header photo

Saturday, September 12, 2009

மெரீனாவில் ஒரு விழுக்காடு..

நான் மெரீனா கடற்கரைக்கு போன கதைங்க இது..

இந்த விடுமுறை நாளொன்றில் என்னுடைய தோழி ஒருத்தியுடன் மெரீனா கடற்கரைக்கு போகலாம் என்று முடிவெடுத்தோம். அவளுடைய அம்மா, அப்பா சமேதராய், என் தோழியும் நானும் உடன் சென்றோம்.

வீட்டிலிருந்து கிளம்பறப்பவே, இழுபறி ஆகிப் போச்சுங்க. அன்னிக்கு பார்த்து அவங்க வீட்ல ஒரு டெலிவரி. ச்சே ச்சே.. நீங்க நினைக்கிற மாதிரி இல்ல.. ஒரு சோஃபா ஆர்டர் கொடுத்திருந்தாங்க, அவ்ளோதான்! அன்னைக்கு அதை வீட்ல கொண்டு வந்து வச்சுட்டு போறதா சொல்லி, அவங்க வந்து, பொண்ண புகுந்த வீட்ல செட்டில் பண்ற மாதிரி சோஃபாவ அலுங்காம நலுங்காம வச்சுட்டு, கண்ணைத் துடைச்சுக் கொண்டு கிளம்பிப் போனதுக்கப்புறம், நாம கிளம்பி அந்த சென்னை டிராஃபிக் ஜாம்ல மாட்டி மெரீனா பீச்சாண்ட போறப்பவே ஜாம் ஆகி இருந்தோம்.

லேசா இருட்ட ஆரம்பிச்சிடுத்து. இனிமே கடலு எங்க, கரை எங்க, பேசாம கடலை போட்டு.. சாரி.. கடலை சாப்ட்டு போக வேண்டியதுதான்னு நடக்க ஆரம்பிச்சோம். கடல் கிட்ட போக போக தோழிக்கும் எனக்கும் உற்சாகம் தொற்றிக் கொண்டது. தம்பதி சமேதர் ஏதோ ஒரு நேத்திக்கடன் நிறைவேத்த வந்தாப்ல ஒரு தீர்மானத்தோட கரைய குறி வச்சு நடந்து போய்க் கொண்டிருந்தாங்க.

ஒரு குறிப்பிட்ட தூரம் போனதும் அம்மணி 'சடன் பிரேக்' போட்டு நின்னுட்டாங்க. வேற ஒண்ணுமில்ல தண்ணி இருக்கிற இடமெல்லாம் வழுக்கி விழுந்து, இசகு பிசகா அடிபடுறதே பொழைப்பா போனதால, கொஞ்சம் சாக்கிரதையா தண்ணி எட்டாத இடத்திலேயே நின்னுட்டாங்க. ஐயா அதுக்கும் ஒரு மீட்டர் முன்னாடியே நின்னுட்டாங்க. நாம இதெல்லாம் கவனிக்காம, கடல் அலையுடன் மல்லுக் கட்டிக் கொண்டிருந்தோம்.

தோழி அடிக்கடி பின்னால் திரும்பி, "யம்மா வாங்க, யம்மா வாங்க" என்று கூவிக் கொண்டிருந்தாள். அம்மாவும் சளைக்காம சப்பாணி பாஷைல "நான் மாட்டேன் போ" என்று கிளிப்பிள்ளை பாடம் சொல்லிக் கொண்டிருந்தாங்க. நேரமாச்சு, இனிமே கிளம்ப வேண்டியதுதான்னு கிளம்பவும், தோழி "லாஸ்ட் ட்ரை" என்று அவள் அம்மாவ கூப்ட, அதிசயமா அவங்க அடி மேல் அடி எடுத்து வச்சு முன்னால வரவும் சரியாக இருந்தது.

விதி யாரை விட்டது! பாவம் அம்முனி வந்து நின்னு அரை நிமிஷம் கூட ஆகி இருக்காது இசகு பிசாகா ஒரு அலை வந்து, காலை வாரி விட்டுடிச்சுங்க. நாம அங்க இங்க கால வச்சு சமாளிச்சுக்கிட்டு பார்த்தா இந்த அம்மணி, பப்பரப்பேன்னு, சினிமால எல்லாம் காட்டாத ஒரு கோணத்தில அலங்க மலங்க விழுதுங்க. அடி ஆத்தீன்னு கைய புடிச்சு தடுத்து நிறுத்தலாம்னு நான் இந்தப் பக்கம், பொண்ணு அந்தப் பக்கம்னு புடிச்சு தூக்கறோம், அலை விடுவேனான்னு நம்மளையும் சேர்த்து இழுக்குது. யப்பேன்னு அலறி அடிச்சுக் கொண்டு அம்மணி விழுந்தே போச்சு. நாம போனாலும் பரவால்ல அம்முனிய விடப்டாதுன்னு முழங்கால்ல உக்காந்து, தண்ணில முழுகுற தலைய தேடிப் புடிச்சு தூக்கி, மேரி அம்மா ஜேசு பேபிய ஏந்தி வச்சிருக்கிறாப்ல, தலைய ரெண்டு கைலயும் ஏந்திக்கிட்டு... விடாம பிடிச்சு இழுத்துக் கொண்டிருந்த அலை கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க, தோழியும் நானும் சேர்ந்து அம்முனிய கரை சேர்த்தோம்.

ரொம்ப அக்கறையா அந்த இருட்டில ஃப்ளாஷ் இல்லாம போட்டோ எடுத்துக் கொண்டிருந்த ஐயா, ரொம்ப ரொம்ப லேட்டா சுதாரிச்சு கையிலிருந்த வாட்டர் பாட்டில் கொண்டு வந்து நீட்டினார். அரை மயக்கத்தில் 'நான் விழுந்துட்டேன்', 'நான் விழுந்துட்டேன்'ன்னு விடாம சொல்லிக் கொண்டிருந்த அம்மாவ தண்ணி குடிக்க வச்சு ஒரு நிலைக்கு கொண்டு வர்றதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடிச்சுங்க.


இந்தியன் கிரிக்கெட் டீம் ரன்ஸ் எடுத்த மாதிரி, சாதிச்சிட்டோம்டின்னு தலைய நிமிர்த்திக் கொண்டு நின்ன நம்மளுக்கு வந்திச்சுங்க ஒரு சோதனை. அம்மணி சாதாரணமா(?) பேச ஆரம்பிச்சதும் கேள்வி மேல கேள்வி அடுக்க ஆரம்பிச்சாங்க பாருங்க.. :((.. யப்பே இதுக்கு அலை கிட்டயே மல்லுக் கட்டி இருக்கலாம்னு தோணிச்சுன்னா பார்த்துக்குங்க:

பொண்ணு கிட்ட: ஏண்டி நான் விழுந்தப்போ நீ கால் மாட்டில இருந்தியா, தலை மாட்டில இருந்தியா? (கை மாட்டில இருந்தோமுங்க.. எந்த நேரத்ல என்ன கேள்விடா சாமி..) டயர்ட் ஆகி கொஞ்சமா வாட்டர் சாப்டலாம்னு ஆரம்பிச்சிருந்த நான் முடியாம.. தூன்னு துப்பிட்டு அடக்க மாட்டாம சிரிக்கறேன்.

