header photo

Sunday, November 21, 2010

இதுதாண்டா கலாச்சாரம்... பகுதி நம்பர் ஆறு...

(பேக் டு த காஷுவல் மூட்... ம்ம்...)

நம்மாளுங்க புத்திசாலித்தனம் யாருக்கும் வராதுங்க... செண்டிமெண்ட சும்மா சக்கையாப் புழிஞ்சே காரியத்த சாதிப்பாங்க... 


ஒரு படம் காட்டணும்னாக்க... கரீக்ட்டா.. காலேஜ் டைம்ல ஆரம்பிச்சு... கல்யாண மேடைல மலர்கள் புடைசூழ ஏறி அமர்ந்து... தாலிய அப்டியே தூக்கி... டமடமடமன்னு மேளத்தக் கொட்டோ கொட்டுன்னு உச்சஸ்தாயில கொட்டி... சுபம் போட்டுடுவாங்க... 

மனுஷன் எப்டி எல்லாம் வாழணும்னுட்டு... எறும்புல இருந்து கழுதை வரைக்கும் ஏதோ ஒரு குணாதிசயத்த பச்சக்குன்னு புடிச்சு மேற்கோள் காட்டுவாங்க... சபைல கைதட்டல் காதைப் பொளக்கும்... 

கற்புநெறி பத்திப் பேசுறப்போ... மாடப்புறாவையும்... அன்றில் பறவையையும் உதாரணம் காட்டுவாங்க.... ஜோடிப் பறவை போயிட்டா... பச்சத் தண்ணி கூட முழுங்காம செத்துப் போகுமாம் அன்றில்... மாடப்புறா கல்லை முழுங்கிட்டுப் போய் மண்டையப் போடுமாம்.. (வழி காட்டல்... பண்பாடூஸ்..)

ஹூம்... நம்ம மக்களுக்கும் அப்டி உணர்வு வர்ற மாதிரி ஒரு ஜோடி... வாழ்க்கை அமைஞ்சு... அவங்க அப்டியே செத்துப் போயிட்டா... போர்க் கடவுள்கள் எல்லாம் பூமில பாரம் ஏறுதேப்பான்னு கவலைப்படாம... ராக்கெட்டயும்.. அணுகுண்டையும் கண்டுபுடிக்க வழியில்லாம செய்துட்டு ரிலாக்ஸா இருக்கலாம்...  புள்ள குட்டிய யாரு பார்க்கறதுன்னு எல்லாம் கவலைப்படாம... அம்மா போயிட்டா அப்பாவும்... அப்பா போயிட்டா அம்மாவும்ன்னு மாத்தி மாத்திக் கல்ல முழுங்கிக்கலாம்.. 

எந்தப் பறவையும்... குஞ்சு பொரிச்சு... நம்மாளுங்க மாதிரியே பொத்திப் பொத்தி சாப்பாடு ஊட்டி வளர்க்கும்... சிறகு முளைச்சதும் அந்தப் பறவைக்குஞ்சு அது பாட்டுக்குப் பறந்து போயிடும்... அம்மாப் பறவை... குஞ்சுப் பறவைய... சிறகோட சிறகு கோர்த்துக்கிட்டு... வானத்தில வலம் வந்து... இங்க பாரு காடு... இங்க பாரு கூட்டுக்கு குச்சி... அங்க பாரு நீ சாப்டறதுக்கு புழுன்னு எல்லாம் சொல்லிக் கொடுக்கறதில்ல... அத விட முக்கியமா... ஆத்தீ கூட்ட விட்டு வெளில போகாத... சிறகக் கட்டிக்கிட்டு உள்ளயே கெட.. பறந்தியோ சிறகப் பிச்சுப்புடுவேன் பிச்சுன்னு எல்லாம் சொல்றதில்ல... 

நம்மாளுங்க.. அடியாத மாடு படியாதுன்னு சொல்லிச் சொல்லி... குழந்தைங்கள மாடாக்கி அடி அடின்னு அடிப்பாங்க... அங்க ஆரம்பிக்கும் குழந்தைக்கு பயம்... அங்க ஆரம்பிக்கும் அடக்குமுறை... அங்க குழந்தையும் கத்துக்கும்... முடியலைன்னா அடிக்கணும்யான்னு... இயலாமை வர்றப்போல்லாம் யாரயாவது அடிக்கணும்.. 

குழந்தைங்க ஆரம்பத்ல.. பசிக்குதுன்னு சிக்னல் கொடுக்க அழ ஆரம்பிச்சு... அப்புறம்.. அதுக்கு ஏதாவது தேவைன்னா அழ ஆரம்பிக்கும்...  உடனயே தூக்கி வச்சுக்கிட்டு ஓஓஓன்னு சீராட்டுவாங்க... அட விடுங்கம்மான்னா கொஞ்ச நேரம் அழட்டும்னா.. மூச்சடைச்சு செத்துப் போயிடும்பாங்க... அழுறப்போ எல்லாம் எதயாவது கைல திணிப்பாங்க... இது வேணுமாடா ராஜா... இங்க பாரு.. கீ... அச்சச்சோ... அது வேணாமா... இங்க பாரு.. இங்க பாருன்னு.. கைல கிடைக்கறத எல்லாம் எடுத்து நீட்டுவாங்க... 

எம் புள்ளைக்கு கீரைன்னா கண்ல காட்டப்டாது... நம்ம வீட்ல கீரையே சமைக்கறதில்லைம்பாங்க... அது என்ன வேணும்னு சொல்லுதோ அத செய்து கொடுப்பாங்க.. 

அவங்க வளர்ற வரைக்கும்.. புள்ளதான் ராஜா... அப்புறம் புள்ளய அடிமையாக்கிட்டு.. அப்பவும் ராஜான்னு கொஞ்சிக்கிட்டிருப்பாங்க.. புள்ளை சட்டை.. செருப்பு எல்லாம் தானாவே மாட்டச் சொல்லித் தர்றதில்ல.. அவங்களாவே மாட்டி விடுவாங்க... அப்போதானே அப்பாலிக்க செண்டிமெண்ட் டயலாக் விடலாம்... உன்னை நான் எப்ப்ப்ப்ப்பிடியெல்லாம் வளர்த்தேன்னு.. 

கலாச்சாரம் சீரழிஞ்சு... கால்வாயில வழிஞ்சு வழிஞ்சு கரைய உடைச்சுக்கிட்டு.. சந்து பொந்தெல்லாம் ஓடுதுப்பான்னு நம்மாளுங்க மூக்கப் பொத்திக்கிற நாட்டில.. குழந்தைங்கள எப்டின்னு வளர்க்கிறாங்கன்னு நானும் மூக்கில கைய வச்சுக்கிட்டுதான் பார்த்தேன்... ஆனா நாத்தம் தாங்காம இல்ல... ஆச்சரியமா...

அவங்க குழந்தைய குழந்தையா வளர்ப்பாங்க... நாம உன்னைப் பெத்தவங்க.. உனக்கு இப்போ நாமதான் ராஜா அண்ட் ராணி... அப்டின்னு வளர்த்து... அந்தப் புள்ள வளர்ந்ததும்... ஓக்கே... இனிமே நீ பார்த்துக்கோ ராஜான்னு விட்டுடுவாங்க.. .

அட என்னங்க... ஒரு புள்ள அழுறதுக்கு அதுக்கு உரிமை இல்லையா... அழ விடுவாங்க... விழுந்து கெடந்து அடம் புடிச்சா... கண்டுக்கவே மாட்டாங்க... புள்ள ஆட்டோமேட்டிக்கா பாடம் கத்துக்கும்... 

சாப்பாடு வீட்டில கொடுக்கிற சாப்பாடுதான்... விருப்பம்னா சாப்டலாம்... இல்லைன்னா விடலாம்.. இஷ்டமில்லைன்னா புள்ள ரெண்டு நாள் சாப்டாம இருக்கும்... இருக்கலாம்.. ஒண்ணும் ஆயிடாது.. மூணாவது நாள் வேற வழியில்லாம சாப்டும்.. நம்மாளுங்க அதையும் திணிப்பாங்க... செல்லம்ல... புஜ்ஜில்லன்னு... அது வாந்தி எடுக்க எடுக்கத் திணிப்பாங்க... இல்லைனா அடிச்சுத் திணிப்பாங்க.. (அத மட்டுமா..ஹூம்..)

அவங்க அழுதா கண்டதயும் எடுத்து நீட்டறதில்ல... கண்ணு... நீ அழுது உனக்கு ஒண்ணும் கிடைக்கப்போறதில்ல... என்ன ப்ரச்சனைன்னு பேசு.. என்ன வேணும்னு கேள்... முடிஞ்சா பார்க்கலாம்.. முடியலன்னா ஏன் முடியலன்னு உக்காந்து பேசலாம்... அதுவும் வேணும்.. இதுவும் வேணுமா... நோ.. அப்டி முடியாது.. அதுவா... இதுவான்னு முடிவு பண்ணு... (பிற்காலத்தில உதவுமில்ல..) இதெல்லாம் புள்ளைக்கு மூணு வயசிலயே கத்துக் கொடுத்துடுவாங்க... 

மத்தப் பசங்க கூடப் ப்ரச்சனைன்னா... அம்மா வா.. அப்பா வா... மாமா வா... மச்சான் வான்னு ஊரைக் கூட்டக் கத்துக் கொடுக்கறதில்ல... ப்ரச்சனைன்னா அந்தப் புள்ளையே பார்த்துக்கணும்... அடிச்சா அடிக்கறதில்ல... ஆனா ஸ்டாப் இட்... அப்டின்னு உறுதியா சொல்லக் கத்துக் கொடுப்பாங்க... யார்ட்டயும் பிரச்சனையே பண்ணக் கூடாதுப்பா... உலகம் அன்பு மயமானது.. அன்பால் எதயும் வெல்லலாம்... அடிச்சா கேன மாதிரி மத்தக் கன்னத்தையும் காண்பின்னு சொல்லிக் கொடுக்கறதில்ல... பிரச்சன வரத்தான் செய்யும்.. அத எப்படி சமாளிக்கிறதுன்னு கத்துக் கொடுப்பாங்க.. 

ஏய் மொக்கைன்னு யாராவது கூப்ட்டா... யெஸ் ஐயாம் த க்ரேட்டஸ்ட் மொக்கைன்னு நக்கலா சொல்லிட்டு நகரக் கத்துக் கொடுப்பாங்க... இல்லாம சீண்டினா... ஸ்டாப் இட்... அங்கேயே நில்... அதுக்கு மேல வராத... தேர் இஸ் அ லிமிட்..  என்னை எனக்குத் தெரியும்... என்னைப் பத்தி நீ சொல்றதுக்கு எந்த அருகதையும் இல்லைன்னு சொல்லக் கத்துக் கொடுப்பாங்க.. (:o))... 

