாசமான பதிவுகளில் இதுவும் ஒன்று. அருமை. வர்ணிக்க வார்த்தை இல்லை
//ரகுநாதன் said...
கண்ணீர்... :(//
:).. வருகைக்கு நன்றிங்க..
// அது சரி said...
வலிகளுடனான ஒரு பாதை முடிவில்லாது விரிகிறது.....//
ம்ம்ம்... :)
//பிரியமுடன்...வசந்த் said...
கீபோர்ட்..மவுஸ்..டச்பேட்..ஸ்பீக்கர்...
A,,B,,C,,அ..ஆ..இ..ஈ..வெப்கேம்..சாட்..ஈமெயில்..ஜிமெயில்..மெசெஞ்செர்..இண்டெர்னெட்...லேப்டாப்..கவிதை.
கவிதை..கதை..நையாண்டி...நக்கல்...தமிழிஷ்...தமிழ்மணம்..ஓட்டு..
பரிந்துரை..மகுடம்...நைனா...நான்..
எல்லாமே டூப்...இந்த பின்னூட்டம்தான் டாப்பு...//
v.good vasanthu..
//வானம்பாடிகள் said...//
நன்றிங்க... சொல்லுவோம்ல..
//சூர்யா ௧ண்ணன் said...
//மாமரக் கிளையில் அணிலுக்கும்.. கிளிகளுக்கும் போட்டியாக.. உப்பும்.. மிளகாய்ப் பொடியும்.. நானும்..//
எழுத்து நடை சூப்பர்!
//தீபாவளிக்கோ... தைப் பொங்கலுக்கோ.. சிவராத்திரிக்கோ உறங்கியபடியே பார்க்கும் பாதித் திரைப்படம்.. சாப்பிட்டபடியோ.. சாப்பிட மறந்தோ.. படிக்கும்.. சுஜாதா.. கல்கி.. பாலகுமாரன்.//
பெரிய கொசு வத்தி பத்த வச்சுட்டிங்க போல..,
நல்லா இருக்குங்க..,
ஆஹா! நான் தான் முதல் பின்னூட்டமா?
தலைவா! பாலா சார்! எங்க போய்ட்டிங்க!//
ரொம்ப நன்றி சூர்யா.. ஆடிக்கு ஒரு வாட்டி அம்மாவாசைக்கு ஒரு வாட்டி பின்னூட்டம் போட்டா.. மாடரேஷன் போட்டிருக்கிறது எப்டி தெரியும்.. =))
// சூர்யா ௧ண்ணன் said...
//"கூட்டுக் களியினிலே.."//
தலைப்பு அற்புதம் ..,//
மீண்டும் நன்றி..
//கதிர் - ஈரோடு said...
கலங்கடித்த இடுகை
//.. ஏன்..?//
இந்த 'ஏன்'க்குள் ஆயிரம் வலிகள் அடைகாத்திருக்கின்றன..
என்றாவது பிரசவிக்கும்...//
நன்றி கதிர்..
//ஈ ரா said...
நன்றாக இருந்தது...//
நன்றி ஈ ரா..
//துபாய் ராஜா said...
வார்த்தைகளும், வர்ணனைகளும் அருமை.பால்யகால நினைவுகளை எழுப்பி விட்டீர்கள் என்றாலும் எல்லாவற்றையும் மீறி ஏதோ ஒரு சோகம் ஏற்படுகிறது....//
ம்ம்.. நன்றி ராஜா... சுகமான சோகங்கள்..
//velji said...
ஜன்னல் வழி பார்த்தபடி பிரயாணிப்பதுபோல் வேகமாய் காட்சிகள்..தொடருங்கள்.//
ஆகட்டும் நன்றி வேல்ஜி (பெயர் தப்பாக எழுதி இருப்பின் மன்னிக்கணும்..)
//நர்சிம் said...
மிகப்பிடித்திருந்தது எழுதிய விதம்.//
ரொம்ப நன்றி நர்சிம்...
//சி. கருணாகரசு said...
பாரியாருடன் வாத்தியார் படையெடுத்தும் பலனின்றிப் போனதும்.. ஏன்..?//
பாரியாருடன் வாத்தியார் படையெடுத்த்தால் கிட்டிய "விடுதலை".. இது... என்ற வியப்பு ஒருநாள் நம்மை ஆர்ப்பரிக்கலாம் அல்லவா?
நன்று!!!//
?! .... நன்றி...!
//இராகவன் நைஜிரியா said...
