header photo

Sunday, October 4, 2009

பன்மையில் ஒருமை காண்பதென்பது..?

ஒருமைப்பாடு, நல்லிணக்கம், ஒன்றிணைதல், Integration, Assimilation போன்ற சொற்கள் யுத்த பூமிகளிலும், அமைதிப் பூங்காவிலும், அங்கெங்கினாதபடி எங்கும் அடிக்கடி கையாளப் படுகின்றன. இதில் மத நல்லிணக்கம், இன நல்லிணக்கம், சமூக ஒருமைப்பாடு, சமாந்திர ஒருமைப்பாடு (horizontal), பக்கவாட்டு ஒருமைப்பாடு (lateral), செங்குத்து ஒருமைப்பாடு (vertical), உள்குத்து, வெளிக்குத்து போன்ற வார்த்தைகள் மக்களின் வாய்களுக்குள் சிக்கிச் சின்னாபின்னப் பட்டுக் கொண்டிருக்கின்றன.

சமூக மற்றும் நாட்டு நலனில் அக்கறை கொண்டவர்கள் சொந்த நாட்டிலோ.. வெளிநாட்டிலோ.. வாழ்ந்து வரும் வெவ்வேறு இனத்தவரிடையே அவர்களது கலாச்சாரம், பண்பாடு, மதம், இத்யா(ஜா)தி, இத்யாதி பற்றிய பரஸ்பர புரிதலுக்கு, கருத்துப் பரிமாற்றம் மற்றும் இணைந்து வாழ்தல் அவசியம் என்று கழுதைகளாகக் கத்திக் கொண்டிருக்கிறார்கள். இன்றோ, நாளையோ கருத்து பேதம் மற்றும் தவறான புரிதலினால் இன்னொரு இனமோ, மொழியோ அழிந்து போகலாம் என்ற தீர்க்க தரிசனத்தால் விளைந்த எச்சரிக்கை மனப்பான்மையுடன் கூடிய பய உணர்வே இதற்குக் காரணம்.

வெளிநாடுகளில், அந்த நாட்டு மொழியை ஒழுங்காகக் கற்காதிருப்பதே முதற் காரணம் என்று கண்டு பிடித்திருக்கிறார்கள் (!). ஒரே மொழியைப் பேசுபவர்கள் இணைந்து வாழ்கிறார்களா என்றால் யாரிடமும் பதில் இல்லை. மொழி என்பது கருத்துப் பரிமாற்றத்திற்கான ஒரு ஊடகமேயன்றி, முழுமையான கருத்துப் பரிமாற்றமாகாது. மொழி மட்டுமே காரணம் என்று கொண்டால் ஆகக் குறைந்தது தமிழ்ப் பதிவுலகம் சொர்க்கமாக இருந்து கொண்டிருக்க வேண்டும்.

இது சம்மந்தப்பட்ட ஒரு கருத்தரங்கில் ஒரு அம்மையார் ஆர்மேனிய மொழியில் எழுதப்பட்ட ஒரு சிறுகுறிப்பை மின்திரையில் காண்பித்து, தயவுசெய்து இதைப் படியுங்கள் என்று சாதாரணமாகச் சொல்லிவிட்டு, கைகளைப் பின்னால் கோர்த்துக்கொண்டு வேடிக்கை பார்த்தார்கள்.

அந்த மொழி தெரிந்த ஒருவர் கூட அங்கிருக்காததால் சட்டென்று எல்லாரும் உரத்துச் சிரித்து, அந்த அம்மையார் சிரிக்காதிருப்பதைப் பார்த்து, மௌனித்து அதையே பதிலாக்கினார்கள். மொழி தெரியாத நாட்டில் குப்பை கொட்டுவது என்பது இப்படித்தான் இருக்கும்.

ஒரே மொழியைப் பேசுபவர்களிடத்தில் உண்டாகும் கருத்து வேறுபாடு வேறு வகை. கருத்து வேறுபாடு இல்லையெனில் ஒரே நாளில் எல்லாரும் சலிப்படைந்து, அடுத்த நாள் தங்களுக்குத் தாங்களே சமாதி கட்டிக் கொண்டு உள்ளே போய் உட்கார்ந்து விடலாம். ஆனால் என் கருத்துப்படியே மற்றவர்களும், மற்றவர்கள் கருத்துப்படி நானும் நடக்க வேண்டுமென்பதில்தான் சிக்கல் உருவாகிறது.

இரண்டு வார்த்தையில் மொத்தமும் முடிந்து தனித் தனியே, போட்டி போட்டுக் கொண்டு சுற்றிச் சுற்றிச் சுவர் (maze) எழுப்பிக் கொள்வார்கள். இறுதியில் தனியே நாலு சுவருக்குள் அடைபட்டு, வெளியேறும் வழி தெரியாது விழித்து உள்ளேயே சமாதி ஆவார்கள்.

சுவர் எழுப்ப முன்னர் சற்று நிதானிப்பது என்பதும், எழுப்பிய சுவற்றைச் சுரண்டி உதிர்ப்பது என்பதும், "நான்" என்னும் இரண்டெழுத்து ஆணவத்தில் நடைமுறைச் சாத்தியமற்றதாக இருக்கிறது. ஆணவம் என்பது மற்றவர்களுக்கே சொந்தம் என்று ஆணவத்துடன் சொல்லிக் கொண்டிருப்பது நமக்கு மிகவும் வசதியாக இருக்கிறது.

மற்றவை உங்கள் விவாதத்திற்கு விட்டு விடுகிறேன்..

“You have your way. I have my way. As for the right way, the correct way, and the only way, it does not exist.” -
Friedrich Nietzsche

___

75 ஊக்கம்::

vasu balaji said...

/“You have your way. I have my way. As for the right way, the correct way, and the only way, it does not exist.” - Friedrich Nietzsche/

Tell me Priya how did you find the way of writing this way, which makes us agree all the way, and steal our heart away. congratulations anyway.

vasu balaji said...

/ஆனால் என் கருத்துப்படியே மற்றவர்களும், மற்றவர்கள் கருத்துப்படி நானும் நடக்க வேண்டுமென்பதில்தான் சிக்கல் உருவாகிறது./

இதுதாம்மா புரியலை. யாரோ ஒருத்தர் கருத்தை ஒரு சாரார் ஆதரித்து அதை பின்பற்ற அதிலிருந்து சற்றே மாறுதலாய் ஒரு கருத்து வரும்போது சரியா தவறா என்று கூட பார்க்காமல் விமரிசனம் செய்வதோ, ஒதுக்கி வைப்பதோ எப்படி? அப்படியானால் முதலில் ஒருவர் கூறிய கருத்து மட்டும் எப்படி நிலைபெற்றது?

vasu balaji said...

