header photo

Tuesday, October 13, 2009

தமிழே.. அமுதே.. என் உறவே..

தமிழன்னையை நெஞ்சில் வைத்துப் போற்றும் தமிழுறவுகளுக்கு இது சமர்ப்பணம்..


பத்துப் பரப்பு..
பாக்கு நீரிணையில்..
சேறுகளிடையே..
சுற்றிச் சுற்றி..
பட்டும் படாமலும்..
படர்ந்து கொண்டிருந்த..
தொப்புள்க்கொடி..
என் கண்களுக்குப்..
புலப்படவே இல்லை..
புத்த தேசத்துப்..
பெருமகனார் பேருதவி..
நீரிணை தாண்டி..
சமுத்திரம் தாண்டி..
கண்டம் கடந்தோம்..
சலிக்காது சளைக்காது..
தொடர்ந்தே வந்த..
என் தொப்புள்க்கொடி..
நீந்தி நீண்டு..
நீரிலிருந்து தலையை நீட்டி..
வாசுகிப் பாம்பையே விஞ்சி..
விசாலமாய் நின்று..
வெறித்திருந்த விழிகளில்..
வியப்பை விதைத்தது..

பாலும் வேண்டாம்..
கடலும் வேண்டாம்..
மலையும் வேண்டாம்..
மத்தும் வேண்டாம்..
தேவரும் வேண்டாம்..
அசுரரும் வேண்டாம்..
பாம்பும் வேண்டாம்..
நஞ்சும் வேண்டாம்..
என் பாட்டனும்..
முப்பாட்டனும்..
முன்பே கடைந்து வைத்த..
அமுதம் என் தமிழ்..
சேர்ந்து சுவைத்திட..
தமிழே.. என்..
தமிழுறவே போதும்..!

பெருமையுடன்
ப்ரியா..

___/\___

72 ஊக்கம்::

vasu balaji said...

வேறே எதுவும் சொல்லத் தெரியவில்லையம்மா இந்த நொடியில்.
தலை வணங்கி நன்றி சொல்லுவேன்.

Unknown said...

பார்த்தறியா பாற்கடல் அமுதினும்
பரவசம் தருவது
தமிழன்றி வேறில்லை..

மூழ்கிக் கிடந்தாலும்
மூச்சுத் திணராது
தமிழ்க் கடலின் சீர் போற்றித்
தரும் கவிதை மிக நன்று.

தமிழ் அமுதன் said...

///என்..
தமிழுறவே போதும்..!///

நன்றி...!

நர்சிம் said...

நல்லா எழுதி இருக்கீங்க..

நிறைய எழுதுங்கள்.

பின்னோக்கி said...

//புத்த தேசத்துப்..
பெருமகனார் பேருதவி.

அருமை

ப்ரியமுடன் வசந்த் said...

ள்கக்துத்ழ்வா

ன்ழமித தலால்மிலநயசு

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...

வேறே எதுவும் சொல்லத் தெரியவில்லையம்மா இந்த நொடியில்.
தலை வணங்கி நன்றி சொல்லுவேன்.//

உங்களையும் வணங்கி நன்றிங்க.. !

கலகலப்ரியா said...

//rajesh said...

பார்த்தறியா பாற்கடல் அமுதினும்
பரவசம் தருவது
தமிழன்றி வேறில்லை..

மூழ்கிக் கிடந்தாலும்
மூச்சுத் திணராது
தமிழ்க் கடலின் சீர் போற்றித்
தரும் கவிதை மிக நன்று.//

அட அட.. அருமை ராஜேஷ்.. ரொம்ப நன்றி..

கலகலப்ரியா said...

//ஜீவன் said...

///என்..
தமிழுறவே போதும்..!///

நன்றி...!//

வாங்க ஜீவன்.. நன்றி உங்களுக்கும்..!

கலகலப்ரியா said...

//நர்சிம் said...

நல்லா எழுதி இருக்கீங்க..

நிறைய எழுதுங்கள்.//

நன்றி நர்சிம்..

கலகலப்ரியா said...

// பின்னோக்கி said...

//புத்த தேசத்துப்..
பெருமகனார் பேருதவி.

