
எங்கேடி ப்ரியா? ஏய் வா... நேத்து இடைல விட்ட கதைய சொல்லி முடி... பள்ளி மைதானத்தில்... ஓரமாக இருக்கும் மரநிழலில் இடம் பிடித்து... லஞ்ச் பாக்ஸ் திறந்து வைத்துக் கொண்டு.. வட்டமாக உட்கார்ந்து.. பேசும் கதைகள்... பாடும் பாட்டுக்கள்... (ஓ..! இது வேற ஒரு பதிவில் சொல்லலாம்..=))..)..
மனிதர்களில் எங்கு சென்றாலும்.. தொற்றிக்கொண்டே செல்லும் வியாதி... பொறாமை... உட்குத்து.. வெளிக்குத்து... இருப்பதையோ... இல்லாததையோ... காதுக்கு காது ஊதிப் பெருசாக்கும்.. மிக மிகச் சில... சக்திகள்... அதையே தூசியை ஊதுவது போல்... ஊதித் தள்ளிவிட்டு... பக்கத்திலேயே இருக்கும்.. அருமைத் தோழிகள்... பால்ய தோழிகள்... பள்ளித் தோழிகள்...
விதியோ.. சதியோ... எழுத்து... தலையிலோ... கை ரேகையிலோ.. அவர்கள் அனைவரையும் துறந்து.. முற்றிலும் தெரியாத ஒரு நாட்டில்... சூழலில்... சற்றும் அறிந்திராத மொழியில்.. கல்லூரியைத் தொடர்ந்த போது.. அவர்கள் இரவிலும்.. பகலிலும்.. கனவுகளில்... அதே வெள்ளை யூனிஃபார்மில்... அதே டையில்... பக்கத்தில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருப்பார்கள்... இப்பவும்.. எப்பவும்.. நினைவுகளிலிருந்து இவர்களை நீக்குவதென்பது இயலாத விடயம்...
இந்த இடுகை என்பது... அதே மாதிரியான இன்னொரு அனுபவம்... இதுவும் எனக்கு நிரந்தரமல்ல... இன்றோ நாளையோ.. வேலைப்பளு காரணமாகவோ... இன்ன பிற காரணங்களாலோ... நீண்ட இடைவெளி நேரலாம்... தொடர்பு விட்டும் போகலாம்.. (தோடா சந்தோஷத்தப் பாரு.. அவ்ளோ சீக்கிரம் எல்லாம் போக மாட்டேன் =))..)
இங்கு.. நான் மெச்சி வியந்து பாராட்டி நிமிர்ந்து பார்த்தவர்கள் அதிகம்.... அவசியமில்லாமலேயே... அழகான இசைத்தட்டில்.. கீறல் விழுந்தது போல்... உள்ளொன்று வைத்து.. சிலேடை மொழியில்... சிறுமடல் வரைந்து தொலைவில் சென்று விட்ட சிலரும்.. மற்றும்... மிக மிகச் சில.. 'மிக'ப் பெரியவர்களையும் தவிர... நான் கண்டு கொண்டிருப்பது மிகவும்.. எளிமையான... இனிமையான... மனதுக்கு இதமான.. அன்பு சூழ்ந்த உலகம்...
இந்த நினைவலைகளில்... அங்கொன்றும் இங்கொன்றுமாக... மறக்க முடியாத பின்னூட்டங்கள் மூலமான ஊக்குவிப்பு.. அல்லது.. விருது என்ற பெயரில் 'ஹலோ... உங்க இடுகை எனக்குப் புடிச்சிருக்கு'.. என்று மறைமுகமாக அன்பை வெளிப்படுத்தும்.. சில ஊக்கங்கள்...
