header photo

Tuesday, January 12, 2010

காமரோனும்.. அவதாரும்...நடுவே நாமும்...



ம்ம்... இல்ல... வேண்டாம்.. பார்க்கலாம்.. வேண்டாம்.. ம்ம்.. ஊஹும் (பூ... இதழ் எல்லாம் வச்சுக்கலை..) பதினெட்டாவது தடவையா யோசித்து... பார்க்கலாம்னு முடிவெடுத்த படம் அவதார். சயன்ஸ் ஃபிக்ஷன்னாலே காத தூரம் ஓடுற என்னை.. ஜேம்ஸ் காமரோனுடன் இன்னும் எதுவோ சேர்ந்து இழுத்துக் கொண்டே இருந்தது. ஸ்னோவில் கால் புதையப் புதைய காட்டுக்குள் வாக்கிங் போகலாமென்று அழைத்த என்னோட பாலிவுட் ரசிகத் தோழியை தற்காலிகமாகத் திசைதிருப்ப அப்போதைக்கு கிடைத்த ஒரே வழி அவதார் மட்டுமே.

நெட்ல எல்லாம் புக் பண்ணத் தோணலை... அதுதான் ரொம்பப் பழசாப் போன படமாச்சேன்னு.. கைய வீசிக்கிட்டு.. படம் தொடங்க முக்கால் மணி நேரம் முன்னாடிப் போய் க்யூவில் நின்றோம். என்ன இவ்ளோ ஜனங்க? என்ற கேள்விக்கு... "ஆல்வின் அண்ட் த சிப்மங்க்ஸ்" பார்க்க வந்திருப்பாங்கன்னு சமாதானம் சொன்னேன்.

எங்கள் முறை வந்தபோது இரண்டே இரண்டு சீட் தான் இருக்கு.. அதுவும் முன் வரிசைலன்னான். எனக்கு அப்பவே லேசா தலைய சுத்திச்சு. பின் வரிசைல நாலாவது வரிசை தாண்டி முன்னாடி போனதில்லை... (நிறைய டிவிடி + யூ ட்யூப் புண்ணியம்..). சரி இதுவாவது கிடைச்சதே, பெரிய புண்ணியம்ன்னு..  முப்பாரிமாணக் கண்ணாடி சகிதம் களத்தில் இறங்கினோம்.

சீட்டில் உட்கார்ந்ததும் காலை நல்லா நீட்டி உட்கார்ந்த பாலிவுட்டிடமிருந்து.. "முன் சீட்ல இது ஒரு வசதி"ன்னு ஒரு ஆப்டிமிஸ்டிக் காமென்ட் வந்தது. ம்க்கும்னு முனகிக்கிட்டே 3D கண்ணாடிய விளம்பரத்துக்கும் மாட்டிக்கணுமான்னு யோசிச்சுக்கிட்டு இருக்கிறப்பவே, தலையைப் பின்னாடி சாய்த்துக் கொண்டு... "இப்டி சாய்ஞ்சுக்கிட்டே பார்க்கலாம்" என்று ரெண்டாவது காமென்ட் வந்தது. விளம்பரம் முடியுறதுக்குள்ளேயே எனக்கு பின் கழுத்து சுளுக்கிக்கொண்டு விட்டது.



ஒரு வழியா படம் ஆரம்பிச்சது... கண்ணில 3D மாட்டிக்கொண்டு நிமிர்ந்து உட்கார்ந்தேன். பிடித்தது சனியன்... தலை கிர்ர்ர்ர் என்று எங்கேயோ போனது. முப்பரிமாண எஃபெக்ட்டா அல்லது சீட் எஃபெக்ட்டா.. ஜேம்ஸ் காமரோனின் மூழ்கிப்போன டைட்டானிக் எஃபெக்ட்டா தெரியல. இப்போதானே ஆரம்பிச்சிருக்கு, முடியுற வரைக்கும் எப்படித் தாக்குப் பிடிக்க போறோம்னு புரியல. பாதில முடியல ஸாரின்னு சொல்லிட்டு போக வழியில்லாம, இரண்டு வாரம் முன்னாடிப் பார்த்த 2012 இல்... படம் முடிய முன்னாடி எழுந்து போன இரண்டு பேரைப் பார்த்து சிரித்த என் பாழாப் போன சிரிப்பு என்னைப் பார்த்து கை கொட்டிச் சிரித்தது.

சமாளிப்போம்னு... கண் மூடியபடி கொஞ்சம்.. பாதிக் கண் மூடியபடி கொஞ்சம்.. ஒற்றைக் கண் (நெற்றிக்கண் இல்லப்பா) திறந்தபடி கொஞ்சம்.. முழுக்கண்ணும் திறந்தபடி கொஞ்சம்.. 3D கண்ணாடி கழற்றிக் கொஞ்சம்.. என்று இடைவேளை வரை பார்த்து/கேட்டு சமாளித்தாயிற்று. அலுவலகத்தின் மூன்றாவது மாடியில் நாலு அடி பின்னால் நின்று மிக மிக ஜாக்கிரதையாக யன்னல் வழி தெரியும் காட்சிகளை வேடிக்கை பார்க்கும் எனக்கு விதி "பண்டோரா" அவதாரத்தில் வந்தது. பேசாம ஷில்ட்ஹோர்ன் மூவிங் ரெஸ்டாரன்டுக்கே போயிருக்கலாம் என்று மனதுக்குள் புலம்பிக் கொண்டேன்.

இடைவேளையின் அருமை தெரிந்தது அன்றைக்குத்தான். நேரா பாத்ரூமுக்கு ஓடி குளிர்தண்ணீர் வாரி முகத்தில் இறைத்துக் கொண்டு வெளியில் வந்து ஒரு கோலா வாங்கி சாப்ட்டு தெம்பா உள்ளே சென்றேன்.

