நரமாமிச உண்ணியின்
பேரையொற்ற விலங்கு..
கேட்பாரற்ற அநாதைகளை
அடக்கியாளும் கிருமி..
அடங்கப்போகும் துடிப்பறியாது
தடதடத்தாடும் பிண்டம்..
கொழுப்பின் திரள்களில்
களியாகிக் கிடக்கும் இருதயம்..
பறக்கும் திசை தொலைத்து
சிறகுடன் துடிக்கும் வெண்புறா...
http://news.bbc.co.uk/2/hi/europe/8389548.stm
_____________________________________________________
புரட்சியாளர்களின்
முதல் வெற்றி
அடிமைத்தளையின்
முதல் உடைப்பு
நூறு தாண்டியும் விலகாத
கருமை நிற வறுமைக்கோடு
வன்புணர்ந்த மிருகத்தால்
என் சகோதரமும் கூட..
இன்றும்..
குறி பார்த்து
உலுக்கிக் கொண்டிருக்கின்றன
வெறியடங்கா நரப்பேய்கள்...
http://news.bbc.co.uk/2/hi/americas/8469096.stm
_____________________________________________________
தேடிச் சோறு நிதந்தின்று - பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ!!!
எனக்காக... பாரதியிடம் கடன் வாங்கி...
____________________________________________________
Tuesday, January 19, 2010
Subscribe to:
Post Comments (Atom)
35 ஊக்கம்::
லிங்குக்கு நன்றி. எவனுக்கோல்லாம் சாவு வருது. இவனுங்களுக்கு வராதா.
/பறக்கும் திசை தொலைத்து
சிறகுடன் துடிக்கும் வெண்புறா.../
:(. god help them.
/வன்புணர்ந்த மிருகத்தால்
என் சகோதரமும் கூட.. /
அந்த கொடுமை வேற. வேலியை மேய்ஞ்ச பயிர்.
/இன்றும்..
குறி பார்த்து
உலுக்கிக் கொண்டிருக்கின்றன
வெறியடங்கா நரப்பேய்கள்.../
யப்பா. :((
/எனக்காக... பாரதியிடம் கடன் வாங்கி... /
இந்தாளு தீர்க்கதரிசி.
/நூறு தாண்டியும் விலகாத
கருமை நிற வறுமைக்கோடு/
யோவ். இந்த வறுமைக்கோடு இங்க கேவலங்கெட்ட அரசியல் வாதிங்க பிழைப்புக்கு உபயோகிக்கிற வார்த்தை. நீ எப்படி இது பரிச்சயமாகி இங்க பொருத்தமா போட முடிஞ்சது. விளக்கம் வேணும்.
//பறக்கும் திசை தொலைத்து
சிறகுடன் துடிக்கும் வெண்புறா...//
//நூறு தாண்டியும் விலகாத
கருமை நிற வறுமைக்கோடு//
கலக்கல் வரிகள்...
எல்ல வரிகளும் மிகவும் வலிமையுடனும் வலிகளுடனும் இருக்கிறது பாரதியின் வரிகள் நல்ல பொருத்தம்...
வலிக்குதுங்க சாமி ரெண்டாவது கவிதையும் படமும்
வீழ்வேனென்று நினைத்தாயோ????
நிகழ்வுகளுக்கு கசிந்து உதிர தட்டுகளில்
தீ நடமிடும் போதுகளில் தெறிக்கும் சொல்லெடுத்து ..... வாடித் துன்ப.....
முதல் கவிதை - Disturbing
ரெண்டாம் கவிதை - Blood boils
//கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ!!!//
வணக்கம் ப்ரியா
எண்ண வரிகள் தனி சிறப்பாக இருக்குங்க
அடேங்கப்பா....... அருமையான வரிகள்.
nice one
காய்ச்சல் ஒடயும் ஒரு பகவிதையா ஒழுங்கா குழுசைய போட்டுட்டு படுங்கோ...
இணைப்புகளை இன்னும் பார்க்கவில்லை, கவிதையில் இருந்தே கொஞ்சம் புரிகிறது.
onnume puriyalai....
கோபம் தெரிக்கிறது...
தள்ளி நின்னுக்கிறேன்.
/எனக்காக... பாரதியிடம் கடன் வாங்கி... /
இந்தாளு தீர்க்கதரிசி//
சத்தியமான வார்த்தை..
:(
'Flu' அதிகமாயிடுச்சு போலிருக்கே ம்மண ! ... (kkp - அடிச்சா இப்படி வருது!)
அருமை...
புரிஞ்சிடுச்சு...
//இனியா said...
onnume puriyalai....//
உலகத்துல...என்னமோ நடக்குது...மர்மமா இருக்குது....
பாரதிப்பாடல்...ம்ம்ம்...அதுமட்டும் புரியிது..
விடிவுகாலம் வராதா எனும் ஏக்கங்கள் மட்டுமே மிஞ்சும்.
உள்ளத்து உணர்வுகள் கவிதையாகி இருக்கின்றன.
பாரதியின் பாடல் பள்ளிக்கூடத்தை நினைவுபடுத்திவிட்டன. அவரைப் போன்ற அற்புதமான மனிதர்கள் ஏன் நம் சந்ததியில் இல்லை.??
Really we are unlucky,..
romba romba nanri makkale... :((..
ம்ம்! அருமை ! எப்படித் தான் பிரியாவால இப்படி எல்லாம் முடியுதோ?சொல்லாடல் அருமை!
உடம்ப கவனிங்க தாயி!
ப்ளுவ தொரத்திட்டு சீக்கிரம் வாருங்கோ!
//jothi said...