ஒரு ஐம்பது ஆண்டுகள் கழித்து.. கூன் விழுந்து.. சுருக்கங்கள் விழுந்து... தடித்த கண்ணாடி ஃப்ரேம் வழியே... எதிர்காலச் சந்ததியினரின்.. இடுகைகளைப் படிக்கும் பொழுது... இந்த ஞாபகங்கள்... பற்கள் தொலைத்த வாயின்.. உதடு வழியே.. புன்னகைக் கீற்றாகத் தோன்றி... முகச் சுருக்கத்தை.. சில நொடிகள் நீக்கி விடலாம்..
இம்பூட்டு பில்ட் அப்... எதுக்குன்னு பார்க்கிறியளா? ஜோதி... வானம்பாடி வரிசையில்.. முரளி பகிர்ந்துக்கிட்ட இந்த அன்பையும்.. சந்தோஷத்தையும் (Scrumptious Blog Award) இன்னொரு வாட்டி பகிர்ந்துக்கலாம்னுதான்...
வானம்பாடிகள், அது சரி, சூர்யா கண்ணன் , துபாய் ராஜா, கயல், கதிர், பிரபாகர், மகேஸ், நைஜீரியா ராகவன், சஞ்சய், அருணா, ஜோதி, வசந்த், ஈ ரா, கோபி, சத்ரியன், நேசமித்ரன், பாலாசி, வேல்ஜி, ஹேமா, ஞானசேகரன், ராதாகிருஷ்ணன், பின்னோக்கி, லவ்டேல்மேடி, ஆரூர், பித்தனின் வாக்கு, தங்கமணி, தியா, ஜீவன், ஜெஸ்வந்தி, ஜோதிஜி...(லிஸ்ட் போய்க்கிட்டே இருக்கே... ம்ம்...).. முரளி..
(நான் தொடரும் இடுகைகளில் முகவரிகளை நீந்திப் பிடித்துக் கொள்ளுங்கள் ப்ளீஸ்... =)).. )
இப்பொழுது இவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.. இன்னொரு சுற்று வரும்போது... மற்றவர்களையும் சேர்த்துக் கொள்ளலாம்... என்ன..? நானே எல்லாருக்கும் கொடுத்துட்டா... நீங்க எப்டியா..? இப்டியே மாத்தி மாத்திக் கொடுத்துக்க வேண்டியதுதான்...!
இது என்ன சின்னப் புள்ளத்தனமால்ல இருக்கு என்று முகம் சுழிக்கும் பெரியவர்கள் இருப்பின்... மன்னிக்கவும்.. எனக்கும் இந்தப் பெரிய மனுஷித் தன்மை இருக்கத்தான் செய்கிறது... ஆனாலும்... எளிய குழந்தை மனசையே.. பெரும்பாலும் ... மனது மிகவும் விரும்புகிறது...
மன்னிக்கவும்... மணி பத்தாகப் போகிறது.. தூக்கம் கண்களைத் தழுவுகிறது... அலுவலகம் இப்பவே கண் முன்னால் வந்து மிரட்டுகிறது... குட் நைட்...!
மனிதர்களில் எங்கு சென்றாலும்.. தொற்றிக்கொண்டே செல்லும் வியாதி... பொறாமை... உட்குத்து.. வெளிக்குத்து... இருப்பதையோ... இல்லாததையோ... காதுக்கு காது ஊதிப் பெருசாக்கும்.. மிக மிகச் சில... சக்திகள்... அதையே தூசியை ஊதுவது போல்... ஊதித் தள்ளிவிட்டு... பக்கத்திலேயே இருக்கும்.. அருமைத் தோழிகள்... பால்ய தோழிகள்... பள்ளித் தோழிகள்...
விதியோ.. சதியோ... எழுத்து... தலையிலோ... கை ரேகையிலோ.. அவர்கள் அனைவரையும் துறந்து.. முற்றிலும் தெரியாத ஒரு நாட்டில்... சூழலில்... சற்றும் அறிந்திராத மொழியில்.. கல்லூரியைத் தொடர்ந்த போது.. அவர்கள் இரவிலும்.. பகலிலும்.. கனவுகளில்... அதே வெள்ளை யூனிஃபார்மில்... அதே டையில்... பக்கத்தில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருப்பார்கள்... இப்பவும்.. எப்பவும்.. நினைவுகளிலிருந்து இவர்களை நீக்குவதென்பது இயலாத விடயம்...