இந்த இடுகைக்கு பொறுமையா பின்னூட்டம் போடணும். படிச்சுட்டேன். அலுவலகத்தில் கொஞ்சம் வேலை இருக்கு.
நேரம் கிடைக்கும் போது பின்னூட்டம் போடுகின்றேன். அதுவரை பொறுத்துக் கொள்ளுங்க.//
ரொம்ப நன்றி ராகவன்.. பின்னூட்டம் போட்டா சொல்லி அனுப்புங்க என்ன..? அவ்வ்வ்வ்...
//க.பாலாசி said..
விடையில்லா இந்த கேள்விக்குள் எத்தனை வேதனைகளோ?.....
இடுகை நன்று.... //
நன்றிங்க பாலாசி..
// புலவன் புலிகேசி said...
//தென்னை மட்டையில்.. கிரிக்கெட் பேட்.. காம்பவுண்ட் சுவர் வரை நாலு.. சுவர் தாண்டி வீதியில் செல்லும் சொட்டையில் அடித்தால் சிக்ஸர்..//
நெஞ்சில் வலியை உண்டாக்கிய இடுக்கை//
நன்றி புலிகேசி..
//Maheswaran Nallasamy said...
ஆஹா.. சிங்கம் களம் இறங்கிருச்சே,,, மிச்ச கதை எனக்கு தெரியும் .. PDF காப்பி நூறு ரூபாய் இந்திய மதிப்பில்.//
நன்றிங்கோ.. அது என்ன pdf..? எனக்கு காப்பி அவ்ளோ பரிச்சயமில்ல... ! ^டீ மட்டும்தான்..^....!
// jothi said...
உங்களின் வித்தியாசமான பதிவுகளில் இதுவும் ஒன்று. அருமை. வர்ணிக்க வார்த்தை இல்லை//
ரொம்ப நன்றி ஜோதி..! எங்க ஆள் அந்தர்த்யானம் ஆயிட்டீங்கன்னு கேட்டேன்.. பதில் காணோம்.. எப்போவாவது பார்த்தா பதில் சொல்லிட்டு போங்க செரியா..
தமிழ் பற்று உள்ள மலையாளி நான்.
அழகி
என்ற
சாப்ட்வேர்
டவுன்லோட் பண்ணினேன் அனால் அது சரியாய் பயன் படுத்த தெரியாமல் தான் முதலில் எழுதினேன்
அதய் பற்றி கொஞ்சம் சொல்லிதர முடியுமா ?
//നിഷാർ ആലാട്ട് said...
தமிழ் பற்று உள்ள மலையாளி நான்.
அழகி
என்ற
சாப்ட்வேர்
டவுன்லோட் பண்ணினேன் அனால் அது சரியாய் பயன் படுத்த தெரியாமல் தான் முதலில் எழுதினேன்
அதய் பற்றி கொஞ்சம் சொல்லிதர முடியுமா ?//
ஆ...! அழகி பற்றி எனக்குத் தெரியாது...! யாராவது இந்த தமிழ்ப் பற்றுக்கு மரியாத கொடுத்து.. அது பத்திக் கொஞ்சம் சொல்லுங்க ப்ளீஸ்..!
/ஆ...! அழகி பற்றி எனக்குத் தெரியாது...! யாராவது இந்த தமிழ்ப் பற்றுக்கு மரியாத கொடுத்து.. அது பத்திக் கொஞ்சம் சொல்லுங்க ப்ளீஸ்..!/
http://www.azhagi.com/docs.html
இதில் யுனிகோடில் எழுதுவது எப்படி என்று இருக்கிறது. இதை விட பதிவிற்கு
NHM Writer easy
http://software.nhm.in/sites/default/files/NHMWriterSetup1511.exe
ty sir..
பணிச்சுமை. இப்போது என் குடும்பமும் இங்கே என்னுடனேயே. மீண்டும் கண்டிப்பாக எழுத வருவேன்.
//jothi said...
பணிச்சுமை. இப்போது என் குடும்பமும் இங்கே என்னுடனேயே. மீண்டும் கண்டிப்பாக எழுத வருவேன்.//
wow... ivlo naal miss panneengalla.. be with em.. and of course..blog world needs your contribution too.. vaanga vaanga..!
//rajesh said...
சிறிய சொற்றொடர்கள் வித்தியாசமான வாசிப்பனுபவம்.
