header photo

Saturday, October 24, 2009

போற்றுவம் இஃதை எமக்கில்லை ஈடே...


Part 1
Part 2
Part 3



தடையற்ற பேச்சு.. தடையற்ற எழுத்து.. தடையற்ற சிரிப்பு.. ஓடி விளையாடு பாப்பா.. என்று ஓய்ந்திருக்காத காலம்.. எங்கும் எதிலும்.. சுதந்திரக் காற்று.. தமிழனைத் தமிழன் ஆண்ட காலம்.. பொற்காலம்.. பருவ வயதில்.. பாட்டி சேலை போர்த்த வேண்டிய தேவை இல்லாதிருந்த காலம்.. பட்டாம் பூச்சிகளாய் பறந்து கொண்டிருந்த காலம்.. அந்தக் கால கட்டத்தில் என் பருவகாலமும் அகப்பட்டது.. வசந்த காலம்.. நம் மூதாதையர் முற்றிலும் பாவம் செய்து விடவில்லை.. அவ்வப்போது புண்ணியமும் செய்து வைத்திருக்கிறார்கள் என்பதை நிரூபித்த காலம்.. ஆனால்... ஒரே... ஒரு தடை மட்டும்.. அது..

பொருளாதாரத் தடை.. ஷாம்பூவிற்குப் பதில்.. சிகைக்காய்.. அதுவும் போய் மாங்காய்... சீசன் இல்லையெனில்.. சோறு ஆக்கி வடிக்கும் கஞ்சி.. சில பல வீடுகளில்.. அதுவே பிரதான உணவு.. ஆடுகளும்.. மாடுகளும்.. மனிதர்களைப் போட்டியாகப் பார்த்த காலம்.. உப்புக்கு பேர் போனது நம் ஊர்.. சவர்க்காரம் செய்ய வக்கில்லையா நமக்கு.. ஆசிரியர்களும்.. துணை வேந்தர்களும்.. மேடை மேடையாக முழங்கிய காலம்.. ஏன் முடியாது.. ரோஷத்துடன்.. அடுத்த நாளே.. நாற்றமா.. துர்நாற்றமா.. பிரித்தறிய முடியாத வாசனையில்.. லிக்விட் சோப்..

மின்சாரம் போய்.. மின்குமிழ்களில் சிலந்திவலை படர்ந்து.. பெட்ரோமாக்ஸ் போய்.. மண்ணெண்ணெயும் அற்றுப் போய்.. மட்டுப் படுத்தப்பட்ட.. தேங்காய் எண்ணெயில்.. கொஞ்சம் சமைக்க.. கொஞ்சம் தலையில்.. மீதி .. பழைய ஜாம் போத்தலில்.. பாதி வரை தண்ணீர் விட்டு.. உப்புப் போட்டு.. எண்ணெய் மேலே விட்டு.. திரிக்கு ஸ்டாண்ட் வைத்து.. பழைய வேஷ்டி கிழித்து.. திரி செய்து.. இரு துளி எண்ணெயில் விடிய விடிய விளக்கெரித்த காலம்.. தாத்தாவின் ரால்லி சைக்கிள் ஸ்டாண்ட் போட்டு.. டைனமோவில் இணைப்புக் கொடுத்து.. பெடல் மிதித்து ஆனந்தமாய்.. பாட்டுக் கேட்ட காலம்... இன்னும் எத்தனை எத்தனை.. புதுப் புதுக் கண்டு பிடிப்புகள்..

தமிழறியாத் தரைப்படை.. இல்லாதிருந்த காலம்.. கையாலாகாத்தனமாய் விமானப்படையனுப்பி.. படை படையாகக் குண்டு பொழியப்பட்ட காலம்.. கடற்படையினரால்.. கண்மூடித்தனமாய்.. எறிகணைகள் எறியப்பட்ட காலம்.. தரைப்படையால் எரிகுண்டு வீசப்பட்ட காலம்..





ஸ்போர்ட்ஸ்
மீட்டிங்.. எல்லாரும் கலந்துக்கணும்.. வேட்டையாடும்.. அக்காஸ்... டிமிக்கி கொடுத்து.. ஓடி ஒளிய உதவும்.. மாடிப் படிகள்.. தேவாரம்.. திருவாசகம்.. திருப்புகழ்... "வான்முகில் வழாது பெய்க... மலிவளஞ் சுரக்க மன்னன்.. கோன்முறையரசு செய்க.. குறைவிலா துயிர்கள் வாழ்க" (ஹஹா..) பாடிய.. ஆஸெம்ப்ளி மேடை.. பாண்டிய மன்னன் நீதி தவறிவிட்டேன் என்று.. இதயத்தில் கை வைத்து.. மண்டையைப் போட்ட அதே மேடை..