இந்த இடுகை என்பது... அதே மாதிரியான இன்னொரு அனுபவம்... இதுவும் எனக்கு நிரந்தரமல்ல... இன்றோ நாளையோ.. வேலைப்பளு காரணமாகவோ... இன்ன பிற காரணங்களாலோ... நீண்ட இடைவெளி நேரலாம்... தொடர்பு விட்டும் போகலாம்.. (தோடா சந்தோஷத்தப் பாரு.. அவ்ளோ சீக்கிரம் எல்லாம் போக மாட்டேன் =))..)
இங்கு.. நான் மெச்சி வியந்து பாராட்டி நிமிர்ந்து பார்த்தவர்கள் அதிகம்.... அவசியமில்லாமலேயே... அழகான இசைத்தட்டில்.. கீறல் விழுந்தது போல்... உள்ளொன்று வைத்து.. சிலேடை மொழியில்... சிறுமடல் வரைந்து தொலைவில் சென்று விட்ட சிலரும்.. மற்றும்... மிக மிகச் சில.. 'மிக'ப் பெரியவர்களையும் தவிர... நான் கண்டு கொண்டிருப்பது மிகவும்.. எளிமையான... இனிமையான... மனதுக்கு இதமான.. அன்பு சூழ்ந்த உலகம்...
இந்த நினைவலைகளில்... அங்கொன்றும் இங்கொன்றுமாக... மறக்க முடியாத பின்னூட்டங்கள் மூலமான ஊக்குவிப்பு.. அல்லது.. விருது என்ற பெயரில் 'ஹலோ... உங்க இடுகை எனக்குப் புடிச்சிருக்கு'.. என்று மறைமுகமாக அன்பை வெளிப்படுத்தும்.. சில ஊக்கங்கள்...
ஒரு ஐம்பது ஆண்டுகள் கழித்து.. கூன் விழுந்து.. சுருக்கங்கள் விழுந்து... தடித்த கண்ணாடி ஃப்ரேம் வழியே... எதிர்காலச் சந்ததியினரின்.. இடுகைகளைப் படிக்கும் பொழுது... இந்த ஞாபகங்கள்... பற்கள் தொலைத்த வாயின்.. உதடு வழியே.. புன்னகைக் கீற்றாகத் தோன்றி... முகச் சுருக்கத்தை.. சில நொடிகள் நீக்கி விடலாம்..
இம்பூட்டு பில்ட் அப்... எதுக்குன்னு பார்க்கிறியளா? ஜோதி... வானம்பாடி வரிசையில்.. முரளி பகிர்ந்துக்கிட்ட இந்த அன்பையும்.. சந்தோஷத்தையும் (Scrumptious Blog Award) இன்னொரு வாட்டி பகிர்ந்துக்கலாம்னுதான்...
வானம்பாடிகள், அது சரி, சூர்யா கண்ணன் , துபாய் ராஜா, கயல், கதிர், பிரபாகர், மகேஸ், நைஜீரியா ராகவன், சஞ்சய், அருணா, ஜோதி, வசந்த், ஈ ரா, கோபி, சத்ரியன், நேசமித்ரன், பாலாசி, வேல்ஜி, ஹேமா, ஞானசேகரன், ராதாகிருஷ்ணன், பின்னோக்கி, லவ்டேல்மேடி, ஆரூர், பித்தனின் வாக்கு, தங்கமணி, தியா, ஜீவன், ஜெஸ்வந்தி, ஜோதிஜி...(லிஸ்ட் போய்க்கிட்டே இருக்கே... ம்ம்...).. முரளி..
