header photo

Sunday, November 15, 2009

நட்புக் காலத்தில் நானும்...




ஆச்சு முக்கால் வருஷம்... அட வேற ஒண்ணுமில்லீங்க.. இடுகை எழுத வந்து முக்கால் வருஷம் ஆச்சு.. ஹிஹி..

நம்ம இடுகைய.. நம்ம பர்மிஷன் இல்லாம விகடனுக்கு அனுப்பற வானம்பாடிய வச்சுதான்.. வடிவேலு படத்துக்கு... இம்சை அரசன்னு பேரு வச்சிருப்பாங்கன்னு தோணுது... அவங்கள வச்சுதான் என்னோட இந்த இடுகை... ம்ம்.. நூறாவது இடுகை...

யூத்ஃபுல் விகடன்ல உன்னோட இடுகை வந்திருக்கு... இடுகைல போடு...

'ம்ம்.. ஓகே... '

ரெண்டு நாள் கழித்து... திரும்ப வந்திருக்கு.. இடுகைல போடு...

'பார்க்கலாம்...'

மூணு நாள் கழித்து... விகடன் முகப்பில வந்திருக்கு... இடுகைல போடு...

'ஆ..! ஆள விடுங்க சார்... என்னால முடியாது..!'

'ஏன் உனக்கு இதில என்ன கஷ்டம்?'.. எப்பொழுதெல்லாம் விகடனில் வெளியிடப்படுகிறதோ... அப்பொழுதெல்லாம்.. கன அக்கறையா வந்து... பின்னூட்டத்ல 'வாழ்த்துக்கள் ப்ரியா... விகடன் முகப்பில உன்னோட கவிதை..' ... ஸ்ஸ்ஸப்பா முடியல... (ராகவன் சார் கோச்சுக்குவார்... எவ்ளோ அக்கறையா பண்ணா இப்டியான்னு... =))..

சார்... விகடன்ல இருந்து கவிதை கேட்டு எழுதி இருக்காங்க.. மின்னிதழ் வெளியிட போறாங்களாம்...

வாவ்.. வெரி குட்... எழுது எழுது..

பார்க்கலாம்...

எழுதினியா... எழுதினியா... எழுதினியா... எழுதினியா...

இல்ல.. இல்ல.. இல்ல.. இல்ல... இல்ல....

நாளைக்குள்ள அனுப்பணுமே... இன்னிக்கு எழுது... ப்ளீஸ்.. ப்ளீஸ்...ப்ளீஸ்..

பார்க்கலாம்...

எழுதி அனுப்பிச்சதும்... எங்க மின்னிதழ் காணோம்... எப்போ வருது.. எங்க காணோம்... எப்போ வருது... எப்போ வருது...

தெரியாது சார்... தெரியாது.... தெரியாஆஆது....!

அன்று காலையில்... விகடன் எனக்கு மெயில் அனுப்ப முன்னாடி... மின்னிதழ் வந்துடுத்து... உன்னோட கவிதை வந்திருக்கு... அழகா இருக்கு... காங்கிராட்ஸ்...

சரி பார்க்கறேன்.. தாங்க்ஸ் சார்...

இன்னைக்கு... ஒரு இடுகை போடு.. நூறாவது இடுகை...

'சார்... இதுக்காக எல்லாம் இடுகை போட முடியாது.. ஏதாவது தோணிச்சுன்னா பார்க்கலாம்..'..

ஏன்... இதுக்கு என்ன கஷ்டம்... ஒரு இடுகை போடு...

ஒண்ணும் பேசாம.. சிப்ஸ் சாப்பிட்டுக் கொண்டு... சஞ்சயின் போன வருஷ மார்கழி மகோற்சவம் கச்சேரி பார்த்தேன்...

ரெண்டு மணி நேரம் கழித்து.. 'என்ன இடுகை போடுறியா..?'...

ஐயோ இல்ல சார்...

அப்போ என்ன பண்ணுறா..

ஒண்ணுமில்ல சார்...

ஸ்டார்ட்டிங் ட்ரபிள்... ஆரம்பிச்சான்னா எழுதிடுவா... ஒரு இடுகை போடு...

ம்ம்.. பார்க்கலாம் சார்...

மூணு மணி நேரம் கழிச்சு... நான் நூறு இடுகைக்கும்.. நூத்தி இருபத்தைஞ்சு ஃபலோவர்ஸ்க்கும் சேர்த்து விஷ் பண்ணலாம்னு நினைச்சேன்... இப்போ பாரு.. நூத்தி இருபத்தியாறு பேரு ஆய்ட்டாங்க... அவ்வ்வ்வ்வ்வ்வ்... இடுகை போடு...

இது பப்ளிஷ் பண்ண ரெண்டு நிமிஷம் முன்னாடி.. 'இடுகை போட்டுட்டியா..?'

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... முடியலைங்க... அதான் நானும் இத அப்டியே இடுகையா போட்டுட்டேன்...