/ஆணவம் என்பது மற்றவர்களுக்கே சொந்தம் என்று ஆணவத்துடன் சொல்லிக் கொண்டிருப்பது நமக்கு மிகவும் வசதியாக இருக்கிறது./

அக்‌ஷர லக்‌ஷம் என்பார்களே, அது இதற்குத் தகும். உச்சி மண்டையில் ஆணி அடிச்சா மாதிரி இருக்கு.

ப்ரியமுடன் வசந்த் said...

மாட்டினான் இங்கிலீஷ்காரன்...

ப்ரியமுடன் வசந்த் said...

உஷ்மெ ஃபரடெதுசரசுததினிக்கி......

ப்ரியமுடன் வசந்த் said...

நானும் இப்பிடித்தான் அரபி கத்துட்டு ஒரு அரபி பொண்ணையாச்சும் லவ் பண்ணலாமுன்னு அரபி கத்துக்கிறேன் முடியலை....

ப்ரியமுடன் வசந்த் said...

//“You have your way. I have my way. As for the right way, the correct way, and the only way, it does not exist.”

கோ அவேன்னு சொல்ற மாதிரியிருக்கு.....

ப்ரியமுடன் வசந்த் said...

//ஆணவம் என்பது மற்றவர்களுக்கே சொந்தம் என்று ஆணவத்துடன் சொல்லிக் கொண்டிருப்பது நமக்கு மிகவும் வசதியாக இருக்கிறது.//

ஃப்ரீயா கிடைக்கிறதே அட்வைஸ் மட்டும்தான் அதையும் ஆணவமா சொன்னா?

ஆ.ஞானசேகரன் said...

//ஆணவம் என்பது மற்றவர்களுக்கே சொந்தம் என்று ஆணவத்துடன் சொல்லிக் கொண்டிருப்பது நமக்கு மிகவும் வசதியாக இருக்கிறது.//

ம்ம்ம்ம்

ஹேமா said...

ப்ரியா, நீங்க சொல்லியிருக்கிற விஷ்யங்கள் நிறையவே யோசிக்க வைக்கிறது.

இராகவன் நைஜிரியா said...

இந்த கட்டுரைக்கு கருத்துச் சொல்லும் அளவு நான் பெரிய ஆள் இல்லை என்பதாலும், என்னோட சப்போர்ட் உங்களுக்கு உண்டு என்பதைத் தெரிவிக்கவும், என்னோட பொன்னான வாக்குகளை தமிழிஷ், தமிழ் மணம் இரண்டிலும் போட்டுவிட்டேன் என்பதை இங்கு தெரிவித்துக் கொள்ள கடமைப் பட்டுள்ளேன் என்று பின்னூட்ட்ம் போட்டு, இத்துடன் என்னுடைய சிறிய பின்னூட்டத்தை முடித்துக் கொள்ளுகின்றேன்.

இராகவன் நைஜிரியா said...

//ஆணவம் என்பது மற்றவர்களுக்கே சொந்தம் என்று ஆணவத்துடன் சொல்லிக் கொண்டிருப்பது நமக்கு மிகவும் வசதியாக இருக்கிறது.//

100% agreed

அது சரி(18185106603874041862) said...

//
உள்குத்து, வெளிக்குத்து போன்ற வார்த்தைகள் மக்களின் வாய்களுக்குள் சிக்கிச் சின்னாபின்னப் பட்டுக் கொண்டிருக்கின்றன.
//

ஒரு வாய்க்குள்ள இத்தனை குத்தா?

அது சரி(18185106603874041862) said...

சமூகம் என்றாலே காம்ப்ரமைஸ் தான் இல்லையா?? சில காரணம் தெரிந்த புரிதலுடன், சில காரணம் புரியாமல் வேறு வழியின்றி, சில காரணம் தெரிந்தாலும் விருப்பமின்றி....

Life starts with a compromise...goes on with lot of compromises...and ends with a compromise...There was a time, when there was compromise in life....but this is a time, where compromise is the life...

அது சரி(18185106603874041862) said...

//
வெளிநாடுகளில், அந்த நாட்டு மொழியை ஒழுங்காகக் கற்காதிருப்பதே முதற் காரணம் என்று கண்டு பிடித்திருக்கிறார்கள் (!).
//

இதாரு???

அது சரி(18185106603874041862) said...

//
மொழி மட்டுமே காரணம் என்று கொண்டால் ஆகக் குறைந்தது தமிழ்ப் பதிவுலகம் சொர்க்கமாக இருந்து கொண்டிருக்க வேண்டும்.
//

இந்த உள்குத்து உள்குத்துன்னு சொல்றாய்ங்களே...அது இது தானுங்களா? :0)))

அது சரி(18185106603874041862) said...

//
ஆனால் என் கருத்துப்படியே மற்றவர்களும், மற்றவர்கள் கருத்துப்படி நானும் நடக்க வேண்டுமென்பதில்தான் சிக்கல் உருவாகிறது.
//

உண்மை...

கருத்து சுதந்திரத்தை பெரிதும் மதிக்கிறேன்...என் கருத்தை எல்லாரும் ஒப்புக் கொள்ளும் வரை....இந்த ரீதியில் தான் இங்கு பல விஷயங்கள் நடக்கிறது...

அது சரி(18185106603874041862) said...

//
ஆணவம் என்பது மற்றவர்களுக்கே சொந்தம் என்று ஆணவத்துடன் சொல்லிக் கொண்டிருப்பது நமக்கு மிகவும் வசதியாக இருக்கிறது.
//

அப்படி நான் சொல்லிக் கொள்வதில்லை என்று நான் ஆணவமின்றி சொல்லிக் கொள்(ல்)கிறேன் :0))

அது சரி(18185106603874041862) said...

//
“You have your way. I have my way. As for the right way, the correct way, and the only way, it does not exist.” - Friedrich Nietzsche
//

எனக்கு ராபர்ட் டி நீரோ கஸினோவில பேசுற இன்னொரு டயலாக் ஞாபகம் வருது...

There are three ways to do a thing...The Right way, The wrong Way and MY WAY.

My way or the High Way...

அது சரி(18185106603874041862) said...

சீரியசான பதிவு...திடீர்னு ஏன்? காரணம் தெரிஞ்சிக்கலாமா?

பித்தனின் வாக்கு said...

நல்ல கருத்துக்கள், ஒவ்வெருக்கும் தாய்மொழி என்பது நமக்கு முக்கிய சாப்பாடு மாதிரி, இதர மொழிகள் எல்லாம் கூட்டு பொறியல் மாதிரி. எல்லாம் கலந்து இருந்தால் தான் நல்ல விருந்து உண்ட திருப்தி நமது அறிவுக்கு வரும். அனத்து மொழிகளையும் கற்று அவற்றில் நல்லனவற்றைத் தமிழிலில் கொணர்ந்து சேர்ப்பேம் என்ற பாரதியின் கனவும் நினைவாகும்.

Unknown said...

