நீரற்றுப் பாளம் பாளமாக வெடித்திருக்கும் நிலப் பரப்பின் மேற்குப் பகுதியில் சிற்றாறொன்று ஓடுகிறது, சுற்றி ஈரப்பசையிருக்கிறது என்றபடி கையில் சிறு மண்வெட்டியுடனும், வெண் தாமரைச் செடியுடனும் நகர்ந்து கொண்டிருக்கும் என்னிடம், எங்கோ புதைந்திருக்கும் சேறு பற்றியும், ஆங்காங்கே அருகில் தேங்கியிருக்கும் குட்டை நீர் பற்றியும், அதில் நெளியும் புழுக்கள் பற்றியும் பேசிக் கொண்டிருந்தால், அவர்களை நிராகரித்து மேற்குப் பகுதி நோக்கி முன்னேறுவது தவிர்க்க முடியாதது. என் கையில் மண்வெட்டி தூக்குவதற்குண்டான பலமிருக்கும் மணித்துளிகளும், நீரற்றுத் துவண்டிருக்கும் தாமரையின் உயிராதாரமுமே பிரதானம். மற்றவை வீண்... அந்த நிராகரிப்பு இங்கு அவசியம்... அதைத் தாங்கவியலாதவர்.. தூற்றும் மண்... அடுத்த சூறாவளிக்கு அவர் கண்களிலேயே விழும் என்பது... இயற்கையின் விதி.. மற்றும்.. நியதி!
நிற்க.
மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாது... அவர்களை நிராகரிப்பது மட்டுமல்லாது நிந்திக்கவும் செய்பவர்களை... என் காற்தூசிக்கும் மதியேன்...!!!! ... அது ஒட்டு மொத்த உலகமாக இருந்தால்... எனக்கு இந்த உலகமே தூசி..!!!!!! யாதும் ஊரே... யாவரும் கேளீர்..!!!!
______________________________ ______________________________ ____
நல்ல பிள்ளைங்களுக்கு... என்னென்ன வரைவிலக்கணங்கள் கொடுத்து வைத்திருக்கிறார்களோ.. மெச்சுவதற்கு எத்தனை வார்த்தைகள் உருவாக்கி வைத்திருக்கிறார்களோ, அதே போல் கெட்ட பிள்ளைகளுக்கும் வைத்திருக்கிறார்கள்.
நான் பெண்ணீயவாதியல்ல... பாலைப் பொதுவில் வைக்கலாம்.... ஆனால் விபச்சாரி என்ற பதத்திலிருந்து... பற்பல சொற்கள் பெண்களைக் குறி வைத்தே பிறந்திருப்பதனால்...
அடங்காப்பிடாரி, தேவடியா, வேசி, திமிர் பிடிச்சவ, மானங்கெட்டவ, கூறு கெட்டவ, விவஸ்த கெட்டவ, ஓடுகாலி, அறுதலி, வாழாவெட்டி (இதுவும் கேவலமான வார்த்தைதான்)... இத்யாதி... இத்யாதி...
பசங்கள நிமிர்ந்தே பார்க்காத பொண்ணு... பசங்களுக்கு திமிர் புடிச்சவ... வீட்ல உள்ளவங்களுக்கு... தங்கம்... & VICE VERSA. மனதுக்குப் பிடித்தவனோடு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியாது (அதுக்கு ஜாதி, ஜாதகம், குலம், கோத்திரம், புண்ணாக்கு, புடலங்கா ... எது வேணா காரணமா இருக்கலாம்..) மனதுக்குப் பிடிக்காத ஒரு திருமண பந்தத்தில், கட்டிலில் கல்லாகச் சமையச் செய்து, கூடி எழுபவன் உத்தம புத்திரன்... அந்த அடிமைப் பெண் உத்தமி... உத்தமம் என்பதற்கு நாம் சொல்லி வைத்திருக்கும் விளக்கம் இதுதான்.
அதே பெண் பிடித்தவனுடன் சென்று விட்டால் ஓடுகாலி. அவனுடன் சென்று விட்டு அவன் நண்பனிடம் சிரித்துப் பேசினால் தேவடியா... சிரித்துப் பேசவில்லையெனில் திமிர் பிடிச்சவ... நீங்கள் எந்தப் பக்கம் வேண்டுமானாலும் போகலாம்.. மற்றவன் சொல்வதற்குத் தலை வணங்கி... அதன்படி நடக்காவிட்டால்.. உங்களுக்கு இதில் ஏதோ ஒரு பட்டம் கண்டிப்பாக உண்டு. ஆமாம்... ஆமாம்... சரி... சரி... என்று கூறிக் கொண்டிருப்பதே... கூறுகெட்ட... இல்ல கூறுகெடாத தனம். உடன்பாடில்லையெனில்... வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்க வேண்டும்... வாயைத் திறக்கப்டாது.
வீட்டில் கட்டிய மனைவியை விட்டு ஒரு ஆண் வேறொரு பெண்ணை நாடுவானானால், அவன் வீட்டிலிருக்கும் பெண்ணை விட்டுப் போன பாவம் ஏழேழு ஜென்மத்துக்கும் சுத்துமென்று... கட்டியவளையும் விட முடியாது.. இரண்டு பேரையும் வைத்திருப்பான். இதில் இரண்டாவதாக இருப்பவள்... வைப்பாட்டி... அடடா.. என்ன ஒரு வார்த்தைப் பிரயோகம்.... அந்தப் பெண்ணின் வாழ்க்கை நரகம். முதல் மனைவிக்கு இவந்தான்... வேற வழியே இல்லையென்று ஆக்கி விடுவார்கள்... அந்தப் பெண்ணுக்கும் நரகம்... நடுவில் மாட்டிக் கொண்டிருப்பவனுக்கும் நரகம்.