_________________________________

இன்று போல் நாளை இருப்பதில்லை...
உன் பேரப்பிள்ளைகளுடன் நீயும்..
என் பிள்ளைகளுடன் நானும்...
இப் பிரபஞ்சத்தின்...
இரு வேறு திசைகளில்...
தொலைந்து போய் விடலாம்...
அதனால் என்ன...
இப்பொழுதும் திசைகள் வேறுதான்..
ஆனால் நட்புக்கு எல்லைகள்..
வயதில் வகுக்கப்படாதது போல்...
திசையிலும் வரையப்படவில்லை...
பெயர் தெரியாத யுகத்தில்...
தொலைந்த நட்பு...
கணினி யுகத்தில் சந்தித்திருக்கிறது..
இந்த யுகத்தில் தொலைந்தால்...
இன்னொரு புதிய யுகம்...
தோன்றாமலா போய்விடும்...?!

_________________________________

இந்த இடுகையில் என்னுடன் எப்பவும் ஒட்டிக் கொண்டே இருக்கும்... என் ஆத்ம ஸ்நேகம்.. என்னுடைய டெடியையும் அறிமுகப்படுத்தலாம்... டெடி வச்சிருக்கா... குழந்தையா... இல்ல லூஸா (அது எல்லாரும்தானே.. ஹிஹி) என்றெல்லாம் கற்பனையைப் பறக்க விட வேணாம்... =))


_________________________________


எனது ஒவ்வொரு இடுகையையும் பொறுமையாகப் படித்து... ஊக்குவிக்கும்... அனைத்து அன்புள்ளங்களுக்கும் என் அன்பினைக் காணிக்கையாக்குகிறேன்.. பதிவுலகத்தில் கிடைத்த சொந்தங்கள் மற்றும் நட்புகள் பற்றி... இன்னொரு நாள் விரிவாக எழுத வேண்டும்.. எழுதுவேன்..



___/\___

76 ஊக்கம்::

vasu balaji said...

100 வது இடுகைக்கும் 125 தொண்டருக்கும் (ஹி ஹி 126னு சொல்ல வேணாம், அதில நீயும் சேர்த்துதான் கணக்கு) மனமார்ந்த வாழ்த்துகள். 100ம் முத்துக்கள். நத்தை ஸ்பீட் மாத்தி, இன்னும் சீக்கிரம் 100 எட்ட வேண்டும் என தொண்டர்கள் சார்பில் மிரட்டப் படுகிறாய்.

ஆயில்யன் said...

தொடர் ஊக்கங்களுக்கு வானம்பாடி சாருக்குத்தான் பர்ஸ்ட் சல்யூட் :)

உமக்கும் வாழ்த்துக்கள் தொடருங்கள் கலகலவென..! :)

vasu balaji said...

/ஒண்ணும் பேசாம.. சிப்ஸ் சாப்பிட்டுக் கொண்டு... சஞ்சயின் போன வருஷ மார்கழி மகோற்சவம் கச்சேரி பார்த்தேன்.../

இதுக்கு பேருதான் ஒன்னுமில்லையோ? grrrrrrr

/அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... முடியலைங்க... அதான் நானும் இத அப்டியே இடுகையா போட்டுட்டேன்.../

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ். இதையா போட சொன்னேன். அழகான எழுத்தால் கட்டி போட்டு வெச்சிருக்கிற தொடரை தொடர சொன்னா..

ஹ்ம்ம்ம்ம். அழகான கவிதைக்கு நன்றி.

தோளில் தொங்குற டெடிக்கு ஹலோ!:))

ஒரு மார்க்கமா பெருமையாவும் இருக்கு. என்னன்னாலும் வாத்திச்சி வாயால பாராட்டு.

நன்றிம்மா.

ஹேமா said...

மனம் நிறைந்த வாழ்த்துக்கள் பிரியா.அழகான நட்புக்கவிதை.
இன்னும் நிறைய எழுதுங்கள்.

Unknown said...

100வது பதிவிற்கு வாழ்த்துக்கள். இதே போல் 200, 300, 400, 500... என தொடர்ந்து கொண்டே இருக்க வாழ்த்துக்கள்.

ப்ரியமுடன் வசந்த் said...

பிரியாக்கு வாழ்த்துக்கள்..

உங்கள் நட்புக்கு வானமே எல்லையாய் இருக்கட்டும்...

100வது இடுகையில் 100 பின்னூட்ட வாழ்த்து பெற வாழ்த்துக்கள்...

இராகவன் நைஜிரியா said...

யக்கோவ்...

முதலில் உங்களோட 100வது இடுகைக்கு என்னோட வணக்கஙக்ள்... (நான் யூத் அதனால வாழ்த்துகளுக்கு பதிலாக வணக்கங்கள்.)

9 மாதத்தில் 100 இடுகைகள் என்பது அசுர சாதனை என்பது என் எண்ணம். வருஷத்திற்கு 50 இடுகை எழுத முழி பிதுங்கி போயிடறேன்... நீங்க 100 இடுகை .. அதுவும் முத்து முத்தாக போட்டு இருக்கீங்க.

வெரி குட் கீப் இட் அப்.

இராகவன் நைஜிரியா said...

அண்ணன் வானம்பாடிகளுக்கு என்னோட வணக்கங்கள். அவரின் ஊக்கங்கள் உங்களை வளர வைத்து இருக்கின்றது.

அண்ணன் ரியலி சூப்பர் தாங்க.

இராகவன் நைஜிரியா said...

// (ராகவன் சார் கோச்சுக்குவார்... எவ்ளோ அக்கறையா பண்ணா இப்டியான்னு... =)).. //

நிச்சயமா இல்லீங்க. வழி காட்ட ஒரு நட்பு.. இவ்வளவு அக்கறையா இருப்பது மனதுக்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கின்றது.

