header photo

Friday, November 27, 2009

கலங்கரை விளக்கொரு காவதம் கோடியா..?!

Part 1
Part 2
Part 3
Part 4

Part 5
Part 6
Part 7

Part 8
Part 9
Part 10
Part 11
Part 12


இரைப்பையில் இன்னமும் இருந்து கொண்டிருந்த ஐஸ் கிரீம்... இடைச்சிறுகுடல் தாண்டிக் கொண்டிருந்த இடியப்பம் ஆகியவற்றை தொண்டையை நோக்கி இழுத்து... வாய் வழியாக வெளியேற்ற வழி செய்து கொண்டிருந்த மெதனோல் நெடியுடன்... இன்ன பிற இரசாயன நெடிகள்...

கையில் கைக்குட்டை வைத்து மூக்கை அழுத்தியபடி நான்... யாழ் பல்கலைக்கழக... மருத்துவபீடத்தின்... பரிசோதனைக்கூடத்தில்.. கண்ணாடிக் குவளைகளில்... சுருண்டிருந்த... பலவிதப் பாம்புகள்... பல்லிகள்.. தவளைகள்... ஓட்டை விழுந்த... மற்றும் விழாத இதயங்கள்... புகையைச் சுவாசித்து... கார்பனால் நிறைந்து கறுத்திருந்த நுரையீரல்கள்... நல்ல காற்றைச் சுவாசித்த நுரையீரல்கள்.. வேலை நிறுத்தம் செய்து.. டயாலிசிஸ் டெக்னாலஜி கண்டு பிடிக்க உதவிய சிறுநீரகங்கள்... சாதாரண சிறுநீரகங்கள்... ஆல்கஹோல் ஈரல்... முழு ஈரல்.. மண்ணீரல்... மண்புழு... இவற்றுடன்...

ஒரு மாதமான மனிதக் கரு.... தொப்புட்கொடியுடன் சுருண்டிருந்த... குறை மாதத்தில் இறந்து பிறந்த குழந்தை...! அவற்றுக்கெல்லாம் நடுவில்... சரணாலயத்தில்... அழகாக அமைக்கப்பட்ட நீர்த்தாரை போன்று... கண்ணாடிப் பெட்டியில்... எனக்குப் பதினெட்டு வயதாக முன்னரே நான் பார்த்த ஒரு முழு ஆணின் நிர்வாண உடல்...! மூக்கைப் பொத்தியபடி திரும்ப... "திலீபன்" என்ற சொல் காதில் அறைந்து... மீண்டும் பெட்டியை நோக்கித் திரும்ப வைத்தது...!

தோல் ரோஸ் நிறத்தில் வெளிறியிருக்க... போஸ்டர்களில் பார்த்த அதே அமைதியுடன்... பார்த்தீபன் என்று அழைக்கப்பட்ட... முன்னாள் மருத்துவபீட மாணவன்... உடலையும்... உயிரையும்... தமிழுக்கு அர்ப்பணித்த... தியாகம்... திலீபன்... அஹிம்சை... அமிலத்தில் மிதந்து கொண்டிருந்தது...! இல்லை..! அகிம்சையைக் கொன்று அமிலத்தில் மிதக்க விட்டிருந்தார்கள்..!

எது ஹிம்சை..? எது அஹிம்சை..? ஒருவனைக் கொல்வது ஹிம்சை..? 'உன்னைக் கொல்ல வந்த பசுவையும் கொல்' என்று... தன்னைக் கொல்லவரும்.. கொடும்பாவியை எரித்தல் ஹிம்சையா..?

உன் வீடு புகுந்து.. உன் தாயின் சேலையுருவும் ஒரு புல்லுருவியை வேடிக்கை பார்ப்பது அஹிம்சையா..? அதே சேலையில் அவளைத் தூக்கிலிடுவதைப் பார்த்துக் கொண்டிருப்பது அஹிம்சையா..? அவள் சேலையில் கண் படமுன்... கண்ணை நோண்டுதல் ஹிம்சையா..? இதுதான் தீவிரமான வாதமா..? பக்கவாதத்தில் படுத்திருப்பவன்போல்.... கையாலாகாதிருப்பதுதான் அஹிம்சையா..?