இவ ஏன் சிரிக்கிறா? (சத்யமா முடியலீங்க..)

கொஞ்சம் அவகாசம் கொடுத்து திரும்ப வாட்டர் சாப்டலாம்னு ஆரம்பிக்க, அவங்க "ஏண்டி நான் விழுறப்போ உங்கப்பா என்ன பண்ணிக்கிட்டிருந்தாரு?" (திரும்ப வாயிலிருந்து தண்ணீரை துப்பி விட்டு.. ) "போட்டோ எடுத்துக்கிட்டிருந்தாருங்க.." என்று மாட்டி விட்டேன்.

"ஏண்டி எப்டிடீ விழுந்தேன்?"
பொண்ணு பொறுக்க மாட்டாம "சும்மா பப்பரப்பேன்னு விழுந்தாம்மா"
"என்னடி நக்கலா?"
"அதொண்ணுமில்லம்மா உனக்கு தண்ணில கண்டம்னு நினைக்கிறேன்.. "
அம்மணி சீரியசாகி "ஆமாம்டி நானும் அப்டித்தான் நினைக்கிறேன்"
"ஐயோ.. இப்போ தண்ணிக்கு கண்டமா.. உனக்கா?"
"ஏண்டி அப்பா என்ன போட்டோ எடுத்துக் கொண்டிருந்தாரா நான் விழுந்தப்போ"
"ஐயோ கொஞ்சம் நிறுத்துறியா, அந்தாள டெஸ்ட் பண்றதுக்குன்னே விழுவியா நீ?"
அம்முனி கழுத்த தடவி செயின கைல எடுத்துப் பார்த்து "நல்ல வேளை செயின் போகல"
"ம்க்கும், கழுத்து போகலையேன்னு சந்தோஷப்படு"

இப்டியே நீண்டு கொண்டு போன விடையில்லாக் கேள்வி காருக்குள் ஏறி உக்காந்ததும், டிரைவருக்கு மேட்டர் தெரிய வேண்டாமே என்றோ என்னமோ கொஞ்சம் மட்டுப் பட்டது. ரெண்டு நிமிஷம் கழிச்சு "இல்லைடி, நான் அன்னிக்கு விழுந்தப்பவும் இந்தப் புடவைதான் கட்டி இருந்தேன், புடவைதான் சரியில்ல" (ஆ, கண்டம் தண்ணில இருந்து புடவைக்கு மாறிடிச்சுடா! நல்ல வேளையாக நான் காருக்குள்ள வாட்டர் சாப்டல)

இனிமே முடியாதுடா சாமின்னு இருக்க, அம்மணியே அந்தப் பேச்சுக்கு ஒரு முடிவு கட்டினாங்க.. "யார் கிட்டயும் சொல்ல வேணாம் இது பத்தி, நம்மளுக்குள்ளயே இருக்கட்டும்". நான் ரொம்ப சாதுவாக "ஏனுங்க இந்நேரம் தினத்தந்தில எல்லாம் போட்டிருப்பாங்களே". அவங்க என்னை முறைச்சு "உனக்கு நக்கலா இருக்கா?". நான் பயந்த மாதிரி "இல்ல இல்ல, சாரி.. ஓ.கே. இங்கயே இதுக்கு ஒரு ஃபுல்ஸ்டாப்" அப்டின்னேன்.

கொஞ்ச நேரத்ல அம்மணியின் போன் சிணுங்கியது. அமெரிக்கால இருந்து அவங்க பையன் கூப்பிட்டிருந்தான். இவங்க சொன்ன முதல் வார்த்தை "நான் விழுந்துட்டேன்டா"! இதுக்கப்புறமும் எப்டிங்க நாம சும்மா பார்த்துக்கிட்டு இருக்க முடியும்? "சரிதான், நியூ யார்க் டைம் பெஸ்ட் செல்லர் ஆயிடும், இப்டியே லோக்கல்லயும் இவங்களே வித்துடுவாங்க, இந்த லட்சணத்தில மத்தவங்கள சொல்ல வேணாமாம்" னு நொடித்துக் கொண்டு, கையில் இன்னமும் குடிக்காம வச்சிருந்த வாட்டர் பாட்டலை திறந்து, நிதானமா வாட்டர் சாப்ட ஆரம்பித்தேன்.

______

85 ஊக்கம்::

மணிகண்டன் said...

பிரியா இது எல்லாம் ரொம்பவே ஓவர்.
முதல் முறையா வரேன்னு நினைக்கறேன். செம ஜாலியா எழுதறீங்க.

துபாய் ராஜா said...

கலகலப்ரியா:ஆன்ட்டி,உன்னிய கொன்னே போட்றுவேன்னு என் கழுத்தை நெரிக்க வர்றீங்களா? ஹெஹெ.. மாட்டிக்கற மாதிரி இருந்துக்கிட்டா இப்டி லொள்ளு பதிவு போடுவோம்.....

தோழியின் தாய் : எப்படியும் இந்த பக்கம் வராமல போயிடுவே...அப்ப இருக்கு உனக்கு....

:))))

ஈரோடு கதிர் said...

யக்கோவ் பொய் சொல்லாதீங்க...
//"ஏண்டி நான் விழுறப்போ உங்கப்பா என்ன பண்ணிக்கிட்டிருந்தாரு?" //

இப்பிடியா கேட்டுது...


"ஏண்டி நான் உழறப்போ... அந்த கடங்காரான்... உங்கொப்பன் என்னொ பண்ணீட்டிருந்தா"

எனக்கென்னமோ இப்பிடித்தான் கேட்டிருக்கும்னு தோணுது...

இராகவன் நைஜிரியா said...

// நான் மெரீனா கடற்கரைக்கு போன கதைங்க இது.. //

ரொம்ப சந்தோஷம்... இது கதையா... நான் எதோ உண்மைச் சம்பவம் அப்படின்னு நினைச்சுட்டேன்.

vasu balaji said...

நினைச்சேன். இப்படி கேப் விட்டா அதிரடியா கலக்குவான்னு. தண்ணி குடிக்காமலே புறை ஏறுது.

இராகவன் நைஜிரியா said...

// வீட்டிலிருந்து கிளம்பறப்பவே, இழுபறி ஆகிப் போச்சுங்க //

ஆரம்பமே தகராறா...

இராகவன் நைஜிரியா said...