மோட்டார்கள் எல்லாம் வேலை நிறுத்தம் செய்து.. உள்ளங்கை சிவக்க.. கயிறு பிடித்து.. கிணற்றில் தண்ணீர் இறைத்து.. குளித்து.. லிக்விட் சோப்பு போட்டுத் தோய்த்த வெண்ணிற யூனிஃபார்ம் அணிந்து.. டை கட்டி.. இரு ஜடை போட்டு.. கருஞ்சாந்தணிந்து.. பள்ளிப்பையுடன்.. லஞ்ச் பாக்ஸ் எடுத்து.. வீதி வரை வந்து அம்மா கொடுக்கும் வாட்டர் கேன் சகிதம்..

மாடிக் கட்டிடங்களுடன்.. நிழல்பரப்பிய மரங்களுடன்.. கான்டீனுடன்.. அதே .. ஆஸெம்ப்ளி மேடையும் சேர்ந்து.. சிதைக்கப்பட்டு.. தரை மட்டமாகி.. கற்குவியல்களாகி.. இடுகாடாகி.. இரு வாரம் ஆகவில்லை.. அதையும் தாண்டி.. அதையும் கடந்து.. அங்கொன்றும் இங்கொன்றுமாய்.. காலியாகிக் கிடந்த வீடுகளில்.. வகுப்பறை அமைத்து.. படித்து.. படித்து.. ஓடி.. ஆடி.. விளையாடி..

யாரை நம்பி நாம் பிறந்தோம்.. போங்கடா போங்க.. என்று நெஞ்சு நிமிர்த்தி.. தமிழனின் விதிமுறைகளை அடி பிசகாது பின்பற்றி.. சைக்கிளில் சமாந்திரமாக வந்து.. தமிழச்சிப் போலீஸிடம் மாட்டி.. பத்து ரூபா அபராதம் கட்டி.. படு பாவிங்க என்று திட்டி.. சிரித்துக் கடந்து.. புயலுடன் கூடிய.. இடி மழை.. அடிக்கடி இருப்பினும்... அது சொர்க்க பூமி..

(தொடரும்.. )


24 ஊக்கம்::

vasu balaji said...

முதல் பாரா

பட்டாம்பூச்சியா பறக்குது.

இரண்டாவது பாரா

தடை மீறிய தன்னம்பிக்கை

/ஆடுகளும்.. மாடுகளும்.. மனிதர்களைப் போட்டியாகப் பார்த்த காலம்../

ஆனாலும் மனிதர்களைப் போல் நடக்காத காலம்.

/இன்னும் எத்தனை எத்தனை.. புதுப் புதுக் கண்டு பிடிப்புகள்../

இதுவே வெறித்தனமாய் அடிக்க காரணமாயிருக்கும்.

/தமிழறியாத் தரைப்படை.....தரைப்படையால் எரிகுண்டு வீசப்பட்ட காலம்../

காலன் நிரந்தரமாய் நின்ற காலம்:((

/ஸ்போர்ட்ஸ் மீட்டிங்..மண்டையைப் போட்ட அதே மேடை../

/காலியாகிக் கிடந்த வீடுகளில்.. வகுப்பறை அமைத்து.. படித்து.. படித்து.. ஓடி.. ஆடி.. விளையாடி../

I cried while reading this. No words to describe my feelings.

/யாரை நம்பி நாம் பிறந்தோம்.. போங்கடா போங்க.. என்று நெஞ்சு நிமிர்த்தி.. தமிழனின் விதிமுறைகளை அடி பிசகாது பின்பற்றி.. சைக்கிளில் சமாந்திரமாக வந்து.. தமிழச்சிப் போலீஸிடம் மாட்டி.. பத்து ரூபா அபராதம் கட்டி.. படு பாவிங்க என்று திட்டி.. சிரித்துக் கடந்து.. புயலுடன் கூடிய.. இடி மழை.. அடிக்கடி இருப்பினும்... அது சொர்க்க பூமி../

ச்சீ. இதெல்லாம் அனுபவிக்கலையே. என்ன அங்க பிறந்திருந்தா மனுசனா செத்திருக்கலாம்:((. இப்படி இயலாம ஏன் யாருமே எதுவுமே பண்ணலைன்னு திகைக்காம, கள்ள வார்த்தைக்கு ஏமாறாம இந்தக் கஷ்டம பட்டாலும் மனுசனா வாழ்ந்திருக்கலாம். கொஞ்ச நாளாவது.

இத்தனை வயதில் இப்படி படிக்கவில்லை.நன்றியம்மா உனக்கு.

துபாய் ராஜா said...

கலகலப்ரியா கலக்கல் ப்ரியா.

இந்த பாகத்தில் எம்மவரின் போராட்டகாலத்தையும், புதுப்புது கண்டுபிடிப்புகளையும் லேசாக தொட்டுள்ளீர்கள். தன்மானத்தமிழர்தம் தனிச்சிறப்பு பேசும் இன்னும் பல பாகங்களை எதிர்பார்க்கிறோம்.

