header photo

Monday, May 31, 2010

நான் ரொம்ப்ப்ப்ப டீசண்டுங்க...

என் டயரி

(இன்று நான் வினவு என்ற தளத்தில் இயங்குபவர்களைக் கிழிக்கப் போகிறேன். அதில் மதிப்புக்குரியவர்களும் இருக்கலாம்... ஏக வசனத்தில் பேசப் போகிறேன்... டா போட்டுப் பேசப் போகிறேன்... ஏன்... வினவு என்ற ஒன்றை... நான் ஒரு பொருளாகவே பார்க்கிறேன்... தேவையில்லாத சொறியல்கள் வேண்டாமென்று தடுக்க அவர்களுக்கு அருகதை இல்லாத பட்சத்தில்... எனக்கு வேறு வழி இல்லை...)

முக்கிய குறிப்பு: நான் நர்சிம் பற்றியோ... முல்லை பற்றியோ... அது சம்மந்தமாகவோ... எதுவும் எழுதுவதாக இல்லை...! அதைப் பற்றி எழுதுவதில்லை என்றிருக்கிறேன்...! அவர்கள் இருவர் பற்றியும் எனக்கு எதுவும் தெரியாது...! இந்த மரண மொக்கைக்கு நர்சிம்-இன் எழுத்துகள் பல பிடித்திருக்கின்றன. முல்லையை நான் அறிந்திராததால் படித்ததில்லை. அவ்ளவுதான்..!

என்னைப் பொறுத்த வரைக்கும் ப்ளாக் என்பதை என்னுடைய பப்ளிக் டயரி என்றுதான் புரிந்து வைத்திருக்கிறேன். நான் எழுதுபவை மொக்கையோ, மரண மொக்கையோ, ஒன்றுமே இல்லையோ அதைப் படிப்பதும், படிக்காமலிருப்பதும் அவரவர் சொந்த விருப்பு, வெறுப்பின் பேரிலேயே இருக்கிறது. விமர்சனமும் அவ்வகையே. என்னுடைய டயரியில் எத்தகைய விமர்சனங்களை அனுமதிப்பது என்பது என்னுடைய முடிவாக இருக்கிறது.

நாளாந்தம் நான் பார்க்கும் விடயங்களில் எனக்குப் பிடித்தவை, பிடிக்காதவை பற்றி எனக்குத் தெரிந்த மொழியில்... அல்லது பிடித்த மொழியில் எழுதி வைப்பதும்.. விமர்சிப்பதும் என்னுடைய சுதந்திரம்.

எல்லாவற்றையும் இழுத்துப் போட்டு, எந்த வித ஆதாரமும் இல்லாது ஒரு விடயத்தை விமர்சிப்பதோ, தனி மனிதனைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்திக் குதறுவதோ என்னால் முடியாது. அது என் கடமையென்று யாராவது சொல்வார்களானால், மன்னிக்கவும் நான் பத்திரிகை கூட நடத்தவில்லை. (நான் பிறந்த என் ஈழ மண்ணில், கவனிக்க, என் மண்ணில் லட்சம் லட்சமாகக் கொள்ளிக்குக் கொடுத்தபோது பத்திரிகைகள் கூட ஒன்றும் புடுங்கவில்லை)

சென்ற வருடக் கடைசியில் என்னுடைய பெயர் குறிப்பிட்டு எழுதிய வினவு என்ற தளம் எனக்கு அறிமுகமானது. சென்று பார்த்தேன். "இந்துப் பெண்" கலகலப்ரியாவிற்கு.. என்று இருந்தது பார்த்துவிட்டுத் திரும்பி விட்டேன். என்னுடைய அந்தக் கவிதை என்னுடன் மிக நெருங்கிய நட்புடன் பழகும் பர்தா அணியாத முஸ்லிம் தோழிகளுக்காக என்று சொன்னால் புரிந்து கொள்ளும் பக்குவத்தில் இருக்கிறார்களா வினவு மற்றும் அதன் ஆதரவாளர்கள்... ஹும்..