அருமை//

நன்றி பின்னோக்கி..

கலகலப்ரியா said...

// கலகலப்ரியா said...

//பிரியமுடன்...வசந்த் said...

ள்கக்துத்ழ்வா

ன்ழமித தலால்மிலநயசு//

அரேபிய மொழியில் தமிழ் எழுத ட்ரை பண்ணுறா போல.. அதுக்கு பக்கம் மாத்தினா மட்டும் போதுமா என்ன.. ! இடமிருந்து வலம் படிச்சா... "காழ் என்று கத்தாத யக்கா"ன்னு வாய்க்குள்ள வெத்தில பாக்கு மென்னுக்கிட்டு சொல்ற மாதிரி இருக்கு..

தென்னவன். said...

/*
முன்பே கடைந்து வைத்த..
அமுதம் என் தமிழ்..
*/

அனுபவித்து படிக்கக் கூடிய
அருமையான வரிகள் சகோதரி.

நன்றி.
தென்னவன் ராமலிங்கம்.

ப்ரியமுடன் வசந்த் said...

//"காழ் என்று கத்தாத யக்கா"ன்னு வாய்க்குள்ள வெத்தில பாக்கு மென்னுக்கிட்டு சொல்ற மாதிரி இருக்கு..//

வெற்றிலை பாக்கு போடுற வயசு எனக்கில்லக்கா பாலா நைனாக்குத்தான் அந்த வயசாயிப்போச்சு...என்ன நைனா முழிச்சுருக்கியா? தூங்கினுருக்கியா?

கலகலப்ரியா said...

//தென்னவன். said...

/*
முன்பே கடைந்து வைத்த..
அமுதம் என் தமிழ்..
*/

அனுபவித்து படிக்கக் கூடிய
அருமையான வரிகள் சகோதரி.

நன்றி.
தென்னவன் ராமலிங்கம்.//

நன்றி தென்னவன்..

கலகலப்ரியா said...

//பிரியமுடன்...வசந்த் said...

//"காழ் என்று கத்தாத யக்கா"ன்னு வாய்க்குள்ள வெத்தில பாக்கு மென்னுக்கிட்டு சொல்ற மாதிரி இருக்கு..//

வெற்றிலை பாக்கு போடுற வயசு எனக்கில்லக்கா பாலா நைனாக்குத்தான் அந்த வயசாயிப்போச்சு...என்ன நைனா முழிச்சுருக்கியா? தூங்கினுருக்கியா?//

ஏன் நோக்கு பல்லெல்லாம் கொட்டிடிச்சோ...? வயசாயிப் போய்த்தான் வெத்தில போடணுமோ..! வானம்பாடித் தம்பிய நைனான்னு சொல்ற உரிமை எனக்கு மட்டும்தான் உண்டு..! அவங்க இடுகைல போயி கூப்ட்டு பாரு.. எட்டிப் பார்த்தாலும் பார்ப்பாய்ங்க..

இராகவன் நைஜிரியா said...

// அமுதம் என் தமிழ்..
சேர்ந்து சுவைத்திட..
தமிழே.. என்..
தமிழுறவே போதும்..! //

அருமை. பிரமாதம். சூப்பர். எப்படிச் சொன்னாலும் திருப்தி வரவில்லீங்க. அவ்வளவு அற்புதமாக இருக்குங்க.

ஆ.ஞானசேகரன் said...

ஆகா.... மிக அழகு ப்ரியா, புகைப்படம் அதைவிட கவிப்பாடுகின்றதே

ஹேமா said...

ப்ரியா,கடைசி இரண்டு பந்தியும் உங்கள் தமிழின் பற்றையும் பக்தியையும் சொல்லித் தலை வணங்க வைக்கிறது.கவிதையோடு அதன் படங்களும் பதிந்த விதமும் தமிழை இன்னும் செதுக்கி அழகாக்கிறது.தமிழின் தாயே நன்றி.

அது சரி(18185106603874041862) said...

கவிதை நல்லாருக்கு ப்ரியா....

(ஆனால் கருத்து என்று வரும்போது எனக்கு சில மாறுபாடுகள் உண்டு....)

ஈ ரா said...

அருமை ப்ரியா...