// அன்னிக்கு பார்த்து அவங்க வீட்ல ஒரு டெலிவரி. ச்சே ச்சே.. நீங்க நினைக்கிற மாதிரி இல்ல.. ஒரு சோஃபா ஆர்டர் கொடுத்திருந்தாங்க, அவ்ளோதான்! அன்னைக்கு அதை வீட்ல கொண்டு வந்து வச்சுட்டு போறதா சொல்லி, அவங்க வந்து, பொண்ண புகுந்த வீட்ல செட்டில் பண்ற மாதிரி சோஃபாவ அலுங்காம நலுங்காம வச்சுட்டு,//

வாஸ்து பார்த்து வச்சாங்களா... இல்ல வாஸ்து பார்க்காம வச்சாங்களா?

இராகவன் நைஜிரியா said...

// நாம கிளம்பி அந்த சென்னை டிராஃபிக் ஜாம்ல மாட்டி மெரீனா பீச்சாண்ட போறப்பவே ஜாம் ஆகி இருந்தோம். //

ப்ரெட் வாங்கிட்டு போயிருந்தீங்கன்னா இன்னும் நல்லா இருந்திருக்குமே?

இராகவன் நைஜிரியா said...

// லேசா இருட்ட ஆரம்பிச்சிடுத்து. இனிமே கடலு எங்க, கரை எங்க, //

ஏங்க லேசா இருட்டுக்கே கண் தெரியலையா?

vasu balaji said...

ஆஹா. வாங்க சார். கும்மியா

இராகவன் நைஜிரியா said...

// ரொம்ப அக்கறையா அந்த இருட்டில ஃப்ளாஷ் இல்லாம போட்டோ எடுத்துக் கொண்டிருந்த ஐயா,//

ரொம்ப சந்தோஷமா எடுத்துகிட்டு இருந்திருப்பார்

இராகவன் நைஜிரியா said...

//
"ஏண்டி எப்டிடீ விழுந்தேன்?"
பொண்ணு பொறுக்க மாட்டாம "சும்மா பப்பரப்பேன்னு விழுந்தாம்மா" //

இஃகி...இஃகி

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...
ஆஹா. வாங்க சார். கும்மியா //

இல்லீங்க அண்ணே... கும்மி எப்போதுமே தனியா அடிக்க முடியாதுங்கண்ணே... ஒரு துணை வேண்டும். சும்மா ஒரு நாலு பின்னூட்டம் போட்டேங்க.

அண்ணே ஒரு சந்தேகம், இந்தியா நேரம் ராத்திரி 12 மணிக்கு பின்னூட்டம் போட்டாலும் பதில் போடறீங்களே எப்படி... தூங்க மாட்டீங்களா?

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...
நினைச்சேன். இப்படி கேப் விட்டா அதிரடியா கலக்குவான்னு. தண்ணி குடிக்காமலே புறை ஏறுது. //

சமயத்தில சாப்பிடும் போது கூட புறை ஏறுங்க

இராகவன் நைஜிரியா said...

// "என்னடி நக்கலா?"
"அதொண்ணுமில்லம்மா உனக்கு தண்ணில கண்டம்னு நினைக்கிறேன்.. "//

நல்ல ஜோசியரா பாக்கச் சொல்லுங்க

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/அண்ணே ஒரு சந்தேகம், இந்தியா நேரம் ராத்திரி 12 மணிக்கு பின்னூட்டம் போட்டாலும் பதில் போடறீங்களே எப்படி... தூங்க மாட்டீங்களா?/

இப்போ பகல் 12 மணி சார். அவ்வ்வ்வ். இப்பதானே வந்துட்டு போனிங்க.

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/சமயத்தில சாப்பிடும் போது கூட புறை ஏறுங்க/

இது அடிக்கிற லொள்ளுக்கு எச்சி முழுங்கினாலே புறையேறும்.

Anonymous said...

:)))

கலகலப்ரியா said...

//மணிகண்டன் said...

பிரியா இது எல்லாம் ரொம்பவே ஓவர்.
முதல் முறையா வரேன்னு நினைக்கறேன். செம ஜாலியா எழுதறீங்க.//

நன்றிங்க மணிகண்டன்.. :)..

கலகலப்ரியா said...

//துபாய் ராஜா said...

தோழியின் தாய் : எப்படியும் இந்த பக்கம் வராமல போயிடுவே...அப்ப இருக்கு உனக்கு....

:))))//

ஐயோ துபாய் ராசா.. நானே நேத்தில இருந்து போனுக்கு கூட முக்காடு போட்டுண்டிருக்கேன்.. நீங்க வேற.. மெதுவா சிரிங்க.. ப்ளீஸ்

கலகலப்ரியா said...

//கதிர் - ஈரோடு said...
"ஏண்டி நான் உழறப்போ... அந்த கடங்காரான்... உங்கொப்பன் என்னொ பண்ணீட்டிருந்தா"

எனக்கென்னமோ இப்பிடித்தான் கேட்டிருக்கும்னு தோணுது...//

ஆ...! கதிர்.. அவங்க சொன்னது வேற விதமா.. ரொம்ப டீசன்டாதான்.. ஆனா பாஷை வேற..! நீங்க வேற அவசரப்பட்டு உங்க வீட்டு கதை எல்லாம் சொல்லிப்டீங்களே.. செரி செரி.. வீட்டுக்கு வீடு மண்டகப்படி... ஐ மீன் வாசப்படி...!

கலகலப்ரியா said...

//இராகவன் நைஜிரியா said...

ரொம்ப சந்தோஷம்... இது கதையா... நான் எதோ உண்மைச் சம்பவம் அப்படின்னு நினைச்சுட்டேன்.//

எல்லாம் மாயா ராகவா... (அது யார்னு கேக்காதிங்க சாரே.. மாயாண்டி ஐயா கோச்சுக்குவார்)

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...

நினைச்சேன். இப்படி கேப் விட்டா அதிரடியா கலக்குவான்னு. தண்ணி குடிக்காமலே புறை ஏறுது.//

பார்த்துங்க.. இதுதான் சாக்குன்னு ஊட்டுக்காரம்மா தலைல கடப்பாறைய இறக்க போகுது..

கலகலப்ரியா said...

//இராகவன் நைஜிரியா said...

// வீட்டிலிருந்து கிளம்பறப்பவே, இழுபறி ஆகிப் போச்சுங்க //

ஆரம்பமே தகராறா...//

நீங்க வேறைங்க.. எப்பவுமே தகராறுதான்.. (என்ன பண்ண... இல்லைனா போர் அடிக்குதே.. ஹிஹி..)

கலகலப்ரியா said...

//இராகவன் நைஜிரியா said...

// லேசா இருட்ட ஆரம்பிச்சிடுத்து. இனிமே கடலு எங்க, கரை எங்க, //

ஏங்க லேசா இருட்டுக்கே கண் தெரியலையா?//

இல்லைங்க கண்ணுக்கு கடல் தெரியல..! இருட்டுக்கு கண்ணு இருக்குதுங்களாங்க?

கலகலப்ரியா said...

//இராகவன் நைஜிரியா said...

// ரொம்ப அக்கறையா அந்த இருட்டில ஃப்ளாஷ் இல்லாம போட்டோ எடுத்துக் கொண்டிருந்த ஐயா,//

ரொம்ப சந்தோஷமா எடுத்துகிட்டு இருந்திருப்பார்//

அப்டிங்கிறீங்க..?