குழந்தைங்களுக்கு என்ன என்ன உரிமை இருக்குன்னு கத்துக் கொடுப்பாங்க... அதே மாதிரி குழந்தைங்களுக்கு என்ன என்ன கடமை இருக்குன்னு கத்துக் கொடுப்பாங்க... ஸோ... அந்தக் குழந்தை ஆரம்ப பள்ளிக்குப் போறப்பவே வாழ்க்கையோட அடிப்படையக் கத்துக்கும்... அங்க போயும் கத்துக்கும்.. க்யூல நிக்கிறத கத்துக்கும்.. க்யூல நிக்கறப்போ ஒரு நாள் நான் முன்னாடி நிக்கலாம்... மறு நாள் நான் பின்னாடி நின்னு மத்தவன முன்னாடி போக வழி செய்யலாம்.. அதயும் கத்துக்கும்.. 

ஒரு புள்ளைக்கு இன்னொரு புள்ள ஹெல்ப் பண்ணக் கத்துக் கொடுப்பாங்க.. ஆனா ரொம்ப அவசியம்னாதான்.. கைல கத்தரிக்கோல வச்சுக்கிட்டு பேப்பர நேரா எப்டி வெட்டறதுன்னு தெரியலைன்னா... மத்தவங்க ஹெல்ப் பண்ணக் கூடாது... அந்தக் குழந்தைய கத்துக்க விடனும்... சுயமா.......

படி படி படி.... எனக்கு நீ எஞ்ஜின்-ஈயர் ஆகனும்.. டாக்டர் ஆகணும்... எல்லாத்திலயும் நூறு மார்க் வாங்கணும்னு குரல்வளையைப் புடிச்சுத் திருகறதில்லை... என்னடா எந்த நேரமும் விளையாட்டு.. ஃப்ரண்ட்ஸு... அதுவும் கண்டகண்ட ஃப்ரண்ட்ஸுன்னு தலைல அடிச்சுக்கிட்டு அலர்றதில்லை.. 

படிம்மா.. படிப்பா.. உன்னால முடியும்.. உன்னால எவ்ளோ முடியுதோ.. மாக்ஸிமம் ட்ரை பண்ணு.. போதும்.. அதுக்கு மேல வேணாம்... வா காத்தாட வெளில நடந்து போய்ட்டு வரலாம்.. காட்டுக்குப் போகலாம்.. இத எல்லாம் விட அங்க கத்துக்க நிறைய இருக்கு... வாழ்க்கைக்குத் தேவையானது..! விளையாட்டு ஒன்ன தேர்ந்து எடுத்துக்கோ... அது முக்கியம்... ஃப்ரண்ட்ஸ் யார் யாரெல்லாம் இருக்காங்க.. என்னது இல்லையா... ஏன் இல்ல... என்ன ப்ரச்சனன்னு உக்காந்து ஃப்ரண்ட்ஸ் கிடைக்க எந்த ஸ்போர்ட்ஸ் க்ளப்புக்கு அனுப்பலாம்னு யோசிப்பாங்க... 

குழந்தை ஒரு தப்பு செய்துட்டா... போச்சு... போச்சு... நான் செத்துப் போறேன்... உன்னைக் கொன்னு புதைச்சிடுவேன்... அடிச்சே சாவடிச்சிடுவேன்... குடும்பத்தோட செத்துடுவோம்னு சொல்லிச் சொல்லி.. தன் மார்ல தாம் தீம்னு குத்தி... குழந்தைய குற்ற உணர்வு பிடுங்கித் திங்கச் செய்யறதில்லை... குற்றவாளிக் கூண்டில நிக்க வச்சுக் கடிச்சுக் குதர்றதில்லை... (அது வயசுக்கு வந்து தன்னோட வாழ்க்கையத் தேடிக்கிறப்பவும் செய்யறதில்ல..).. 

நீ உன்னோட வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தால்... நான் தூக்கில் தொங்குவேன் என்று சொல்வது எத்தகைய கீழ்த்தரமான செயல்... எத்தனை குரூரம் நிறைந்தது... இது ஒரு கலாச்சாரம்.... இதுக்குப் பேரு மேலான பண்பாடு.. 

பரீட்சைல ஃபெயில் ஆயிட்டோம்ன்னு தற்கொலை பண்ணிக்கிற ரேஞ்சுக்கு ஒரு பையனோ... பொண்ணோ போறாங்கன்னா.. அது நம்ம கலாச்சாரத்திலதாங்க நடக்கும்... அதே குற்ற உணர்வுதான்... அய்யயோ... செய்யக் கூடாத தப்பு பண்ணிட்டோமே... இனிமே அம்மா அப்பா மூஞ்சில எப்டி முழிப்போம்... நம்ம நாசமாப் போன வீதில எப்டி மூஞ்சியக் காட்டுவோம்னு... 

இப்டி ஒரு மனநிலைல ஒரு புள்ளைய வளர்த்துட்டு... இப்டி ஒரு மனோபாவத்துக்கு அந்தப் புள்ளையத் தள்ளிட்டு... நம்ம கலாச்சாரத்துக்கு இதெல்லாம் சரிப்படாதுங்க... நம்ம புள்ளைங்க புனிதமானவங்க (சில பேரு.. corrupted mind ... மாசு மடிஞ்ச மனசுள்ளவங்களுக்கு இதெல்லாம் சரிப்படாதுங்க..)ன்னும் பெருமையா சொல்லிக்கிறாங்க... 

ஸோ... அந்தப் புள்ள காதலிச்சா என்னாகும்... வேற வழியில்ல ஆள விடுங்கப்பான்னு ஓடச் செய்யும்.. இல்லைன்னா.. அம்மா அப்பா சவத்துக்கு மேல எப்டி வாழ்றதுன்னு... உரோமபுரி அடிமைகளாயிடுவாங்க.. அதாவது உயிர்.. உணர்வு எல்லாம் இருக்கிற மனுஷங்களா இருக்காம... ஒரு பொருளா... கழுத்தில இவள் இவனின் அடிமை... அப்டின்னு தகடு மாட்ட விட்டு வலம் வர வைப்பாங்க... அது அந்தப் புள்ள நாண்டுக்கிட்டுச் செத்துப்போனா... மானம் காப்பாத்தியாச்சுன்னு பெருமூச்சு விட்டுக்கிட்டே திரும்ப மார்ல அடிச்சுக்கிட்டு அழுது தீர்ப்பாங்க... சமூகம்... பாவம் அவங்க தலையெழுத்துன்னு ஒன்னுமே தெரியாத பாப்பா மாதிரித் தலைல அடிச்சுக்கிட்டு போகும்... 

அதே மாதிரி... அது பையன்னா... பொண்ணைக் காதலிச்சிட்டோம்... கர்ப்பமாயிட்டா... மத்தவங்க மூஞ்சில முழிக்க முடியாதுன்னு ஓடத்தான் முடியும்.. வேற வழி... சொல்லிப் புரிய வைக்கற மாதிரியாய்யா வளர்ந்திருக்கோம்.. கலாச்சாரத்த இம்பூட்டு மொத்தக் கயிறாப் போட்டு இறுக்கக் கட்டியில்ல காப்பாத்துறோம்... மொன்னையாவே இருக்கட்டும்ன்னு... 
கலாச்சாரத்த அவுத்து விட்டிருக்கிறதா நம்மாளுங்க சொல்லிக்கிட்டிருக்கிற ஊர்ல... ஒருத்தன் ஒருத்தியோட சேர்ந்துட்டு.. புள்ள கிடைச்சதும் விட்டுட்டு கம்பிய நீட்ட முடியாது... 

அதே மாதிரி கல்யாணம் கட்டிட்டு... அப்புறம் சரியா வரலைன்னா பிரிஞ்சுட்டு... கட்டினவன் கிட்ட இருந்து ஒண்ணும் வேணாம்ன்னு ரோஷமா வேணா இருந்துக்கிடலாம்... ஆனா எம்புள்ளைக்கும் எதுவும் வேணாம்.. புள்ள மூஞ்சில முழிக்கப்டாதுன்னு எல்லாம்... வீட்டுக்கார அய்யாக்கு தண்டனைய கொடுக்கிற மாதிரிப் புள்ளைங்கள தண்டிச்சிட முடியாது...   Sole legal custody... Sole physical custody... இத்யாதி இத்யாதி இருக்கு... அப்டி ரெண்டு பேருக்கும் கஷ்டமா guardianship.. அப்டின்னு ஒன்னு இருக்கு... (உடன எல்லாரும் புள்ளைய பெத்து அவங்க காலடில கொண்டு போய்ப் போட்டு முக்காடு போட்டுக்கிட்டுப் போற மாதிரிக் கற்பனை பண்ணிக்க வேணாம்..).. 

அவங்க அவங்களுக்கு... அவங்க அவங்களுக்கு ஏத்த மாதிரி... ஆலோசனை கொடுக்கிறதுக்கு ஆயிரத்தெட்டு மையம் இருக்கு... சட்டமும் சரி... மையமும் சரி..  தனி ஒரு மனிதனை... அவனோட அபிலாஷைகளை... அவமதிச்சிடக் கூடாது... அப்டின்னு ரொம்ப மரியாதை கொடுத்து.. அவனுக்கு எப்டி எப்டி எல்லாம் வழி காட்டலாம்ன்னு உருவாக்கி வச்சதுதான்...  

நம்மாளுங்க தூக்கில தொங்குவோம்ன்னு மிரட்றாப்ல... போடி போடி... மூஞ்சிலயே முழிக்காத... என்னளவில நீ செத்துப் போயிட்டா... தனியா நின்னு சாவுடின்னு... பண்பாட்டோடயும்.. நல்ல பண்போடயும் வாழ்த்தி வழியனுப்புவாங்க... அந்தப் பொண்ணும் ஏதாவதுன்னா... எங்க போறதுன்னு தெரியாம நட்ட நடு வீதில நின்னு... திக்குத் தெரியாத காட்டில்ன்னு செண்டியா பாட்டுப் பாட வேண்டியதுதான்... அப்புறம் என்ன... நான் சொன்னேன்ல... கேட்டியா.. கேட்டியா... இப்போ பார்த்தியா பார்த்தியா.. (வின் பண்ணிட்டாய்ங்களாம்..) அப்டின்னு குதிப்பாங்க... 

இங்க... சட்டப்படி கல்யாணமான... "ஆகாத"... அம்மா.. அப்பா.. யாரும் அப்டி தொரத்தி விட மாட்டாங்க.. (புள்ளைங்கள துரத்தி தண்ணி தெளிச்சு விடுறதெல்லாம் ஒரு கலாச்சாரமான்னு யாரோ கேட்ட ஞாபகம்..).. ஒரு வேளை பெத்தவங்க உதவ முடியலன்னா... நல்ல பண்போட... ஒரு சமூகம் இருக்கு... சமுதாயம் இருக்கு... 