ஒரு வேளை அந்தப் பெண்ணை விட்டு இவன் போனால்... அந்தப் பெண் நடுத்தெருவில்... அந்தோ பரிதாபம்.. ச்சு ச்சு... அவ தலையெழுத்து அப்டி... என்று உச்சு கொட்டிக் கொள்வார்கள்.. நம் இரக்க சுபாவம் நிறைந்த மாந்தர். பாவம் அவர்களால் வேறு என்ன செய்ய முடியும்..?! ... ஏனம்மா... உனக்கு கையும் காலும் இருக்கு... சொந்தக் கால்ல நின்னு பொழைக்க கைல வலு இருக்கு... உன்னோட வாழ்க்கைய தேர்ந்தெடுக்கிற உரிமை உனக்கு இருக்கு.... அப்டின்னு சொல்ல யாராவது இருக்காங்களா..?! இல்ல... அந்தப் பெண்ணை அவளுக்காகவே விரும்பிச் சேர்ந்து வாழ யாராவது வருவாங்களா.... வந்தாலும் விட்டுடுவோமா...?! ஊஹூம்..
தமிழ் சினிமாவில் வர்ற மாதிரி... (கமலின் மகாநதியும்... இன்னும் ஒன்றிரண்டும் விதிவிலக்கு..).. அந்தப் பெண்ணின் கணவன்... முதலிரவு நடக்க ஒரு வினாடி இருக்கும் பொழுதே... பாம்பு கடித்தோ... ரெயில் ஆக்சிடெண்டிலயோ.. (ஹூம்... ரிதம்... என்ன ஒரு அருமையான கருத்த சொல்றாங்க... ஆனா..).. இல்ல ஹார்ட் அட்டாக் வந்தோ மண்டையைப் போட்டிருக்க வேண்டும்... பெண் மாசு படியாதவளா(?) இருந்தா... போனாப் போகுது... கட்டிக்கலாம்ன்னு விட்டுக் கொடுப்பாங்க... இல்லைன்னா... அதுக்கும் ஒரு சொல்லு வச்சிருக்காங்களே... எச்ச இல.... இதுதான் நம் பண்பாடு...
ஒரு வேளை அந்தப் பெண்ணை விட்டு இவன் போனால்... அந்தப் பெண் நடுத்தெருவில்... அந்தோ பரிதாபம்.. ச்சு ச்சு... அவ தலையெழுத்து அப்டி... என்று உச்சு கொட்டிக் கொள்வார்கள்.. நம் இரக்க சுபாவம் நிறைந்த மாந்தர். பாவம் அவர்களால் வேறு என்ன செய்ய முடியும்..?! ... ஏனம்மா... உனக்கு கையும் காலும் இருக்கு... சொந்தக் கால்ல நின்னு பொழைக்க கைல வலு இருக்கு... உன்னோட வாழ்க்கைய தேர்ந்தெடுக்கிற உரிமை உனக்கு இருக்கு.... அப்டின்னு சொல்ல யாராவது இருக்காங்களா..?! இல்ல... அந்தப் பெண்ணை அவளுக்காகவே விரும்பிச் சேர்ந்து வாழ யாராவது வருவாங்களா.... வந்தாலும் விட்டுடுவோமா...?! ஊஹூம்..
தமிழ் சினிமாவில் வர்ற மாதிரி... (கமலின் மகாநதியும்... இன்னும் ஒன்றிரண்டும் விதிவிலக்கு..).. அந்தப் பெண்ணின் கணவன்... முதலிரவு நடக்க ஒரு வினாடி இருக்கும் பொழுதே... பாம்பு கடித்தோ... ரெயில் ஆக்சிடெண்டிலயோ.. (ஹூம்... ரிதம்... என்ன ஒரு அருமையான கருத்த சொல்றாங்க... ஆனா..).. இல்ல ஹார்ட் அட்டாக் வந்தோ மண்டையைப் போட்டிருக்க வேண்டும்... பெண் மாசு படியாதவளா(?) இருந்தா... போனாப் போகுது... கட்டிக்கலாம்ன்னு விட்டுக் கொடுப்பாங்க... இல்லைன்னா... அதுக்கும் ஒரு சொல்லு வச்சிருக்காங்களே... எச்ச இல.... இதுதான் நம் பண்பாடு...
இதை மாறாது போற்றிக் காக்கப் புறப்பட்டிருக்கும் நம் இளைய தலைமுறையை வாழ்த்தியனுப்புவதற்கு... கடப்பாறையை விழுங்கும் பாங்கினை நான் கற்றுக் கொள்ள வேண்டும்...
(இன்னும்... நகர்ந்து கொண்டே இருப்பேன்...)