என் மேலும் அவர் அன்புச் செலுத்துகின்றார் என்பதை நினைக்க சந்தோஷமாக இருக்கின்றது... என்ன கும்மி அடிச்சாலும் கோச்சுகிடாம இருக்காரே அதுவே பெரிய விசயம் தானுங்களே...

உங்கள் இடுகைகளிலும் பல தடவை கும்மி அடித்து இருக்கின்றேன். அப்போது எல்லாம் பொருத்தது பெரிய விசயமாகத்தாங்க நான் நினைக்கின்றேன்.

சமீப கால உங்க இடுகைகள் என் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதால், ஒரு இயலாமையை உண்டு பண்ணுவதால், வாழ்க்கையில் நம் கஷ்டங்கள் எல்லாம் ஒன்றுமில்லை என்று ஆக்கிவிட்டதுங்க. (மனவேதனையைச் சரியாகக் கூட வெளிப் படுத்த இயலவில்லை.. வார்த்தைகள் கிடைக்கவில்லைங்க..)

அதான் பின்னூட்டம் போடுவது குறைந்து போய்விட்டது.

இராகவன் நைஜிரியா said...

// இந்த யுகத்தில் தொலைந்தால்...
இன்னொரு புதிய யுகம்...
தோன்றாமலா போய்விடும்...?! //

நல்ல நட்புகள் என்றுமே தொலைவதில்லீங்க... அதற்கு சில சமயங்களில் இடைவெளி மட்டும் விடப் படுகின்றது..

இராகவன் நைஜிரியா said...

// பதிவுலகத்தில் கிடைத்த சொந்தங்கள் மற்றும் நட்புகள் பற்றி... இன்னொரு நாள் விரிவாக எழுத வேண்டும்.. எழுதுவேன்.. //

எதிர் பார்த்து கொண்டு இருக்கின்றோம்..

velji said...

வாழ்த்துக்கள்!

சத்ரியன் said...

//இப் பிரபஞ்சத்தின்...
இரு வேறு திசைகளில்...
தொலைந்து போய் விடலாம்...
அதனால் என்ன...
இப்பொழுதும் திசைகள் வேறுதான்..
ஆனால் நட்புக்கு எல்லைகள்..
வயதில் வகுக்கப்படாதது போல்...//

ப்ரியா,

அண்ணன் அறிவுமதியின் "முகப்புக் கவிதை" முத்தாய்ப்பு.
'ப்ரியா'வின் ப்ரியம் மிக்க கவிதை..! சிறப்பு..!

R.Gopi said...

அற்புதமாக ஆடி சதமடித்த தோழமை லகலகவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்....

தாங்கள் மேலும் இது போல், சூப்பராக ஆடி, பல சதங்கள் அடிக்க வேண்டும் என்பதே எங்கள் அவா...

வானம்பாடிகள் - "தல" - தொடர்ந்து ப்ரியாவை ஊக்கப்படுத்துவதற்கு ஒரு ஸ்பெஷல் அலோ....

ப்ரியா உங்களின் டெடிக்கு ஒரு ஷொட்டு...

வாழ்த்துக்கள் ப்ரியா... மென்மேலும் பல படைப்புகள் படைக்க வேண்டும்....

cheena (சீனா) said...

ன்பின் கலகலப்ரியா

நூறாவது இடுகைக்கும் 125 ( ரவுண்டட் ஆஃப் ) தொடர்பவர்களைப் பெற்றதற்கும் நல்வாழ்த்துகள்.

விக்டனைல் - இளமை விகடனில் கலக்குவதற்கும் ( நான் பார்க்கவில்லை ) நல்வாழ்த்துகள்

ஹல்லோ டெடி - ப்ரியாவை கொஞ்சம் எழுதச் சொல்லுடா செல்லம்

பித்தனின் வாக்கு said...

நூறாவது இடுகைக்கு வாழ்த்துக்கள், நல்ல கவிதை.
டேடி பொம்மை நல்லா இருக்கு, இப்படியா போட்டா போட்டு பயமுறுத்தறது, இருங்க கொஞ்சம் வேப்பிலை அடித்து விட்டு வருகின்றேன்.
நன்றி பிரியா.

முனைவர் இரா.குணசீலன் said...

மிக்க மகிழ்ச்சி ப்ரியா..
தொடர்ந்து எழுதுங்கள்..
வாழ்த்துக்களுடன்..

அன்பேசிவம் said...

வாழ்த்துகள் ப்ரியா, எனக்கு 100 பதிவை எட்ட இரண்டு வருடங்கள் பிடித்தன, எண்ணிக்கை முக்கியமல்ல, எண்ணங்கள் முக்கியம். தொடர்ந்து நல்ல பதிவுகளை கொடுங்கள் என்று உரிமையோடு கேட்கிறேன். 100 பதிவுகளுக்கும் 125(6) தொடர்பவர்களுக்கும் எனது வாழ்த்துகள்.

ஈரோடு கதிர் said...

வாழ்த்துகள் பிரியா...

100 இடுகை என்பது ஒரு சுகமான அனுபவம்... அடுத்தடுத்து இந்த சுகமான அனுபவம் நிகழட்டும்...