நம்மாளுங்க இங்க வந்து.. ஒரு புள்ளய... அது கூடாது.. இது கூடாது... சாவோம்.. குடும்பத்தோட கொளுத்திட்டு நானும் சாவேன்.. இத்யாதி இத்யாதின்னு எல்லாம் மிரட்டி வச்சும்... அந்தப் புள்ள மூச்சடக்கி சாவற கட்டத்தில வெளில வந்திச்சின்னா... அதைக் கை நீட்டி அழைச்சு வழி காட்ட ஆள் இருக்காங்க... அதுக்கும் சொல்லிக்குவாங்க நம்மாளுங்க பெருமையா... என்ன ........ரு... என் புள்ளய நான் அடிக்கறேன்... என் புள்ளைய நான் கொல்றேன்.. (ராஜபக்சே ஃபார்முலா... நம் நாட்டு மக்களை நான் கொல்றேன் உனக்கென்னடா போச்சுன்னு..).. நீ யாருய்யா காப்பாத்த... நம்மூர்ல இப்டி எல்லாம் வழி காட்ட எந்த நா(தி)யும் இருக்காது... வேற வழி இல்ல புள்ள நம்ம கிட்டதான் வந்தாவணும்... இங்க இப்டிக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கிறீங்களேடான்னு.... பெர்ர்ர்ர்ர்ருமையா பீத்திக்குவாங்க... 

(மீதி அப்பாலிக்கா..)

75 ஊக்கம்::

vasu balaji said...

ஹூம். படிச்சி முடிச்சதும் நெஞ்சு நிறைய ஒரு ஏக்கம் வருது. இப்படி ஏன் மனிதம் இல்லை? இதில் என்ன குறை சொல்ல முடியும். குடும்பம் என்ற கட்டமைப்பு எங்க இருக்குன்னு, குடும்பப் பாசம் எங்க இருக்குன்னு கேக்கலாம்.:). இப்போ இங்க இருக்குன்னு பீத்திக்கிற நிலமையில் இல்லை.

உன்னை வளர்த்தனேன்னா உங்கப்பன என்ன செஞ்சன்னு வர கேள்விக்கு பதில் இல்லை. *சத்தியமா எனக்கு ஒரு குற்ற உணர்வு வந்திருக்கு*. 20 வருஷம் முன்னாடி எனக்கு ஏன் தெரியலைன்னு வருத்தமும். அதே நேரம் இனி எப்படி இருக்கணும்னு ஒரு தெளிவும் இருக்கு. நன்றிம்மா.

vasu balaji said...

/அம்மாப் பறவை... குஞ்சுப் பறவைய... பறந்தியோ சிறகப் பிச்சுப்புடுவேன் பிச்சுன்னு எல்லாம் சொல்றதில்ல... //

ரொம்ப பிடிச்சது இந்த உதாரணம். இத பத்தி மட்டுமே ஒரு விவாதம் கிளை பிரியும்.

/சிறகு முளைச்சதும் அந்தப் பறவைக்குஞ்சு அது பாட்டுக்குப் பறந்து போயிடும்... /

நாம் பாலூட்டி வளர்த்த கிளின்னு பிழியப் பிழிய அழுவோம்..

/முடியலைன்னா அடிக்கணும்யான்னு... இயலாமை வர்றப்போல்லாம் யாரயாவது அடிக்கணும்.. //

ஹூம். இது புரிஞ்சா கை நீளாது.

/கண்ணு... நீ அழுது உனக்கு ஒண்ணும் கிடைக்கப்போறதில்ல... என்ன ப்ரச்சனைன்னு பேசு.. என்ன வேணும்னு கேள்... முடிஞ்சா பார்க்கலாம்.. முடியலன்னா ஏன் முடியலன்னு உக்காந்து பேசலாம்... அதுவும் வேணும்.. இதுவும் வேணுமா... நோ.. அப்டி முடியாது.. அதுவா... இதுவான்னு முடிவு பண்ணு... (பிற்காலத்தில உதவுமில்ல..) இதெல்லாம் புள்ளைக்கு மூணு வயசிலயே கத்துக் கொடுத்துடுவாங்க... /

இங்க 18 வயசுக்கிட்ட இதச் சொன்னா புரிஞ்சிக்கிற பக்குவம் இருக்குமா? சந்தேகம்.

Thekkikattan|தெகா said...

மொத்தத்தில குழந்தைகளுக்கு சுயமாக ஒரு முடிவு எடுத்து அது நல்லதாவோ, கெட்டதாவோ முடிஞ்சாக் கூட அந்த பொறுப்பை சுமக்க விட்றதில்லைங்கிறீங்க.

யாராவது ஒரு ஆளு தேவைப்படுது கை சுட்டிக் காமிக்க. தவறுகளை ஏற்றுக் கொண்டால்தானே அங்கே வளர்வதற்கு ஆரோக்கியமான மன நிலை இருக்கிறதின்னும் மீண்டும் அதே பாதையில் பயணிக்கும் பொழுது இது நமக்கு சரிபட்டு வருமா என்ற பட்டறிவும் கிடைக்கப் பெறுமிங்கிறீங்க...

அந்த மாதிரி வாழ்க்கை கல்வியெல்லாம்தான் நாங்க வீட்டுப் பாடத்தையே நாங்களே எழுதி ஸ்கூலுக்கு அனுப்புறதிலேயே அழிச்சு எழுதிடுறோமே! பின்ன எப்படி குழந்தைகள் தான் செய்யும் சரி/தப்புகளை பொறுப்பேத்துக்க ரெடியாகும்?

சரி, அப்படியே இதையும் மக்கள்ஸ் ஒரு க்லான்ஸ் விடட்டும் குழந்தைகளும் தனித்துவத்தன்மை பேணலும்...

வேற வழியில்ல இந்த சீரிஸ்ல என்கிட்ட இன்னும் பல பதிவுகள் இருக்கு லிங்க் கொடுக்க, நீங்க எழுத எழுத :)- if you dont mind I will bring it up all... 2006ல எழுதினது...

இன்னும் கூடுதலா நீங்க உள்ளரே உடைச்சிப் பார்த்து நிறைய கொண்டு வந்து சேர்க்கிறீங்க. ஞாபகம் வைச்சிக்க உதவும். நன்றி!

vasu balaji said...

/Soul legal custody... Soul physical custody... இத்யாதி இத்யாதி இருக்கு... அப்டி ரெண்டு பேருக்கும் கஷ்டமா guardianship.. /

ஒரு ரிக்வஸ்ட். இது தனியா ஒரு இடுகைல விளக்கணும்.

//குழந்தைங்களுக்கு என்ன என்ன உரிமை இருக்குன்னு கத்துக் கொடுப்பாங்க... அதே மாதிரி குழந்தைங்களுக்கு என்ன என்ன கடமை இருக்குன்னு கத்துக் கொடுப்பாங்க... //

குடுத்து வச்சதுங்க.

இந்த தற்கொலை, சொத்துல காலணா கிடையாது, போனா அப்டியே போய்டு வந்து நின்னா அவ்வளவுதான் இதனாலெல்லாம் எதுவும் நடந்துடாம போகலை. நான் ஒரு இடுகையில எழுதின படி, செல்ஃபோன் மாடல் என்னன்னு ஒரு பெண்னைக் கேட்ட ஒரு ஆள், தன்னுடைய காதல் எவ்வளவு புத்திசாலித்தனமா, தன் ஜாதி பெண்ணோடு என்பதைச் சொல்லப் போய், அந்தப் பெண்ணும், தானும் அப்படித்தான். லவ்னாலே முதல்ல ஜாதிதானெ ப்ரச்சனன்னு, தன் இனப்பையனைக் காதலிப்பதாகச் சொன்னது வெறும் 3 மணி நேரப் பயணத்திற்குள்..அவ்வ்வ்.

vasu balaji said...

/நல்ல பண்போட... ஒரு சமூகம் இருக்கு... சமுதாயம் இருக்கு... /

இப்படிச் சொல்ல முடியறப்போதான் சமுதாயம்னும், கலாச்சாரம்னும் பெருமையாச் சொல்லிக்கலாம். இதைச் சொல்றப்போ அப்ப அங்க கயவர் இல்லையா, குழந்தை வன்முறை இல்லையா, வன்புணர்ச்சி இல்லையான்னு எல்லாம் வெட்டி வாதம் வரலாம். இருக்கும். மனுசன் இருக்கிற இடத்துல வக்கிரம் கண்டிப்பா இருக்கும். அதை தண்டிக்க நேர்மையான போலீஸ் இருக்கு. கிழிச்சி ஒட்ட ஊடகமும் இருக்கு.

RMD said...

நல்ல பதிவு. வாழ்த்துகள்.

பிள்ளைகளின் வாழ்க்கையை பெற்றோரே கட்டுப்ப்டுத்துவதும் அது பரம்பரை பரம்பரையாக தொடர்வதுமே சாதி,மதரீதியான உணர்வுகளை பாதுகாத்தும் வருகிறது.

இந்த குடும்ப அமைப்பு தன்னை மாற்றி கொள்ளாத பட்சத்தில் மற்ற எந்த முன்னேற்றமும் பயன் தராது.

Thekkikattan|தெகா said...

//பிள்ளைகளின் வாழ்க்கையை பெற்றோரே கட்டுப்ப்டுத்துவதும் அது பரம்பரை பரம்பரையாக தொடர்வதுமே சாதி,மதரீதியான உணர்வுகளை பாதுகாத்தும் வருகிறது.

இந்த குடும்ப அமைப்பு தன்னை மாற்றி கொள்ளாத பட்சத்தில் மற்ற எந்த முன்னேற்றமும் பயன் தராது.//


இந்தக் கூற்றின் அடிப்படையிலேயே நம் அனைத்து பதிவுகளும் சுற்றிச் சுழல்கிறது எனலாம். இதுவே அச்சாணி. இதுவே திரைக்கு பின்னான உண்மையான பேசு பொருள். அதனைத் தவிர்த்து, தினமும் சமூகத்திற்காக கண்ணீர் வடிக்கிறேன் என்று மேல் காயத்திற்கு புனுகு பூசுவது ஒரு மட்டைக்கும் உதவாது என்பதனை எல்லா அன்பர்களும் ‘இந்தியா’ நம் நாடு, நாம் எல்லோரும் அந்த நாட்டின் ‘ஒரே’ மக்கள், ஒரு தாய் பிள்ளைகள் என்று கவிதையும், கதையும் அன்றன்றைய செய்தித் தாள்களில் வரும் அழுவாச்சிகளையும் வைத்து வேண்டுமானால் ஆளுக்கொரு பதிவு போட்டுக்கலாம்.

ஆனால், உள்ளர பயமாத்தான் இருக்கும்... அடடட எப்படியடா இந்த உண்மையை முகம் கொள்வதென்று, ஆனால் எத்தனை நாளுக்குத்தான் சும்மா புரியாத மாதிரியே நடித்துக் கொண்டே வாழ்க்கையை ஓட்டுவது.

இந்தக் கேள்வியை என்னையும் சேர்த்துத்தான் கேட்டுக்கிறேன். :((

நன்றி, தன்ராஜ்!

