header photo

Tuesday, November 10, 2009

இருமை யழிந்தபின் எங்கிருப்பாய்.. அற்ப மாயையே...

Part 1
Part 2
Part 3
Part 4

Part 5
Part 6
Part 7

Part 8

பள்ளி விடுமுறையில்.. ஒரு நாள்... மழை விட்டு ஓய்ந்திருக்க... கிடைத்த சிறு வெள்ளத்தில்... காகிதக் கப்பல் விட்டுக் கவுத்துக் கொண்டிருந்தேன்.. கேட் அருகில்... குட்டி போட்ட பூனையாகப் பாட்டி... நொடியில் நெருங்கி... என்ன பாட்டி..? "உஷ் சத்தம் போடாத... அந்த மனுஷன் கண்ணில பட்டுட போறது"... என்ன பாட்டி..?.. "அங்க பாரு".. ஆ... அணில்... இல்லை... அணில் சைஸில் பூனைக் குட்டியேதான்... பாட்டி நிஜமாவே குட்டி போட்டுட்டுதான் சுத்துறாங்களா...?!.. 'எப்படிப் பாட்டி..?!'.. "யாரோ ராவோட ராவா... கொண்டு வந்து விட்டுட்டு போய்ட்டாங்க.." (இப்படிக் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டால் எப்படி இருக்கும் என்று... அவர்களுக்கு இத்தனை நாளில்... பல முறை தெரிந்திருக்கும்... உயிருடன் இருக்கும் பட்சத்தில்..)...

'பாட்டி இத நாம எடுத்துக்கலாமா..?'... "ம்ம்... அந்தப் பக்கம் அந்த மனுஷன் இருக்கார்... இந்தப் பக்கமா... தட்டுமுட்டு சாமான் போட்டு வைக்கிற ரூம்ல கொண்டு போய்டு.. இல்லைனா நாயிங்க கடிச்சுக் குதறிடும்".. 'ஸ்ஸ்ஸ்ஸரி பாட்டி'.. ரகசியமா.. தாத்தா கண்ணில் படாது... பூனைக்குட்டி அங்கு குடியேற்றப்பட்டு... மூன்று வேளை தவறாது பால் ஊற்றப்பட்டு.. கிட்டத் தட்ட... ஐந்து நாட்களுக்கு மேல்... தாத்தாவின் பார்வை படாமல் வளர்க்கப்பட்டது... தெரிய வந்த போது... தாத்தா வாளாவிருந்தது.... ஆச்சரியமாக இருந்தது... (அடுப்பங்கரையில்... எலிப்பொறி வச்சு... பாட்டி உண்ணாவிரதம் இருக்கிறத விட... இவளே பொறி வளர்க்கிறாளே... பேஷ் பேஷ்..என்ற நினைப்போ.. சுப்பு மைன்ட்.. சொல்ல முடியாது..)...

ஆபரேஷன்... லிபரேஷன்... பெயர்வுகள்... வீட்டை விட்டு அசையாத... சுப்பு... லக்ஷ்மி... விட்டு... நன்றியுள்ள நாய்கள் விட்டு... பூனைக்குட்டியும் விட்டு... பூந்தோட்டமும் விட்டு... அம்மா கையில் மூட்டை முடிச்சு... அப்பா கையில் பெட்டி... படுக்கை... ஒன்றா... இரண்டா... எத்தனை மைல்கள்.. நடந்து.. நடந்து... நடந்து.. 'Rabbit proof fence' பார்த்த போது... வலி உணர முடிந்தது... 'அம்மா கால் வலிக்குதும்மா... தூக்குங்க..'... 'அம்மா கைல மூட்ட முடிச்சு... எப்டிம்மா...' .. 'அப்பா தூக்குங்க..'.. 'வாடா...'.. தோள்களில் நானும்... கைகளில்.. பெட்டிகளும்... அப்பாவும்... 'அப்பா பாவம்டா... கொஞ்சம் இறங்கி நடம்மா செல்லம்.. இப்போ வந்துடும்...'... சிணுங்கியபடி... நடந்து... நடந்து... 'எங்கம்மா போறோம்..?.. இன்னும் எவ்ளோ தூரம்..?'..

