தொடர் இடுகை எழுத அழைத்த ஜெஸ்வந்தியின் அன்புக்காக இந்தப் பதிவு...
இந்திரா... !
எங்கே மழை
மண்வெட்டியை
மண்பாறையில்
அறைந்தபடி
இவ்வுலகின்
இறுதி மனிதன்
வருணனைக் கேள்
கடலை எங்கோ
ஒளித்து விட்டான்
சண்டாளன்!
பாறை வெடிப்பில்
முனகல் கேட்டது
என்னது..
மடிந்து போன
மண்புழுவா பேசுவது..
மடிந்தது மண்புழுவல்ல
என் மாண்பு
இறுமாப்பில்
இடியை அனுப்பினேன்
தெறித்து விட்டதென்
தலையிலேயே..
இறுதித் தறுவாயில்
தெளிந்து விட்டேன்
வருணனும்
செத்துவிட்டான்
சபிக்கப்பட்டு விட்டோம்
நாம் மனிதர்களால்
கடவுளை நம்பியது
அவர் குற்றமல்ல
மனிதனை நம்பியது
எம் குற்....
ஆ.. இந்த்....!
பின்...
அயல் நட்சத்திரத்தின்
ஒரு கோள்
நீரில் மிதக்கும்..
நீரற்ற தேசம் தேடி
பறக்கும் பந்தனுப்புவர்
பூமியில் நீர் இருந்த
சுவடும் இருக்காது
*&^%$#$%^&* என்று
ஹூரேயை
மொழிபெயர்த்துக்
கத்துவர்..
சிங்களர்
சனிக் கிரகத்திலிருந்து
பூமியைப் படம்பிடிப்பர்
வெடித்த பூமியின்
நடுவில் ரோபோக்கள்
நடமிடுவர்..
மீண்டும் போர்..!
______________________
அப்புறம் நமக்கு பாரதியைக் கூப்டலைன்னா விடியாதே..
உயிரே நினது பெருமை யாருக்குத் தெரியும்..
நீ கண் கண்ட தெய்வம்...
எல்லா விதிகளும் நின்னால் அமைவன..
எல்லா விதிகளும் நின்னால் அழிவன..
உயிரே... நீ காற்று.. நீ தீ... நீ நிலம்... நீ... நீர்... நீ வானம்..
உயிரே... உயிரே... !
(குழம்புபவர்களுக்கு இது மணிரத்னம் படப் பாடல் அல்ல..)
உயிருக்குப் பதிலா நீர் அப்டின்னும் போட்டுக்கலாம்... அப்போ நீ நீர்-ன்னு வருமே.. ஆமாம் நீர் நீர்தான்..!
தண்ணீர்ப் பற்றாக்குறை அல்லது அதன் அழிவில் என்னுடைய பங்கு எவ்வளவு தூரம் இருக்கிறது என்கிற பிரக்ஞை கூட இல்லாத எனக்கு இது பற்றி எழுதும் அருகதை இருக்கிறதா என்பது ஒரு புறம்... இதனால் என்ன ஆகி விடப்போகிறது என்கிற சிறு சலிப்பு மறுபுறம்.. ஒன்றை ஒன்று விஞ்ச..
இந்திரா... !
எங்கே மழை
மண்வெட்டியை
மண்பாறையில்
அறைந்தபடி
இவ்வுலகின்
இறுதி மனிதன்
வருணனைக் கேள்
கடலை எங்கோ
ஒளித்து விட்டான்
சண்டாளன்!
பாறை வெடிப்பில்
முனகல் கேட்டது
என்னது..
மடிந்து போன
மண்புழுவா பேசுவது..
மடிந்தது மண்புழுவல்ல
என் மாண்பு
இறுமாப்பில்
இடியை அனுப்பினேன்
தெறித்து விட்டதென்
தலையிலேயே..