(நான் தொடரும் இடுகைகளில் முகவரிகளை நீந்திப் பிடித்துக் கொள்ளுங்கள் ப்ளீஸ்... =)).. )
இப்பொழுது இவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.. இன்னொரு சுற்று வரும்போது... மற்றவர்களையும் சேர்த்துக் கொள்ளலாம்... என்ன..? நானே எல்லாருக்கும் கொடுத்துட்டா... நீங்க எப்டியா..? இப்டியே மாத்தி மாத்திக் கொடுத்துக்க வேண்டியதுதான்...!
இது என்ன சின்னப் புள்ளத்தனமால்ல இருக்கு என்று முகம் சுழிக்கும் பெரியவர்கள் இருப்பின்... மன்னிக்கவும்.. எனக்கும் இந்தப் பெரிய மனுஷித் தன்மை இருக்கத்தான் செய்கிறது... ஆனாலும்... எளிய குழந்தை மனசையே.. பெரும்பாலும் ... மனது மிகவும் விரும்புகிறது...
மன்னிக்கவும்... மணி பத்தாகப் போகிறது.. தூக்கம் கண்களைத் தழுவுகிறது... அலுவலகம் இப்பவே கண் முன்னால் வந்து மிரட்டுகிறது... குட் நைட்...!
(யார்அது. .? அப்பாடி தொலைஞ்சான்னு பெருமூச்சு விடுறது.. வருவோம்ல... இருங்கடி..)
___/\___
22 ஊக்கம்::
ஐ. உன் கிட்ட இருந்து முதல் பரிசு. அதும் முதல்ல எனக்கு. சந்தோஷம்மா.
நான் 13வது ரேங் அவுட் ஆஃப் 32
பாஸானா போதும்..நன்றிங்க..பிரியா..
பதிவுலகில் இது தானே சந்தோசம்...
ஆ...! கிலிய கிளப்பாதீங்க சாமிகளா..! பெயர் வரிசையில்... ராங்கா..? அட ரங்கா... ஸ்ரீரங்கத்து பெருமாளே... என்னைக் காப்பாத்துடா... மகா ஜனங்களே... தயவுசெய்து... பெயர்கள் வரிசைப் படுத்தியதை வைத்து.... என் மர மண்டைத் தம்பி ரேஞ்சுக்கு எண்ணிக் கொண்டிருக்காதீர்கள்.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....
good night...!
கலகலப்ரியா said...
/என் மர மண்டைத் தம்பி ரேஞ்சுக்கு எண்ணிக் கொண்டிருக்காதீர்கள்.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்..../
சரியா சொன்னம்மா. அன்னைக்கு என்ன போய் மரமண்டன்னு சொன்னான்ல. இப்பொ இவன் என்ன.
தாமதமாய் ' ஒன்றுமில்லாததை' வாசித்தேன்.நேரடியான கவிதை போல் எளிமையாகவும்,வெவ்வேறு அர்த்தங்கள் தருவதாகவும் இருக்கிறது.அருமை.
'அவார்டு' லிஸ்டில் நானும் இருப்பதற்கு நன்றி.'முதுமையில் எண்ணிப்பார்க்கும் போது முகச்சுருக்கங்கள் நீங்கும்...'-டச்சிங்!
நன்றிங்க ப்ரியா.... உங்களின் அன்பிற்கு...
//ஒரு ஐம்பது ஆண்டுகள் கழித்து.. கூன் விழுந்து.. சுருக்கங்கள் விழுந்து... தடித்த கண்ணாடி ஃப்ரேம் வழியே... எதிர்காலச் சந்ததியினரின்.. இடுகைகளைப் படிக்கும் பொழுது... இந்த ஞாபகங்கள்... பற்கள் தொலைத்த வாயின்.. உதடு வழியே.. புன்னகைக் கீற்றாகத் தோன்றி... முகச் சுருக்கத்தை.. சில நொடிகள் நீக்கி விடலாம்..//
//Blogger வானம்பாடிகள் said...
ஐ. உன் கிட்ட இருந்து முதல் பரிசு. அதும் முதல்ல எனக்கு. சந்தோஷம்மா.//
பின்ன உங்களுக்கு தராமலா....நீங்கதான் முதல் அண்ணாச்சி !
