header photo

Monday, March 29, 2010

உயிரே நீதான்.. (காதற்கவிதை அல்ல..)

தொடர் இடுகை எழுத அழைத்த ஜெஸ்வந்தியின் அன்புக்காக இந்தப் பதிவு...

தண்ணீர்ப் பற்றாக்குறை அல்லது அதன் அழிவில் என்னுடைய பங்கு எவ்வளவு தூரம் இருக்கிறது என்கிற பிரக்ஞை கூட இல்லாத எனக்கு இது பற்றி எழுதும் அருகதை இருக்கிறதா என்பது ஒரு புறம்... இதனால் என்ன ஆகி விடப்போகிறது என்கிற சிறு சலிப்பு மறுபுறம்.. ஒன்றை ஒன்று விஞ்ச..

இந்திரா... !
எங்கே மழை
மண்வெட்டியை
மண்பாறையில்
அறைந்தபடி
இவ்வுலகின்
இறுதி மனிதன்

வருணனைக் கேள்
கடலை எங்கோ
ஒளித்து விட்டான்
சண்டாளன்!
பாறை வெடிப்பில்
முனகல் கேட்டது
என்னது..
மடிந்து போன
மண்புழுவா பேசுவது..

மடிந்தது மண்புழுவல்ல
என் மாண்பு
இறுமாப்பில்
இடியை அனுப்பினேன்
தெறித்து விட்டதென்
தலையிலேயே..
இறுதித் தறுவாயில்
தெளிந்து விட்டேன்

வருணனும்
செத்துவிட்டான்
சபிக்கப்பட்டு விட்டோம்
நாம் மனிதர்களால்
கடவுளை நம்பியது
அவர் குற்றமல்ல
மனிதனை நம்பியது
எம் குற்....

ஆ.. இந்த்....!

பின்...

அயல் நட்சத்திரத்தின்
ஒரு கோள்
நீரில் மிதக்கும்..
நீரற்ற தேசம் தேடி
பறக்கும் பந்தனுப்புவர்
பூமியில் நீர் இருந்த
சுவடும் இருக்காது
*&^%$#$%^&* என்று
ஹூரேயை
மொழிபெயர்த்துக்
கத்துவர்..
சிங்களர்
சனிக் கிரகத்திலிருந்து
பூமியைப் படம்பிடிப்பர்
வெடித்த பூமியின்
நடுவில் ரோபோக்கள்
நடமிடுவர்..
மீண்டும் போர்..!

______________________

எல்லாம் சரி.. என்னால் இப்போதைக்கு என்ன செய்ய முடியும்.. இன்றைக்கு நான் ஏதாவது முடிவெடுத்தே ஆக வேண்டும்.. நான் இப்போதைக்கு தண்ணீரில் கல்லெறிய மாட்டேன்... அவ்ளோதான்... மாதக் கணக்காமல் குளிக்காதிருந்து தண்ணீரை மிச்சம் பிடிப்பவர்கள் தெய்வங்களுக்குச் சமானமானவர்கள்.. நான் தெய்வமல்ல..

உருப்படியா ஏதாவது தெரிஞ்சுக்கணும்னா இந்தப் படப்பொட்டிய க்ளிக் பண்ணுங்க..




அப்புறம் நமக்கு பாரதியைக் கூப்டலைன்னா விடியாதே..

உயிரே நினது பெருமை யாருக்குத் தெரியும்..
நீ கண் கண்ட தெய்வம்...
எல்லா விதிகளும் நின்னால் அமைவன..
எல்லா விதிகளும் நின்னால் அழிவன..
உயிரே... நீ காற்று.. நீ தீ... நீ நிலம்... நீ... நீர்... நீ வானம்..
உயிரே... உயிரே... !

(குழம்புபவர்களுக்கு இது மணிரத்னம் படப் பாடல் அல்ல..)

