header photo

Saturday, October 3, 2009

பூச்சியும்.. கண்ணாமூச்சியும்..

குகையின்..
கும்மிருட்டில்..
குத்துவிளக்கொன்று..
ஒளிர்ந்து கொண்டிருந்தது..
ஆந்தை ஒன்று..
இரவு பகல் அறியாது..
எந்நேரமும்..
விழித்திருந்தது..
சீரற்று அவ்வப்போ அலறியது..
குகைப்பாறை அதிர்ந்தது..
விளக்குச் சுவாலை அசைந்தது..
ஒரு மின்மினிப் பூச்சியும்..
நெய் விளக்கொன்றும்..
அதனுடன் சேர்ந்து..
சில விட்டில் பூச்சிகளும்..
சற்று எட்டிப் பார்த்தன..
விட்டில் பூச்சிகள்..
விளக்குகளில் விழாது தப்பி..
ஆந்தைக்கிரையாயின..
நெய்யும் விளக்கும்..
நிமிடங்களில் கரைந்தன..
குத்து விளக்கு..
அசையாதிருந்தது..
ஆந்தையின் கண்..
மின்மினியை சுற்றியது..
சுவர்களில் முட்டி மோதி..
குகையை வட்டமிட்ட மின்மினி..
ஆந்தைக்கு பூச்சி காட்டிக் கொண்டிருந்தது..!


......

46 ஊக்கம்::

thamizhparavai said...

நல்ல காட்சிப் படிமம்...
(கவிதைக்குள்ள வேறேதும் உள்குத்து இருக்கான்னு தெரியலையே :-( )

பிரபாகர் said...

//மின்மினி..
ஆந்தைக்கு பூச்சி காட்டிக் கொண்டிருந்தது..!
//

விவரித்தலை கண்முன்னே காட்சியாக என்னும் போது அருமையாய் இருக்கிறது. விட்டில் பூச்சிகள் வீணாய் இரையாவதையும் மின்மினிகள் தண்ணி காட்டுவதையும் அழாகாய் சொல்லியிருக்கிறிர்கள். அருமை.

பிரபாகர்.

ஆயில்யன் said...

//விட்டில் பூச்சிகள் வீணாய் இரையாவதையும் மின்மினிகள் தண்ணி காட்டுவதையும் அழாகாய் சொல்லியிருக்கிறிர்கள். அருமை//

அதே!

ப்ரியமுடன் வசந்த் said...

இருக்குறத விட்டுட்டு பறக்குறதுக்கு ஆசைபடுதோ ஆந்தை...?

சைடு குத்து, உள் குத்து, நேர்குத்து இருக்குதாங்கோ..?

R.Gopi said...

நல்லா எழுதி இருக்கீங்க லகலக...

இதனால் தாங்கள் சொல்ல வருவது என்னவோ???

Unknown said...

அடங்கொன்னியா.... கவிதைக்குள்ள ஒரு டிஸ்கவரி சேனலே ஓடுதே....!! கலக்குறீங்க அம்முனி....!!

ஈரோடு கதிர் said...

காட்சிப்படுத்தல் அருமை


அதென்ன....
பழமை கொக்குங்கிறார்
நீங்க ஆந்தைக்கிறீங்க...
புரட்டாசி மாசத்துல கோழியை ஞாபகப்படுத்தாத வரை சந்தோஷம்

vasu balaji said...

இது லகலக எழுதின கவிதையா? இவ்வளவு டெர்ரரா இருக்கே!

கலகலப்ரியா said...

//தமிழ்ப்பறவை said...

நல்ல காட்சிப் படிமம்...
(கவிதைக்குள்ள வேறேதும் உள்குத்து இருக்கான்னு தெரியலையே :-( )//

நன்றிங்க.. (எனக்கும் தெரியல.. தேடிப் பார்க்கலாம்..)

கலகலப்ரியா said...

//பிரபாகர் said...

//மின்மினி..
ஆந்தைக்கு பூச்சி காட்டிக் கொண்டிருந்தது..!
//

விவரித்தலை கண்முன்னே காட்சியாக என்னும் போது அருமையாய் இருக்கிறது. விட்டில் பூச்சிகள் வீணாய் இரையாவதையும் மின்மினிகள் தண்ணி காட்டுவதையும் அழாகாய் சொல்லியிருக்கிறிர்கள். அருமை.

பிரபாகர்.//

ரொம்ப நன்றி பிரபாகர்..

கலகலப்ரியா said...

