header photo

Tuesday, October 20, 2009

கடல் யோகி...

சாதாரண விட்டத்தில்..
பாதியே கொண்ட..
மூக்குத் துவாரம் வழியே..
உட்கொண்ட பிராணவாயு..
நுரையீரலில்..
சொற்ப அளவிலேயே..
சேமிக்கப் பட்டிருக்க..

சமுத்திரத்தின்..
ஆழம் அறியாது..
கால் விட்டு..
முன்னேற்பாடு ஏதுமற்று..
சுழி ஓட ஆரம்பித்து..

முத்துக் குளிப்பதோ..
முரல்கள் பிடிப்பதோ..
குறிக்கோள் ஏதுமின்றி..
நீரின் மூல தாதில்..
மூச்சுக் காற்றை..
மட்டும் பிரித்து உறிஞ்சி..
மேலும் கீழும்..
அளைந்து துழாவி..

பாசிகள் படர்ந்த..
பாறையின் மீது..
கூழாய்க் கிடந்த..
கடற் சிலந்தி கண்களில்..
கருணையே உருவான..
யோகியைக் கண்டு..
கடற்பாசி விலக்கி..
நீந்தி நெருங்கி...
நிமிர்ந்து பார்க்க..

அசைந்த கூழில்..
ஆயிரம் கைகள்..
நீண்டு நெளிந்து..
சுருண்டு வளைந்து..
விரிந்து சுருங்கி..
விழுங்க விரைய..

நனவா கனவா..
நம்ப முடியாது..
கீழே பார்க்க..
கடலினடியில்..
இராட்சத பிம்பம்..

தன்னிச்சையாய்..
உதறி விலகி..
பாறை தொற்றி..
பாசி போர்த்தி..
அருகே நோக்க..
சிலந்தி கையில்..
சர்ப்பமொன்று..
சக்கையாகி..
மாயமானது..

ஆழ் கடலின்..
மணல் மேட்டில்..
இராட்சத நிழற்குடை..
அங்கும் இங்கும்..
கடற் தாவரம்...
சிண்டு நண்டு..
சிப்பி முத்துடன்..
பவளப் பாறைகளும்..

நாளத்தின் குருதி..
நாடியை நாட..
இதயம் தவித்து..
இறைஞ்சி நிற்க..
சுவாசப் பை..
கையை விரித்தது..

படர்ந்திருந்த..
பாசியுடன்..
அச்சம் விலக்கி..
அடி வரை சென்று..
சிப்பியுடன் சிப்பியாக..
முத்தொன்று..
மேலெழுந்து..
சிலந்தி விழியில்..
விழுந்து தெறித்து..
மேலே மேலே..
மேலே சென்றது..

::::::::::...
:::::::::::::::::....
::::::::::::::::::::.....

77 ஊக்கம்::

vasu balaji said...

துண்டு போட்டுட்டேன். படிக்கறேன்.

vasu balaji said...

/நீரின் மூல தாதில்..
மூச்சுக் காற்றை..
மட்டும் பிரித்து உறிஞ்சி..
மேலும் கீழும்..
அளைந்து துளாவி..

பாசிகள் படர்ந்த..
பாறையின் மீது..
கூழாய்க் கிடந்த..
கடற் சிலந்தி கண்களில்..
கருணையே உருவான..
யோகியைக் கண்டு..
கடற்பாசி விலக்கி..
நீந்தி நெருங்கி...
நிமிர்ந்து பார்க்க../

அம்மாடியோ மூச்சு முட்டுது.

vasu balaji said...

/தன்னிச்சையாய்..
உதறி விலகி..
பாறை தொற்றி..
பாசி போர்த்தி..
அருகே நோக்க..
சிலந்தி கையில்..
சர்ப்பமொன்று..
சக்கையாகி..
மாயமானது../

பயந்துட்டேன். இப்பொ நிம்மதி.

vasu balaji said...

/அடி வரை சென்று..
சிப்பியுடன் சிப்பியாக..
முத்தொன்று..
மேலெழுந்து..
சிலந்தி விழியில்..
விழுந்து தெறித்து..
மேலே மேலே..
மேலே சென்றது../

இது புரியலை:(

துபாய் ராஜா said...

வார்த்தை விளையாட்டு அருமை.

ப்ரியமுடன் வசந்த் said...

//அங்கும் இங்கும்..
கடற் தாவரம்...
சிண்டு நண்டு..
சிப்பி முத்துடன்..
பவளப் பாறைகளும்..//

நீங்க முன்னாடி இந்தியால தமிழ் டீச்சரா? இல்லை தமிழ்ல டாக்டரேட் வாங்கியிருக்கீங்களா?

butterfly Surya said...

அருமையான வார்த்தைகள்..

நடை அற்புதம்..

துபாய் ராஜா said...

ப்ரியாக்கா...., இது முன் நவீனத்துவ கவிதையா,'பின்' நவீனத்துவ கவிதையா இல்லை
நடு'மத்தி'செண்டர் நவீனத்துவ கவிதையா.... :))

ப்ரியமுடன் வசந்த் said...