-------------------------------
ஆமாங்க இந்த வானம்பாடியும், செந்திலும் தான் என்னையும் விகடனுக்கு அனுப்புங்க விகடனுக்கு அனுப்புங்கனு ரொம்ப நச்(!!! லொல்லப்பாரேன் நச் ஆம்ல) பண்ணினாங்க....

சரி எதுக்கும் அதுக்கு ஒரு நன்றி சொல்லிடுவோம்....(எல்லாம் நேரம்டா)

ரோஸ்விக் said...

யக்கோவ்! தொடர்ந்து கலக்குக்கோவ்....அருமையான எழுத்து நடை....தொடரட்டும் அதன் பயணம். வாழ்த்துக்கள்.

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...

100 வது இடுகைக்கும் 125 தொண்டருக்கும் (ஹி ஹி 126னு சொல்ல வேணாம், அதில நீயும் சேர்த்துதான் கணக்கு) மனமார்ந்த வாழ்த்துகள். 100ம் முத்துக்கள். நத்தை ஸ்பீட் மாத்தி, இன்னும் சீக்கிரம் 100 எட்ட வேண்டும் என தொண்டர்கள் சார்பில் மிரட்டப் படுகிறாய்.//

ம்ம்... மிரட்டலுக்கெல்லாம் பயப்டுற ஆளு நாம இல்லீங்கோ...!

கலகலப்ரியா said...

//ஆயில்யன் said...

தொடர் ஊக்கங்களுக்கு வானம்பாடி சாருக்குத்தான் பர்ஸ்ட் சல்யூட் :)

உமக்கும் வாழ்த்துக்கள் தொடருங்கள் கலகலவென..! //

நன்றிங்க... ஆயில்யன்

கலகலப்ரியா said...

// வானம்பாடிகள் said...

/ஒண்ணும் பேசாம.. சிப்ஸ் சாப்பிட்டுக் கொண்டு... சஞ்சயின் போன வருஷ மார்கழி மகோற்சவம் கச்சேரி பார்த்தேன்.../

இதுக்கு பேருதான் ஒன்னுமில்லையோ? grrrrrrr

/அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... முடியலைங்க... அதான் நானும் இத அப்டியே இடுகையா போட்டுட்டேன்.../

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ். இதையா போட சொன்னேன். அழகான எழுத்தால் கட்டி போட்டு வெச்சிருக்கிற தொடரை தொடர சொன்னா..

ஹ்ம்ம்ம்ம். அழகான கவிதைக்கு நன்றி.

தோளில் தொங்குற டெடிக்கு ஹலோ!:))

ஒரு மார்க்கமா பெருமையாவும் இருக்கு. என்னன்னாலும் வாத்திச்சி வாயால பாராட்டு.

நன்றிம்மா.//

அது சரி... நன்றி நன்றி நன்றி.. ! :p

கலகலப்ரியா said...

//ஹேமா said...

மனம் நிறைந்த வாழ்த்துக்கள் பிரியா.அழகான நட்புக்கவிதை.
இன்னும் நிறைய எழுதுங்கள்.//

நன்றி ஹேமா

கலகலப்ரியா said...

//முகிலன் said...

100வது பதிவிற்கு வாழ்த்துக்கள். இதே போல் 200, 300, 400, 500... என தொடர்ந்து கொண்டே இருக்க வாழ்த்துக்கள்.//

நன்றி முகிலன்... ஆ.. உங்க தொடர் படிக்கணும்... வந்துக்கிட்டே இருக்கேன்.. =)

கலகலப்ரியா said...

//பிரியமுடன்...வசந்த் said...

பிரியாக்கு வாழ்த்துக்கள்..

உங்கள் நட்புக்கு வானமே எல்லையாய் இருக்கட்டும்...

100வது இடுகையில் 100 பின்னூட்ட வாழ்த்து பெற வாழ்த்துக்கள்...//

நன்றி வசந்த்..

புலவன் புலிகேசி said...

வானம்பாடிகள் ஐயாவை போல் ஊக்குவிக்கும் மனதிருப்பதால் தான் பதிவர்கள் வளர்கின்றனர். வாழ்த்துக்கள் ப்ரியா..

கலகலப்ரியா said...

//இராகவன் நைஜிரியா said...

யக்கோவ்...

முதலில் உங்களோட 100வது இடுகைக்கு என்னோட வணக்கஙக்ள்... (நான் யூத் அதனால வாழ்த்துகளுக்கு பதிலாக வணக்கங்கள்.)//

அவ்வ்வ்வ்வ்வ்வ்...

//9 மாதத்தில் 100 இடுகைகள் என்பது அசுர சாதனை என்பது என் எண்ணம். வருஷத்திற்கு 50 இடுகை எழுத முழி பிதுங்கி போயிடறேன்... நீங்க 100 இடுகை .. அதுவும் முத்து முத்தாக போட்டு இருக்கீங்க.

வெரி குட் கீப் இட் அப்.//

அப்டிங்கிறீங்க.. .ம்ம்.. நன்றி நன்றி நன்றி...

//அண்ணன் வானம்பாடிகளுக்கு என்னோட வணக்கங்கள். அவரின் ஊக்கங்கள் உங்களை வளர வைத்து இருக்கின்றது.

அண்ணன் ரியலி சூப்பர் தாங்க.//

அட நீங்க வேற ஏத்தி விடாதீங்க...