அடிப்படை வசதிகள் அற்ற... ஆனால்... மிக மிக அழகிய கிராமம்... தாமரைத் தடாகங்கள்... வானுயர்ந்த தென்னந் தோப்புகள்... காடுகள்... தாமரையையும்... குரங்கையும்... நாவல் மரத்தில் பழத்தையும்... நேரில்ப் பார்க்கும் பாக்கியம் பெற்ற நாட்கள்... ஆனால்... அந்த அழகை ரசிக்க முடியாது... தினம் தினம்... நொடிக்கு நொடி... பாட்டி.... தாத்தா... ஜிம்மி... 'டைகர்'..(நாய்க்கு பாட்டி வைத்த பெயர்..).. போலீஸ்...(இதுவும்தான்..).. பூனைக்குட்டி... நினைத்து நினைத்து... அழுது கழிந்த நாட்கள்...

இரு வாரத்தில்... மீண்டும் எச்சரிக்கை... ஒல்லிக் குச்சி அம்மா... எப்படிச் சாதித்தார்கள்... எப்படிப் போனார்கள்... எப்படி வந்தார்கள்... தெரியாது...! திரும்பி வரும்போது... பாட்டியும்... தாத்தாவும்... டைகரும்... சேர்ந்து... "பாட்டி.... தாத்தா..!".. "கடவுளே.. ஜிம்மி பாதி தூரம் வரைக்கும் ஓடி வந்திச்சுடா... டிராக்டர்ல வந்தோம்... முடியாம திரும்பிடுத்து... போலீஸுக்கு வயசாச்சில்ல... அதால முடியல.." ... "பாட்டி... பூனைக்குட்டி..?!"... "அது வீட்டுக்குள்ளதாண்டா..."... கண்களை முந்தானையில் துடைத்துக் கொண்டார்கள்...

இரு மாதங்களோ... அதற்கு மேலோ... ஆச்சு... போகலாம் என்று செய்தி வந்து... கிளம்பி வந்த போது... கறைகள்.. ஊரெல்லாம் கறைகள்... இரத்தக் கறைகள்...

வீட்டுத் தண்ணீர்த் தொட்டியில்... தொட்டி விளிம்பில்... பாட்டி ஆசை ஆசையா தேங்காய்த் துருவலும்... சோறும் கலந்து... அணிலுக்கும்.. காக்கா குருவிகளுக்கும் போடும்... மாமரத்தின் கீழிருக்கும்.. மேடையில்... இரத்தக் கறைகள்... கோழியோ... ஆடோ... மாடோ... எதையோ.. .இங்கே வைத்து வெட்டி இருக்கிறார்கள் என்று சொன்னார்கள்... அவற்றை மட்டுமா...?..

தாத்தா பாட்டி போல்... வீட்டிலிருந்த... எல்லாப் பாட்டிகளும்... அனைத்துத் தாத்தாக்களும்.. ஆர்மி வந்தால்... வீட்டுக்குள் ஒளிந்து கொள்ளல் ஆகாதென்று... வாசலில் உட்கார்ந்திருந்து... போதை மருந்தின் உச்சவெறியில் உலவிய... ஆர்மியின்... துப்பாக்கி வேட்டுக்களுக்குப் பலியாகி... சொந்த வீட்டு வாசலில்... அநாதைப் பிணங்களாக... கொள்ளி வைக்க ஆள் அற்று... துர்நாற்றம் தாங்காது... எங்கயோ கோயில் கும்பிட்டுக் கொண்டிருந்த... ஒரு தமிழனைப் பிடித்து... அவரவர் வீட்டின்... கொல்லைப் புறங்களை... அவரவர் வீட்டின் தோட்டங்களை... இடுகாடாக்கி... குப்பைகள் போல்... குவித்து... கொள்ளி வைக்கப்பட்டனர்...

மாதக் கணக்கில்... வருடக் கணக்கில்... டேய்... அங்கதான் எங்க அப்பாச்சி... அப்பப்பா... எல்லாரையும் எரிச்சாங்க... ஜாக்கிரதை என்று... பாட்டிகளையும்... பாட்டன்களையும் சொந்த வீட்டில்.. இரவல்க் கொள்ளிக்குக் கொடுத்த... பேரன்.. பேர்த்திகள்... பயமுறுத்திக் கொண்டிருந்ததும்... பயந்து கொண்டிருந்ததும்... நடந்தது...

அந்தச் சில நூறு பேர்களில்... பிணங்களுடன்... பிணங்களாகக் கிடந்து.. தப்பியவர்கள்... ஒன்றோ.. இரண்டோ... பாட்டிகளின்... காதில்... கழுத்தில்... கையில் இருந்த நகைகளை... அங்கங்களைத் துண்டித்து... அறுத்துச் சென்ற கணத்தில்... உயிருடன்... அக்குவியலினுட் கிடந்த பாட்டி ஒருவரின் காதும் அறுபட்டதற்கு... இன்னும் நடமாடிக் கொண்டிருக்கும்... அவரும்... அவரின் காதும் சாட்சி...