அமீபாவப்பத்தி கொல்றீங்களா? சாரி சொல்றீங்களா?

துபாய் ராஜா said...

கண்ணைக் கட்டுது.. ரைட்டு, ஜூட்டு, குட்நைட்... இன்ஷா முருகா,நாளை பகல்ல வந்து படித்து தெளிவோம்..

vasu balaji said...

வந்துட்டாரா வண்ணக்கிளி=))

vasu balaji said...

பிரியமுடன்...வசந்த் said...

/அமீபாவப்பத்தி கொல்றீங்களா? சாரி சொல்றீங்களா?/

படுபாவி. ஒழுங்கா படிக்கலையா நீ. அமீபாவாம்ல.

ப்ரியமுடன் வசந்த் said...

பின் நவீனத்துவமா?

எதிரி நம்பர் 4 நீவிரும் வாழ்க....

கலகலப்ரியா said...

வானம்பாடி.. வசந்து.. ராஜா மற்றும் சூர்யா.. பின்னூட்டத்துக்கு நன்றி... எனக்கும் தூக்கம் வந்தாச்சு.. (தூக்க கலக்கத்தில உளறினதுதான் இது..).. நாளைக்கு வந்து ஒவ்வொண்ணுக்கும் பின்னூட்டம் போடுறேன்..

வசந்து.. நோக்கு என்னை டீச்சர் ஆக்கிப் பார்க்கணும்னு ரொம்ப ஆசை.. அது கஷ்டம்பா...

துபாய் ராசா.. இது என்ன நவீனத்துவம்னு கண்டு புடிச்சி சொல்லுறவங்களுக்கு பல்லி மிட்டாய் பரிசா அறிவிச்சிடலாம்.. ஹிஹி..

அது சரி(18185106603874041862) said...

எனக்கு நீச்சல் தெரியாது...அதனால படிக்கும் போதே கொஞ்சம் பீதியாருக்கு...

அது சரி(18185106603874041862) said...

//
பாசிகள் படர்ந்த..
பாறையின் மீது..
கூழாய்க் கிடந்த..
கடற் சிலந்தி கண்களில்..
கருணையே உருவான..
யோகியைக் கண்டு..
கடற்பாசி விலக்கி..
நீந்தி நெருங்கி...
நிமிர்ந்து பார்க்க..

அசைந்த கூழில்..
ஆயிரம் கைகள்..
நீண்டு நெளிந்து..
சுருண்டு வளைந்து..
விரிந்து சுருங்கி..
விழுங்க விரைய..

நனவா கனவா..
நம்ப முடியாது..
கீழே பார்க்க..
கடலினடியில்..
இராட்சத பிம்பம்..
//

வெரி நைஸ்யா...

அது சரி(18185106603874041862) said...

ஆமா, நான் நேத்து போட்ட கொமென்ட்டெல்லாம் எங்கன்னேன்?? எதுனா பெருச்சாளி தூக்கிட்டு போயிடுச்சா இல்ல கொமென்ட்டு வெள்ளத்துல என்னோட கொமன்ட் இன்னும் நீந்திக்கிட்டு இருக்கா....

நாளைக்குள் வெளியிடப்படாவிட்டால்.....நான் இன்னும் நூறு கொமென்ட்டு போடுவேன்...எச்சரிக்கை!!!

:)))

கலகலப்ரியா said...

// அது சரி said...

ஆமா, நான் நேத்து போட்ட கொமென்ட்டெல்லாம் எங்கன்னேன்?? எதுனா பெருச்சாளி தூக்கிட்டு போயிடுச்சா இல்ல கொமென்ட்டு வெள்ளத்துல என்னோட கொமன்ட் இன்னும் நீந்திக்கிட்டு இருக்கா....

நாளைக்குள் வெளியிடப்படாவிட்டால்.....நான் இன்னும் நூறு கொமென்ட்டு போடுவேன்...எச்சரிக்கை!!!

:)))//

அட ச்சே.. அது அங்கதான் நீந்திக்கிட்டிருக்கும் பாருங்கோ.. 200 பின்னூட்டம் தாண்டிச்சின்னா.. new page நீங்க நல்லா பார்த்து.. அங்க newer இருக்கும் க்ளிக்குங்கோ.. அவ்வ்வ்வ்வ்.. என்னிய போயீ...

கலகலப்ரியா said...

கலகலப்ரியா said...

// அது சரி said...

//
பரபரன்னு இருக்கே.. கை கால் எல்லாம் அரிக்குதே... யாரையாவது புடிச்சி சப்பு சப்புன்னு அப்பணும் போல வருதே...
//

சந்தோஷத்திலயுமா அடிப்பாங்க....யப்பா....மீ த எஸ்கேப்பு...:)))//

எவ்ளோ தூரம் ஓடுவாய்ங்க... பார்க்கலாம்..

(ithu yelp..)

கலகலப்ரியா said...

//அது சரி said...