கலகலப்ரியா said...

//இராகவன் நைஜிரியா said...

... ஒரு துணை வேண்டும்.//

உங்க ஆத்துக்காரிய கொஞ்சம் கூப்டுங்க.. இத காண்பிச்சு இன்னான்னு கேக்கலாம்..

//சும்மா ஒரு நாலு பின்னூட்டம் போட்டேங்க.//

ஆமாங்க மீதிக்கேல்லாம் பில் அனுப்பிச்சிடுவாரு.. (நாலு பின்னூட்டம் ஃப்ரீ..)

//அண்ணே ஒரு சந்தேகம், இந்தியா நேரம் ராத்திரி 12 மணிக்கு பின்னூட்டம் போட்டாலும் பதில் போடறீங்களே எப்படி... தூங்க மாட்டீங்களா?//

ஏனுங்க.. மாசம் ஒரு இடுகை போடுற ஆளே தூக்கத்தில நடக்கிறப்போ... தினம் ரெண்டு இடுகை போடுற ஆள பார்த்து கேக்குற கேள்வியாங்க இது..?

கலகலப்ரியா said...

//இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...
நினைச்சேன். இப்படி கேப் விட்டா அதிரடியா கலக்குவான்னு. தண்ணி குடிக்காமலே புறை ஏறுது. //

சமயத்தில சாப்பிடும் போது கூட புறை ஏறுங்க//

எந்த சமயத்திலங்க..? இதுதான் பக்தி முத்தி.. குரல நூறு கட்டைக்கு உயர்த்தி உணர்ச்சிவசப்பட்டு பாடக் கூடாதுங்கிறது...

கலகலப்ரியா said...

//இராகவன் நைஜிரியா said...

// "என்னடி நக்கலா?"
"அதொண்ணுமில்லம்மா உனக்கு தண்ணில கண்டம்னு நினைக்கிறேன்.. "//

நல்ல ஜோசியரா பாக்கச் சொல்லுங்க//

இவங்க ஜோசியர் தொழில புடுங்கிட்டு அந்தாள அம்போன்னு விடவா.. வேணாம்... ஜோஸ்ய பாவம் பொல்லாதது..

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...

/அண்ணே ஒரு சந்தேகம், இந்தியா நேரம் ராத்திரி 12 மணிக்கு பின்னூட்டம் போட்டாலும் பதில் போடறீங்களே எப்படி... தூங்க மாட்டீங்களா?/

இப்போ பகல் 12 மணி சார். அவ்வ்வ்வ். இப்பதானே வந்துட்டு போனிங்க.//

ஏனுங்க வானம்.. உங்களுக்கு இரவு, பகல் வித்யாசம் எல்லாம் கூட தெரியுதா..? பேஷ் பேஷ்..

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...

/சமயத்தில சாப்பிடும் போது கூட புறை ஏறுங்க/

இது அடிக்கிற லொள்ளுக்கு எச்சி முழுங்கினாலே புறையேறும்.//

அத ஏன் முழுங்கறீங்க.. துப்பிடுங்க.. ரஜினி ஸ்டைல்ல சொல்லணும்னா "கண்ணா... துப்பாத எச்சியும் செரி.. ஏறாத புரியும் செரி.. உருப்பட்டதா சரித்திரமே இல்ல கண்ணா.. வர்ட்டா..

கலகலப்ரியா said...

//கடையம் ஆனந்த் said...

:)))//

உங்க கால் எங்கே? பதில் போட்டு டயர்ட் ஆய்ட்டேன்.. இது ஈசி.. :))

கலகலப்ரியா said...

//இராகவன் நைஜிரியா said...

சோஃபாவ அலுங்காம நலுங்காம வச்சுட்டு,//

வாஸ்து பார்த்து வச்சாங்களா... இல்ல வாஸ்து பார்க்காம வச்சாங்களா?//

ஆ.. ! சோபா வர முன்னாடியே.. வாஸ்து சாஸ்தரப்படி... படிய உடைச்சிட்டுதானே வந்தாங்க...

கலகலப்ரியா said...

//இராகவன் நைஜிரியா said...

// நாம கிளம்பி அந்த சென்னை டிராஃபிக் ஜாம்ல மாட்டி மெரீனா பீச்சாண்ட போறப்பவே ஜாம் ஆகி இருந்தோம். //

ப்ரெட் வாங்கிட்டு போயிருந்தீங்கன்னா இன்னும் நல்லா இருந்திருக்குமே?//

ஏனுங்க.. லோகம் மில்லேனியம் பில்லி சூனியம்.. சாரி.. பில்லேனியம் எல்லாம் தாண்டிப் போய்க்கிட்டிருக்கு.. கி.மு. ஜோக் எல்லாம் சொன்னா நல்லாவாங்க இருக்கு...

vasu balaji said...

கலகலப்ரியா said...
/கி.மு. ஜோக் எல்லாம் சொன்னா நல்லாவாங்க இருக்கு.../

ம்க்கும். இது வேற. லோகத்துல எந்த ஜாம் போய் ப்ரெட் வாங்கி இருக்கு. நீங்களே ஜாம் ஆய்ட்டோம்னு சொன்னீங்களே.

vasu balaji said...

கலகலப்ரியா said...

/ஏனுங்க வானம்.. உங்களுக்கு இரவு, பகல் வித்யாசம் எல்லாம் கூட தெரியுதா..? பேஷ் பேஷ்../

ஏன்க வானம்பாடிக்கு கண்ணு தெரியாதா என்னா?

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...
/கி.மு. ஜோக் எல்லாம் சொன்னா நல்லாவாங்க இருக்கு.../

ம்க்கும். இது வேற. லோகத்துல எந்த ஜாம் போய் ப்ரெட் வாங்கி இருக்கு. நீங்களே ஜாம் ஆய்ட்டோம்னு சொன்னீங்களே.//

ஏனுங்க வானம்பாடி.. இது நம்மளுக்கு தோணலைன்னு நீங்க நினைச்சு சொல்றது புரியறதுங்க... ஆனா பாருங்க நாம பில்லேனியத்த நோக்கி போய்க் கொண்டிருக்கிறோம்.. கி.மு. பாணிலையே பதில் சொன்னா எப்டிங்க..

vasu balaji said...

கலகலப்ரியா said...
/ஆனா பாருங்க நாம பில்லேனியத்த நோக்கி போய்க் கொண்டிருக்கிறோம்.. கி.மு. பாணிலையே பதில் சொன்னா எப்டிங்க../

ஏனுங். பில்லேனியத்துல ஜாம் போய் பேக்கரில ப்ரெட் வாங்கி தானே தடவிக்குமாங். லொல்லுக்கு அளவில்லாம போச்சுடியம்மா.நம்ம கிட்டயேவா.

இராகவன் நைஜிரியா said...

// கலகலப்ரியா said...
//இராகவன் நைஜிரியா said...