இறுதித் தறுவாயில்
தெளிந்து விட்டேன்
வருணனும்
செத்துவிட்டான்
சபிக்கப்பட்டு விட்டோம்
நாம் மனிதர்களால்
கடவுளை நம்பியது
அவர் குற்றமல்ல
மனிதனை நம்பியது
எம் குற்....
ஆ.. இந்த்....!
பின்...
அயல் நட்சத்திரத்தின்
ஒரு கோள்
நீரில் மிதக்கும்..
நீரற்ற தேசம் தேடி
பறக்கும் பந்தனுப்புவர்
பூமியில் நீர் இருந்த
சுவடும் இருக்காது
*&^%$#$%^&* என்று
ஹூரேயை
மொழிபெயர்த்துக்
கத்துவர்..
சிங்களர்
சனிக் கிரகத்திலிருந்து
பூமியைப் படம்பிடிப்பர்
வெடித்த பூமியின்
நடுவில் ரோபோக்கள்
நடமிடுவர்..
மீண்டும் போர்..!
______________________
எல்லாம் சரி.. என்னால் இப்போதைக்கு என்ன செய்ய முடியும்.. இன்றைக்கு நான் ஏதாவது முடிவெடுத்தே ஆக வேண்டும்.. நான் இப்போதைக்கு தண்ணீரில் கல்லெறிய மாட்டேன்... அவ்ளோதான்... மாதக் கணக்காமல் குளிக்காதிருந்து தண்ணீரை மிச்சம் பிடிப்பவர்கள் தெய்வங்களுக்குச் சமானமானவர்கள்.. நான் தெய்வமல்ல..
உருப்படியா ஏதாவது தெரிஞ்சுக்கணும்னா இந்தப் படப்பொட்டிய க்ளிக் பண்ணுங்க..
உருப்படியா ஏதாவது தெரிஞ்சுக்கணும்னா இந்தப் படப்பொட்டிய க்ளிக் பண்ணுங்க..
அப்புறம் நமக்கு பாரதியைக் கூப்டலைன்னா விடியாதே..
உயிரே நினது பெருமை யாருக்குத் தெரியும்..
நீ கண் கண்ட தெய்வம்...
எல்லா விதிகளும் நின்னால் அமைவன..
எல்லா விதிகளும் நின்னால் அழிவன..
உயிரே... நீ காற்று.. நீ தீ... நீ நிலம்... நீ... நீர்... நீ வானம்..
உயிரே... உயிரே... !
(குழம்புபவர்களுக்கு இது மணிரத்னம் படப் பாடல் அல்ல..)
உயிருக்குப் பதிலா நீர் அப்டின்னும் போட்டுக்கலாம்... அப்போ நீ நீர்-ன்னு வருமே.. ஆமாம் நீர் நீர்தான்..!
28 ஊக்கம்::
துண்டேய்:))
/அவர் குற்றமல்ல
மனிதனை நம்பியது
எம் குற்....
ஆ.. இந்த்....!/
அவிய்ங்க் கதியே இப்புடியா:(
/சிங்களர்
சனிக் கிரகத்திலிருந்து
பூமியைப் படம்பிடிப்பர்/
அப்புடியாவது இந்த சனியனுங்கள சனிபிடிக்கட்டும்.
இந்த பாரதி எல்லா சிச்சுவேசனுக்கும் சாங் போட்டு உன் கைல குடுத்துட்டு போட்டாராம்மா:)
வீடியோ வேலமேல லோட் ஆவல. ஊட்டுல போய் பார்த்து தனியா பின்னூட்டிக்கிறேன்
//இதனால் என்ன ஆகி விடப்போகிறது என்கிற சிறு சலிப்பு மறுபுறம்//
இந்தச் சலிப்பை காரணம் காட்டித்தான் அத்தனை பேரும் மவுனமாய் கடந்து கொண்டிருக்கின்றனர்....
தண்ணீருக்கு மட்டுமல்ல!!!