அப்புறம் ஏனோ எனக்குத் தலை சுற்றல் நின்று விட்டிருந்தது. கழுத்துச் சுளுக்கு போன இடம் தெரியவில்லை. அவதார் உருவங்கள் எல்லாம் நிஜமாக மாறிப் போயின. அவர்களின் வால்கள் மறைந்து விட்டிருந்தன, அவர்கள் கண்களில் தெரிந்த உணர்ச்சிகள் என் கண்ணிலும் தொற்றிக் கொண்டன. பக்கத்திலிருந்தவள் பக்கம் சரிந்து  "இது எங்கள் கதை".. என்று சொன்னேன். ஆமோதிப்பாய் தலையசைத்தாள். அதன் பின்... சில மாதங்களுக்கு முன்... நான் அங்கிருக்க வேண்டுமென்று ஏங்கிய... என் தேசத்தில்.. அவதாரங்களுடன் அவதாரமாக...


இராட்சத ஹெலிகாப்ட்டர்களின் சத்தங்களுக்கு மத்தியில்... எரி குண்டுகளுக்கு நடுவே... ஜேம்ஸ் காமரோனின் நீர்நாரையின் அவதாரமான tetrapteron - இல் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தேன்... தாய்க்குத் தாயான தாய்மண் போல்... மரம் விழுந்தபோது விழுந்தேன்... அவதாரங்கள் சிதறியபோது சிதறினேன்... கதறிய போது கதறினேன்... நெற்றிக்கு நேர் குழல் துப்பாக்கி நீட்டிச் சுட்ட போது... நெற்றியில் உள்வாங்கினேன்... ஐ டிசர்வ் இட் என்று சொல்லிக் கொண்டேன்..  தீயின் கொடு வெப்பம் உணர்ந்தேன்...

வெறுமை... கொடுமை... வீரம்.. துரோகம்... துளியாக ஆதரவு... காற்றிலாடும் அந்தத் தூய ஆத்மாக்களான ஜெல்லிகளில் ஆத்மா பறப்பது போன்றும்... அதே சமயம் நீரில் வாழும் ஜெல்லிகளின் விஷத்தன்மை உணர்வது போன்றும்... மாற்றி மாற்றி அலைக்கழித்தது...



கடைசியில்... ஒற்றுமையின் சக்தியை உணர வைத்தார்கள்... தோளுடன் தோளணைத்து நின்றால்.. போன உயிரைக் கூடக் கொண்டுவர முடியும் போலும்... ஆனால் அது பண்டோராவில் மட்டும் சாத்தியமான ஒன்று... பூமியில் நடக்கச் சாத்தியக் கூறுகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை..

திரும்பி வரும்போது... "இவர்களுக்கு உதவுவதற்கு சில பேர் வந்தார்கள்... ஆனால் உங்களுக்கு..?" என்று என் தோழி கேட்டபோது... மெளனமாக வெற்றுப் புன்னகை ஒன்றை மட்டுமே.. பதிலாக அளிக்க முடிந்தது..!

107 ஊக்கம்::

கலகலப்ரியா said...

பாதித் தூக்கத்ல இப்டித்தான் எழுத முடியுது... mm.. better luck next time... :(

vasu balaji said...

/அதுவும் முன் வரிசைலன்னான். /

ஐ. வீனஸ் தியேட்டர்ல 36 பைசா டிக்கட்டு.

/கடைசியில்... ஒற்றுமையின் சக்தியை உணர வைத்தார்கள்... தோளுடன் தோளணைத்து நின்றால்.. போன உயிரைக் கூடக் கொண்டுவர முடியும் போலும்... ஆனால் அது பண்டோராவில் மட்டும் சாத்தியமான ஒன்று... பூமியில் நடக்கச் சாத்தியக் கூறுகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை../

இது யதார்த்தம்

/திரும்பி வரும்போது... "இவர்களுக்கு உதவுவதற்கு சில பேர் வந்தார்கள்... ஆனால் உங்களுக்கு..?" என்று என் தோழி கேட்டபோது... மெளனமாக வெற்றுப் புன்னகை ஒன்றை மட்டுமே.. பதிலாக அளிக்க முடிந்தது..!/

வேற ஒன்னும் பண்ண முடியாது

அவதார் பட விமரிசனம் விட இந்த யதார்த்த விமரிசனம் உறைக்குது.

நசரேயன் said...

//பூமியில் நடக்கச் சாத்தியக் கூறுகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.. //

உண்மை

நசரேயன் said...

கடைசி வரைக்கும் படத்தை பத்தி சொல்லவே இல்லை

Anonymous said...

கலகலப்பா ஆரம்பிச்சு கடைசீல இப்படி முடிச்சிட்டீங்களே

குடுகுடுப்பை said...

திரும்பி வரும்போது... "இவர்களுக்கு உதவுவதற்கு சில பேர் வந்தார்கள்... ஆனால் உங்களுக்கு..?" என்று என் தோழி கேட்டபோது... மெளனமாக வெற்றுப் புன்னகை ஒன்றை மட்டுமே.. பதிலாக அளிக்க முடிந்தது..!//

உங்களால் மட்டுமே முடியும்.

அது சரி(18185106603874041862) said...

//
சயன்ஸ் ஃபிக்ஷன்னாலே காத தூரம் ஓடுற என்னை..
//

Same blood here...I'm so allergic to sci-fi. Haven't seen Avatar yet, dont think I will.

அது சரி(18185106603874041862) said...

//
திரும்பி வரும்போது... "இவர்களுக்கு உதவுவதற்கு சில பேர் வந்தார்கள்... ஆனால் உங்களுக்கு..?" என்று என் தோழி கேட்டபோது... மெளனமாக வெற்றுப் புன்னகை ஒன்றை மட்டுமே.. பதிலாக அளிக்க முடிந்தது..!
//

mmm...That's the reality...

Unknown said...

Super akka....
Yours comments are nice

Unknown said...

Super akka....
Your comments are nice

Unknown said...

Super akka....
Your comments are nice

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

எனக்கும் படம் பிடித்திருந்தது.. அதன் கான்செப்ட் க்காகவும் உருவாக்கத்துக்காகவும்.. நான் பொதுவாக பழங்குடிகளை நினைத்துக் கொண்டேன்.. சரி தான்.. பண்டோராவில் மட்டுந்தான் எல்லாக் கூட்டமும் ஒன்று சேர்ந்து எதிர்ப்பார்கள்.. பூமியில் இந்தப் பக்கம் பாதி அந்தப் பக்கம் மீதி தான்..

