header photo

Tuesday, November 24, 2009

சமுதாய விளக்குமாறுகள்...

பல்லுக் குத்தக் கூட உதவாத கலாச்சாரங்களைக் கட்டிக் காத்துக் கொண்டிருக்கும் சிலரால் எதிர்மறையான கோணத்தில் விமர்சிக்கப்படும் பல 'அதி நவீன' சிந்தனைகளைக் கொண்டிருப்பதால், நான் 'பிறந்து வளர்ந்த' பின்னணியிலிருந்து வந்த 'நம்மவர்'களிடம் நிமிட நேரம் பேசுவது கூட எனக்கு மிகச் சிரமமாக இருக்கிறது.

நம்மில் பலருக்கு 'மாடர்ன்' என்ற சொல்லில் நமீதாதான் தெரிகிறார்கள். செயற்கைத்தனமான, நடை, உடை, பாவனைகளுக்கு மட்டும் 'மாடர்ன்' என்ற வார்த்தையைப் பொருத்துகிறார்கள். இங்கு நான் அணியும் மிகச் சாதாரண ஜீன்ஸ், ஷர்ட்டுக்கும், மாடர்ன் என்ற வார்த்தைக்கும் எனக்கு எந்த சம்மந்தமும் தெரியவில்லை.

ஆண், பெண் வித்தியாசம் பாராது பரஸ்பரம் கை குலுக்கிக் கொள்வதையே இன்னும் எதிர்ப்பவர்கள் இருக்கிறார்கள் (பன்றிக் காய்ச்சல் காரணமல்ல). வேலை நிமித்தம் சந்திக்கும் தமிழ் உள்ளங்களிடம் நீட்டிய கையைப் பற்றிக் குலுக்குவதும், ரொம்பக் கூச்ச சுபாவத்துடன் நெளிபவர்களுக்கு ஒரு தலையசைப்புடன் வணக்கம் சொல்வதும், மற்ற எந்த நாட்டவர் எனிலும் கை குலுக்குவதும் என்னுடைய வழக்கம்.

எப்போதாவது வீதியில் எதிர்ப்படும்போது, தொலைவிலிருந்தபடியே கையை நீட்டிக் கொண்டு வந்து கட்டிக் கொள்ளும் ஜேர்மன் ஆசானும், கல்லூரியை முடித்துக் கொண்ட கடைசி நாளில் 'give me your cheek' என்று கன்னத்துடன் கன்னம் வைத்து விடைபெற்றுக் கொண்ட ஆங்கில ஆசானும் விதிவிலக்கு. விகல்பத்திற்கு வழியேதுமில்லை.

சொல்ல வந்த விடயம் விட்டு எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறேன். 'நம்மவர்' பின்னணியுடன் பின்னிப் பிணைந்திருக்கும் ஒரு பெண்மணி, 'யாரென்றாலும் வாஞ்சையுடன் அணைத்து முத்தமிட்டுக் கொ(ல்லு)ள்ளும் ஒரு அம்மையார், அலுவலக நேரத்தில் என்னைத் தொலைபேசியில் அழைத்தார். ஹல்லோ சொல்ல முதல் வந்த வார்த்தை "do you knw, what has that BIT** done?"

ஒரு நிமிடம் ஒன்றும் புரியாது.. திகைத்து ஏன் இந்த வார்த்தை... யார்? என்ன?

ஒரு பதினெட்டு வயது இளம்பெண்ணின் பெயர் சொல்லி... அவள் 'வெள்ளைக்காரனைக் கட்டிப் பிடித்துக் கொண்டு நிற்கிறாள்... இவளுக்கு காதலிப்பதற்கு நம்ம ஊர் ஆள் கிடைக்கவில்லையா? என்று பொரிந்து தள்ளிக் கொண்டிருந்தார்.

எனக்கு தலையை அலுவலக மேஜையில் 'ணங் ணங்' என்று இடித்துக் கொள்ள வேண்டும் போலவும், சட்டையைக் கிழித்துக் கொண்டு சிரிக்க வேண்டும் போலவும், தலையைப் பிய்த்துக் கொண்டு ஆ என்று உச்ச கதியில் கத்த வேண்டும் போலவும், தொலைபேசியை சுவற்றில் அடித்து அந்தம்மணி தலையில் காயம் ஏற்படுத்த வேண்டும் போலவும் உணர்ச்சிகள் சுற்றிச் சுழன்றன.

அவள் அப்படியே ஊர்க்கருமத்தைக் காதலிச்சிருந்தால்.. நம்ம ஜாதியில் கிடைக்கவில்லையா என்று கேட்பார்கள். டிவியில் மூன்று ஆண்களை திரைக்குப் பின்னால் உட்கார வைத்து, மூன்று கேள்வி கேட்டு ஒருவனைத் தெரிவு செய்து, ஒரு மாதம் ஹனி மூன் செல்லும் ஜோடிக்கும், நம்மவர்களின் பெயர், வயது, ஜாதி சொல்லித் தேடிக் கொள்ளும் ஜோடிக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?

ஒரு மாதம் ஹனிமூன் சென்ற ஜோடி, சரி வரவில்லை என்று டாட்டா காண்பித்து சுமுகமாகப் பிரிந்து சென்று விடலாம். ஆனால் சமுதாய விளக்குமாற்றில் அகப்பட்ட உயிர்கள்..? 'ஆயிரம் காலத்துப் ..........பயிர்' (நல்லா கண்டு பிடிக்கிறாங்கடா) என்று பெயர் சொல்லி... பூச்சிகொல்லி மருந்தாக நஞ்சை மட்டுமே ஊட்டிக் கொண்டிருப்பவர்களுக்குப் பெயர் "நலன் விரும்பிகள்".

(இந்த இடுகைக்கு எத்தன பேரு என் மூஞ்சில துப்புவாங்களோ ..., துப்புவார் துப்பட்டும்..=)))


________________________________________________________________

எடுத்தியம்பியமைக்கு நன்றி நேசமித்ரன்...
எனது சப்பைக்கட்டு விளக்கமாக இத யூஸ் பண்ணிக்கறேன்... =))

கலகலப்ரியா said...

//நேசமித்ரன் said...
நல்லா இருக்கு ஆனா ஒரு முழுமை இல்லாத மாதிரி ஒரு உணர்வுஙக

என்னமோ தோணுச்சு

சொல்லிட்டேன்

:)//


நன்றி நேசமித்ரன்... ரொம்ப வாஸ்தவம்... எனக்கே அப்டித்தான் இருந்தது... இருக்கு... புத்தகமாகவோ... தொடர் இடுகையாகவோ போட வேண்டியது... எங்கயோ ஆரம்பித்து... சட்டுன்னு எங்கயோ முடிக்கிறப்போ... இந்த உணர்வு தவிர்க்க முடியாதது... பூச்சுக்களற்ற விமர்சனங்கள் என்னால் நேசிக்கப்படுகின்றன.. ரொம்ப நன்றி..!


111 ஊக்கம்::

vasu balaji said...

/ஆண், பெண் வித்தியாசம் பாராது பரஸ்பரம் கை குலுக்கிக் கொள்வதையே இன்னும் எதிர்ப்பவர்கள் இருக்கிறார்கள் /

நிறைய கேசு இருக்கு இப்படி.

/பூச்சிகொல்லி மருந்தாக நஞ்சை மட்டுமே ஊட்டிக் கொண்டிருப்பவர்களுக்குப் பெயர் "நலன் விரும்பிகள்"./

யாரோட நலனை விரும்புறாங்கன்னு அவங்களுக்கே தெரியாது. தனக்கு வரும்போது எல்லாமே மாறிடும்.

இன்னொரு நச் உன்னிடமிருந்து. பாராட்டுகள்.

ஈரோடு கதிர் said...

//தொலைபேசியை சுவற்றில் அடித்து அந்தம்மணி தலையில் காயம் ஏற்படுத்த வேண்டும் //

கொலை முயற்சி

//எனக்கு தலையை அலுவலக மேஜையில் 'ணங் ணங்' என்று இடித்துக் கொள்ள வேண்டும் போலவும்//

தற்கொலை முயற்சி

........னு 'நம்மவர்' சொல்றதுக்கு முன்னாடி... எஸ்கேப் ஆயிடுங்க சாமியோவ்வ்வ்வ்வ்வ்வ்

உங்ககிட்ட போன் பேசுன அந்த பெண்மணி இத படிப்பாங்களா!!!???

சிவாஜி சங்கர் said...

இந்த..ஆயிரம் காலத்துப் ..........பயிர் மேல மாட வுட்டு மேய வுடனும் அம்னி..

பாலா said...

ஹை.. சுமாரா புரிய ஆரம்பிச்சிடுச்சி!

புலவன் புலிகேசி said...

அடா அடா அடா என்ன ஒரு கோபம்..நீங்கள் தான் கோபப்ரியாவோ?

//ஆண், பெண் வித்தியாசம் பாராது பரஸ்பரம் கை குலுக்கிக் கொள்வதையே இன்னும் எதிர்ப்பவர்கள் இருக்கிறார்கள் (பன்றிக் காய்ச்சல் காரணமல்ல).//

அது மனிதக் காய்ச்ச்ல் ப்ரியா

☀நான் ஆதவன்☀ said...

நியாயமான கோபம் தான்

//ந்த இடுகைக்கு எத்தன பேரு என் மூஞ்சில துப்புவாங்களோ ..., துப்புவார் துப்பட்டும்..//

எதுக்கு?

☀நான் ஆதவன்☀ said...