உங்களைப் போன்ற ஒரு சிலர் மட்டுமே உள்ளன்புடன் குரல் கொடுக்கிறீர்கள்..

அனால் எதையும் சாதிக்க முடிந்தவர் கூட நம்மைப் போலவே எதுகை மோனையை மட்டுமே நம்பி இருப்பதால் மொழியினால் தேவைக்கு உதவ முடியுமா என்று தெரியவில்லை..

ஜால வித்தைக்காரர்களின் மொழி
ஜலத்தைத் தாண்டியதும்
ஜனனம் மறக்கிறது...

எனது சில வரிகளை சமர்ப்பிக்கிறேன்... படித்தீர்களா என்று தெரியவில்லை

"பாவிகளா -
ஆதிமனிதனைப் போல்
அர்த்தமில்லா ஊளையோடே
இருந்து இருக்கலாம்!

பாழாய்ப்போன மொழியை நம்பாத
ஊமை சகோதரர்களே
உண்மையிலேயே உங்களைப்
பார்த்துப் பொறாமைப் படுகிறோம்!"

http://padikkathavan.blogspot.com/2009/06/blog-post_3621.html

ஈ ரா said...

// பட்டும் படாமலும்..
படர்ந்து கொண்டிருந்த..
தொப்புள்க்கொடி..
என் கண்களுக்குப்..
புலப்படவே இல்லை..
புத்த தேசத்துப்..
பெருமகனார் பேருதவி..

என் பாட்டனும்..
முப்பாட்டனும்..
முன்பே கடைந்து வைத்த..
அமுதம் என் தமிழ்..
சேர்ந்து சுவைத்திட..
தமிழே.. என்..
தமிழுறவே போதும்..!///

ரசிக்க வைக்கிறது உங்கள் எழுத்தும் எண்ணமும்....

பிரபாகர் said...

ப்ரியா,

படித்தவுடம் என் கலகல காணாமற் போய்விட்டது....

மனம் கனக்கும் வரிகள்....

பிரபாகர்.

அன்புடன் நான் said...

என் பாட்டனும்..
முப்பாட்டனும்..
முன்பே கடைந்து வைத்த..
அமுதம் என் தமிழ்..
சேர்ந்து சுவைத்திட..
தமிழே.. என்..
தமிழுறவே போதும்..!//


ஆமாம் ,
அதுவே போதும். க‌விதை ந‌ல்லா இருக்கு.

சூர்யா ௧ண்ணன் said...

அற்புதமாக இருக்குங்க..,

அன்பேசிவம் said...

அருமை கலகலப்ரியா, நல்லா எழுதியிருக்கீங்க, வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள். :-)

கலகலப்ரியா said...

இராகவன் நைஜிரியா said...

// அமுதம் என் தமிழ்..
சேர்ந்து சுவைத்திட..
தமிழே.. என்..
தமிழுறவே போதும்..! //

அருமை. பிரமாதம். சூப்பர். எப்படிச் சொன்னாலும் திருப்தி வரவில்லீங்க. அவ்வளவு அற்புதமாக இருக்குங்க.//

ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றிங்க..

கலகலப்ரியா said...

//ஆ.ஞானசேகரன் said...

ஆகா.... மிக அழகு ப்ரியா, புகைப்படம் அதைவிட கவிப்பாடுகின்றதே//

ரொம்ப நன்றி ஞானசேகரன்..

கலகலப்ரியா said...

//ஹேமா said...

ப்ரியா,கடைசி இரண்டு பந்தியும் உங்கள் தமிழின் பற்றையும் பக்தியையும் சொல்லித் தலை வணங்க வைக்கிறது.கவிதையோடு அதன் படங்களும் பதிந்த விதமும் தமிழை இன்னும் செதுக்கி அழகாக்கிறது.தமிழின் தாயே நன்றி.//

நன்றி ஹேமா..

கலகலப்ரியா said...

//அது சரி said...

கவிதை நல்லாருக்கு ப்ரியா....