/மாதக் கணக்காமல் குளிக்காதிருந்து தண்ணீரை மிச்சம் பிடிப்பவர்கள் தெய்வங்களுக்குச் சமானமானவர்கள்../
இதுலயும் எனக்கு ஒரு அர்த்தம் தெரியுது. சாமிக்கு அபிஷேகம் பண்ணக்கூட தண்ணியில்லாம போயிடும்னு சொல்றாமாதிரி. அப்புடியாச்சும் மிரட்டினாலாவது நடக்குமா:(
நல்ல கவிதை,
நல்ல செய்தி,
//சிங்களர்
சனிக் கிரகத்திலிருந்து
பூமியைப் படம்பிடிப்பர்
வெடித்த பூமியின்
நடுவில் ரோபோக்கள்
நடமிடுவர்..
மீண்டும் போர்..!//
ஆனா இதுதான் புரியலை.
தண்ணீர் பற்றிய கவிதை,
அருவியா கொட்டுது,
நல்லா இருக்கு.
//வெடித்த பூமியின்
நடுவில் ரோபோக்கள்
நடமிடுவர்..
மீண்டும் போர்..! //
அட உண்மைய சொல்லிட்டீங்க....
நானெல்லாம் தெய்வமுங்க....
:) கலகலப்பு தான்.
நீர்தான் உயிரின் ஆதாரம்... என்ன அழகா சொல்லியிருக்கீங்க..
கவித நல்லாருக்கு..
தண்ணிய மிச்சம் பண்ணனும்னா டாஸ்மாக்க எல்லாம் மூடினா போதாது?
please visit to my blog please
/////////மடிந்தது மண்புழுவல்ல
என் மாண்பு
இறுமாப்பில்
இடியை அனுப்பினேன்
தெறித்து விட்டதென்
தலையிலேயே..
இறுதித் தறுவாயில்
தெளிந்து விட்டேன் ////////
அருமையான சிந்தனை !
அழுத்தமாக சொல்லி இருக்கீங்க . அற்புதம் வாழ்த்துக்கள் .
//சிங்களர்
சனிக் கிரகத்திலிருந்து
பூமியைப் படம்பிடிப்பர்
வெடித்த பூமியின்
நடுவில் ரோபோக்கள்
நடமிடுவர்..
மீண்டும் போர்..!//
நல்ல கற்பனை பிரியா . மனித அழிவுக்கு எல்லை இல்லை என்ற கருத்தில் நான் விளங்கிக் கொண்டேன்.
.பதிவிட்டதற்கு மிக்க நன்றி.
தண்ணீர் ......என்றவுடன் எனக்கு நினைவு வந்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். கடந்த வருடத்தின் மே மாத நடுப்பகுதியில் ஒரு நாள் தொடர் குண்டு வீச்சுகளினூடு இராணுவ பிரதேசத்தை நோக்கி மக்கள் நகர்கிறார்கள் .நான்கு நாட்களாக எந்த ஒரு சாப்பாடும் இன்றி தண்ணீரும் இன்றி நந்திக்கடல் ஊடாக நகர்ந்தவர்களுக்கு தண்ணிவிடாயை அடக்க முடியவில்லை. முன்னாள் ஒருவர் திடீரென இரு கைகளால் அள்ளி அள்ளி தண்ணி குடித்ததை பார்த்து எல்லோரும் குடித்தார்கள். சிறிது அடி எடுத்து வைக்க வில்லை ஒன்று இரண்டு மூன்று ........ அடுத்து அடுத்து மிதந்து வந்து கொண்டிருந்த பிணங்களை பார்த்தவுடன் ............. தண்ணீர் பிறகு விடாய்க்கவே இல்லை.
இந்த மாதிரி நாட்கள் வரும்போது தண்ணீர் இன்றியே வாழ மனிதன் கற்றுக் கொண்டு விடுவானோ..?
அற்புதம், கவிதையில் கரைந்து போனேன். அழகு. அருமை.