திலீபன்... ஒரு பானைச் சோற்றுப் பதம்..! அஹிம்சாவழி போற்றப்பட்டிருப்பின்... தீவிரவாதம் வழியல்ல என்று தவளையாகக் கத்திக் கொண்டிருப்பவர்களின் கூற்று மெய்ப்பட்டிருக்க வேண்டுமெனில்... திலீபன் அமிலத்தில் மிதந்து கொண்டிருப்பதற்குப் பதில்... அமிலத்தைக் கையில் வைத்து... பல காயங்களைத் துடைத்துக் கொண்டிருந்திருப்பான்.. இருந்திருக்க வேண்டும்! கல்லறைக் குழிகளில் கனவு கண்டுகொண்டிருப்பவர்களின் கனவு மெய்ப்பட்டிருக்கும்... அவர்கள் கனவுகளில் மட்டுமன்றி... நனவுகளிலும் உலவிக் கொண்டிருந்திருப்பர்...!

உப்பென்றும் சீனியென்றும்
உள்நாட்டுச் சேலை என்றும்
செப்பித் திரிவாரடி கிளியே
செய்வதறியாரடி...

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி
வஞ்சனை சொல்வாரடி கிளியெ
வாய்ச் சொல்லில் வீரரடி..!

(இறந்த திதியில் மட்டும் தாயினை நினைப்பவள் நானல்ல..! கண்ணினை நனைக்கும்... பல ஞாபகத் துளிகளில்... இதுவும் ஒரு...°)


(தொடரும்..)

33 ஊக்கம்::

vasu balaji said...

/இல்லை..! அகிம்சையைக் கொன்று அமிலத்தில் மிதக்க விட்டிருந்தார்கள்..!/

அம்மாடி! எப்புடி எழுதுற!

/எது ஹிம்சை..? எது அஹிம்சை..? ஒருவனைக் கொல்வது ஹிம்சை..? 'உன்னைக் கொல்ல வந்த பசுவையும் கொல்' என்று... தன்னைக் கொல்லவரும்.. கொடும்பாவியை எரித்தல் ஹிம்சையா..?/

தனக்கு வராதவரை மட்டுமே ஹிம்சை.

/உன் வீடு புகுந்து.. உன் தாயின் சேலையுருவும் ஒரு புல்லுருவியை வேடிக்கை பார்ப்பது அஹிம்சையா..? அதே சேலையில் அவளைத் தூக்கிலிடுவதைப் பார்த்துக் கொண்டிருப்பது அஹிம்சையா..? அவள் சேலையில் கண் படமுன்... கண்ணை நோண்டுதல் ஹிம்சையா..? இதுதான் தீவிரமான வாதமா..? பக்கவாதத்தில் படுத்திருப்பவன்போல்.... கையாலாகதிருப்பதுதான் அஹிம்சையா..?/

புத்தனே, காந்தியே இருந்தாலும் வரிக்கு வரி இல்லையம்மான்னு சொல்லுவார்கள்.

/திலீபன்... ஒரு பானைச் சோற்றுப் பதம்..! அஹிம்சாவழி போற்றப்பட்டிருப்பின்... தீவிரவாதம் வழியல்ல என்று தவளையாகக் கத்திக் கொண்டிருப்பவர்களின் கூற்று மெய்ப்பட்டிருக்க வேண்டுமெனில்... திலீபன் அமிலத்தில் மிதந்து கொண்டிருப்பதற்குப் பதில்... அமிலத்தைக் கையில் வைத்து... பல காயங்களைத் துடைத்துக் கொண்டிருந்திருப்பான்..!/

அத யாருமே பேசுறதில்லை! பேசாட்டியும் பரவாயில்லை. இதைத் தவிர்த்து அடுத்த கட்டம் பற்றித் திரித்துக் கூறுவதுதான் இங்கு நடக்கிறது.

/நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி
வஞ்சனை சொல்வாரடி கிளியெ
வாய்ச் சொல்லில் வீரரடி..!/

பாரதி தீர்க்கதரிசி!