மார்க்ஸ் என்ன சொல்றாருன்னா, கருத்து வேறுபாடு இருந்து அது சம்மந்தமான விவாதம் இருந்தா தான் ஒரு சமூகம் முன்னேறும். நீங்க சொல்றது - "இரண்டு வார்த்தையில் மொத்தமும் முடிந்து தனித் தனியே, போட்டி போட்டுக் கொண்டு சுற்றிச் சுற்றிச் சுவர் (maze) எழுப்பிக் கொள்வார்கள். இறுதியில் தனியே நாலு சுவருக்குள் அடைபட்டு, வெளியேறும் வழி தெரியாது விழித்து உள்ளேயே சமாதி ஆவார்கள்." அதுக்கு ஆப்போஸிட்டா இருக்கே?

மற்றபடி என் கருத்து தான் பெஸ்ட் கருத்து என்று மற்றவர்களைத் தாழ்த்திப் பேசுவதோ இல்லை தனி மனித வசை/புகழ் பாடுவதோ தான் தவறு என்று சொல்லுவேன். என் கருத்து ஏன் உன் கருத்தை விட சிறந்தது என்று ஒரு "ஆரோக்கியமான" விவாதம் நடத்துவதில் தவறு இல்லை. அந்த விவாதத்தை மனதில் வைத்துக் கொண்டு கலகலப்ரியாவைப் பார்த்தாலே மூஞ்சைத் தூக்கி வைத்துக் கொள்வதோ அல்லது கலகலப்ரியாவை வசை பாடி பதிவெழுவதோ தவறு.

R.Gopi said...

“You have your way. I have my way. As for the right way, the correct way, and the only way, it does not exist.”

***********

லகலக வழி தனி வழி...

ஈரோடு கதிர் said...

//கருத்து வேறுபாடு இல்லையெனில் ஒரே நாளில் எல்லாரும் சலிப்படைந்து, //

ஆஹா...

உண்மைதான் பிரியா

சிந்திக்க வேண்டிய கருத்துக்களைத் தாங்கியிருக்கும் இடுகை

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...

/“You have your way. I have my way. As for the right way, the correct way, and the only way, it does not exist.” - Friedrich Nietzsche/

Tell me Priya how did you find the way of writing this way, which makes us agree all the way, and steal our heart away. congratulations anyway.//

ty neway..

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said..

இதுதாம்மா புரியலை. யாரோ ஒருத்தர் கருத்தை ஒரு சாரார் ஆதரித்து அதை பின்பற்ற அதிலிருந்து சற்றே மாறுதலாய் ஒரு கருத்து வரும்போது சரியா தவறா என்று கூட பார்க்காமல் விமரிசனம் செய்வதோ, ஒதுக்கி வைப்பதோ எப்படி? அப்படியானால் முதலில் ஒருவர் கூறிய கருத்து மட்டும் எப்படி நிலைபெற்றது?//

நீங்க ஒரு குறிப்பிட்ட சம்பவம் பத்தி பேசுறீங்கன்னு நினைக்கறேன்... இத வச்சு காரண காரியங்கள் ஆராயறது கஷ்டம் சார்..

கலகலப்ரியா said...

//பிரியமுடன்...வசந்த் said...

மாட்டினான் இங்கிலீஷ்காரன்...//

அப்டியா..? ஏன்..?

//உஷ்மெ ஃபரடெதுசரசுததினிக்கி......//
இது கேட்டு விளங்கிக் கொள்ள ஆட்கள் இருக்கிறார்கள்.. கேக்கறேன்..

//நானும் இப்பிடித்தான் அரபி கத்துட்டு ஒரு அரபி பொண்ணையாச்சும் லவ் பண்ணலாமுன்னு அரபி கத்துக்கிறேன் முடியலை....//

தம்பி உனக்கு தேவையானத நீ எடுத்துக்கிட்டா.. ஒரு அரபிக் குதிரை கிடைக்கக் கடவ..

//பிரியமுடன்...வசந்த் said...

//“You have your way. I have my way. As for the right way, the correct way, and the only way, it does not exist.”

கோ அவேன்னு சொல்ற மாதிரியிருக்கு.....//

இதைத்தான் தவறான புரிதல் என்று சொல்வார்கள்..

//ஃப்ரீயா கிடைக்கிறதே அட்வைஸ் மட்டும்தான் அதையும் ஆணவமா சொன்னா?//

யாரங்கே.. அட்வைஸ் பண்ணாதீங்கப்பா... பண்ணாலும் ஆணவத்தை நீக்கி விட்டுப் பண்ணவும்.. (இது வேண்டுகோள் மட்டுமே..)

கலகலப்ரியா said...

//ஆ.ஞானசேகரன் said...

//ஆணவம் என்பது மற்றவர்களுக்கே சொந்தம் என்று ஆணவத்துடன் சொல்லிக் கொண்டிருப்பது நமக்கு மிகவும் வசதியாக இருக்கிறது.//

ம்ம்ம்ம்//

ம்ம்.. வாங்க ஞானசேகரன்..

கலகலப்ரியா said...

//ஹேமா said...

ப்ரியா, நீங்க சொல்லியிருக்கிற விஷ்யங்கள் நிறையவே யோசிக்க வைக்கிறது.//

வாங்க ஹேமா.. நன்றி.. யோசிங்கோ..

கலகலப்ரியா said...

//இராகவன் நைஜிரியா said...
இந்த கட்டுரைக்கு கருத்துச் சொல்லும் அளவு நான் பெரிய ஆள் இல்லை//

இந்த அடக்கம் பெரியவங்களுக்கு மட்டும்தான் வரும்.. :-)

//100% அக்ரீட்//

இப்டி இருந்தா ஒருமைப்பாடு பற்றிப் பேச வேண்டிய அவஸ்யமே இல்லியே.. ஹிஹி..

கலகலப்ரியா said...

//அது சரி said...

ஒரு வாய்க்குள்ள இத்தனை குத்தா?/

ஆமாம்.. அவ்வ்வ்வ்.. :(

////அது சரி said...

சமூகம் என்றாலே காம்ப்ரமைஸ் தான் இல்லையா?? சில காரணம் தெரிந்த புரிதலுடன், சில காரணம் புரியாமல் வேறு வழியின்றி, சில காரணம் தெரிந்தாலும் விருப்பமின்றி....//

ம்ம்ம்... சமூகம் என்ற வார்த்தை எனக்கு அவ்ளவா பிடிக்காதுப்பா.. =))

// Life starts with a compromise...goes on with lot of compromises...and ends with a compromise..//

well.. we're a few steps away frm da main theme.. integration is not compromise.. but ya rt.. this is fate.. a very sad end..(in my opinion)

//There was a time, when there was compromise in life....but this is a time, where compromise is the life...//

xactly... hr is whr.. da past overtakes da present.. compromise in life.. yes.. but life is NOT compromise..