// லேசா இருட்ட ஆரம்பிச்சிடுத்து. இனிமே கடலு எங்க, கரை எங்க, //

ஏங்க லேசா இருட்டுக்கே கண் தெரியலையா?//

இல்லைங்க கண்ணுக்கு கடல் தெரியல..! இருட்டுக்கு கண்ணு இருக்குதுங்களாங்க? //

இருட்டுக்கு கண் இருக்கா இல்லையான்னு எனக்கு எப்படிங்க தெரியும்... அதை இருட்டைப் போய் கேளுங்க..

இராகவன் நைஜிரியா said...

// கலகலப்ரியா said...
//இராகவன் நைஜிரியா said...

// ரொம்ப அக்கறையா அந்த இருட்டில ஃப்ளாஷ் இல்லாம போட்டோ எடுத்துக் கொண்டிருந்த ஐயா,//

ரொம்ப சந்தோஷமா எடுத்துகிட்டு இருந்திருப்பார்//

அப்டிங்கிறீங்க..? \\

அப்படி இல்லையா?? !!! :-)

இராகவன் நைஜிரியா said...

// கலகலப்ரியா said...
//இராகவன் நைஜிரியா said...

... ஒரு துணை வேண்டும்.//

உங்க ஆத்துக்காரிய கொஞ்சம் கூப்டுங்க.. இத காண்பிச்சு இன்னான்னு கேக்கலாம்.. //

ஏங்க உங்களுக்கு நான் பின்னூட்டம் போடுவது பிடிக்கவில்லை என்றால் நேரடியாகச் சொல்லணும். அதை விட்டு விட்டு இப்படியெல்லாம் மனுஷனை அழவிட்டா ரொம்ப தப்பு.... அவ்...அவ்....அவ்...

மனுஷன் சமாளிச்சுகிட்டு பொழப்பை ஓட்டிகிட்டு இருப்பது உலகத்தில எத்தன பேர் கண்ண உறுத்துது... :-)

இராகவன் நைஜிரியா said...

\\ September 13, 2009 10:09 AM
கலகலப்ரியா said...
//இராகவன் நைஜிரியா said...

//சும்மா ஒரு நாலு பின்னூட்டம் போட்டேங்க.//

ஆமாங்க மீதிக்கேல்லாம் பில் அனுப்பிச்சிடுவாரு.. (நாலு பின்னூட்டம் ஃப்ரீ..)\\

சரிங்க பில் எப்ப அனுப்பட்டும்... ஈரோவில் கொடுப்பீங்களா, டாலரில் கொடுப்பீங்களா..

இராகவன் நைஜிரியா said...

\\ கலகலப்ரியா said...
//இராகவன் நைஜிரியா said...

அண்ணே ஒரு சந்தேகம், இந்தியா நேரம் ராத்திரி 12 மணிக்கு பின்னூட்டம் போட்டாலும் பதில் போடறீங்களே எப்படி... தூங்க மாட்டீங்களா?//

ஏனுங்க.. மாசம் ஒரு இடுகை போடுற ஆளே தூக்கத்தில நடக்கிறப்போ... தினம் ரெண்டு இடுகை போடுற ஆள பார்த்து கேக்குற கேள்வியாங்க இது..? \\

ஆமாம் சரியாச் சொன்னீங்க... அண்ணன் பெரிய ஆள்தாங்க

இராகவன் நைஜிரியா said...

\\ கலகலப்ரியா said...
//இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...
நினைச்சேன். இப்படி கேப் விட்டா அதிரடியா கலக்குவான்னு. தண்ணி குடிக்காமலே புறை ஏறுது. //

சமயத்தில சாப்பிடும் போது கூட புறை ஏறுங்க//

எந்த சமயத்திலங்க..? இதுதான் பக்தி முத்தி.. குரல நூறு கட்டைக்கு உயர்த்தி உணர்ச்சிவசப்பட்டு பாடக் கூடாதுங்கிறது... \\

பக்தியா... அப்படின்னா என்னாங்க... என்ன விலைங்க... எங்க கிடைக்குங்க

இராகவன் நைஜிரியா said...

\\ கலகலப்ரியா said...
//இராகவன் நைஜிரியா said...

// "என்னடி நக்கலா?"
"அதொண்ணுமில்லம்மா உனக்கு தண்ணில கண்டம்னு நினைக்கிறேன்.. "//

நல்ல ஜோசியரா பாக்கச் சொல்லுங்க//

இவங்க ஜோசியர் தொழில புடுங்கிட்டு அந்தாள அம்போன்னு விடவா.. வேணாம்... ஜோஸ்ய பாவம் பொல்லாதது..\\

இஃகி... இஃகி

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...

/ஏனுங்க வானம்.. உங்களுக்கு இரவு, பகல் வித்யாசம் எல்லாம் கூட தெரியுதா..? பேஷ் பேஷ்../

ஏன்க வானம்பாடிக்கு கண்ணு தெரியாதா என்னா?//

அது வானம்பாடியோ.. வவ்வாலோ... கண்ணை மீறி.. இப்போ சூரியன் பளிச்சுன்னு இருக்கு.. ஸோ இது பகலுன்னு பகுத்தறியுற தன்மை வேணுமுங்க.. புரியுதுங்களாங்க...

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...
/ஆனா பாருங்க நாம பில்லேனியத்த நோக்கி போய்க் கொண்டிருக்கிறோம்.. கி.மு. பாணிலையே பதில் சொன்னா எப்டிங்க../

ஏனுங். பில்லேனியத்துல ஜாம் போய் பேக்கரில ப்ரெட் வாங்கி தானே தடவிக்குமாங். லொல்லுக்கு அளவில்லாம போச்சுடியம்மா.நம்ம கிட்டயேவா.//

இல்லைங்க... பிரட் எல்லாம் ஏப்ரன் கட்டிக்கிட்டு பேக்கரி நடத்துமுங்க..

கலகலப்ரியா said...

//இராகவன் நைஜிரியா said...

// கலகலப்ரியா said...
//இராகவன் நைஜிரியா said...

// லேசா இருட்ட ஆரம்பிச்சிடுத்து. இனிமே கடலு எங்க, கரை எங்க, //

ஏங்க லேசா இருட்டுக்கே கண் தெரியலையா?//

இல்லைங்க கண்ணுக்கு கடல் தெரியல..! இருட்டுக்கு கண்ணு இருக்குதுங்களாங்க? //

இருட்டுக்கு கண் இருக்கா இல்லையான்னு எனக்கு எப்படிங்க தெரியும்... அதை இருட்டைப் போய் கேளுங்க..//

ஹல்லோ... அது நீங்க கேட்ட கேள்விங்க.. நீங்க அப்பவே இருட்டை வெறிச்சு.. ஐ மீன் பார்த்து கேட்டிருந்தா இவ்ளோ வேல மிச்சம்ல

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/ஆமாம் சரியாச் சொன்னீங்க... அண்ணன் பெரிய ஆள்தாங்க/

கூட்டணி வெச்சி கும்மியடிச்சா நான் என்னாவறது. அவ்வ்வ்

கலகலப்ரியா said...