/(இறந்த திதியில் மட்டும் தாயினை நினைப்பவள் நானல்ல..! கண்ணினை நனைக்கும்... பல ஞாபகத் துளிகளில்... இதுவும் ஒரு...°)
/

எப்படியாயினும் சிறந்த அஞ்சலி.
நன்றி நினைவூட்டியமைக்கு.

Unknown said...

பொங்கி வரும் கண்ணீரை அடக்க முடியவில்லை.. காந்தி இருந்திருந்தாலும் துப்பாக்கியை எடுத்துத்தான் கொடுத்திருப்பார், ஒரு உயிரின் பெயரைச் சொல்லி ஒரு இனத்தையே அழிக்கத்துணியும் இன்றைய ”காந்திகள்” போலல்லாமல்.

அன்பேசிவம் said...

நெஞ்சில் உரமுமின்றி
நேர்மைத் திறமுமின்றி
வஞ்சனை சொல்வாரடி கிளியே
வாய்ச் சொல்லில் வீரரடி..!

பாரதியின் அர்த்தம் பொதிந்த வார்த்தைகளை இலகுவாக பயன்ப்டுத்தியிருக்கிறீர்கள். வார்த்தகளின் வீரியம் கட்டுரையையாய்.

நல்லா எழுதியிருக்கிங்கன்னு சொன்னா அது தப்பாயிடுமேன்னு பயமா இருக்கு ப்ரியா... :-(

புலவன் புலிகேசி said...

//உன் வீடு புகுந்து.. உன் தாயின் சேலையுருவும் ஒரு புல்லுருவியை வேடிக்கை பார்ப்பது அஹிம்சையா..? அதே சேலையில் அவளைத் தூக்கிலிடுவதைப் பார்த்துக் கொண்டிருப்பது அஹிம்சையா..? //

அப்படியிருப்பது அஹிம்சை அல்ல கையாலாகாத தனம்


//அவள் சேலையில் கண் படமுன்... கண்ணை நோண்டுதல் ஹிம்சையா..? இதுதான் தீவிரமான வாதமா..? பக்கவாதத்தில் படுத்திருப்பவன்போல்.... கையாலாகாதிருப்பதுதான் அஹிம்சையா..?//

இது போன்ற இடங்களில் அஹிம்சை பெசுபவன் உண்மையில் ஒரு முட்டாள்...

வெண்ணிற இரவுகள்....! said...

//உன் வீடு புகுந்து.. உன் தாயின் சேலையுருவும் ஒரு புல்லுருவியை வேடிக்கை பார்ப்பது அஹிம்சையா..? அதே சேலையில் அவளைத் தூக்கிலிடுவதைப் பார்த்துக் கொண்டிருப்பது அஹிம்சையா..? அவள் சேலையில் கண் படமுன்... கண்ணை நோண்டுதல் ஹிம்சையா..? இதுதான் தீவிரமான வாதமா..? பக்கவாதத்தில் படுத்திருப்பவன்போல்.... கையாலாகாதிருப்பதுதான் அஹிம்சையா..?
//
தங்கச்சி அகிம்சை எல்லாம் வேலைக்கு ஆகாது .....கடைசி தமிழன் சாகிற வரைக்கும் போராட்டம் தான் ..........திலிபன் அஹிமிசையான பாதை தான் என்ன செய்ய முடிஞ்சது

சூர்யா ௧ண்ணன் said...

தமிழர் மீதான வதை முகாம் கொடுமைகளும், அச்சுறுத்தல்களும், கடத்தல்களும், படு கொலைகளும், காணாமல் ஆக்குதல்களும் முன்னரை விடவும் பலமான எதிர்வினைகளை உருவாக்கியே தீரும். அந்த எதிர்வினை, ஈழத் தமிழர்களை மட்டுமல்ல, உலகில் வாழும் எல்லாத் தமிழர்களையும் ஒன்றிணைக்கும். அந்த மாபெரும் தமிழர் எழுச்சி ஈழத் தமிழர்களை வெகு விரைவில் விடுவிக்கும். அதுவே விடுதலைப் புலிகளின் தியாகத்திற்கு உலகத் தமிழினம் வழங்கும் கவுரவமாக அமையும்.

