header photo

Saturday, October 17, 2009

தீபவழி..

இந்து மா சமுத்திர குமாரி..
அக்கினி தேவனின்..
கோபக் குழம்புகளால்..
அதிர்ந்த போது..
ஆழிப் பேரலை..
சுனாமி என்ற..
பெயர் தாங்கி..
பூமித் தாயின்..
புத்திரங்களை..
இலட்சங்களில்..
இரை கொண்டது..

தை பிறந்தால்..
வழி பிறக்குமென..
மார்கழியை..
விரட்டுவதில்..
முனைந்திருந்த..
மாந்தர்கள்..
மலைத்திருந்தது..
அரைத் திங்களுமல்ல..

ஆங்கில நாள் காட்டியில்..
வருடம் புதிதாய்ப் பிறந்ததும்..
நம்மவர்க்கு..
வழியும் பிறந்தது..
விதி வலியதென்று..
விரக்தியை விரட்டி..
வெங்காய வெடி வாங்கி..
வெடித்து அழுது மகிழ்ந்து..
வேறென்ன செய்ய..?

குரங்குப் பிடியா..
குளிக்காம முழுகாம..
குப்புறக் கிடந்து..
குமுறியழுது..
கண்ட பயனென்ன..?

நரக அசுரன்..
சொர்க்கம் சென்றதோ..
தேவர் மகன்..
அவதரித்ததோ..
இருளைத் தள்ளி..
ஒளியை ஏற்றி..
உள்ளும் புறமும்..
அசுத்தம் நீக்கி..
மாசற்ற மணிச்சுடராய்..
சிரித்து மகிழக் காரணம்..
எதுவானால் என்ன..?

சிரிப்பதா என்று..
அடிக்க விழைதல்..
அரக்கத்தனத்தின்..
உச்சமில்லையா..?

தமிழ் அழுவதை..
வேடிக்கை பார்க்கும்..
வதை குலத்தை..
வாட வைத்து...
வலியதோர்..
விதி செய்வோம்..

இன்றைக்கு...
ஒரு நாளேனும்..
இருளகற்றி..
ஒளியேற்றி..
இன்னல் களைந்து..
இன்பமாய் வாழ..

என்..
இனிய..
தீபாவளி நல் வாழ்த்துகள்..!



___/\___


36 ஊக்கம்::

vasu balaji said...

/குரங்குப் பிடியா..
குளிக்காம முழுகாம..
குப்புறக் கிடந்து..
குமுறியழுது..
கண்ட பயனென்ன..?/

இப்படிச் சொல்லி தேத்திகிட்டுதானே எல்லா வலியும் தாங்குறோம் யுக யுகமாக.

vasu balaji said...

/சிரிப்பதா என்று..
அடிக்க விழைதல்..
அரக்கத்தனத்தின்..
உச்சமில்லையா..?/

ம்ம்.

vasu balaji said...

/தமிழ் அழுவதை..
வேடிக்கை பார்க்கும்..
வதை குலத்தை..
வாட வைத்து...
வலியதோர்..
விதி செய்வோம்../

இது புதிய சிந்தனை!

vasu balaji said...

/இன்றைக்கு...
ஒரு நாளேனும்..
இருளகற்றி..
ஒளியேற்றி..
இன்னல் களைந்து..
இன்பமாய் வாழ..

என்..
இனிய..
தீபாவளி நல் வாழ்த்துகள்..!/

நன்றியம்மா!

Unknown said...

//தமிழ் அழுவதை..
வேடிக்கை பார்க்கும்..
வதை குலத்தை..
வாட வைத்து...//

வாட வைக்கிறதா?..
வடை கூட வைக்க முடியாது..
வடை போச்சேன்னு டி ஆர் இலங்கைல சண்ட போட்டத
பாத்தீங்கல்ல..

மத்தபடி எண்ணங்களை
இறக்கி வைக்கும் எளிய கவிதை.
எனக்கு புரியும் அருமை..

ப்ரியமுடன் வசந்த் said...

போ உங்கூட பேச்சில்ல கா...

எனக்கு புரியலை....

தீபாவளி வாழ்த்துக்கள்...

ஆ.ஞானசேகரன் said...

//இன்றைக்கு...
ஒரு நாளேனும்..
இருளகற்றி..
ஒளியேற்றி..
இன்னல் களைந்து..
இன்பமாய் வாழ..

என்..
இனிய..
தீபாவளி நல் வாழ்த்துகள்..//


ம்ம்ம் வாழ்த்துகள் தோழி

இராகவன் நைஜிரியா said...

இனிய உளம் கனிந்த தீபாவளி வாழ்த்துகள்.

இராகவன் நைஜிரியா said...