It is by compromise that human rights have been abandoned < dis is current..

//
இதாரு???//

எல்லாரும்தான்.. ஹிஹி..

//இந்த உள்குத்து உள்குத்துன்னு சொல்றாய்ங்களே...அது இது தானுங்களா? :0)))//

ஐயோ அது இதுதானா..? நானே யார கேக்கன்னு விழிச்சிட்டிருக்கேன்..!

//
உண்மை...

கருத்து சுதந்திரத்தை பெரிதும் மதிக்கிறேன்...என் கருத்தை எல்லாரும் ஒப்புக் கொள்ளும் வரை....இந்த ரீதியில் தான் இங்கு பல விஷயங்கள் நடக்கிறது...//

அதே..

//
அப்படி நான் சொல்லிக் கொள்வதில்லை என்று நான் ஆணவமின்றி சொல்லிக் கொள்(ல்)கிறேன் :0))//

இதை "நான்" நம்புகிறேன்..

//எனக்கு ராபர்ட் டி நீரோ கஸினோவில பேசுற இன்னொரு டயலாக் ஞாபகம் வருது...

There are three ways to do a thing...The Right way, The wrong Way and MY WAY.

My way or the High Way...//

Classic..

//அது சரி said...

சீரியசான பதிவு...திடீர்னு ஏன்? காரணம் தெரிஞ்சிக்கலாமா?//

ஐயயோ.. நம்புங்க ப்ளீஸ்.. எனக்கும் சீரியஸா இருக்க தெரியும்.. அவ்வ்வ்வ்..

(என்னுடைய தாயார்.. எதிர்பாராத விதமா திடீரென்று சொல்லாமல் கொள்ளாமல் இறைவன் அடி எய்தி விட்டார்.. கலகலப்பு திரும்ப கொஞ்ச நாளாகும் என்று நினைக்கிறேன்... ஆனாலும் இயல்பாய் இருக்க முயற்சிக்கிறேன்... நேரில் இரங்கல் பா கேட்டு போதும் போதும் என்று ஆகி விட்டது.. தனியாக அழுவதே இன்பம் நமக்கு.. அதனால் இங்கே சொல்லாமல் தவிர்த்து விட்டேன்.. இப்போ சொல்லிட்டேன்..)

கலகலப்ரியா said...

//பித்தனின் வாக்கு said... //

மொழியை மட்டும் எடுத்து பின்னூட்டம் போட்டிருக்கிறீர்கள்.. நல்ல கருத்துக்கள்.. நன்றி..

கலகலப்ரியா said...

//முகிலன் said...

மார்க்ஸ் என்ன சொல்றாருன்னா, கருத்து வேறுபாடு இருந்து அது சம்மந்தமான விவாதம் இருந்தா தான் ஒரு சமூகம் முன்னேறும். //

நீங்கள் முழுவதும் சரியாகப் படிக்கவில்லையா.. இல்லை தவற விட்டு விட்டீர்களா தெரியவில்லை.. (ஒரே மொழியைப் பேசுபவர்களிடத்தில் உண்டாகும் கருத்து வேறுபாடு வேறு வகை. கருத்து வேறுபாடு இல்லையெனில் ஒரே நாளில் எல்லாரும் சலிப்படைந்து, அடுத்த நாள் தங்களுக்குத் தாங்களே சமாதி கட்டிக் கொண்டு உள்ளே போய் உட்கார்ந்து விடலாம். ஆனால் என் கருத்துப்படியே மற்றவர்களும், மற்றவர்கள் கருத்துப்படி நானும் நடக்க வேண்டுமென்பதில்தான் சிக்கல் உருவாகிறது.) < இது இடுகையில் சொல்லப் பட்டிருக்கிறது..

Maze பற்றிச் சொன்னது.. புரிதல் இல்லாது.. அல்லது பேசித் தீர்க்க முற்படாது.. சுவற்றுக்குள் அடைபடுவதைத்தான்.. முடிந்தால் இன்னொரு தடவை படித்துப் பாருங்கள்..!

ரொம்ப நன்றி..

இதற்காக நானும் மூஞ்சி தூக்கி வைத்துக் கொள்ளவில்லை.. புரிந்து கொள்ளவில்லை என்பது புரிந்து நான் எழுதுவதை நீங்கள் புரிந்து கொண்டால் நன்றாக இருக்கும்.. =))

கலகலப்ரியா said...

//R.Gopi said...

“You have your way. I have my way. As for the right way, the correct way, and the only way, it does not exist.”

***********

லகலக வழி தனி வழி...//

அப்பவே சொன்னேனே.. என்னைப் புரிந்து கொண்ட ஒரே ஆத்மா நீங்கதான்.. =))

கலகலப்ரியா said...

//கதிர் - ஈரோடு said...

//கருத்து வேறுபாடு இல்லையெனில் ஒரே நாளில் எல்லாரும் சலிப்படைந்து, //

ஆஹா...

உண்மைதான் பிரியா

சிந்திக்க வேண்டிய கருத்துக்களைத் தாங்கியிருக்கும் இடுகை//

ரொம்ப நன்றி கதிர்...

Sanjai Gandhi said...

தெரியாம வந்துட்டேனோ? :(
இந்த பொண்ணு என்னென்னமோ பேசுது..
என்னை மாதிரி சராசரிக்கு இதெல்லாம் ஒத்து வராது சாமியோய்..

///“You have your way. I have my way. As for the right way, the correct way, and the only way, it does not exist.” - Friedrich Nietzsche/

Tell me Priya how did you find the way of writing this way, which makes us agree all the way, and steal our heart away. congratulations anyway.//

நல்லா தான் குழப்பறாய்ங்கய்யா... :))

கலகலப்ரியா said...

//SanjaiGandhi said...

தெரியாம வந்துட்டேனோ? :(
இந்த பொண்ணு என்னென்னமோ பேசுது..
என்னை மாதிரி சராசரிக்கு இதெல்லாம் ஒத்து வராது சாமியோய்..//

அதனால என்ன.. நீங்க பேசுற நிறைய விஷயம் கூட எனக்கு புரியறதில்ல.. நான் இப்டியா அழுவுறேன்.. புரிஞ்சது படிச்சி பின்னூட்டம் போட்டா போதும்.. ஆமா..

///“You have your way. I have my way. As for the right way, the correct way, and the only way, it does not exist.” - Friedrich Nietzsche/

Tell me Priya how did you find the way of writing this way, which makes us agree all the way, and steal our heart away. congratulations anyway.//

நல்லா தான் குழப்பறாய்ங்கய்யா... :))//

இதில என்ன குழப்பம்ஸ்..

நாளும் நலமே விளையட்டும் said...

உங்க பதிவுகளிலேயே இது தான் பயங்கரமா இருக்கு.
கவிதையை விட இது ரொம்ப புரியல.