//இராகவன் நைஜிரியா said...

// கலகலப்ரியா said...
//இராகவன் நைஜிரியா said...

... ஒரு துணை வேண்டும்.//

உங்க ஆத்துக்காரிய கொஞ்சம் கூப்டுங்க.. இத காண்பிச்சு இன்னான்னு கேக்கலாம்.. //

ஏங்க உங்களுக்கு நான் பின்னூட்டம் போடுவது பிடிக்கவில்லை என்றால் நேரடியாகச் சொல்லணும். அதை விட்டு விட்டு இப்படியெல்லாம் மனுஷனை அழவிட்டா ரொம்ப தப்பு.... அவ்...அவ்....அவ்...

மனுஷன் சமாளிச்சுகிட்டு பொழப்பை ஓட்டிகிட்டு இருப்பது உலகத்தில எத்தன பேர் கண்ண உறுத்துது... :-)//

ச்சே ச்சே... அவங்கள கூப்டறதுக்கேவா இவ்ளோ அழுவாச்சி... செரி வேணாம்.. விட்டுடுங்க.. அழுதுடாதீங்க..

vasu balaji said...

/அது வானம்பாடியோ.. வவ்வாலோ... கண்ணை மீறி.. இப்போ சூரியன் பளிச்சுன்னு இருக்கு.. ஸோ இது பகலுன்னு பகுத்தறியுற தன்மை வேணுமுங்க.. புரியுதுங்களாங்க.../

ஏனுங். நம்ம கவுண்டரு ரெண்டு பைக்கு வருது நடுவுல பூந்து போய்டலாம்னு பார்த்தனுங்னு சொல்றா மாதிரி இல்ல இருக்கு. சூரியன் பளிச்சுன்னு இருக்காம்ல. வர லைட்ல சூரியனே டல்லடிக்குது இப்பல்லாம்.

கலகலப்ரியா said...

//இராகவன் நைஜிரியா said...

\\ கலகலப்ரியா said...
//இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...
நினைச்சேன். இப்படி கேப் விட்டா அதிரடியா கலக்குவான்னு. தண்ணி குடிக்காமலே புறை ஏறுது. //

சமயத்தில சாப்பிடும் போது கூட புறை ஏறுங்க//

எந்த சமயத்திலங்க..? இதுதான் பக்தி முத்தி.. குரல நூறு கட்டைக்கு உயர்த்தி உணர்ச்சிவசப்பட்டு பாடக் கூடாதுங்கிறது... \\

பக்தியா... அப்படின்னா என்னாங்க... என்ன விலைங்க... எங்க கிடைக்குங்க//

நான் வாங்கினதில்ல... விவரம் தெரியலீங்க... வானம்பாடி கிட்ட கேட்டு பாருங்க... பக்திய பாங் லாக்கர்ல பூட்டி வச்சிருக்கிறதா கேள்வி..

vasu balaji said...

கலகலப்ரியா said...
/இல்லைங்க... பிரட் எல்லாம் ஏப்ரன் கட்டிக்கிட்டு பேக்கரி நடத்துமுங்க../

அப்படின்னா வாங்க வரவங்கள ஜாம் தடவி தான் சாப்டுமோ?

இராகவன் நைஜிரியா said...

\\கலகலப்ரியா said...

ச்சே ச்சே... அவங்கள கூப்டறதுக்கேவா இவ்ளோ அழுவாச்சி... செரி வேணாம்.. விட்டுடுங்க.. அழுதுடாதீங்க.\\

பின்னூட்டம் போடலாமா வேண்டாமா... இதுக்கு இன்னும் பதில் சொல்லலீங்க...

அண்ணே பாலாண்ணே இவங்க இவ்வளவு டெரர்ரா?

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...

/ஆமாம் சரியாச் சொன்னீங்க... அண்ணன் பெரிய ஆள்தாங்க/

கூட்டணி வெச்சி கும்மியடிச்சா நான் என்னாவறது. அவ்வ்வ்/

echchusme... nooo politics pls...

இராகவன் நைஜிரியா said...

\\ வானம்பாடிகள் said...
இராகவன் நைஜிரியா said...

/ஆமாம் சரியாச் சொன்னீங்க... அண்ணன் பெரிய ஆள்தாங்க/

கூட்டணி வெச்சி கும்மியடிச்சா நான் என்னாவறது. அவ்வ்வ் \\

கூட்டணியா... நீங்க வேற அண்ணே... அவங்க அடிக்கிற அடியல நானே அழுதுகிட்டு இருக்கேன்

கலகலப்ரியா said...

//இராகவன் நைஜிரியா said...

\\கலகலப்ரியா said...

ச்சே ச்சே... அவங்கள கூப்டறதுக்கேவா இவ்ளோ அழுவாச்சி... செரி வேணாம்.. விட்டுடுங்க.. அழுதுடாதீங்க.\\

பின்னூட்டம் போடலாமா வேண்டாமா... இதுக்கு இன்னும் பதில் சொல்லலீங்க...

அண்ணே பாலாண்ணே இவங்க இவ்வளவு டெரர்ரா?//

முடியலன்னு சொல்ற மாதிரி இருக்கு... அப்டியே புது இடுகைக்கும் பின்னூட்டுங்க.. இஃஹி

vasu balaji said...

கலகலப்ரியா said...

/பக்தியா... அப்படின்னா என்னாங்க... என்ன விலைங்க... எங்க கிடைக்குங்க//

நான் வாங்கினதில்ல... விவரம் தெரியலீங்க... வானம்பாடி கிட்ட கேட்டு பாருங்க... பக்திய பாங் லாக்கர்ல பூட்டி வச்சிருக்கிறதா கேள்வி../

எனக்கும் சான்ஸ் கிடைச்சது. சொல்லிக்கிறேன். அடங்கொன்னியா. போன பின்னூட்ட கும்மில பக்தா வரம் கேளுன்னு சொன்ன அம்மன் யாரு. வரம் கேட்ட பக்தர் யாரு. இப்பொ நான் லாக்கர்ல வெச்சிருக்கிறேன்னு ரெய்டுட சதியா?

இராகவன் நைஜிரியா said...

// கலகலப்ரியா said...
//வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...

/ஆமாம் சரியாச் சொன்னீங்க... அண்ணன் பெரிய ஆள்தாங்க/

கூட்டணி வெச்சி கும்மியடிச்சா நான் என்னாவறது. அவ்வ்வ்/

echchusme... nooo politics pls... //

பாலிடிக்சா... அய்ய நாங்க எல்லாம் அதுக்கு தகுதியானவங்க கிடையாதுங்க

இராகவன் நைஜிரியா said...

\\ வானம்பாடிகள் said...
கலகலப்ரியா said...