//
உங்கள் இடுகைகளிலும் பல தடவை கும்மி அடித்து இருக்கின்றேன். அப்போது எல்லாம் பொருத்தது பெரிய விசயமாகத்தாங்க நான் நினைக்கின்றேன்.//

இப்போல்லாம் உங்க கும்மிய நானும் மிஸ் பண்றேன்.. அவ்வ்வ்வ்வ்... யாரோ ஊரு பேரு தெரியாதவன் வந்து கிலிய கிளப்பிட்டு போய்ட்டான்... அந்தப் புண்ணியவான் நல்லா இருக்கட்டும்... வானம்பாடி ஐயா வேலி போடாம வச்சிருக்காரு... அங்க கும்மி அடிச்சுக்கலாம்.. =))

//மனவேதனையைச் சரியாகக் கூட வெளிப் படுத்த இயலவில்லை.. வார்த்தைகள் கிடைக்கவில்லைங்க..)

அதான் பின்னூட்டம் போடுவது குறைந்து போய்விட்டது.//

அதுதான் புரிஞ்சுக்க முடியும்னு சொல்லிட்டேனே..

//
நல்ல நட்புகள் என்றுமே தொலைவதில்லீங்க... அதற்கு சில சமயங்களில் இடைவெளி மட்டும் விடப் படுகின்றது..//

அருமையா சொல்லி இருக்கீங்க..!

//எதிர் பார்த்து கொண்டு இருக்கின்றோம்..//

:D பார்க்கலாம்.. =))))...

கலகலப்ரியா said...

// velji said...

வாழ்த்துக்கள்!//

நன்றி வேல்ஜி..!

கலகலப்ரியா said...

//சத்ரியன் said...

//இப் பிரபஞ்சத்தின்...
இரு வேறு திசைகளில்...
தொலைந்து போய் விடலாம்...
அதனால் என்ன...
இப்பொழுதும் திசைகள் வேறுதான்..
ஆனால் நட்புக்கு எல்லைகள்..
வயதில் வகுக்கப்படாதது போல்...//

ப்ரியா,

அண்ணன் அறிவுமதியின் "முகப்புக் கவிதை" முத்தாய்ப்பு.
'ப்ரியா'வின் ப்ரியம் மிக்க கவிதை..! சிறப்பு..!//

இந்தப் பின்னூட்டம் மிகச் சிறப்பு அண்ணே... நன்றி!

கலகலப்ரியா said...

//R.Gopi said...

அற்புதமாக ஆடி சதமடித்த தோழமை லகலகவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்....

தாங்கள் மேலும் இது போல், சூப்பராக ஆடி, பல சதங்கள் அடிக்க வேண்டும் என்பதே எங்கள் அவா...

வானம்பாடிகள் - "தல" - தொடர்ந்து ப்ரியாவை ஊக்கப்படுத்துவதற்கு ஒரு ஸ்பெஷல் அலோ....

ப்ரியா உங்களின் டெடிக்கு ஒரு ஷொட்டு...

வாழ்த்துக்கள் ப்ரியா... மென்மேலும் பல படைப்புகள் படைக்க வேண்டும்....//

நன்றி கோபி... ! இந்த பின்னூட்டம் கொஞ்ச நாளா மிஸ்ஸிங் அவ்வ்வ்வ்வ்.. =)

கலகலப்ரியா said...

//cheena (சீனா) said...

ன்பின் கலகலப்ரியா

நூறாவது இடுகைக்கும் 125 ( ரவுண்டட் ஆஃப் ) தொடர்பவர்களைப் பெற்றதற்கும் நல்வாழ்த்துகள்.//

அது சரி... நன்றி சீனா..

//விக்டனைல் - இளமை விகடனில் கலக்குவதற்கும் ( நான் பார்க்கவில்லை ) நல்வாழ்த்துகள்//

நானே வானம்பாடி சொல்லித்தான் பார்க்கறேனுங்க... =)).. நன்றி..

//ஹல்லோ டெடி - ப்ரியாவை கொஞ்சம் எழுதச் சொல்லுடா செல்லம்//

=))... ம்ம்...

கலகலப்ரியா said...

//பித்தனின் வாக்கு said...

நூறாவது இடுகைக்கு வாழ்த்துக்கள், நல்ல கவிதை.
டேடி பொம்மை நல்லா இருக்கு, இப்படியா போட்டா போட்டு பயமுறுத்தறது, இருங்க கொஞ்சம் வேப்பிலை அடித்து விட்டு வருகின்றேன்.
நன்றி பிரியா//

நன்றி பித்தன்... வேப்பிலை கிடைக்க வாழ்த்துகள்...!

கலகலப்ரியா said...

//முனைவர்.இரா.குணசீலன் said...

மிக்க மகிழ்ச்சி ப்ரியா..
தொடர்ந்து எழுதுங்கள்..
வாழ்த்துக்களுடன்..//

நன்றிங்க...

கலகலப்ரியா said...

//முரளிகுமார் பத்மநாபன் said...