என்னுடைய ஒரு வருட நடவடிக்கையில், எத்தனை எத்தனை இஸ்லாம் நிகழ்வுகளுக்குச் சென்றிருக்கிறேன், விவாதித்திருக்கிறேன், கலந்துரையாடி இருக்கிறேன், சேர்ந்து பேசி உண்டு மகிழ்ந்திருக்கிறேன் என்று சொன்னால் புரியுமா? என்னுடைய பணி, நாற்காலியைத் தேய்த்துக் கொண்டு எதையாவது எழுதிக் கொண்டே இருப்பதில்லை என்பது புரியுமா? அதை விடுத்து தினம் தினம், பல பல விதமான மக்களுடன், அவர்களின் பிரச்சனைகளில் பங்கேற்றுக் கொண்டிருக்கிறேன் என்றால் புரியுமா...? புத்தகத்தில் அரையும் குறையுமாக எதையாவது படித்து விட்டு, அதைக் கொள்கையாகப் பிடித்து வைத்துக் கொண்டு நடைமுறையில் நத்தைகள் மாதிரி இருப்பவர்களுக்கு இது புரியுமா. வெத்து வேட்டுக் கூட்டத்திற்கு என்னிடம் கேள்வி கேட்கும் அருகதை எங்கிருந்து வந்தது?

என்னை ஒழுங்காக இருக்கச் சொல்லும்போதே தெரியவில்லையா... நீங்கள் பெண்களுக்குக் கொடுக்கும் மரியாதை. தனி மனிதத் தாக்குதல் பற்றி எழுதும் நீங்கள் எழுதித் தாக்காத தனி மனிதர்கள் யாராவது இருக்கிறார்களா? தனி மனிதத் தாக்குதல் பற்றி எழுதுவதற்கு கூச்ச நாச்சமில்லையா. நீங்கள் ஆண், பெண் வித்தியாசமின்றி "GANG RAPE" செய்வதுதான் மிக உத்தமமான காரியமா.

இன்று நர்சிம் இடுகைக்கு, இந்த மரண மொக்கைக்காரி கண்டனம் தெரிவிக்கவில்லை என்று கன அக்கறையுடன் கேள்வி எழுப்பும் வினவு (ஏன் ஐயா உங்கள் புனிதப் பத்திரிகையில் எல்லாம் எங்களைப் போன்றவர்கள் பெயர் எல்லாம்... பத்திரிகை நாறி விடாதா...), என்னுடைய பெயர் போட்டு வாய் புளித்ததா, மாங்காய் புளித்ததா என்று எழுதியபோது, நான் வாய் பொத்தி மெளனமாக இருந்தபோது கேட்கத் தெரியவில்லையா இந்தக் கேள்வியை. எதிர்த்து ஒரு வார்த்தை கூடப் பேசத் தெரியாத இந்தப் பூச்சியைப் பார்த்து (சாக்கடைப் புழுக்களைப் பார்த்து நகர்ந்து விடுகிறேன் என்று நான் காரணம் சொன்னாலும்) சொல்கிறது ஒரு முகமூடி புரர்ர்ச்சி தலைவியாம். இன்னொன்று சொல்கிறது நான் ஒழுங்கா இருக்கணுமாம். இதை என்னோட பாட்டனே என் கிட்ட சொன்னதில்லைடா புறம்போக்கு.

வினவுக் குழு மற்றவர்கள் பற்றித் தெரியாது, கண்ட மேனிக்கு எழுதித் தள்ளுவது போன்று, வினவு என்ற போர்வையில் ஒளிந்திருக்கும், அசிங்க முகங்கள் பற்றியும் எழுத முடியும்.

எப்டி..?

அவன் இந்து. அவன் முஸ்லிம். அவன் கிறிஸ்தவன். அவன் பொறுக்கி. அவன் புறம்போக்கு. அவன் மொள்ளமாரி. அவன் பேமானி. அவன் பள்ளிக் கூடமே போனதில்லையாம். அவன் மூணு வயசானப்பவே பக்கத்து வீட்டு பொம்பளைய கக்கூஸில எட்டிப் பார்த்த பயல். அந்தப் புத்திதான் இந்த அளவுக்கு மத்தவங்க தனி வாழ்க்கை பற்றிக் கேட்டுக் கேட்டு எழுதச் சொல்கிறது. அவன் ஒழுங்கா இருந்தா எதுக்கு முகம் மூடி போட்டுக்கிட்டு எழுதுறான். அசிங்கம் புடிச்சவைங்க. கூடிக் கூத்தடிச்சு, பார்-ல படுத்துக்கிட்டே பதிவு எழுதுவாங்களாம்ல. யாராவது இவனுங்களுக்கு எதிரா எழுதினா ஆட்டோ அனுப்புவாங்களாமில்ல. அட இவ்ளோ ஏனப்பா, இவனுங்களுக்குன்னே ஒரு ரவுடி கும்பலே வச்சிருக்கிறானுன்களாமில்ல.