51 ஊக்கம்::
baby girl
en magalai ippadithaan naan koopiduven.
nee migundha arivu padaithaval.
un ella padhivugalume adharku satchi.
livingtogether aaga 10 yrs kazhithu avargale thirumanam seyginrargal ,antha vaibavathil avargalin pillaigale flower girls page boy aaga iruppathu inge europe il sagajam.andha living together concept use seydhu num makkal evvalavu emaatrugirargal theriyuma.they live in same house but will not give the true info to council so that they get paid for their house family etc.benefit fraud case endru google searchil paarthal theriyum.idhai vida kodumai.after eu expansion husband moves to another country wife stays in the country of domicile and she gets all the benefits.
num makkal kurukku way il sindhipavargal.
neengal idhaiyellam kooda eludha vendum.
@anna
உங்க கருத்துக்கு ரொம்ப நன்றி... ரொம்ப முக்கியமான விஷயம் இது...
இது பத்தி கண்டிப்பா எழுதுறதுதான்...
இங்க நடைமுறைச் சாத்தியமான ஒன்று அங்கு ஏன் இப்டி ஆகிறது..?! அதுக்கு என்ன அடிப்படைக் காரணம்ன்னு யோசிச்சிருக்கீங்களா..?!
ம்ம்... :).. it helps a lot... ty sooooo much...
காலம் மாற வேண்டும் என்று வெறியோடு சிந்திக்கிறீர்கள். பாரதியின் கனவு கண்டிப்பாக நினைவாகத்தான் போகிறது. அந்த Critical Mass எட்டும் வரை போராட்டம் தொடரவே செய்யும். உங்களின் எழுச்சிக்கான போராட்டத்தில் நானும் பங்கெடுக்கின்றேன்.
/மற்றவை வீண்... அந்த நிராகரிப்பு இங்கு அவசியம்... அதைத் தாங்கவியலாதவர்.. தூற்றும் மண்... அடுத்த சூறாவளிக்கு அவர் கண்களிலேயே விழும் என்பது... இயற்கையின் விதி.. மற்றும்.. நியதி!
நிற்க. //
எதிர்காத்து போதும்.
/ஏனம்மா... உனக்கு கையும் காலும் இருக்கு... சொந்தக் கால்ல நின்னு பொழைக்க கைல வலு இருக்கு... உன்னோட வாழ்க்கைய தேர்ந்தெடுக்கிற உரிமை உனக்கு இருக்கு.... அப்டின்னு சொல்ல யாராவது இருக்காங்களா..?! /
அட பயமே அதுதானே. எங்க திரும்பி வீட்டோட வந்துருமோ. இத வேற காலம் ஃபுல்லா சுமக்கணுமேன்னு பயம்.
/அதுக்கும் ஒரு சொல்லு வச்சிருக்காங்களே... எச்ச இல.... இதுதான் நம் பண்பாடு...
இதை மாறாது போற்றிக் காக்கப் புறப்பட்டிருக்கும் நம் இளைய தலைமுறையை வாழ்த்தியனுப்புவதற்கு... கடப்பாறையை விழுங்கும் பாங்கினை நான் கற்றுக் கொள்ள வேண்டும்.../
சுக்கு கஷாயம்?
@கலகலப்ரியா
//மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாது... அவர்களை நிராகரிப்பது மட்டுமல்லாது நிந்திக்கவும் செய்பவர்களை... என் காற்தூசிக்கும் மதியேன்...!!!! ... அது ஒட்டு மொத்த உலகமாக இருந்தால்... எனக்கு இந்த உலகமே தூசி..!!!!!! யாதும் ஊரே... யாவரும் கேளீர்..!!!!//
வணக்கம் சகோதரி!! என் பாலிஸியும் இதான். அதனால உங்ககிட்ட இருந்தும் இதே மரியாதை எதிர்பாக்கரேன். கட்டுரை பிடிக்கலனா கண்டிப்பா எதிர் ஓட்டு போடுவேன். அதுக்காக மந்தை, கூட்டம் இப்படி எல்லாம் மறுபடி வார்ணிக்க மாட்டிங்க நம்பரேன். சந்தேகம் வந்த கண்டிப்பா கேப்பேன். தப்புனு தோணுச்சினா விவாதிப்பேன். இல்லை என் கூட விவாதம் செய்ய எல்லாம் ஒரு தகுதி வேணூம் (அதங்க நிறைய கவிதை, கட்டுரை எல்லாம் எழுதி பிரபல பதிவரா இருக்கனும்) அப்படினா சொல்லுங்க இந்த வரிகளோட நிறுத்திட்டு ஓரமா நின்னு மத்தவங்கள மாதிரி வேடிக்கை பாக்கரேன்.... :))
@TERROR-PANDIYAN(VAS)
தப்பா புரிஞ்சுக்கிட்டிருக்கீங்க...
கொஞ்சம் பார்த்தா தெரியும்... எவ்ளோ விதண்டாவாதம்.. எவ்ளோ குரூரம் வச்சுக்கிட்டு பேசிட்டிருந்தாங்கன்னு... அதுக்கெல்லாம் என்னால மெனக்கெட முடியாதுங்க...
மத்தபடி... கொஞ்சம் பாருங்களேன்.. நிறைய இலக்கியவாதிங்க.. அறிவுஜீவிங்க.. நான் என்ன பதிவு போட்டாலும் ட்விட்டர்ல இருந்து எல்லா இடத்திலும் கிண்டல் பண்ணிட்டிருக்கிற பெரீய பெரீஈஈய ஆளுங்க எல்லாம் இருக்காங்க... அவங்க தேவைன்னா அங்க போய் என்னால இளிச்சுக்கிட்டிருக்க முடியும்..
