header photo

Saturday, September 11, 2010

நீ பட்ட பாட்டினையறிகுவேன்..

இன்று கோபுரங்கள் சாய்க்கப்படும் நாளென்று விதிக்கப்பட்ட நாளோ?!  

சிகரம் பாரதியை நினைவு கூரும் முகமாக.....!!!! love mah bharathi... love sowmya..!!!
_________________________________________
காலா உன்னை நான் சிறு புல்லென மதிக்கிறேன்-என்றன்
காலருகே வாடா சற்றே உனை மிதிக்கிறேன்-அட (காலா)
வேலாயுத விருதினை மனதிற் பதிக்கிறேன்-நல்ல
வேதாந்த முரைத்த ஞானியர் தமை எண்ணித் துதிக்கிறேன்-ஆதி

மூலா வென்று கதறிய யானையயைக் காக்கவே-நின்தன்
முதலைக்கு நேர்ந்ததை மறந்தாயோ,கெட்ட மூடனே? அட-(காலா)

ஆலால முண்டவன் அடி சரணென்ற மார்க்கண்டன்-தன
தாவி கவரப்போய் நீ பட்ட பாட்டினை யறிகுவேன்-இங்கு

நாலாயிரம் காதம் விட்டகல உன்னை விதிக்கிறேன்-ஹரி
நாராயண னாகநின் முன்னே உதிக்கிறேன்-அட (காலா)
__________________________________

பாட்டைக் கேட்டுத் தாளம் போடுவதற்கு இங்கே சொடுக்கவும்... 

_________________________________________

12 ஊக்கம்::

vasu balaji said...

ஆஹா! அருமையான நினைவுக்கு. பாரதிக்கு வந்தனம்.

என்னது நானு யாரா? said...

பரவாயில்லையே தோழி! நீங்கள் ஒருவராவது இன்று பாரதியை மறக்காமல் நினைவுகூறுகிறீர்கள். வாழ்த்துக்கள்!!

உங்களுக்கு நேரம் இருக்கும்போது என் கடைபககம் வந்திட்டு போங்க தோழி! இப்போ 1 மாசமா தான் புதுசா எழுத வந்திருக்கேன். சரக்கு எப்படி இருக்குன்னு பாத்து சொல்லணும்னு உங்களை கேட்டுகொள்கிறேன்.

'பரிவை' சே.குமார் said...

மகாகவியை நினைவு கூர்ந்த கவி கலகலப்பிரியாவுக்கு நன்றிகள்.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

அந்த பாட்டை இவ்ளோ ஜென்டிலா பாடியிருக்காங்க :)

settaikkaran said...

பார’தீ’யின் ரௌத்ரம் - சுடுகிறது! நன்றி!!

ஆரூரன் விசுவநாதன் said...

பாரதியை நினைவுகூர்ந்தமைக்கு நன்றி

மரா said...

கவிஞரைக் நினைவில் கொண்ட கவிஞருக்கு வாழ்த்துக்கள்.நன்றி.

Mahi_Granny said...

பாரதியின் பரம விசிறி, நிரூபிக்கவும் வேண்டுமா . அருமை

மார்கண்டேயன் said...

அப்பாட புரிஞ்சிருச்சு . . . கலகலப்ரியா எழுதுனது புரிஞ்சிருச்சு . . . அடடா பாரதியார் பாட்டா . . . அதானே பாத்தேன் . . . பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி

கொஞ்சம் பாலரெங்கபுரம் பக்கம் வந்துட்டுப் போறது . . . அதாங்க நம்ம கட பக்கம்

ஆ.ஞானசேகரன் said...

பகிர்வுக்கு நன்றி தோழி..

சிங்கக்குட்டி said...

பாரதியின் பரம விசிறி ப்ரியா என மீண்டும் ஒரு சான்று :-)

கலகலப்ரியா said...

ரொம்ப நன்றி... எல்லாருக்கும்..

இரண்டாவது பின்னூட்டக்காரங்களுக்கு...உங்க பதிவு பார்க்கறேன்... கொஞ்சம் நேரப் பற்றாக்குறை...

மீண்டும் நன்றி...