உயிருக்குப் பதிலா நீர் அப்டின்னும் போட்டுக்கலாம்... அப்போ நீ நீர்-ன்னு வருமே.. ஆமாம் நீர் நீர்தான்..!

Saturday, March 13, 2010

உலகை நீங்கும் போதெல்லாம்....



தேடித் தேடி அடையும் இப்போதைய தனிமை அப்பொழுது எனக்கு நிறையவே கிடைத்திருக்கிறது. அம்மா ஒரு குட்டிப் பாப்பாவையாவது பெற்றிருக்கக் கூடாதா, ஒரு பூனைக்குட்டியாவது வளர்க்கக் கூடாதா என்று ஏங்கிப் போயிருந்த வயது அது.

கையில் ஒரு மரப் பொம்மையையோ, மட்டையையோ வைத்துக்கொண்டு தனக்குத் தானே பேசிக் கொண்டிருக்கும் குழந்தைகளைப் பார்த்திருக்கிறீர்கள் என்றால் நீங்கள் என்னையும் பார்த்திருக்கிறீர்கள். திடீரென்று மிக மிக அருகில் கேட்கும் அம்மாவின் குரலில் உடல் ஒரு தடவை துள்ளி, இவ்வுலகிற்கு மீண்டு, கண் பிதுங்கி, வாய் பிளந்து நின்று, உலகத்தில் செய்யக் கூடாத அசட்டுத்தனம் செய்து விட்டதாக நினைத்து, நாள் முழுதும் வெட்கப்படும் அந்த 'அசட்டுத்தனம்' கூட அனுபவித்திருக்கலாம். கார்ட்டூன் குழந்தைகளுக்கு இந்த அனுபவம் நேராதிருந்திருக்கலாம்.

இப்பொழுதெல்லாம் என்னுடன் நான் வாய்விட்டுப் பேசச் சந்தர்ப்பம் கிடைப்பதே இல்லை. அல்லது சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் நினைவுகளை மீட்பதிலும், மையமற்ற ஏதோ எண்ணங்களில் சுழல்வதிலுமாக என் இருப்பு மறந்து, மறைந்து விடுகிறது.

தெற்கிலும், மேற்கிலும் வீட்டை உரசிக் கொண்டு வீடுகள் இருந்தாலும் வடக்கிலும், கிழக்கிலும் பரந்து விரிந்திருந்த பசேலென்ற புல்வெளியும், சில மரங்களும் மைல்க் கணக்கில் நீண்டிருக்கும் பாலைவனம்போல் தோன்றி, அது மட்டுமே நிதர்சனம் என்று பூதாகரமாகத் தோன்றியிருந்ததில் ஆச்சரியம் எதுவுமில்லை. அதிலும் சின்னஞ்சிறிய வெண்மையான மூக்குத்திப் பூக்கள் என் கண்ணுக்குப் புலப்படவே இல்லை. ஆனால் சிறகை நிதானமாக அசைத்தவண்ணம் அதை முத்தமிட்டுக் கொண்டிருந்த பட்டாம்பூச்சியைப் பிடித்து மீண்டும் பறக்க விடுவதில் அது அதன் வண்ணத்தைக் கொஞ்சம் என் விரல் நுனிகளில் விதைத்து விட்டுப் போனதென்னவோ உண்மைதான். அம்மா 'இன்னொரு' பட்டாம்பூச்சியாவது பெற்றிருக்கலாம் என்று நினைத்திருந்திருப்பேனோ?!

பாம்பின் மேல் பயமிருந்தாலும் ஏதோ ஒரு கணத்தில் அதன்பால் எனக்குப் பரிவோ, பிரியமோ கண்டிப்பாக ஏற்பட்டிருக்க வேண்டும். பட்டாம்பூச்சிகள் அலுத்துவிட்டிருந்த நாளொன்றில் கைக்கு அகப்படாது விர்ர் விர்ர்ரென்று பறக்கும் தும்பிகளைப் பிடிப்பதில் மும்முரமாகி விட்டிருந்தேன். திடீரென்று பாலைவனத்தில் பாலாறு ஓடுவது போன்ற ஒரு கலவரம். திரும்பிப் பார்த்தால் வீட்டின் முன் பத்துப் பதினைந்து பேர், பலபாலர், விதம் விதமான வயதுகளில் கிளித்தட்டு ஆடிக்கொண்டிருந்தார்கள்.