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

ம்ம்.. நம்மாளுங்களுக்கு கொஞ்சம் எக்ஸ்ட்ரீம் உதாரணமா கொடுத்துட்டு வர்றீங்க :)

தமிழ்நாட்டுல இருக்கற பொருளாதாரச் சூழல் வேற.. படிப்புச் சூழல் வேற.. தேர்வு முறை வேற.. வேலை வாய்ப்ப்பு முறை வேற.. அதனால அங்க கொஞ்சம் அதிக அக்கறை தேவைப்படுது..

அதுக்காக டூ மச்சா கட்டுப்படுத்த நினைக்கறது கண்டிப்பா தவறு தான்..

அதே மாதிரி, நம்மூருல, பரஸ்பரம், பிள்ளைகள் அப்பா-அம்மா மேலயும், அப்பா-அம்மா பிள்ளைகள் மேலயும், டிபென்டன்ட் டா இருக்கறது மறுக்க முடியாத உண்மை..

ஸ்விஸ் சூழல்ல எப்படி வளர்த்துறாங்கன்னு சொன்னதுக்கு நன்றி.. தெரிஞ்சுக்க நிறைய இருக்கு.. கொஞ்சம் புரிஞ்சிருக்கு.. தொடருங்க..

Unknown said...

பிரியா! Part 1

ஒரு அருமையான பதிவு. Superb Priya!

வெளிநாடுகளில் உள்ள சமூக அமைப்பு, மக்கள் தொகை கம்மியாக இருப்பதினால் ஓரளவுக்கு சரி செய்ய முடிகிறது. சீராக ஓடிக் கொண்டிருக்கிறது. அங்கும் வேலை வாய்ப்பு மற்ற நெருக்கடி வர ஆரம்பித்தால் நிலைமை மாறும்.

வெளிநாடுகளில் வீட்டை விட்டு வெளியில் வந்தால் ஒரு குழந்தை வெளியில் வந்து தவிக்க வேண்டிய அவசியம் இல்லை. குழந்தை பிச்சை எடுக்கிற நிலமையாகிவிடுமோ அல்லது விபச்சாரத்திற்கு தள்ளப் பட்டுவிடுமோ என்று கவலை இல்லை. ஆனால் இந்தியாவில், பசியில் ஒரு பையன் பக்கத்தில் தவிப்பதைக் கூட கண்டும் காணாமல் தன் மகனுக்கு ஊட்ட வேண்டிய நிலை. பசியோட ஒருத்தன் அலையக் கூடிய நிலை இருப்பதணினால் தான், தன் குழந்தை engineer அல்லது டாக்டர்க்கு படிக்க வேண்டும் என்று திணிப்பது. இது குழந்தையை பாதிக்கிறது என்றும் உணராத பெற்றோராக இருக்க வேண்டிய நிலை.

இங்கு கூட பள்ளியில் படிப்பதால் ஏற்படும் செலவை தவிர்க்க home ஸ்கூல் என்று வைத்து விடுகிறார்கள். அதற்க்கான படிப்பு சரிபார்க்கப் படுவதால் ஓடிக் கொண்டிருக்கிறது. இது இந்தியாவில் கல்வி முறை திட்டம் மாறினால் தான் எல்லா வகை குழந்தைகளும் படிக்க உதவும். அக்குழந்தை பெரியவனாகி வளர்ந்து சரி நிகராக இருக்க முடியும். பெற்றோரும் குழந்தையை நிர்பந்திக்க வேண்டிய நிலைமை வராது.

சமுதாயத்தில் டாக்டர்/engineer க்கு கிடைக்கும் மதிப்பு மரியாதை மற்ற தொழில் செய்பவர்களுக்கு இல்லை. இதுவும் மாறனும். எல்லா தொழிலுக்கும் ஒரு சரி நிகர் சமான மதிப்பு கொடுக்க வேண்டும்.

சமீபத்தில் தமிழ்மணத்தில், The ஹிந்து பத்திரிகையில், ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு IIT entrance எக்ஸாம் கோசிங்க்க்கு விளம்பரம் வந்ததாகப் படித்தேன். என்ன கொடுமைடா சரவணா! ஹிந்து போன்ற பத்தரிகைகள் இப்பிடியான விளம்பரங்களை எப்பிடி ஏற்றுக் கொள்ளலாம். இவர்களும் இது போன்ற கொடுமைக்கு துணை போவதாகதானே அர்த்தம்.

(contd)

Unknown said...

Part 2

அடிப்படை கல்வி எல்லோருக்கும் எளிமையாக கிடைக்க வேண்டும். இங்கு 12 வகுப்பு வரை public ஸ்கூலில் (அரசு கல்விக் கூடம் ) இலவசக் கல்வி. ஆனால் கல்லுரி படிப்பு கட்டணம் எங்கோ இருக்கு. scholarship கிடைச்சான் தான்னு பாதி பேர் படிப்பதில்லை. நம்மூர்ல PG படிச்சவனுக்கும் வேலை இல்லை.

தான் செய்ய வேண்டிய வேலைக்கே லஞ்சம் கொடுத்தா தான் வேலை செய்வேன்னு சொல்ற சமூகத்தில எல்லாவித அவலங்களும் கூடவே இருக்கும். லஞ்ச ஊழல் ஒழியனும் முதல்ல.

இங்க ஒரு சிறார் போன் எடுத்து அவசர உதவி நம்பரை டயல் பண்ணிட்டு ஒன்னும் பேசலைன்னா கூட, வந்து முழுதும் விசாரிச்சிட்டு போகும் போலீஸ். நம்மூர்ல உண்மையான பிரச்சனைக்கு கூட FIR போடா விடாம பண்ணக் கூடிய அட்டூழியம் சொல்ல முடியாது. எத வைச்சு நம்ம குழந்தைங்க ரோட்ல வந்தா ஒரு சமூகம் காப்பாத்தும்னு நினைக்க முடியும் அங்கே.

டிஸ்கி 1:

இது எதிர்வாதம் அல்ல. சமூகம் மாறனும்னா கூடவே சமுதாய அமைப்பும் மாறணும்னு சொல்லுவதற்கு தான்.

டிஸ்கி 2: பிரியா! பல கடுமையான விமர்சினங்களை, குறிப்பாக வார்த்தைப் பிரயோகங்களை, உங்க பதிவில் தவிர்த்திருந்தால், பலருக்கு உங்க கட்டுரைகள் எவ்வளவு உபயோகமயிருந்திருக்கும். இந்நேரம் பலர் தவிர்த்திருப்பர்களே. நீங்கள் எழுதியுள்ளத மத்தவங்க படிக்கணும்னு விரும்புகிறேன்.

Unknown said...

எனக்கென்னமோ இந்தியாவில் உள்ள IPS officer களை ஒரு 6 மாதத்திற்கு USA அல்லது ஐரோப்பா நாடுகளில் இருந்து வாழ stipend உடன் அனுப்பி வைக்க வேண்டும். ஒரு 10 சதவீதம் பேர் 5 வருடத்திற்குள் மாற வாய்ப்பு உண்டு. படித்து அறிவது வேற, நேரில் காண்பது வேற. 6 மாசம் பதவியில் இருக்கும் பொது பார்த்தாங்கனா, இதில் கொஞ்சமான அவர்களால் implement பண்ண முடியும், செயல்பாடுகளில் எவ்வளவு பெரிய மாற்றம் கிடைக்கும் தெரியுமா. அதிகாரம் இருந்தும் உபயோகிக்க முடியாமல் இருக்கிறார்கள். இது கொஞ்சம் மாறும்.

பழமைபேசி said...

வழுவின்றி அமையாது உலகு; யார் யார்க்கும்
புரிதலன்றி அமையாது ஒழுக்கம்!

பழமைபேசி said...

கலாசாரம்!

என்னது நானு யாரா? said...

பிரியா! நீங்க ரொம்ப நல்லா தான் சொல்றீங்க! ஆனா இப்போ நிலைமை சிறுக சிறுக மாறிக்கொண்டு தானே இருக்குது. தன் பிள்ளைகளின் திருமணம் சரியாக வரவில்லையென்றால், வேண்டாம் - டைவர்ஸ்ன்னு இங்கேயும் தான் குழந்தைகளை ஆதரிக்கிறாங்க. இது நகர் புறங்களில் மிகவும் பரவலாக இருக்கிறது. கிராமங்களிலும் சிறுக சிறுக தலைத்தூக்கும் நாகரீகம் தானே

என்னது நானு யாரா? said...

பிள்ளைகளின் வாழ்க்கையை தானே நிர்ணயிக்கும் பெற்றோர்களின் மனநிலையும் சிறுக சிறுக மாறி வருகின்றது என்றே எண்ணுகின்றேன். காதல் திருமணங்கள் அதிகமாய் நடக்கின்றனவே. பெற்றோர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவே செய்கின்றனர்.

ஏன் என் சொந்த கதையையே எடுத்துக்கொள்ளுங்கள். இந்த மூச்சு முட்டும் திருமண பந்தம் வேண்டாம் என்று நான் திருமண பந்தத்தில் நுழைவதை விரும்பவில்லை. பெற்றோர்கள் இது சரியில்லை என்று எத்தனை முறை எப்படி எப்படியோ சொன்னார்கள். ஆனால் என் முடிவில் தெளிவாக, உறுதியாக இருந்தேன். பின் அவர்கள் தங்களின் நிலையை தளர்த்திக்கொண்டார்கள். இப்போது அதனைப் பற்றிய விவாதங்கள் வீட்டில் வருவதில்லை.

இப்படியான பெற்றோர்களின் எண்ணிக்கையும் நாட்டில் உயர்ந்துக்கொண்டே தானே இருக்கிறது. இன்னும் சிறிது காலம் பொறுத்துப் பாருங்கள். இங்கேயும் நீங்கள் சொல்லும் மாற்றங்கள் எல்லாம் வருகிறதா இல்லையா என்று! கண்டிப்பாக ஒரு ஆரோக்கியமான சூழ்நிலையை நாம் எட்டிக்கொண்டு இருக்கின்றோம் என்றே எண்ணுகின்றேன்.

Muruganandan M.K. said...

"...நம்ம மக்களுக்கும் அப்டி உணர்வு வர்ற மாதிரி ஒரு ஜோடி... வாழ்க்கை அமைஞ்சு... அவங்க அப்டியே .."
உறவுகள் மனிதர்களில் அவ்வாறு மனிதத்துவத்தை வளர்த்தன. வளர்க்கின்றன. இப்பொழுது உணர்வுகள் மரத்துவிட்னவோ?

என்னது நானு யாரா? said...

அந்த ஆரோக்கியமான சூழ்நிலை வருவதற்கு பல காரணிகள் நம் கண்களில் தட்டுப்படுகின்றன. உயர்ந்து வரும் பெண் கல்வி! பொருளாதாரத்தில் உயர்ந்து வரும் பெண்களின் பங்கு! எங்கேயும் எப்போதும் பெண்கள் தனியாக பயணிக்கும் தைரியம்! காதலிக்க தைரியமாக முன்வருதல்! ஊடகங்கள் இந்த ஆரோக்கிய காதல்களை ஆதரித்தல்! என்று பல முனைகளில் கலாச்சாரம் சீராவதற்கு பல பல செயல்கள் நடந்தப்படி தானே உள்ளது.