வாழ்த்துகள் ப்ரியா, எனக்கு 100 பதிவை எட்ட இரண்டு வருடங்கள் பிடித்தன, எண்ணிக்கை முக்கியமல்ல, எண்ணங்கள் முக்கியம். தொடர்ந்து நல்ல பதிவுகளை கொடுங்கள் என்று உரிமையோடு கேட்கிறேன். 100 பதிவுகளுக்கும் 125(6) தொடர்பவர்களுக்கும் எனது வாழ்த்துகள்.//

ரொம்ப நன்றி முரளி...! எண்ணிக்கை முக்கியமில்லை என்பதே என்னோட கருத்தும்... =))... சொன்னா கேக்குறாங்களா... =))..

கலகலப்ரியா said...

//ஈரோடு கதிர் said...

வாழ்த்துகள் பிரியா...

100 இடுகை என்பது ஒரு சுகமான அனுபவம்... அடுத்தடுத்து இந்த சுகமான அனுபவம் நிகழட்டும்...//

அப்டியா... நன்றி கதிர்... உங்க உடம்பு சுகமா... =))...

-------------------------------
//ஆமாங்க இந்த வானம்பாடியும், செந்திலும் தான் என்னையும் விகடனுக்கு அனுப்புங்க விகடனுக்கு அனுப்புங்கனு ரொம்ப நச்(!!! லொல்லப்பாரேன் நச் ஆம்ல) பண்ணினாங்க....

சரி எதுக்கும் அதுக்கு ஒரு நன்றி சொல்லிடுவோம்....(எல்லாம் நேரம்டா)//

ம்ம்... நேரத்துக்கென்ன.. ரொம்பத்தான்...

கலகலப்ரியா said...

//ரோஸ்விக் said...

யக்கோவ்! தொடர்ந்து கலக்குக்கோவ்....அருமையான எழுத்து நடை....தொடரட்டும் அதன் பயணம். வாழ்த்துக்கள்.//

ரொம்ப நன்றி தம்பியோவ்...!

கலகலப்ரியா said...

// புலவன் புலிகேசி said...

வானம்பாடிகள் ஐயாவை போல் ஊக்குவிக்கும் மனதிருப்பதால் தான் பதிவர்கள் வளர்கின்றனர். வாழ்த்துக்கள் ப்ரியா..//

நன்றி புலிகேசி...

பிரபாகர் said...

நூறுக்கு அண்ணனின் அன்பு வாழ்த்துக்கள். இன்னும் நிறைய எழுத பிரார்த்திக்கிறேன்.

பிரபாகர்.

கலகலப்ரியா said...

//பிரபாகர் said...

நூறுக்கு அண்ணனின் அன்பு வாழ்த்துக்கள். இன்னும் நிறைய எழுத பிரார்த்திக்கிறேன்.

பிரபாகர்.//

நன்றி அண்ணா...:)

வெண்ணிற இரவுகள்....! said...

ஆம் வானம்பாடிகள் தான் என் கட்டுரை வந்த போது சொன்னது

கலகலப்ரியா said...

//வெண்ணிற இரவுகள்....! said...

ஆம் வானம்பாடிகள் தான் என் கட்டுரை வந்த போது சொன்னது//

=))... ம்ம்... இவ்ளோ பெரிய சமூக சேவகர் பத்தி நான் கொஞ்சம் கம்மியாதான் சொல்லிப்புட்டேனோ... வானம்பாடி ஐயா நீங்க எங்கேயோ போய்ட்டீங்க... நன்றி வெண்ணிற...!

மணிப்பக்கம் said...

வாழ்த்துக்கள் பிரியா!

(எல்லாவற்றையும் உடனே படித்துவிடுவேன், பின்னூட்டம்தான் அப்பப்ப... ;) )

கலகலப்ரியா said...

//மணிப்பக்கம் said...

வாழ்த்துக்கள் பிரியா!

(எல்லாவற்றையும் உடனே படித்துவிடுவேன், பின்னூட்டம்தான் அப்பப்ப... ;) )//

ஓஹோ... இருங்க இதுவரை போட்ட இடுகைல இருந்து சில கேள்விகள் கேட்டு... இதை உறுதிப் படுத்திக்கறேன்... ஹிஹி... :p

துபாய் ராஜா said...

நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள் ப்ரியா. எண்ணிக்கை என்பது முக்கியமல்ல என்றாலும் என்ன எழுதுகிறோம் என்பது முக்கியம். இந்த விஷயத்தில் உங்களுக்கும், படிக்கும் எங்களுக்கும் திருப்திதான்.

/இன்று போல் நாளை இருப்பதில்லை...
உன் பேரப்பிள்ளைகளுடன் நீயும்..
என் பிள்ளைகளுடன் நானும்...
இப் பிரபஞ்சத்தின்...
இரு வேறு திசைகளில்...
தொலைந்து போய் விடலாம்...
அதனால் என்ன...
இப்பொழுதும் திசைகள் வேறுதான்..
ஆனால் நட்புக்கு எல்லைகள்..
வயதில் வகுக்கப்படாதது போல்...
திசையிலும் வரையப்படவில்லை...
பெயர் தெரியாத யுகத்தில்...
தொலைந்த நட்பு...
கணினி யுகத்தில் சந்தித்திருக்கிறது..
இந்த யுகத்தில் தொலைந்தால்...
இன்னொரு புதிய யுகம்...
தோன்றாமலா போய்விடும்...?!//

அருமையான கவிதை.நானெல்லாம் வலையுலகம் வந்து ஐந்தாண்டுகள் ஆனாலும் இந்த ஆண்டுதான் 25,50,நூறு என வேகம் பிடித்து இதோ மறுபடியும் எழுத நேரமில்லாமல் ஒரு தேக்கம். பதிவுலகம் மூலம் கிடைத்த நண்பர்கள் அனைவருமே அன்பானவர்கள். மிகவும் பண்பானவர்கள்.