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

சொல்ல மறந்துட்டேன்.. பிடிச்ச இன்னொரு விஷயம் - படம் கொடுத்த பாஸிடிவ் ஃபீலிங்க் :))) பண்டோரா லயாவது ஜெயிக்கறாங்கன்னு தான்.. :))

சைவகொத்துப்பரோட்டா said...

அவதாருடன் சேர்த்து ஒரு இனத்தின் வலியையும் பதிவு செய்து விட்டீர்கள்.

புலவன் புலிகேசி said...

ப்ரியா வித்தியாசமான விமர்சனம் என்றாலும், ஈழக்கவலை எங்கு சென்றாலும் மனதை விட்டு நீங்காமல் உங்களிடம்.

புலவன் புலிகேசி said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

நட்புடன் ஜமால் said...

பாதி தூக்கத்துலேயே இப்படியா ...

-------------

கடைசி வரி --- வெட்க்கத்துடன் :(

சங்கர் said...

இந்தப் படத்தை இப்படியும் பார்க்கலாமோ, இன்னும் கொஞ்சம் விளக்கமா எழுதுங்களேன்

balavasakan said...

##ம்ம்... இல்ல... வேண்டாம்.. பார்க்கலாம்.. வேண்டாம்.. ம்ம்.. ஊஹும் (பூ... இதழ் எல்லாம் வச்சுக்கலை..) பதினெட்டாவது தடவையா யோசித்து...##

ஏங்க்கா...ஏன்..ஏன்....

## "இவர்களுக்கு உதவுவதற்கு சில பேர் வந்தார்கள்... ஆனால் உங்களுக்கு..?"##

ம்......ம்

Paleo God said...

//வெளியில் வந்து ஒரு கோலா வாங்கி சாப்ட்டு தெம்பா உள்ளே சென்றேன்.

அப்புறம் ஏனோ எனக்குத் தலை சுற்றல் நின்று விட்டிருந்தது. கழுத்துச் சுளுக்கு போன இடம் தெரியவில்லை.//

கோலால இருக்கற பூச்சி மருந்து நல்லா வேல செய்யுது போல..::))

-------
திரும்பி வரும்போது... "இவர்களுக்கு உதவுவதற்கு சில பேர் வந்தார்கள்... ஆனால் உங்களுக்கு..?" என்று என் தோழி கேட்டபோது... மெளனமாக வெற்றுப் புன்னகை ஒன்றை மட்டுமே.. பதிலாக அளிக்க முடிந்தது..!//

::(((((((((((

பிரபாகர் said...

//திரும்பி வரும்போது... "இவர்களுக்கு உதவுவதற்கு சில பேர் வந்தார்கள்... ஆனால் உங்களுக்கு..?" என்று என் தோழி கேட்டபோது... மெளனமாக வெற்றுப் புன்னகை ஒன்றை மட்டுமே.. பதிலாக அளிக்க முடிந்தது..!
//
.................

அண்ணாமலையான் said...

பாதி தூக்கத்துக்கே 17 ஓட்டா? ம்ம் நடத்துங்க.. உங்க ராஜ்ஜியம்தான்...

மணிப்பக்கம் said...

// திரும்பி வரும்போது... "இவர்களுக்கு உதவுவதற்கு சில பேர் வந்தார்கள்... ஆனால் உங்களுக்கு..?" என்று என் தோழி கேட்டபோது... மெளனமாக வெற்றுப் புன்னகை ஒன்றை மட்டுமே.. பதிலாக அளிக்க முடிந்தது..! //

உதவ வந்தாலும் குற்றம் குறைகள் சொல்லி துரத்தி அடிச்சி அவர்களை சிதறடிச்சி எதிரியாக்கி கொள்வோம் என்று சொல்லவா முடியும்?

புண்ணகை மட்டும் தான் ஹி ஹி ..!

( நமக்குள் {ஜாதி,மதம்,தீண்டாமை}
ஒற்றுமை வரவே வராது என்பதுதான் உண்மை! இதை தாண்டினால் 'இனம்' ஆகலாம், அப்புறம் இன விடுதலை! பற்றி கவலை படலாம்! )

கா.கி said...

பதிவை விட, உங்களுக்கு நீங்களே போட்டுகிட்ட ஆறுதல் கமெண்ட்டு அருமை.. பதிவும், நீங்க விவரிச்ச பட அனுபவம் போல இருந்துச்சு..
இடைவெளி வரை ஒண்ணும் புரியலை, அதுக்கப்பறம் தெளிவாகிட்டீங்க போல...

//better luck next time//
இது எதுக்குன்னு தெரியலை. பதிவு அவ்வளவு மோசம் இல்லை..

sathishsangkavi.blogspot.com said...

நல்லாயிக்குங்க நீங்க படம் பார்த்த விதம்...

என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..

Anonymous said...

அப்ப படம் பார்த்தாச்சா?.....எனக்கும் பார்க்க ஆசை தான்..

R.Gopi said...

//ம்ம்... இல்ல... வேண்டாம்.. பார்க்கலாம்.. வேண்டாம்.. ம்ம்.. ஊஹும் (பூ... இதழ் எல்லாம் வச்சுக்கலை..) பதினெட்டாவது தடவையா யோசித்து... //

*-*-**-**--*

நானும் கூட இருபது தடவை யோசிச்சு இந்த பதில் எழுதி இருக்கேன்...

அவதாரும்...... ஜேம்ஸ் கேமரூனும்.... பின்னே ப்ரியாவும்.....

அட.... இந்த டைட்டில் கூட நல்லாதான் இருக்கு.....

கூடவே இன்னொண்ணு சொல்ல மறந்துட்டேன்.... உங்களின் விரிவான பதிவும் சூப்பர்.....

ஆரூரன் விசுவநாதன் said...

//இவர்களுக்கு உதவுவதற்கு சில பேர் வந்தார்கள்... ஆனால் உங்களுக்கு..?" என்று என் தோழி கேட்டபோது... மெளனமாக வெற்றுப் புன்னகை ஒன்றை மட்டுமே.. பதிலாக அளிக்க முடிந்தது..!//


நச்....ofcourse

புலவன் புலிகேசி said...

தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

vasu balaji said...

மணிப்பக்கம் said...

// உதவ வந்தாலும் குற்றம் குறைகள் சொல்லி துரத்தி அடிச்சி அவர்களை சிதறடிச்சி எதிரியாக்கி கொள்வோம் என்று சொல்லவா முடியும்?//

நிஜமா உதவணும்னு இருந்தா குற்றம் குறை சொன்னா உண்மை இருந்தா திருந்த்திக்கணும். இல்லைன்னா புரிய வைக்கணும். ரெண்டும் இல்லைன்னா பொத்திக்கிட்டு போகலாம். இதான் உதவறேன்னு வர பரதேசிக்கு இலக்கணம். எதிரி ஆகறதுன்னா அங்க பிசினஸ் இருக்கு. உன் கிட்ட விற்கலை. மத்தவன் கிட்ட வித்துக்குவேன்னு. என்ன லாஜிக்குங்க இது?

/ஒற்றுமையின் சக்தியை உணர வைத்தார்கள்... தோளுடன் தோளணைத்து நின்றால்.. போன உயிரைக் கூடக் கொண்டுவர முடியும் போலும்... ஆனால் அது பண்டோராவில் மட்டும் சாத்தியமான ஒன்று... பூமியில் நடக்கச் சாத்தியக் கூறுகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை../

மீண்டும் ஒரு முறை நிரூபணமானது.

அகல்விளக்கு said...

//"இவர்களுக்கு உதவுவதற்கு சில பேர் வந்தார்கள்... ஆனால் உங்களுக்கு..?" என்று என் தோழி கேட்டபோது... மெளனமாக வெற்றுப் புன்னகை ஒன்றை மட்டுமே.. பதிலாக அளிக்க முடிந்தது..!//

இந்த வரிகள் அதிகம் பாதிக்கிறது...

பின்னோக்கி said...

அவதாரை வித்தியாசமான பார்வையில் பார்த்திருக்கிறீர்கள். இந்த ஒப்பீடு நான் படித்ததில்லை. யோசிக்கையில், இது உங்க கதை தான் என்று புரிகிறது

மணிப்பக்கம் said...

// வானம்பாடிகள் said...

//உதவ வந்தாலும் குற்றம் குறைகள் சொல்லி துரத்தி அடிச்சி அவர்களை சிதறடிச்சி எதிரியாக்கி கொள்வோம் என்று சொல்லவா முடியும்?//

நிஜமா உதவணும்னு இருந்தா குற்றம் குறை சொன்னா உண்மை இருந்தா திருந்த்திக்கணும். இல்லைன்னா புரிய வைக்கணும். ரெண்டும் இல்லைன்னா பொத்திக்கிட்டு போகலாம். இதான் உதவறேன்னு வர பரதேசிக்கு இலக்கணம். எதிரி ஆகறதுன்னா அங்க பிசினஸ் இருக்கு. உன் கிட்ட விற்கலை. மத்தவன் கிட்ட வித்துக்குவேன்னு. என்ன லாஜிக்குங்க இது? //

நான் ஈழத்தை பற்றி மட்டும் சொல்லவில்லை ஐயா, பொதுவாக .. ஒரு திருமணத்தை, நல்ல காரியத்தை எடுத்துகொண்டாலும் ஆயிரத்தெட்டு நொட்டைகள் ... பொதுவாக நம் இனத்துக்கு நல்ல புரிதல்கள் இல்லை, அதனால்தான் அடிக்கடி ஏமாறுகின்றோம்!

மணிப்பக்கம் said...

@வானம்பாடிகள்,

உங்களுக்கு இப்படி புரிகிறது என்றால் .. ' மூடிக்கொண்டிருப்பது நலம்' னு லக லக கவுஜ எழுதிடபோறாங்க ..

நான் சொன்னது ஒரு ஆதங்கம்!

(எந்த வில்லங்கமும் இல்ல சாமியோவ்!)

அன்புடன் நான் said...

பகிர்வுக்கு நன்றிங்க.... தங்களுக்கு எனதினிய பொங்கல் வாழ்த்துக்கள்

ஆ.ஞானசேகரன் said...

//திரும்பி வரும்போது... "இவர்களுக்கு உதவுவதற்கு சில பேர் வந்தார்கள்... ஆனால் உங்களுக்கு..?" என்று என் தோழி கேட்டபோது... மெளனமாக வெற்றுப் புன்னகை ஒன்றை மட்டுமே.. பதிலாக அளிக்க முடிந்தது..!//

ம்ம்ம்ம்ம்.....

வணக்கம் ப்ரியா.

சிங்கக்குட்டி said...

இடுகை ரொம்ப நல்லா இருக்கு...ஆனால் !

வரிகள் உங்கள் இடுகை போல இல்லையே?

ஈரோடு கதிர் said...

உங்க தோழியோட ஆப்டிமிசத்துக்கு ஒரு பெரிய கைதட்டல்


கசப்பான நிதர்சனத்தை நினைவு படுத்திய கடைசி வரிகள் மனதை கனக்கவே செய்தது

ராஜ நடராஜன் said...

இந்த ஊர்ல விளம்பரமெல்லாம் ஏதும் கிடையாது.துவக்கமே அவதார் எழுத்தோட இடைவெளி இல்லாம கண்ணாடிய கழட்டாமத்தான் படம்.

இறுதி வரிகளுக்கு ஏதோ சொல்ல வந்து சொல்லத் தெரியாமல் போகிறேன்.

Chitra said...

Very nicely expressed.

HAPPY PONGAL!

திவ்யாஹரி said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அக்கா

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...//

நன்றி சார்...

கலகலப்ரியா said...

//நசரேயன் said...

கடைசி வரைக்கும் படத்தை பத்தி சொல்லவே இல்லை//

நன்றி நசரேயன்... ம்ம்... படம் பத்தி சொல்லணும்னா.. நிறைய சொல்லலாம்... எனக்கு சில காரணங்களால பிடிச்சது... & அநேக ரசனைகளுக்கு ஏற்ற மாதிரி பண்ணி இருக்காங்க... ஸோ பார்க்கறவங்களுக்கு படத்தில ஏதோ ஒண்ணு பிடிக்கும்... =)

கலகலப்ரியா said...