அதனால் உங்களின் நிலை தற்போதிய நிலைக்கு சற்று அதிதமான நிலையாகவே படுகின்றது. எந்த துறையிலும் ஆதிக்கம் செய்யும் பெண்கள் வந்துக்கொண்டிருக்கிறார்கள். பெற்றோர்களும் ஊக்கம் அளித்துக்கொண்டிருக்கிறார்கள். மூட நம்பிக்கையில் கற்பை பற்றிய தவறான பயங்கள் உள்ள பெற்றோர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்றே எல்லா கணக்குகளும் சொல்கின்றன.

ஆரூரன் விசுவநாதன் said...

மிகச் சரியான வரிகள். ஒவ்வொருவரும் படித்து, படி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டியது.

நல்லாயிருக்குங்க.....தொடர்ந்து எழுதுங்க. வாழ்த்துக்கள்.

மணிஜி said...

இந்த தொடரை யாருக்கு டெடிகேட் செய்ய விரும்புகிறீர்கள்?

Unknown said...

குழந்தை வளர்ப்பு பற்றியும் அழகாக சொல்லி வருகிறீர்கள்.

50% நீங்க சொன்னவற்றை செய்கிறோம். 50% செய்வதில்லை. ஆனால் ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை. இன்னும் இரண்டு வயது கூட பூர்த்தியாகததால் திருத்திக்கொள்ள நிறைய நேரம் இருக்கிறது.

தொடருங்கள்.. தொடர்கிறேன்.

பவள சங்கரி said...

மிகவும் சிந்திக்க வைத்துள்ள பதிவு பிரியா.......இன்னும் தீர்மானிக்க முடியவில்லை.....கால மாற்றம் தான் பதில்......ESCAPISM இல்லை........குழப்பம்.....

கலகலப்ரியா said...

@வானம்பாடிகள்

நன்றி சார்..

||இங்க 18 வயசுக்கிட்ட இதச் சொன்னா புரிஞ்சிக்கிற பக்குவம் இருக்குமா? சந்தேகம்.||

அவங்கள குத்தம் சொல்ல முடியாதே...

கலகலப்ரியா said...

@Thekkikattan|தெகா

||மொத்தத்தில குழந்தைகளுக்கு சுயமாக ஒரு முடிவு எடுத்து அது நல்லதாவோ, கெட்டதாவோ முடிஞ்சாக் கூட அந்த பொறுப்பை சுமக்க விட்றதில்லைங்கிறீங்க.||

அதே.. அதே.. (இப்டி க்ளியரா புரிஞ்சுக்கிட்டு.. ஹைலைட் பண்றதுக்கு தாங்க்ஸ் தெகா..)

அதுக்குன்னு ஒரு பொறுப்பு இருக்குன்னு அத உணர விடுறதில்ல.. அப்டி சொல்றதுன்னா.. ராஜா நீ வளர்ந்து பெரியவனாகி.. பெரீய படிப்பெல்லாம் படிச்சு.. வந்து அம்மா அப்பாவ வச்சுக் காப்பாத்தணும்னு சொல்லுவாங்க..

கடைசில தாங்களும் வாழறதில்ல.. வாழ விடறதுமில்ல..

(தப்பா சொல்லி இருந்தேன்னா.. சுட்டிக் காட்டுங்க..)

கலகலப்ரியா said...

@Thekkikattan|தெகா

||அந்த மாதிரி வாழ்க்கை கல்வியெல்லாம்தான் நாங்க வீட்டுப் பாடத்தையே நாங்களே எழுதி ஸ்கூலுக்கு அனுப்புறதிலேயே அழிச்சு எழுதிடுறோமே! பின்ன எப்படி குழந்தைகள் தான் செய்யும் சரி/தப்புகளை பொறுப்பேத்துக்க ரெடியாகும்?||

இந்தக் கொடுமைய வேற செய்யறாங்களா.. அவ்வ்வ்..

உங்க பதிவு சூப்பரு... சொன்ன மாதிரி.. எதிர்க்கருத்து எதுவும் சொல்ல முடியாம எழுதுறீங்கன்னு வருத்தமா இருக்கு.. :o)

கலகலப்ரியா said...

@வானம்பாடிகள்

||/Soul legal custody... Soul physical custody... இத்யாதி இத்யாதி இருக்கு... அப்டி ரெண்டு பேருக்கும் கஷ்டமா guardianship.. /

ஒரு ரிக்வஸ்ட். இது தனியா ஒரு இடுகைல விளக்கணும். ||

ம்ம்.. பார்க்கலாம் சார்..

கலகலப்ரியா said...

@வானம்பாடிகள்

precaution-ஆ..?!.. எப்பூடீயெல்லாம் சாக்கிரதயா பதிவு எழுத வேண்டியிருக்கு... *SIGH*

கலகலப்ரியா said...

@RMS Danaraj

நன்றி தனராஜ்..

||பிள்ளைகளின் வாழ்க்கையை பெற்றோரே கட்டுப்ப்டுத்துவதும் அது பரம்பரை பரம்பரையாக தொடர்வதுமே சாதி,மதரீதியான உணர்வுகளை பாதுகாத்தும் வருகிறது.

இந்த குடும்ப அமைப்பு தன்னை மாற்றி கொள்ளாத பட்சத்தில் மற்ற எந்த முன்னேற்றமும் பயன் தராது.||

திரு வார்த்தை.. சத்யம்..!

கலகலப்ரியா said...

@Thekkikattan|தெகா

||ஆனால், உள்ளர பயமாத்தான் இருக்கும்... அடடட எப்படியடா இந்த உண்மையை முகம் கொள்வதென்று, ஆனால் எத்தனை நாளுக்குத்தான் சும்மா புரியாத மாதிரியே நடித்துக் கொண்டே வாழ்க்கையை ஓட்டுவது.||

ம்ம்.. நேர்மையான கவலை..

பட்டிமன்றம் நடத்தறோம்.. அதில பேசி எப்டியாவது ஜெயிச்சிடணும்.. அப்டின்னு பேசறது.. நிதர்சனம் பார்க்கறதில்ல... எங்க போறோம்னு யோசிக்கறதில்ல..

கொலைக்கேச கைல எடுத்துட்டோம்.. கொலையாளிக்காக வாதாடறோம்... அவன நிரபராதின்னு நிரூபிச்சே ஆகணும்னு வாதாடற வக்கீல்கள் இருக்கும் தேசத்தில்...

வேறென்ன முடியும்..

கலகலப்ரியா said...

@எல் போர்ட்.. பீ சீரியஸ்..

ம்ம்.. சாதாரணமான ஒரு நிஜம் எக்ஸ்ட்ரீமாதான் இருக்கு சந்தனா..

||தமிழ்நாட்டுல இருக்கற பொருளாதாரச் சூழல் வேற.. படிப்புச் சூழல் வேற.. தேர்வு முறை வேற.. வேலை வாய்ப்ப்பு முறை வேற.. அதனால அங்க கொஞ்சம் அதிக அக்கறை தேவைப்படுது.. ||

ஆமாம்.. ஆனா.. காந்திதானே சொன்னாரு... உன்னை நீ திருத்திக் கொண்டால் சமுதாயம் தானாகவே திருந்தும்னு.. (அதயும் நம்மாளுங்க.. கற்பு.. நெருப்புன்னு எதுக்காவது பொருத்தி இருப்பாங்க..)

இல்ல இப்டித்தான் வேற வழியில்லன்னு எல்லாருமே போய்க்கிட்டிருந்தா என்னாகும்..?!..

பேசணும் இல்லையா..?!

கலகலப்ரியா said...

@Sethu

நன்றி சேது..

||குழந்தை பிச்சை எடுக்கிற நிலமையாகிவிடுமோ அல்லது விபச்சாரத்திற்கு தள்ளப் பட்டுவிடுமோ என்று கவலை இல்லை.||

ம்ம்... இங்க விபச்சாரத்துக்குத் தள்ளப்படற நிலமை இல்லைன்னு சொன்னதுக்கு ஒரு சொட்டு..

சேதுவா இது.. :)))

கலகலப்ரியா said...

@Sethu

ரொம்ப அலசி ஆராய்ஞ்சிருக்கீங்க சேது...

||டிஸ்கி 1:

இது எதிர்வாதம் அல்ல. சமூகம் மாறனும்னா கூடவே சமுதாய அமைப்பும் மாறணும்னு சொல்லுவதற்கு தான்.

டிஸ்கி 2: பிரியா! பல கடுமையான விமர்சினங்களை, குறிப்பாக வார்த்தைப் பிரயோகங்களை, உங்க பதிவில் தவிர்த்திருந்தால், பலருக்கு உங்க கட்டுரைகள் எவ்வளவு உபயோகமயிருந்திருக்கும். இந்நேரம் பலர் தவிர்த்திருப்பர்களே. நீங்கள் எழுதியுள்ளத மத்தவங்க படிக்கணும்னு விரும்புகிறேன்.||

ம்ம்.. விதண்டாவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கறதுக்கு எனக்கு வேற வழி இல்ல சேது..

மரியாத கொடுக்கறதுதான்... ஆனா அதையே பிடிச்சுக்கிட்டு என் தலை மேல ஏறி ஆடுவோம்னா... நானும் ஆட வேண்டியதுதான்..

அப்புறம் கண்ணை இறுக மூடிக்கிட்டிருக்கிறவங்க கண்ணை வலுக்கட்டாயமா திறக்க வச்சு படிக்க வைக்கறதில என்னாயிடப் போறது..

என்னதான்னு தெரிஞ்சுக்க விரும்பறவங்க படிப்பாங்க.. அது போதும்..

கலகலப்ரியா said...

@பழமைபேசி

||வழுவின்றி அமையாது உலகு; யார் யார்க்கும்
புரிதலன்றி அமையாது ஒழுக்கம்!||

நன்றி பழமை... நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியல..

ஆனா... நீங்க சொல்றது வாஸ்தவம்... புரிதலன்றி அமையாது பண்பு.. மற்றும் பண்பாடு..

பிரபாகர் said...

பாடமாய் உணரும்போது, வாய்மூடி கேட்கத்தான் வேண்டும், உள்வாங்கி படிக்கத்தான் வேண்டும்.

தொடருங்கள் சகோதரி! ஆவலாய் அடுத்த பாகத்திற்கு.

பிரபாகர்...

கலகலப்ரியா said...

@பழமைபேசி

||கலாசாரம்!||

அப்டியா... நன்றி..

எனக்குக் கலாசாரம்னு வாயில உச்சரிக்கிறப்போ கொஞ்சம் ட்ராமாட்டிக்கா இருக்கு..