இப்டி... எல்லாம்... என்னாலயும் சொல்ல முடியும். ஏன்னா.. என்னோட பேரு வினவு பக்கத்தில வந்ததுமே, அடிச்சு புடிச்சு எனக்கு ஆறுதல் சொல்ற அப்பாவிங்க சொல்றதெல்லாம், "அந்த நாயிங்க ரொம்ப மோசமானவங்க, ச்சீ... அவன் அம்மா, அக்கா, பொண்டாட்டியை எல்லாம் வீட்டில வச்சு பூட்டிட்டு வந்து வாயால மட்டும் கிழிச்சுக்கிட்டிருக்காங்க, அவங்களுக்கு பதில் போடாத, போட்டா உன்னை எவ்ளோ கேவலமா சொல்ல முடியுமோ அவ்ளோ கேவலமா சொல்லுவாங்க. இதை வச்சே வருஷக் கணக்கில, ஆயுள் கணக்கில இடுகை போட்டு, எல்லா இடுகைளையும் உன்னோட பேர இழுத்து ஏதோ ஒரு முட்டையில மயிர் புடுங்குவாங்க"

இதுக்கெல்லாம் பயந்துக்கிட்டு, இவனுங்க என்னோட பெயரை இழுத்து கன்னா பின்னான்னு எல்லா இடத்திலயும் போஸ்டர் அடிச்சு ஓட்டுவாங்க. எல்லாம் பார்த்துக்கிட்டு நான் பொத்திக்கிட்டு இருக்கணும். ஏன்னா நான் ஒரு பெண். மொக்கை மட்டுமே எழுதத் தெரிஞ்ச புறம்போக்கு.

இப்போ என்னைப் provoke பண்ணி என்ன சாதிக்கப் போறாங்க. என்னையும் பதிவுலகத்தை விட்டு தொரத்தலாம். ஒரு நூறு நூற்றைம்பது மைனஸ் ஓட்டு குத்தலாம். இருநூற்றியம்பது எதிர்ப்பதிவு வரலாம்.

ஒன்னு இவங்க வீட்டுக்குப் பின்னாடி இருக்கிற புறம்போக்கு நிலத்தில்தான் நான் இந்த ப்ளாக் எழுதிட்டு இருக்கேன்.

ரெண்டு... எனக்கு இந்த பதிவுலகம்தான் சோறு போடுது. மத்தவங்கள வம்புக்கு இழுத்துதான் நான் சாப்டுக்கிட்டிருக்கேன்.

__________________________________________________________________________________________

ஜாதி, மதம், புண்ணாக்கு, புளியங்கொட்டை இந்த வட்டத்துக்குள்ளேயே செக்கு மாடுங்க மாதிரி உழண்டு கொண்டிருக்கிறவங்க கேட்டுக்குங்க... உங்க மசிர் வட்டத்தை எல்லாம் நான் தாண்டி பல வருஷமாச்சு...

கவுண்டமணி அங்கிள்.. ஆப்பிரிக்கா தலையான்னு செந்தில திட்டினா பார்த்து சிரிக்கிறவங்க எழுதுறதுக்கெல்லாம் நான் என்ன புடுங்க முடியும்.

என்னோட மகளோ, மகனோ... நாளைக்கு... இங்கிருக்கும்... ஏதோ ஒரு மதம் சார்ந்த வெள்ளைக் காரனையோ... இங்கு எங்களைப் போல பிழைப்புகென்று வந்த ஆப்பிரிக்காவின் கறுப்பினத்தவனையோ... அல்லது என்னினம் என்று சொல்லிக்கொள்ளும் எவனையோ... திருமணம் செய்து கொள்வதானாலும்.... திருமணம் செய்து கொள்ளாது... துணையாகச் சேர்ந்து வாழ்வதாயிருந்தாலும்... நாலு தடவை விவாகரத்து செய்து மறுமணம் முடித்தாலும்... தனியாக இருந்தாலும்.. ஹோமோவானாலும்.. லெஸ்பியன் ஆனாலும்.. எனக்கு எந்தக் கவலையுமில்லை. அவர்களின் வாழ்க்கை, அவர்களின் சுதந்திரம்... அதையெல்லாம் விட... எனக்கு நான் எட்டித் துப்பும் வட்டத்திலிருப்பதல்ல என் வாழ்க்கை... உலகளாவியது... எல்லாரும் ஒண்ணுதான்... நம்பறதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குமே... வெத்து வேட்டுன்னு தோணுமே... ஏன் தெரியுமா... உங்களால அவ்ளோதான்யா சிந்திக்க முடியும்... மேல முடியாது...