/பக்தியா... அப்படின்னா என்னாங்க... என்ன விலைங்க... எங்க கிடைக்குங்க//

நான் வாங்கினதில்ல... விவரம் தெரியலீங்க... வானம்பாடி கிட்ட கேட்டு பாருங்க... பக்திய பாங் லாக்கர்ல பூட்டி வச்சிருக்கிறதா கேள்வி../

எனக்கும் சான்ஸ் கிடைச்சது. சொல்லிக்கிறேன். அடங்கொன்னியா. போன பின்னூட்ட கும்மில பக்தா வரம் கேளுன்னு சொன்ன அம்மன் யாரு. வரம் கேட்ட பக்தர் யாரு. இப்பொ நான் லாக்கர்ல வெச்சிருக்கிறேன்னு ரெய்டுட சதியா?\\

ஓ இதுக்கு பேருதான் பக்தியா...

அண்ணே ரொம்ப டாங்ஸ் அண்ணே

vasu balaji said...

கலகலப்ரியா said...

/அண்ணே பாலாண்ணே இவங்க இவ்வளவு டெரர்ரா?//

சே சே. டெர்ரர்லாம் இல்லங்க. சரியான லொல்லு பொண்ணு. வாலு.

இராகவன் நைஜிரியா said...

\\ கலகலப்ரியா said...
//இராகவன் நைஜிரியா said...

\\கலகலப்ரியா said...

ச்சே ச்சே... அவங்கள கூப்டறதுக்கேவா இவ்ளோ அழுவாச்சி... செரி வேணாம்.. விட்டுடுங்க.. அழுதுடாதீங்க.\\

பின்னூட்டம் போடலாமா வேண்டாமா... இதுக்கு இன்னும் பதில் சொல்லலீங்க...

அண்ணே பாலாண்ணே இவங்க இவ்வளவு டெரர்ரா?//

முடியலன்னு சொல்ற மாதிரி இருக்கு... அப்டியே புது இடுகைக்கும் பின்னூட்டுங்க.. இஃஹி \\

முடியலை அப்படின்றத இத விட அப்பட்டமா சொல்ல முடியுங்களா?

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...

/பக்தியா... அப்படின்னா என்னாங்க... என்ன விலைங்க... எங்க கிடைக்குங்க//

நான் வாங்கினதில்ல... விவரம் தெரியலீங்க... வானம்பாடி கிட்ட கேட்டு பாருங்க... பக்திய பாங் லாக்கர்ல பூட்டி வச்சிருக்கிறதா கேள்வி../

எனக்கும் சான்ஸ் கிடைச்சது. சொல்லிக்கிறேன். அடங்கொன்னியா. போன பின்னூட்ட கும்மில பக்தா வரம் கேளுன்னு சொன்ன அம்மன் யாரு. வரம் கேட்ட பக்தர் யாரு. இப்பொ நான் லாக்கர்ல வெச்சிருக்கிறேன்னு ரெய்டுட சதியா?//

த்தோ... பக்தி வேற.. வரம் வேற.. அப்டின்னு பார்த்தா கூட ராகவாச்சார்யா கிட்டதான் பக்தி இருந்திச்சி... ! (அதுவுமில்லாம ப்ரீவியஸ் இடுகை எல்லாம் இங்க இழுக்கிறது நல்லால்ல சொல்லிப்புட்டேன்..)

vasu balaji said...

என்னா முடியல. பின்னூட்டம் போடவா போடுறத நிறுத்தவா. யாராச்சும் சரியா சொல்லுங்கப்பு.:((

கலகலப்ரியா said...

//இராகவன் நைஜிரியா said...

// கலகலப்ரியா said...
//வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...

/ஆமாம் சரியாச் சொன்னீங்க... அண்ணன் பெரிய ஆள்தாங்க/

கூட்டணி வெச்சி கும்மியடிச்சா நான் என்னாவறது. அவ்வ்வ்/

echchusme... nooo politics pls... //

பாலிடிக்சா... அய்ய நாங்க எல்லாம் அதுக்கு தகுதியானவங்க கிடையாதுங்க//

அட ஆமாம்ல.. முப்பத்தைஞ்சு தாண்டி ரொம்ப வருஷமாச்சே.. ஐ ஆம் வெரி சாரிங்க..

vasu balaji said...

கலகலப்ரியா said...
/த்தோ... பக்தி வேற.. வரம் வேற.. அப்டின்னு பார்த்தா கூட ராகவாச்சார்யா கிட்டதான் பக்தி இருந்திச்சி... ! (அதுவுமில்லாம ப்ரீவியஸ் இடுகை எல்லாம் இங்க இழுக்கிறது நல்லால்ல சொல்லிப்புட்டேன்..)/

அய்யய்யோ. அம்மனே புளுகுது. பக்திய வாங்கிக்கிட்டு தானே வரம் குடுத்தது. அப்புறம் அவருகிட்ட எங்க இருக்கும் பக்தி.

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...

/அண்ணே பாலாண்ணே இவங்க இவ்வளவு டெரர்ரா?//

சே சே. டெர்ரர்லாம் இல்லங்க. சரியான லொல்லு பொண்ணு. வாலு.//

இப்டி சொல்லி சொல்லியே... இப்போல்லாம் அப்ப அப்ப பின்னாடி திரும்பி பார்த்து செக் பண்ணிக்கறேன்... வேணாம்... அப்புறம் நான் தலை பத்தி பேச வேண்டி வரும்..

vasu balaji said...

கலகலப்ரியா said...

/அட ஆமாம்ல.. முப்பத்தைஞ்சு தாண்டி ரொம்ப வருஷமாச்சே.. ஐ ஆம் வெரி சாரிங்க../

தோ. பேச்சு பேச்சாதான் இருக்கணும். ராகுல் இளைஞரணிக்கு ஆள் தேடுறான்னு எங்கள மாட்டி விடுறதா.

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...
/த்தோ... பக்தி வேற.. வரம் வேற.. அப்டின்னு பார்த்தா கூட ராகவாச்சார்யா கிட்டதான் பக்தி இருந்திச்சி... ! (அதுவுமில்லாம ப்ரீவியஸ் இடுகை எல்லாம் இங்க இழுக்கிறது நல்லால்ல சொல்லிப்புட்டேன்..)/

அய்யய்யோ. அம்மனே புளுகுது. பக்திய வாங்கிக்கிட்டு தானே வரம் குடுத்தது. அப்புறம் அவருகிட்ட எங்க இருக்கும் பக்தி.//

யோவ்... கொஞ்சம் இருங்கய்யா... நீங்க பேசற பேச்ச பார்த்தா இன்காம் டாக்ஸ் ரெய்டுக்கு வந்துடுவாங்க போல இருக்கு...

vasu balaji said...

கலகலப்ரியா said...

/இப்டி சொல்லி சொல்லியே... இப்போல்லாம் அப்ப அப்ப பின்னாடி திரும்பி பார்த்து செக் பண்ணிக்கறேன்... வேணாம்... அப்புறம் நான் தலை பத்தி பேச வேண்டி வரும்../

மோவ். உக்காந்தா உருத்தும்ல. அப்புறம் என்னா திரும்பிப் பார்க்கறது. தலைய பத்தி பேசறதா. உன்னோட அடுத்த இடுகை படிச்சிட்டு அதக் காணாம தேடிக்கிட்டிருக்கேன். கண்டா சொல்லும்மா.அவ்வ்வ்வ்வ்வ்

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...