எனக்கு நீச்சல் தெரியாது...அதனால படிக்கும் போதே கொஞ்சம் பீதியாருக்கு...//

எனக்கு மட்டும் தெரியுமா என்ன.. சும்மா படிங்கோ.. =))

இராகவன் நைஜிரியா said...

வெரி குட்.. வெரிகுட்.. கலக்கிட்டேள் போங்கோ... பிரமாதம்..

vasu balaji said...

ம்ம்ம். scuba diver ஆ

கலகலப்ரியா said...

//
பிரியமுடன்...வசந்த் said...

/அமீபாவப்பத்தி கொல்றீங்களா? சாரி சொல்றீங்களா?/

படுபாவி. ஒழுங்கா படிக்கலையா நீ. அமீபாவாம்ல. //

எங்க பள்ளில படிக்கலயான்னு கேக்குறீங்களா..? ச்சே ச்சே.. அதெல்லாம் படிச்சிருப்பான்.. இல்ல வசந்து.. ? யக்கா மானத்த வாங்காதடா.. =)).. அவ்வ்வ்வ்வ்வ்..

கலகலப்ரியா said...

//இராகவன் நைஜிரியா said...

வெரி குட்.. வெரிகுட்.. கலக்கிட்டேள் போங்கோ... பிரமாதம்..//

ஆஹா.. ஆஹா.. என்ன பாஷை இது.. நேக்கு கலக்குது... ரொம்ப ரொம்ப நன்றிங்கோ..

அது சரி(18185106603874041862) said...

//
கலகலப்ரியா said...

அட ச்சே.. அது அங்கதான் நீந்திக்கிட்டிருக்கும் பாருங்கோ.. 200 பின்னூட்டம் தாண்டிச்சின்னா.. new page நீங்க நல்லா பார்த்து.. அங்க newer இருக்கும் க்ளிக்குங்கோ.. அவ்வ்வ்வ்வ்.. என்னிய போயீ...

//


ஓ...நியூ போய் நியூயர்னு புதுசா கண்டுபிடிச்சிட்டாய்ங்களா....ஷமிக்கணும்...ஞான் அதை நோக்கிட்டில்லா...

அது சரி(18185106603874041862) said...

//
கலகலப்ரியா said...

சந்தோஷத்திலயுமா அடிப்பாங்க....யப்பா....மீ த எஸ்கேப்பு...:)))//

எவ்ளோ தூரம் ஓடுவாய்ங்க... பார்க்கலாம்..

(ithu yelp..)
//

இதைத் தான் ஓடிப் போனவனுக்கு ஒம்போதுல குருன்னு சொல்றது...

நல்ல வேளை...ஜியாக்ராஃபிக்கலாவே பிரிட்டன் யூரோப்ல இருந்து அதுவும் ஸ்விஸ்லருந்து ரொம்ப தூரத்துல இருக்கு....

கலகலப்ரியா said...

//அது சரி said...

ஓ...நியூ போய் நியூயர்னு புதுசா கண்டுபிடிச்சிட்டாய்ங்களா....ஷமிக்கணும்...ஞான் அதை நோக்கிட்டில்லா...//

நியூ போய்த்தான் நியூவர் கண்டு புடிச்சாய்ங்களா.. யார் கண்டு புடிச்சா என்னங்க.. ஆமா.. அந்த நோக்கிட்டில்லா என்ன... நோக்கியா அண்ட் மொசில்லா சேர்ந்து ஏதாவது பிரவுசர் கண்டு புடிச்சிருக்காகளா..?

கலகலப்ரியா said...

// அது சரி said...

//
கலகலப்ரியா said...

சந்தோஷத்திலயுமா அடிப்பாங்க....யப்பா....மீ த எஸ்கேப்பு...:)))//

எவ்ளோ தூரம் ஓடுவாய்ங்க... பார்க்கலாம்..

(ithu yelp..)
//

இதைத் தான் ஓடிப் போனவனுக்கு ஒம்போதுல குருன்னு சொல்றது...

நல்ல வேளை...ஜியாக்ராஃபிக்கலாவே பிரிட்டன் யூரோப்ல இருந்து அதுவும் ஸ்விஸ்லருந்து ரொம்ப தூரத்துல இருக்கு....//

இது என்னோட நல்ல வேளையாக்கும்... நெக்ஸ்ட் மந்த் மியூசியம் பார்க்க ஒரு நாள் வருவோம்.. இப்பவே நீங்க டிக்கெட் எடுத்துக்கிட்டு அப்பீட்டு ஆயிடுங்க.. (ச்சே ச்சே.. நீங்க மியூசியத்தில இருக்கீங்கன்னு நான் சொல்லல..)

அது சரி(18185106603874041862) said...

//
கலகலப்ரியா said...
//அது சரி said...

ஓ...நியூ போய் நியூயர்னு புதுசா கண்டுபிடிச்சிட்டாய்ங்களா....ஷமிக்கணும்...ஞான் அதை நோக்கிட்டில்லா...//

நியூ போய்த்தான் நியூவர் கண்டு புடிச்சாய்ங்களா.. யார் கண்டு புடிச்சா என்னங்க.. ஆமா.. அந்த நோக்கிட்டில்லா என்ன... நோக்கியா அண்ட் மொசில்லா சேர்ந்து ஏதாவது பிரவுசர் கண்டு புடிச்சிருக்காகளா..?