என் கண்களை என்னால் நம்பத்தான் முடியவில்லை. கால்கள் தன்பாட்டுக்கு என்னை அந்தக் கூட்டத்தில் சேர்த்து விட்டிருந்தது. இறந்து சொர்க்கம் எய்துபவர்களுக்கு எப்படியோ தேவலோக மொழி புரிந்து விடுகிற மாதிரி, எனக்கும் அவர்கள் மொழி புரிய ஆரம்பித்தது. "தலையில அடியாத", "தலையில அடியாத", "தலையில அடிக்கக் கூடாது", "பாவம்"..  அப்பொழுதுதான் கவனித்தேன் எல்லாருடைய பார்வையும் சில அடிகள் தாண்டி புற்தரையில் இருந்தது. அங்கே ஒரு கருநாகம் நெளிந்து கொண்டிருந்தது. ஒரு விடலைப் பையன் கையில் தடி ஒன்று, நிலத்தில் விழுந்து விழுந்து அடி வாங்கியோ என்னமோ வீங்கிப் போயிருந்தது. கூடியிருந்த கூட்டம் தலை வேண்டாம், தலை வேண்டாம் என்று தலைப்பாடாக அடித்துக் கொண்டாலும், அவன் பாம்பின் தலைக்கே குறி வைத்து தடியை அடித்துக் கொண்டிருந்தான்.

எனக்குத் திருவிழாவில் இருப்பது போன்ற குஷி ஏற்பட்டு விட்டிருந்தது. இந்தக் கிளித்தட்டு எவ்வளவு நேரம் நீடிக்கும், அந்தப் பாம்பு எவ்வளவு நேரம் சமாளிக்கும் என்று கவலையாக இருந்தது. அம்மா பாம்பின் மேல் கண் வைத்தபடியே, "எண்ட முருகா, என்ன இது சோதினை, அப்படியே அச்சு அடிச்ச மாதிரி, அச்சு அசல் வள்ளியம்மை வாசல்ல இருக்கிற மாதிரியே.. வால் கொஞ்சம் நீட்டிச் சுருட்டி தலையை லேசா நிமித்தின மாதிரி சுருள் மேல கிடத்தி, சாந்தமா அப்ப்பிடியே பார்த்துக் கொண்டு.. பாந்தமா படுத்துக் கிடக்கு".. என்று பதைபதைத்த குரலில் அவளுக்கு முதன் முதலில் தரிசனம் கொடுத்த பாம்பின்புகழ் பாடிக் கொண்டிருந்தாள். முருகன் கோயிலில் சிலையாக இருக்கும் பாம்பின் அவதாரத்தை அடிப்பது பாவமில்லையா என்று எனக்கு யோசனை ஓடியது. முருகன் கோயிலில் வள்ளியம்மை வாசல் எங்கிருக்கிறது, அங்கே எங்கே பாம்பிருக்கிறது, அடுத்த தடவை தாத்தாவுடன் போகும்போது பார்க்க வேண்டும் என்று நினைத்ததுதான், அப்புறம் பார்த்த ஞாபகம் இல்லை.