//எனக்கு தலையை அலுவலக மேஜையில் 'ணங் ணங்' என்று இடித்துக் கொள்ள வேண்டும் போலவும், சட்டையைக் கிழித்துக் கொண்டு சிரிக்க வேண்டும் போலவும், தலையைப் பிய்த்துக் கொண்டு ஆ என்று உச்ச கதியில் கத்த வேண்டும் போலவும், தொலைபேசியை சுவற்றில் அடித்து அந்தம்மணி தலையில் காயம் ஏற்படுத்த வேண்டும் //

நினைச்சுப் பார்க்கவே சிரிப்பா இருக்கேங்க :)

க.பாலாசி said...

//இவளுக்கு காதலிப்பதற்கு நம்ம ஊர் ஆள் கிடைக்கவில்லையா? என்று பொரிந்து தள்ளிக் கொண்டிருந்தார்.//

பொறாமையாயிருக்கும்....அவரை மன்னியுங்கள்....

நல்ல சிந்தனை இடுகை...

லெமூரியன்... said...

கரம் கூப்பி வணக்கம் வைப்பது தவறில்லை.
மற்ற படி ஆயிரம் காலத்து பயிர் போன்ற விஷயங்கள் இப்பொழுது கொஞ்சமே கொஞ்சமாக குறைய ஆரம்பித்திருக்கிறது....
பொருளாதார சுதந்திரம் பெண்களை இன்னும் வலுவாக்கும்...

நமக்கென்று ஒரு சில அடையாளங்களை வைத்துக் கொள்வது தவறா என்று தெரியவில்லை, ஏனென்றால் அதில்
பெண்ணடிமைத்தனம் என்ற வழக்கம் பெரும்பாலும் சேர்ந்திருப்பதே. :-(

ஊடகன் said...

நமக்கு தேவையான இடுகை தான்..............

இப்பொழுது கலாசாரம் என்பது (ஆச்சாரம்) ஆன ஒன்று..........

Unknown said...

தலைப்பாலேயே அடிக்கிறீங்க

ப்ரியமுடன் வசந்த் said...

எவ்வளவு ஆசையா அந்த புள்ளைய படிக்கவச்சு அணுஅணுவா ரசிச்சு வளர்த்து படிக்க வச்சு அனுப்பி வச்சுருப்பாங்க அந்த புள்ளையோட அப்பா அம்மா...
பாவம் நல்லவனா இருந்தான்னா அவளுக்கு பிடிச்சவன கட்டிக்க வேண்டியதுதான்..(அதுக்காக பெற்றோர்கள் பயப்பட வேண்டியதில்லை இந்தகால பொண்ணுங்க எந்த ஊர்ல இருந்தாலும் உஷாருதான்.நல்லவனா கெட்டவனான்னு பார்த்துதான் செலக்ட் பண்றாங்க)

//எனக்கு தலையை அலுவலக மேஜையில் 'ணங் ணங்' என்று இடித்துக் கொள்ள வேண்டும் போலவும், சட்டையைக் கிழித்துக் கொண்டு சிரிக்க வேண்டும் போலவும், தலையைப் பிய்த்துக் கொண்டு ஆ என்று உச்ச கதியில் கத்த வேண்டும் போலவும், தொலைபேசியை சுவற்றில் அடித்து அந்தம்மணி தலையில் காயம் ஏற்படுத்த வேண்டும் போலவும் உணர்ச்சிகள் சுற்றிச் சுழன்றன.//

ஹ ஹ ஹா...பைத்தியமாயிட்டியாக்கா வரவேற்கிறது சென்னை கீழ்பாக்கம்...

//ஒரு பதினெட்டு வயது இளம்பெண்ணின் பெயர் சொல்லி... அவள் 'வெள்ளைக்காரனைக் கட்டிப் பிடித்துக் கொண்டு நிற்கிறாள்... இவளுக்கு காதலிப்பதற்கு நம்ம ஊர் ஆள் கிடைக்கவில்லையா? என்று பொரிந்து தள்ளிக் கொண்டிருந்தார்.//

இது அவங்களுக்கு பொறாமையா இருந்துருக்கும்...
:)

//அவள் அப்படியே ஊர்க்கருமத்தைக் காதலிச்சிருந்தால்.. நம்ம ஜாதியில் கிடைக்கவில்லையா என்று கேட்பார்கள். டிவியில் மூன்று ஆண்களை திரைக்குப் பின்னால் உட்கார வைத்து, மூன்று கேள்வி கேட்டு ஒருவனைத் தெரிவு செய்து, ஒரு மாதம் ஹனி மூன் செல்லும் ஜோடிக்கும், நம்மவர்களின் பெயர், வயது, ஜாதி சொல்லித் தேடிக் கொள்ளும் ஜோடிக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?//

கரெக்ட்டு நாக்குபிடிங்குற மாதிரி நச்சுன்னு கேட்டிங்க...

கலகலப்ரியா said...

//ஊடகன் said...

நமக்கு தேவையான இடுகை தான்..............

இப்பொழுது கலாசாரம் என்பது (ஆச்சாரம்) ஆன ஒன்று..........//

நன்றி ஊடகன்...

கலகலப்ரியா said...

//பிரியமுடன்...வசந்த் said...எவ்வளவு ஆசையா அந்த புள்ளைய படிக்கவச்சு அணுஅணுவா ரசிச்சு வளர்த்து படிக்க வச்சு அனுப்பி வச்சுருப்பாங்க அந்த புள்ளையோட அப்பா அம்மா...//

வேணாம்டா தம்பி... இதுக்கு அந்தம்மாவே பெட்டரு... இது என்ன இறால் பண்ணையா... உரம் போட்டு... கெமிகல் போட்டு ஆசை ஆசையா வளர்த்து... அவங்களே சாப்டணுமா... போடாங்... (கெட்ட வார்த்தைல திட்டிப்டுவேன்... சின்ன பையன்னு விட்டு வச்சிருக்கு..)

//ஹ ஹ ஹா...பைத்தியமாயிட்டியாக்கா வரவேற்கிறது சென்னை கீழ்பாக்கம்...//

நம்ம ஊர்ல பெட்டர் இடம் இருக்குலே... அது சொர்க்கம்..!

//இது அவங்களுக்கு பொறாமையா இருந்துருக்கும்...:)//

இருக்கும் இருக்கும்...

//கரெக்ட்டு நாக்குபிடிங்குற மாதிரி நச்சுன்னு கேட்டிங்க...//

இது கொஞ்சம் மெச்சூர்ட்டா இருக்கு... =))...

கலகலப்ரியா said...

//ஹாலிவுட் பாலா said...

ஹை.. சுமாரா புரிய ஆரம்பிச்சிடுச்சி!//

நெசம்மாவா...? பார்ப்போம்...

கலகலப்ரியா said...

//Sivaji Sankar said...

இந்த..ஆயிரம் காலத்துப் ..........பயிர் மேல மாட வுட்டு மேய வுடனும் அம்னி..//

lol... =))... நன்றி சிவாஜி சங்கர்...

கலகலப்ரியா said...

//☀நான் ஆதவன்☀ said...

//எனக்கு தலையை அலுவலக மேஜையில் 'ணங் ணங்' என்று

நினைச்சுப் பார்க்கவே சிரிப்பா இருக்கேங்க :)//

ம்ம்... ஒரு ஆளு கஷ்டத்த பார்த்து சிரிக்கறதே பொழைப்பா போச்சே.... :>:>:>

//நியாயமான கோபம் தான் //

நன்றிங்கோ..

////ந்த இடுகைக்கு எத்தன பேரு என் மூஞ்சில துப்புவாங்களோ ..., துப்புவார் துப்பட்டும்..//

எதுக்கு?//

சமுதாயம் நாறுதேன்னுதான் ஹிஹி...

கலகலப்ரியா said...

//புலவன் புலிகேசி said...

அடா அடா அடா என்ன ஒரு கோபம்..நீங்கள் தான் கோபப்ரியாவோ?

//ஆண், பெண் வித்தியாசம் பாராது பரஸ்பரம் கை குலுக்கிக் கொள்வதையே இன்னும் எதிர்ப்பவர்கள் இருக்கிறார்கள் (பன்றிக் காய்ச்சல் காரணமல்ல).//

அது மனிதக் காய்ச்ச்ல் ப்ரியா//

நீங்க சொன்னா சரிதான்... நன்றிங்....

கலகலப்ரியா said...

//க.பாலாசி said...

//இவளுக்கு காதலிப்பதற்கு நம்ம ஊர் ஆள் கிடைக்கவில்லையா? என்று பொரிந்து தள்ளிக் கொண்டிருந்தார்.//

பொறாமையாயிருக்கும்....அவரை மன்னியுங்கள்....//

அட நீங்க வேற... அவுங்கள நான் மன்னிச்சு என்ன ஆகப் போறது...

//நல்ல சிந்தனை இடுகை...//

நன்றி...

கலகலப்ரியா said...

//லெமூரியன்... said...

கரம் கூப்பி வணக்கம் வைப்பது தவறில்லை.
மற்ற படி ஆயிரம் காலத்து பயிர் போன்ற விஷயங்கள் இப்பொழுது கொஞ்சமே கொஞ்சமாக குறைய ஆரம்பித்திருக்கிறது....
பொருளாதார சுதந்திரம் பெண்களை இன்னும் வலுவாக்கும்...//

ம்ம்...

//நமக்கென்று ஒரு சில அடையாளங்களை வைத்துக் கொள்வது தவறா என்று தெரியவில்லை//

அட நீங்க ஏனுங்க.... அடையாளத்தையும் இதையும் போட்டு ஏன் குழப்பிக்கிறீங்க... அது வேறைங்க..!

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...

/ஆண், பெண் வித்தியாசம் பாராது பரஸ்பரம் கை குலுக்கிக் கொள்வதையே இன்னும் எதிர்ப்பவர்கள் இருக்கிறார்கள் /

நிறைய கேசு இருக்கு இப்படி.//

ஆமாங்க...