பின்னூட்டமும் நல்ல வரல. அதனால உங்க பதிலும் இயல்பா இல்ல.
உங்கள் இயல்பான பின்னோட்டங்களுக்கான பதில்களை ஆவலுடன் எதிநோக்குகிறேன்

Unknown said...

//ஆனால் என் கருத்துப்படியே மற்றவர்களும், மற்றவர்கள் கருத்துப்படி நானும் நடக்க வேண்டுமென்பதில்தான் சிக்கல் உருவாகிறது.//

100% உண்மை.

துபாய் ராஜா said...

சன் டிவி பாணியில்
"பன்மையில் ஒருமை
மொத்தத்தில் அருமை".

நாமெல்லாம் போற இடத்திலெல்லாம் புதுப்புது மொழி,நண்பர்கள்,சாப்பாடுன்னு கத்துகிட்டு ஒத்துப்போற ஆளுங்க....

நீங்க இவ்வளவு தூரம் சொன்னதால அடுத்து அரேபில ஒரு பிளாக் ஆ'ரம்பம்' பண்ணலாமான்னு யோசிக்கிறேன்..... :))

ரவி said...

ம்...!!!!!!!

ரூம் போட்டு யோசிச்சு எழுதுனமாதிரி இருக்கு !!!!

Unknown said...

இப்போது தவற விட்டதை புரிந்து கொண்டேன். உங்கள் கருத்தை எனக்குப் புரியும்படி நான் எழுதியுள்ளாதாக நினைக்கிறேன்.

//புரிந்து கொள்ளவில்லை என்பது புரிந்து நான் எழுதுவதை நீங்கள் புரிந்து கொண்டால் நன்றாக இருக்கும்.. =))//

கலகலப்ரியா said...

//நாளும் நலமே விளையட்டும் said...

உங்க பதிவுகளிலேயே இது தான் பயங்கரமா இருக்கு.
கவிதையை விட இது ரொம்ப புரியல.

பின்னூட்டமும் நல்ல வரல. அதனால உங்க பதிலும் இயல்பா இல்ல.
உங்கள் இயல்பான பின்னோட்டங்களுக்கான பதில்களை ஆவலுடன் எதிநோக்குகிறேன்//

பின்னூட்டம் எல்லாம் படிச்சிருந்தா காரணம் புரிஞ்சிருக்கும்.. ஹ்ம்ம்.. சரி ஆயிடும்.. பார்க்கலாம்..

கலகலப்ரியா said...

//ராஜா | KVR said...

//ஆனால் என் கருத்துப்படியே மற்றவர்களும், மற்றவர்கள் கருத்துப்படி நானும் நடக்க வேண்டுமென்பதில்தான் சிக்கல் உருவாகிறது.//

100% உண்மை.//

வாங்க.. நன்றி..

ஆரூரன் விசுவநாதன் said...

நம் வீடு, நம் பழக்க வழக்கம், நமது அறை, நம் உணவு முறை, நம் உடை, இப்படி பல நம்களை நாம் பெற்றிருக்கிறோம். இதை இன்னும் கொஞ்சம் விரிவு படுத்தினால் அதுதான் கலாச்சாரம்,பண்பாடு...இத்யாதி

ஒரே மொழியைப் பேசுபவர்கள் ஒத்த கருத்துடையவர்களாக இருக்க முடியாது. ஒரே வீட்டிலிருப்பவர்களில் ஓரிருவரை நமக்கு மிகப்பிடிக்கிறது.....ஓரிருவரை நமக்கு பிடிப்பதில்லையே.....

என் தந்தையுடன் பிறந்தவர் 8பேர், என் தாயுடன் பிறந்தவர் 10 பேர். என் தந்தைக்கு 2 சகோதரிகளை மிகப் பிடிக்கும். என் தாய்க்கு ஒரு சகோதரனை மிகப் பிடிக்கும். இதற்கென்ன செய்வது.

பண்மையில் ஒருமை காண்பது என்பது, ஒத்த கருத்துடையவர் கூடலிலும், அதைத்தாண்டி சில விசய்ங்களினாலும்(மரோசரித்ரா) வேண்டுமானால் நடக்கலாம்.

இன்னொன்று, ஒருவரை பார்த்தவுடன் நமக்கு ஏன் பிடிக்கிறது அல்லது ஏன் பிடிக்கவில்லை என்பதற்கு ஒரு சரியான காரணத்தை சொல்ல இயல்வதில்லை.

கலகலப்ரியா said...

//துபாய் ராஜா said...

சன் டிவி பாணியில்
"பன்மையில் ஒருமை
மொத்தத்தில் அருமை".//

ரொம்ப நன்றி ராஜா..

// நாமெல்லாம் போற இடத்திலெல்லாம் புதுப்புது மொழி,நண்பர்கள்,சாப்பாடுன்னு கத்துகிட்டு ஒத்துப்போற ஆளுங்க....//

ஹிஹி.. நாமளும் அதே..

// நீங்க இவ்வளவு தூரம் சொன்னதால அடுத்து அரேபில ஒரு பிளாக் ஆ'ரம்பம்' பண்ணலாமான்னு யோசிக்கிறேன்..... :))//

ஆஹா.. வாழ்த்துக்கள்.. தூள் கிளப்புங்க.. (எங்களுக்கு அனுதாபங்கள்..)

கலகலப்ரியா said...

//செந்தழல் ரவி said...

ம்...!!!!!!!

ரூம் போட்டு யோசிச்சு எழுதுனமாதிரி இருக்கு !!!!//

வாங்க.. இல்லைங்க ரூம் என்ன .. ஹால் போட்டு யோசிச்சாலும் நோ சான்ஸ்-ங்க யோசிக்கிற அளவு மண்டைக்குள்ள மசாலா இல்லைங்க.. இருக்கிறத அப்டியே எழுதிட்டா போச்சு.. நம்ம வேலை முடிஞ்சு போச்சு..

கலகலப்ரியா said...

//முகிலன் said...

இப்போது தவற விட்டதை புரிந்து கொண்டேன். உங்கள் கருத்தை எனக்குப் புரியும்படி நான் எழுதியுள்ளாதாக நினைக்கிறேன்.//

அதேதானுங்க.. நான் சொன்னதைத்தான் நீங்களும் சொல்லி இருக்கீங்க.. இல்லைனா நீங்க சொன்னதைத்தான் நானும் சொல்லி இருக்கிறேன்.. ஹிஹி..

கலகலப்ரியா said...

//ஆரூரன் விசுவநாதன் said... //

ஆஹா இங்க ஒரு இடுகையே போட்டிருக்கீங்களே..

உங்க கருத்துக்களுக்கு ரொம்ப நன்றிங்கோ..

//ஒரே மொழியைப் பேசுபவர்கள் ஒத்த கருத்துடையவர்களாக இருக்க முடியாது.//

அதேதானுங்க..