பின்னொரு நாள் பாட்டிவீட்டு வாசலில் உட்கார்ந்து ஒரு கால் மடித்து, ஒரு கால் கீழ்ப் படியில் நீட்டி, கன்னத்தில் கை தாங்கி, கண்ணைத் திறந்தபடியே தூங்கி, என்னுடைய உலகத்தில் விழித்து என்னுடன் பேசிக் கொண்டிருந்தேன். என்றைக்குமில்லாது டைகர் தொண்டை வறண்டு போற அளவுக்கு மிரட்சியாகக் குரைத்துக் கொண்டிருந்த சத்தம் என்னுடைய உலகத்தை அடைய சில நிமிடங்கள் ஆயிற்று. மெதுவாக இவ்வுலகிற்கு மீண்டு, டைகரின் மொழியைப் புரிந்துகொள்ள முயற்சிக்கையில்தான் பார்த்தேன், எனக்கு மிக மிக அருகில் என்னை மறித்தாற்போல் டைகர் தனியாகக் கிளித்தட்டு ஆடிக் கொண்டிருந்தது.

நிதானமாகப் பார்வையை நகர்த்தினால், மிக மிக அருகில் கொழுகொழு என்று மிக நீளமாக ஒரு சாரைப்பாம்பு நெளிந்து கொண்டிருந்தது. நீட்டிய காலை மடக்கவும் மறந்து உறைந்து, நெஞ்சுக்குழிக்குள் காணாமற் போய்விட்ட என் குரலைத் தோண்டியெடுத்து அலறியதில்.. தாத்தா, பாட்டி எல்லாம் திருவிளையாடற் கடவுள்கள் போன்று சட்டெனத் தோன்றி விட்டிருந்தார்கள். தாத்தா ஒரு குச்சியை வைத்து நிலத்தில் தட்டியதில், சாரை தனக்கான வழியைக் கண்டுபிடித்துச் சென்று விட்டிருந்தது. விஷப்பாம்பில் ஏற்பட்ட பரிவு, விஷமற்ற இந்தப் பாம்பினால் தொலைந்து, பாம்பின் மேல் மிகப்பெரிய வெறுப்பும், அளவில்லா அருவெறுப்பும் தோன்றியிருந்தது.

அது சாரைடா, கடிக்காது, விஷமில்லை போன்ற ஆறுதல் மொழிகள் எனக்கு வெகு தொலைவில் கேட்டன. டைகர் ஆதரவாக வந்து பக்கத்தில் அமர்ந்து, அடிக்கடி காதை விடைத்து, முகவாயை நிமிர்த்தி, நிமிர்த்தி, கண்களில் ஒரு விதமா "என்னடா", "என்னடா" என்ற கேள்வியுடன் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தது. மல்லிகைப் பந்தலடி மணலின் மேல் சாரை அரைந்த சுவட்டில் சகாரா தெரிந்தது. அதில் சாரையுடன் கிளித்தட்டாடி, மல்லுக்கட்டி, என்னை நெருங்க விடாது செய்த அந்தச் சின்னஞ்சிறிய டைகரின் நட்பு மணலோவியமாய்த் தீட்டப் பட்டிருந்தது. அந்த ஓவியம் ஆயிரம் கதைகள் கூறிக் கொண்டிருந்தது. கோமாவில் இருப்பவள் விஷயங்களைக் கிரகித்து மீட்பது போல், எனக்குள் நூற்றுக் கணக்கான வயலின்கள் தோள்மேலிருக்கும் ஒற்றை நரம்பினை மட்டுமிசைத்து , மிகப் பெரிய அதிர்வுகளை மீட்டிக் கொண்டிருந்தன.

இவ்வாறாக, இவ்வுலகை விட்டு நீங்கியிருக்கும் போதெல்லாம் இவ்வாறான காவியங்கள் கிடைக்கப்பெறும் பாக்கியம் பெற்றவளாகிறேன். 

(படம்: நன்றி கூகிள்)
__________________________________________________________________________________

Friday, March 12, 2010

ஓட்டுப் போடுங்க.... ஓட்டுப் போடுங்க... அடுத்து யாரு......

ஒரு பாழுங்கிணற்றின் அருகில் நின்று ஒருத்தி எண்ணிக் கொண்டிருந்தாள்...

238.... 238..... 238..... 238.......... 238......... 238........... 238.............238.......... 238........ 238.......