//யாரோட நலனை விரும்புறாங்கன்னு அவங்களுக்கே தெரியாது. தனக்கு வரும்போது எல்லாமே மாறிடும்.

இன்னொரு நச் உன்னிடமிருந்து. பாராட்டுகள்.//

அவங்களுக்கு வரும்போது மாறிடுமா...? நம்ம்ம்ம்ம்மாளுங்களா...! ஹிஹி... நம்ம முதுகு பார்க்க தெரிஞ்சா.... இவ்ளோ ஏனுங்க வருது...! எலியை அடிச்சுக்கிட்டே... ......உசிர கொல்றது பாவம்னு சொல்லிக்கிட்டிருப்பாங்க...

கலகலப்ரியா said...

//ஈரோடு கதிர் said...

//தொலைபேசியை சுவற்றில் அடித்து அந்தம்மணி தலையில் காயம் ஏற்படுத்த வேண்டும் //

கொலை முயற்சி

//எனக்கு தலையை அலுவலக மேஜையில் 'ணங் ணங்' என்று இடித்துக் கொள்ள வேண்டும் போலவும்//

தற்கொலை முயற்சி

........னு 'நம்மவர்' சொல்றதுக்கு முன்னாடி... எஸ்கேப் ஆயிடுங்க சாமியோவ்வ்வ்வ்வ்வ்வ்//

என்னமா எஸ்கேப் ஆவுறாங்கடா சாமி.... இருங்கடி எப்போவாவது உறைக்கும்...

//உங்ககிட்ட போன் பேசுன அந்த பெண்மணி இத படிப்பாங்களா!!!???//

தெரியல ... படிச்சா சந்தோஷம்.. புரிஞ்சுக்கிட்டா ரொம்ப ரொம்ப சந்தோஷம்... இதெல்லாம் ஆவுறதில்லீங்க...

கலகலப்ரியா said...

//முகிலன் said...

தலைப்பாலேயே அடிக்கிறீங்க//

=)) நன்றி முகிலன்...

அன்பேசிவம் said...

ஹா..ஹா..ஹா.. நகைச்சுவை உணர்வோடு சொல்லியிருந்தாலும் ”அவள் அப்படியே ஊர்க்கருமத்தைக் காதலிச்சிருந்தால்.. நம்ம ஜாதியில் கிடைக்கவில்லையா என்று கேட்பார்கள்” இங்கே நீங்கள் வெளிப்பட்டுவிட்டீர்கள். :-)

ப்ரியமுடன் வசந்த் said...

// போடாங்... //

இத முழுசாவே என்னை திட்டிருக்கலாம் எனக்கு சூடு சுரணை எதுவுமே கிடையாது...

எம்பூட்டு பேர் திட்றாங்க..

திட்றாங்க திட்றாங்க
தம் அடிச்சா திட்றாங்க
திட்றாங்க திட்றாங்க
தண்ணியடிச்சா திட்றாங்க...
திட்றாங்க திட்றாங்க
டாடியும் மம்மியும் திட்றாங்க
ஒரு டால்பி சவுண்டில் திட்றாங்க
எங்கக்காவும் இப்போ என்னை திட்றாளே..

திட்றாங்க திட்றாங்க

கலகலப்ரியா said...

//முரளிகுமார் பத்மநாபன் said...

ஹா..ஹா..ஹா.. நகைச்சுவை உணர்வோடு சொல்லியிருந்தாலும் ”அவள் அப்படியே ஊர்க்கருமத்தைக் காதலிச்சிருந்தால்.. நம்ம ஜாதியில் கிடைக்கவில்லையா என்று கேட்பார்கள்” இங்கே நீங்கள் வெளிப்பட்டுவிட்டீர்கள். :-)//

நன்றி முரளி... (இது சீரியஸ் பதிவாக்கும்...)

கலகலப்ரியா said...

//பிரியமுடன்...வசந்த் said...

// போடாங்... //

இத முழுசாவே என்னை திட்டிருக்கலாம் எனக்கு சூடு சுரணை எதுவுமே கிடையாது...

எம்பூட்டு பேர் திட்றாங்க..

திட்றாங்க திட்றாங்க
தம் அடிச்சா திட்றாங்க
திட்றாங்க திட்றாங்க
தண்ணியடிச்சா திட்றாங்க...
திட்றாங்க திட்றாங்க
டாடியும் மம்மியும் திட்றாங்க
ஒரு டால்பி சவுண்டில் திட்றாங்க
எங்கக்காவும் இப்போ என்னை திட்றாளே..

திட்றாங்க திட்றாங்க//

போச்சுடா.... செல்லம்.... நீ நல்ல பையன்டா.... அழுவாத ராசா... அம்மா கிட்ட சொல்லி உனக்கு ஜவ்வுமிட்டாய் வாங்கிக் கொடுக்க சொல்றேன்...

cheena (சீனா) said...

அன்பின் கலகலப்ரியா

நல்ல சிந்தனையில் விளைந்த நல்லதொரு இடுகை

நல்வாழ்த்துகள்

நேசமித்ரன் said...

நல்லா இருக்கு ஆனா ஒரு முழுமை இல்லாத மாதிரி ஒரு உணர்வுஙக

என்னமோ தோணுச்சு

சொல்லிட்டேன்

:)

கலகலப்ரியா said...

//cheena (சீனா) said...
அன்பின் கலகலப்ரியா

நல்ல சிந்தனையில் விளைந்த நல்லதொரு இடுகை//

ரொம்ப நன்றி சீனா...

கலகலப்ரியா said...

//நேசமித்ரன் said...
நல்லா இருக்கு ஆனா ஒரு முழுமை இல்லாத மாதிரி ஒரு உணர்வுஙக

என்னமோ தோணுச்சு

சொல்லிட்டேன்

:)//

நன்றி நேசமித்ரன்... ரொம்ப வாஸ்தவம்... எனக்கே அப்டித்தான் இருந்தது... இருக்கு... புத்தகமாகவோ... தொடர் இடுகையாகவோ போட வேண்டியது... எங்கயோ ஆரம்பித்து... சட்டுன்னு எங்கயோ முடிக்கிறப்போ... இந்த உணர்வு தவிர்க்க முடியாதது... பூச்சுக்களற்ற விமர்சனங்கள் என்னால் நேசிக்கப்படுகின்றன.. ரொம்ப நன்றி..!

அன்புடன் நான் said...

இது சந்ததி இடைவேளை....காலம் மாறும் கோபம் வேண்டாம்!

இராகவன் நைஜிரியா said...

சமுதாயத்தில் ஒவ்வொருவரின் பார்வையும் வேறு வேறாக இருக்கின்றதுங்க.

நீங்கள் கூறிய மாதிரி.. ஒவ்வொரு வட்டமா போட்டு, கடைசியில் கழுத்தில் இருக்குவதுதான் பலரும் செய்கின்றனர்.

இடுகை, சற்று வேகமாக எழுதியது மாதிரி தெரிகின்றது. இன்னும் கொஞ்சம் விளாவரியாக எழுத வேண்டிய இடுகை என்பது என் எண்ணம்.

கலகலப்ரியா said...

//சி. கருணாகரசு commented on blog post_24: “இது சந்ததி இடைவேளை....காலம் மாறும் கோபம் வேண்டாம்!”//

கோபப்பட்டு என்னங்க பண்றது... (ஆனாலும் கோபம் வருதே...) காலம் மாறும்... (2012 நிஜமானால்..)

கலகலப்ரியா said...

//இராகவன் நைஜிரியா said...

சமுதாயத்தில் ஒவ்வொருவரின் பார்வையும் வேறு வேறாக இருக்கின்றதுங்க.

நீங்கள் கூறிய மாதிரி.. ஒவ்வொரு வட்டமா போட்டு, கடைசியில் கழுத்தில் இருக்குவதுதான் பலரும் செய்கின்றனர்.

இடுகை, சற்று வேகமாக எழுதியது மாதிரி தெரிகின்றது. இன்னும் கொஞ்சம் விளாவரியாக எழுத வேண்டிய இடுகை என்பது என் எண்ணம்.//

நன்றி ராகவன்... அதுதான் நேசமித்ரனும் சொன்னாங்க... வழிமொழிகிறேன்...!

vasu balaji said...

/அவள் அப்படியே ஊர்க்கருமத்தைக் காதலிச்சிருந்தால்.. நம்ம ஜாதியில் கிடைக்கவில்லையா என்று கேட்பார்கள். /

இது படிச்சப்போ நம்ம ஆஃபீஸ் கவனம் வந்தது. ஒரு அம்மணியோட பொண்ணு அமெரிகால படிக்க போனது ஒரு பையன லவ் பண்ணிச்சுன்னு அந்தம்மா ஃப்ரெண்ட் கிட்ட சொல்லிச்சி. இந்த மட்டுக்கும் வெளிநாட்டுக்காரன் இல்லாம, இந்திக்கரன் இல்லாம தமிழ்ப் பையன். கலியாணம் பண்ணிட்டு சொல்லாம பண்ணிக்கிறேன்னு சொன்னாங்களேன்னு சந்தோஷம்னு.

என்னன்னாலும் அதெப்புடி ஒத்துண்ட. ரிலேஷன் நடுவில மானம் மரியாதன்னுச்சி சொன்ன அம்முனி. அதோட பையன் ஒரு வெள்ளக்காரி அம்முனிய லவ் பண்ணி சொன்னா, அவ வெள்ளக்காரின்னாலும் ஒரே பிடிவாதம். நம்ம ட்ரெடிஷன்ல தான் கலியாணம் பண்ணனும்னு. நம்ம கல்சர்ல அவ்வளவு மரியாத வெச்சிருக்கிற பொண்ணு எந்த நாடானா என்னவாம்.