//என் தந்தையுடன் பிறந்தவர் 8பேர், என் தாயுடன் பிறந்தவர் 10 பேர். என் தந்தைக்கு 2 சகோதரிகளை மிகப் பிடிக்கும். என் தாய்க்கு ஒரு சகோதரனை மிகப் பிடிக்கும். இதற்கென்ன செய்வது.//

ஹிஹிஹி.. அவங்களுக்கு சாய்ஸ் இருக்கு பண்றாங்க.. எனக்கு பாருங்க ஒரே ஒரு அண்ணா.. அதும் பெரீஈஈய அண்ணா.. நோ சாய்ஸ்.. பிடிச்சுதான் ஆவணும்.. =))

//பண்மையில் ஒருமை காண்பது என்பது, ஒத்த கருத்துடையவர் கூடலிலும், அதைத்தாண்டி சில விசய்ங்களினாலும்(மரோசரித்ரா) வேண்டுமானால் நடக்கலாம்//

ஆமாங்கோ.. இது பத்தியும் ஒரு இடுகை போடலாம்..

//இன்னொன்று, ஒருவரை பார்த்தவுடன் நமக்கு ஏன் பிடிக்கிறது அல்லது ஏன் பிடிக்கவில்லை என்பதற்கு ஒரு சரியான காரணத்தை சொல்ல இயல்வதில்லை.//

காரணம் தெரிஞ்சா ஆராயலாமே... எல்லாம் நல்லதுக்குத்தான்.. =)))

vasu balaji said...

வழக்கம் போல் நல்ல எழுத்துக்கான பாராட்டு விகடனில் குட்ப்ளாக்ஸில். வழக்கமாக இருந்தாலும் புதிதாய் நிறைவாய் பாராட்டு என்னிடமிருந்து. கலக்குங்க கலகலா.

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...

வழக்கம் போல் நல்ல எழுத்துக்கான பாராட்டு விகடனில் குட்ப்ளாக்ஸில். வழக்கமாக இருந்தாலும் புதிதாய் நிறைவாய் பாராட்டு என்னிடமிருந்து. கலக்குங்க கலகலா.//

நன்றி..

அது சரி(18185106603874041862) said...

கலகலப்ரியா said...

//
ம்ம்ம்... சமூகம் என்ற வார்த்தை எனக்கு அவ்ளவா பிடிக்காதுப்பா.. =))
//

அது எனக்கும் பிடிக்காது...அதனால தான் நான் எழுதவே(???) ஆரம்பிச்சேன்...

//
well.. we're a few steps away frm da main theme.. integration is not compromise.. but ya rt.. this is fate.. a very sad end..(in my opinion)
//

integration is a compromise in disguise....without compromise there is no integration.

//
xactly... hr is whr.. da past overtakes da present.. compromise in life.. yes.. but life is NOT compromise..
//

You think so? I wish that is the casஎ...Once compromise was a part of life, now life had become a part of compromis....sigh!

//
It is by compromise that human rights have been abandoned < dis is current..
//

Yes, but its not only compromise, its for material benefit of involved parties too..

//
(என்னுடைய தாயார்.. எதிர்பாராத விதமா திடீரென்று சொல்லாமல் கொள்ளாமல் இறைவன் அடி எய்தி விட்டார்.. கலகலப்பு திரும்ப கொஞ்ச நாளாகும் என்று நினைக்கிறேன்... ஆனாலும் இயல்பாய் இருக்க முயற்சிக்கிறேன்... நேரில் இரங்கல் பா கேட்டு போதும் போதும் என்று ஆகி விட்டது.. தனியாக அழுவதே இன்பம் நமக்கு.. அதனால் இங்கே சொல்லாமல் தவிர்த்து விட்டேன்.. இப்போ சொல்லிட்டேன்..)
//

I'm really sorry to hear that...I can understand the feelings...It's so brave of you to bounce back so fast...well done Priya...You know, not many people would not be able to do that...

When I was in the same sort of situation, I was thinking something like "Well, this is bound to happen one day or the other...Its unstoppable...And also, its not my fault...So, there is no point in feeling dejected...The life has to go on..."

கலகலப்ரியா said...

அது சரி said...

கலகலப்ரியா said...

//
ம்ம்ம்... சமூகம் என்ற வார்த்தை எனக்கு அவ்ளவா பிடிக்காதுப்பா.. =))
//

அது எனக்கும் பிடிக்காது...அதனால தான் நான் எழுதவே(???) ஆரம்பிச்சேன்...//

=))... same here.. but hv sm good friends... who hv similar views like me.. so.. sometimes.. am able to talk too.. (well.. yer "writing" is too good.. =))

//
well.. we're a few steps away frm da main theme.. integration is not compromise.. but ya rt.. this is fate.. a very sad end..(in my opinion)
//

integration is a compromise in disguise....without compromise there is no integration.//

lol.. hmm.. actually integration hasn't been defined yet.. but.. for me integration is possible without any compromise.. am well integrated and still rooted very strongly whr am frm..

you may drink alcohol with yer friends just to accompany em.. it might be a compromise.. (if ya an alcoholic.. it's another subject..)

i'm being myself.. and drinking orange juice, they're being themselves and drinking liquor.. i know thatz their culture.. and they knw it's my culture.. though we can "communicate" very well .. without any compromise.. (remember talking something else isn't communication.. lol) this is so called integration.. (neither me nor they hv to compromise nething here..) & as i said.. this is not da exact definition.. =))

(sry.. whn i talk too much.. it's the current theme.. and we tlk a lot abt this.. so.. it may lead to an endless argument.. =))

//
xactly... hr is whr.. da past overtakes da present.. compromise in life.. yes.. but life is NOT compromise..
//

You think so? I wish that is the casஎ...Once compromise was a part of life, now life had become a part of compromis....sigh!//

thatz wot i said.. but.. life shouldn't be a compromise or a part of compromise..:(.. "THE SOCIETY" plays a great role here.. thatz why.. i dun like it..

//
It is by compromise that human rights have been abandoned < dis is current..
//

Yes, but its not only compromise, its for material benefit of involved parties too..//
alas.. benefit is da main target.. !

//I'm really sorry to hear that...I can understand the feelings...It's so brave of you to bounce back so fast...well done Priya...You know, not many people would not be able to do that...//

ye.. it's damned difficult to come out of it.. but.. i dun hv to hide myself sm whr in da corner and act like a sorrowful kid.. even though da bldy society expects dis frm me in a way..! my mom and i can communicate well.. =)

//When I was in the same sort of situation, I was thinking something like "Well, this is bound to happen one day or the other...Its unstoppable...And also, its not my fault...So, there is no point in feeling dejected...The life has to go on..."//

yup.. ty soooo much...! :-) I can't control my wavering emotions but.. she had a very peaceful sleep.. (omg.. if only i cud sleep like dat) my boss had sm words with me last friday & reminded me da saying of socrates.. it's so beautiful..! lemme stop here.. otherwise.. it really will be endless! =))

thanks again.. athu sari..!