இப்போதைக்கு நாம பேச்சுத் தமிழ்ல சொல்லிட்டிருக்கோம்.. கலாச்சாரம்னே இருக்கட்டும் விடுங்க.. எனக்குப் பிடிச்சிருக்கு.. ஒன்னும் ஆயிடாது.. :o)

கலகலப்ரியா said...

@என்னது நானு யாரா?

||இப்படியான பெற்றோர்களின் எண்ணிக்கையும் நாட்டில் உயர்ந்துக்கொண்டே தானே இருக்கிறது. இன்னும் சிறிது காலம் பொறுத்துப் பாருங்கள். இங்கேயும் நீங்கள் சொல்லும் மாற்றங்கள் எல்லாம் வருகிறதா இல்லையா என்று! கண்டிப்பாக ஒரு ஆரோக்கியமான சூழ்நிலையை நாம் எட்டிக்கொண்டு இருக்கின்றோம் என்றே எண்ணுகின்றேன்.||

உங்க பதில எல்லாம் படிக்கிறப்போ ரொம்பத் தெம்பா இருக்குங்க..

ஏதோ ஒரு நம்பிக்கை.. ம்ம்.. நன்றி..

கலகலப்ரியா said...

@Dr.எம்.கே.முருகானந்தன்

உணர்வு இருந்தாலே அடிப்போம்... கூண்டோட கொளுத்துவோம்னா... எப்டி மரக்காமப் போகும்...

இரசாயனம் ஊத்தியாவது மரக்க வைப்போம்..

கலகலப்ரியா said...

@ஆரூரன் விசுவநாதன்

நன்றி ஆரூர்.. :)

கலகலப்ரியா said...

@மணிஜீ......

அடப் பாவிகளாஆஆ...

கலகலப்ரியா said...

@முகிலன்

நன்றி முகிலன்.. ம்ம்.. பார்த்துக்கிடுங்க..

கலகலப்ரியா said...

@நித்திலம்-சிப்பிக்குள் முத்து

நன்றி நித்திம்மா... நான் எஸ்கேப்ன்னு நினைக்கல... உங்க பதில்ல இருக்கிற நேர்மை புடிச்சிருக்கு...

குழப்பம் கண்டிப்பா இருக்கும்... கொஞ்சம் கால அவகாசம் தேவைப்படும்..

கலகலப்ரியா said...

@பிரபாகர்

நன்றிண்ணா.. வேற என்னத்த சொல்றது..

suneel krishnan said...

பெற்றோர்கள் மூன்று வகைன்னு எனக்கு படுது ..
முதல் வகை -நேற்றைய பெற்றோர்கள் -நம்ம தாத்தா ,பாட்டி இவுங்களை புரிஞ்சிக்கும் போது எனக்கு ஏற்பட்ட புரிதல்
ஆறேழு பிள்ளைகள் -போதிய கவனம் இருக்காது ,வெளிஉலக அறிவு இல்லாத தாய் ,வீட்டிற்க்கு ஏற்ற வருமானம் ஈட்டி தருவதை நோக்கமாக கொண்ட தந்தை ,பிள்ளைகளின் ஒழுங்கீனங்கள் அவருக்கு பெருத்த கோவத்தை தரும் -தந்தை எனும் ஒரு கெத்து எப்பொழுதும் இவர்களின் குணம் .
இத்தகைய சூழலில் வளர்ந்த பிள்ளைகள் -இரு வகையாக வெளி வருகின்றனர்
ஒன்று -பெற்றோரின் போதிய கவனம் இல்லாத -சுதந்திர சிந்தனை (ஓரளவுக்கு ,திருட்டுத்தனமாக ),சொந்த தொழில் ,புதிய கல்வி ,சகோதரர்கள் மற்றும் நண்பர்களின் மூலம் கற்றுக்கொள்ளப்படும் விஷயம்.இவர்கள் தன தந்தையின் வழி தவறு என்று உணர்ந்து தனது பிள்ளையை ஓரளவுக்கு நன்றாக வளர்ப்பார் .
இரண்டாவதாக -பெற்றோரின் போதிய கவனம் இல்லாத பொழுது -எதையும் சரியாக பயிலாது ,தன்னம்பிக்கை இழந்து ,பாசம் ,அன்புக்கான ஏக்கம் கடைசி வரை அடி ஆழத்தில் இருக்கும் ,இவர்கள் சிலநேரங்களில் தங்களது தந்தை வழியை பின்பற்றுவர்,தங்களது தாழ்வு மனோநிலையை மறைக்க தங்களை குடும்பத்தின் 'பவர் மையமாக ' தக்க வைத்து கொள்ளவர் ,போலி கெளரவம் ,மரியாத இதெல்லாம் சாக்குகள்

suneel krishnan said...

இரண்டாவது வகை பெற்றோர் -இன்றைய பெற்றோர் - அதிக செல்லம் ,pampering , ஒரே பிள்ளை ,கேட்டதை வாங்கி கொடுத்து ,அவர்களை அதேத அன்பினால் கொட்டி வளர்ச்சி மற்றும் சிந்தனை தடை ஏற்பட வழி வகை செய்கின்றனர் .
மூன்றாவது வகை - ஓரளவு சம நிலை பெற்ற பெற்றோர்கள் , திணிக்காமல் அதே சமயம் அன்பு ,கண்காணிப்பு ஆகியவைகளை சரி விகிதத்தில் வழங்கி , குழந்தைகளுக்கு பாதுக்காப்பின்மை உணர்வு ஏற்படுத்தாமல் ,அதே சமயம் அவர்களுக்கு வளைந்தும் கொடுக்காமல் ,ஒரு சம நிலையில் வளர்க்கிறார்கள் ,இத்தகைய சூழலில் வளரும் குழந்தை ,சாதனையலாரக வருவானா இல்லையா என்பது தெரியாது ,ஆனால் நல்ல அடிப்படை மோரல் கொண்ட.ஓரளவுக்கு தனது வாழ்க்கை மற்றும் தேவைகளை அறிந்த மனிதனாக ,பிறருக்கு இம்சை ஏற்படுத்தாத ஒரு மனிதனாக வெளி வருவான் .இத்தகைய பெற்றோர்கள் எல்லா காலக்கட்டத்திலும் ஒரு மைனாரிட்டி யாக ஆங்காங்கு வாழ்கின்றனர்.

உங்கள் பதிவு செறிவாக சிந்திக்கும் வண்ணம் உள்ளது ,புதிய விவாதங்களுக்கு தளம் அமைக்கிறது

கருடன் said...

@கலகலப்ரியா

நான் இந்த விள்ளாட்டுக்கு வரவில்லை. உங்க பதிவுதான் 7 பக்கம் பார்த்தா கமெண்ட் 17 பக்கம் இருக்கு. படிக்கனும் நினைச்சாலே கண்ண கட்டுது... படிக்கனும் ஆசைபட்டா கூட முடியலை. அதனால் என்னை போன்ற பாமர மக்களை மனதில் வைத்து சற்று சிறியதாக எழுதினால்... மிக்க மகிழ்ச்சி அடைவேன்.... :))))

கலகலப்ரியா said...

@dr suneel krishnan

அருமையான அலசல்...

||தங்களது தாழ்வு மனோநிலையை மறைக்க தங்களை குடும்பத்தின் 'பவர் மையமாக ' தக்க வைத்து கொள்ளவர் ,போலி கெளரவம் ,மரியாத இதெல்லாம் சாக்குகள்||

அப்பட்டமான நிஜம்..

||இத்தகைய பெற்றோர்கள் எல்லா காலக்கட்டத்திலும் ஒரு மைனாரிட்டி யாக ஆங்காங்கு வாழ்கின்றனர்.||

:(...

ரொம்ப நன்றி..

கலகலப்ரியா said...

@TERROR-PANDIYAN(VAS)

சிறியதா எழுதினா... என்ன சொல்ல வர்றேன்னே புரியாம misunderstanding வருது... எல்லாம் ஒரே பதிவில சொல்ல முடியலன்னாலும்... ஓரளவு கோர்வையா சொல்லணும்னு நினைச்சேன்...

எழுதிக்கிட்டு போறப்போ... இது கவனிக்கறது கஷ்டம்... நீங்க ரொம்பச் சிரமப்பட்டு என்னோட போஸ்ட் படிக்கணும்னு நினைக்கறது நினைச்சா... அவ்வ்.. எனக்கு அழுவாச்சியா வருது...

கல்வெட்டு said...

//குழந்தைங்களுக்கு என்ன என்ன உரிமை இருக்குன்னு கத்துக் கொடுப்பாங்க... அதே மாதிரி குழந்தைங்களுக்கு என்ன என்ன கடமை இருக்குன்னு கத்துக் கொடுப்பாங்க... ஸோ...//

கலாச்சார கம்னாட்டிகள் என்றைக்காவது தனது குழந்தைக்கு சமூகத்தில் இருக்கும் கடமையைச் சொல்லிக்கொடுத்திருக்குகளா என்று தெரியாது.

பேமானி பெத்த கோவிலில் பரசாதத்தை தின்னுவிட்டு அப்படியே குடும்பசகிதம் தெருவில் போடும் நாய்கள்தான், இன்னும் கலாசாரததை பொம்பளையின் உறவிலும் , பொம்பளை போடும் சட்டையிலும் ,டவுசரிலும் மட்டும் இருப்பதாக பிதற்றிக் கொண்டுள்ளன. :-((((

**

தனிமனித உரிமைகளும் அந்த உரிமையுடன் பேக்கேஜாக வரும் கடமையையும் கற்றுக்கொடுத்தாலே போதும் குழந்தைகள் அவர்களுக்கான தேவையைத் தீர்மானித்துக் கொள்வார்கள்.

**
டமில் கல்சாரத்தைக் காக்க ஓலைச்சுவடியில் எழுதாமல் ஏன் பிளாக்ஸ்பாட்டில் எழுதித் தொலைக்கனும் கல்ச்சார கம்னாட்டிகள்?

**

தேவதாசி முறையை ஒழிக்க அரசு சட்டம் கொண்டுவர முயன்ற‌போது ஒரு கல்ச்சார காவலர் (பிரபல தேசியத் தலைவர் சத்தியமூர்த்தி அய்யர் ) "தேவதாசி முறை கடவுள் தொண்டு, புனிதனாமனது" என்றார்

"ஆகா பேஷ் பேஷ் உங்கவீட்டு பொம்ப‌ளீசை கொஞ்சநாளைக்கு அந்த புனிதத்தைச் செய்யச் சொல்லுங்கள்" ....என்று மண்டையில் அடித்தவர் அதே தேவவதாசி மரபில் வந்து சமூகத்தை மாற்றப்பாடுபட்ட முத்துலட்சுமி அவர்கள்.




பிரபல தேசியத் தலைவர் சத்தியமூர்த்தி அய்யர்....