// சின்ன அம்மிணி said...

கலகலப்பா ஆரம்பிச்சு கடைசீல இப்படி முடிச்சிட்டீங்களே//

ம்ம்... என்ன பண்ண... :(..

கலகலப்ரியா said...

//குடுகுடுப்பை said...

உங்களால் மட்டுமே முடியும்.//

சரிதான்.... மனசு வேணுமே...

கலகலப்ரியா said...

//அது சரி said...

//
சயன்ஸ் ஃபிக்ஷன்னாலே காத தூரம் ஓடுற என்னை..
//

Same blood here...I'm so allergic to sci-fi. Haven't seen Avatar yet, dont think I will.//

ya won't miss nething...

கலகலப்ரியா said...

// அது சரி said...

mmm...That's the reality...//

"thatz right".. :)

கலகலப்ரியா said...

// vithiya said...

Super akka....
Yours comments are nice//

Thank you vithiya... :)

கலகலப்ரியா said...

//எல் போர்ட் said...

எனக்கும் படம் பிடித்திருந்தது.. அதன் கான்செப்ட் க்காகவும் உருவாக்கத்துக்காகவும்.. நான் பொதுவாக பழங்குடிகளை நினைத்துக் கொண்டேன்.. //

எனக்கும் ரெட் இண்டியன்ஸ்தான் ஆரம்பத்ல கவனம் வந்தாங்க...

//பாஸிடிவ் ஃபீலிங்க் :))) பண்டோரா லயாவது ஜெயிக்கறாங்கன்னு தான்.. :))//

அவங்கள மாதிரி ஒண்ணா நின்னா... வெற்றிதான் சந்தனா.... ஒன்றா செத்தா கூட...

கலகலப்ரியா said...

//சைவகொத்துப்பரோட்டா said...

அவதாருடன் சேர்த்து ஒரு இனத்தின் வலியையும் பதிவு செய்து விட்டீர்கள்.//

நன்றி சைவக்கொத்துப்பரோட்டா...

கலகலப்ரியா said...

//புலவன் புலிகேசி said...

ப்ரியா வித்தியாசமான விமர்சனம் என்றாலும், ஈழக்கவலை எங்கு சென்றாலும் மனதை விட்டு நீங்காமல் உங்களிடம்.//

ம்..:)

//இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்//

நன்றி புலிகேசி... உங்களுக்கும்..

கலகலப்ரியா said...

//நட்புடன் ஜமால் said...

பாதி தூக்கத்துலேயே இப்படியா ...

-------------

கடைசி வரி --- வெட்க்கத்துடன் :(//

நன்றி ஜமால்...

வெக்கம் நாமதான் படணும்...

கலகலப்ரியா said...

//சங்கர் said...

இந்தப் படத்தை இப்படியும் பார்க்கலாமோ, இன்னும் கொஞ்சம் விளக்கமா எழுதுங்களேன்//

அய்... இது நல்லாருக்கே.... பார்ப்போம்...

கலகலப்ரியா said...

//Balavasakan said...//

இல்ல என்னன்னாலும் ரொம்ப ரோசன பண்ணிதான் முடிவெடுக்கனுமின்னு... =))

ம்ம்..

கலகலப்ரியா said...

//பலா பட்டறை said...//

நன்றி ப.ப. ... ஓஹோ... அப்போ பூச்சி மருந்துதான் காரணமோ... =))

கலகலப்ரியா said...

//பிரபாகர் said...//

நன்றிண்ணா...

கலகலப்ரியா said...

//அண்ணாமலையான் said...

பாதி தூக்கத்துக்கே 17 ஓட்டா? ம்ம் நடத்துங்க.. உங்க ராஜ்ஜியம்தான்...//

இவ்ளோ தூரம் வந்து ஓட்டு எண்ணிட்டு போறீங்களே... நீங்க எங்கயோ போயிட்டீங்க போங்க...

கலகலப்ரியா said...

//மணிப்பக்கம் said...//

வாஸ்தவம் மணி... அதெல்லாம் நடக்காத விஷயம்... (நடக்காதது ஒன்றுமில்லைன்னு சொல்லலாம்... ஆனாலும் நடக்காதுங்க..)

கலகலப்ரியா said...

//Karthick Krishna CS said...//

நன்றி கார்த்திக்... இல்ல அவசரப்படாம.. நிதானமா... கொஞ்சம் பெட்டரா எழுதி இருக்கலாம்னு தோணிச்சுங்க... அம்புட்டுதேன்..

கலகலப்ரியா said...

//Sangkavi said...

நல்லாயிக்குங்க நீங்க படம் பார்த்த விதம்...

என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..//

நன்றி சங்கவி... முதல் பாதி பத்திதானே சொல்லுறீங்க.. =))

கலகலப்ரியா said...

//தமிழரசி said...

அப்ப படம் பார்த்தாச்சா?.....எனக்கும் பார்க்க ஆசை தான்..//

ஆச்சே... அப்புறம் என்ன... பார்த்துட வேண்டியதுதான்...

கலகலப்ரியா said...

//R.Gopi said...//

நன்றி கோபி... உங்க ஸ்டார் code மட்டும் புரியல..

கலகலப்ரியா said...

//ஆரூரன் விசுவநாதன் said...


நச்....ofcourse//

நன்றி ஆரூர்...

கலகலப்ரியா said...

//புலவன் புலிகேசி said...

தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்//

=))... மறக்காம ரெண்டு வாட்டி வாழ்த்தியதுக்கு நன்றி...

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...//

நீங்க சொல்றதும் சரிதான்...

ஆனா நீங்க சொல்ற கோணம் வேற... மணி சொல்ற கோணம் வேற... ரெண்டும் உண்டு... அம்புட்டுதேன்...

கலகலப்ரியா said...

//அகல்விளக்கு said...

இந்த வரிகள் அதிகம் பாதிக்கிறது...//

நன்றி அகல்விளக்கு...

கலகலப்ரியா said...

//பின்னோக்கி said...