இந்த மசித்துக்கு மேலயும்... என்னை இந்து... மசிரு என்ற ஒரு வரையறைக்குள் வைத்து என்ன புடுங்க முடியுமோ புடுங்குங்க...

அப்புறம்... எனக்கு பட்டமெல்லாம் கொடுத்தாங்க... எனக்கு நானே பட்டம் கொடுக்கிறேன்னு சொன்னாங்க... ஒரு விஷயம்... செக்ஸ் தொழிலாளர்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது... அவர்கள் பிழைப்புக்காகச் செய்கிறார்கள்... மிகவும் கவுரவமானவர்கள்.... அவர்கள் கூடப் படுத்தவர்களை... வினவு மாதிரி வீதி வீதியாகக் கூவிச் சொல்லும் நாகரிகம் கற்றிராதவர்கள்... அவர்களை நான் மிக மிக மதிக்கிறேன்...

ஸோ... பட்டம் கொடுக்க வேண்டியவர்கள்... எனக்கு தாராளமா கொடுத்துக்கலாம்... உங்க பட்டத்தையெல்லாம் வச்சுதான்... நான் மேல என்னோட எதிர்காலத்துக்கு என்ன செய்வது என்று தீர்மானிக்கணும்...

கொடுத்துக்குங்கடா... எனக்கும் நிறைய மொழில... விதம் விதமா எப்டி திட்டுறது... என்ன என்ன கெட்ட வார்த்தை இருக்கோ... எல்லாம் தெரியும்... என்ன்ன்ன வேணா சொல்லி திட்டிக்குங்கடா... இப்டி பொம்பளைங்களயும், மத்தவங்களையும் ப்ளாக் மெயில் பண்ணி எத்தன நாளைக்குடா குப்பை கொட்டுவீங்க... நான் குப்பம்ன்னா குப்பம்.... சிட்டின்னா சிட்டி..... மசிரே போச்சு... அவ்ளோ உசிரே போச்சு... என்னோடது ஒரே ஒரு நாத்தம்புடிச்ச உசிர்தாண்டா...

_____________________________________________________________________________________________

Monday, May 10, 2010

ஆசாமி(யாரிணி)யும்.. சாமி(யாரிணி)யும்.. நானாகிய கடவுளும்..



தேவாரத்தில் ஆரம்பித்து, "உலகெலாமுணர்ந்து ஓதுதற்கரியவன், நிலவுலாவிய நீர்மலி வேணியன், அ'ழ'கில் சோதியன் அம்பலத்தாடுவான், மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.. "
வான்முகில்... கோன்முறை.. நான்மறை.. மேன்மைகொள் "சைவநீதி" விளங்குக வுலகமெல்லாம்...... 'திருச்சிற்றம்பலமி'ல் முடித்துக் கண்ணைத் திறக்கும் தாத்தாவிடம்.. "தாத்தா அது "அ'ல'கில் சோதியன்"..  டீச்சர் சொல்லிக் கொடுத்தாங்க" எல்லாம் தெரிந்த தோரணையில் சொல்லிக் கொண்டிருக்கும்போது எனக்கு வயது ஏழோ, எட்டோ இருந்திருக்கலாம்... 

"அலகில் சோதியன் என்றுதான் புத்தகத்தில் போட்டிருக்கிறார்கள்... ஆனால் அழகில் சோதி வடிவானவன் என்று நான் விளங்கிக் கொண்டு இப்படிப் பாடிக் கொண்டிருக்கிறேன்.." என்ற தாத்தாவின் பொறுமையான விளக்கத்திற்கு.. 

"இல்லை அலகுதான்.. அவனை அளக்கும் அலகு சோதியாம்.." டீச்சர் சொல்லிக் கொடுத்தாங்க... 