//
மோஸில்லா நோக்கியாவுல ரன் ஆச்சின்னா அது நோக்கில்லா....அது ரிப்பேர் ஆச்சின்னா நோக்கிட்டில்லா...

அது சரி(18185106603874041862) said...

//
கலகலப்ரியா said...
// அது சரி said...

//
கலகலப்ரியா said...

சந்தோஷத்திலயுமா அடிப்பாங்க....யப்பா....மீ த எஸ்கேப்பு...:)))//

எவ்ளோ தூரம் ஓடுவாய்ங்க... பார்க்கலாம்..

(ithu yelp..)
//

இதைத் தான் ஓடிப் போனவனுக்கு ஒம்போதுல குருன்னு சொல்றது...

நல்ல வேளை...ஜியாக்ராஃபிக்கலாவே பிரிட்டன் யூரோப்ல இருந்து அதுவும் ஸ்விஸ்லருந்து ரொம்ப தூரத்துல இருக்கு....//

இது என்னோட நல்ல வேளையாக்கும்... நெக்ஸ்ட் மந்த் மியூசியம் பார்க்க ஒரு நாள் வருவோம்.. இப்பவே நீங்க டிக்கெட் எடுத்துக்கிட்டு அப்பீட்டு ஆயிடுங்க.. (ச்சே ச்சே.. நீங்க மியூசியத்தில இருக்கீங்கன்னு நான் சொல்லல..)

//

அடடா....முன்னாடியே சொல்லிருக்கப்படாது....நான் இப்ப தான் நியூஸிலாந்துக்கு டிக்கட் புக் பண்ணினேன்...அது தான் பிரிட்டன்லருந்து ரொம்ப தூரமான நாடாம்...

ம்யூசியத்துல நான் இல்ல...ஆனா டுஸாட்ஸ் போனா என்னோட வாக்ஸ் இருக்கும்...பார்த்துக்கங்க...:0)))

(ஸீரியஸா...பிரிட்டன் வந்தா ஃபோன் பண்ணுங்க...பதிவர் சந்திப்பெல்லாம் சென்னைக்காரங்க பண்றது....நாம மாபெரும் பதிவர் மாநாடு நடத்திடலாம்...)

Unknown said...

தீ மிதித்தது போல
வார்த்தைகளைப் பதித்தது
விறு விறு நடை..
அணையாமல் எரியட்டும்
அக்கினிக் குஞ்சு..
வெந்து தணிய காத்திருக்கிறோம்..

Unknown said...

தீ மிதித்தது போல
வார்த்தைகளைப் பதித்தது
விறு விறு நடை..

அணையாமல் எரியட்டும்
அக்கினிக் குஞ்சு..
வெந்து தணிய காத்திருக்கிறோம்..

ஈ ரா said...

//இதயம் தவித்து..
இறைஞ்சி நிற்க..
சுவாசப் பை..
கையை விரித்தது../

வழ்க்கமாக மொத்தத்தில் விரிந்து தான் சுருங்கும் சுவாசப்பை...இங்கே கையை விரித்தது என்று அழகாக எடுத்தாண்டிருக்கிறீர்கள்..

முரல் என்றால் என்ன என்று தமிழ் கூறும் பதிவுலகுக்குச் சொன்னால் புண்ணியமாப் போவும்...

//நீரின் மூல தாதில்..
மூச்சுக் காற்றை..
மட்டும் பிரித்து உறிஞ்சி//

என்னம்மா இப்படி வெளுக்கிறீங்க...

கலகலப்ப்ரியா...கவிதைப் ப்ரியா..

அருமை...இதுவும் யோக நிலை என்று அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்.. வாழ்த்துக்கள்..

ஆ.ஞானசேகரன் said...

அருமையான வார்த்தைகளுடன் நல்லாயிருக்கு

R.Gopi said...

கடல் யோகி

நிறைய முறை படித்து விட்டேன்...

பிரமிப்பாக இருக்கிறது.. இந்த மாதிரி எல்லாம் கூட எழுத முடியுமான்னு... உங்கள் எழுத்தின் வீச்சு / ரேஞ்ச் இப்போ எங்கேயோ இருக்கு...

வாழ்த்துக்கள் லகலக...

விரிவான பின்னூட்டம், விரைவில்...

பிரபாகர் said...

எல்லாருக்கும் நான் சொல்லிக்கிறது என்னான்னா, ப்ரியா இப்போ புதுசா கடலுக்கடியில ஆராய்ச்சி பண்றாங்க.... ஏனுங்க, நான் சொல்றது சரிதானே?

வசந்த், ஆராய்ச்சின்னா பல பேருக்கு புரியாது, டீல்ல விடுங்க...

நல்லாருக்குங்க, உங்களோட சொல்லாடல்.

பிரபாகர்.

ஈரோடு கதிர் said...