தேவதாசி முறை நம்மால் உருவாக்கப் பட்டதல்ல அது நீண்ட காலத்துக்கு முன்னர் நம் முன்னோர்களால் உருவாக்கப் பட்டது இன்றைய சமூகத்துக்கும் அது தேவைப்படுகிறது இவர்கள் கோவில்களில் தொண்டு செய்வதற்காக சாஸ்திரப்படி அமர்த்தப்பட்டவர்கள் தேவதாசி முறையை அகற்றிவிட்டால் அது கடவுளுக்கு எதிரான செயல் எனவே இந்த மசோதா முறைகேடானது என உரக்கப் பேசினார்.

பெண்ணுலகை இழிவு படுத்தும் இந்த கருத்தை எதிர்த்து முத்துலட்சுமி ரெட்டி சட்ட மன்ற மேலவையில் பின்வருமாறு பேசினார்.

" எங்கள் சமூகத்தைச் சார்ந்த பெண்கள் கடவுள்களுக்குத் தேவதாசிகளாகத் தொண்டு செய்வதை நீண்டகாலமாக செய்து விட்டோம். அப்படிப்பட்ட புனிதமானதும் கடவுளுக்கு உரியதுமான தொண்டினை இனிமேல் சத்தியமூர்த்தி அய்யர் அவர்களின் வகுப்பைச் சார்ந்த பெண்கள் செய்யட்டும்" என்று பளீரென்று பேசினார்.


‍‍‍‍தேவதாசிகளும் இராமாமிர்தத்தின் போராட்டங்களும்
http://www.keetru.com/anangu/sep07/vennila.php


http://rajasugumaran.blogspot.com/2007/06/blog-post.html

.

Thekkikattan|தெகா said...

Dr. சுனில், அருமையா உடைச்சு போட்டிருக்கீங்க. keep giving us more. thanks!

அது சரி(18185106603874041862) said...

//
அடியாத மாடு படியாதுன்னு சொல்லிச் சொல்லி... குழந்தைங்கள மாடாக்கி அடி அடின்னு அடிப்பாங்க...
//

நான் வாங்கின அடிக்கெல்லாம் கணக்கே இல்ல. வடிவேலுவை விட அதிகமா வாங்கிருக்கோம்ல?

கலகலப்ரியா said...

||கல்வெட்டு said...
//குழந்தைங்களுக்கு என்ன என்ன உரிமை இருக்குன்னு கத்துக் கொடுப்பாங்க... அதே மாதிரி குழந்தைங்களுக்கு என்ன என்ன கடமை இருக்குன்னு கத்துக் கொடுப்பாங்க... ஸோ...//

கலாச்சார கம்னாட்டிகள் என்றைக்காவது தனது குழந்தைக்கு சமூகத்தில் இருக்கும் கடமையைச் சொல்லிக்கொடுத்திருக்குகளா என்று தெரியாது.

பேமானி பெத்த கோவிலில் பரசாதத்தை தின்னுவிட்டு அப்படியே குடும்பசகிதம் தெருவில் போடும் நாய்கள்தான், இன்னும் கலாசாரததை பொம்பளையின் உறவிலும் , பொம்பளை போடும் சட்டையிலும் ,டவுசரிலும் மட்டும் இருப்பதாக பிதற்றிக் கொண்டுள்ளன. :-((((||



ம்ம்... நன்றி கல்வெட்டு.. கோபம் ரொம்ப நியாயமானதுதான்...

கலகலப்ரியா said...

||தனிமனித உரிமைகளும் அந்த உரிமையுடன் பேக்கேஜாக வரும் கடமையையும் கற்றுக்கொடுத்தாலே போதும் குழந்தைகள் அவர்களுக்கான தேவையைத் தீர்மானித்துக் கொள்வார்கள். ||

மறுக்க முடியாத உண்மை..

அது சரி(18185106603874041862) said...

//

படி படி படி.... எனக்கு நீ எஞ்ஜின்-ஈயர் ஆகனும்.. டாக்டர் ஆகணும்... எல்லாத்திலயும் நூறு மார்க் வாங்கணும்னு குரல்வளையைப் புடிச்சுத் திருகறதில்லை... //

எனக்கு குரல்வளையே இல்லை. ரொம்ப நாள் முன்னாடியே திருகியாச்சு.

கலகலப்ரியா said...

||டமில் கல்சாரத்தைக் காக்க ஓலைச்சுவடியில் எழுதாமல் ஏன் பிளாக்ஸ்பாட்டில் எழுதித் தொலைக்கனும் கல்ச்சார கம்னாட்டிகள்?||

:)))

அது சரி(18185106603874041862) said...

//
வா காத்தாட வெளில நடந்து போய்ட்டு வரலாம்.. காட்டுக்குப் போகலாம்.. இத எல்லாம் விட அங்க கத்துக்க நிறைய இருக்கு... வாழ்க்கைக்குத் தேவையானது..!
//

வாழ்க்கை தான் உண்மையான டீச்சர். எத்தனை ஆயிரம் புக் படிச்சாலும் மேடை போட்டு பேசினாலும் ஒரே ஒரு ஆக்ஸிடென்ட் சொல்லித் தர்ற பாடம் யாரும் சொல்லித் தர முடியாது.

கலகலப்ரியா said...

||தேவதாசி முறையை ஒழிக்க அரசு சட்டம் கொண்டுவர முயன்ற‌போது ஒரு கல்ச்சார காவலர் (பிரபல தேசியத் தலைவர் சத்தியமூர்த்தி அய்யர் ) "தேவதாசி முறை கடவுள் தொண்டு, புனிதனாமனது" என்றார்

"ஆகா பேஷ் பேஷ் உங்கவீட்டு பொம்ப‌ளீசை கொஞ்சநாளைக்கு அந்த புனிதத்தைச் செய்யச் சொல்லுங்கள்" ....என்று மண்டையில் அடித்தவர் அதே தேவவதாசி மரபில் வந்து சமூகத்தை மாற்றப்பாடுபட்ட முத்துலட்சுமி அவர்கள்.




பிரபல தேசியத் தலைவர் சத்தியமூர்த்தி அய்யர்....

தேவதாசி முறை நம்மால் உருவாக்கப் பட்டதல்ல அது நீண்ட காலத்துக்கு முன்னர் நம் முன்னோர்களால் உருவாக்கப் பட்டது இன்றைய சமூகத்துக்கும் அது தேவைப்படுகிறது இவர்கள் கோவில்களில் தொண்டு செய்வதற்காக சாஸ்திரப்படி அமர்த்தப்பட்டவர்கள் தேவதாசி முறையை அகற்றிவிட்டால் அது கடவுளுக்கு எதிரான செயல் எனவே இந்த மசோதா முறைகேடானது என உரக்கப் பேசினார்.

பெண்ணுலகை இழிவு படுத்தும் இந்த கருத்தை எதிர்த்து முத்துலட்சுமி ரெட்டி சட்ட மன்ற மேலவையில் பின்வருமாறு பேசினார்.

" எங்கள் சமூகத்தைச் சார்ந்த பெண்கள் கடவுள்களுக்குத் தேவதாசிகளாகத் தொண்டு செய்வதை நீண்டகாலமாக செய்து விட்டோம். அப்படிப்பட்ட புனிதமானதும் கடவுளுக்கு உரியதுமான தொண்டினை இனிமேல் சத்தியமூர்த்தி அய்யர் அவர்களின் வகுப்பைச் சார்ந்த பெண்கள் செய்யட்டும்" என்று பளீரென்று பேசினார்.


‍‍‍‍தேவதாசிகளும் இராமாமிர்தத்தின் போராட்டங்களும்
http://www.keetru.com/anangu/sep07/vennila.php


http://rajasugumaran.blogspot.com/2007/06/blog-post.html||

சுவாரஸ்யமான தகவல்... ரொம்ப நன்றி கல்வெட்டு.. இணைப்பு படிக்கறேன்... கொஞ்சம் அவகாசம் தேவை..

அது சரி(18185106603874041862) said...

//

நீ உன்னோட வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தால்... நான் தூக்கில் தொங்குவேன் என்று சொல்வது எத்தகைய கீழ்த்தரமான செயல்... எத்தனை குரூரம் நிறைந்தது... இது ஒரு கலாச்சாரம்.... இதுக்குப் பேரு மேலான பண்பாடு..
//

இது ஒரு கோஷ்டின்னா இன்னொரு கோஷ்டி அந்த பொண்ணையோ பையனையோ தொங்க விட்ரும். குடும்ப கவுரவத்தை காப்பத்துறாங்களாம். :(

அது சரி(18185106603874041862) said...

//
பெர்ர்ர்ர்ர்ருமையா பீத்திக்குவாங்க...
//

அதே!

'பரிவை' சே.குமார் said...

ஒரு அருமையான பதிவு.

தொடருங்கள்.

vinthaimanithan said...

//பல கடுமையான விமர்சினங்களை, குறிப்பாக வார்த்தைப் பிரயோகங்களை, உங்க பதிவில் தவிர்த்திருந்தால், பலருக்கு உங்க கட்டுரைகள் எவ்வளவு உபயோகமயிருந்திருக்கும்.//

ஆமோதிக்கிறேன்...

கடிதோச்சி மெல்ல எறிக!

கலகலப்ரியா said...

@அது சரி(18185106603874041862)

||எனக்கு குரல்வளையே இல்லை. ரொம்ப நாள் முன்னாடியே திருகியாச்சு.||

அப்டியா...:o)

கலகலப்ரியா said...

@அது சரி(18185106603874041862)

||வாழ்க்கை தான் உண்மையான டீச்சர். எத்தனை ஆயிரம் புக் படிச்சாலும் மேடை போட்டு பேசினாலும் ஒரே ஒரு ஆக்ஸிடென்ட் சொல்லித் தர்ற பாடம் யாரும் சொல்லித் தர முடியாது.||

அது..!

||இது ஒரு கோஷ்டின்னா இன்னொரு கோஷ்டி அந்த பொண்ணையோ பையனையோ தொங்க விட்ரும். குடும்ப கவுரவத்தை காப்பத்துறாங்களாம். :(||

அதயும் சொன்னேனே...

நன்றின்னா என்ன... அவ்வ்..

கலகலப்ரியா said...

@சே.குமார்

நன்றி குமார்..

கலகலப்ரியா said...

@விந்தைமனிதன்

நன்றிங்க..

சீறுவோர்ச் சீறு..

RMD said...

நாடு,இனம் விடுதலை அடையலாம்.மனிதம் தனக்குதானே பூட்டிக் கொண்ட விலங்குக்ளில் இருந்து விடுதலை அடைவது எப்போது?

கலாச்சாரம் என்பது மனிதர்களை மனிதர்களாக மதிப்பதுதான். அது ஒரு அடையாளமாகவே பார்க்கப் படுவதுதான் பிரச்சினை.அந்த அடையாளத்தை பயன்படுத்தி கூட்டம் சேர்க்கலாம்.ஆட்சி அமைக்கலாம்.மற்ற அடையாளக்காரர்களை கொன்று குவிக்கலாம்.நமது அடையாளத்திற்காக உயிரை கூட தியாகம் செய்ய வேண்டும்.அப்படி செய்தால் உனக்கு மோட்சம் கிட்டும்.