டீச்சர் யார், என்ன அனுபவம் எதுவும் கேட்டுக் கொண்டிருக்கவில்லை... அடுத்த நாள் காலையில்... "அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்" என்று மறக்காமல் பாடிக் கொண்டிருந்தார்கள்... 

யார் சொல்லிக் கொடுத்ததையோ அப்படியே பின்பற்றிப் பாடிக் கொண்டிருப்பது எளிதாக இருக்கிறதோ..? 

உலகத்தின் கருத்தா யார்? சிவபெருமான். 

சிவபெருமான் எப்படிப்பட்டவர்? என்றும் உள்ளவர்; எங்கும் நிறைந்தவர்; எல்லாம் அறிபவர்; எல்லாம் வல்லவர்.

சிவபெருமான் ஆன்மாக்களுக்குச் செய்யும் தொழில்கள் யாவை? படைத்தல்,  காத்தல், அழித்தல் மூன்றுமாம். 

யாழ்ப்பாணத்தில் பிறந்த ஆறுமுக நாவலர் அருளிய சைவ வினாவிடையை  பாட்டி சத்தமாகப் படித்துக் கொண்டிருப்பதைக் கேட்டே எனக்கு மனப் பாடமாகி விட்டிருந்தது. பதிலுக்கு கேள்வியையும், கேள்விக்குப் பதிலையும் வினாடி வினா நேரத்திற்கும் குறைவான நேரத்தில் புரட்டிப் புரட்டிச் சொல்லக் கற்று வைத்திருந்தேன். 

பத்தாம் ஆண்டின் இறுதிப் பரீட்சைக்கு ஒரு தாத்தாவின் சிபார்சின் பேரில் இன்னொரு தாத்தா இராமாயணம் முதல் திருவாசகம் வரை வீட்டில் உட்கார்ந்து சொல்லிக் கொண்டிருந்தார்கள். பரீட்சைக்கு முதல் நாள் என்ன தோன்றிற்றோ பிரசங்கக் கூட்டங்களிலும், உலக இந்து மாநாட்டிலும் மிளிர்ந்து கொண்டிருந்த தாத்தா சைவ சித்தாந்தம் பற்றி எதையோ சொல்லிக் கொண்டிருந்துவிட்டு.. "இதெல்லாம் ஒன்றுமில்லையென்று அப்புறம் கற்றுக் கொள்வாய்"... என்ற பொழுது... கடவுள் இல்லையென்றா... சமயம் இல்லையென்றா.. என்று குழப்பம் ஒரு புறம்.. விஞ்ஞானம் கற்றுக்கொள்ளப் போகிறோம்... இந்து நாகரிகம், சைவ சமயம் எல்லாம் படிக்கச் சந்தர்ப்பம் இராதே... இதை எவ்வாறு தெரிந்து கொள்வதென்ற கவலை மறு பக்கமாக அல்லாட்டம் ஆரம்பித்து விட்டிருந்தது. 

வருஷம் முன்னூற்றி அறுபத்தைந்தே கால் நாட்களும் ஏதோ ஒரு விரதத்தைக் கண்டு பிடித்துப் பிடித்துக் கொண்டிருந்த பாட்டியையும் அம்மாவையும் பின்பற்றி நவராத்திரி விரதம் இருந்து பார்த்தேன். சரஸ்வதி சலுகை கிடைக்கலாமென்ற உள்நோக்கம் அம்மாவும் அறிந்ததே. கோயிலுக்குக் கட்டும் மாலையிலும் அதே லஞ்சம் வழங்கும் உள்நோக்கம் இருந்தது. 

ஆதி காலத்தில் மக்கள் இயற்கையை வழிபட்டனர். உருவ வழிபாடு அதன் பிற்பாடே தோன்றியது.. இருப்பினும் முருகக் கடவுளைப் பிடித்திருக்கிறது. பார்க்கும் பொழுதே ஏதோ ஒரு அமைதி வந்து உட்கார்ந்து கொள்கிறது. மற்றைய கடவுள்களைப் பிடிக்கவில்லையென்று சொல்ல இன்னும் கற்கவில்லை. பூஜை செய்யா விட்டாலும் பூஜை அறையில் ராமரும், ஹனுமரும், சிவனும், சரஸ்வதியும் இன்ன பிற கடவுள்களும் ப்ரேமில் இருக்கிறார்கள். சிட்னி ஷெல்டன் புத்தகத்தின் பக்கத்தில் குழந்தைக் கண்ணன் சிலையும்... பாலகுமாரன் புத்தகத்தின் பக்கத்தில் ஏசுநாதர் சிலையும்... இடையில் எங்கோ கால் நீட்டிச் சயனித்திருக்கும் புத்தரும் இருக்கிறார்கள். 

