header photo

Sunday, November 8, 2009

சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும்...

Part 1
Part 2
Part 3
Part 4
Part 5
Part 6

இந்து சமுத்திரத்தின் நித்திலம்... தலையாக யாழ்ப்பாணம்... மூளையாக வடமராட்சி.. (இது என்னுடைய வர்ணனை அல்ல.. அனைவரும் அறிந்ததொன்று..).. மூளைகள் எல்லாம் ஒன்று சேர்ந்தால் என்ன ஆகும் என்று செத்துச் செத்து.. கட் அவுட் மார்க்ஸ் ஏற்றி ஏற்றி.. சிகரத்தில் வைக்கப்பட்டிருக்கும் யாழ்ப்பாணம்...

இடிபாடுகள்... வெடிகள்... குண்டுகள்.. பொருளாதாரத் தடைகள்... மின்சாரத் தடை.. ஆப்பிரகாம் லிங்கன் தெரு விளக்கொளியில் படித்தார்... கால் மடித்து.. கர்ப்பாசன நிலையில் அமர்ந்து... மெழுகுவர்த்திச் சுவாலைக்கும்.. தலை முடிக்கும்.. சென்டிமீட்டர் அளவு இடைப்பட்ட தூரத்தில்.. குனிந்து.. புத்தகத்திற்குள் முகத்தைப் புதைத்துப் படித்து... ஒரு கட்டத்தில் அதுவும் இல்லாது போய்... கட் அவுட் மார்க்ஸ் மட்டும் மில்லிமீட்டர் கூட இறங்காது... ஏணியில் கால் வைத்தபடியே...

பள்ளி விடுமுறை தவிர... வருடம் தவறாது மூன்று திங்கள் பிரசவ விடுப்பில் போய்க்கொண்டிருந்து... வகுப்பிற்கு சமூகமளிக்கும் தருணங்களில்... புத்தகத்தில் இருப்பதை ஜெட் வேகத்தில் வாசித்து... பாதியிலேயே தூங்கும் தமிழாசிரியை.. போன்ற புண்ணியவதிகளுக்கும்... மற்றும் மாணவ மணிகளுக்கும்... டியூஷன் வரப்பிரசாதம்.. பள்ளியை விட அது ஒரு படி மேலேயே....

டியூஷனில் கூட... கடைசி வரிசை வாங்கில்கள் உண்டு... பேனாவையும்.. குறிப்பேட்டையும்... வெறுமையாக வைத்திருந்து... காது கிழிபடுபவர்கள் உண்டு... "ஒவ்வொரு வினைக்கும்... அதற்கு எதிர்த் திசையிலிருந்து அதற்கு நிகரான எதிர் வினை நிகழும்".... 'எழுந்திருடா... நான் இப்போ சொன்ன நியூட்டனின் கோட்பாடு என்ன..?'.. '..!!!...'... 'போடா வெளில... இனிமே இந்தப் பக்கம் வந்தே... தொலைச்சிடுவேன்'... புத்தகம் தூக்கி எறிந்து விரட்டப் பட்டவர்கள் உண்டு... பள்ளியை விட.. பன்மடங்கு மேலாக ஒழுங்கு முறை கடைப்பிடித்தல் உண்டு... டியூஷன் மந்திரமோ... தந்திரமோ அன்று... அதுவும் ஒரு பாடசாலை.. இதை ஏன் சொல்லிக் கொண்டிருக்கிறேன்...?....

வீட்டில் தினசரி... வத்தக் குழம்பையும்... சோற்றையும் வைத்துக் கொண்டு... மாதா மாதம் டியூஷன் ஃபீஸ் கட்டி.. கட் அவுட் மார்க்ஸிடம்... மல்லுக் கட்டிக் கொண்டிருந்த.. பெரியவர்கள்... குழந்தைகள்... இது பற்றி எல்லாம் சற்றும் கவலையற்று... யாழ்ப்பாணர்... பணத்தில் புரண்டு.. படித்துக் கொண்டிருப்பவர்கள் போல்... காழ்ப்புணர்ச்சியுடன் கறுவி.. (கடைசியில் நாசமாய் போன..).. தமிழர் பலரும்... தமிழரல்லாத சிலரும்... (தமிழர் கவனிக்க..)...