ஆயில்யன் said...

//விட்டில் பூச்சிகள் வீணாய் இரையாவதையும் மின்மினிகள் தண்ணி காட்டுவதையும் அழாகாய் சொல்லியிருக்கிறிர்கள். அருமை//

அதே!//

நன்றி ஆயில்யன்.. (இப்டி ஆமாம் போடுற வேல நல்லா இருக்கே..)

கலகலப்ரியா said...

//பிரியமுடன்...வசந்த் said...

இருக்குறத விட்டுட்டு பறக்குறதுக்கு ஆசைபடுதோ ஆந்தை...?

சைடு குத்து, உள் குத்து, நேர்குத்து இருக்குதாங்கோ..?//

வசந்து வெவரமாத்தான் பேசுறாப்பா.. அது என்னய்யா ஆள் ஆளுக்கு குத்துன்னுக்கிட்டு.. நான் குத்துப் பாட்டே பார்த்ததில்ல.. இதில சைடு.. வெளி.. உள்னா... என்னத்த சொல்லுறது..

துபாய் ராஜா said...

//கவிதை, சிந்தனை, நகைச்சுவை (என்றும் கொள்ளலாம்//

மனத்தை கொல்லும் கவிதை....
கொள்ளை கொள்ளும் கவிதை.....

கலகலப்ரியா said...

//R.Gopi said...

நல்லா எழுதி இருக்கீங்க லகலக...

இதனால் தாங்கள் சொல்ல வருவது என்னவோ???//

ஆஹா.. இதுக்கும் உரை எழுத சொன்ன நியாயமா கோபி..

துபாய் ராஜா said...

வித்தியாசமான களம்.

புதுமையான போராட்டம்.

கவிதைவரிகளில் காட்சிகள் கண்முன்.

வாழ்த்துக்கள் ப்ரியா.

கலகலப்ரியா said...

//லவ்டேல் மேடி said...

அடங்கொன்னியா.... கவிதைக்குள்ள ஒரு டிஸ்கவரி சேனலே ஓடுதே....!! கலக்குறீங்க அம்முனி....!!//

நன்றி மேடி..

கலகலப்ரியா said...

//கதிர் - ஈரோடு said...

காட்சிப்படுத்தல் அருமை


அதென்ன....
பழமை கொக்குங்கிறார்
நீங்க ஆந்தைக்கிறீங்க...
புரட்டாசி மாசத்துல கோழியை ஞாபகப்படுத்தாத வரை சந்தோஷம்//

ஆமாம்.. நாமதான் வந்து ஞாபகப் படுத்தணும் போங்க.. (ஆமாம்.. புரட்டாசிக்கும்.. கோழிக்கும் என்ன லிங்கு..?)

கலகலப்ரியா said...

/வானம்பாடிகள் said...

இது லகலக எழுதின கவிதையா? இவ்வளவு டெர்ரரா இருக்கே!/

லகலக யார்னு தெரியலீங்க..

கலகலப்ரியா said...

//துபாய் ராஜா said...

//கவிதை, சிந்தனை, நகைச்சுவை (என்றும் கொள்ளலாம்//

மனத்தை கொல்லும் கவிதை....
கொள்ளை கொள்ளும் கவிதை.....//

ரொம்ப நன்றி துபாய் ராஜா..

vasu balaji said...

கலகலப்ரியா said...
/லகலக யார்னு தெரியலீங்க../

பின்னூட்டம் போடுறது கலகல. அது தெரியுது.

துபாய் ராஜா said...

உயிராதார போராட்டத்தை விளக்கும் உன்னத கவிதை உலகநடப்போடு ஒப்பிட்டுப்பார்த்தால் ஒத்துப்போகிறது....

கலகலப்ரியா said...

//துபாய் ராஜா said...

வித்தியாசமான களம்.

புதுமையான போராட்டம்.

கவிதைவரிகளில் காட்சிகள் கண்முன்.

வாழ்த்துக்கள் ப்ரியா.//

நன்றிங்க.. கவிதையா வாழ்த்தி அசத்திப்புட்டீங்க..

துபாய் ராஜா said...

//கலகலப்ரியா said...
(ஆமாம்.. புரட்டாசிக்கும்.. கோழிக்கும் என்ன லிங்கு..?)//

ப்ரியா, புரட்டாசி மாதம் நிறையபேர் அசைவம் சாப்பிடமாட்டாங்க.... அதைத்தான் கதிர் சொல்லியிருக்கார்.....

