தொடர் இடுகை எழுத அழைத்த ஜெஸ்வந்தியின் அன்புக்காக இந்தப் பதிவு...
இந்திரா... !
எங்கே மழை
மண்வெட்டியை
மண்பாறையில்
அறைந்தபடி
இவ்வுலகின்
இறுதி மனிதன்
வருணனைக் கேள்
கடலை எங்கோ
ஒளித்து விட்டான்
சண்டாளன்!
பாறை வெடிப்பில்
முனகல் கேட்டது
என்னது..
மடிந்து போன
மண்புழுவா பேசுவது..
மடிந்தது மண்புழுவல்ல
என் மாண்பு
இறுமாப்பில்
இடியை அனுப்பினேன்
தெறித்து விட்டதென்
தலையிலேயே..
இறுதித் தறுவாயில்
தெளிந்து விட்டேன்
வருணனும்
செத்துவிட்டான்
சபிக்கப்பட்டு விட்டோம்
நாம் மனிதர்களால்
கடவுளை நம்பியது
அவர் குற்றமல்ல
மனிதனை நம்பியது
எம் குற்....
ஆ.. இந்த்....!
பின்...
அயல் நட்சத்திரத்தின்
ஒரு கோள்
நீரில் மிதக்கும்..
நீரற்ற தேசம் தேடி
பறக்கும் பந்தனுப்புவர்
பூமியில் நீர் இருந்த
சுவடும் இருக்காது
*&^%$#$%^&* என்று
ஹூரேயை
மொழிபெயர்த்துக்
கத்துவர்..
சிங்களர்
சனிக் கிரகத்திலிருந்து
பூமியைப் படம்பிடிப்பர்
வெடித்த பூமியின்
நடுவில் ரோபோக்கள்
நடமிடுவர்..
மீண்டும் போர்..!
______________________
அப்புறம் நமக்கு பாரதியைக் கூப்டலைன்னா விடியாதே..
உயிரே நினது பெருமை யாருக்குத் தெரியும்..
நீ கண் கண்ட தெய்வம்...
எல்லா விதிகளும் நின்னால் அமைவன..
எல்லா விதிகளும் நின்னால் அழிவன..
உயிரே... நீ காற்று.. நீ தீ... நீ நிலம்... நீ... நீர்... நீ வானம்..
உயிரே... உயிரே... !
(குழம்புபவர்களுக்கு இது மணிரத்னம் படப் பாடல் அல்ல..)
உயிருக்குப் பதிலா நீர் அப்டின்னும் போட்டுக்கலாம்... அப்போ நீ நீர்-ன்னு வருமே.. ஆமாம் நீர் நீர்தான்..!
தண்ணீர்ப் பற்றாக்குறை அல்லது அதன் அழிவில் என்னுடைய பங்கு எவ்வளவு தூரம் இருக்கிறது என்கிற பிரக்ஞை கூட இல்லாத எனக்கு இது பற்றி எழுதும் அருகதை இருக்கிறதா என்பது ஒரு புறம்... இதனால் என்ன ஆகி விடப்போகிறது என்கிற சிறு சலிப்பு மறுபுறம்.. ஒன்றை ஒன்று விஞ்ச..
இந்திரா... !
எங்கே மழை
மண்வெட்டியை
மண்பாறையில்
அறைந்தபடி
இவ்வுலகின்
இறுதி மனிதன்
வருணனைக் கேள்
கடலை எங்கோ
ஒளித்து விட்டான்
சண்டாளன்!
பாறை வெடிப்பில்
முனகல் கேட்டது
என்னது..
மடிந்து போன
மண்புழுவா பேசுவது..
மடிந்தது மண்புழுவல்ல
என் மாண்பு
இறுமாப்பில்
இடியை அனுப்பினேன்
தெறித்து விட்டதென்
தலையிலேயே..
இறுதித் தறுவாயில்
தெளிந்து விட்டேன்
வருணனும்
செத்துவிட்டான்
சபிக்கப்பட்டு விட்டோம்
நாம் மனிதர்களால்
கடவுளை நம்பியது
அவர் குற்றமல்ல
மனிதனை நம்பியது
எம் குற்....
ஆ.. இந்த்....!
பின்...
அயல் நட்சத்திரத்தின்
ஒரு கோள்
நீரில் மிதக்கும்..
நீரற்ற தேசம் தேடி
பறக்கும் பந்தனுப்புவர்
பூமியில் நீர் இருந்த
சுவடும் இருக்காது
*&^%$#$%^&* என்று
ஹூரேயை
மொழிபெயர்த்துக்
கத்துவர்..
சிங்களர்
சனிக் கிரகத்திலிருந்து
பூமியைப் படம்பிடிப்பர்
வெடித்த பூமியின்
நடுவில் ரோபோக்கள்
நடமிடுவர்..
மீண்டும் போர்..!
______________________
எல்லாம் சரி.. என்னால் இப்போதைக்கு என்ன செய்ய முடியும்.. இன்றைக்கு நான் ஏதாவது முடிவெடுத்தே ஆக வேண்டும்.. நான் இப்போதைக்கு தண்ணீரில் கல்லெறிய மாட்டேன்... அவ்ளோதான்... மாதக் கணக்காமல் குளிக்காதிருந்து தண்ணீரை மிச்சம் பிடிப்பவர்கள் தெய்வங்களுக்குச் சமானமானவர்கள்.. நான் தெய்வமல்ல..
உருப்படியா ஏதாவது தெரிஞ்சுக்கணும்னா இந்தப் படப்பொட்டிய க்ளிக் பண்ணுங்க..
உருப்படியா ஏதாவது தெரிஞ்சுக்கணும்னா இந்தப் படப்பொட்டிய க்ளிக் பண்ணுங்க..
அப்புறம் நமக்கு பாரதியைக் கூப்டலைன்னா விடியாதே..
உயிரே நினது பெருமை யாருக்குத் தெரியும்..
நீ கண் கண்ட தெய்வம்...
எல்லா விதிகளும் நின்னால் அமைவன..
எல்லா விதிகளும் நின்னால் அழிவன..
உயிரே... நீ காற்று.. நீ தீ... நீ நிலம்... நீ... நீர்... நீ வானம்..
உயிரே... உயிரே... !
(குழம்புபவர்களுக்கு இது மணிரத்னம் படப் பாடல் அல்ல..)
உயிருக்குப் பதிலா நீர் அப்டின்னும் போட்டுக்கலாம்... அப்போ நீ நீர்-ன்னு வருமே.. ஆமாம் நீர் நீர்தான்..!