(ஆனால் கருத்து என்று வரும்போது எனக்கு சில மாறுபாடுகள் உண்டு....)//

நன்றி அது சரி..! கருத்து மாறுபாடுகளா? ரொம்ப ஆரோக்யமான விஷயமாச்சே.. அத அடைப்புக்குறிக்குள்ள போட்டு.. ஒண்ணுமே சொல்லாம போன எப்டி.. சும்மா சொல்லுங்க.. :)

கலகலப்ரியா said...

// ஈ ரா said...

அருமை ப்ரியா...//

நன்றி ஈ.ரா..

//அனால் எதையும் சாதிக்க முடிந்தவர் கூட நம்மைப் போலவே எதுகை மோனையை மட்டுமே நம்பி//

விடுங்க.. தமிழ் அவங்கள எல்லாம் நம்பி இல்லையே.. மேலும் எனக்கு அரசியல் தெரியாதே.. =))

//
எனது சில வரிகளை சமர்ப்பிக்கிறேன்... படித்தீர்களா என்று தெரியவில்லை //

லிஸ்ட்ல சேர்க்க மறந்துட்டேன்... அதுதான் தவற விட்டுட்டேன்.. இனி தவறாது..

அனல் வரிகள்..

கலகலப்ரியா said...

//பிரபாகர் said...

ப்ரியா,

படித்தவுடம் என் கலகல காணாமற் போய்விட்டது....

மனம் கனக்கும் வரிகள்....

பிரபாகர்.//

நன்றி பிரபாகர்.. :)

கலகலப்ரியா said...

//சி. கருணாகரசு said...

என் பாட்டனும்..
முப்பாட்டனும்..
முன்பே கடைந்து வைத்த..
அமுதம் என் தமிழ்..
சேர்ந்து சுவைத்திட..
தமிழே.. என்..
தமிழுறவே போதும்..!//


ஆமாம் ,
அதுவே போதும். க‌விதை ந‌ல்லா இருக்கு.//

நன்றி கருணாகரசு..

கலகலப்ரியா said...

//சூர்யா ௧ண்ணன் said...

அற்புதமாக இருக்குங்க..,//

நன்றி சூர்யா...

கலகலப்ரியா said...

//முரளிகுமார் பத்மநாபன் said...

அருமை கலகலப்ரியா, நல்லா எழுதியிருக்கீங்க, வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள். :-)//

நன்றி முரளி.. :)

☀நான் ஆதவன்☀ said...

கவிதைக்கு நன்றி :)

R.Gopi said...

OFF TOPIC

என் வலைப்பக்கம் வருகை தந்து "தீபாவளி பரிசு" பெற்றுக்கொண்டமைக்கு மனமார்ந்த நன்றி..

//தமிழே.. அமுதே.. என் உறவே.. //

தலைப்பே ஒரு கவிதையாய் இருக்கிறதே...

//என் தொப்புள்க்கொடி..
நீந்தி நீண்டு..
நீரிலிருந்து தலையை நீட்டி..
வாசுகிப் பாம்பையே விஞ்சி..
விசாலமாய் நின்று..
வெறித்திருந்த விழிகளில்..

வியப்பை விதைத்தது..//

ப‌லே... உங்கள் த‌மிழின் ஆளுமையை என்ன‌வென்று சொல்வ‌து... ஒரே வார்த்தையில் தமிழில் சொன்னால் "பிர‌மாத‌ம்", அதுவே ஆங்கில‌த்தில் "WOW".

//என் பாட்டனும்..
முப்பாட்டனும்..
முன்பே கடைந்து வைத்த..
அமுதம் என் தமிழ்..
சேர்ந்து சுவைத்திட..
தமிழே.. என்..
தமிழுறவே போதும்..!//

ஆஹா... என் த‌மிழை வாழ‌ வைக்க‌ இதை விட‌ சிற‌ப்பான‌ வேண்டுத‌லும் உண்டோ...

வாழ்த்துக்க‌ள் ல‌க‌ல‌க‌.... என்ன‌வோ கொஞ்ச‌ நாளா, ப‌திவுக‌ளின் திசையே மாறிப்போயிட்டு இருக்கு... ம்ம்ம்... ந‌ல்ல‌ மாற்ற‌ம் தான்... ஏதாவ‌து விசேஷ‌ம்னா முன்னாடியே சொல்லிடுங்கோ..