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...

/அவள் அப்படியே ஊர்க்கருமத்தைக் காதலிச்சிருந்தால்.. நம்ம ஜாதியில் கிடைக்கவில்லையா என்று கேட்பார்கள். /

இது படிச்சப்போ நம்ம ஆஃபீஸ் கவனம் வந்தது. //

ஹிஹிஹி... இதான் அப்பு உலகம்... இதுவே நாளைக்கு இன்னொரு பொண்ணோ... பையனோ அப்டி பண்ணா... என்னோட மருமக நீட்டா டிரஸ் பண்றா... அவளும் இருக்காளேன்னு நொடிக்கலாம்...

(நீங்க ஆபீஸ் ஞாபகம் வருதுன்னு சொன்னதும்... அந்த 'கருமத்த' பார்த்துதான் சொல்லுறியளோன்னு சின்னதா ஒரு டவுட் வந்திச்சு... ச்ச்சின்னதாதான்..)

vasu balaji said...

/அந்த 'கருமத்த' பார்த்துதான் சொல்லுறியளோன்னு சின்னதா ஒரு டவுட் வந்திச்சு... ச்ச்சின்னதாதான்..)/

உன் லொல்லுக்கு அளவில்லாம போச்சு. ச்ச்சின்னதாதானே. லூஸ்ல விடு.

பூங்குன்றன்.வே said...

தோழி கலகலப்ரியா, வருகின்ற மாவீரர் தினத்திற்காக நம் அனைத்து பதிவர்களும் அன்றைய தினம் ஒரு நாள் எழுதுகிற படைப்புக்கள் அனைத்தும் நம் அன்பு சகோதர்களை பற்றியே இருக்க வேண்டுமென்ற நோக்கத்தில் ஒரு பதிவை-வேண்டுகோளை விடுத்திருக்கிறேன்.சரி எனில், உங்களின் ஆதரவைதருமாறும்
கேட்டுகொள்கிறேன்.
http://poongundran2010.blogspot.com/2009/11/blog-post_24.html

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...

/அந்த 'கருமத்த' பார்த்துதான் சொல்லுறியளோன்னு சின்னதா ஒரு டவுட் வந்திச்சு... ச்ச்சின்னதாதான்..)/

உன் லொல்லுக்கு அளவில்லாம போச்சு. ச்ச்சின்னதாதானே. லூஸ்ல விடு.//

ஹல்லோ... யார லூசுங்கிறீங்க... :-l... கடிச்சு வச்சிடுவேன் சாக்கிரத...

கலகலப்ரியா said...

// பூங்குன்றன்.வே said...

தோழி கலகலப்ரியா, வருகின்ற மாவீரர் தினத்திற்காக நம் அனைத்து பதிவர்களும் அன்றைய தினம் ஒரு நாள் எழுதுகிற படைப்புக்கள் அனைத்தும் நம் அன்பு சகோதர்களை பற்றியே இருக்க வேண்டுமென்ற நோக்கத்தில் ஒரு பதிவை-வேண்டுகோளை விடுத்திருக்கிறேன்.சரி எனில், உங்களின் ஆதரவைதருமாறும்
கேட்டுகொள்கிறேன்.
http://poongundran2010.blogspot.com/2009/11/blog-post_24.html//

திதியின் போது மட்டும் இறந்தவர்களை நினைத்துக் கொள்வது போல்... பண்ணுவதில் எனக்கு உடன்பாடில்லை... அவ்வப்போது எதையோ கிறுக்கிக் கொண்டிருக்கிறேன்... உங்கள் வேண்டுகோளை மிகவும் மதிக்கிறேன்... அன்றைய தினத்தில் ஏதாவது எழுத முடிகிறதா பார்க்கிறேன்...! நன்றி பூங்குன்றன்..!

jothi said...

அருமை, மிக ரசித்துப படித்தேன். இந்த மாதிரி பின்னுட்டம் எழுதியே ரொம்ப நாளாகி விட்டது.

jothi said...

//நம்மில் பலருக்கு 'மாடர்ன்' என்ற சொல்லில் நமீதாதான் தெரிகிறார்கள்//

சும்மா காமெடி பண்ணாதிங்க,.. நமிதா எங்க ஜீன்ஸ், Tshirt போடுறாங்க,..??

jothi said...

//'நம்மவர்' பின்னணியுடன் பின்னிப் பிணைந்திருக்கும் ஒரு பெண்மணி//
என்ன குமுதம் மாதிரி கோட் வோர்ட் எல்லாம் பயன்படுத்திறிங்க,..

aambalsamkannan said...

தாங்கள் கோபம் கொள்வதில் நியாயமில்லை

திரைக்குப்பின்னால் நிர்பவனிடம் கேள்வி கேட்டு குடும்பம் நடத்தகூடிய அவசரம் நம் ஊர் பெண்களுக்கு இன்னும் வரவில்லை.

விடுங்க அந்த வெள்ளகாரனுக்கு,அப்பன்,ஆயி,தம்பி,தங்கட்ச்சி ஏதும் கூட இருக்காது
அதே மாதிரி அந்த பெண்ணுக்கும் ஏதும் இருந்திருக்காது, நம்ம ஊரு பொண்ணுகளுக்கு
என்னங்க குறைச்ச?

jothi said...

//இவளுக்கு காதலிப்பதற்கு நம்ம ஊர் ஆள் கிடைக்கவில்லையா?//

ஒரே ஒரு கேள்விக்கு இத்தனை பதில்களா???

//எனக்கு தலையை அலுவலக மேஜையில் 'ணங் ணங்' என்று இடித்துக் கொள்ள வேண்டும் போலவும், சட்டையைக் கிழித்துக் கொண்டு சிரிக்க வேண்டும் போலவும், தலையைப் பிய்த்துக் கொண்டு ஆ என்று உச்ச கதியில் கத்த வேண்டும் போலவும், தொலைபேசியை சுவற்றில் அடித்து அந்தம்மணி தலையில் காயம் ஏற்படுத்த வேண்டும் போலவும் உணர்ச்சிகள் சுற்றிச் சுழன்றன//.

jothi said...

//நம்ம ஜாதியில் கிடைக்கவில்லையா என்று கேட்பார்கள்.//

ம் ம் ம் கேட்டார்கள் கேட்டார்கள்,..

பெருசு said...

பிரியா

விளக்குமாறு எத்தனை வகைப்படும்.

இரண்டு பக்கங்களுக்கு மிகாமல்
உப்பு,புளி,விம் மற்றும் சாம்பல் போட்டு
நன்றாக விளக்கவும்.

அடப்போப்பா.,


கடல்லே நீந்துனாலும் கிணத்துதவளையாத்தேன்
இருப்"பேன்",அப்படிங்கறவுங்களை
எப்புடி நசுக்கறது.

நாலு ஊரு, நாலு நாடு சுத்தி வந்து
பாத்தாத்தானே வெளங்கும்.

இந்தக் கெரகங்களுக்காக நீங்க ஏங்க அம்மணி மண்டைய உடைச்சுக்கறீங்க.

போனாப்போவுது.விட்டுத்தள்ளுங்க.

jothi said...

//பூச்சிகொல்லி மருந்தாக நஞ்சை மட்டுமே ஊட்டிக் கொண்டிருப்பவர்களுக்குப் பெயர் "நலன் விரும்பிகள்".//

அனைத்து நஞ்சுகளும் நம் மூதையார்கள் விதைத்ததே. நஞ்சைத்தான் மருந்து என உண்டுகொண்டு இருக்கிறோம். " உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே" என பாட்டு வேறு

jothi said...

நிறைய்ய்ய்யய்ய எழுதுங்கள்,..

கலகலப்ரியா said...

// aambal samkannan said...

தாங்கள் கோபம் கொள்வதில் நியாயமில்லை

திரைக்குப்பின்னால் நிர்பவனிடம் கேள்வி கேட்டு குடும்பம் நடத்தகூடிய அவசரம் நம் ஊர் பெண்களுக்கு இன்னும் வரவில்லை.

விடுங்க அந்த வெள்ளகாரனுக்கு,அப்பன்,ஆயி,தம்பி,தங்கட்ச்சி ஏதும் கூட இருக்காது
அதே மாதிரி அந்த பெண்ணுக்கும் ஏதும் இருந்திருக்காது, நம்ம ஊரு பொண்ணுகளுக்கு
என்னங்க குறைச்ச?//

ஆமாங்க... நாமதான் புள்ள வயித்தில இருக்கிறப்பவே கல்யாணம் முடிச்சிடுறோமே..? எவ்ளோ பெருமையா சொல்றீங்க இத...! இத பத்திதான் இங்க இவ்ளோ நேரம் கத்திக்கிட்டிருந்தேன்...! ரொம்ம்ம்ப வாஸ்தவமுங்க... நாம கோபப்பட்டு என்ன நியாயம்... என்ன புண்ணியம்...! அம்புட்டுதேன்...!

கலகலப்ரியா said...

//பெருசு said...

பிரியா

விளக்குமாறு எத்தனை வகைப்படும்.

இரண்டு பக்கங்களுக்கு மிகாமல்
உப்பு,புளி,விம் மற்றும் சாம்பல் போட்டு
நன்றாக விளக்கவும்.

அடப்போப்பா.,


கடல்லே நீந்துனாலும் கிணத்துதவளையாத்தேன்
இருப்"பேன்",அப்படிங்கறவுங்களை
எப்புடி நசுக்கறது.

நாலு ஊரு, நாலு நாடு சுத்தி வந்து
பாத்தாத்தானே வெளங்கும்.

இந்தக் கெரகங்களுக்காக நீங்க ஏங்க அம்மணி மண்டைய உடைச்சுக்கறீங்க.

