header photo

Tuesday, September 14, 2010

துருப்பிடிக்காமலிருக்க..

இரும்பிலிருந்து தோன்றும் துருவே
இரும்பிற்குச் சமாதியெழுப்பும் 

சாக்கிய முனி செத்துச் சில நூறு திவசத்துக்கப்பால் 
செரண்டிப்பில் தேரவாத பௌத்தத்தைப் போதிக்கிறார்..

குறுமுனி தாண்டவக்கோனின் திருமணத்தன்று
தென்திசை சென்றபோது சாக்கியமுனி பிறந்திருக்கவில்லை

எதிரிக்கு எதிரி என்ற நியாயப்படி பார்த்தால்.. 
இராவணனைத் தோற்கடித்து வெற்றி வாகை சூடிய 
அகஸ்தியருக்கு தேரவாதிகள் சிலையெழுப்பியிருக்க வேண்டும்.. 

சாக்கியமுனி சிலை வடிவிலாவது
குறுமுனியைச் சந்தித்து வருந்தியிருப்பாரா என்றால்..  
அடையாளமற்றுத் துடைக்கப்பட்டிருக்கும் 
அகஸ்திய ஸ்தாபனம் அமைதி காக்கிறது...!

_________________________

Saturday, September 11, 2010

நீ பட்ட பாட்டினையறிகுவேன்..

இன்று கோபுரங்கள் சாய்க்கப்படும் நாளென்று விதிக்கப்பட்ட நாளோ?!  

சிகரம் பாரதியை நினைவு கூரும் முகமாக.....!!!! love mah bharathi... love sowmya..!!!
_________________________________________
காலா உன்னை நான் சிறு புல்லென மதிக்கிறேன்-என்றன்
காலருகே வாடா சற்றே உனை மிதிக்கிறேன்-அட (காலா)
வேலாயுத விருதினை மனதிற் பதிக்கிறேன்-நல்ல
வேதாந்த முரைத்த ஞானியர் தமை எண்ணித் துதிக்கிறேன்-ஆதி

மூலா வென்று கதறிய யானையயைக் காக்கவே-நின்தன்
முதலைக்கு நேர்ந்ததை மறந்தாயோ,கெட்ட மூடனே? அட-(காலா)

ஆலால முண்டவன் அடி சரணென்ற மார்க்கண்டன்-தன
தாவி கவரப்போய் நீ பட்ட பாட்டினை யறிகுவேன்-இங்கு

நாலாயிரம் காதம் விட்டகல உன்னை விதிக்கிறேன்-ஹரி
நாராயண னாகநின் முன்னே உதிக்கிறேன்-அட (காலா)
__________________________________

பாட்டைக் கேட்டுத் தாளம் போடுவதற்கு இங்கே சொடுக்கவும்... 

_________________________________________

Monday, September 6, 2010

ம்ம்ம்...



ஆயிரம் தடவை கேட்டாலும் அலுக்காதது...

Sunday, September 5, 2010

மனிதம் என்று சொல்லிக் கொள்பவையும்... மாற்றுக் கலாச்சாரங்களைப் புரிந்து கொள்ளும் லட்சணமும்...

லெட்சணம் நம்.1

தேவையோ, தேவையில்லையோ பெரும்பாலானவர்கள் இன்று குர்ரான் படித்துக் கொண்டிருக்கிறார்கள். சுவிற்சர்லாந்தில் ஓரிரு மாநிலங்களில் இஸ்லாமிய மதத்தைச் சார்ந்த குழந்தைகள் முக்காடிட்டு பள்ளிக்குச் செல்வது சமீபத்தில் தடை செய்யப்பட்டது. அதை மீறி முக்காடிட்டுச் செல்லும் குழந்தைகளின் பெற்றோர்களுடன் மணிக்கணக்கில் வாதாடிக் கொண்டிருக்கிறார்கள் ஆசிரியப் பெருமக்கள். 

ஒரு பாடசாலையில் ஒரு அம்மணி மிக மிகப் புத்திசாலித்தனமான ஒரு நிபந்தனையை முன் மொழிந்திருக்கிறார். அதாவது, முக்காடிட்டுப் பாடசாலைக்கு வரும் குழந்தை, இஸ்லாம் மதத்தில் கூறப்பட்டுள்ளது போல் ஐந்து தடவை தொழுகை செய்ய வேண்டும், வகுப்பு நேரத்திலும். அதற்கான அறை வசதி ஏற்பாடு செய்து கொடுக்கப்படும். 

பலே! பிரமாதமான விடயம் என்பது போல் சிலர் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் எனக்குப் புரியவில்லை!!! 