வளமான வார்த்தைக் கோர்வை

பித்தனின் வாக்கு said...

டிஸ்கவரி, நேஷனல் ஜியோகிராபி பார்த்த மாதிரி ஒரு பீலிங்க்ஸ் பிரியா. முத்துக் குளிப்பவர்களின் வாழ்வில் எதிர்படும் ஆக்டோபஸ் பற்றிக் கவிதை. ஆனால் ஆக்டோபஸ் ஆளிடம் வராது. நாம் துரத்தினால் தாக்கும். கொடுமை எது என்றால் ஜெல்லிபிஷ்தான். உடல் முழுதும் ஷாக் அடித்தது போல ஆகி பின் எரிச்சல் அதிகம் ஆகிவிடும். உடன் மருத்துவம் பார்க்காவிடில் மரணம் சம்பவிக்கும். நன்றி. நல்ல கற்பனையும் கவிதை வரிகளும்.

Maheswaran Nallasamy said...

வர வர நீங்க பால குமாரன் மாதிரி கவிதை எழுத ஆரம்பிச்சிடீங்க. பாருங்க ஒருத்தர் அமீபாவா -ன்னு கேக்குறார். இன்னொருத்தர் ஜெல்லிபிஷ்தான்-னு அடிச்சு சொல்லுகிறார். எப்படியோ அவங்க கற்பனைக்கு தீனி. தொடரட்டும்.

Maheswaran Nallasamy said...

வானம்பாடிகள் said...
/அடி வரை சென்று..
சிப்பியுடன் சிப்பியாக..
முத்தொன்று..
மேலெழுந்து..
சிலந்தி விழியில்..
விழுந்து தெறித்து..
மேலே மேலே..
மேலே சென்றது../

இது புரியலை:(



என்ன கொடுமை சார் இது. பாருங்க சகல கலா வல்லவன் பாலா-கே புரியல. சீக்கிரம் அருஞ்சொற்பொருள் போடுங்க.

velji said...

உயிர் மூச்சை தேடுவது போல் போராட்டமும்,பயம் விலக்குதலும் நீர்க்குமிழி போல் எண்ணங்களை மேலே செலுத்தும்..யோக நிலை நோக்கி, என புரிந்து கொள்கிறேன்.சரியா?!

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...

/அடி வரை சென்று..
சிப்பியுடன் சிப்பியாக..
முத்தொன்று..
மேலெழுந்து..
சிலந்தி விழியில்..
விழுந்து தெறித்து..
மேலே மேலே..
மேலே சென்றது../

இது புரியலை:(//

hihi...

கலகலப்ரியா said...

//துபாய் ராஜா said...

வார்த்தை விளையாட்டு அருமை.//

நன்றி ராஜா..

கலகலப்ரியா said...

// butterfly Surya said...

அருமையான வார்த்தைகள்..

நடை அற்புதம்..//

நன்றி சூர்யா...

கலகலப்ரியா said...

// பிரியமுடன்...வசந்த் said...

அமீபாவப்பத்தி கொல்றீங்களா? சாரி சொல்றீங்களா?//

ameoba paambai vilungi.. ada ada arumai vasanthu.. kollurathellaam thambi paarthuppaan.. sollurathuthaan namma vela..

சிங்கக்குட்டி said...

வசந்த் சொன்னதையே கேட்கிறேன்.

நீங்க என்னா தமிழ் டீச்சரா?

வார்த்தைகளில் கோர்வை அருமை :-)

கலகலப்ரியா said...

// துபாய் ராஜா said...

கண்ணைக் கட்டுது.. ரைட்டு, ஜூட்டு, குட்நைட்... இன்ஷா முருகா,நாளை பகல்ல வந்து படித்து தெளிவோம்..//

தெளிஞ்சிடுத்தா..

கலகலப்ரியா said...

அது சரி said...

//
பாசிகள் படர்ந்த..
பாறையின் மீது..
கூழாய்க் கிடந்த..
கடற் சிலந்தி கண்களில்..
கருணையே உருவான..
யோகியைக் கண்டு..
கடற்பாசி விலக்கி..
நீந்தி நெருங்கி...
நிமிர்ந்து பார்க்க..

அசைந்த கூழில்..
ஆயிரம் கைகள்..
நீண்டு நெளிந்து..
சுருண்டு வளைந்து..
விரிந்து சுருங்கி..
விழுங்க விரைய..

நனவா கனவா..
நம்ப முடியாது..
கீழே பார்க்க..
கடலினடியில்..
இராட்சத பிம்பம்..
//

வெரி நைஸ்யா...//

நன்றி.. நன்றி நன்றி..

சூர்யா ௧ண்ணன் said...

அருமையான கவிதை..

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...

ம்ம்ம். scuba diver ஆ//

aamaango.. air tank ethuvum illaama.. :-l

கலகலப்ரியா said...

//அது சரி said...

//
கலகலப்ரியா said...
//அது சரி said...