போனாப்போவுது.விட்டுத்தள்ளுங்க.//

அட டயரில எழுதி வைக்கலாமின்னுதானுங்க... இந்தக் கருமாந்திரத்த வச்சு என் மண்டைய உடைச்சி என்ன பண்றது...

கலகலப்ரியா said...

//jothi said...

வாங்க வாங்க...

//அருமை, மிக ரசித்துப படித்தேன். இந்த மாதிரி பின்னுட்டம் எழுதியே ரொம்ப நாளாகி விட்டது.//

அதே அதே..!

//சும்மா காமெடி பண்ணாதிங்க,.. நமிதா எங்க ஜீன்ஸ், Tshirt போடுறாங்க,..??//

தோடா... நான் என்னைச் சொன்னேன்... அதுவும் மாடர்ன் டிரஸ்தானுங்களே...

vasu balaji said...

aambal samkannan said...


/ திரைக்குப்பின்னால் நிர்பவனிடம் கேள்வி கேட்டு குடும்பம் நடத்தகூடிய அவசரம் நம் ஊர் பெண்களுக்கு இன்னும் வரவில்லை./

ஆமாங்க. இன்னும் வரவன் கால்ல விழுந்து அவன் போய் லெட்டர் போடுறேன்னு போய், பிடிக்கலைன்னா அடுத்தவன் கால்ல விழுற நிலைமைல தானே இருக்காங்க.

/நம்ம ஊரு பொண்ணுகளுக்கு
என்னங்க குறைச்ச?/

ஆமாங்க. நீங்க சொன்ன அதே அப்பன், ஆயி, தங்கச்சி உறவுங்கதான். ஒரு மாடு வாங்கணும்னா கூட வாங்குறவனுக்கு பிடிச்சா போதும். இவங்களுக்கு ஒன்னு விட்ட சித்தப்பா பொண்ணு முடி கொஞ்சம் குட்டைன்னாலும் வேணாம்னுடுவாங்க. அதுக்கு சில லட்சம் கொடுத்தா சரியாயிடும்.

நம்ம ஊரு பொண்ணுதாங்க சுயம்வரம் வைத்து 3000 பேரில் ஒருத்தரை தேர்ந்தெடுத்து, அவன் நீ யாரு எப்படின்னு தெரியாம கட்ட மாட்டேன்னு அசிங்கப் படுத்திட்டு போனது.

ஆமாம். என்ன குறை நம்ம பெண்களுக்கு. இடுகையின் நோக்கம் அது மட்டுமல்ல.

மன்னிக்க வேண்டும் ப்ரியா. என் கருத்தைச் சொல்லத் தோன்றியது.

கலகலப்ரியா said...

// jothi said...

//'நம்மவர்' பின்னணியுடன் பின்னிப் பிணைந்திருக்கும் ஒரு பெண்மணி//
என்ன குமுதம் மாதிரி கோட் வோர்ட் எல்லாம் பயன்படுத்திறிங்க,..//

குமுதம் என்னைக் காப்பி பண்ணுதா... ஆஹா...


//ஒரே ஒரு கேள்விக்கு இத்தனை பதில்களா???//

ஒரு கேள்வியாங்க அது... அப்புறம் அவங்க சொன்ன ராமாயணத்த... வாயையும் கையையும் இறுகப் பொத்திக்கிட்டே கேட்டுக்கிட்டிருந்தது நானாக்கும்...

//ஏற்படுத்த வேண்டும் போலவும் உணர்ச்சிகள் சுற்றிச் சுழன்றன//.

இதுக்கு பின்னூட்டம் காணோம்...

//ம் ம் ம் கேட்டார்கள் கேட்டார்கள்,..//

கேட்கிறாங்கள்ல.. கேட்கிறாங்கள்ல?!

//அனைத்து நஞ்சுகளும் நம் மூதையார்கள் விதைத்ததே. நஞ்சைத்தான் மருந்து என உண்டுகொண்டு இருக்கிறோம். " உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே" என பாட்டு வேறு//

இப்டி வேற இருக்குதுங்களா...

//நிறைய்ய்ய்யய்ய எழுதுங்கள்,..//

சரிய்ய்ய்யய்ய்ய்... இப்டி சொல்றப்போ இப்பவே நாலு இடுகை போடலாம் போல இருக்கே...=))... ரொம்ப நன்றி ஜோதி..!

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...
மன்னிக்க வேண்டும் ப்ரியா. என் கருத்தைச் சொல்லத் தோன்றியது.//

தாராளமா சொல்லுங்க..! கருத்துச் சுதந்திரம் என்னோட ப்ளாக்ல உண்டு..! (அதுக்காக மத்தவங்கள திட்டினா பப்ளிஷ் பண்ண மாட்டேன்... என்னைத் திட்டினா யோசிக்கலாம்..)

குடுகுடுப்பை said...

கருத்து சுதந்திரத்தில உங்கள திட்டலாமான்னு இருக்கு, ஆனா இந்தப்பதிவுக்கு பாராட்டீக்கிறேன். வேறொரு பதிவிலே திட்டிக்கறேன்.

குடுகுடுப்பை said...

நாடோடிகள் படத்தோட கதை இந்த வெளக்குமாத்துல ஒன்னு.

குடுகுடுப்பை said...

ஆமா நீங்க கலகலப்பிரியாவா ?கலகப்பிரியாவா?

ஹேமா said...

சரியாத்தானே சொல்லியிருக்கீங்க ப்ரியா.ஏன் துப்பணும்.யார் துப்புவாங்க.பாக்கலாம்.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

இருவர் இணைந்து வாழ சாதியும் மொழியும் ஒன்றாக இருக்க தேவையில்லை என்பது சரி தான். அவர்களுக்கு இதனைப் பற்றிய உணர்வுகள் குறைவாக இருந்தால் எளிதில் மற்றொருவருக்கு அடாப்ட் ஆகிட முடியும். அந்தப் பெண்மணி அந்த விஷயத்துக்கு அப்படி ஒரு ஹைப் கொடுத்து உங்களிடம் அதை விவாதித்தது தவறு தான் (அதுவும் நீங்கள் லக லக வென்று தெரியாமல் அதைப் பற்றி சொன்னது மிக மிக தவறு :) ). கோபமெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். வெள்ளைக்காரரை திருமணம் செய்தால் என்ன தப்பு என்று ஒரு வார்த்தை (மென்மையாகவாவது) அந்தப் பெண்மணியிடம் கேட்டீங்களோ?

நச்சென்று இருந்தாலும், கோபத்தை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. :)

ஆ.ஞானசேகரன் said...

சரியான இடுகைதான்... ஆனால் இன்னும் ஏதோ சொல்லவந்ததுபோல இருக்கு ப்ரியா..... உண்மையில் கலாச்சாரம் என்பது இன்னும் வரையறுக்கப்படவில்லை என்றுதான் நினைக்கின்றேன்.. காலத்திகேற்றவாறு மாறி (மாற்றி) க்கொண்டே இருக்கு..
நல்ல சிந்தனை ப்ரியா தொடருங்கள்

thiyaa said...

நல்ல படிப்பினையான இடுகை வாழ்த்துக்கள்

பித்தனின் வாக்கு said...

என்ன சொல்வது,கை குலுக்குவது, கட்டி முத்தமிடுவது அவர்களின் கலாச்சாரமாக இருந்தால் அதில் தவறு இல்லை. ஒரு சிலர் சிலரின் மீது பொறாமை கொண்டால் இது போல வதந்தீ அல்லது குசும்பு பரப்புவார்கள். இவர்களை மாற்றவே திருத்தவே இயலாது. நாம் இறைவன் கொடுத்த இரு காதுகளை உபயோகம் செய்து ஒன்றில் கேட்டு மற்றவற்றில் விடவும். இல்லை என்றால் முட்டி மோதி பைத்தியமாக வேண்டியதுதான் (பிரியா மாதிரி), நன்றி.

V.N.Thangamani said...

வாழ்வது உங்களுக்காகத்தானே. அப்படியானால் உங்கள் விருப்பம்போல் முடிவெடுங்கள்.
வாழ்க வளமுடன்

மணிப்பக்கம் said...

// ஊர்க்கருமத்தைக் //

என்ன பிரியா இது... எதிர்பார்க்கல இத!

கலகலப்ரியா said...

//ஆ.ஞானசேகரன் said...

சரியான இடுகைதான்... ஆனால் இன்னும் ஏதோ சொல்லவந்ததுபோல இருக்கு ப்ரியா..... உண்மையில் கலாச்சாரம் என்பது இன்னும் வரையறுக்கப்படவில்லை என்றுதான் நினைக்கின்றேன்.. காலத்திகேற்றவாறு மாறி (மாற்றி) க்கொண்டே இருக்கு..
நல்ல சிந்தனை ப்ரியா தொடருங்கள்//

சரியாதான் சொல்லி இருக்கீங்க... நிறைய சொல்லணும்... சொல்லல... =)

நன்றி ஞானசேகரன்..

கலகலப்ரியா said...

//குடுகுடுப்பை said...

கருத்து சுதந்திரத்தில உங்கள திட்டலாமான்னு இருக்கு, ஆனா இந்தப்பதிவுக்கு பாராட்டீக்கிறேன். வேறொரு பதிவிலே திட்டிக்கறேன்.//

ஹிஹி.... நன்றி நன்றி..

//நாடோடிகள் படத்தோட கதை இந்த வெளக்குமாத்துல ஒன்னு.//

வாஸ்தவம்...

//ஆமா நீங்க கலகலப்பிரியாவா ?கலகப்பிரியாவா?//

ரெண்டும்தான்...

கலகலப்ரியா said...

//ஹேமா said...