அவதாரை வித்தியாசமான பார்வையில் பார்த்திருக்கிறீர்கள். இந்த ஒப்பீடு நான் படித்ததில்லை. யோசிக்கையில், இது உங்க கதை தான் என்று புரிகிறது//

நன்றி பின்னோக்கி... (பின்னோக்கிங்கிறது செரியாதான் இருக்கு... இந்த மாட்டர்ல..)

கலகலப்ரியா said...

//மணிப்பக்கம் said...
நான் ஈழத்தை பற்றி மட்டும் சொல்லவில்லை ஐயா, பொதுவாக .. ஒரு திருமணத்தை, நல்ல காரியத்தை எடுத்துகொண்டாலும் ஆயிரத்தெட்டு நொட்டைகள் ... பொதுவாக நம் இனத்துக்கு நல்ல புரிதல்கள் இல்லை, அதனால்தான் அடிக்கடி ஏமாறுகின்றோம்!//

ரைட்டுங்க...

//உங்களுக்கு இப்படி புரிகிறது என்றால் .. ' மூடிக்கொண்டிருப்பது நலம்' னு லக லக கவுஜ எழுதிடபோறாங்க ..

நான் சொன்னது ஒரு ஆதங்கம்!

(எந்த வில்லங்கமும் இல்ல சாமியோவ்!)//

சாமீ... நாம சொன்னதும் ஆதங்கத்தில்தான்.. ஏன் ஐயா அதை இழுக்கிறீங்க... ஸ்ஸ்ஸ்ஸபா...

கலகலப்ரியா said...

//சி. கருணாகரசு said...

பகிர்வுக்கு நன்றிங்க.... தங்களுக்கு எனதினிய பொங்கல் வாழ்த்துக்கள்//

நன்றி கருணாகரசு... உங்களுக்கும் வாழ்த்துகள்...

கலகலப்ரியா said...

//ஆ.ஞானசேகரன் said...


ம்ம்ம்ம்ம்.....

வணக்கம் ப்ரியா.//

வணக்கம் ஞானசேகரன்... வாங்க...

கலகலப்ரியா said...

//சிங்கக்குட்டி said...

இடுகை ரொம்ப நல்லா இருக்கு...ஆனால் !

வரிகள் உங்கள் இடுகை போல இல்லையே?//

நன்றி சிங்கக்குட்டி... வாஸ்தவம்... ஆனா அதுக்காக வேற யாராவது எழுதிக் கொடுத்தாய்ங்கன்னு நெனைச்சிடப்டாது ஆமா...=))

கலகலப்ரியா said...

//ஈரோடு கதிர் said...

உங்க தோழியோட ஆப்டிமிசத்துக்கு ஒரு பெரிய கைதட்டல்//

ம்க்கும்... கைல இவ்ளோ நேரம் பொரிகடலை இருந்திச்சி போல... இவ்ளோ நிதானமா வந்து கை தட்டுறாய்ங்க..

// கசப்பான நிதர்சனத்தை நினைவு படுத்திய கடைசி வரிகள் மனதை கனக்கவே செய்தது//

ம்ம்..

கலகலப்ரியா said...

// ராஜ நடராஜன் said...

இந்த ஊர்ல விளம்பரமெல்லாம் ஏதும் கிடையாது.துவக்கமே அவதார் எழுத்தோட இடைவெளி இல்லாம கண்ணாடிய கழட்டாமத்தான் படம்.//

அவதார் படத்த பொறுத்த வரை கொஞ்சம் கஷ்டம்தான்.. மத்தபடி கொடுத்து வைச்சவிங்க... 2012 -ற்கு இடைவேளையும் வேணாம்... விளம்பரமும் வேணாம்..

//இறுதி வரிகளுக்கு ஏதோ சொல்ல வந்து சொல்லத் தெரியாமல் போகிறேன்.//

சரி.. தெரிஞ்சுக்கிட்டு வந்து சொன்னா போச்சு..

கலகலப்ரியா said...

//Chitra said...

Very nicely expressed.

HAPPY PONGAL!//

ty & ty... same to you chitra..! :)

கலகலப்ரியா said...

//திவ்யாஹரி said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அக்கா//

நன்றி திவ்யா... உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துகள்...

துபாய் ராஜா said...

இந்த படம் பார்த்து எம்மின ஈழமக்கள் நினைவு வந்தோரில் நானும் ஒருவன்.

தங்களுக்கும்,குடும்பத்தாருக்கும், நண்பர்கள் அனைவருக்கும் தமிழர் திருநாளாம் இனிய தைப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

நட்புடன் ஜமால் said...

கடைசி வரி --- வெட்க்கத்துடன் :(//

நன்றி ஜமால்...

வெக்கம் நாமதான் படணும்...]]

அதே தாங்க நான் என்னைத்தான் சொல்லிகிட்டேன்

உதவ இயலாத என்னை சொல்லிக்கிட்டேன்.

கா.கி said...

//கொஞ்சம் பெட்டரா எழுதி இருக்கலாம்னு//

so, உங்க ரேஞ்சுக்கு இல்லைன்னு feel பண்ணிருக்கீங்க... ரைட்...
பதிவோட தலைப்பு, "காமரோனும்.. அவதாரும்...நடுவே நாமமும்..."னு இருந்திருதா இன்னும் கச்சிதமா ஆகிருக்கும்... நீங்க அந்த நாமத்த நோட் பண்ணீங்களோ??

Unknown said...

வித்தியாசமான பார்வையில் படத்தைப் பார்த்திருக்கிறீர்கள் (3-D யச் சொல்லல).

எல்-போர்டு சொன்ன மாதிரி எனக்கும் - அட்லீஸ்ட் இதிலாவது ஜெயிக்க முடிகிறதே என்று இருந்தது

ஜோதிஜி said...

ஒற்றுமையின் சக்தியை உணர வைத்தார்கள்... தோளுடன் தோளணைத்து நின்றால்.. போன உயிரைக் கூடக் கொண்டுவர முடியும்

படத்திற்கான வரிகள் என்பதை விட மொத்த வாழ்க்கைக்கும் எடுத்துக் கொள்ளலாம்.

வித்யாசமான பார்வை. சிறப்பு.

தமிழர் திருநாள் வாழ்த்துகள்.

Unknown said...