இந்த அடையாளத்தை மறுத்தால் உனக்கு நரகம் கிடைக்கும் இறப்பிற்கு பின் அல்ல‌,இப்பொழுதே,இக்கணமே.

இரண்டு பேர் மனமொப்பி,சட்டங்களுக்கு உட்பட்டு, எந்த ஒரு பின்விளைவையும் சந்திக்கும் திறனுடன் ஒரு செயலை செய்யும் பட்சத்தில் தடை சொல்ல யாருக்கும் உரிமை இல்லை

Vijay said...

//அம்மாப் பறவை... குஞ்சுப் பறவைய... சிறகோட சிறகு கோர்த்துக்கிட்டு... வானத்தில வலம் வந்து... இங்க பாரு காடு... இங்க பாரு கூட்டுக்கு குச்சி... அங்க பாரு நீ சாப்டறதுக்கு புழுன்னு எல்லாம் சொல்லிக் கொடுக்கறதில்ல... அத விட முக்கியமா... ஆத்தீ கூட்ட விட்டு வெளில போகாத... சிறகக் கட்டிக்கிட்டு உள்ளயே கெட.. பறந்தியோ சிறகப் பிச்சுப்புடுவேன் பிச்சுன்னு எல்லாம் சொல்றதில்ல... //

உங்களுடன் உடன்பட முடியாது... கற்றுக்கொடுத்தலும் கட்டுப்பாடுகளும் பறவைகளிடமும் இருக்கின்றன... நீங்கள் பறவைகளை எவ்வளவு தூரம் கவனித்திருப்பீர்களோ தெரியாது...
இந்தா பாரு சாப்பாடு என்று தாய் தந்தைப் பறவைகள் தங்கள் குஞ்சுகளுக்கு சொல்லிக் கொடுப்பதை நிறையவே பார்த்திருக்கிறேன் (http://picasaweb.google.com/pvijayalayan/Aves#5542921320698532082)... அப்படியே கூட்டை விட்டு வெளியே தாவ முயற்சிக்கும் குஞ்சுகளை உள்ளே இழுத்துவிடும் பறவைகளையும் பார்த்திருக்கிறேன்...

எமது சமுதாயத்தில் மாற்றப்பட வேண்டிய பழக்க வழக்கங்கள், நடைமுறைகள் நிறையவே இருக்கின்றன. அதே நேரம் மேலைத்தேய வாழ்க்கை முறைதான் சிறந்தது என்று நீங்கள் மிகைப்படுத்திக் கூறுவதாகவே எனக்குப் படுகின்றது. நல்லதும் கெட்டதும் சகல இடங்களிலும் உள்ளது.

மணிநரேன் said...

இந்த பகுதி ரொம்பவே பிடித்தது.:)

கலகலப்ரியா said...

@RMS Danaraj

நன்றி தனராஜ்...

||நாடு,இனம் விடுதலை அடையலாம்.மனிதம் தனக்குதானே பூட்டிக் கொண்ட விலங்குக்ளில் இருந்து விடுதலை அடைவது எப்போது?||

தெரியல...:(

கலகலப்ரியா said...

@Vijay

||Vijay said...

//அம்மாப் பறவை... குஞ்சுப் பறவைய... சிறகோட சிறகு கோர்த்துக்கிட்டு... வானத்தில வலம் வந்து... இங்க பாரு காடு... இங்க பாரு கூட்டுக்கு குச்சி... அங்க பாரு நீ சாப்டறதுக்கு புழுன்னு எல்லாம் சொல்லிக் கொடுக்கறதில்ல... அத விட முக்கியமா... ஆத்தீ கூட்ட விட்டு வெளில போகாத... சிறகக் கட்டிக்கிட்டு உள்ளயே கெட.. பறந்தியோ சிறகப் பிச்சுப்புடுவேன் பிச்சுன்னு எல்லாம் சொல்றதில்ல... //

உங்களுடன் உடன்பட முடியாது... கற்றுக்கொடுத்தலும் கட்டுப்பாடுகளும் பறவைகளிடமும் இருக்கின்றன... நீங்கள் பறவைகளை எவ்வளவு தூரம் கவனித்திருப்பீர்களோ தெரியாது...
இந்தா பாரு சாப்பாடு என்று தாய் தந்தைப் பறவைகள் தங்கள் குஞ்சுகளுக்கு சொல்லிக் கொடுப்பதை நிறையவே பார்த்திருக்கிறேன் (http://picasaweb.google.com/pvijayalayan/Aves#5542921320698532082)... அப்படியே கூட்டை விட்டு வெளியே தாவ முயற்சிக்கும் குஞ்சுகளை உள்ளே இழுத்துவிடும் பறவைகளையும் பார்த்திருக்கிறேன்...||

ம்ம்... பறவைக்குஞ்சுக்கு தாய்ப்பறவை வழிகாட்டறது எல்லாம் சரிங்க... ஆனா.. சிறகு முளைச்சு பறந்து போற பருவம் வந்ததும் அது சிறகப் புடிச்சு இழுத்து வைச்சிருக்கிறதில்லைன்னு சொன்னேன்....

பிள்ளைங்கள பெத்து ஒரு வயசு வந்து நடக்க ஆரம்பிச்சதும் அப்டியே விட்டுடுங்க... வீதில போய் தனியா நடை பழகட்டும்ன்னு சொல்லலை...

அவங்க வளர்ந்ததுக்கப்புறமும் ஒரு சப்போர்ட்டா இருக்க வேண்டியதுதான்... முட்டுக்கட்டை வேணாம்...


அது எப்டி கரெக்ட்டா தப்பாவே புரிஞ்சுக்கிறீங்க..?!

....
சரி நீங்க சொல்ற மாதிரி பறவை சிறகு முளைச்சுப் பறக்கிறப்பவும் சிறகப் புடிச்சுக்கிட்டே தாய்ப்பறவை அலையுதுன்னு வச்சுக்கலாம்... அப்போ அதப் பார்த்து மனுஷனும் பண்ணனுமா..?! அப்போ அன்றில்... மாடப்புறாவ பார்த்து நடக்கட்டும்கிறீங்களா...

முக்கியமா... நான் இங்க பறவைகள் வாழ்க்கை முறை பத்திப் பேசிட்டிருக்கல... நம்மாளுங்க சொல்ற உதாரணத்துக்கு பதில் சொன்னேன்..

கலகலப்ரியா said...

@Vijay

||எமது சமுதாயத்தில் மாற்றப்பட வேண்டிய பழக்க வழக்கங்கள், நடைமுறைகள் நிறையவே இருக்கின்றன. அதே நேரம் மேலைத்தேய வாழ்க்கை முறைதான் சிறந்தது என்று நீங்கள் மிகைப்படுத்திக் கூறுவதாகவே எனக்குப் படுகின்றது. நல்லதும் கெட்டதும் சகல இடங்களிலும் உள்ளது.||

மேலைத்தேய வாழ்க்கை முறை"தான்" சிறந்ததுன்னு நான் பட்டிமன்றம் ரேஞ்சுக்கு இங்க பேசலை...

இங்க மதம், இனம்ன்னு ஆரம்பிச்சு எல்லா விஷயத்திலயும் இவங்க கிட்ட என்ன குறை இருக்குன்னு அவங்களே பேசி.. விவாதிச்சு எல்லாம் செய்வாங்க... இல்ல நாமதான் பெஸ்ட்னு யாரும் சொல்றதில்ல... மத்தவங்கள புரிஞ்சுக்க ட்ரை பண்றாங்க... அதனாலதான் அவங்க முன்னோக்கிப் போயிட்டிருக்காங்க...

நாம அப்டி பண்றதில்லை... எல்லாத்தயும் பொத்திப் பொத்தி வச்சு அழுக வச்சு நாறடிச்சிட்டிருக்கோம்.. அத ஒத்துக்க முடியலைன்னா.. ஒண்ணும் ..... பண்ண முடியாது...

உங்க கருத்துக்கு நன்றிங்க..

கலகலப்ரியா said...

@மணிநரேன்

நன்றி மணிநேரன்...

ரோஸ்விக் said...

//டிஸ்கி 2: பிரியா! பல கடுமையான விமர்சினங்களை, குறிப்பாக வார்த்தைப் பிரயோகங்களை, உங்க பதிவில் தவிர்த்திருந்தால், பலருக்கு உங்க கட்டுரைகள் எவ்வளவு உபயோகமயிருந்திருக்கும். இந்நேரம் பலர் தவிர்த்திருப்பர்களே. நீங்கள் எழுதியுள்ளத மத்தவங்க படிக்கணும்னு விரும்புகிறேன்.||//

உங்கள் கருத்துக்களோடு பல இடங்களில் ஒத்துப்போன(சில இடங்களில் வேறுபாடு இருந்தது) எனக்கும் கூட இது சம்பந்தப்பட்ட பழைய இடுகைகளை (நாலாம் பாகம் வரையென்று நினைக்கிறேன்) வாசிக்கும்போது ஒருவகையான வெறுப்பு வாசிப்பின் மீது வந்தது (கருத்து மீதல்ல).

பிந்தைய பாகங்களை சுவாரஸ்யமாக வாசித்து பல இடங்களில் தெளிவடைந்திருக்கிறேன். அதற்கு காரணம் சொல்லிய விதம்.

மீண்டும் மீண்டும் சீறினேன் சீறினேன் என்று சொல்லாமல்... கொஞ்சம் சாந்தமாக இருங்களேன்.

கலகலப்ரியா said...

@ரோஸ்விக்

கருத்துக்கு நன்றி ரோஸ்விக்... வெறுப்பு வரலைன்னாதான் ஆச்சர்யம்..

என்ன பண்ண.. எனக்கு முடிஞ்ச மாதிரிதானே சொல்ல முடியும்..:)..

சாந்தம்... ம்ம்.. நான் நானே இல்லாம.. போலியா இருக்கணும்கிறீங்க...

ட்ரை பண்றேன்...

Vijay said...

//அது எப்டி கரெக்ட்டா தப்பாவே புரிஞ்சுக்கிறீங்க..?!//
நன்றி, சரியாக எடைபோட்டதற்கு

shrek said...

Hi, i like these (ithu thaanda kalacharam) posts. btw the problem is maybe our people haven't have the exposure (to outside world/cultures) - even if they had - it was viewed through "kalacharam goggles".

they are stubborn. they will not change that easily, unless they decide to change themselves. that will happend when they see alternatives by themselves. even we were like that only before coming to western world. but westerners smashed our egos and fake prides with simple logical meaningful questions :)) then we 'tried' to think, we changed.

hope you are trying to do the same to our people who read this blog. keep up the good work.

people say 'taliban' are brainwashed. actually (in some sense)we indians are too with our culture.

btw its 'sole' legal custody.

கலகலப்ரியா said...

@shrek

ty... shrek... thatz a damned spello... shall correct it.. :)