சரியாத்தானே சொல்லியிருக்கீங்க ப்ரியா.ஏன் துப்பணும்.யார் துப்புவாங்க.பாக்கலாம்.//

ஆஹா... எனக்கு இப்டி ஒரு சப்போர்ட்டா... நன்றிம்மா...

கலகலப்ரியா said...

//Chandhana said...//

ஏனுங்க... எனக்கு கோபம் வந்திச்சிங்க... அவ்ளோதான்... மத்தபடி நாம ரொம்ப நல்ல புள்ளையாத்தான் பேசுவோம்...(அதானே நாசமா போறது..) 'பாவம் அந்தப் பொண்ணு என்ன பண்ண முடியும்..?'... காதல் சொல்லி வச்சிக்கிட்டா வருதுன்னு... ஏதோ சொல்லிக்கிட்டு... உம் கொட்டிக்கிட்டிருந்தேனுங்க... என்னிய போயி... அவ்வ்வ்வ்...

கலகலப்ரியா said...

//தியாவின் பேனா said...

நல்ல படிப்பினையான இடுகை வாழ்த்துக்கள்//

நன்றி தியா...

கலகலப்ரியா said...

//பித்தனின் வாக்கு said...

என்ன சொல்வது,கை குலுக்குவது, கட்டி முத்தமிடுவது அவர்களின் கலாச்சாரமாக இருந்தால் அதில் தவறு இல்லை. ஒரு சிலர் சிலரின் மீது பொறாமை கொண்டால் இது போல வதந்தீ அல்லது குசும்பு பரப்புவார்கள். இவர்களை மாற்றவே திருத்தவே இயலாது. நாம் இறைவன் கொடுத்த இரு காதுகளை உபயோகம் செய்து ஒன்றில் கேட்டு மற்றவற்றில் விடவும். இல்லை என்றால் முட்டி மோதி பைத்தியமாக வேண்டியதுதான் (பிரியா மாதிரி), நன்றி.//

அட நீங்க வேற.. நம்மளுக்கு இப்டி நியூஸ் வர்றதே கம்மி... ஏன்னா காதில போட்டுக்கிறதே இல்ல...! ஆனா இங்க எழுதலாம்... இல்லையா...

கலகலப்ரியா said...

//வி.என்.தங்கமணி, said...

வாழ்வது உங்களுக்காகத்தானே. அப்படியானால் உங்கள் விருப்பம்போல் முடிவெடுங்கள்.
வாழ்க வளமுடன்//

சுருக்கமா சொல்லிட்டீங்க... நன்றிங்க...

கலகலப்ரியா said...

//மணிப்பக்கம் said...

// ஊர்க்கருமத்தைக் //

என்ன பிரியா இது... எதிர்பார்க்கல இத!//

நீங்க ரொம்ம்ம்ப நல்லவங்க மணி... =))... ஆனா நான் அப்டி இல்லையே... =))

Ganesh Gopalasubramanian said...

இது எல்லாம் ஆவறதில்லே...

கலாச்சாரம் என்பது மாற்றத்திற்குறியது. அஞ்சு வருஷமோ ஐம்பது வருஷமோ நூத்தம்பது வருஷமோ (Sec 377) அதற்கு தேவைப்படலாம். இந்த கால அவகாசம் கலாச்சாரத்தைப் பொறுத்ததன்று அதனைப் பின்பற்றும் மக்களைப் பொறுத்தது. நாம் கடந்து வந்து விட்டோம் என்பதற்காக ’நம்மவர்களை’ (அல்லது மாற்றத்திற்கு இன்னும் தயாராகதவரை) இப்படி நெற்றிப்பொட்டில் அடிப்பது கலாச்சார மாற்றத்தைப் பிரதிபலிப்பதாக இல்லை. மாற்றங்கள் எப்பொழுதும் உயர்வையே குறி வைத்து நகர வேண்டும். மாறியவர்கள் உயர்ந்தவர்கள் என்பது என் எண்ணம். மாறாதவர்கள் இருக்கும் வரை கலாச்சார நீட்சியை உங்களால் தடுக்க முடியாது. நீட்சி இருக்கும் வரை கலாச்சாரம் நீடிக்கும். இது ஒரு வகையில் catch-22 மாதிரி. அப்படியிருக்கையில் ‘நம்மவர்களுக்கு’ புரிய வைப்பது உங்கள் கடமை. முயன்று பாருங்கள். அதை விட்டுவிட்டு ”ணங் ணங்' என்று இடித்துக் கொள்வதும், சட்டையைக் கிழித்துக் கொண்டு அலைவதும், உச்ச கதியில் கத்துவதும்” அழகல்ல.

Ganesh Gopalasubramanian said...

// நம்மில் பலருக்கு 'மாடர்ன்' என்ற சொல்லில் நமீதாதான் தெரிகிறார்கள்.

நீங்கள் எடுத்திருக்கும் தலைப்பிற்கு நகைச்சுவைக்காகக் கூட நீங்கள் இப்படி சொல்லியிருக்கக் கூடாது. இன்னும் ஐம்பது வருடங்களில் (அல்லது ஐந்து வருடங்களில்) நமீதா போல் இருப்பதற்காகத் தான் ’சமுதாய விளக்குமாறுகள்” பதிவிடப்பட்டுக்கொண்டிருக்கும். நமீதா அந்த வகையில் பில்கேட்ஸ் மாதிரி அவர் தான் இந்த கலாச்சார மாற்றத்திற்கு (அல்லது cultural crossoverக்கு) முன்னோடி.

// ஆண், பெண் வித்தியாசம் பாராது பரஸ்பரம் கை குலுக்கிக் கொள்வதையே இன்னும் எதிர்ப்பவர்கள் இருக்கிறார்கள்
// 'give me your cheek'
// விகல்பத்திற்கு வழியேதுமில்லை.
எனக்கு புரியவில்லை. கை குலுக்குவதில் தவறில்லை என்றால், 'give me your cheek' என்று விளித்த ஆங்கில ஆசானிடத்தில் மட்டும் என்ன விகற்பத்தைக் கண்டு விட்டீர்கள்?

Ganesh Gopalasubramanian said...

// அவள் அப்படியே ஊர்க்கருமத்தைக் காதலிச்சிருந்தால்.. நம்ம ஜாதியில் கிடைக்கவில்லையா என்று கேட்பார்கள்.
:)

// டிவியில் மூன்று ஆண்களை திரைக்குப் பின்னால் உட்கார வைத்து, மூன்று கேள்வி கேட்டு ஒருவனைத் தெரிவு செய்து
ஒன்றிரண்டு நடக்கலாம். Exceptions are not examples. நீங்கள் தாக்க வேண்டியது ஜாதி மதம் பார்த்து ”பெரியோர்களால்” நிச்சயம் செய்யப் படும் திருமணங்களையும் அவற்றிலிருக்கும் முடிச்சுக்களையும்.

// ஆயிரம் காலத்துப் ..........பயிர்'
ஆயிரம் காலம் கடந்தாயிற்று என நினைக்கிறேன். பயிர் வாட ஆரம்பித்து விட்டது. இனி தண்ணீர் ஊற்றுபவர்களின் எண்ணிக்கை குறையும்.

// மாடர்ன்' என்ற சொல்லில் நமீதாதான் தெரிகிறார்கள்
என்னதான் இருந்தாலும் நீங்க ‘நமீதா’வை இப்படி சொல்லியிருக்கக் கூடாதுங்க... :)

ஜோதிஜி said...

தொடக்கம் முதல் எதிர்பார்த்த உங்கள் முழுமையான தகுதி இதில் கொஞ்சம் வெளி வந்துள்ளது. இராகவன் நைஜீரியா சொன்னதைப் போல.

வாழ்த்துக்கள்.

sweet said...

இந்த தலைப்புக்கு உரிய பதில் மொழி அல்ல இது... மொத்தத்தில் பாரதி பாரதி பாரதி-னு சொல்றீங்க... யார் அவர்??? ஹி ஹி.... பாரதி தன்னுடைய மனைவியை சந்தோசமா வச்சு இருந்தாரா? இந்த ஒரு கேள்வி போதும் அவன் எப்படிப்பட்ட கேடு கெட்ட ஜென்மம் என்று புரிய.... அவன் குழந்தைகள் பசியால் துடிக்க... ஆப்பிரிக்கா கண்ட குழந்தைகளை நினைத்து கதறும் ஒரு மன நோயாளி.... தன்னை சுத்தி இருக்கிறவங்களை சந்தோசமா வச்சுக்க தெரியாதவன் சமுதாயத்துக்கு கவிதை சொல்லி என்ன பயன்???? பாரதியின் கவிதைகளை ரசியுங்க... ஆனா அவன் மாதிரி ஒரு கேடு கெட்ட தகப்பனாக கணவனாக இருக்காதீர்கள்... என்ற உண்மையை நீங்கள் சொன்னால் அதில் ஒரு அர்த்தம் இருக்கு... அதை விட்டு விட்டு பாரதி பாரதி என்று மொக்கையை போட்டுக்கிட்டு... தன்னை சுற்றி இருப்பவர்களின் சந்தோசத்தை குழி தோண்டி புதைத்து விட்டு சமுதாய நோக்கம் என்ற பெயரில் செய்யும் செயல்கள் எல்லாம் வீண்...

நீ... முதலில் குடும்பத்தை கவனி... அப்புறம் சமுதாயம் பற்றி பேச வா.... இது தான் அடிப்படை....என்று பாரதியின் கேடு கெட்ட ஆவிக்கும் பாடம் எடுக்க நான் ரெடி....

உண்மை எப்பவும் கசக்கும்

ஒரு சாதாரண மனிதன் ஆனால் சந்தோசமான குடும்பஸ்தன்

Unknown said...