ஓ...நியூ போய் நியூயர்னு புதுசா கண்டுபிடிச்சிட்டாய்ங்களா....ஷமிக்கணும்...ஞான் அதை நோக்கிட்டில்லா...//

நியூ போய்த்தான் நியூவர் கண்டு புடிச்சாய்ங்களா.. யார் கண்டு புடிச்சா என்னங்க.. ஆமா.. அந்த நோக்கிட்டில்லா என்ன... நோக்கியா அண்ட் மொசில்லா சேர்ந்து ஏதாவது பிரவுசர் கண்டு புடிச்சிருக்காகளா..?

//
மோஸில்லா நோக்கியாவுல ரன் ஆச்சின்னா அது நோக்கில்லா....அது ரிப்பேர் ஆச்சின்னா நோக்கிட்டில்லா...//

ஆ... ரன் ஆறது எல்லாம்.. தப்புன்னு சொல்லி இருக்காய்ங்கோ... =))

கலகலப்ரியா said...

//அது சரி said...

அடடா....முன்னாடியே சொல்லிருக்கப்படாது....நான் இப்ப தான் நியூஸிலாந்துக்கு டிக்கட் புக் பண்ணினேன்...அது தான் பிரிட்டன்லருந்து ரொம்ப தூரமான நாடாம்..//

தோடா ரொம்பத்தான் பயப்புடுறாய்ங்க...

// ம்யூசியத்துல நான் இல்ல...ஆனா டுஸாட்ஸ் போனா என்னோட வாக்ஸ் இருக்கும்...பார்த்துக்கங்க...:0)))//

அங்க ரெண்டு வாட்டி போயிருக்கேன்... ஜூலைல கூட போனேன்.. ஒபாமா... மைக்கேல் ஜாக்சன் எல்லாரையும் கூட்டில அடைச்சு வச்சிருக்கானுவ... 'scream'.. chamber of horror ல.. சில உருவங்கள் இருந்திச்சி.. அது வாக்ஸ் இல்லன்னு நினைக்கிறேன்.. :p

// (ஸீரியஸா...பிரிட்டன் வந்தா ஃபோன் பண்ணுங்க...பதிவர் சந்திப்பெல்லாம் சென்னைக்காரங்க பண்றது....நாம மாபெரும் பதிவர் மாநாடு நடத்திடலாம்...)//

ஏன் பிரிட்டனுக்கு வந்தா சீரியஸாதான் வரணுமா..? இன்னது மாநாடா?... நான் அண்டார்க்டிகா போறேனுங்கோ..

கலகலப்ரியா said...

// rajesh said...

தீ மிதித்தது போல
வார்த்தைகளைப் பதித்தது
விறு விறு நடை..
அணையாமல் எரியட்டும்
அக்கினிக் குஞ்சு..
வெந்து தணிய காத்திருக்கிறோம்..//

ம்ம்.. நன்றி ராஜேஷ்..

கலகலப்ரியா said...

//ஈ ரா said...

//இதயம் தவித்து..
இறைஞ்சி நிற்க..
சுவாசப் பை..
கையை விரித்தது../

வழ்க்கமாக மொத்தத்தில் விரிந்து தான் சுருங்கும் சுவாசப்பை...இங்கே கையை விரித்தது என்று அழகாக எடுத்தாண்டிருக்கிறீர்கள்..//

நன்றி ஈ ரா..

// முரல் என்றால் என்ன என்று தமிழ் கூறும் பதிவுலகுக்குச் சொன்னால் புண்ணியமாப் போவும்...//

ஒரு மீன் வகை... sword fish..

//நீரின் மூல தாதில்..
மூச்சுக் காற்றை..
மட்டும் பிரித்து உறிஞ்சி//

என்னம்மா இப்படி வெளுக்கிறீங்க...

கலகலப்ப்ரியா...கவிதைப் ப்ரியா..

அருமை...இதுவும் யோக நிலை என்று அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்.. வாழ்த்துக்கள்..//

ரொம்ப நன்றி..

கலகலப்ரியா said...

//ஆ.ஞானசேகரன் said...

அருமையான வார்த்தைகளுடன் நல்லாயிருக்கு//

நன்றி ஞானசேகரன்..

கலகலப்ரியா said...

//R.Gopi said...

கடல் யோகி

நிறைய முறை படித்து விட்டேன்...

பிரமிப்பாக இருக்கிறது.. இந்த மாதிரி எல்லாம் கூட எழுத முடியுமான்னு... உங்கள் எழுத்தின் வீச்சு / ரேஞ்ச் இப்போ எங்கேயோ இருக்கு...

வாழ்த்துக்கள் லகலக...

விரிவான பின்னூட்டம், விரைவில்...//

ரொம்ப நன்றி கோபி... எப்போ ரிலீஸ் பண்ண போறீங்க..

கலகலப்ரியா said...

//பிரபாகர் said...

எல்லாருக்கும் நான் சொல்லிக்கிறது என்னான்னா, ப்ரியா இப்போ புதுசா கடலுக்கடியில ஆராய்ச்சி பண்றாங்க.... ஏனுங்க, நான் சொல்றது சரிதானே?