பாரதியின் பாடல் பள்ளிக்கூடத்தை நினைவுபடுத்திவிட்டன. அவரைப் போன்ற அற்புதமான மனிதர்கள் ஏன் நம் சந்ததியில் இல்லை.??//
இப்போது கூட பாரதி போன்ற ஒருவர் இருக்கலாம்,கவிதை புனையலாம், ஏழ்மையில் உலழலாம் அதை நமது அடுத்த சந்ததி புரிந்தும் கொள்ளலாம்...,
அன்பின் பிரியா,
வீரியமிக்க உன் வரிகள்,அக்கயவர்களின் மேல் விழும் சாட்டையடி.
எனது உணர்வுகள் உம்முடன்
முதல் கவிதை, லின்க் - பாவம் ஓரிடம், பழி வேறிடம் :((
இரண்டாவது லின்க் வீடியோ - ஏற்க்கனவே வலித்துக் கொண்டிருக்கிறது.. ஆனால் கவிதைக்கும் லின்க்கிற்கும் பின்னூட்டங்களுக்கும் உள்ள தொடர்பு புரியவில்லை..
மூன்றாவது - ஏற்கனவே பிடித்தது.
குணமாகி வாருங்கள்.. ஹேவ் குட் ரெஸ்ட்..
//பேநா மூடி said...
//jothi said...
பாரதியின் பாடல் பள்ளிக்கூடத்தை நினைவுபடுத்திவிட்டன. அவரைப் போன்ற அற்புதமான மனிதர்கள் ஏன் நம் சந்ததியில் இல்லை.??//
இப்போது கூட பாரதி போன்ற ஒருவர் இருக்கலாம்,கவிதை புனையலாம், ஏழ்மையில் உலழலாம் அதை நமது அடுத்த சந்ததி புரிந்தும் கொள்ளலாம்...//
பேநா மூடி - இப்பிடி எல்லாம் என்னைப் புகழக்கூடாது. எனக்கு அதெல்லாம் பிடிக்காது..
லா லா லாலலலலா லா...
லா லா லாலலலலா லா...
:))))
"கலிகாலம்" :-(
இரண்டாவது child trafficking பத்தி எழுதப்பட்டதா? நேற்று தான் அது பற்றிய ஒரு செய்தி படித்தேன்.. :((((
நன்றி வானம்பாடிகள் சார்...
//யோவ். இந்த வறுமைக்கோடு இங்க கேவலங்கெட்ட அரசியல் வாதிங்க பிழைப்புக்கு உபயோகிக்கிற வார்த்தை. நீ எப்படி இது பரிச்சயமாகி இங்க பொருத்தமா போட முடிஞ்சது. விளக்கம் வேணும்.//
நாங்களும் அரசியல்வாதி(ரவுடி)தான் சார்..
நன்றி சங்கவி..
நன்றி கமலேஷ்..
நன்றி நேசமித்ரன்... நல்லாருக்கு...
நன்றி சின்னம்மிணி...
நன்றி ஞானசேகரன்...
நன்றி சித்ரா...
நன்றி ஆரூர்...
நன்றி வாசு... =))... சரிங்கோ..
நன்றி சைவகொத்து..
பரவால்லீங்க இனியா....
முகிலன்... இப்டி வேறயா...
நன்றி பலா...
மணி... உங்க கவிதை சூப்பரு... எனக்கு ஒண்ணும் புரியல..
அப்பாடா... நன்றி கதிரு...
ம்ம்.. =)).. நன்றி பாலாசி... சாக்கிரத...
ரொம்ப நன்றி இராதாகிருஷ்ணன்...
நன்றி ஜோதி... பாரதி இருந்திருந்தா மட்டும்...? அவருக்கும் போயி பின்னூட்டம் போடுவோம்... ஒழுங்கா எழுதுய்யா வெவஸ்த கெட்டத்தனமான்னு... =))
நன்றி கயல்... கவிஞரே நீங்களா இப்டி சொல்றது... ஃப்ளு எஸ் ஆய்ட்டாங்க...
பேநா மூடி... நம்பிக்கையூட்டும் வார்த்தை... அப்போ நான் நெக்ஸ்ட் சந்ததில ஃபேமஸ் ஆயிடுவேனா... =))
நன்றி வானமே எல்லை...
நன்றி சந்தனா...
முகிலன்... நீங்க அடுத்த சந்ததியா இருந்து என்னோட கவிதைய படிக்க போறீங்கன்னு சொல்ல வர்றது புரியுது... ஆனாலும் ரொம்ப டூ மச்... ஆமாம்... லாலாலா நந்தலாலா...
நன்றி சிங்கக்குட்டி... அட கலிகாலம் இன்னும் முடியலையா...
சந்தனா... அதை அப்டியே உங்க ப்ளாக் ல போட்டு ஒரு வெள்ளோட்டம் பாருங்களேன்.. ஹிஹி...
இத வச்சு வெள்ளோட்டமா? என்னோட நண்பர்களை இப்படியெல்லாம் கஷ்டப்படுத்த மாட்டேன் :))
இத்தனை நாளா ஒளிச்சு வச்சிருந்ததை எல்லாம் பாத்துட்டீங்களா? :))
என்ன சொல்றீங்க சந்தனா... என்ன ஒளிச்சு வச்சீங்க...
அம்மா பிரியான்னு பேர் வைச்சுட்டு ஏன் இப்படி உக்கிரம். ரிலாக்ஸ்.
கவிதை காரசாரமா இருக்கு. நினைவுகளை அமைதிப் படுத்துங்கள். திரும்பத் திரும்ப நினைவூட்டுதல் மன அமைதி கெடும். நன்றி.
வாங்க பித்தன்... எப்போதான் ஒழுங்கா படிச்சு பின்னூட்டம் போடுறதா ஐடியா..? இது நினைவு இல்லீங்க... நிகழ்வு...
தலைப்பு அருமை.
Post a Comment