//ந்த இடுகைக்கு எத்தன பேரு என் மூஞ்சில துப்புவாங்களோ ..., துப்புவார் துப்பட்டும்..//
இந்த தைரியம் தாங்க எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு...

Muruganandan M.K. said...

"பல்லுக் குத்தக் கூட உதவாத கலாச்சாரங்களைக்...."

"ஆனால் சமுதாய விளக்குமாற்றில் அகப்பட்ட உயிர்கள்..? "

உறைக்கச் சொல்ல வேண்டியதை உரக்க, உறைக்கச் சொல்லியிருக்கிறீர்கள். கேட்க வேண்டியவர்கள் காதில் பட வேண்டும்.

vasu balaji said...

150 தொண்டர்களா. வாழ்த்துகள்.

கலகலப்ரியா said...

//Dr.எம்.கே.முருகானந்தன் said...

"பல்லுக் குத்தக் கூட உதவாத கலாச்சாரங்களைக்...."

"ஆனால் சமுதாய விளக்குமாற்றில் அகப்பட்ட உயிர்கள்..? "

உறைக்கச் சொல்ல வேண்டியதை உரக்க, உறைக்கச் சொல்லியிருக்கிறீர்கள். கேட்க வேண்டியவர்கள் காதில் பட வேண்டும்.//

வாங்க டாக்டர்..! அன்னம் போல்... எதை எடுக்க வேண்டுமோ... அதை எடுத்திருக்கிறீர்கள்..! ரொம்ப நன்றி..=)

கலகலப்ரியா said...

//பேநா மூடி said...

//ந்த இடுகைக்கு எத்தன பேரு என் மூஞ்சில துப்புவாங்களோ ..., துப்புவார் துப்பட்டும்..//
இந்த தைரியம் தாங்க எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு...//

=))... lol... இப்போ என்ன என்னோட தைரியத்த சோதிக்க போறீங்களா...

கலகலப்ரியா said...

//sweet said...
இந்த தலைப்புக்கு உரிய பதில் மொழி அல்ல இது... மொத்தத்தில் பாரதி பாரதி பாரதி-னு சொல்றீங்க... யார் அவர்???//

மன்னிக்கணும்...! முப்பத்துலட்சத்து நாப்பதினாயிரத்து பத்தொன்பாதாவது தடவையாகக் கேட்கப்படும் கேள்வி..! இதைப் பற்றி விவாதிப்பதற்கு நீங்கள் சரியான ஆள் அல்ல..! குடும்பத்தைக் கட்டிக் காக்கும் நல்ல பிள்ளைகளுக்கு பாரதி புரியாது..! ஆனாலும்...

//அவன் குழந்தைகள் பசியால் துடிக்க... ஆப்பிரிக்கா கண்ட குழந்தைகளை நினைத்து கதறும் ஒரு மன நோயாளி.//

நிர்வாண உலகில்.. கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன்..! வாஸ்தவம்தான்...! (அவன் குழந்தைகள் பசியால் ஆப்பிரிக்காவில் உள்ள குழந்தையின் பசியின் கொடுமை புரிந்திருக்குமோ என்னமோ...)

//நீ... முதலில் குடும்பத்தை கவனி... அப்புறம் சமுதாயம் பற்றி பேச வா.... இது தான் அடிப்படை....என்று பாரதியின் கேடு கெட்ட ஆவிக்கும் பாடம் எடுக்க நான் ரெடி....//

தாராளமா அவங்க ஆவிக்கு பாடம் எடுங்க..! ஆனால்... எனக்கு இப்பொழுது உங்கள் பாடம் தேவைப்படாது என்று எனக்கு நூறு சதவீதம் திட்டவட்டமாகத் தெரியும்..! ஒரு வேளை எனக்கு இந்தப் பாடம் தேவைப்பட நேரலாம்..... அப்பொழுது நீங்கள் பாரதி தாசன் ஆகிவிடாதிருக்கக் கடவ..!

//உண்மை எப்பவும் கசக்கும்//

தெரியுதே..!

//ஒரு சாதாரண மனிதன் ஆனால் சந்தோசமான குடும்பஸ்தன்//
சந்தோஷமா இருங்க..! அதுதான் முக்கியம்..! (பார்த்தா அப்டி தெரியலையே..)

ராஜ சேகர் said...

"ரௌத்திரம் மட்டும் பழகி கொண்டிருப்பவள் " இத படிச்சிட்டு கருத்து சொல்ல பயமா தான் இருக்கு,, ஆனாலும் மனதில் பட்டதை சொல்ல தோன்றியதால் சொல்கிறேன்..

ஒரு பெண் ஒரு ஆணை கட்டி பிடித்தால் அது காதல் என்றே எண்ணும் எண்ணம் மாற எத்தனை யுகங்கள் ஆகுமோ? இவர்களை திருத்த அந்த ஆண்டவன் மட்டுமே வர வேண்டும்.

எனினும் உங்கள் கருத்துக்களில் நீங்க அடியோடு பழைய கலாசார நியதிகளை எதிர்ப்பதாக தெரியுது. இங்கே உண்மை என்னவெனில் பழைய கலாசார நியதிகளுடன் தங்கள் பெண்ணடிமை தனத்தை திருட்டுத்தனமாக கலந்து விட்ட சில கருங்காலிகள் மீதே உங்கள் கோவம் செல்ல வேண்டும்.. நம் தமிழ் கலாச்சாரம் பெண்களை என்றுமே அடிமை படுத்தியதில்லை..

ஆனா உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு

கலகலப்ரியா said...

//’நம்மவர்களை’ (அல்லது மாற்றத்திற்கு இன்னும் தயாராகதவரை) இப்படி நெற்றிப்பொட்டில் அடிப்பது கலாச்சார மாற்றத்தைப் பிரதிபலிப்பதாக இல்லை.//

கலாச்சார மாற்றத்தை யாருங்க பிரதிபலிக்கிறாங்க.. இங்க..?

//‘நம்மவர்களுக்கு’ புரிய வைப்பது உங்கள் கடமை. முயன்று பாருங்கள். அதை விட்டுவிட்டு ”ணங் ணங்' என்று இடித்துக் கொள்வதும், சட்டையைக் கிழித்துக் கொண்டு அலைவதும், உச்ச கதியில் கத்துவதும்” அழகல்ல.//

இருப்பா ஒரு வாட்டி எதுக்கும் செக் பண்ணிக்கிறேன்... எனக்கு தெரியாமலேயே... சட்டைய கிட்டிய கிழிச்சிட்டேனோ என்னமோ... அட இல்ல தம்பி... கிழிச்சுக்க தோணிச்சு அவ்ளோதான்...

//நீங்கள் எடுத்திருக்கும் தலைப்பிற்கு நகைச்சுவைக்காகக் கூட நீங்கள் இப்படி சொல்லியிருக்கக் கூடாது.//

தம்பி... என்னப்பா ஆச்சு..? ஆபீஸ்ல நிறைய வேலையா..? டென்ஷன்ல படிச்ச மாதிரி தெரியுது...! மாடர்ன் அப்டின்னா நடை, உடை, பாவனை மட்டும்தான் கவனத்துக்கு வருதுன்னு சொன்னேன்..! நமீதா பெயரைக் குறிப்பிட்டதால் உங்களை ஏதோ ஒரு விதத்தில் காயப் படுத்திவிட்டேன் என்று நினைக்கிறேன்..! மன்னிச்சிடுப்பா..!

//அல்லது cultural crossoverக்கு) முன்னோடி//
சொன்ன மாதிரி... சட்டைய அல்லது சட்டை தவிர்ந்த அங்கங்களை மட்டுமே பார்த்து முடிவு பண்ணிட்டியேப்பா...!

கலகலப்ரியா said...

//என்று விளித்த ஆங்கில ஆசானிடத்தில் மட்டும் என்ன விகற்பத்தைக் கண்டு விட்டீர்கள்?//

என்ன எழவுடா...! மன்னிச்சுக்கப்பா... இப்டித்தான் எனக்கு அடிக்கடி எதுக்கோ எரிச்சல் வருது..! இப்போ யார் சொன்னா அதில விகல்பம் இருக்குனு..? இப்பவும் அவங்கள பார்த்தா.. i'll give my cheek...

///. நீங்கள் தாக்க வேண்டியது ஜாதி மதம் பார்த்து ”பெரியோர்களால்” நிச்சயம் செய்யப் படும் திருமணங்களையும் அவற்றிலிருக்கும் முடிச்சுக்களையும்.//
இதுக்கு நான் அனுப்பிச்ச மெயில்-பதில்..
ty for yer comments.. of course.. i've done it.. actually thatz da main thing... (btw.. ennudaiya mandaiyai naan innum udaiththuk kollavillai... so np...)... and read it again if you can...! shall publish all of yer comments and give a prompt reply...!
priya

//என்னதான் இருந்தாலும் நீங்க ‘நமீதா’வை இப்படி சொல்லியிருக்கக் கூடாதுங்க... :)//
திரும்ப மன்னிச்சிடுப்பா... நமீதா பேர் சொன்னதாலேயே இவ்ளோ தூரம் ஆயடுத்துன்னு நினைக்கிறேன்..!

அப்புறம்... நீ சொன்னததான்பா நானும் சொல்லி இருக்கேன்... மெயில்ல சொன்ன மாதிரி இன்னொரு வாட்டி படிச்சுப் பார்த்துக்கப்பு..!

கலகலப்ரியா said...

//ஜோதிஜி. தேவியர் இல்லம். said...

தொடக்கம் முதல் எதிர்பார்த்த உங்கள் முழுமையான தகுதி இதில் கொஞ்சம் வெளி வந்துள்ளது. இராகவன் நைஜீரியா சொன்னதைப் போல.