அதை எப்படி நீங்கள் கட்டாயப்படுத்த முடியுமென்று நான் கேட்டால், “இது கட்டாயப்படுத்தல் அல்ல, அவர்கள் விரும்பாததைச் செய்யச் சொல்லவில்லை, அவர்கள் விரும்புவதைச் செய்யச் சொல்கிறோம்” என்கிறார் ஒருவர் மிக மிகப் புத்திசாலித்தனமாக. எதேச்சையாகப் பார்த்தால் அவர் கையில் ஒரு குர்ரான் இருந்தது.  

கழுத்தில் சிலுவை சுமந்திருக்கும் எல்லாரும் ஞாயிறு தோறும் தேவாலயம் செல்ல வேண்டும். முட்டுக்காலில் உட்கார்ந்து சிலுவையிட்டுத் தொழுகை செய்தல் வேண்டுமென்றால், அதுவும் கட்டாயப்படுத்தல் இல்லையா?!

நான் வருடத்தில் ஓரிரு முறை, (முழுநிலவுக் காலங்களில் மட்டுமாக இருக்கலாம்) காதணி அணிந்து கொள்கிறேன். தலைமுடியை விரித்தே விட்டிருக்கிறேன். ஆனால் பொட்டு மட்டும் அணிந்திருப்பேன். ஏதோ ஒரு அடையாளத்தைப் பற்றிக்கொள்ளும் நோக்கமோ... ஆரம்பத்திலிருந்தே... பொட்டில்லாது என்னை நானே அடையாளம் கண்டுபிடிக்க முடியாதிருப்பதோ காரணமாக இருக்கலாம். சில காலங்களில் நேரமின்மை காரணமாகவோ என்னவோ பொட்டின் தேவை இல்லாது போகலாம். ஆனால் யாராவது என்னிடம் வந்து, பொட்டணிந்து கொள்வதானால், அலுவலகத்திற்கு ஜீன்ஸ் தவிர்த்துப் புடவையில் வர வேண்டும், காதணி வேண்டும், குண்டலம் வேண்டும், மூக்குத்தியும், காது மாட்டியும் வேண்டும், இந்துமதச் சடங்குகள் எல்லாம் பின்பற்ற வேண்டுமென்றால், சின்னாபின்னமாகக் கடித்துக் குதறிவிடும் அபாயம் இருக்கிறது. 

அணுகுமுறை... அணுகுமுறை என்று ஒரு இளவு இருக்கிறதென்கிறார்கள்.... ”இளவு” என்ற சொல்லைப் பயன்படுத்தாதே என்று அம்மா சொல்லிக் கொடுத்தார்கள். ஆனாலும் என் வசதிக்குச் சொல்லிக்கொள்ள வேற வார்த்தை கிடைக்கவில்லை. என்ன இளவு இது...?!

___________________________________________________________________________

லெட். நம்.2

எரிட்ரியாவிலிருந்து வந்த மூன்று குழந்தைகள் அடங்கிய குடும்பமொன்றிற்கு வசதியான ஒரு நகரசபை வழங்கிய வீட்டில் இரண்டு அறைகள். அதில் ஒரு அறையை எத்தியோப்பியர் ஒருவருக்குக் கொடுத்திருந்தார்கள். அவர் சென்றதும் அந்த அறையை ஆறு மாத காலமாகப் பூட்டி வைத்திருக்கிறார்கள். வைக்கோற் போர் நாய்கள் எங்கெல்லாம் இருக்கின்றன. இதற்கும் போய் என்ன இளவு இது என்று கேட்டால் ”ஆப்பிரிக்காவில் அடுக்கடுக்காய்ப் படுத்திருப்பது வழக்கம்தானே என்கிறார்கள்” அடடா... மாற்றுக் கலாச்சாரம் பற்றிய புரிந்துணர்வை மெச்சாதிருக்க முடியவில்லை... 

___________________________________________________________________________

லெட். நம். 3

ஒரு சூடான் நாட்டவர் வீட்டில் கரப்பான் பூச்சி நடமாட்டம் அதிகமா இருக்கிறதென்று, வீட்டுக்குச் சொந்தக்காரரிடம் கூறினால், ஆப்பிரிக்காவில் கரப்பான்பூச்சியுடன் வாழ்ந்த உங்களுக்கு இதிலென்ன கஷ்டம்?! என்று திருவாய் மலர்ந்தருளி இருக்கிறார்கள்.

___________________________________________________________________________

அறப்படிச்சு கூழ்ப்பானைக்குள்ள விழுறது இந்த இளவுதானோ.... 

எனக்குக் கொஞ்சக் காலமாக இந்தியன் படத்தில் வந்த கமல்த்தாத்தா போன்று தசைகள் இறுக்கிச், சரக் சரக் என்று கொலை செய்யும் வெறி அதிகரித்து வருகிறது. 

__________________________________________________________________________