பித்தனின் வாக்கு said...

நல்லா இருக்குங்க. நான் வசனத்துல ஹிரே. கவிதையில ஜிரேங்க. அதுனால கருத்து சொல்லமுடியாவிட்டாலும் நல்லா இருக்குனு சொல்லத் தோனுது. அம்புட்டுதாங்க.

க.பாலாசி said...
This comment has been removed by the author.
க.பாலாசி said...

//அமுதம் என் தமிழ்..
சேர்ந்து சுவைத்திட..
தமிழே.. என்..
தமிழுறவே போதும்..!//

தமிழுணர்ச்சி மேம்படுத்தும உங்களின் கவிதை நன்று....

ஈரோடு கதிர் said...

//தமிழுறவே போதும்..!//

நன்றி தமிழச்சி

சத்ரியன் said...

அமுதம் என் தமிழ்..
சேர்ந்து சுவைத்திட..
தமிழே.. என்..
தமிழுறவே போதும்..!

"தமிழ்ப்ரியா",

இந்நான்கு வரிகள் அடிக்கறும்பு.

ஆனாலும்,

"சேர்ந்து சுவைத்திட..
என்..
தமிழுறவே போதும்..!"

என்பதே இன்னும் சிறப்பாய் இருந்திருக்கும்.

துபாய் ராஜா said...

படித்ததும் கண்கள் கலங்கிவிட்டன.

உறவுகள் காக்கப்படவேண்டும்...
உணர்வுகள் மீட்கப்படவேண்டும்..

தாய்த்தமிழும்,
தன்மானத்தமிழர்களும்
இனமானம் காக்க
இப்போதாவது
எழுந்திடவேண்டும்...

புதிய சரித்திரம்
எழுதிட வேண்டும்....

துபாய் ராஜா said...

//என் பாட்டனும்..
முப்பாட்டனும்..
முன்பே கடைந்து வைத்த..
அமுதம் என் தமிழ்..
சேர்ந்து சுவைத்திட..
தமிழே.. என்..
தமிழுறவே போதும்..!//

உங்கள் தமிழ் உணர்வுக்கு
தலை வணங்குகிறேன் பிரியா...

Unknown said...

பற்றுக் கவிதை...
பற்றட்ற தமிழன்......
பற்றி எரியும் சொந்தம்....

கலகலப்ரியா said...

//☀நான் ஆதவன்☀ said...

கவிதைக்கு நன்றி :)//

நன்றி ஆதவன்..

கலகலப்ரியா said...

//R.Gopi said...//

ரொம்ப ரொம்ப நன்றி கோபி.. (விசேஷம் எல்லாம் எதுவுமே இல்லைங்க..)

கலகலப்ரியா said...

//பித்தனின் வாக்கு said...

நல்லா இருக்குங்க. நான் வசனத்துல ஹிரே. கவிதையில ஜிரேங்க. அதுனால கருத்து சொல்லமுடியாவிட்டாலும் நல்லா இருக்குனு சொல்லத் தோனுது. அம்புட்டுதாங்க.//

தோணினத சொல்லலாம்ல.. =)).. நன்றிங்கோ..

கலகலப்ரியா said...

//க.பாலாஜி said...

//அமுதம் என் தமிழ்..
சேர்ந்து சுவைத்திட..
தமிழே.. என்..
தமிழுறவே போதும்..!//

தமிழுணர்ச்சி மேம்படுத்தும உங்களின் கவிதை நன்று....//

நன்றிங்க பாலாஜி..

கலகலப்ரியா said...

//கதிர் - ஈரோடு said...

//தமிழுறவே போதும்..!//

நன்றி தமிழச்சி//

நன்றிங்கோ..!

கலகலப்ரியா said...

//சத்ரியன் said...

அமுதம் என் தமிழ்..
சேர்ந்து சுவைத்திட..
தமிழே.. என்..
தமிழுறவே போதும்..!

"தமிழ்ப்ரியா",

இந்நான்கு வரிகள் அடிக்கறும்பு.

ஆனாலும்,

"சேர்ந்து சுவைத்திட..
என்..
தமிழுறவே போதும்..!"