(வீட்டிற்குள் என்னவோ.. ஏதோ... என்று... பயந்தபடியே... கதவைத் திறந்த போது... புஷ்டியாக வளர்ந்து... நன்றியுடன்... முழு வேகத்துடன்.. (பூனைக்கு நன்றியில்லை என்று யார் சொன்னது..?).. மியாவ் என்று பாய்ந்து வந்து தொற்றிக் கொண்ட பூனையும்... இன்னும் உயிருடன் இருந்து கொண்டிருந்த.... போலீஸ்... மற்றும்... ஜிம்மியும்... ஒரு சின்ன ஆறுதல்...)


தொடரும்...

27 ஊக்கம்::

vasu balaji said...

/இல்லைனா நாயிங்க கடிச்சுக் குதறிடும்".. 'ஸ்ஸ்ஸ்ஸரி பாட்டி'.. ரகசியமா.. /

:))

/அடுப்பங்கரையில்... எலிப்பொறி வச்சு... பாட்டி உண்ணாவிரதம் இருக்கிறத விட... இவளே பொறி வளர்க்கிறாளே... பேஷ் பேஷ்..என்ற நினைப்போ.. சுப்பு மைன்ட்.. சொல்ல முடியாது..).../

லொல்லுத்தாத்தா.

/பெயர்வுகள்... வீட்டை விட்டு அசையாத... சுப்பு... நடந்து... 'எங்கம்மா போறோம்..?.. இன்னும் எவ்ளோ தூரம்..?'../

ஆண்டவா. வீடியோல பார்த்தது அப்போவே கலங்கடிச்சதும்மா:((

/இரு வாரத்தில்... மீண்டும் எச்சரிக்கை... ஒல்லிக் குச்சி அம்மா... எப்படிச் சாதித்தார்கள்... எப்படிப் போனார்கள்... எப்படி வந்தார்கள்... தெரியாது...! திரும்பி வரும்போது... பாட்டியும்... தாத்தாவும்... டைகரும்... சேர்ந்து... "பாட்டி.... தாத்தா..!".. "/

அம்மாடியோ. முடியல..மனுஷனால முடிஞ்சதா இதெல்லாம்.

/அனைத்துத் தாத்தாக்களும்.. ஆர்மி வந்தால்... வீட்டுக்குள் ஒளிந்து கொள்ளல் ஆகாதென்று... வாசலில் உட்கார்ந்திருந்து... போதை மருந்தின் உச்சவெறியில் உலவிய... ஆர்மியின்... துப்பாக்கி வேட்டுக்களுக்குப் பலியாகி... வீட்டு வாசலில்... பிணங்களாக... கொள்ளி வைக்க ஆள் அற்று... துர்நாற்றம் தாங்காது.../

நாசமாப் போயிருப்பானுங்க. மிருகத்தைக் கூட இப்படி வதைக்க முடியாதுன்னு சட்டம் வேற.

/கொல்லைப் புறங்களை... அவரவர் வீட்டின் தோட்டங்களை... இடுகாடாக்கி... குப்பைகள் போல்... குவித்து... கொள்ளி வைக்கப்பட்டனர்.../

கடவுளே கடவுளே! என்ன இது?

/காதில்... கழுத்தில்... கையில் இருந்த நகைகளை... அங்கங்களைத் துண்டித்து... அறுத்துச் சென்ற கணத்தில்... உயிருடன்... அக்குவியலினுட் கிடந்த பாட்டி ஒருவரின் காதும் அறுபட்டதற்கு... இன்னும் நடமாடிக் கொண்டிருக்கும்... அவரின் காதே சாட்சி.../

இதுக்கு பேரு ஆர்மி. த்த்த்தூஊஊஊ

/கதவைத் திறந்த போது... புஷ்டியாக வளர்ந்து... நன்றியுடன்... முழு வேகத்துடன்.. (பூனைக்கு நன்றியில்லை என்று யார் சொன்னது..?).. மியாவ் என்று பாய்ந்து வந்து தொற்றிக் கொண்ட பூனையும்... இன்னும் உயிருடன் இருந்து கொண்டிருந்த.... போலீஸ்... மற்றும்... ஜிம்மியும்... ஒரு சின்ன ஆறுதல்...)/

எங்களுக்கும்:)

ஆ.ஞானசேகரன் said...