// தமிழ் அழுவதை..
வேடிக்கை பார்க்கும்..
வதை குலத்தை..
வாட வைத்து...
வலியதோர்..
விதி செய்வோம்.. //

மிகச் சரியாகச் சொன்னீர்கள். இந்த கவிதையில் எனக்கு மிகப் பிடித்த வரிகள். தன்னம்பிக்கை ஊட்டும் வரிகள்.

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...

இப்படிச் சொல்லி தேத்திகிட்டுதானே எல்லா வலியும் தாங்குறோம் யுக யுகமாக.//

ம்ம்..

//ம்ம்.//

புரியுது சார்..

//இது புதிய சிந்தனை!//

நன்றிங்க..

கலகலப்ரியா said...

// rajesh said...

//தமிழ் அழுவதை..
வேடிக்கை பார்க்கும்..
வதை குலத்தை..
வாட வைத்து...//

வாட வைக்கிறதா?..
வடை கூட வைக்க முடியாது..
வடை போச்சேன்னு டி ஆர் இலங்கைல சண்ட போட்டத
பாத்தீங்கல்ல..//

புரியலீங்க..

//மத்தபடி எண்ணங்களை
இறக்கி வைக்கும் எளிய கவிதை.
எனக்கு புரியும் அருமை..//

நன்றிங்க..

கலகலப்ரியா said...

//பிரியமுடன்...வசந்த் said...

போ உங்கூட பேச்சில்ல கா...

எனக்கு புரியலை....

தீபாவளி வாழ்த்துக்கள்...//

அடடா... நீ நிஜம்மாவே என்னோட தம்பியா இருந்திருந்தா.. குட்டிக் குட்டியே உனக்கு தமிழ் சொல்லிக் கொடுத்திருப்பேன்... தப்பிச்சிட்டா... பொழைச்சிப் போ..

கலகலப்ரியா said...

// ஆ.ஞானசேகரன் said...

//இன்றைக்கு...
ஒரு நாளேனும்..
இருளகற்றி..
ஒளியேற்றி..
இன்னல் களைந்து..
இன்பமாய் வாழ..

என்..
இனிய..
தீபாவளி நல் வாழ்த்துகள்..//


ம்ம்ம் வாழ்த்துகள் தோழி//

நன்றிங்க..

கலகலப்ரியா said...

//இராகவன் நைஜிரியா said...

இனிய உளம் கனிந்த தீபாவளி வாழ்த்துகள்.//

மிகச் சரியாகச் சொன்னீர்கள். இந்த கவிதையில் எனக்கு மிகப் பிடித்த வரிகள். தன்னம்பிக்கை ஊட்டும் வரிகள்.//

ரொம்ப நன்றி ராகவன்..

thiyaa said...

வாழ்த்துகள்.

கலகலப்ரியா said...

//தியாவின் பேனா said...

வாழ்த்துகள்.//

நன்றி தியா..

துபாய் ராஜா said...

ஊரும்,உலகும்
உறவும் நலம்பெற..
தரணியில் தமிழ்இனமும்
வாழ்வில் வளம்பெற...
எனது வாழ்த்துக்களும்....

பிரபாகர் said...

//
தமிழ் அழுவதை..
வேடிக்கை பார்க்கும்..
வதை குலத்தை..
வாட வைத்து...
வலியதோர்..
விதி செய்வோம்..
//

கனவு காண்போம்,
காசா பணமா...

நல்லா இருக்குங்க ப்ரியா...

பிரபாகர்.

ஈ ரா said...

நன்றாக இருக்கிறது தீபாவளி வாழ்த்துக்கள்

கலகலப்ரியா said...

//துபாய் ராஜா said...

ஊரும்,உலகும்
உறவும் நலம்பெற..
தரணியில் தமிழ்இனமும்
வாழ்வில் வளம்பெற...
எனது வாழ்த்துக்களும்....//

நன்றி ராஜா..

கலகலப்ரியா said...

// பிரபாகர் said...

//
தமிழ் அழுவதை..
வேடிக்கை பார்க்கும்..
வதை குலத்தை..
வாட வைத்து...
வலியதோர்..
விதி செய்வோம்..
//

கனவு காண்போம்,
காசா பணமா...

நல்லா இருக்குங்க ப்ரியா...

பிரபாகர்.//

:-) நன்றி பிரபாகர்..

கலகலப்ரியா said...

// ஈ ரா said...

நன்றாக இருக்கிறது தீபாவளி வாழ்த்துக்கள்//

நன்றி ஈ ரா ...

R.Gopi said...

அட... பார்றா...

ல‌க‌ல‌க‌... தீபாவ‌ளி வாழ்த்து கூட‌ வித்தியாச‌மா எழுதி இருக்கீங்க‌...

என் தீபாவ‌ளி ப‌திவு வ‌ன்து ப‌ரிசு பெற்று சென்ற‌மைக்கு ந‌ன்றி...