அப்புறம் நம்ம பேரை சேர்த்ததுக்கு நன்றிங்கோ...
எனக்கு விருது பகிர்ந்தமைக்கு நன்றி. நான் உங்களுக்கு புதுசா ஒரு பெயர் என் பின்னூட்ட பதிலில் சொல்லியிருக்கின்றேன். அந்த பட்டம் என்ன என்றால் வாண்டுப் பிரியா. உங்க தொடரைப் படித்து வைத்த பெயர். என்ன ஆச்சு பாகம் ஆறு எழுதவில்லையா. உங்களின் மீது துப்பாக்கி காட்டியதுடன் நிறுத்தியுள்ளீர்கள். எப்படி தப்பீத்தீர்கள். சொல்லுங்க பிளீஸ். நன்றி.
ஒரு ஐம்பது ஆண்டுகள் கழித்து.. கூன் விழுந்து.. சுருக்கங்கள் விழுந்து... தடித்த கண்ணாடி ஃப்ரேம் வழியே... எதிர்காலச் சந்ததியினரின்.. இடுகைகளைப் படிக்கும் பொழுது... இந்த ஞாபகங்கள்... பற்கள் தொலைத்த வாயின்.. உதடு வழியே.. புன்னகைக் கீற்றாகத் தோன்றி... முகச் சுருக்கத்தை.. சில நொடிகள் நீக்கி விடலாம்
//
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே .........
//இது என்ன சின்னப் புள்ளத்தனமால்ல இருக்கு என்று முகம் சுழிக்கும் பெரியவர்கள் இருப்பின்... மன்னிக்கவும்.. எனக்கும் இந்தப் பெரிய மனுஷித் தன்மை இருக்கத்தான் செய்கிறது... ஆனாலும்... எளிய குழந்தை மனசையே.. பெரும்பாலும் ... மனது மிகவும் விரும்புகிறது...
//
அனைவருக்குள்ளும் ஒரு குழந்தை உண்டு தப்பில்லை நல்ல இடுகை
அட முந்தாநேத்து வந்த எனக்கும் இடம் கெடசிருச்சே. ரொம்ப சந்தோசம் பிரியா. பதிவை போட்டுவிட்டு ஒற்றைக்கால் கொக்காட்டம் காத்திருந்தேன். உங்கள் பின்னுட்டம்தான் எனக்கு முதல் டானிக் கொடுக்குது பிரியா.
நன்றி
மகிழ்ச்சி
ம்ம் என்னா ஒரு ஆர்ப்பாட்டம்......!
வாழ்த்துகள், ப்ரியா.
//ஒரு ஐம்பது ஆண்டுகள் கழித்து.. கூன் விழுந்து.. சுருக்கங்கள் விழுந்து... தடித்த கண்ணாடி ஃப்ரேம் வழியே... எதிர்காலச் சந்ததியினரின்.. இடுகைகளைப் படிக்கும் பொழுது... இந்த ஞாபகங்கள்... பற்கள் தொலைத்த வாயின்.. உதடு வழியே.. புன்னகைக் கீற்றாகத் தோன்றி... முகச் சுருக்கத்தை.. சில நொடிகள் நீக்கி விடலாம்..//
இன்னும் ஐம்பது ஆண்டு கழித்து........நல்ல நம்பிக்கை.....
நன்றி ப்ரியா......
வாழ்த்துக்கள்
// ஒரு ஐம்பது ஆண்டுகள் கழித்து.. கூன் விழுந்து.. சுருக்கங்கள் விழுந்து... தடித்த கண்ணாடி ஃப்ரேம் வழியே... எதிர்காலச் சந்ததியினரின்.. இடுகைகளைப் படிக்கும் பொழுது... இந்த ஞாபகங்கள்... பற்கள் தொலைத்த வாயின்.. உதடு வழியே.. புன்னகைக் கீற்றாகத் தோன்றி... முகச் சுருக்கத்தை.. சில நொடிகள் நீக்கி விடலாம்//
அவார்டு வாங்கிய அனைவருக்கும்வாழ்த்துக்கள்.