வசந்த், ஆராய்ச்சின்னா பல பேருக்கு புரியாது, டீல்ல விடுங்க...

நல்லாருக்குங்க, உங்களோட சொல்லாடல்.

பிரபாகர்.//

நன்றி பிரபாகர்.. ஆமாம் மணல்ல நீந்திக்கிட்டே ஆழ்கடல்ல ஆராய்ச்சி பண்ணிக்கிட்டிருக்கேன்...

கலகலப்ரியா said...

//கதிர் - ஈரோடு said...

வளமான வார்த்தைக் கோர்வை//

நன்றி கதிர்..

கலகலப்ரியா said...

//பித்தனின் வாக்கு said...

டிஸ்கவரி, நேஷனல் ஜியோகிராபி பார்த்த மாதிரி ஒரு பீலிங்க்ஸ் பிரியா. முத்துக் குளிப்பவர்களின் வாழ்வில் எதிர்படும் ஆக்டோபஸ் பற்றிக் கவிதை. ஆனால் ஆக்டோபஸ் ஆளிடம் வராது. நாம் துரத்தினால் தாக்கும். கொடுமை எது என்றால் ஜெல்லிபிஷ்தான். உடல் முழுதும் ஷாக் அடித்தது போல ஆகி பின் எரிச்சல் அதிகம் ஆகிவிடும். உடன் மருத்துவம் பார்க்காவிடில் மரணம் சம்பவிக்கும்.//

ரொம்ப நன்றிங்க.. அருமையான தகவல்கள்..

// நன்றி. நல்ல கற்பனையும் கவிதை வரிகளும்.//

நன்றிங்க..

கலகலப்ரியா said...

//Maheswaran Nallasamy said...

வர வர நீங்க பால குமாரன் மாதிரி கவிதை எழுத ஆரம்பிச்சிடீங்க. பாருங்க ஒருத்தர் அமீபாவா -ன்னு கேக்குறார். இன்னொருத்தர் ஜெல்லிபிஷ்தான்-னு அடிச்சு சொல்லுகிறார். எப்படியோ அவங்க கற்பனைக்கு தீனி. தொடரட்டும்.//

ஓஹோ.. பாலகுமாரன் சார் வேறயா.. அது செரி... நன்றிங்கோ.. பெங்களூர்ல ஸ்னோ கொட்டுதாங்க..?

கலகலப்ரியா said...

//velji said...

உயிர் மூச்சை தேடுவது போல் போராட்டமும்,பயம் விலக்குதலும் நீர்க்குமிழி போல் எண்ணங்களை மேலே செலுத்தும்..யோக நிலை நோக்கி, என புரிந்து கொள்கிறேன்.சரியா?!//

தவறில்லை.. =)).. அழகான சிந்தனை..

கலகலப்ரியா said...

// சூர்யா ௧ண்ணன் said...

அருமையான கவிதை..//

nanri surya...!

கலகலப்ரியா said...

// சிங்கக்குட்டி said...

வசந்த் சொன்னதையே கேட்கிறேன்.

நீங்க என்னா தமிழ் டீச்சரா?

வார்த்தைகளில் கோர்வை அருமை :-)//

ஆ...! என்னோட தமிழ் டீச்சருக்கு இப்டி எல்லாம் கவிதை எழுத தெரியாதுங்க..

கலகலப்ரியா said...

Maheswaran Nallasamy said...

வானம்பாடிகள் said...
/அடி வரை சென்று..
சிப்பியுடன் சிப்பியாக..
முத்தொன்று..
மேலெழுந்து..
சிலந்தி விழியில்..
விழுந்து தெறித்து..
மேலே மேலே..
மேலே சென்றது../

இது புரியலை:(



என்ன கொடுமை சார் இது. பாருங்க சகல கலா வல்லவன் பாலா-கே புரியல. சீக்கிரம் அருஞ்சொற்பொருள் போடுங்க.//

ம்ம்.. வாங்க நாட்டாமை.. அருஞ்சொற்பொருள்தானே.. அதுக்கு ஒரு இடுகை போடுவோம்ல..

ப்ரியமுடன் வசந்த் said...

//முத்தொன்று..
மேலெழுந்து..//

நீர் குமிழ்

//சிலந்தி விழியில்..
விழுந்து தெறித்து..//

வலை

//மேலே மேலே சென்றது//

காற்றாய்

ப்ரியமுடன் வசந்த் said...

தாய் வயிற்றிலிருக்கும் குழந்தையா கூட நினச்சுக்கிடலாமோ

இது பன் முகத்தன்மையில் ஒரு கோணத்தில யோசிச்சது...
(தாங்ஸ் டெக்னிகல் ட்ராயிங் டீச்சர்)

கலகலப்ரியா said...

//பிரியமுடன்...வசந்த் said...

//முத்தொன்று..
மேலெழுந்து..//

நீர் குமிழ்

//சிலந்தி விழியில்..
விழுந்து தெறித்து..//

வலை

//மேலே மேலே சென்றது//

காற்றாய்//

mm mm..

vasu balaji said...