நர்சிம் said...

நல்லா எழுதி இருக்கீங்க.. விமர்சனம் இங்கே சொல்லலாமா..மடலிலா?

ஈ ரா said...

..(

தன் உயிரை உணவு மறுத்து விடுவது எளிதானதல்ல.. "அக இம்சை"ப் படுத்தி உயிர்நீத்த துணிவை நினைக்கையில் நெஞ்சம் கனக்கிறது..நினைவு படுத்தும்..படுத்தும் உங்கள் பதிவு..

என் பின்னூட்டதிற்கு தயவு செய்து நன்றி சொல்லிவிடாதீர்கள்..

ஈரோடு கதிர் said...

//அகிம்சையைக் கொன்று அமிலத்தில் மிதக்க விட்டிருந்தார்கள்..!//

மனதை கலங்கடிக்கும் வரிகள்...

கலகலப்ரியா said...

நன்றி வானம்பாடி...

நன்றி முகிலன்...

நன்றி முரளி... புரியுது...

நன்றி புலிகேசி...

நன்றி வெண்ணிற...

நன்றி சூர்யா..

நன்றி நர்சிம்.. என்ன மடல்..?

நன்றி சொல்லல ஈ..ரா...

கலகலப்ரியா said...

நன்றி கதிர்...

V.N.Thangamani said...

அனுபவித்தவற்கே தெரியும் வலி.
நெஞ்சை உருக்கும் வரிகள்.
ஆமாம் என்ன மறுபடியும் இருட்டுக்கு வந்துட்டீங்க.
இருட்டின் இரகசியம் தான் என்ன.

தமிழ் உதயம் said...

(இறந்த திதியில் மட்டும் தாயினை நினைப்பவள் நானல்ல..! கண்ணினை நனைக்கும்... பல ஞாபகத் துளிகளில்... இதுவும் ஒரு...°)

எத்தனை எத்தனை மரணங்கள். எத்தனை எத்தனை வேதனைகள். உலகத்தின் கண்கள் குருடாகத்தான் போனது. உலகத்தின் காதுகள் செவிடாகப் போனது. மிருகங்கள் கூட அழும் எம் துயரம் பார்த்து. மானிடா நீ சிரிக்கிறாய். எமையே குற்றம் சொல்கிறாய.

க.பாலாசி said...

//இல்லை..! அகிம்சையைக் கொன்று அமிலத்தில் மிதக்க விட்டிருந்தார்கள்..!//

unnmai....(tamil fond work aagala)
nalla ezhuthiyirukinga..

ப்ரியமுடன் வசந்த் said...

//உப்பென்றும் சீனியென்றும்
உள்நாட்டுச் சேலை என்றும்
செப்பித் திரிவாரடி கிளியே
செய்வதறியாரடி...

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி
வஞ்சனை சொல்வாரடி கிளியெ
வாய்ச் சொல்லில் வீரரடி..!//

எல்லா போஸ்ட்லயும் செவுட்டுல அடிக்கிறியேக்கா...

Unknown said...

படிக்கும் போதே புல்லரித்து விட்டது... வீழ்ந்தவர்கள் எழுவார்கள்...புதைக்க பட்டவர்கள் இல்லை இல்லை விதிக்கப்பட்டவர்கள் விளைந்து வருவார்கள்...

இராகவன் நைஜிரியா said...

ஒவ்வொரு இடுகை வரும் போது அடிவயறு கலங்குது. எவ்வளவு வேதனைகள், கொடுமைகள்.. அப்பப்பா தாங்கமுடியலடா சாமி..

நேசமித்ரன் said...

கதற கதற கழுத்தறுபடும் பிராய்லர் கோழியாய்
ஒரு குரல் ஒலிக்கிறது இறப்பதற்கென்றே வளர்க்கப் பட்டவர்கள் போல ....

வலி நிறைந்த எழுத்து

ஸ்ரீ.கிருஷ்ணா said...