நல்ல சேதி நீர் நீர்தான்
இந்த வீடியோ ரொம்ப ஷாக்கிங். ஆமாம். சைனா விழித்துக் கொண்டுவிட்டது. இங்கிருக்கும் கழிவுகள் போதாமல், அயல் நாட்டுக் கழிவுகளை காசுக்காக வாங்கி, அணுக் கழிவு உட்பட பூமியை நாசமாக்கிக் கொண்டிருக்கிறது தென் தமிழ் நாடு. :)
நீரின்றி இவ்வுலகு அமையாது...
நீர்...... நீர்....நீரே புலவர்!
நீங்க பாரதிய கூப்பிட்டா நான் எங்க தாத்தவை கூப்பிடுவேனே :))
விசும்பின் துளி வீழினல்லால் மாற்றாங்கே
பசும்புல் தலை காண்பதரிது
//Chitra said...
நீர்...... நீர்....நீரே புலவர்!//
டீச்சர் சொன்னதை மறுபடி சொல்லிகிறேன்
அருமை! ப்ரியாவின் கவிதை சரியாகப் புரியும் போது சந்தோஷமாயிருக்கு :)நீரற்ற பூமியோடு ஈழம் - நல்ல பொருத்தம் போங்க..
நான் அனுபவிச்சிருக்கேன் அந்தக் கஷ்டம்.. :(
நீர் ..சரியாய் தான் சொன்னீர்...
//மாதக் கணக்காமல் குளிக்காதிருந்து தண்ணீரை மிச்சம் பிடிப்பவர்கள் தெய்வங்களுக்குச் சமானமானவர்கள்.. நான் தெய்வமல்ல//
யய்யாடி இப்பவே கன்ன கட்டுதே.....
//எல்லா விதிகளும் நின்னால் அமைவன..
எல்லா விதிகளும் நின்னால் அழிவன.. //
touching lines.
regards
ram
www.hayyram.blogspot.com
இதுவும் காதல்தான்.. நீரின் மேல் நீர் கொண்ட காதல்..
ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி மக்கா... தனித்தனியாகப் பதிலிடாததற்கு இந்த வாட்டியும்... இன்னும் சில தடவையும் என்னை மன்னித்து விடுங்கள்...
\\archchana said...
தண்ணீர் ......என்றவுடன் எனக்கு நினைவு வந்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். கடந்த வருடத்தின் மே மாத நடுப்பகுதியில் ஒரு நாள் தொடர் குண்டு வீச்சுகளினூடு இராணுவ பிரதேசத்தை நோக்கி மக்கள் நகர்கிறார்கள் .நான்கு நாட்களாக எந்த ஒரு சாப்பாடும் இன்றி தண்ணீரும் இன்றி நந்திக்கடல் ஊடாக நகர்ந்தவர்களுக்கு தண்ணிவிடாயை அடக்க முடியவில்லை. முன்னாள் ஒருவர் திடீரென இரு கைகளால் அள்ளி அள்ளி தண்ணி குடித்ததை பார்த்து எல்லோரும் குடித்தார்கள். சிறிது அடி எடுத்து வைக்க வில்லை ஒன்று இரண்டு மூன்று ........ அடுத்து அடுத்து மிதந்து வந்து கொண்டிருந்த பிணங்களை பார்த்தவுடன் ............. தண்ணீர் பிறகு விடாய்க்கவே இல்லை\\
அர்ச்சனா!நான் உங்கள் தோளின் மேல் கை வைத்துக் கொண்டிருப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள். கண்களிற் கூடத் தண்ணீர் வற்றிவிட்டிருப்பவர்கள் நாம்.
நான் அங்க இருக்கா விடினும்.. இந்தக் கொடுமையை அப்போதும் இப்போதும் கண்முன்னாடியே அறிகிறேன்... தண்ணீருக்குத் தவமிருந்தவர்களின் மிக நீண்ட வரிசை இன்னும் நினைவிருக்கிறது... ஒரு கவிதை எழுதி இருக்கிறேன்... இது பற்றி இன்னும் எழுதணும்...
Post a Comment