கலகலப்ரியா said...

//பிரியமுடன்...வசந்த் said...

//முத்தொன்று..
மேலெழுந்து..//

நீர் குமிழ்

//சிலந்தி விழியில்..
விழுந்து தெறித்து..//

வலை

//மேலே மேலே சென்றது//

காற்றாய்//

mm mm..

ங்கொய்யாலே. இப்பொ சொல்லுடி அக்காக்கு பதில். =))

ப்ரியமுடன் வசந்த் said...

யக்கா அதுக்கடுத்து போட்ட பின்னூட்டத்த ரிலீஸ் பண்ணி என் மானத்தை காப்பாத்து தாயீ

கலகலப்ரியா said...

//பிரியமுடன்...வசந்த் said...

தாய் வயிற்றிலிருக்கும் குழந்தையா கூட நினச்சுக்கிடலாமோ

இது பன் முகத்தன்மையில் ஒரு கோணத்தில யோசிச்சது...
(தாங்ஸ் டெக்னிகல் ட்ராயிங் டீச்சர்)//

பேஷ் பேஷ்.. என்னோட தம்பிய திங்க் பண்ண வச்சிருக்கேன் நானு.. குழந்தை வயித்தில இருந்து மேல போயீ.. வாய் வழியா பொறக்குமோ.. இல்ல நீ ஒரு கோணத்திலனு சொன்னது.. தலை கீழா.. நூத்தி எண்பது பாகை கோணத்திலயா வசந்து..

vasu balaji said...

கலகலப்ரியா said...
/குழந்தை வயித்தில இருந்து மேல போயீ.. வாய் வழியா பொறக்குமோ.. இல்ல நீ ஒரு கோணத்திலனு சொன்னது.. தலை கீழா.. நூத்தி எண்பது பாகை கோணத்திலயா வசந்து../

இதுல மானத்த காப்பாத்தணுமாம். டீச்சர் மானத்தையும் சேர்த்து வாங்குறாரு=))

vasu balaji said...

சிப்பி, முத்துன்னு கண்ட சினிமா பாட்ட நினைச்சிகிட்டு பன்முகத்தன்மையில் ஒரு கோணமாம். யப்பா இவன=))

ப்ரியமுடன் வசந்த் said...

இதுமாதிரியே நீ கவிதயெழுதின சீகிரம் என்னை கீழ்ப்பாக்கம் அனுப்பிய பெருமை உன்னைச்சேரும்...அதனால கவிதைன்னு இடுகை போட்டா நான் ஆப்செண்ட் ஆகிக்குறேன்,,,,,

நைனா உன்னை அப்பறமா வச்சுக்கிறேன் காலை வாரிவிடுறியா?

நல்லா இருங்க...வாழ்க வளமுடன்

ப்ரியமுடன் வசந்த் said...

//முத்துக் குளிப்பதோ..
முரல்கள் பிடிப்பதோ..//

முத்துக்குளிக்கிறதுன்னா முத்துலயே குளிக்கிறதா?

:))))

முரல்கள் பிடிப்பதுன்னா மீன் பிடிப்பதா?

கலகலப்ரியா said...

//பிரியமுடன்...வசந்த் said...

இதுமாதிரியே நீ கவிதயெழுதின சீகிரம் என்னை கீழ்ப்பாக்கம் அனுப்பிய பெருமை உன்னைச்சேரும்...அதனால கவிதைன்னு இடுகை போட்டா நான் ஆப்செண்ட் ஆகிக்குறேன்,,,,,

நைனா உன்னை அப்பறமா வச்சுக்கிறேன் காலை வாரிவிடுறியா?

நல்லா இருங்க...வாழ்க வளமுடன்//


தோடா.. கீழ்ப்பாக்கத்ல எல்லாம் உன்னை வச்சு மேய்க்க முடியாதுன்னுதான் வெளில விட்டு வச்சிருக்காய்ங்க.. அப்டியே இருந்துக்க..

vasu balaji said...

பிரியமுடன்...வசந்த் said...

/இதுமாதிரியே நீ கவிதயெழுதின சீகிரம் என்னை கீழ்ப்பாக்கம் அனுப்பிய பெருமை உன்னைச்சேரும்.../

இத நீ சொல்றியா? சாவடிப்பேன்=))

/நைனா உன்னை அப்பறமா வச்சுக்கிறேன் காலை வாரிவிடுறியா?/

சே சே அதெல்லாம் எனக்கு தெரியாத வேல.
/நல்லா இருங்க...வாழ்க வளமுடன்/

அது சொல்ல இன்னும் 3 மாசமிருக்கு. அப்போ சொல்லுவோம். அலையாத

கலகலப்ரியா said...

// பிரியமுடன்...வசந்த் said...

//முத்துக் குளிப்பதோ..
முரல்கள் பிடிப்பதோ..//

முத்துக்குளிக்கிறதுன்னா முத்துலயே குளிக்கிறதா?

:))))

முரல்கள் பிடிப்பதுன்னா மீன் பிடிப்பதா?//

திரும்பவுமா... தேவுடே..