ஹைக்கூ போலவா இது?..//
ரொம்ப நன்றி ராஜேஷ்.. ஹைக்கூ போன்றதா... கவிதை போன்றதா.. தெரியல.. உள்ளக் கிடக்கைகளின் வெளிப்பாடு.. எந்த வித யோசனையோ.. முன்னேற்பாடோ அற்றது..
முதலில் இந்த கருப்பு நிறத்தை தேர்ந்தெடுத்து பின்புலமாய் வைத்துக்கொண்ட காரணத்தை இயம்ப முடியுமா? வாழ்வியல் உணர்த்துவதா? வாழ்ந்து முடித்தவர்களின் சோகத்தை உணர்த்துவதற்காகவா? இரண்டு முறை முயற்சித்து உள்ளே வந்து இந்த இடத்தை பிடிப்பதற்குள் மூச்சு திணறுகிறது. உங்கள் வார்த்தைகளில் சொல்லப்போனால் பங்கருக்குள் வாழும் வாழ்க்கை போல. ரௌத்ரம் பழக முயற்சித்துக்கொண்டு இருக்கின்றேன் என்று சொல்லிவிட்டீர்கள். வார்த்தைகளும் அடுத்தவர்களுக்கு அத்தனை அப்பட்டமாக அடித்து நொறுக்குகிறது. இரண்டு முறையும் பெரும்பாலான தலைப்புகளை உள்வாங்கிய போது இரண்டு சொல்லத் தோன்றுகிறது. பின்புல நிறத்தை மாற்றுங்கள். அது இன்னமும் படிப்பவர்களுக்கு சுகத்தை தரும். சோகமாக கருத்துக்கு பின்புலம் இருந்தாலும். படைப்புக்கு வருகைக்கு இணைப்புக்கு நன்றி.
NANRI JOTHIJI.. PARKKAREN.. ENNA PANNALAMNU.. ROMBA NANRI..
வாழ்வின் அதனை நிகழ்வுகளையும், மெதுவாய் வருடிய தென்றல் முதல் புரட்டிபோட்ட புயல் வரை இதயத்தை எடுத்து பிழிந்து காட்டியிருக்கிறீர்கள் பிரியா. வாழ்கவளமுடன். எனது எங்கே போகிறோம், உழைப்பு கவிதைகளை www.vnthangamani.blogspot.com கொஞ்சம் படித்துபாருங்கள் நன்றி
இவன் வி.என்.தங்கமணி
//VN.THANGAMANI said...//
நன்றிங்க.. அவசியம் படிக்கறேன்..
சமீப இடுகை படிச்சிட்டு இந்த தொடர் முழுக்க படிக்கலாம்னு நினைச்சி ஆரம்பிச்சேன். தொடர முடியும்னு தோனல.. ஆரம்பம் சாதாரனமா இருந்திருந்தா முழுக்கப் படிச்சி இருப்பேன்.. எப்டி ஆரம்பிச்சி எப்டி கொண்டு போறிங்க.. :(
நீங்கள் யாரா இருந்தாலும் காரணம் எதுவா இருந்தாலும்.. வலி வலி தான்..
//SanjaiGandhi™ said...
சமீப இடுகை படிச்சிட்டு இந்த தொடர் முழுக்க படிக்கலாம்னு நினைச்சி ஆரம்பிச்சேன். தொடர முடியும்னு தோனல.. ஆரம்பம் சாதாரனமா இருந்திருந்தா முழுக்கப் படிச்சி இருப்பேன்.. எப்டி ஆரம்பிச்சி எப்டி கொண்டு போறிங்க.. :(
நீங்கள் யாரா இருந்தாலும் காரணம் எதுவா இருந்தாலும்.. வலி வலி தான்..//
என்ன பண்ண... ஆரம்பம் இப்டித்தானே இருந்திச்சி.... பரவால்லன்னுதான் சொல்லிட்டேனே... இவ்வளவு படிச்சதே பெரிய விஷயம்.. =)... நன்றி சஞ்சய்...
சுகங்கள் சொல்லி, சோகங்கள் ஏன் என கவிதை வடிவில் எழுதப்பட்ட அருமையான இடுகை. தொடர்கிறேன்.
ஸ்ட்ரெஸ்.. பிரஷர்.. டிப்ரெஷன்.. டென்ஷன்.. சைக்கியாட்ரிஸ்ட்.. சைக்காலாஜிஸ்ட்.. சைக்கோ.. போன்ற சொற்கள் அறியாத அழகிய உலகம்..//
மிரட்டல்.
நன்றி இராதாகிருஷ்ணன்...
நன்றி ஜெரி...
Post a Comment