இதே வடமராட்சியில்... "விடுதலையைக் கூறு போட்டு"... எரித்தார்கள்...! ஆம்... "ஆபரேஷன் லிபரேஷன்"... என்றால்... 'விடுதலைக்கான போர் நடவடிக்கை' என்று மேதைகள் மொழிபெயர்க்கலாம்... அது அப்படியா என்று.. என்னுடைய குழந்தைப் பருவத்தில்... நம் ஊரில் அரங்கேற்றப்பட்ட... வெறியாட்டத்தை... அடுத்த பாகத்தில் படித்து முடித்தபின்.. நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்...

கட் அவுட் அல்லது கட் ஆஃப் மார்க்ஸ்.. பல்கலைக் கழகத்திற்குள் நுழைவதற்குத் தகுதியான புள்ளிகள்...! மூன்று பாடத்திற்கு... 300 புள்ளிகள்...!

உதாரணமாக வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்... 270, 260 புள்ளிகள் பெற்று மருத்துவம் படிக்க இயலும்... யாழ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்... 290 அல்லது.. அதற்கு மேல் எடுத்திருந்தால் மருத்துவம் படிக்க முடியும்... (புள்ளிகள் சரியான தரவுகள் அல்ல... ஆனால் இவ்வளவு வேறுபாடு இருக்கும்)
அதனால் அவர்கள் உயிரைக் கொடுத்துப் படிக்க வேண்டி இருக்கும்... படித்து 289.5 புள்ளிகள் எடுத்து... மருத்துவம் கிடைக்காது பிஎஸ்ஸி படித்துக் கொண்டிருப்பான்... கொழும்பிலுள்ள ஒரு சிங்கள மாணவன் 260 புள்ளிகள் எடுத்து மருத்துவர் ஆகிக் கொண்டிருப்பான்..


(தொடரும்...)

Tuesday, November 3, 2009

இது ஒரு தொடர் கதை...



எங்கேடி ப்ரியா? ஏய் வா... நேத்து இடைல விட்ட கதைய சொல்லி முடி... பள்ளி மைதானத்தில்... ஓரமாக இருக்கும் மரநிழலில் இடம் பிடித்து... லஞ்ச் பாக்ஸ் திறந்து வைத்துக் கொண்டு.. வட்டமாக உட்கார்ந்து.. பேசும் கதைகள்... பாடும் பாட்டுக்கள்... (ஓ..! இது வேற ஒரு பதிவில் சொல்லலாம்..=))..)..

மனிதர்களில் எங்கு சென்றாலும்.. தொற்றிக்கொண்டே செல்லும் வியாதி... பொறாமை... உட்குத்து.. வெளிக்குத்து... இருப்பதையோ... இல்லாததையோ... காதுக்கு காது ஊதிப் பெருசாக்கும்.. மிக மிகச் சில... சக்திகள்... அதையே தூசியை ஊதுவது போல்... ஊதித் தள்ளிவிட்டு... பக்கத்திலேயே இருக்கும்.. அருமைத் தோழிகள்... பால்ய தோழிகள்... பள்ளித் தோழிகள்...

விதியோ.. சதியோ... எழுத்து... தலையிலோ... கை ரேகையிலோ.. அவர்கள் அனைவரையும் துறந்து.. முற்றிலும் தெரியாத ஒரு நாட்டில்... சூழலில்... சற்றும் அறிந்திராத மொழியில்.. கல்லூரியைத் தொடர்ந்த போது.. அவர்கள் இரவிலும்.. பகலிலும்.. கனவுகளில்... அதே வெள்ளை யூனிஃபார்மில்... அதே டையில்... பக்கத்தில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருப்பார்கள்... இப்பவும்.. எப்பவும்.. நினைவுகளிலிருந்து இவர்களை நீக்குவதென்பது இயலாத விடயம்...

இந்த இடுகை என்பது... அதே மாதிரியான இன்னொரு அனுபவம்... இதுவும் எனக்கு நிரந்தரமல்ல... இன்றோ நாளையோ.. வேலைப்பளு காரணமாகவோ... இன்ன பிற காரணங்களாலோ... நீண்ட இடைவெளி நேரலாம்... தொடர்பு விட்டும் போகலாம்.. (தோடா சந்தோஷத்தப் பாரு.. அவ்ளோ சீக்கிரம் எல்லாம் போக மாட்டேன் =))..)