Power full words அருமையா இருக்கிறது அக்கா . இப்போது தான் முதல் முறை வந்தேன் உங்கள் தளத்திற்கு
மற்ற பகுதிகளை படிக்கும் ஆர்வம் வந்துவிட்டது ..

கலகலப்ரியா said...

நன்றி தங்கமணி.. (தெரியலீங்க... ஏன் உங்களுக்கு இருட்டா வருதுன்னு... )

நன்றி தமிழ் உதயம்...

நன்றி பாலாசி...

நன்றி வசந்த்...

நன்றி பேனா...

நன்றி ராகவன்...

நன்றி நேசமித்திரன்... (ஆமாம்.. இதுதான் சொல்லிக் கொண்டிருப்பேன்... பாவம் செய்தவர்களுக்கான நரகத் தீவு போலும்...)

நன்றி கிருஷ்ணா...

அது சரி(18185106603874041862) said...

//
திலீபன்... ஒரு பானைச் சோற்றுப் பதம்..! அஹிம்சாவழி போற்றப்பட்டிருப்பின்... தீவிரவாதம் வழியல்ல என்று தவளையாகக் கத்திக் கொண்டிருப்பவர்களின் கூற்று மெய்ப்பட்டிருக்க வேண்டுமெனில்... திலீபன் அமிலத்தில் மிதந்து கொண்டிருப்பதற்குப் பதில்... அமிலத்தைக் கையில் வைத்து... பல காயங்களைத் துடைத்துக் கொண்டிருந்திருப்பான்..
//

உண்மை ப்ரியா...

தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தும் திருட்டு அரசியல்வியாதிகள் அதற்கு முன் நடந்ததையும், ஆயுதம் தூக்க வேண்டிய சூழ்நிலையையும் மிக வசதியாக மறைத்து விட்டார்கள்...

புலிகள் தீவிரவாதிகள், தீவிரவாதத்தை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்று கூக்குரலிடும் இந்திய தவளைகள் காஷ்மீரில் ராணுவத்தை நிறுத்தி இருப்பது ஏன்? ஏன் அங்கு இவர்கள் சொல்லும் அஹிம்சை முறையில் போராட முடியாதா??

காந்திய வழியில் நடக்கும் நாடு என்று அறிக்கை விடும் வேஷ்டி கிழிப்பு கோஷ்டிகள் நக்சலைட்டுகளை வேட்டையாட ஏன் படை அனுப்ப வேண்டும்?? ஏதேனும் ஒரு (போலி) காந்தி சாகும் வரை உண்ணாவிரதம் ஆரம்பித்தால் என்ன?

நெஞ்சில் உரமுமின்றி, நேர்மை திறமுமின்றி வெற்றுக் கூச்சலிடும் தவளைகளை நம்பினோர் மிக நிச்சயம் கைவிடப்படுவார்...இது உலகுக்கு கிடைக்கும் நீதி...

அது சரி(18185106603874041862) said...

//
நேசமித்ரன் said...
கதற கதற கழுத்தறுபடும் பிராய்லர் கோழியாய்
ஒரு குரல் ஒலிக்கிறது இறப்பதற்கென்றே வளர்க்கப் பட்டவர்கள் போல ....

வலி நிறைந்த எழுத்து

//

நேசமித்ரன்,

உங்களுக்கு ஒரு சல்யூட்....மிகச் சரியான சொல்லி விட்டீர்கள்...

உண்மை...இந்தியா ஈழ விடுதலை இயக்கங்களை ப்ராய்லர் கோழிகளாகத் தான் பாவித்தது/பாவிக்கிறது...

அது சரி(18185106603874041862) said...

கடுமையான வேலைப்பளு காரணமாக உங்கள் இடுகைகளை தொடர்ந்து படித்தாலும் பின்னூட்டம் போட முடியவில்லை...இனி தொடரும்...:0))))

சந்தான சங்கர் said...

அஹிம்சை... அமிலத்தில் மிதந்து கொண்டிருந்தது...! இல்லை..! அகிம்சையைக் கொன்று அமிலத்தில் மிதக்க விட்டிருந்தார்கள்..!//

ஆயுதம்கூட
நிராயுதமாய் தாக்குகிறது
நிராயுதன்
ஆயிரம் ஆயுதமாகிறான்
அஹிம்சை
ஹிம்சிக்கப்ப்படும்போது..


