இன்று கோபுரங்கள் சாய்க்கப்படும் நாளென்று விதிக்கப்பட்ட நாளோ?!
சிகரம் பாரதியை நினைவு கூரும் முகமாக.....!!!! love mah bharathi... love sowmya..!!!
_________________________________________
காலா உன்னை நான் சிறு புல்லென மதிக்கிறேன்-என்றன்
காலருகே வாடா சற்றே உனை மிதிக்கிறேன்-அட (காலா)
காலருகே வாடா சற்றே உனை மிதிக்கிறேன்-அட (காலா)
வேலாயுத விருதினை மனதிற் பதிக்கிறேன்-நல்ல
வேதாந்த முரைத்த ஞானியர் தமை எண்ணித் துதிக்கிறேன்-ஆதி
மூலா வென்று கதறிய யானையயைக் காக்கவே-நின்தன்
முதலைக்கு நேர்ந்ததை மறந்தாயோ,கெட்ட மூடனே? அட-(காலா)
ஆலால முண்டவன் அடி சரணென்ற மார்க்கண்டன்-தன
தாவி கவரப்போய் நீ பட்ட பாட்டினை யறிகுவேன்-இங்கு
நாலாயிரம் காதம் விட்டகல உன்னை விதிக்கிறேன்-ஹரி
நாராயண னாகநின் முன்னே உதிக்கிறேன்-அட (காலா)
மூலா வென்று கதறிய யானையயைக் காக்கவே-நின்தன்
முதலைக்கு நேர்ந்ததை மறந்தாயோ,கெட்ட மூடனே? அட-(காலா)
ஆலால முண்டவன் அடி சரணென்ற மார்க்கண்டன்-தன
தாவி கவரப்போய் நீ பட்ட பாட்டினை யறிகுவேன்-இங்கு
நாலாயிரம் காதம் விட்டகல உன்னை விதிக்கிறேன்-ஹரி
நாராயண னாகநின் முன்னே உதிக்கிறேன்-அட (காலா)
__________________________________
பாட்டைக் கேட்டுத் தாளம் போடுவதற்கு இங்கே சொடுக்கவும்...
_________________________________________
12 ஊக்கம்::
ஆஹா! அருமையான நினைவுக்கு. பாரதிக்கு வந்தனம்.
பரவாயில்லையே தோழி! நீங்கள் ஒருவராவது இன்று பாரதியை மறக்காமல் நினைவுகூறுகிறீர்கள். வாழ்த்துக்கள்!!
உங்களுக்கு நேரம் இருக்கும்போது என் கடைபககம் வந்திட்டு போங்க தோழி! இப்போ 1 மாசமா தான் புதுசா எழுத வந்திருக்கேன். சரக்கு எப்படி இருக்குன்னு பாத்து சொல்லணும்னு உங்களை கேட்டுகொள்கிறேன்.
மகாகவியை நினைவு கூர்ந்த கவி கலகலப்பிரியாவுக்கு நன்றிகள்.
அந்த பாட்டை இவ்ளோ ஜென்டிலா பாடியிருக்காங்க :)
பார’தீ’யின் ரௌத்ரம் - சுடுகிறது! நன்றி!!
பாரதியை நினைவுகூர்ந்தமைக்கு நன்றி
கவிஞரைக் நினைவில் கொண்ட கவிஞருக்கு வாழ்த்துக்கள்.நன்றி.
பாரதியின் பரம விசிறி, நிரூபிக்கவும் வேண்டுமா . அருமை
அப்பாட புரிஞ்சிருச்சு . . . கலகலப்ரியா எழுதுனது புரிஞ்சிருச்சு . . . அடடா பாரதியார் பாட்டா . . . அதானே பாத்தேன் . . . பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
கொஞ்சம் பாலரெங்கபுரம் பக்கம் வந்துட்டுப் போறது . . . அதாங்க நம்ம கட பக்கம்
பகிர்வுக்கு நன்றி தோழி..
பாரதியின் பரம விசிறி ப்ரியா என மீண்டும் ஒரு சான்று :-)
ரொம்ப நன்றி... எல்லாருக்கும்..
இரண்டாவது பின்னூட்டக்காரங்களுக்கு...உங்க பதிவு பார்க்கறேன்... கொஞ்சம் நேரப் பற்றாக்குறை...
மீண்டும் நன்றி...
Post a Comment