சொல்ல மறந்துட்டேனே - தமிழர் திருநாள் வாழ்த்துகள்.

சூர்யா ௧ண்ணன் said...

தங்களுக்கும், நண்பர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.

ஆறகளூர் பொன்.வெங்கடேசன் said...

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல் வாழ்த்துகள்..
விஜய் டீ.வியில் வரும் ஞாயிறு நீயா? நானா/வில் பர்தா மேட்டரை பேசப் போகிறார்களாம்...கவனிங்க..!

Jerry Eshananda said...

பிரியா, பதிவை வாசித்தேன், இப்பவே செத்துபோக இன்னொரு உசிர் வேணும் எனக்கு.வார்த்தைகளின் வலி பொறுக்கமுடியவில்லை,எங்கள் இயலாமையை இப்படி வார்த்தைகளால் "சிலுவை மரணம்"தராதீர்கள்.

கயல் said...

ஆழப் பதிந்த வலியின் சுவடுகள் வார்த்தையில்...!

கலகலப்ரியா said...

// துபாய் ராஜா said...

இந்த படம் பார்த்து எம்மின ஈழமக்கள் நினைவு வந்தோரில் நானும் ஒருவன்.

தங்களுக்கும்,குடும்பத்தாருக்கும், நண்பர்கள் அனைவருக்கும் தமிழர் திருநாளாம் இனிய தைப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.//

நன்றி ராஜா.. உங்களுக்கும் வாழ்த்துகள்...

கலகலப்ரியா said...

//நட்புடன் ஜமால் said...

கடைசி வரி --- வெட்க்கத்துடன் :(//

நன்றி ஜமால்...

வெக்கம் நாமதான் படணும்...]]

அதே தாங்க நான் என்னைத்தான் சொல்லிகிட்டேன்

உதவ இயலாத என்னை சொல்லிக்கிட்டேன்.//

அது தெரிஞ்சது... :)

கலகலப்ரியா said...

//Karthick Krishna CS said...

//கொஞ்சம் பெட்டரா எழுதி இருக்கலாம்னு//

so, உங்க ரேஞ்சுக்கு இல்லைன்னு feel பண்ணிருக்கீங்க... ரைட்...
பதிவோட தலைப்பு, "காமரோனும்.. அவதாரும்...நடுவே நாமமும்..."னு இருந்திருதா இன்னும் கச்சிதமா ஆகிருக்கும்... நீங்க அந்த நாமத்த நோட் பண்ணீங்களோ??//

அட எனக்கு ரேஞ்சு வேறயா... நீங்க வேற... மனசில சும்மா த்ரில்லிங்கா எழுதணும்னு நினைச்சுட்டு... அப்புறம் அட நினைச்ச மாதிரி எழுதலையேன்னு கொஞ்சம் வருத்தம்.. அம்புட்டுதேன்...

ஆமாங்க.... அந்த நாமம் சூப்பரு... அதனாலேயே எனக்கு படம் புடிக்குதுன்னு... மதவாதிங்க கிளம்ப போறாய்ங்க... =))

கலகலப்ரியா said...

//முகிலன் said...

வித்தியாசமான பார்வையில் படத்தைப் பார்த்திருக்கிறீர்கள் (3-D யச் சொல்லல).

எல்-போர்டு சொன்ன மாதிரி எனக்கும் - அட்லீஸ்ட் இதிலாவது ஜெயிக்க முடிகிறதே என்று இருந்தது//

நன்றி முகிலன்... ம்ம்... நாமளும் கனவு + கற்பனைல நிறைய வாட்டி ஜெயிச்சிட்டோம்..

கலகலப்ரியா said...

//ஜோதிஜி said...

ஒற்றுமையின் சக்தியை உணர வைத்தார்கள்... தோளுடன் தோளணைத்து நின்றால்.. போன உயிரைக் கூடக் கொண்டுவர முடியும்

படத்திற்கான வரிகள் என்பதை விட மொத்த வாழ்க்கைக்கும் எடுத்துக் கொள்ளலாம்.

வித்யாசமான பார்வை. சிறப்பு.

தமிழர் திருநாள் வாழ்த்துகள்.//

நன்றி ஜோதிஜி... உங்களுக்கும் வாழ்த்துகள்...

கலகலப்ரியா said...

//முகிலன் said...

சொல்ல மறந்துட்டேனே - தமிழர் திருநாள் வாழ்த்துகள்.//

சொல்ல மறந்த வாழ்த்தா இது..? வாழ்த்துகள்... மற்றும் நன்றிகள்.. =))

கலகலப்ரியா said...

//சூர்யா ௧ண்ணன் said...

தங்களுக்கும், நண்பர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.//

நன்றி சூர்யா... உங்களுக்கும் அப்புறம் நண்பர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளும் கூட.. =))

கலகலப்ரியா said...

//தமிழ் வெங்கட் said...

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல் வாழ்த்துகள்..//

நன்றி வெங்கட்..

//விஜய் டீ.வியில் வரும் ஞாயிறு நீயா? நானா/வில் பர்தா மேட்டரை பேசப் போகிறார்களாம்...கவனிங்க..!//

நான் டிவி-யே பார்க்கறதில்ல... இதில விஜய் டிவி-க்கு எங்க போறது... ம்ம்.. அப்புறம் எதை கவனிக்கணும்... ??? =)))

கலகலப்ரியா said...

//ஜெரி ஈசானந்தா. said...

பிரியா, பதிவை வாசித்தேன், இப்பவே செத்துபோக இன்னொரு உசிர் வேணும் எனக்கு.வார்த்தைகளின் வலி பொறுக்கமுடியவில்லை,எங்கள் இயலாமையை இப்படி வார்த்தைகளால் "சிலுவை மரணம்"தராதீர்கள்.//

நன்றி ஜெரி... என்ன பெரிய பெரிய வார்த்தை எல்லாம் சொல்றீங்க.. நீங்க நல்லா தலை நிமிர்ந்து உட்காரலாம்... நம்ம ஜனங்க நல்லா பொங்கி சாப்ட்டு உக்காந்திருப்பாங்க.. உங்களுக்கு இருக்கிற இந்த உணர்வெல்லாம் அவங்களுக்கு வந்திச்சின்னா... அவங்க பல தடவை செத்திருக்கணும்...