அதன் வழியே கடனே என்று நடந்து  போய்க்கொண்டிருந்த ஒரு அப்பாவி ஆச்சரியத்துடன் கிட்டவந்து கிணற்றை எட்டிப்பார்த்தவாறே கேட்டான்...

அப்படி கிணற்றில் என்னதான் எண்ணுகிறீர்கள்?

அவனைப் பிடித்து கிணற்றில் தள்ளிவிட்டுவிட்டு... ச்சே ச்சே... தப்பு... அவனே ஆர்வத்தில் கிணத்தில் குதித்துவிட...  இவள்...

239... 239.... 239..... 239......... 239............. 239.............. 239................239..............

//தாமோதர் சந்துரு said...
நாந்தான் 240. ஏதோ கதிரண்ண சொன்னதுக்காக குதிச்சிட்டோமுல்ல.//

240....  240....  240....  240....  240....  240....  240....  240....  240....  240....  240....  240....

//
அனுஷா சித்ரா said...
241வதா குதிச்சிட்​டேன்!!!// 241... 241... 241... 241... 241... 241... 241... 241... 241... 241... 241... 241... 241... 241...

Wednesday, March 10, 2010

தங்கச்சிய நாய் கட்சிட்சிப்பா........ அவ்வ்வ்வ்...

ஐயையோஓ.... இந்த நாயத்த கேக்குறதுக்கு யாருமில்லையா...?

//ஏன் கபாலி அழுறா..//
வா ராஜா வா உட்காரு..

//என்னது கால்ல கட்டு..//
தங்கச்சிய நாய் கட்சிட்சிப்பா

//தங்கச்சிக்கு நாய் கட்சா நீ ஏன்யா கால்ல கட்டு போட்ருக்க//
அதாம்பா சொல்றேன் தங்கச்சிய நாய் கட்சிட்சிப்பா..
குட்சயாண்ட போனேன் .. ஓஒன்னு அய்துகினிருந்தா.. அண்ணாத்த கீழாண்ட நாய் கட்சிட்டிச்சின்னு.. இன்னாம்மா இது  சொல்லிக்கினு.. இன்னா எனக்கு அர்த்தம் புரியலியேன்னேன்.. உட்னே காலாண்ட நாய் கட்சிட்சின்னா.. அண்ணாத்த நில்லுன்னு... நம்சு ஸ்கான இஸ்துகினு... நேர சூளமேடு வைத்தியர்கிட்ட போனேன்.. வைதியரே வைதியரே தங்கச்சிய நாய் கட்சிட்சி தங்கச்சிய இட்டார்டானு கேட்டா.. அவன் சொல்லிகிறான்பா நாய இட்டான்னுகினான்.. எனக்கு கோவம் வந்துகினு இன்னா வைதியரே சொலிகின நீநு கேட்டுகிநிருக்க  அவன் சொல்றான்.... அது பித்தம் புட்ச நாயா..........  பித்தம் புடிக்காத நாயா...... வெறி புட்ச நாயா.... வெறி  புடிக்காத நாயா....... நா பாக்க வேணாமானு கேட்டுகுனான்..
நாயம் தானபா..?
//நாயம்தான்//

தங்கச்சிய நாய் கட்சிட்சிப்பா...

சரினு சொல்லிகினு நானும் துலுகானமும் மாரிதாசும் டில்லி நம்சு ஸ்கானையும் இஸ்துக்கினு நேரா தங்கச்சி கிட்ட போனேன்..
தங்கச்சி தங்கச்சி எந்த நாய்மா உன்ன கட்சிதுனு கேட்டேன்... அவ கேட்டுகிரா ஒரு கேள்வி.. இன்னா அண்ணாத்த வெளாட்றியா... கட்ச நாய மூஞ்ச புட்சா பாக்கமுடியும்..?
நாயம்தானபா..?
//நாயம்தான்//

தங்கச்சிய நாய் கட்சிட்சிப்பா...