சத்ரியன் said...

//இன்றோ, நாளையோ கருத்து பேதம் மற்றும் தவறான புரிதலினால் இன்னொரு இனமோ, மொழியோ அழிந்து போகலாம் என்ற தீர்க்க தரிசனத்தால் விளைந்த எச்சரிக்கை மனப்பான்மையுடன் கூடிய பய உணர்வே இதற்குக் காரணம்.//

லக்கலக்க ப்ரியா,(சண்டைக்கோழி)

இன்றே நிகழ்ந்துக் கொண்டுதானிருக்கிறது. எனெக்கென்ன? என்னும் பாணியில் எல்லோரும் பயணித்துக் கொண்டிருக்கிறோம். தனக்கென வரும்போது ...?

சிந்திக்க வேண்டிய பதிவுதான்...!முயற்சிக்கிறேன்.

கலகலப்ரியா said...

சத்ரியன் said...

//இன்றோ, நாளையோ கருத்து பேதம் மற்றும் தவறான புரிதலினால் இன்னொரு இனமோ, மொழியோ அழிந்து போகலாம் என்ற தீர்க்க தரிசனத்தால் விளைந்த எச்சரிக்கை மனப்பான்மையுடன் கூடிய பய உணர்வே இதற்குக் காரணம்.//

லக்கலக்க ப்ரியா,(சண்டைக்கோழி)//

வாங்கண்ணே.. நீங்களே இப்டி சொன்னா எப்டிண்ணே.. அவ்வ்வ்வ்வ்வ்வ்.. நான் ரொம்ப சாதுண்ணே..

//இன்றே நிகழ்ந்துக் கொண்டுதானிருக்கிறது. எனெக்கென்ன? என்னும் பாணியில் எல்லோரும் பயணித்துக் கொண்டிருக்கிறோம். தனக்கென வரும்போது ...?

சிந்திக்க வேண்டிய பதிவுதான்...!முயற்சிக்கிறேன்.//

சிந்திக்கவா.. ? ட்ரை பண்ணுங்கோ.. முடிஞ்சா.. நன்றிங்ணா..

Unknown said...

சுவர் எழுப்ப முன்னர் சற்று நிதானிப்பது என்பதும்
சுவர் எழுப்பி உள்ளமர்ந்து தியானிப்பது என்பதும்
பலர் குழம்பி படித்தறிய பதிவரிபதிப்பது என்பதும்
பலர் புகழும் பின்னூட்ட பிரியாவே வாழி..

ஈ ரா said...

மிகக் கடினமான ஒரு மனநிலையை தைரியத்துடன் அணுகியிருக்கிறீர்கள்..

இரங்கற்பா எழுதவோ, ஆறுதல் கூறவோ இயலாது...

என்னைப் பொறுத்தவரை ஒன்றே ஒன்று என் உள் மனதில் இருந்து வெளிப்படையாக சொல்கிறேன், பெண்களைப் பற்றி நான் எப்பொழுதாவது சிறுமையாக (ஒரு ஆணாக நான் பெரிதும் ஏதும் சாதிக்கவில்லை எனினும் ) நினைத்திருந்தால் அது மாபெரும் தவறு என்று சம்மட்டி அடியாக உணர்த்தி விட்டீர்கள்..

உங்களுக்காகவும், உங்கள் குடும்பத்தாருக்காகவும், இறைவனை இறைஞ்சுகிறேன்..

கலகலப்ரியா said...

//rajesh said...

சுவர் எழுப்ப முன்னர் சற்று நிதானிப்பது என்பதும்
சுவர் எழுப்பி உள்ளமர்ந்து தியானிப்பது என்பதும்
பலர் குழம்பி படித்தறிய பதிவரிபதிப்பது என்பதும்
பலர் புகழும் பின்னூட்ட பிரியாவே வாழி..//

ரொம்ப நன்றி ராஜேஷ்.. (அந்தக் காலத்து ராஜாக்கள் இப்டித்தான் புலவருங்க புகழ்றாங்களா திட்டுறாங்களான்னு தெரியாம திணறிப் போயிருப்பாய்ங்க அவ்வ்வ்வ்..)

கலகலப்ரியா said...

//ஈ ரா said... //

ரொம்ப நன்றி ஈ.ரா.. என்ன பெரிய பெரிய வார்த்தை எல்லாம் சொல்லிட்டீங்க.. :)

ஈ ரா said...

////ஈ ரா said... //

ரொம்ப நன்றி ஈ.ரா.. என்ன பெரிய பெரிய வார்த்தை எல்லாம் சொல்லிட்டீங்க.. :)//

உண்மையைத்தான் சொன்னேன்..

முடிந்தால் காந்தியைப் பற்றி நான் எழுதி இருக்கும் கவிதையைப் படியுங்கள்..

http://www.padikkathavan.blogspot.com


நன்றி

R.Gopi said...

ப்ரியா...

தங்கள் தாயார் இயற்கை எய்திவிட்டார் என்று அறிந்ததும்...மிக்க துயரம் அடைந்தேன்...

தாயாரின் இழப்பு ஈடு செய்ய முடியாது...

விஷயம் அறிந்தவுடன் கேட்காமலும், ஆறுதல்/தேறுதல் சொல்லாமல் இருக்க முடியவில்லை... மீண்டும், மீண்டும் கேட்கும்போது, நீங்கள் விடுபடும் சூழலில் இருக்கும் அந்த துயரத்தை ஞாபகப்படுத்துகிறோமே என்றும் தோன்றுகிறது...

தாங்கள் இந்த சூழலில் இருந்து விரைவில் வெளிவர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்...

அடுத்த பதிவில் நிறைய பேசுவோம்... ப்ரியா...

(உங்கள் துணிச்சல் மற்றும் மன தைரியம் எனக்கு பிடித்திருக்கிறது...)

கலகலப்ரியா said...

/ஈ ரா said... //

கவிதை அபாரம்..!

கலகலப்ரியா said...

//R.Gopi said... //

ரொம்ப நன்றி கோபி..!

RAMYA said...

//
ஆணவம் என்பது மற்றவர்களுக்கே சொந்தம் என்று ஆணவத்துடன் சொல்லிக் கொண்டிருப்பது நமக்கு மிகவும் வசதியாக இருக்கிறது.
//

நல்லா இருக்கு உறைக்கும்படி சொல்லி இருக்கிறீர்கள்:((

RAMYA said...

தாயாரின் இழப்பு ஈடு செய்ய முடியாது...

பிரியா நீங்க தைரியமா இந்த சூழ்நிலையை வெல்ல எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன் :((

கலகலப்ரியா said...

//RAMYA said...