கலகலப்ரியா said...

//துபாய் ராஜா said...

உயிராதார போராட்டத்தை விளக்கும் உன்னத கவிதை உலகநடப்போடு ஒப்பிட்டுப்பார்த்தால் ஒத்துப்போகிறது....//

:-) ம்ம்.. படிமத்த படிமம் படிமமா பாராட்டினா.. எனக்கு தலை சுத்துது.. :(.. நெம்ப நன்றி..

கலகலப்ரியா said...

//துபாய் ராஜா said...

//கலகலப்ரியா said...
(ஆமாம்.. புரட்டாசிக்கும்.. கோழிக்கும் என்ன லிங்கு..?)//

ப்ரியா, புரட்டாசி மாதம் நிறையபேர் அசைவம் சாப்பிடமாட்டாங்க.... அதைத்தான் கதிர் சொல்லியிருக்கார்.....//

ஓஹோ.. தகவலுக்கு நன்றி ராஜா..

துபாய் ராஜா said...

//கலகலப்ரியா said...

:-) ம்ம்.. படிமத்த படிமம் படிமமா பாராட்டினா.. எனக்கு தலை சுத்துது.. :(.. நெம்ப நன்றி..//

எனது பாராட்டில் உள்குத்து,வெளிக்குத்து, கும்மாங்குத்து எதுவுமே கிடையாது ப்ரியா....

ஏனோ இந்த கவிதை என்னை மிகவும் ஈர்த்துவிட்டது. திரும்ப திரும்ப படிக்க தூண்டுகிறது. ஒவ்வொருமுறை படிக்கும்போதும் ஒவ்வொரு அர்த்தம் தருகிறது. சமீபத்தில் படித்ததில் என்னை மிகவும் பாதித்த கவிதை இது.....

இது மாதிரி வித்தியாசமா நிறைய எழுதுங்கள் ப்ரியா...

இராகவன் நைஜிரியா said...

கவிதை பல எண்ணங்களை மனதிற்குள் விதைக்கின்றது. உருவகங்கள் அவர் அவர்கள் கற்பனைக்கே விட்டு விட்டீர்கள். அருமை.

விஜய் said...

நல்லா இருக்குங்க

கலகலப்ரியா said...

//துபாய் ராஜா said...

//கலகலப்ரியா said...

:-) ம்ம்.. படிமத்த படிமம் படிமமா பாராட்டினா.. எனக்கு தலை சுத்துது.. :(.. நெம்ப நன்றி..//

எனது பாராட்டில் உள்குத்து,வெளிக்குத்து, கும்மாங்குத்து எதுவுமே கிடையாது ப்ரியா....

ஏனோ இந்த கவிதை என்னை மிகவும் ஈர்த்துவிட்டது. திரும்ப திரும்ப படிக்க தூண்டுகிறது. ஒவ்வொருமுறை படிக்கும்போதும் ஒவ்வொரு அர்த்தம் தருகிறது. சமீபத்தில் படித்ததில் என்னை மிகவும் பாதித்த கவிதை இது.....

இது மாதிரி வித்தியாசமா நிறைய எழுதுங்கள் ப்ரியா...//

ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி ராஜா.. கும்மாங்குத்து எதுவும் இல்லைன்னு தெரியும்..

நெகிழ்வாக இருக்கிறது.. யாரும் புரியலைன்னு சொல்லாதது ரொம்ப சந்தோஷமா இருக்கு.. =)

கலகலப்ரியா said...

//இராகவன் நைஜிரியா said...

கவிதை பல எண்ணங்களை மனதிற்குள் விதைக்கின்றது. உருவகங்கள் அவர் அவர்கள் கற்பனைக்கே விட்டு விட்டீர்கள். அருமை.//

நன்றி ராகவன்..

கலகலப்ரியா said...

//கவிதை(கள்) said...

நல்லா இருக்குங்க//

நன்றிங்க..

Anonymous said...

எமது www.sindhikkalam.blogspot.com தளத்தை பார்வையிடவும்.
பிடித்திருந்தால் பின்தொடருங்கள்

Unknown said...

நமக்கெல்லாம் அவன் உட்கார்ந்திருந்தான், அவள் வந்தாள் காகம் பறந்ததுன்னு எழுதுனாலே தலைய பிச்சிக்குவோம். இதுல குத்து விளக்குன்னு சொல்றிங்க, விட்டில் பூச்சின்றிங்க, குகைப்பாறைன்னு வேற சொல்றிங்க, ஆந்தை வேற இருக்கு.. ஒரே டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ராயிட்டேன்..
உஷ் இப்பவே கண்ணக் கட்டுதே..