பண்றதில்லைங்க... தேவையில்ல..
நம்ம கூட இருக்கிறவங்க ரொம்ப எளிமையா யோசிக்கறவங்க... இது பிடிச்சிருக்கு.. இது பிடிக்கலைன்னு பட்டு பட்டுன்னு சொல்லி சண்டை பிடிக்கறவங்க... ரொம்ப ஆரோக்கியமா..
முடிஞ்சா புரிஞ்சுக்குங்க..
பிரியா! சூப்பர் இது.
முதல் பாரா, எனா ஒரு அருமையான் எழுத்து நடை. சூப்பர் flow .
கருத்திலும் முழு உடன்பாடு உண்டு. வீடியோ பார்க்கவில்லை
@கலகலப்ரியா
நீங்க சொல்ர விஷயம் சரிதான். ஆன இப்பொ அதுல நிறைய விஷயம் மாறி இருக்கு. பல இடங்கள்ள லவ் மேரேஜ் நடக்குது, விதவை திருமணம் நடக்குது. பல பெண்கள் இப்பொ நைட் ஷிப்ட் கூட வேலைக்கு போறாங்க. எல்லா இடத்துலயும் நடக்கலையே கேக்கலாம். மாற்றங்கள் ஒரே இரவுல முழுமையடையாது நினைக்கிறேன்.....:))
ப்ரியா... உங்கள் கருத்தும் வாதமும் நல்லாத்தான் இருக்கு. எனக்கு ஒரு சந்தேகம். சரி பிடிக்காத கணவன் மனைவி அவங்களுக்கு ரெண்டு கொழந்தங்க. அப்றமா ரெண்டு பேருக்கும் பிடிக்காம போகுது. சரின்னு கணவன் அவனுக்கு பிடித்த வேறொரு பொண்ணோடயும், மனைவி அவளுக்கு பிடித்து வேறொரு ஆணோடையும் வாழறா அப்படின்னு வச்சிக்குங்க. அந்த கொழந்தன்களோட கதி? அந்த கணவனின் புதிய மனைவியும், அந்த மனைவியின் புதிய கணவனும் அந்த கொழந்தைங்கள உண்மையா அன்பு செய்வாங்களா? --ரொம்ப யோசிக்க தெரியாதவனோட கேள்வி
ம்ம்ம்... தொடர்ந்திட்டே இருக்கோம். சொல்லிட்டே வாங்க, நாங்க சொன்னதெல்லால்லம் மீண்டும் ஒரு முறை எங்களுக்கே ஞாபகப்படுத்திக்கிற மாதிரி.
இங்க பேசிட்டு இருக்கிற விசயம் எதிர்கால எழுத்தாளர்களுக்குக் கூட உதவலாம், என்பது என்னுடைய நப்பாசை. :)
உங்க கருத்து உண்மை... எனக்கு இதில் உடன்பாடு உண்டு.
@என்னது நானு யாரா?
நன்றிங்க..
@வானம்பாடிகள்
நன்றி சார்..
@Sethu
நன்றி சேது.. பாருங்க வீடியோ..
@TERROR-PANDIYAN(VAS)
ம்ம்... ஒரே இரவில யாரும் மாறணும்னு இத எழுதுறதில்ல...
நமக்குத் தெரியும்.. அதுக்கு எத்தன காலமாகும்ன்னு... அதே சமயம்..
quantum leap கூட நடக்கலாம்... யாருக்குத் தெரியும்..
@நிலா முகிலன்
||ப்ரியா... உங்கள் கருத்தும் வாதமும் நல்லாத்தான் இருக்கு. எனக்கு ஒரு சந்தேகம். சரி பிடிக்காத கணவன் மனைவி அவங்களுக்கு ரெண்டு கொழந்தங்க. அப்றமா ரெண்டு பேருக்கும் பிடிக்காம போகுது. சரின்னு கணவன் அவனுக்கு பிடித்த வேறொரு பொண்ணோடயும், மனைவி அவளுக்கு பிடித்து வேறொரு ஆணோடையும் வாழறா அப்படின்னு வச்சிக்குங்க. அந்த கொழந்தன்களோட கதி? அந்த கணவனின் புதிய மனைவியும், அந்த மனைவியின் புதிய கணவனும் அந்த கொழந்தைங்கள உண்மையா அன்பு செய்வாங்களா? --ரொம்ப யோசிக்க தெரியாதவனோட கேள்வி||
புதிய மனைவியும்.. புதிய கணவனும் எதுக்கு... அதே அப்பாவும்.. அம்மாவும் அவங்களிடன் அன்பு செலுத்தலாம்..
பிரிஞ்சு போனா... குழந்தைங்கள அப்பன் மூஞ்சில காட்டாம வச்சிருக்கிறவங்க எல்லாம் குழந்தைங்க மேல ரொம்ப அக்கறை உடையவங்களா...
இங்க யாரும் அப்டி செய்யறதில்ல..
நீங்க கமல் ஹாசனோட புள்ளைங்க எப்டி அம்மா அம்மா கிட்ட அன்பா இருக்காங்கன்னு பார்த்திருக்கீங்களா..?.. உடன கமலுக்கு எதிரானவங்க யாராவது கொடி புடிக்கப் போறாங்க.. நான் சொல்ல வந்தது.. அப்டி ஒரு சூழல் இருக்கும்..