நல்ல பகிர்வுடன் ஒரு அவார்டு கலகலக்கபிரியா நீங்கள் சூப்பர் பிரியா....
பிரியா உங்கள் பதிவை உற்று பார்த்து படித்து இப்பவே சுருக்கம் விழுந்துட்டா மாதிரி இருக்கு ஹ்ஹா
கொஞ்சம் எழுத்தின் கலரை மட்டும் மாற்றுகங்களே
நன்றி வானம்பாடிகள்...
நன்றி வசந்து...
ரொம்ப நன்றி வேல்ஜி..
உங்களுக்கும் நன்றி பிரபாகர்..
நன்றி ஈ ரா...
நன்றிங்க பித்தன்... வாண்டு மாமா மாதிரி.. வாண்டுப் ப்ரியாவா...? அப்புறம் அந்தத் தொடர் அப்படிக் கிடையாது... அந்த நாள் அன்று முடிந்தது.. இனி வேற ஒரு நாள் பத்தி சொல்லுவேன்.. அம்புட்டுதாங்க..
நன்றிங்க வெண்ணிற இரவுகள்...
நன்றிங்க தங்கமணி... நாமளும் நேத்துதான் வந்தோம்... அதெல்லாம் நாள் ஓடிப் போயிரும்... உங்க எழுத்து எப்போ வரும்னு மத்தவங்க கொக்கா நிக்கிற காலமும் வரும்... ஒன்னியும் வருத்தப் படாதீங்க...
நன்றி கதிர்...
நன்றி முரளி... இது ஆர்ப்பாட்டமா... ஆ..!
நன்றி புலிகேசி...
நன்றி ஆரூர்...
நன்றி ஜலீலா.. இது என்னோட இன்னொரு நண்பரும் சொன்னாங்க... ஆனா ஒரிஜினல் கலர் வேறைங்க... அங்க background கறுப்பா வருதுன்னு நினைக்கிறேன்.. அவ்வ்வ்.. வேற browserla ட்ரை பண்ணுங்களேன் ப்ளீஸ்... :(
நன்றி ப்ரியா.. மகிழ்ச்சியாகவும் அதே நேரம் நெகிழ்ச்சியாகவும் இருக்கிறது.
நம்மைப்போல ஊரையும்,உறவையும் பிரிந்து வாழ்வோருக்கு எழுத்து மூலம் கிடைக்கும் நட்புதான் மிகப்பெரும் ஆறுதல்.பணிப்பளு பாடாய் படுத்தினாலும் இது போன்ற இனிய நட்புகளின் பரிசுகள் ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளிக்கின்றன.
தாங்கள் பெற்ற இந்த விருதிற்கும் தங்களிடம் இருந்து விருது பெற்ற அன்பு நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
//துபாய் ராஜா said...
நன்றி ப்ரியா.. மகிழ்ச்சியாகவும் அதே நேரம் நெகிழ்ச்சியாகவும் இருக்கிறது.
நம்மைப்போல ஊரையும்,உறவையும் பிரிந்து வாழ்வோருக்கு எழுத்து மூலம் கிடைக்கும் நட்புதான் மிகப்பெரும் ஆறுதல்.பணிப்பளு பாடாய் படுத்தினாலும் இது போன்ற இனிய நட்புகளின் பரிசுகள் ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளிக்கின்றன.
தாங்கள் பெற்ற இந்த விருதிற்கும் தங்களிடம் இருந்து விருது பெற்ற அன்பு நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.//
ரொம்ப சந்தோஷமா இருக்கு ராஜா...
விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்....
வாங்க மணி மற்றும் புலிகேசி... ரொம்ப லேட்டா இதுக்கு பின்னூட்டமா... =))..
Post a Comment