கலகலப்ரியா said...

//முகிலன் said...

நமக்கெல்லாம் அவன் உட்கார்ந்திருந்தான், அவள் வந்தாள் காகம் பறந்ததுன்னு எழுதுனாலே தலைய பிச்சிக்குவோம்.//

அது ஒண்ணுமில்ல.. சாதரணமா எழுதினாலே என்ன உள்குத்தோன்னு நினைக்கணும்.. இல்லைன்னா ப்ளாக்கருக்கு என்ன மருவாதி.. ஹிஹி.. இதும் ஒரு குவாலிஃபிகேசன்தானுங்க..

//இதுல குத்து விளக்குன்னு சொல்றிங்க, விட்டில் பூச்சின்றிங்க, குகைப்பாறைன்னு வேற சொல்றிங்க, ஆந்தை வேற இருக்கு.. ஒரே டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ராயிட்டேன்..
உஷ் இப்பவே கண்ணக் கட்டுதே..//

அட விடுங்க.. டேக் இட் ஈஸி... இப்போ என்ன.. நெக்ஸ்ட் டைம் பெட்டரா ட்ரை பண்றேன்..

ஹேமா said...

ப்ரியா,என் கண்ணோட்டத்தில் அரசியல் வாசம் வீசுது கவிதைல.சரியா?காட்டிக் கொடுக்கிற
எட்டப்பர் கூட்டத்துக்கு மாதிரி !

கலகலப்ரியா said...

//ஹேமா said...

ப்ரியா,என் கண்ணோட்டத்தில் அரசியல் வாசம் வீசுது கவிதைல.சரியா?காட்டிக் கொடுக்கிற
எட்டப்பர் கூட்டத்துக்கு மாதிரி !//

ஐயயோ.. எனக்கு அரசியல் தெரியாதும்மா..

ஆ.ஞானசேகரன் said...

//விட்டில் பூச்சிகள்..
விளக்குகளில் விழாது தப்பி..
ஆந்தைக்கிரையாயின..
நெய்யும் விளக்கும்..
நிமிடங்களில் கரைந்தன.//

நல்ல வரிகள்

கலகலப்ரியா said...

நன்றி ஞானசேகரன்

ஈ ரா said...

ஹைக்கூக்களுக்கு மத்தியில்

குகைக்களத்தில் ஒரு

கூகை...

விடியா இரவின்

விட்டில் பூச்சிகளுக்கு மத்தியில்

மின்மினியாய் ஒரு

சிந்தனை..

பிரமாதம்...

கலகலப்ரியா said...

//ஈ ரா said...

ஹைக்கூக்களுக்கு மத்தியில்

குகைக்களத்தில் ஒரு

கூகை...

விடியா இரவின்

விட்டில் பூச்சிகளுக்கு மத்தியில்

மின்மினியாய் ஒரு

சிந்தனை..//

ரொம்ப நன்றி ஈ.ரா....

கவிதையான உங்க பின்னூட்டம்தான் பிரமாதம்..

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

அழகு கவிதை! சுவை அபாரம்!!!!

கலகலப்ரியா said...

//நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமார் said...

அழகு கவிதை! சுவை அபாரம்!!!!//

நன்றிங்கோ..

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

ப்ரியா.. எதை மையமா வைத்து எழுதினீங்கன்னு சொல்ல முடியுமா? கவிதை புரிஞ்சது.. ஆனா நீங்க சொல்ல வந்த கருத்து என்னன்னு புரியலை..

கலகலப்ரியா said...

//Chandhana said...

ப்ரியா.. எதை மையமா வைத்து எழுதினீங்கன்னு சொல்ல முடியுமா? கவிதை புரிஞ்சது.. ஆனா நீங்க சொல்ல வந்த கருத்து என்னன்னு புரியலை..//

இது நியாயமா.. இது உங்க கற்பனைக்கு விடப்பட்டுள்ளது..lol.. mm.. நாட்டு நடப்பை மையமா வச்சுதான் எழுதினேன்..

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

got it.. i thot it was abt tamil cinema hero and villain :))) (min mini poochchi vs owl..)

கலகலப்ரியா said...

//Chandhana said...

got it.. i thot it was abt tamil cinema hero and villain :))) (min mini poochchi vs owl..)//

lol.. not bad.. !