//
ஆணவம் என்பது மற்றவர்களுக்கே சொந்தம் என்று ஆணவத்துடன் சொல்லிக் கொண்டிருப்பது நமக்கு மிகவும் வசதியாக இருக்கிறது.
//

நல்லா இருக்கு உறைக்கும்படி சொல்லி இருக்கிறீர்கள்:((//

வாங்க ரம்யா..

கலகலப்ரியா said...

//RAMYA said...

தாயாரின் இழப்பு ஈடு செய்ய முடியாது...

பிரியா நீங்க தைரியமா இந்த சூழ்நிலையை வெல்ல எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன் :((//

ரொம்ப நன்றி..

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

ப்ரியா.. மாமியார் வீட்டுல கூட என் பாட்டுக்கு நானிருப்பேன், உன் பாட்டுக்கு நீ இரு ன்னு நம்மால் சொல்ல முடியாது.. அப்படி இருந்துக்கலாம் ன்னு முன் வந்து சொல்லற மாமியார்கள் ரொம்ப குறைவு.. மத்த நாடுகளும் அப்படித்தான் :(( ம்ம்.. சுடுகின்ற உண்மை.. ஒவ்வொருவருக்குமே - மை மம்மா இஸ் தி பெஸ்ட் தான்.. என்னோடதும் நல்லது உன்னொடதும் நல்லதுன்னு ஏத்துக்கறவங்க ரொம்ப குறைவு..

நானும் acculturation types பத்தி எப்பவோ படிச்சேன்.. in assimilation we lose our own and merge into theirs, while in integration we maintain our own beliefs and adopt some of theirs. segregation is when we donot merge at all and try to be on our way. people who can assimilate feel less home sick or depressed or stressed than all of these!!! integration is still better, people do feel home sick, but are not depressed.. there is one more - marginalisation, where they do neither - these people have the worst outcome.. எல்லாராலும் assimilate ஆகிட முடியாது.. ஆனா, இன்னொரு ஊர்ல இருக்கும் போது அதுவும் நாம் மைனாரிட்டியாக இருக்கும் போது இட்ஸ் பெட்டெர் அட்லீஸ்ட் டு integrate..

அதுக்குத் தான் முன்னாடியே சொல்லியிருக்காங்களோ - ஊரோடு ஒத்து வாழ்/be a roman when u are in rome ன்னு!!!

எனக்கு வர வர தமிழ் ல எழுதறது எதுவும் சரியா புரியமாட்டேங்குது.. கடைசியா ஆங்கிலத்துல இருந்த அந்த வாசகம் தெளிவா புரிந்தது.. நானும் இண்டக்ரேட் ஆயிட்டு இருக்கேன் போல.. :))

நீங்க ஊர்ல இல்லைன்னு நினைக்கறேன் அப்போ.. நானும் இந்த மாதிரி ஒரு துயரத்தை எதிர் கொண்டேன்.. இதுவும் கடந்து போகும்.. மெல்ல மெல்ல வெளியே வந்து விடுவோம். கவலை வேண்டாம்..

கலகலப்ரியா said...

வாங்க சந்தனா.. நன்றி.. இது பேசினா பேசிக்கிட்டே இருக்கலாம்.. பேசுவோம்.. =))

என்ன துயரம்னு சொல்றீங்கனு புரியல.. ஆனா நீங்க சொல்றது சரி.. இதுவும் கடந்து போகும்.. =)..

சிங்கக்குட்டி said...

யப்பா...இவ்வளவு பெரிய பெரிய தனி தனி தலைப்பு வார்த்தைகளை கோர்வையாக்கி இத்தனை சிறிய பதிவில் ஒரு கருத்துக்கு வருவது என்பது! திரும்ப யப்பா...

உண்மை
// மொழி என்பது கருத்துப் பரிமாற்றத்திற்கான ஒரு ஊடகமேயன்றி "அது அறிவல்ல"//

பிடித்தது (when there is no relationship)

//You have your way. I have my way. As for the right way//

ஆகா மொத்தத்தில் ஆணவம் என்பது மற்றவர்களுக்கே சொந்தம் என்று ஆணவத்துடன் சொல்லிக் கொண்டிருக்கும் வசதியை பயன்படுத்த மனமில்லாமல் கேட்க விரும்புவது.

ஆமா? எத பத்தி பேசுறோம்னு யாராவது என் மர மண்டைக்கு புரியுற மாதிரி கொஞ்சம் சொல்லப்பிடாதா?

கலகலப்ரியா said...

//சிங்கக்குட்டி said...

ஆமா? எத பத்தி பேசுறோம்னு யாராவது என் மர மண்டைக்கு புரியுற மாதிரி கொஞ்சம் சொல்லப்பிடாதா?//

ஹிஹிஹி.. இதுதான் integration concept.. புரிஞ்சுதுன்னா integration பத்தி அலட்டிக்க தேவை இல்லையே.. கொஞ்சம் இருங்க இப்டி புரியாமலிருப்பதே இடுகையின் முதல் அம்சம்..

சிங்கக்குட்டி said...

//ஒரே மொழியைப் பேசுபவர்கள் இணைந்து வாழ்கிறார்களா என்றால் யாரிடமும் பதில் இல்லை//

என்னங்க உங்களிடம் பதில் இருக்கும்னு கேட்ட நீங்க அதுக்கும் எதோ //integration concept// -ன்னு வேற மொழிய தேடுறீங்க?

ஒரே மொழியை பேசுற நமக்கு இணைந்து வாழ இங்கு வேறு ஒருவர் அல்லது மொழி தேவை படும் படி நாமே நம்மை கேலி...சரி விடுங்க.

//இதைப் படியுங்கள் என்று சாதாரணமாகச் சொல்லிவிட்டு, கைகளைப் பின்னால் கோர்த்துக்கொண்டு வேடிக்கை பார்க்கும் போது //

இங்கு சிரிக்காதிருப்பது யார்?

Communication is not what we talk; Communication is what we make others to understand.

//இதுதான் integration concept.. புரிஞ்சுதுன்னா integration பத்தி அலட்டிக்க தேவை இல்லையே.. கொஞ்சம் இருங்க இப்டி புரியாமலிருப்பதே இடுகையின் முதல் அம்சம்//

அதாவது நம் மொழியில் சொல்ல முடியாத ஒரு கருத்துக்கு "ரௌத்ரம்" போன்று வேறு மொழியில் சொல்ல முடியாத தலைப்பா....என்ன சொல்ல!!??

கலகலப்ரியா said...

//
அதாவது நம் மொழியில் சொல்ல முடியாத ஒரு கருத்துக்கு "ரௌத்ரம்" போன்று வேறு மொழியில் சொல்ல முடியாத தலைப்பா....என்ன சொல்ல!!??//

என்ன சொல்லுதீக.. :-s

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

priya - it was abt ur mom..

கலகலப்ரியா said...

oh.. ty chandana..! :)