header photo

Monday, May 14, 2012

பிறகென்ன

பாட்டியின் அடுக்களையில்
இதே எலிகளை 
அருகிலிருந்து பார்த்திருக்கிறேன்

யன்னலோரம் உரசிச் செல்லும்
காக்கைச் சிறகின் சிறு காற்றில்
அலை மோதும் இவை

ஆழிப் பேரலையில்
என்ன செய்யும் பாவம் 

கரையிலிருந்து ஒரு இரைச்சல்
அந்தோ என்றபடி வருகிறது

இந்த எலிகள் 
ச்சே.. பாட்டி வீட்டு எலிகளா இவை
இருக்கவே இருக்காது 
அவை போலிருக்கலாம்

ஆசுவாசப்படும்போதுதான் கவனித்தேன்
அந்த அந்தோ
இந்த எலிகளுக்கானதல்ல

அது வந்த வீச்சில் 
கடலில் குதித்து 
கீழ் நோக்கிச் செல்கிறது 

சமுத்திரத்தின் அடியில் 
அது இன்னும் 
கப்பலாகவே இருக்கிறது  

கரைதொடும் அலைகள்
செவியில்லா வெளியைக்
கேட்டுக் கேட்டுத் திரும்புகின்றன


அவையா சுமந்தன இதை?

4 ஊக்கம்::

vasu balaji said...

/கரைதொடும் அலைகள் செவியில்லா வெளியைக் கேட்டுக் கேட்டுத் திரும்புகின்றன
அவையா சுமந்தன இதை?

பிறகென்ன?/

ம்ம்ம். லவ்லி

ரிஷபன் said...

யன்னலோரம் உரசிச் செல்லும்
காக்கைச் சிறகின் சிறு காற்றில்
அலை மோதும் இவை

ஆஹா..

rajamelaiyur said...

அழகான கவிதை .. அருமையான வரிகள் ..

'பரிவை' சே.குமார் said...

//கரைதொடும் அலைகள்
செவியில்லா வெளியைக்
கேட்டுக் கேட்டுத் திரும்புகின்றன

அவையா சுமந்தன இதை?//

இது ஒன்றே போதுமே...
கவிதை அருமை...