எனிவே.. அந்த செத்துப்போக இன்னொரு உசிர் வேணும்ங்கிறது கவித்துவமா நல்லா இருக்கு.. =))

கலகலப்ரியா said...

//கயல் said...

ஆழப் பதிந்த வலியின் சுவடுகள் வார்த்தையில்...!//

நன்றி கயல்...

பா.ராஜாராம் said...

அருமையான பகிர்தல்.

கா.கி said...

//மதவாதிங்க கிளம்ப போறாய்ங்க//

பிடிச்சதை சொல்ல எதுக்குங்க பயப்படனும்

Radhakrishnan said...

பரவாயில்லையே படத்தில் இடைவேளை எல்லாம் விட்டு இருக்கிறார்களே! நாங்கள் பார்த்தபோது இடைவேளை எல்லாம் விடவில்லை, முன் இருக்கையில் அமர்ந்த ஒருவரின் குறட்டை சத்தம் கேட்டு நானும் வியந்து போனேன்.

நீங்கள் எழுதிய விதம் மிகவும் சிறப்பாக இருந்தது. அதுவும் கடைசி வரிகள் ஒவ்வொரு மனிதனும் தனக்குள் கேட்டுக்கொள்ள வேண்டியவை.

கலகலப்ரியா said...

//பா.ராஜாராம் said...

அருமையான பகிர்தல்.//

நன்றி பா.ரா..

கலகலப்ரியா said...

//Karthick Krishna CS said...

//மதவாதிங்க கிளம்ப போறாய்ங்க//

பிடிச்சதை சொல்ல எதுக்குங்க பயப்படனும்//

வாஸ்தவம் சாமீ...

கலகலப்ரியா said...

//வெ.இராதாகிருஷ்ணன் said...

பரவாயில்லையே படத்தில் இடைவேளை எல்லாம் விட்டு இருக்கிறார்களே! நாங்கள் பார்த்தபோது இடைவேளை எல்லாம் விடவில்லை, முன் இருக்கையில் அமர்ந்த ஒருவரின் குறட்டை சத்தம் கேட்டு நானும் வியந்து போனேன்.

நீங்கள் எழுதிய விதம் மிகவும் சிறப்பாக இருந்தது. அதுவும் கடைசி வரிகள் ஒவ்வொரு மனிதனும் தனக்குள் கேட்டுக்கொள்ள வேண்டியவை.//

=)..குறட்டையா...?? அவருக்கு கிட்ஸ் அனிமேஷன் பிலிம் மாதிரி இருந்திச்சோ என்னமோ.. இல்ல 3d புண்ணியமோ தெரியல.. =)) நன்றி இராதாகிருஷ்ணன்..

பா.ராஜாராம் said...

ஒரு திரைப்பட விமர்சனத்தில் இவ்வளவு அழகாய் மனசை சொல்ல முடியுமா ப்ரியா?

good work!

கலகலப்ரியா said...

thank you ba.ra..

அன்பேசிவம் said...

ப்ரியா...
ரொம்ப நாளைக்கு முன்னாடி ஒரு சிறுகதை எழுத ஆரம்பித்தேன், ஒரு பால் வேன் விபதுகுள்ளாகி ரோடு முழுவதும் பால் ஓடுகிறது, ஒரு தாய், ஒரு ஏழை சிறுவன், அந்த வண்டி முதலாளி, ஒரு மாடு மற்றும் வெறுமனே வேடிக்கை பார்க்கும் நான் என பார்வைகளின் கோணத்தை எழுதினேன். சரியாக முடிக்கமுடியாமல் விட்டுவிட்டேன்.

பார்வைகள் பலவிதம்ன்னு சொல்லும்போது புரிவதில்லை, அதன் அர்த்தம். தெளிவாகப்புரிகிறது.

அனேகமாக இப்போ முடித்திடுவேன்னு நினைக்கிறேன். தேங்க்ஸ் ப்ரியா.

:-)

கலகலப்ரியா said...

ty murali... all the best..

Anonymous said...

அவடார் கடைசியில் அந்த பழங்குடியினர் ஓலமிட்ட போது எனக்கு எங்கள் சனத்தின் ஓலம் இப்படி தான் இருந்திருக்குமோ என்ற நடுக்கம் ஏற்பட்டது. அருகில் இருந்த நண்பர்களுக்குத் தெரியாது வடிந்த கண்ணீரைத் துடைக்க மிகவும் கஷ்டப்பட்டேன். இரண்டு நாட்களாக சாப்பாடு தண்ணி இறங்கவே இல்லை. எழுதும் போதே கைகள் நடுங்குகின்றன. ஒவ்வொரு தமிழனும் (டமிடன் அல்ல) உணர்ந்து அழுதிருப்பார்கள் என்பது நிச்சயம்.

உங்கள் வலைப்பக்கம் இன்று தான் வந்தேன். கீழே தட்டிக்கொண்டு போனபோது உங்கள் வீட்டு படம் ஒரு நிமிடம் எனது இதயதுடிப்பை நிறுத்தி விட்டது. அதே நீல கேட்டும், பக்கத்து வீடு அதே மாதிரி வாசலுடன் இருந்தது எங்கள் வீடு. என்ன முன்புறம் தார் ரோட்டில்லை. அந்த படத்தை ஒரு ஒருமணி நேரமாக பார்த்துக்கொண்டிருக்கிறேன். எப்படி ஒரே மாதிரி இருக்கும் என்று ஆச்சரியமாக இருக்கின்றது.

இதற்கு மேல் தட்டிப்பார்க்க திறனில்லை. கொஞ்சம் கொஞ்சமாக வாசிக்கப் போகிறேன். ஏனோ உங்கள் பதிவுகள் என்னை அழ வைக்கப் போகிறது போல் பயமாக இருக்கிறது.

கலகலப்ரியா said...

//அனாமிகா துவாரகன் said.//

நன்றி அனாமிகா... :)... இல்ல.. நிறைய மொக்கைப் பதிவுகள்தான்... சில நேரங்களில் சிரிக்கவும் செய்யலாம்... :).. மீண்டும் நன்றி...