அது எந்த நாய் பார்துகிலாம்னு சொல்லிகினு நானும் துலுக்கானமும் மாரிதாசும்,டில்லி நம்சு ஸ்கானையும் இஸ்துகினு கெளம்பினோம்.. பாதி வழில துலுக்கானம் சொல்லிகினான் எனக்கு மூட் அவுட் ஆய் போச்சி பொண்டாட்டி நாபகம் வர்து நான் கயடிக்கிரேன்னுகினான்..
மாரிதாசன் எனக்கு மண்ட வலிக்குது நான் கயட்டிக்கிரேனுகினான்.. 
டில்லி சொல்லிகினான் ஒம்பதாவது சுத்து நாபகம் வருது நானும் கயட்டிக்கிறேனு கயட்டிகினான்.. கட்சில... சரி போங்கடா கய்திங்கலான்னு அப்டியே பார்த்தம்பா.. மார்கழி மாசமா.. எல்லா நாய்களும் மஜால இருக்குதுபா...
சகஜம் தானபா
//சகஜம்தான்//

தங்கச்சிய நாய் கட்சிட்சிப்பா..

கட்சில அப்டியே பாத்துகினிருந்தம்பா.. ஒரு நாய் என்னியேஏ பார்த்துனிந்துது... இன்னாடா இது டிக்கா குடுக்குதேன்னு அப்டியே பாத்தம்பா.. லொல்னு கொற்சிதுபா... கட்சில இந்த நாய்தான் தங்கச்சிய கட்சிருக்கும்னு சொல்லி ஒரே அமுக்கு அமுக்குனம்பா...
அந்த நாய் என் காலையும் கட்சிட்சிப்பாஆ.... 

தங்கச்சிய நாய் கட்சிட்சிப்பா...! 

முக்கிய குறிப்பு: 
தமிழ்மணம் மற்றும் தமிழிஷ்ல மறந்தும்... ஓட்டு கீட்டுனு போட்றாதீங்கபா.... 
________________________________________________________________________________

Wednesday, March 3, 2010

பன்னாட.. வெண்பா...

தமயந்தியிடம்...
தம்மனத்தை வாங்கும் தடந்தோளான்
நளனிடம்
நாற்குணமும் நாற்படையா
ஐம்புலனும் நல்லமைச்சா
தரகர் வேலைக்கே ஆகிப்போச்சா...
வேலை மெனக்கெட்டு பாலைப் பிரிச்சு..
தண்ணியைக் குடிச்சே வீங்கி போச்சு...
அங்க பாரு...
குப்பையோட சேர்ந்து...
தன்னையும் எரிச்சு...
சுண்டக் காய்ச்சுது பால..
பன்னாட... பன்னாட...

___________________________________________________

Tuesday, March 2, 2010

பிஸினெஸ் ஹெட்டும்.. கிரிக்கெட் "மு"ட்டையும்...

வருங்காலப் பிரதமர் என்று தன்னை அறிமுகப் படுத்திக் கொ"ல்லு"ம் பிஸினெஸ் ஹெட் மேதகு திரு சஞ்சய்காந்தி அவர்களுக்கு மினிமீல்ஸ் பதிவு போடச் "சரக்கு" பற்றாக்குறை ஆதலால், அவரின் அப்பாவி உறவுகளான ஆடு, மாடு படங்களை அவர்களின் அனுமதி இல்லாமலேயே கண்டமேனிக்குப் பிடித்துப் போட்டு இம்சைகாந்தி ஆகிக் கொண்டிருக்கிறார்.