நிற்க... 

சென்ற வருடம் கோயிலுக்குப் போயிருக்கிறேன்... பிறந்தநாள் தொட்டு இது வரைக்கும் ஏதோ ஒன்றின் நிமித்தம் கோயிலுக்கு அவ்வப்போது போய் வந்து கொண்டுதான் இருக்கிறேன்... 

ஆனால்... கோயிலுக்குச் செல்லும் நேரங்களிலெல்லாம் என்னை அல்லது கடவுளை எங்கேயோ தொலைத்துவிட்டே சென்றிருப்பதாகத் தோன்றுகிறது... 

கை கூப்பி நிற்கும்போதும்... கற்பூர தீபம் கண்களில் ஒற்றும்போதும்... சிவசிவ என்று சொல்லி நிமிர்ந்து திருநீறு அணியும்போதும்... யாரோ எப்பவோ சொல்லிக் கொடுத்ததைப் பிசகாமல் பின்பற்றிக் கொண்டிருக்கிறேன்... போலியாக.. எதற்கென்றே தெரியாது... சில நேரம் கேள்விகளுடனேயே நவக்கிரகத்தைச் சுற்றி வந்து கொண்டிருக்கிறேன்... 

எங்கேயோ வழி தொலைந்து நிற்கும் பொழுது பக்கத்தில் நிறுத்தப்படும் வண்டியிலிருந்து எட்டிப் பார்க்கும் எங்கோ பார்த்த முகமும்... கீரைக் கடையில் வாங்கிய கீரைக்குப் பணம் கொடுக்க நினைக்கையில் பணத்தை மறந்து வந்து விட்டது நினைவு வந்து நிமிரும்போது சிரித்தபடி எதிரிலிருக்கும் பக்கத்து வீட்டுப் பாட்டியும்.. வாழ்க்கையில் இனி என்ன என்று விழிக்கும் பொழுது கை பிடித்து அழைத்துச் செல்லும் எதுவோ ஒன்றில்... பிடித்த முருகக் கடவுளின் பெயர் சொல்லிக் கண் மூடி என் உள்ளேயே பார்த்துக் கொள்கிறேன்... 

உடலிலிருந்து ஆத்மா விலகிச் செல்கையில்... எங்கோ முருகன் வேலும்... மயிலும் வைத்துக் கொண்டு காத்துக் கொண்டிருக்கலாம் என்ற கற்பனை எனக்கில்லை... 

மதங்களுக்கும் கடவுளுக்கும் சம்மந்தமில்லை... சமயங்களுக்கும் கடவுளுக்கும் சம்மந்தமில்லை... பூசாரிக்கும் கடவுளுக்கும் சம்மந்தமில்லை... ஏசுவுக்கும்... புத்தருக்கும்... முருக.. வள்ளி.. தேவயானை சமேதருக்கும்... இன்ன பிறருக்கும்... கடவுளுக்கும் கூடச் சம்மந்தமில்லை... 

கடவுள் எங்கே... காண்பி... நம்புகிறேன்... இதெல்லாம் மேதாவிகள் எழுப்பும் கேள்விகள்.. 

காற்றைக் காண்பிக்க முடியுமா... மூச்சைக் காண்பிக்க முடியுமா இதயாதிகள்... அதி மேதாவிகள் அளிக்கும் பதில்கள்... 

என்னைப் பொறுத்த வரைக்கும் சாத்தானும் உண்டு... சாமியும் உண்டு... ஆசாமியும் உண்டு...! எனக்குள்ளேயே...! தலையில் இரு கொம்பு மற்றும் உதடு தாண்டிய  கோரப்பல் முளைக்கும் சந்தர்ப்பங்களும்... முதுகில் சிறகு முளைக்கும் சந்தர்ப்பங்களும்... நிறையவே உண்டு... அதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளும் சந்தர்ப்பங்களும்... தெரியாத சந்தர்ப்பங்களும் உண்டு... 