இதுக்கு நான் ஒரு பதில்க் கேள்வி கேக்கறேன்..
பிடிக்காத கணவன்.. பிடிக்காத மனைவி இருவரும் சேர்ந்து உட்கார்ந்துக்கிட்டு... எலியும் பூனையுமா அவங்க முறைச்சுக்கறதயே பார்த்துக்கிட்டு.. வளர்ற கொழந்தைங்க கதி என்ன..?! அந்தச் சிக்கல்ல குழந்தைங்க மேல அந்தத் தம்பதியால கான்செண்ட்ரேட் பண்ண முடியுமா...?!
@Thekkikattan|தெகா
ம்ம்.. நப்பாசைதான் எனக்கும்.. :)
@சே.குமார்
நன்றி குமார்...
புதிய மனைவியும்.. புதிய கணவனும் எதுக்கு... அதே அப்பாவும்.. அம்மாவும் அவங்களிடன் அன்பு செலுத்தலாம்..//
எப்படீங்க இப்புடி... ஆமாங்க ஆமாங்க... :)
//பிரிஞ்சு போனா... குழந்தைங்கள அப்பன் மூஞ்சில காட்டாம வச்சிருக்கிறவங்க எல்லாம் குழந்தைங்க மேல ரொம்ப அக்கறை உடையவங்களா...//
இதுவே ஒரு பதிவுங்க! உண்மை நிகழ்வுகளைக் கொண்டு பதிவு போடுறவங்க முந்திக்கிட்டு பதிவு போட்டுருக்கப்பா இது என்னோட லைன் ஆஃப் தாட்_ல இருக்கு. ஹிண்டும் கொடுத்திடுறேன் எழுத வசதியா - அப்படியே அடிச்சி கூடிவிட்டாக் கூட அம்மாகிட்டே இருந்து புள்ளயய்யோ அல்லது அப்பாகிட்ட இருந்து புள்ளய்யோ பார்க்காமயே அதுக மனசில நஞ்சை விசைச்சி வளர்க்கிறது நெம்ப நான் நடக்ககிது, அதாவது நான் பொறந்து, வளர்ந்த ஊர்ல பார்த்திருக்கேங்க; அது மாதிரியான புள்ளகள பார்க்கவே முடியாத ஆத்தா, அப்பனும் என் தெருவிலயே உண்டுங்க ... அத, விட அந்தக் கொழந்தைகளை கெடுத்து குட்டிச் சுவரா ஆக்க முடியுங்கிறீங்க.
these things are getting better now அப்படின்னு மட்டும் சொல்லிட்டு.. தொடர்றேன்..
//
சேறு பற்றியும், ஆங்காங்கே அருகில் தேங்கியிருக்கும் குட்டை நீர் பற்றியும், அதில் நெளியும் புழுக்கள் பற்றியும் பேசிக் கொண்டிருந்தால், அவர்களை நிராகரித்து மேற்குப் பகுதி நோக்கி முன்னேறுவது தவிர்க்க முடியாதது.
//
சாக்கடை புழுக்களை அருவருப்புடன் உதாசீனப்படுத்துவது தவிர வேறு என்ன செய்வது என்று தெரியவில்லை.
//
மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாது... அவர்களை நிராகரிப்பது மட்டுமல்லாது நிந்திக்கவும் செய்பவர்களை... என் காற்தூசிக்கும் மதியேன்...!!!! ... அது ஒட்டு மொத்த உலகமாக இருந்தால்... எனக்கு இந்த உலகமே தூசி..!!!
//
ரிப்பீட்டே!
//
அதே பெண் பிடித்தவனுடன் சென்று விட்டால் ஓடுகாலி. அவனுடன் சென்று விட்டு அவன் நண்பனிடம் சிரித்துப் பேசினால் தேவடியா... சிரித்துப் பேசவில்லையெனில் திமிர் பிடிச்சவ... நீங்கள் எந்தப் பக்கம் வேண்டுமானாலும் போகலாம்.. மற்றவன் சொல்வதற்குத் தலை வணங்கி... அதன்படி நடக்காவிட்டால்.. உங்களுக்கு இதில் ஏதோ ஒரு பட்டம் கண்டிப்பாக உண்டு. ஆமாம்... ஆமாம்... சரி... சரி... என்று கூறிக் கொண்டிருப்பதே... கூறுகெட்ட... இல்ல கூறுகெடாத தனம். உடன்பாடில்லையெனில்... வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்க வேண்டும்... வாயைத் திறக்கப்டாது.
//
ஆமா..அது தான், அப்படி இருந்தா தான் கலாச்சாரம். இல்லாட்டி வேற பேரு வச்சிருவானுங்க.
//
இல்லைன்னா... அதுக்கும் ஒரு சொல்லு வச்சிருக்காங்களே... எச்ச இல.... இதுதான் நம் பண்பாடு..
//
புனித கலாச்சாரமுங்கோ.
//
(இன்னும்... நகர்ந்து கொண்டே இருப்பேன்..
//
தொடர்க!