பேசக்கூட ஆளில்லாமல் நம்மைப்போல் வெளிநாடுகளில்
வாழு(டு)வோர்க்கு அன்பு,ஆசை, கோபம்,சோகம், மகிழ்ச்சி என நமது எல்லா உணர்ச்சிகளையும் பகிர்ந்து கொள்ள பதிவுலகம் இருப்பது ஒரு ஆன்மபலத்தை அளிக்கிறது.

தொடர்ந்து வித்தியாசமான படைப்புகளை தொடருங்கள். வாழ்த்துக்கள். வணக்கம்.

க.பாலாசி said...

100 இடுகைகள், அப்பறம் 127 (அப்படித்தான் நினைக்கிறேன்) எல்லாத்துக்கும் வாழ்த்துக்கள். 100வது இடுகையைப்பத்தி ஒண்ணும் சொல்லலைனா நல்லா இருக்காதுல்ல....ம்ம்ம்....

//எனது ஒவ்வொரு இடுகையையும் பொறுமையாகப் படித்து... ஊக்குவிக்கும்... அனைத்து அன்புள்ளங்களுக்கும் என் அன்பினைக் காணிக்கையாக்குகிறேன்..//

நன்றி.....உங்களன்புக்கு....

கலகலப்ரியா said...

துபாய் ராஜா said...

நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள் ப்ரியா. எண்ணிக்கை என்பது முக்கியமல்ல என்றாலும் என்ன எழுதுகிறோம் என்பது முக்கியம். இந்த விஷயத்தில் உங்களுக்கும், படிக்கும் எங்களுக்கும் திருப்திதான்.

அருமையான கவிதை.

நானெல்லாம் வலையுலகம் வந்து ஐந்தாண்டுகள் ஆனாலும் இந்த ஆண்டுதான் 25,50,நூறு என வேகம் பிடித்து இதோ மறுபடியும் எழுத நேரமில்லாமல் ஒரு தேக்கம். பதிவுலகம் மூலம் கிடைத்த நண்பர்கள் அனைவருமே அன்பானவர்கள். மிகவும் பண்பானவர்கள்.

பேசக்கூட ஆளில்லாமல் நம்மைப்போல் வெளிநாடுகளில்
வாழு(டு)வோர்க்கு அன்பு,ஆசை, கோபம்,சோகம், மகிழ்ச்சி என நமது எல்லா உணர்ச்சிகளையும் பகிர்ந்து கொள்ள பதிவுலகம் இருப்பது ஒரு ஆன்மபலத்தை அளிக்கிறது.

தொடர்ந்து வித்தியாசமான படைப்புகளை தொடருங்கள். வாழ்த்துக்கள். வணக்கம்.//

ரொம்ப நன்றி ராஜா..! உங்களைப் போல் மனம் திறந்து பாராட்டும் மனம் உள்ளவர்கள் கிடைக்கப் பெற்றது பெரும் பாக்கியம்..!

கலகலப்ரியா said...

// க.பாலாசி said...

100 இடுகைகள், அப்பறம் 127 (அப்படித்தான் நினைக்கிறேன்) எல்லாத்துக்கும் வாழ்த்துக்கள். 100வது இடுகையைப்பத்தி ஒண்ணும் சொல்லலைனா நல்லா இருக்காதுல்ல....ம்ம்ம்....

//எனது ஒவ்வொரு இடுகையையும் பொறுமையாகப் படித்து... ஊக்குவிக்கும்... அனைத்து அன்புள்ளங்களுக்கும் என் அன்பினைக் காணிக்கையாக்குகிறேன்..//

நன்றி.....உங்களன்புக்கு....//

ஓஹோ.. இடுகைல சொல்லிக்கிற மாதிரி இருக்கிறது இந்த பார்ட் தான் போல...=)).. நன்றி பாலாசி..!

சூர்யா ௧ண்ணன் said...

100வது பதிவிற்கு வாழ்த்துக்கள்..

மேலும் சிறப்பாக தொடருங்கள் கலகலப்ரியா!

கலகலப்ரியா said...

//சூர்யா ௧ண்ணன் said...

100வது பதிவிற்கு வாழ்த்துக்கள்..

மேலும் சிறப்பாக தொடருங்கள் கலகலப்ரியா!//

ரொம்ப நன்றி சூர்யா..!

நேசமித்ரன் said...

மனம் நிறைந்த வாழ்த்துகள்

இன்னும் எதிர் பார்த்து .....

கலகலப்ரியா said...

//நேசமித்ரன் said...

மனம் நிறைந்த வாழ்த்துகள்

இன்னும் எதிர் பார்த்து .....//

நன்றி நேசமித்திரன்...! முயற்சிக்கிறேன்..!

Prathap Kumar S. said...

நூறாவது இடுகைக்கு வாழ்த்துக்கள் ஆத்தா

Thenammai Lakshmanan said...

//பெயர் தெரியாத யுகத்தில்...
தொலைந்த நட்பு...
கணினி யுகத்தில் சந்தித்திருக்கிறது//

superb kalakalp priya

செ.சரவணக்குமார் said...