நன்றி..

சந்தான சங்கர்.

குடுகுடுப்பை said...

கலகப்பிரியா உன் எழுத்து வெறும் எழுத்தாக மற்றும் நிற்காமல், செல்லவேண்டிய இடம் என்று நீ நினைக்கும் இடமெங்கும் செல்லவேண்டும்.

இவ்வளவு உயிரிழப்பிற்கும் கிடைக்கவேண்டிய நீதியையும் போராடித்தான் பெறவேண்டும், அதற்கு உன் எழுத்தும் துணையாகட்டும்.

கலகலப்ரியா said...

நன்றி அது சரி... சரியான கேள்வி..! நாக்க புடுங்கிக்கிக்கிற மாதிரி கேட்டாலும் உறைக்குதா... (இனி தொடரும்...:0)))) < வாக்குறுதியா..=)))

நன்றி சந்தான சங்கர்.. நல்லா இருக்குங்க...

நன்றி குடுகுடுப்பை.. நிமிர்ந்து உட்கார வைக்கும் வார்த்தைகள்...

துபாய் ராஜா said...

திலீபன் நான் மிக மதிக்கும் இனிய தமிழன்.இந்த உலகில் உயிரையே ஆயுதமாக கொண்டு அகிம்சையாக போராடியவர்களில் உன்னதமானவன்.
அவன் உடலை தரிசித்த நீங்கள் பெரும்பாக்கியம் செய்துள்ளீர்கள்.

உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் ஈனத் தலைவர்கள் எல்லாம் இந்த உணர்வாளனை பற்றி உண்மையாக அறிந்தால்,புரிந்தால் உண்ணாவிரதம் என்ற வார்த்தையை உச்சரிக்க மாட்டார்கள்.

பூபதித்தாயை பற்றியும் எழுதுங்கள் ப்ரியா...

கலகலப்ரியா said...

நன்றி ராஜா... ம்ம்.. சரி...

அன்புடன் அருணா said...

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி
வஞ்சனை சொல்வாரடி கிளியெ
வாய்ச் சொல்லில் வீரரடி..!

கலகலப்ரியா said...

ஈஸியா வேலைய முடிச்சிட்டீங்க... நன்றி அருணா...

balavasakan said...

யாழ்ப்பாணம் சுகம் ஆனால் ...அந்த சுகத்திற்குள் இருக்கும் சோகத்தை என்னவென்று சொல்ல....அக்கா உங்கள் எழுத்துக்கள் ஈட்டிய்யாய் நெஞ்சில் சொருகுகின்றன ....வார்த்தைகள் இல்லை

கலகலப்ரியா said...

//Balavasakan said...

யாழ்ப்பாணம் சுகம் ஆனால் ...அந்த சுகத்திற்குள் இருக்கும் சோகத்தை என்னவென்று சொல்ல....அக்கா உங்கள் எழுத்துக்கள் ஈட்டிய்யாய் நெஞ்சில் சொருகுகின்றன ....வார்த்தைகள் இல்லை//

நன்றிப்பா..! :)... நமக்கு விதித்தது...! வேற என்ன சொல்ல முடியும்..

ஆ.ஞானசேகரன் said...

//உன் வீடு புகுந்து.. உன் தாயின் சேலையுருவும் ஒரு புல்லுருவியை வேடிக்கை பார்ப்பது அஹிம்சையா..? அதே சேலையில் அவளைத் தூக்கிலிடுவதைப் பார்த்துக் கொண்டிருப்பது அஹிம்சையா..? அவள் சேலையில் கண் படமுன்... கண்ணை நோண்டுதல் ஹிம்சையா..? இதுதான் தீவிரமான வாதமா..? பக்கவாதத்தில் படுத்திருப்பவன்போல்.... கையாலாகாதிருப்பதுதான் அஹிம்சையா..?//


சரியான கேள்விகள் ப்ரியா,...
அது உங்களால்தான் முடியும்..