இங்கு.. நான் மெச்சி வியந்து பாராட்டி நிமிர்ந்து பார்த்தவர்கள் அதிகம்.... அவசியமில்லாமலேயே... அழகான இசைத்தட்டில்.. கீறல் விழுந்தது போல்... உள்ளொன்று வைத்து.. சிலேடை மொழியில்... சிறுமடல் வரைந்து தொலைவில் சென்று விட்ட சிலரும்.. மற்றும்... மிக மிகச் சில.. 'மிக'ப் பெரியவர்களையும் தவிர... நான் கண்டு கொண்டிருப்பது மிகவும்.. எளிமையான... இனிமையான... மனதுக்கு இதமான.. அன்பு சூழ்ந்த உலகம்...

இந்த நினைவலைகளில்... அங்கொன்றும் இங்கொன்றுமாக... மறக்க முடியாத பின்னூட்டங்கள் மூலமான ஊக்குவிப்பு.. அல்லது.. விருது என்ற பெயரில் 'ஹலோ... உங்க இடுகை எனக்குப் புடிச்சிருக்கு'.. என்று மறைமுகமாக அன்பை வெளிப்படுத்தும்.. சில ஊக்கங்கள்...

ஒரு ஐம்பது ஆண்டுகள் கழித்து.. கூன் விழுந்து.. சுருக்கங்கள் விழுந்து... தடித்த கண்ணாடி ஃப்ரேம் வழியே... எதிர்காலச் சந்ததியினரின்.. இடுகைகளைப் படிக்கும் பொழுது... இந்த ஞாபகங்கள்... பற்கள் தொலைத்த வாயின்.. உதடு வழியே.. புன்னகைக் கீற்றாகத் தோன்றி... முகச் சுருக்கத்தை.. சில நொடிகள் நீக்கி விடலாம்..

இம்பூட்டு பில்ட் அப்... எதுக்குன்னு பார்க்கிறியளா? ஜோதி... வானம்பாடி வரிசையில்.. முரளி பகிர்ந்துக்கிட்ட இந்த அன்பையும்.. சந்தோஷத்தையும் (Scrumptious Blog Award) இன்னொரு வாட்டி பகிர்ந்துக்கலாம்னுதான்...

வானம்பாடிகள், அது சரி, சூர்யா கண்ணன் , துபாய் ராஜா, கயல், கதிர், பிரபாகர், மகேஸ், நைஜீரியா ராகவன், சஞ்சய், அருணா, ஜோதி, வசந்த், ஈ ரா, கோபி, சத்ரியன், நேசமித்ரன், பாலாசி, வேல்ஜி, ஹேமா, ஞானசேகரன், ராதாகிருஷ்ணன், பின்னோக்கி, லவ்டேல்மேடி, ஆரூர், பித்தனின் வாக்கு, தங்கமணி, தியா, ஜீவன், ஜெஸ்வந்தி, ஜோதிஜி...(லிஸ்ட் போய்க்கிட்டே இருக்கே... ம்ம்...).. முரளி..

(நான் தொடரும் இடுகைகளில் முகவரிகளை நீந்திப் பிடித்துக் கொள்ளுங்கள் ப்ளீஸ்... =)).. )

இப்பொழுது இவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.. இன்னொரு சுற்று வரும்போது... மற்றவர்களையும் சேர்த்துக் கொள்ளலாம்... என்ன..? நானே எல்லாருக்கும் கொடுத்துட்டா... நீங்க எப்டியா..? இப்டியே மாத்தி மாத்திக் கொடுத்துக்க வேண்டியதுதான்...!

இது என்ன சின்னப் புள்ளத்தனமால்ல இருக்கு என்று முகம் சுழிக்கும் பெரியவர்கள் இருப்பின்... மன்னிக்கவும்.. எனக்கும் இந்தப் பெரிய மனுஷித் தன்மை இருக்கத்தான் செய்கிறது... ஆனாலும்... எளிய குழந்தை மனசையே.. பெரும்பாலும் ... மனது மிகவும் விரும்புகிறது...

மன்னிக்கவும்... மணி பத்தாகப் போகிறது.. தூக்கம் கண்களைத் தழுவுகிறது... அலுவலகம் இப்பவே கண் முன்னால் வந்து மிரட்டுகிறது... குட் நைட்...!


(யார்அது. .? அப்பாடி தொலைஞ்சான்னு பெருமூச்சு விடுறது.. வருவோம்ல... இருங்கடி..)

___/\___