வணக்கம் ப்ரியா
அருமையான சிந்தனைக்கு பாராட்டுகள்
@கலகலப்ரியாகுழந்தைகளின் அம்மாவும் அப்பாவும் அன்பு செலுத்தினால் போதும் நு சொல்றிங்க.
குழந்தைகளின் அப்பாவிடம் அந்த அம்மா குழந்தைகளை அனுப்புகிறாள் அப்படின்னே வச்சிக்கலாம்.
கணவனும் மனைவியும் பிரிந்த பிறகு, குழந்தைகள் அம்மாவிடமோ அல்லது அப்பாவிடமோ வளரலாம். இல்லையா. அப்படி வளரும் பட்சத்தில், அதற்க்கு அந்த மனைவியின் புதிய கணவனோ அல்லது கணவனின் புதிய மனைவியோ அந்த குழந்தைகள் மீது அன்பு செலுத்தாமல் அவர்கள் அவ்விடத்தில் வளர முடியுமா?
கௌதமி மாதிரியே கமலின் குழந்தைகளிடத்தில் அன்பு செலுத்தும் துணைவி அமைவாள் என்று நீங்க எப்படி எதிர்பார்க்கலாம்? அது தவிர, மனைவிக்கும் புதிய கணவனுக்கும் குழந்தை பிறக்கும் பட்சத்தில், கணவனின் அன்பு அவனுடைய குழந்தையின் பால் தானே செல்லும்?
நான் அமெரிக்காவில் இருக்கிறேன். இங்குள்ள கலாச்சாரமும் ஐரோப்பிய கலாச்சாரமும் ஒன்றுதான். உங்களிடம் வாதிட எனக்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன. இது ஒரு ஆரோக்கியமான வாதமாக தொடரும் பட்சத்தில், என்னால் மேலும் பல உதாரணங்களையும் வாதங்களையும் எழுப்ப முடியும்.
||பிடிக்காத கணவன்.. பிடிக்காத மனைவி இருவரும் சேர்ந்து உட்கார்ந்துக்கிட்டு... எலியும் பூனையுமா அவங்க முறைச்சுக்கறதயே பார்த்துக்கிட்டு.. வளர்ற கொழந்தைங்க கதி என்ன..?! அந்தச் சிக்கல்ல குழந்தைங்க மேல அந்தத் தம்பதியால கான்செண்ட்ரேட் பண்ண முடியுமா...?!||
உங்கள் கேள்விக்கு என்னால் ஒன்று மட்டும் சொல்ல முடியும்
வாழ்க்கை ஒரு கம்ப்ரொமைஸ் தான். அதற்காக குடிகார கணவனிடம் வாழ்கை பட்ட மனைவி அப்டின்னு எல்லாம் நா போக விரும்பல. இப்போ அது அதிகம் கெடயாது. உங்களை போல பல பெண்கள் வேலைக்கு போக ஆரம்பிச்சிட்டாங்க. பெண்கள் இப்போ நெறைய முன்னேறிருகாங்க. சரியா.
நம்ம கலாசாரம்.. சாரி அப்படி சொன்ன அது இந்த பதிவுல கேட்டவார்தையா போய்டும். கல்யாணமும் ஒரு வித கம்ப்ரொமைஸ் தான். நண்பர்களுடன் காம்ப்ரமைஸ் செய்து சமாதானம் ஆகும் நாம் நமது கணவனிடமோ மனைவியிடமோ காம்ப்ரமைஸ் பண்ண தயங்குவது ஏன்.
பிடக்கலைன்னா ஒடனே விலகிட்டு இன்னொரு துணை தேடுவது அப்டிங்கற நெலமை வந்துட்டா...தேடிகிட்டே இருப்போம். ஒரு கமிட்மென்ட் இருக்காது வாழ்க்கைல. ஒரு கமிட்மெண்டை தருவது திருமணம். முடிந்த வரை ஓட்ட வைப்போம் அதுக்காக சித்ரவதை கணவனிடமோ அல்லது சித்ரவதை மனைவி இடமோ வாழ்நாள் பூராவும் இருக்கணும்னு நான் சொல்லலை. ஆனால் பிடிக்கலைன்னு மாத்திக்கிட்டே இருக்கறதை தான் எனக்கு நெருடல். குழந்தைகளின் எதிர்காலமும் கேள்விக்குறி. ஸ்டாடிஸ்டிக்ஸ் படி பார்த்தா அப்பா அம்மா விலகி போன குடும்பங்கள்ல இருந்து தான் நெறைய குற்றவாளிகள் உருவாகிறார்கள்.
வணக்கம்,
நீங்க சொல்ல வரும் அனைத்தும் ரொம்ப sensitive ஆன விஷயங்கள். ஒரே ஒரு கருத்தை கொண்டு அனைவருக்கும் பொருத்தி பார்க்க முடியாது.
காலம் காலமாக பெண்களை இழிவு படுத்தி பார்ர்கும் பழக்கம் இந்த சமுதாயத்துக்கு இருக்கிறது. ”நீ ரொம்ப நல்ல பொண்ணு அப்படியெல்லாம் செய்ய கூடாது” என்னு அடிமைபடித்தியும், ”நீ கெட்ட பொண்ணு என்று சிறுமை படுத்தியும்” பார்க்கிறார்கள்.
இந்த நிலைக்கு காரணம் முட்டாளாக இருக்கும் பெண்களும்தான் என்பதை மறந்து விட கூடாது. தைரியம் இல்லாத, கோழைதனத்துக்கு பெயரை “பொட்டை” (பெட்டை) என்கிறார்கள்.