என்பதே இன்னும் சிறப்பாய் இருந்திருக்கும்.//

நன்றிங்கண்ணே..! நீங்க சொல்றதும் நல்லாதானுங்கண்ணே இருக்கு..!

நான் தமிழே என்று போட்டதும் தமிழ் உள்ளங்களைத்தான்..! இது பொருள் பின்வரு நிலையணி.. வகையைச் சார்ந்தது..!

ஆடிக்கு ஒரு வாட்டி அம்மாவாசைக்கு ஒரு வாட்டி நம்ம வீட்டுக்கு வந்துட்டு போறதுக்கு நன்றிங்கண்ணே...! (இது வஞ்சப் புகழ்ச்சி அணிங்கண்ணே)

கலகலப்ரியா said...

//துபாய் ராஜா said...

படித்ததும் கண்கள் கலங்கிவிட்டன.

உறவுகள் காக்கப்படவேண்டும்...
உணர்வுகள் மீட்கப்படவேண்டும்..

தாய்த்தமிழும்,
தன்மானத்தமிழர்களும்
இனமானம் காக்க
இப்போதாவது
எழுந்திடவேண்டும்...

புதிய சரித்திரம்
எழுதிட வேண்டும்....//

ஆஹா.. எழுச்சிக் கவிதை.. அருமை..! ரொம்ப நன்றி ராஜா..

கலகலப்ரியா said...

// லவ்டேல் மேடி said...

பற்றுக் கவிதை...
பற்றட்ற தமிழன்......
பற்றி எரியும் சொந்தம்....//

அழகான ஹைக்கூவில் அத்தனையும் அடக்கிட்டீங்க மேடி..! பிரம்மாதம்..!

அது சரி(18185106603874041862) said...

//
கலகலப்ரியா said...
//அது சரி said...

கவிதை நல்லாருக்கு ப்ரியா....

(ஆனால் கருத்து என்று வரும்போது எனக்கு சில மாறுபாடுகள் உண்டு....)//

நன்றி அது சரி..! கருத்து மாறுபாடுகளா? ரொம்ப ஆரோக்யமான விஷயமாச்சே.. அத அடைப்புக்குறிக்குள்ள போட்டு.. ஒண்ணுமே சொல்லாம போன எப்டி.. சும்மா சொல்லுங்க.. :)
//

ம்ம்ம்...தனிப்பட்ட முறையில் எனக்கு மொழி மட்டும் போதாது....உடுக்கை இழந்த நேரத்தில் உதவிக்கு வராத கைகள் இருந்தென்ன போயென்ன....துணைக்கு வராத தொப்புள் கொடி உறவுகள் அறுத்தெறிய பட வேண்டும்...இது மெட்டீரியலிஸ்டிக் வ்யூ...உதவாதவை உன் கரங்களாக இருந்தாலும் உதறித் தள்ளு என்பது என் கட்சி...அவ்வளவு தான்...

(Sorry, this is purely my opinion, doesn't need to be a right one)

கலகலப்ரியா said...

// அது சரி said...

//
கலகலப்ரியா said...
//அது சரி said...

கவிதை நல்லாருக்கு ப்ரியா....

(ஆனால் கருத்து என்று வரும்போது எனக்கு சில மாறுபாடுகள் உண்டு....)//

நன்றி அது சரி..! கருத்து மாறுபாடுகளா? ரொம்ப ஆரோக்யமான விஷயமாச்சே.. அத அடைப்புக்குறிக்குள்ள போட்டு.. ஒண்ணுமே சொல்லாம போன எப்டி.. சும்மா சொல்லுங்க.. :)
//

ம்ம்ம்...தனிப்பட்ட முறையில் எனக்கு மொழி மட்டும் போதாது....உடுக்கை இழந்த நேரத்தில் உதவிக்கு வராத கைகள் இருந்தென்ன போயென்ன....துணைக்கு வராத தொப்புள் கொடி உறவுகள் அறுத்தெறிய பட வேண்டும்...இது மெட்டீரியலிஸ்டிக் வ்யூ...உதவாதவை உன் கரங்களாக இருந்தாலும் உதறித் தள்ளு என்பது என் கட்சி...அவ்வளவு தான்...