முருகன் எனக்குப் பிடிக்கும்... முருகு என்றால் அழகு.. ஒரு மனிதனோ... விலங்கோ.. தாவரமோ... ஜடப் பொருளோ.. மற்றவர்களுக்கு அவரவர் பார்வைக்கேற்ப அழகாகவும்.. அசிங்கமாகவும் தோன்றுவது போன்று.. என்னுடைய பார்வையில் நான் அழகாகத் தெரியும் சந்தர்ப்பங்களும் உண்டு.. (நம்புங்க..)..  அப்போ.. நான் முருகு... அஹம் ப்ரம்மாஸ்மி..! 

(இங்க கடவுள் பத்தித்தான் பேச்சு... இதில நீயே பிசாசு.. நீயே பேய்ன்னு உங்க பாட்டுக்கு அடுக்கிட்டே போனா எப்பூடி...)

தொடர் இடுகைக்கு அழைத்த முகிலனுக்கு நன்றி... யாருக்காவது இது பத்தி எழுதணும்னு தோணினா எழுதுங்கம்மா...ய்யா... 

Monday, May 3, 2010

சித்திராப் பௌர்ணமியின் தொடரலைகள்...

சற்றுமுன் கடந்தவை.. 


பிடரி முடியின் பக்கம் சிலிர்த்து, மூக்கு முடியின் பக்கம் கண்ணை மூடிக்கொள்ளும் சாதுப் பூனையின் பாற் கூஜாக்கள் கண்ணைத் திறந்தபடியே உறங்கிக் கொண்டிருக்கின்றன. 

குரங்கின் ஈரல் தேடும் முதலைகளின் உடலரைந்த தடங்கள் கண்டு கிளைகள் கொண்டிருந்த பனைமரமொன்றில் 'தாவி' மெளனமாக அமர்ந்து கொண்டேன். பக்கத்துக் கிளை ஓலையிலிருந்து கிசுகிசுப்பாய் ஒரு குரல் ஒலித்தது "சலிப்பாயிருக்கிறது பேன் பார்க்க முடியுமா?" 

கேத்திர சூத்திரத்தை மீறாத நீண்ட நேர்கோட்டின் குறுக்கால் கோணலாகக் கோடிழுத்து மேல் நுனியில் கிடைகோட்டின் ஜாதி மட்டம் இருப்பதாக புதிய தேற்றம் வாசிக்கப்பட்டது. கோட்டின் பாதியை அழி ரப்பர் கொண்டு தேய்த்து நிலைக்கோட்டை நீளமாக்கும் முயற்சியின் பின்நவீனத்துவ நிலையா இது? மட்டம் தவிர்த்து.. கோடுகள் சந்திக்கும் மையப் புள்ளியைச் சுற்றிய பாகை முன்னூற்றி அறுபதென்றேன். குறுக்கிட்ட கோட்டினால் உண்டான பாகைகள் விகிதத்தில் பாரிய வேறுபாடு சுட்டிக் காட்டப்பட்டது. இங்கு கோணற் கோட்டின் அவசியம் என்னவென்றேன். மையப்புள்ளி திடீரெனத் தொலைந்து விட்டிருந்தது. ஆங்காங்கு நாலு நுனிகள் வரையறுக்க முடியாத திசைகளில் தொங்கிக் கொண்டிருந்தன. கேத்திர சூத்திரத்துடன், கோத்திரமும் செத்துவிட்டிருந்தது. 

பித்தளைத் தாம்பாளமொன்றில் அரிசி பரப்பி எதிரிலிருந்த எஸ்கிமோவின் கைவிரல் பிடித்து 'அ'-விற்கான சுழி வரைந்தேன். கையுதறி விடுவித்து மேலும் இரு சுழி வரைந்து ஆயுத எழுத்து போலாக்கி பக்கத்தில் மீன்கண் வடிவில் இரு சுற்று சுற்றி ஒரு முற்றுப்புள்ளி வைத்தது. அதற்குத் "தெரிந்ததை" செவ்வனே செய்ததென்ற திருப்தியுடன் அதன் பனிக் கூடாரத்தின் மேல் வைத்திருந்த என் கோமாளி முகமூடியை அணிந்துகொண்டு திரும்பி விட்டேன். 

(என்ன இதெல்லாம்னு கேட்பவர்கள் தலைப்பை இன்னொரு தடவை படிக்கவும்..)
____________________________________________________________________________