தீபாவ‌ளி கொண்டாட்ட‌ம் எப்ப‌டி இருந்த‌துன்னு ஒரு ப‌திவு போடுங்க‌ளேன்...

வாழ்த்துக்க‌ள் ப்ரியா....

கலகலப்ரியா said...

// R.Gopi said...

தீபாவ‌ளி கொண்டாட்ட‌ம் எப்ப‌டி இருந்த‌துன்னு ஒரு ப‌திவு போடுங்க‌ளேன்...

வாழ்த்துக்க‌ள் ப்ரியா....//

ரொம்ப நன்றி .. கோபி... கொண்டாட்டம் பத்தியா.. ஹிஹி.. கொஞ்சம் வெயிட்.. இன்னைக்கே போட்டுடுறேன்..

துபாய் ராஜா said...

"வடிவேலு vs. வெடிவாலு.." ஒரு மணி நேரமா ஓப்பன் ஆகலையே.. அதை என்னான்னு பாருங்க...

R.Gopi said...

//துபாய் ராஜா said...
"வடிவேலு vs. வெடிவாலு.." ஒரு மணி நேரமா ஓப்பன் ஆகலையே.. அதை என்னான்னு பாருங்க...//

அதே..அதே...

அட... டைட்டிலே கிச்சு கிச்சுவா இருக்கே... இன்னாதான் கீதுன்னு பாக்க‌லாம்னு வந்தாக்க‌... ஓப்ப‌னிங் லேது...

லைட்டா இன்னா மேட்ட‌ருன்னு பாருங்கோ...

ஈரோடு கதிர் said...

//வலியதோர்..
விதி செய்வோம்..//

நடக்கும்

அது சரி(18185106603874041862) said...

//
குரங்குப் பிடியா..
குளிக்காம முழுகாம..
குப்புறக் கிடந்து..
குமுறியழுது..
கண்ட பயனென்ன..?
//

யோசிக்க வேண்டிய வரிகள்!

அது சரி(18185106603874041862) said...

ஆமா, வடிவேலு வெடிவேலுன்னு ஒரு லின்க் தெரியுது...ஆனா ப்ளாக்ல காணோமே??

வடிவேலு எங்க தீவாளி கொண்டாட மதுரைக்கு போயிட்டாரோ?? :)))

கலகலப்ரியா said...

//துபாய் ராஜா said...

"வடிவேலு vs. வெடிவாலு.." ஒரு மணி நேரமா ஓப்பன் ஆகலையே.. அதை என்னான்னு பாருங்க...//

ஸாரி.. ஸாரி.. இப்போ சரி பண்ணியாச்சு.. :(.. அவ்வ்வ்வ்வ்...

கலகலப்ரியா said...

//R.Gopi said...

//துபாய் ராஜா said...
"வடிவேலு vs. வெடிவாலு.." ஒரு மணி நேரமா ஓப்பன் ஆகலையே.. அதை என்னான்னு பாருங்க...//

அதே..அதே...

அட... டைட்டிலே கிச்சு கிச்சுவா இருக்கே... இன்னாதான் கீதுன்னு பாக்க‌லாம்னு வந்தாக்க‌... ஓப்ப‌னிங் லேது...

லைட்டா இன்னா மேட்ட‌ருன்னு பாருங்கோ...//

ஸாரிலு.. ஸாரிலு... இப்போ சரி ஆயிந்தி..லு..

கலகலப்ரியா said...

// கதிர் - ஈரோடு said...

//வலியதோர்..
விதி செய்வோம்..//

நடக்கும்//

நன்றி கதிர்..

கலகலப்ரியா said...

//அது சரி said...

//
குரங்குப் பிடியா..
குளிக்காம முழுகாம..
குப்புறக் கிடந்து..
குமுறியழுது..
கண்ட பயனென்ன..?
//

யோசிக்க வேண்டிய வரிகள்!//

யோசிங்கோ...

கலகலப்ரியா said...

//அது சரி said...

ஆமா, வடிவேலு வெடிவேலுன்னு ஒரு லின்க் தெரியுது...ஆனா ப்ளாக்ல காணோமே??

வடிவேலு எங்க தீவாளி கொண்டாட மதுரைக்கு போயிட்டாரோ?? :)))//

இல்ல நாந்தேன் மதுரைக்கு போயிட்டேன்.. இப்போ வந்துட்டேன்.. ஹிஹி..

பித்தனின் வாக்கு said...

கலகலப்பிரியாவின் சேகமான கவிதை. இன்று ஒருனாளேனும் என்ற ஆறுதல் வரிகள் அபாரம். நன்றி.

கலகலப்ரியா said...

//பித்தனின் வாக்கு said...

கலகலப்பிரியாவின் சேகமான கவிதை. இன்று ஒருனாளேனும் என்ற ஆறுதல் வரிகள் அபாரம். நன்றி.//

நன்றி பித்தன்..