(Sorry, this is purely my opinion, doesn't need to be a right one)//

தமிழே தாகம், தமிழே சுவாசம் போன்ற தவளைக் கத்தல்கள்.. ஆங்கிலம் மற்றும் வடமொழி கலக்காத தமிழ்ப் பற்றாளர்கள்.. தமிழகராதியை பிரதி எடுத்து தமிழன்பினை வெளிப்படுத்தும் தமிழன்பர்கள்.. இவர்களை எல்லாம் நான் இங்கு குறிப்பிடவில்லை.. எந்த வித எதிர்பார்ப்புமில்லாது.. ஒன்றும் பண்ண முடியவில்லையே என்று தமிழுக்காகத் துடிக்கும் ஒவ்வொரு உள்ளத்துக்கும் இது சமர்ப்பணம்..!

கலகலப்ரியா said...

//(Sorry, this is purely my opinion, doesn't need to be a right one)//

no need to be sry.. i dun expect you to steal other ppl's opinion..:p.. & as da saying goes.. "nothing can be wrong..".. =)

ty..

சிங்கக்குட்டி said...

வாவ்...அருமையான வார்த்தைகளுடன் மிக பொருத்தமான படங்கள். சூப்பர்.

கலகலப்ரியா said...

//சிங்கக்குட்டி said...

வாவ்...அருமையான வார்த்தைகளுடன் மிக பொருத்தமான படங்கள். சூப்பர்.//

ரொம்ப நன்றி சிங்கக்குட்டி..

Radhakrishnan said...

தமிழ் உறவு வேண்டுமெனச் சொல்லு சோகங்கள் மறைக்கும் விதம் நன்றாக இருக்கிறது.

கலகலப்ரியா said...

//Rads said...

தமிழ் உறவு வேண்டுமெனச் சொல்லு சோகங்கள் மறைக்கும் விதம் நன்றாக இருக்கிறது.//

நன்றிங்க..

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

இந்த கவிதைக்கு அர்த்தம் கேட்க மாட்டேன்.. புரிந்தது.. நன்றாக இருந்தது.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

இந்த கவிதைக்கு அர்த்தம் கேட்க மாட்டேன்.. புரிந்தது.. நன்றாக இருந்தது.

Mark K Maity said...

அருமைாயான கவிதை. எப்படி உங்களால் மட்டும் இப்படி முடிகிறது?
பிரியா என்று எழுதுங்களேன். தமிழ் இலக்கணப்படி ப்ரியா பிழை.

கலகலப்ரியா said...

//Chandhana said...

இந்த கவிதைக்கு அர்த்தம் கேட்க மாட்டேன்.. புரிந்தது.. நன்றாக இருந்தது.//

நல்ல முன்னேற்றம்.. ஹிஹி.. ரொம்ப நன்றி சந்தனா..

கலகலப்ரியா said...

//Mark K Maity said...

அருமைாயான கவிதை. எப்படி உங்களால் மட்டும் இப்படி முடிகிறது?
பிரியா என்று எழுதுங்களேன். தமிழ் இலக்கணப்படி ப்ரியா பிழை.//

இதுக்கு அப்பவே பதில் எழுதினேன்.. படிக்கல போல..! ஒத்துக்கிறேன்.. தமிழ் இலக்கணப்படி தப்புன்னு..! அவ்வ்வ்வ்வ்வ்வ்...

சூர்யா ௧ண்ணன் said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

சூர்யா ௧ண்ணன் said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

கலகலப்ரியா said...

நன்றி சூர்யா.. உங்களுக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்.. !

Prathap Kumar S. said...

யக்கா தூள்...

கலகலப்ரியா said...

//நாஞ்சில் பிரதாப் said...

யக்கா தூள்...//

நன்றி..

vasu balaji said...

யூத்ஃபுல் விகடன் படைப்பு பகுதியில்,முகப்பில் மற்றும் விகடன் தலைவாசலில். பாராட்டுகள் ப்ரியா

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...

யூத்ஃபுல் விகடன் படைப்பு பகுதியில்,முகப்பில் மற்றும் விகடன் தலைவாசலில். பாராட்டுகள் ப்ரியா//

நன்றி நன்றி... :)