பாட்டியின் அடுக்களையில்
இதே எலிகளை
அருகிலிருந்து பார்த்திருக்கிறேன்
யன்னலோரம் உரசிச் செல்லும்
காக்கைச் சிறகின் சிறு காற்றில்
அலை மோதும் இவை
ஆழிப் பேரலையில்
என்ன செய்யும் பாவம்
கரையிலிருந்து ஒரு இரைச்சல்
அந்தோ என்றபடி வருகிறது
இந்த எலிகள்
ச்சே.. பாட்டி வீட்டு எலிகளா இவை
இருக்கவே இருக்காது
அவை போலிருக்கலாம்
ஆசுவாசப்படும்போதுதான் கவனித்தேன்
அந்த அந்தோ
இந்த எலிகளுக்கானதல்ல
அது வந்த வீச்சில்
கடலில் குதித்து
கீழ் நோக்கிச் செல்கிறது
சமுத்திரத்தின் அடியில்
அது இன்னும்
கப்பலாகவே இருக்கிறது
கரைதொடும் அலைகள்
செவியில்லா வெளியைக்
கேட்டுக் கேட்டுத் திரும்புகின்றன
அவையா சுமந்தன இதை?
4 ஊக்கம்::
/கரைதொடும் அலைகள் செவியில்லா வெளியைக் கேட்டுக் கேட்டுத் திரும்புகின்றன
அவையா சுமந்தன இதை?
பிறகென்ன?/
ம்ம்ம். லவ்லி
யன்னலோரம் உரசிச் செல்லும்
காக்கைச் சிறகின் சிறு காற்றில்
அலை மோதும் இவை
ஆஹா..
அழகான கவிதை .. அருமையான வரிகள் ..
//கரைதொடும் அலைகள்
செவியில்லா வெளியைக்
கேட்டுக் கேட்டுத் திரும்புகின்றன
அவையா சுமந்தன இதை?//
இது ஒன்றே போதுமே...
கவிதை அருமை...
Post a Comment