"நானும் உங்கள மாதிரிதான்" என்று தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொண்டிருக்கும் இவரின் தலையை ஃபிளாஷ் பொருத்திய கேமரா வைத்துப் படம் பிடிப்பது என்பது கல்லில் நார் உரிப்பதை விடக் கொடுமையானது. இது அறியாத யாரோ பிஸினெஸ் ஹெட்டுக்களின் வீணாப்போன மாநாடு ஒன்றில் படம் பிடிக்கப் போய் நம்ம "வருங்காலப் பிரதமர்" தலை எகிறிப் போய் எட்டு கிலோமீட்டர் தூரத்தில் விழுந்திருக்கிறது. அவரின் தொப்பி மட்டும் கேமராவில் சிக்கியிருக்கிறது. வரலாற்றில் இடம் பிடிக்கப் போகும் அந்த அரிய படத்தை நீங்களும் கொஞ்சம்பாருங்களேன்: 

 

விதி யாரை விட்டது..? எகிறின தலை எகிறினது கிணத்திலயோ, குளத்திலயோ விழுந்திருக்கப்டாதா? அது நேரா போய் இளநீர் சாப்பிட்டுக் கொண்டிருந்த உண்மைத் தமிழன் சார் கையிலயா விழணும்? என்னது அப்புறம் என்னாச்சா? நொங்குதான்...! ஃபிளாஷ் ஆஃப்ல போட்டு எடுத்த இந்தப் படத்தையும் கொஞ்சம் பாருங்க...!


 
 ஹும்... நன்றி ஹிந்துப் பத்திரி"கை"..  

___________________________________________________________________

கிரிக்கெட் தொடர் பதிவு ஒண்ணு பன்னிக்காய்ச்சல் வைரஸ் வேகத்தில பரவிக்கிட்டிருக்கு. எனக்கு தொத்துறதுக்குள்ள ஒரு 'டம்மி' ஃப்ளு சாப்ட்டு வைப்போம்.

கிரிக்கெட் அப்டிங்கிறதுக்கு தமிழ்ல சில்வண்டு என்று பேருங்க. இது வெட்டுக்கிளி மற்றும் தத்துக்கிளி  போல இருக்கிறதால... இதுவா.. அதுவான்னு கன்பீசன் ஆகிப் போவுமாமுங்க. கிட்டத் தட்ட தொள்ளாயிரம் வகையான கிரிக்கெட் உண்டாமுங்க... அடி ஆத்தீ. அப்புறம் பாலா சார் மாதிரி இதுங்களும் nocturnal, சாமக்கோ.... இல்லை சாமக்கிரிக்கெட்டுங்க. டிரிட் டிரிட்.. அப்டின்னு இரவில இதுங்க ரீங்காரிக்கிற சத்தம் இருக்கே செம த்ரில்லிங். அப்புறம் எல்லா வண்டும் போல... சில்வண்டும் முட்டை போட்டுதான் குஞ்சு பொரிக்குதாமுங்க. அந்தப் பொரியல் நல்லா இருக்குமான்னு யாரோ கேக்குற மாதிரி இருக்கே... சாப்ட்டு பார்த்து சொல்லுங்க.

முகிலன்... என்னைப் போய்... கிரிக்கெட்டு புடிக்காதுன்னு சொல்லிப்புட்டியளே... இதை வரலாறு மன்னிக்குமா... அவ்வ்வ்வ்...

தொடர் இடுகை போட நான் யாரையும் அழைக்கணுமே..?.. அட என்ன இப்டி ஓடுறீங்க... அட நில்லுங்க.... சின்னம்மிணி.. நீங்களாவது நில்லுங்க... நான்தான் யாரும் கூப்ட முன்னாடியே பதிவு போட்டுட்டேன்ல... அதனால யாரையும் கூப்ட மாட்டேன்... இத சொல்றதுக்குள்ள... இப்டியா... அவ்வ்வ்வ்.... 

சஞ்சய் மோனே... அப்ப வரட்டா.... அடுத்த வாட்டி வாத்து படம் புடிச்சிக்கிட்டு வாங்.... க்வாங்...! பாசக்காரப் பசங்கடா சாமி.... நம்மள மொக்கை போட வைக்க இவ்ளோ கஷ்டப்படணுமா அப்பு...!!