வாழ்த்துக்கள் ப்ரியா.

கலகலப்ரியா said...

//நாஞ்சில் பிரதாப் said...

நூறாவது இடுகைக்கு வாழ்த்துக்கள் ஆத்தா//

நன்றி நாஞ்சில்...

கலகலப்ரியா said...

// thenammailakshmanan said...

//பெயர் தெரியாத யுகத்தில்...
தொலைந்த நட்பு...
கணினி யுகத்தில் சந்தித்திருக்கிறது//

superb kalakalp priya//

நன்றி தேனம்மை...

கலகலப்ரியா said...

//செ.சரவணக்குமார் said...

வாழ்த்துக்கள் ப்ரியா.//

நன்றி சரவணகுமார்..

வால்பையன் said...

கவிதை நல்லாருக்கு!

நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்!

தமிழ் அமுதன் said...

100வது பதிவிற்கு வாழ்த்துக்கள்..

மேலும் சிறப்பாக தொடருங்கள் கலக்கல் ப்ரியா!

கலகலப்ரியா said...

//வால்பையன் said...

கவிதை நல்லாருக்கு!

நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்!//

நன்றி வால்பையன்!

கலகலப்ரியா said...

//ஜீவன் said...

100வது பதிவிற்கு வாழ்த்துக்கள்..

மேலும் சிறப்பாக தொடருங்கள் கலக்கல் ப்ரியா!//

நன்றி ஜீவன்.. முயற்சிக்கிறேன்..!

அது சரி(18185106603874041862) said...

நூறுக்கு வாழ்த்து...கவிதை நன்று.. Life is a train without destination என்ற வரிகள் ஞாபகம் வருகிறது....

கலகலப்ரியா said...

//அது சரி said...

நூறுக்கு வாழ்த்து...கவிதை நன்று.. Life is a train without destination என்ற வரிகள் ஞாபகம் வருகிறது....//

வாங்க வாங்க.. of course... life is a journey not a destination.. btw... how was your trip... ellaam nallaa pochchaa...

மணிப்பக்கம் said...

// //மணிப்பக்கம் said...

வாழ்த்துக்கள் பிரியா!

(எல்லாவற்றையும் உடனே படித்துவிடுவேன், பின்னூட்டம்தான் அப்பப்ப... ;) )//

ஓஹோ... இருங்க இதுவரை போட்ட இடுகைல இருந்து சில கேள்விகள் கேட்டு... இதை உறுதிப் படுத்திக்கறேன்... ஹிஹி... :p ///

- No problem பிரியா, கவிதை இடுகையிலேர்ந்துன்னா, கொஞ்சம் பேஜாரா போயிடும், பாத்து .. ஹி .. ஹி ! ;)

கலகலப்ரியா said...

//மணிப்பக்கம் said...

// //மணிப்பக்கம் said...

வாழ்த்துக்கள் பிரியா!

(எல்லாவற்றையும் உடனே படித்துவிடுவேன், பின்னூட்டம்தான் அப்பப்ப... ;) )//

ஓஹோ... இருங்க இதுவரை போட்ட இடுகைல இருந்து சில கேள்விகள் கேட்டு... இதை உறுதிப் படுத்திக்கறேன்... ஹிஹி... :p ///

- No problem பிரியா, கவிதை இடுகையிலேர்ந்துன்னா, கொஞ்சம் பேஜாரா போயிடும், பாத்து .. ஹி .. ஹி ! ;)//

சரி சரி... இப்போ நம்பறேன்... நீங்க தினமும் இடுகை மற்றும் பின்னூட்டத்த பார்க்கறீங்கன்னு... =))

நர்சிம் said...

வாழ்த்துக்கள் ப்ரியா.

நிறைய எழுதுங்கள்.

கலகலப்ரியா said...

//நர்சிம் said...

வாழ்த்துக்கள் ப்ரியா.

நிறைய எழுதுங்கள்.//

நன்றி நர்சிம்..!

அன்புடன் அருணா said...

நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் பூங்கொத்துக்களுடன்!

ஜோதிஜி said...

எழுத வேண்டும்

பா.ராஜாராம் said...

வானம்பாடி சார் நன்றிகள்!

லக,லக ப்ரியா-உங்களால் முடியும்-200!

அப்புறம் நூறுக்கு போய் எதுக்கு வாழ்த்த?இருநூறில் அவசியம்..அட நம்புங்க.

நம்பிக்கைதானே வாழ்க்கை!வலிமையும்!!

கலகலப்ரியா said...

நன்றி அருணா...

நன்றி ஜோதிஜி...

நன்றி பா ரா... ஆமாங்க... இருநூறுக்கு வாழ்த்துவீங்கன்னு நம்பறேன்... இடைல 99 இடுகை மிஸ் பண்ணிடுவீங்கன்னும் தெரியுது... =))

ஆ.ஞானசேகரன் said...

வாழ்த்துகள் ப்ரியா...

கலகலப்ரியா said...

nanri gnanasekaran..

பூங்குன்றன்.வே said...

வாழ்த்துகள் பிரியா !!!

கலகலப்ரியா said...

//பூங்குன்றன் வேதநாயகம் said...

வாழ்த்துகள் பிரியா !!!//

நன்றி பூங்குன்றன்..!