//இரு மாதங்களோ... அதற்கு மேலோ... ஆச்சு... போகலாம் என்று செய்தி வந்து... கிளம்பி வந்த போது... கறைகள்.. ஊரெல்லாம் கறைகள்... இரத்தக் கறைகள்...//

ப்ப்ப்ப்ச்ச்ச்... கேட்க கூட தெம்பில்லாமல் போகின்றது...

பித்தனின் வாக்கு said...

தற்போதைய சண்டையில் கூட மூட்டை முடிச்சுகளுடன் குடும்பம் குடும்பமாக வெளியேறிய குடுபங்களை சாப்பிட்டுக் கொண்டு டீ வி யில் பார்த்தேம். உங்களின் கட்டுரைகளைப் படிக்கையில் தான் அதனுடைய உண்மையான வலி தெரிகின்றது. எங்கே போகின்றேம், எதற்கு, எப்படி என்று கூடத் தெரியாமல், மிகவும் வலியான நாட்கள் உங்களுக்கு. உண்மையில் உங்க அம்மாவைப் பாராட்ட வேண்டும். மிகவும் தைரியமான மன உறுதியான பெண்மணி அவர். அவருக்கு எனது வணக்கங்கள். நன்றி பிரியா.

பிரபாகர் said...

சகோதரி...

பின்னோட்டம் இடுகையாய்....

http://abiprabhu.blogspot.com/2009/11/blog-post_11.html

பிரபாகர்.

ஈரோடு கதிர் said...

//கறைகள்.. ஊரெல்லாம் கறைகள்... இரத்தக் கறைகள்...//

படிக்கவே பதறுகிறதே....
அங்கே வாழ்ந்து, வீழ்ந்தவர்களுக்கு எப்படியிருந்திருக்கும்

ப்ரியமுடன் வசந்த் said...

//டேய்... அங்கதான் எங்க அப்பாச்சி... அப்பப்பா... எல்லாரையும் எரிச்சாங்க... ஜாக்கிரதை என்று... பாட்டிகளையும்... பாட்டன்களையும் சொந்த வீட்டில்.. இரவல்க் கொள்ளிக்குக் கொடுத்த... பேரன்.. பேர்த்திகள்... பயமுறுத்திக் கொண்டிருந்ததும்... பயந்து கொண்டிருந்ததும்... நடந்தது...//

ஆமாவாக்கா..

ப்ச்..

இப்போவும் நடக்குதே..

புலவன் புலிகேசி said...

//இரு மாதங்களோ... அதற்கு மேலோ... ஆச்சு... போகலாம் என்று செய்தி வந்து... கிளம்பி வந்த போது... கறைகள்.. ஊரெல்லாம் கறைகள்... இரத்தக் கறைகள்...
//

கொடூரர்கள்..............மனித வடிவ மிருகங்கள்..

//மியாவ் என்று பாய்ந்து வந்து தொற்றிக் கொண்ட பூனையும்... இன்னும் உயிருடன் இருந்து கொண்டிருந்த.... போலீஸ்... மற்றும்... ஜிம்மியும்... ஒரு சின்ன ஆறுதல்..//

மனிதனுக்குத்தான் நன்றியில்லை....

vasu balaji said...

யூத்ஃபுல் விகடன் நவம்பர் மின்மலரில் உன் கவிதை படித்தேன். அருமை. பாராட்டுகள் அம்மா.

ஆரூரன் விசுவநாதன் said...

nice article. keep it up

இராகவன் நைஜிரியா said...

வேதனை... மனசு பூரா ரணமாகிவிட்டதுங்க..

பின்னோக்கி said...

//பாட்டி நிஜமாவே குட்டி போட்டுட்டுதான் சுத்துறாங்களா...?!..

அருமை.

அழகான பொழுதிலிருந்து மீதி கட்டுரை அழ வைக்கிறது. தொடருங்கள்

க.பாலாசி said...