/அட ஆமாம்ல.. முப்பத்தைஞ்சு தாண்டி ரொம்ப வருஷமாச்சே.. ஐ ஆம் வெரி சாரிங்க../

தோ. பேச்சு பேச்சாதான் இருக்கணும். ராகுல் இளைஞரணிக்கு ஆள் தேடுறான்னு எங்கள மாட்டி விடுறதா.//

இன்னது... உங்கள மாட்டி விடுறதா... ஹஹஹா... ஏனுங்க... எனக்கு மனசாட்சியே இல்லைன்னு நினைச்சீங்களா... இல்ல நீங்க கமல் மேக் அப் மேன் கிட்ட இன்சல்ட்.. சாரி கன்சல்ட் பண்ணிட்டிருக்கீங்களா என்ன...

vasu balaji said...

கலகலப்ரியா said...

/இன்னது... உங்கள மாட்டி விடுறதா... ஹஹஹா... ஏனுங்க... எனக்கு மனசாட்சியே இல்லைன்னு நினைச்சீங்களா... இல்ல நீங்க கமல் மேக் அப் மேன் கிட்ட இன்சல்ட்.. சாரி கன்சல்ட் பண்ணிட்டிருக்கீங்களா என்ன.../

எங்க பக்கத்து வீட்டு தாத்த அப்ளை பண்ணி இருக்காருங்கோவ். எனக்கென்னா? 65 வயசுக்கு மேல தான் சேர்ப்பாங்களாம் இளைஞரணில.

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...

எங்க பக்கத்து வீட்டு தாத்த அப்ளை பண்ணி இருக்காருங்கோவ். எனக்கென்னா? 65 வயசுக்கு மேல தான் சேர்ப்பாங்களாம் இளைஞரணில.//

சத்யமான வார்த்தை! அறுபத்தைஞ்சு வயசுக்கு "மேல"தான் சேர்ப்பாங்க இளைஞரணில... (ரொம்ப இண்டரெஸ்ட்டிங் மேட்டர்ங்க...)

அது சரி(18185106603874041862) said...

//
அவங்க "ஏண்டி நான் விழுறப்போ உங்கப்பா என்ன பண்ணிக்கிட்டிருந்தாரு?" (திரும்ப வாயிலிருந்து தண்ணீரை துப்பி விட்டு.. ) "போட்டோ எடுத்துக்கிட்டிருந்தாருங்க.." என்று மாட்டி விட்டேன்.
//

அப்பாடா....நீங்க போன வேலை முடிஞ்சது...:0))))

அது சரி(18185106603874041862) said...

//
நான் பயந்த மாதிரி "இல்ல இல்ல, சாரி.. ஓ.கே. இங்கயே இதுக்கு ஒரு ஃபுல்ஸ்டாப்" அப்டின்னேன்
//

அங்க ஃபுல்ஸ்டாப்புன்னு சொல்லிட்டு இங்க நான் ஸ்டாப்பா ஆக்கிட்டீங்களே :)))

ம்ம்ம்ம்..கவுண்டமணியா இருந்தா பத்தவச்சிட்டியே பரட்டைன்னு சொல்லிருப்பார்!

கலகலப்ரியா said...

//அது சரி said...

அப்பாடா....நீங்க போன வேலை முடிஞ்சது...:0))))//

அந்த திருப்திதான் நேக்கும்...!! ஹிஹிஹி...!

கலகலப்ரியா said...

//அது சரி said...

அங்க ஃபுல்ஸ்டாப்புன்னு சொல்லிட்டு இங்க நான் ஸ்டாப்பா ஆக்கிட்டீங்களே :)))

ம்ம்ம்ம்..கவுண்டமணியா இருந்தா பத்தவச்சிட்டியே பரட்டைன்னு சொல்லிருப்பார்!//

இப்டி சொல்லிக்கிட்டே... பத்த வச்சிட்டு போறீங்களே பரட்ட...

அது சரி(18185106603874041862) said...

//
கலகலப்ரியா said...
//அது சரி said...

அங்க ஃபுல்ஸ்டாப்புன்னு சொல்லிட்டு இங்க நான் ஸ்டாப்பா ஆக்கிட்டீங்களே :)))

ம்ம்ம்ம்..கவுண்டமணியா இருந்தா பத்தவச்சிட்டியே பரட்டைன்னு சொல்லிருப்பார்!//

இப்டி சொல்லிக்கிட்டே... பத்த வச்சிட்டு போறீங்களே பரட்ட...

September 13, 2009 2:38 PM
//

உங்களுக்கும் தெரிஞ்சி போச்சா...முடி வெட்ட நேரம் கிடைக்கலை...அடுத்த வாரம் வெட்டிடறேன்...:0)))

ப்ரியமுடன் வசந்த் said...

ஆத்தா படிச்சு வயிறு வலிக்க சிரிச்சதுதான் மிச்சம்

கலக்கல்...

கலகலப்ரியா said...

//அது சரி said...

இப்டி சொல்லிக்கிட்டே... பத்த வச்சிட்டு போறீங்களே பரட்ட...

உங்களுக்கும் தெரிஞ்சி போச்சா...முடி வெட்ட நேரம் கிடைக்கலை...அடுத்த வாரம் வெட்டிடறேன்...:0)))//

ஆத்தீ... நான் இல்ல... வெட்டிடுறேன்னு இப்டி "மொட்டையா" சொன்னா எப்டி...

கலகலப்ரியா said...

//பிரியமுடன்...வசந்த் said...

ஆத்தா படிச்சு வயிறு வலிக்க சிரிச்சதுதான் மிச்சம்

கலக்கல்...//

ஹிஹி... நன்றி..

ஈ ரா said...

செம காமெடி.....

நல்ல வேளை அம்மணி கடல் தண்ணிய குடிக்கல....

கலகலப்ரியா said...

//ஈ ரா said...

செம காமெடி.....

நல்ல வேளை அம்மணி கடல் தண்ணிய குடிக்கல....//

நான் குடிக்க விடலைன்னு சொல்லுங்க.. ஹிஹி..

மணிப்பக்கம் said...

Ha ha ha .....!

- Too much comedy priya .....

(pona piravila kaipulla-ya poranthu iruppeengalo....? )

Indrilirunthu Priya-kku,
------- "Kai ponnu" --------
endra pattathai pathivulagam sarbil alikkiren!

கலகலப்ரியா said...

நன்றிங்க... போன பிறவி என்னங்க.. இந்த பிறவில கூட எல்லாரும் கைப்புள்ளையாதான் பொறக்கறாங்க..!

கை பொண்ணா... ஆஹா.. வேணாம் சாமி... அர்த்தமே மாறிடும்.. உங்க பட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியாமைக்கு வருந்துகிறேன்..