வாழ்த்துக்கள்.//

வாங்க ஜோதிஜி... நன்றி..!

கலகலப்ரியா said...

//நட்பு said...//
நம் தமிழ் கலாச்சாரம் பெண்களை என்றுமே அடிமை படுத்தியதில்லை..//

hihi.. உங்க நேர்மையும் எனக்கு புடிச்சிருக்கு நட்பு...! ஆமாம்... நான் எப்போ பெண்ணடிமை பத்திப் பேசினேன்..?

பின்னோக்கி said...

//எனக்கு தலையை அலுவலக மேஜையில் 'ணங் ணங்' என்று

ஐய்யய்யோ...எனக்கு பயந்து வருதுங்க. இவ்வளவு கோபம் வருமா என்ன ?

கலகலப்ரியா said...

//பின்னோக்கி said...

//எனக்கு தலையை அலுவலக மேஜையில் 'ணங் ணங்' என்று

ஐய்யய்யோ...எனக்கு பயந்து வருதுங்க. இவ்வளவு கோபம் வருமா என்ன ?//

வருதுங்க... (திரும்ப பாலகுமாரன் புக்ஸ் படிக்கணும்..)

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...

150 தொண்டர்களா. வாழ்த்துகள்.//

நிலையில்லா உலகில்... இன்று நூறு... நாளை எத்தனையோ.... நன்றி ஐயா..! =))

நசரேயன் said...

//ரொம்பக் கூச்ச சுபாவத்துடன் நெளிபவர்களுக்கு ஒரு தலையசைப்புடன் வணக்கம் சொல்வதும்//

உங்களைப் பார்த்து பயந்து இருப்பாங்க

கலகலப்ரியா said...

//நசரேயன் said...

//ரொம்பக் கூச்ச சுபாவத்துடன் நெளிபவர்களுக்கு ஒரு தலையசைப்புடன் வணக்கம் சொல்வதும்//

உங்களைப் பார்த்து பயந்து இருப்பாங்க//

இருக்கும்..! நன்றிங்க...

பா.ராஜாராம் said...

எப்படி துப்புவார்?..

இப்படி இருக்க கடவது.

Ganesh Gopalasubramanian said...

>> கலாச்சார மாற்றத்தை யாருங்க பிரதிபலிக்கிறாங்க.. இங்க..?
கலாச்சாரம் என்பது மொழி, உணர்வு, நடை, உடை, கொள்கை, கருத்து சட்டம் என எல்லா விஷயங்களிலும் நீளக் கூடியது.

ஜீன்ஸூம், டீ ஷர்ட்டும் கைகுலுக்குவதும் கன்னம் தருவதும் கலாச்சார மாற்றமில்லீங்களா?

>> அட இல்ல தம்பி... கிழிச்சுக்க தோணிச்சு அவ்ளோதான்...
எனக்கு இங்கேயும் ஒரு அக்காவா? அது சரி உங்க வயசை என்னயிருந்தாலும் நீங்க சொல்லியிருக்கக்கூடாது :)

>> மாடர்ன் அப்டின்னா நடை, உடை, பாவனை மட்டும்தான் கவனத்துக்கு வருதுன்னு சொன்னேன்..! நமீதா பெயரைக் குறிப்பிட்டதால் உங்களை ஏதோ ஒரு விதத்தில் காயப் படுத்திவிட்டேன் என்று நினைக்கிறேன்..! மன்னிச்சிடுப்பா..!
மாடர்ன் என்றால் நடை, உடை, பாவனையும் கவனத்துக்கு வரணும் இல்லையா. எனக்கு நமீதாவின் ‘மச்சான்ஸூம்’ கவனத்துக்கு வந்தது.

Ganesh Gopalasubramanian said...

>> சொன்ன மாதிரி... சட்டைய அல்லது சட்டை தவிர்ந்த அங்கங்களை மட்டுமே பார்த்து முடிவு பண்ணிட்டியேப்பா..
அட என்னங்க மாற்றம் என்பது ஒட்டு மொத்தமாய் எல்லா துறைகளிலும் நிகழ வேண்டும் என நீங்கள் நினைத்தால் ரொம்ப ஆசைப்படறீங்கன்னு தான் சொல்லனும். மாற்றம் ஒவ்வொரு விஷயத்திலையும் நிகழும். எந்த மாற்றம் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருக்கிறதோ அது பின்பற்றப்படும். நமீதா செய்வது ஒரு வித ஆடை விஷயத்தில் ஒரு cultural crossover என வைத்துக்கொள்ளுங்களேன். ஏ ஆர் ரஹ்மான் செய்வது இசைத்துறையில் ஒரு மாற்றம். அதுக்காக நமீதா ஏ ஆர் ரஹ்மானும் அவரவர் துறையில் ஒரு சேர மாற்றத்தைக் கொண்டு வர வேண்டுமென்றால் நடக்கவே நடக்காது. எனக்கு பத்து வயசாக இருக்கும் பொழுது ‘காதல்’ங்கிற வார்த்தை கூட கெட்ட வார்த்தையாகத்தான் பட்டது. இப்போ நமீதாவின் மச்சான்ஸைப் பற்றி எழுதிக்கொண்டிருக்கிறேன். இது தான் மாற்றம். இன்னும் ஐம்பது வருஷத்தில் நமீதாவின் மாற்றம் போல் ஒரு மாற்றம் இருந்திருக்காது என உங்களால் உறுதியாக சொல்ல முடியுமா?

>> திரும்ப மன்னிச்சிடுப்பா... நமீதா பேர் சொன்னதாலேயே இவ்ளோ தூரம் ஆயடுத்துன்னு நினைக்கிறேன்..!
நமீதாவின் தைரியம் யாருக்குங்க வரும். சில கருத்துக்களை அவர் போல் வெளிப்படையாக பேசும் பக்குவம் நிறைய பேருக்கு இல்லை. என்னதான் இருந்தாலும் நமீதாவப் பத்தி நீங்க அப்படி சொல்லியிருக்கக் கூடாதுங்க :)

>> அப்புறம்... நீ சொன்னததான்பா நானும் சொல்லி இருக்கேன்... மெயில்ல சொன்ன மாதிரி இன்னொரு வாட்டி படிச்சுப் பார்த்துக்கப்பு..!
நான் ஒத்துக்கறேன் நெக்ஸ்ட் மீட் பண்றேன்.

சத்ரியன் said...

ப்ரியா,

தொகுப்பில் ( EDIT)கோளாறா?
நண்பர் நேசமித்ரன் சொன்னது போல் "முழுமை" .....மிஸ்ஸிங்.

கலகலப்ரியா said...

100... =)... vanthu bathil poduren.. aappees... mannichukkunga makkaa..

Muthusamy Palaniappan said...

http://muthusamyp.blogspot.com/2009/11/blog-post_26.html

தொடர் பதிவு
can you please continue from here. I don't have your email id otherwise would have been sent it in a mail

பிரபாகர் said...

சகோதரி, மனசுல கபடம் வெச்சிகிட்டு தொடாம வணக்கம் வெக்கிறதவிட கைகுலுக்கி அன்ப வெளிப்படுத்தறது எவ்வளவோ பரவாயில்ல! அண்ணனோட நூறு சத ஆதரவு இந்த இடுகைக்கு.

புது வேலை, அதனால ரொம்ப பிசி. அதான் இப்போத்தான் பாக்குறேன்.

பிரபாகர்.

கலகலப்ரியா said...

//ஜீன்ஸூம், டீ ஷர்ட்டும் கைகுலுக்குவதும் கன்னம் தருவதும் கலாச்சார மாற்றமில்லீங்களா?//

அதுவும்தான்பா... அதுவும்தான்.... அது மட்டும் இல்ல...

//என்னயிருந்தாலும் நீங்க சொல்லியிருக்கக்கூடாது :)//

ஸ்ஸப்பா... முடியல...

கலகலப்ரியா said...

//பா.ராஜாராம் said...

எப்படி துப்புவார்?..

இப்படி இருக்க கடவது.//

நன்றி பா.ரா...! (எப்டி இருக்க கடவ..?)

கலகலப்ரியா said...

// சத்ரியன் said...

ப்ரியா,

தொகுப்பில் ( EDIT)கோளாறா?
நண்பர் நேசமித்ரன் சொன்னது போல் "முழுமை" .....மிஸ்ஸிங்.//

aaah..! மன்னிச்சு விட்டுடுங்க... பார்த்துக்கறேன்... அவ்வ்வ்வ்...

கலகலப்ரியா said...

//Muthusamy Palaniappan said...

http://muthusamyp.blogspot.com/2009/11/blog-post_26.html

தொடர் பதிவு
can you please continue from here. I don't have your email id otherwise would have been sent it in a mail//

ty so much muthu..!.. done already..!

கலகலப்ரியா said...

// பிரபாகர் said...

சகோதரி, மனசுல கபடம் வெச்சிகிட்டு தொடாம வணக்கம் வெக்கிறதவிட கைகுலுக்கி அன்ப வெளிப்படுத்தறது எவ்வளவோ பரவாயில்ல! அண்ணனோட நூறு சத ஆதரவு இந்த இடுகைக்கு.

புது வேலை, அதனால ரொம்ப பிசி. அதான் இப்போத்தான் பாக்குறேன்.

பிரபாகர்.//

பரவால்ல...! வேலைதான் முக்கியம்..! நன்றி அண்ணா..!

குட்டி சுஜாதா! said...

My dear kalakapriya! Thanks for this post! Evlo timely!

Unga posts ellam padichittu varren, i am just amazed! Wish you all the best!

கலகலப்ரியா said...

Ty sujatha..!

துபாய் ராஜா said...

விவாதத்திற்குரிய விஷயம் தான் இது.

கலகலப்ரியா said...

நன்றி ராஜா...