//ஆபரேஷன்... லிபரேஷன்... பெயர்வுகள்... வீட்டை விட்டு அசையாத... சுப்பு... லக்ஷ்மி... விட்டு... நன்றியுள்ள நாய்கள் விட்டு... பூனைக்குட்டியும் விட்டு... பூந்தோட்டமும் விட்டு... அம்மா கையில் மூட்டை முடிச்சு... அப்பா கையில் பெட்டி... படுக்கை... ஒன்றா... இரண்டா... எத்தனை மைல்கள்.. நடந்து.. நடந்து... நடந்து.. 'Rabbit proof fence' பார்த்த போது... வலி உணர முடிந்தது... 'அம்மா கால் வலிக்குதும்மா... தூக்குங்க..'... 'அம்மா கைல மூட்ட முடிச்சு... எப்டிம்மா...' .. 'அப்பா தூக்குங்க..'.. 'வாடா...'.. தோள்களில் நானும்... கைகளில்.. பெட்டிகளும்... அப்பாவும்... 'அப்பா பாவம்டா... கொஞ்சம் இறங்கி நடம்மா செல்லம்.. இப்போ வந்துடும்...'... சிணுங்கியபடி... நடந்து... நடந்து... 'எங்கம்மா போறோம்..?.. இன்னும் எவ்ளோ தூரம்..?'..//

இந்த பத்தியே மொத்த வலியையும் சொல்கிறது.

//அந்தச் சில நூறு பேர்களில்... பிணங்களுடன்... பிணங்களாகக் கிடந்து.. தப்பியவர்கள்... ஒன்றோ.. இரண்டோ... பாட்டிகளின்... காதில்... கழுத்தில்... கையில் இருந்த நகைகளை... அங்கங்களைத் துண்டித்து...//

அடக்கொடுமையே.....

நர்சிம் said...

தலைப்பே பதிந்தது ஆழமாய்.

சூர்யா ௧ண்ணன் said...

// 'எங்கம்மா போறோம்..?.. இன்னும் எவ்ளோ தூரம்..?'..//

மனதை பாதித்த வரிகள் ..,

சத்ரியன் said...

கலகல ப்ரியா,

என்னால் பின்னூட்டம் இடமுடியவில்லை! படிக்கிறேன் அவ்வளவுதான். மனசு கனக்கும் தொடர்.

நேசமித்ரன் said...

மனதை பாதித்த தொடர்.

துபாய் ராஜா said...

இந்த தொடர் படிக்கும் போதெல்லாம் கண்களும்,உள்ளமும் கசிந்து,நசிந்து விடுகின்றன. உண்மையை எல்லோரும் அறிய உரக்க சொல்லுங்கள் ப்ரியா...

கலகலப்ரியா said...

நன்றி வானம்பாடி...

நன்றி ஞானசேகரன்...

நன்றி பித்தன்... ம்ம்... ஆமாங்க... அவங்கள பாராட்ட நிறைய இருக்கு...

நன்றி அண்ணா... என்ன சொல்லுறதுன்னு இன்னும் தெரியல...

நன்றி கதிர்... :)

நன்றி வசந்த்... ஆமாம்பா...

நன்றி புலிகேசி... சரியாதான் சொல்லுறீங்க..

திரும்பவும் நன்றி வானம்பாடி...

நன்றி ஆரூர்...

நன்றி ராகவன்...

நன்றி பின்னோக்கி...

நன்றி பாலாசி...

நன்றி நர்சிம்...

நன்றி சூர்யா...

நன்றி சத்ரியன்.. அண்ணே...

நன்றி நேசமித்ரன்...

நன்றி ராஜா...

velji said...

அற்ப மாயையே...சரியான தேர்வு.தொடருங்கள்.

கலகலப்ரியா said...

நன்றி வேல்ஜி...!

அன்புடன் அருணா said...

என்ன செய்யணும்னு தெரிலியே...கண் நிறைகிறது....

கலகலப்ரியா said...

//அன்புடன் அருணா said...

என்ன செய்யணும்னு தெரிலியே...கண் நிறைகிறது....//

ம்ம்.. நன்றி அருணா...

☀நான் ஆதவன்☀ said...

வலிகள் வடுவாய்... :(

கலகலப்ரியா said...

//☀நான் ஆதவன்☀ said...

வலிகள் வடுவாய்... :(//

:).. நன்றி

பா.ராஜாராம் said...

எவ்வளவு ஆழ்ந்த உண்மையான குருதிகளை நிரப்பிய பேனா இது!

பா.ராஜாராம் said...

ஆம்!
சுற்று விழி சுடரே..

கலகலப்ரியா said...

//பா.ராஜாராம் said...

எவ்வளவு ஆழ்ந்த உண்மையான குருதிகளை நிரப்பிய பேனா இது!//

நன்றி பா.ரா..