இந்த நிலை பெண்களிடம் இருந்து மாறத வரைக்கும், இங்கு எதுவும்
மாற போவதில்லை.
பெண்கள் எல்லா நேரத்திலும் நல்லவர்கள் என்று யாரேனும் ஒருவர் கூட இங்கு சுட்டி காட்ட முடியாது.
கெட்ட ஆண்களிடம் கூட ஒரு நல்ல விஷயத்தை நாம் கண்டு கொள்ள முடியும். ஆணால் பெண்களிடம்....
பெண்னடிமைதனத்தை நானும் எதிர்க்கிறேன்... ஆனால் அதை அவர்கள் தான் மாற்ற வேண்டும். அதை விடுத்து குறை சொல்வது, ஒரு போதும் மாற்றம் தராது.
ப்ரியா ,
அழகா சொல்லிருக்கீங்க ,i feel to continue in English, that s better where i can put my thoughts with less spelling mistakes.
divorcee and remarriages have become common for both genders,but again comes bias for females.
Most of the Guys or his family again needs an unmarried girl because their guy is innocent victim , he has good qualifications , good job and hail from a decent family .
when ever a female takes and executes things like this , even the educated(cant call them cultured , i think they don't deserve it ) society puts a question "has the girl taken right decision at right moment".
when a girl comes out of a troubled marriage , how many are there to wish her and celebrate her break up.To prove their humanity and generosity they start paying unasked condoles and pity , again making her feel has she done a stupid thing.
second marriages are done for a need of company and not only sex or lust what so ever the ********society may call or address,i don't pity or criticize them , they share what do they know
//கௌதமி மாதிரியே கமலின் குழந்தைகளிடத்தில் அன்பு செலுத்தும் துணைவி அமைவாள் என்று நீங்க எப்படி எதிர்பார்க்கலாம்? அது தவிர, மனைவிக்கும் புதிய கணவனுக்கும் குழந்தை பிறக்கும் பட்சத்தில், கணவனின் அன்பு அவனுடைய குழந்தையின் பால் தானே செல்லும்?
//
இந்த மாதிரி நினைக்காத ஆளா பாத்து தேர்ந்தெடுக்க வேண்டியது அந்தந்த நபரின் கடமை.
என் குழந்தையையும் தன் குழந்தை போல் பார்த்துக்கொள்ளாத ஆளிடம் ஏன் போய் மாட்ட வேண்டும்?
என் குழந்தையையும் தன் குழந்தை போல் பார்த்துக்கொள்ளாத ஆளிடம் ஏன் போய் மாட்ட வேண்டும்?//
இது கேள்வி... :)) யோசிக்க சொல்லுறீங்களே...
சரி, சரி எல்லாரும் இங்க வாங்க, வந்து வாசிங்க... ====>
பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்குமான உரையாடல் இடைவெளி: What if...
@முகிலன்
அய்யா.. தேர்ந்தெடுக்கும்போது நாம் அப்படி எல்லாம் பார்த்து தேர்ந்தெடு இருந்தோம்னா.. எதுக்கு கணவனுக்கும் மனைவிக்கும் பிடிக்காம போகுது? இப்போ விவாகரத்து வழக்குல அதிகமா இருக்கறது... தானாக பார்த்து தேர்ந்துடுத்து கட்டிக்கிட்ட காதல் திருமணங்கள் தான். புள்ளிவிவரம் அப்படிதான் சொல்லுது. நாம பேசறது உங்களையோ என்னையோ பற்றி அல்ல. எல்லாரையும் பற்றி தான். நடைமுறை வாழ்கையை பத்தி பேசணும் அய்யா.
சற்று வேலைப்பளு... பொறுத்தருளவும்..
நல்ல அலசல்
//பிடிக்காத கணவன்.. பிடிக்காத மனைவி இருவரும் சேர்ந்து உட்கார்ந்துக்கிட்டு... எலியும் பூனையுமா அவங்க முறைச்சுக்கறதயே பார்த்துக்கிட்டு.. வளர்ற கொழந்தைங்க கதி என்ன..?! அந்தச் சிக்கல்ல குழந்தைங்க மேல அந்தத் தம்பதியால கான்செண்ட்ரேட் பண்ண முடியுமா...?! //
நல்ல ஒரு எதிர்க் கேள்வி பிரியா. எத்தனை உண்மை. கணவன் மனைவிக் கிடையில் மனத் தளவில் பிரிவு ஏற்பட்ட பின்னர் சேர்ந்து வாழும் குடும்பங்களில் பிள்ளைகள் மனத்தளவில் பெரிதும் பாதிக்கப் படுகிறார்கள். வீடே நரகமாகக் கூடிய நிலைமையை உருவாக்கும். அதை விட மகிழ்ச்சியாக பிரிந்து இருவரும் பிள்ளைகள் மேல் அதே அன்பைக் காட்ட முடிந்தால் பிள்ளைகள் வாழ்க்கையாவது மகிழ்ச்சியாக மாறலாம். பிள்ளைகளுக்கும் அம்மா பக்கம் சாய்வதா அப்பா பக்கம் சாய்வதா என்ற தர்ம சங்கடங்களைத் தவிர்க்கலாம்
@பிரியமுடன் பிரபு
நன்றி பிரபு..
@ஜெஸ்வந்தி - Jeswanthy
அழகான புரிதல் ஜெஸ்வந்தி... ரொம்ப நன்றி... அடிக்கடி இப்டி வந்து ஆறுதலா நாலு வார்த்தை சொல்லிட்டுப் போறீங்க... நான் என்னத்த பண்ணப் போறேன்.. =))
@Thekkikattan|தெகா
தெகா... தன்னால வருது.. அவ்வ்வ்.. =))...
||அது மாதிரியான புள்ளகள பார்க்கவே முடியாத ஆத்தா, அப்பனும் என் தெருவிலயே உண்டுங்க ... அத, விட அந்தக் கொழந்தைகளை கெடுத்து குட்டிச் சுவரா ஆக்க முடியுங்கிறீங்க||
அதேதான்... நானும் பார்த்திருக்கேன்... சொந்த அப்பாவை அல்லது அம்மாவைப் புரிந்து கொள்ளச் சந்தர்ப்பம் அளிக்கப்படாத ஒரு குழந்தை உலகத்தைப் புரிந்து கொள்வதென்பது எவ்விதம் சாத்தியமென்று தெரியவில்லை..
@எல் போர்ட்.. பீ சீரியஸ்..
நன்றி சந்தனா.. அது போதும்..
@அது சரி(18185106603874041862)
காமெண்ட் எல்லாம் ரொம்ப ஷார்ட்டா இருக்கே... :))))..
(நன்றி சொல்லலை..)
@ஆ.ஞானசேகரன்
நன்றி ஞானசேகரன்... நலமா..
@நிலா முகிலன்
நன்றி நிலா முகிலன்... இது நியாயமான வாதம்... இதைப் பத்தி கொஞ்சம் விரிவா பார்ப்போம்...
இதுக்காகவே ஒரு பதிவு போடலாம்... விவாதிப்போம்..
@நிலா முகிலன்
||நண்பர்களுடன் காம்ப்ரமைஸ் செய்து சமாதானம் ஆகும் நாம் நமது கணவனிடமோ மனைவியிடமோ காம்ப்ரமைஸ் பண்ண தயங்குவது ஏன்.||
ம்ம்.. அதுவும் இதுவும் ஒன்றில்லைங்கிறதுதான் அடிப்படிக் காரணம்..
எப்டின்னு.. இதும் பேசுவோமே..
@மு.இரா
உங்க கருத்துக்கு நன்றி மு.ரா... நீங்க சொல்றது வாஸ்தவம்தான்..
||இந்த நிலைக்கு காரணம் முட்டாளாக இருக்கும் பெண்களும்தான் என்பதை மறந்து விட கூடாது. ||
கண்டிப்பா... இதை வரிக்கு வரி வழிம்மொழியறேன்..
அப்புறம்... நான் பெண்ணடிமைத்தனம் பற்றிப் பேசிட்டிருக்கலை...
பொதுவாவே... மனிதர்கள் அடிமையாகவே சிந்தித்திக் கொண்டிருப்பது பற்றிப் பேசறேன்... சுயமாக அவர்களைச் சிந்திக்க சமூகம் அனுமதிப்பதில்லை... அந்த வட்டத்திலிருந்து வெளியே போய்ச் சிந்திப்பதை மிகச் சிலரே செய்கிறார்கள்...
@ரோகிணிசிவா
hats off rohini... well said..
||how many are there to wish her and celebrate her break up.||
i luv it.. yes...! one of my colleague had been struggling a lot.. and came out... (struggle means.. she just cudn't tolerate that relationship... wanted to come out.. and was insulted like hell..)...
we've celebrated that day with her.. here're many.. who can understand others' feelin...
but.. alas... OUR (non-)CULTURED MORONS KNOW EVERYTHING... WOT TO DO..
@முகிலன்
||இந்த மாதிரி நினைக்காத ஆளா பாத்து தேர்ந்தெடுக்க வேண்டியது அந்தந்த நபரின் கடமை.
என் குழந்தையையும் தன் குழந்தை போல் பார்த்துக்கொள்ளாத ஆளிடம் ஏன் போய் மாட்ட வேண்டும்?||
அது சரி... கொஞ்சமே கொஞ்சம் சின்னப்புள்ளத்தனமா இருக்கு... =))))
@Thekkikattan|தெகா
அருமையான கட்டுரை தெகா..
சிந்தித்தி... etc.. etc.. ன்னு எல்லாம் ரொம்ப ஸ்பெல்லோ போட்டிருக்கேன்... வேக வேகமா டைப் பண்ணதால வர்ற கோளாறு...
அதயும் மன்னிச்சிடுங்க..
@கலகலப்ரியா அந்த பொண்ணு தானே கொண்டாட நினச்சா அவள ஒரு தறிகெட்ட பொண்ண பார்க்கிற நிலைமை தான் இருக்கு.
என்னமோ என் நல்ல நேரம் ஒன்னு இப்படி ஆளுக கூட பழக்கம் இல்ல,அடுத்து என் கூட பழகிற ஆளுக இப்படி சொல்றது இல்ல, அடுத்து நாம அப்படி யார் என்ன சொன்னாலும் கண்டுக்காத அவங்க மொழில "அவ அப்படி தான்" - கூல்
Post a Comment