வாழ்த்துக்கள். பைந்தமிழர் பெருமை பேசும் நீவிர் வாழிய பல்லாண்டு பல்லாண்டு பல கோடி ஆண்டு... பின்வரும் தலைமுறையும் எம்மவர் எழுச்சி பற்றி அறிய இன்னும் பல எழுதுங்கள் எமதன்பிற்காக....

நாமார்க்கும் குடியல்லோம். நமனை அஞ்சோம்...

தாயே... தமிழே... நன்றிகள் பல...

கலகலப்ரியா said...

////வானம்பாடிகள் said...

முதல் பாரா

பட்டாம்பூச்சியா பறக்குது.

இரண்டாவது பாரா

தடை மீறிய தன்னம்பிக்கை

/ஆடுகளும்.. மாடுகளும்.. மனிதர்களைப் போட்டியாகப் பார்த்த காலம்../

ஆனாலும் மனிதர்களைப் போல் நடக்காத காலம்.

/இன்னும் எத்தனை எத்தனை.. புதுப் புதுக் கண்டு பிடிப்புகள்../

இதுவே வெறித்தனமாய் அடிக்க காரணமாயிருக்கும்.

/தமிழறியாத் தரைப்படை.....தரைப்படையால் எரிகுண்டு வீசப்பட்ட காலம்../

காலன் நிரந்தரமாய் நின்ற காலம்:((

/ஸ்போர்ட்ஸ் மீட்டிங்..மண்டையைப் போட்ட அதே மேடை../

/காலியாகிக் கிடந்த வீடுகளில்.. வகுப்பறை அமைத்து.. படித்து.. படித்து.. ஓடி.. ஆடி.. விளையாடி../

I cried while reading this. No words to describe my feelings.//

lol... dun cry sir.. அழுகாச்சி காவியமாக வேண்டாமென்றுதான் முயன்று கொண்டிருக்கிறேன்..

கலகலப்ரியா said...

// ச்சீ. இதெல்லாம் அனுபவிக்கலையே. என்ன அங்க பிறந்திருந்தா மனுசனா செத்திருக்கலாம்:((. இப்படி இயலாம ஏன் யாருமே எதுவுமே பண்ணலைன்னு திகைக்காம, கள்ள வார்த்தைக்கு ஏமாறாம இந்தக் கஷ்டம பட்டாலும் மனுசனா வாழ்ந்திருக்கலாம். கொஞ்ச நாளாவது.//

வேண்டாம் சார்.. இந்த அனுபம் யாருக்கும் வர வேண்டாம்..

கலகலப்ரியா said...

//இத்தனை வயதில் இப்படி படிக்கவில்லை.நன்றியம்மா உனக்கு.//

நன்றி சார்..

கலகலப்ரியா said...

//துபாய் ராஜா said...

கலகலப்ரியா கலக்கல் ப்ரியா.

இந்த பாகத்தில் எம்மவரின் போராட்டகாலத்தையும், புதுப்புது கண்டுபிடிப்புகளையும் லேசாக தொட்டுள்ளீர்கள். தன்மானத்தமிழர்தம் தனிச்சிறப்பு பேசும் இன்னும் பல பாகங்களை எதிர்பார்க்கிறோம்.

வாழ்த்துக்கள். பைந்தமிழர் பெருமை பேசும் நீவிர் வாழிய பல்லாண்டு பல்லாண்டு பல கோடி ஆண்டு... பின்வரும் தலைமுறையும் எம்மவர் எழுச்சி பற்றி அறிய இன்னும் பல எழுதுங்கள் எமதன்பிற்காக....

நாமார்க்கும் குடியல்லோம். நமனை அஞ்சோம்...

தாயே... தமிழே... நன்றிகள் பல...//

ரொம்ப ரொம்ப நன்றி ராஜா... பார்க்கலாம்..

ஆ.ஞானசேகரன் said...

வார்த்தைகள் எல்லாம் விளையாடிவிட்டு சென்றது....

பிரபாகர் said...

அவலங்களை கண் முன்னே நிறுத்தி கலங்கடிக்கிறீர்கள் ப்ரியா...

பிரபாகர்.

Unknown said...

சகோதரி,

வானம்பாடிகள் சொன்னது போல அங்கே பிறந்து இதையெல்லாம் அனுபவித்து தமிழ் தெரியாத் தரைப்படையை எதிர்த்துப் போரிட்டு மாண்டிருக்கலாம். இங்கே பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உட்கார்ந்து கொண்டு எம் இனம் அழிவதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்ததை விட..

விடாமல் தொடருங்கள்.

பி.கு: உங்களின் தீபாவளி பற்றிய பதிவு உட்பட நான் பல பதிவுகளைப் படித்து வருகிறேன். பின்னூட்டம் போடக்கூட எனக்கு வார்த்தைகளில்லை.

அன்பேசிவம் said...

வணக்கம் ப்ரியா, உங்கள் எழுத்து நடை வசீகரிக்கிறது. பட்டதை சொல்லும் வேகம், பாடுகளை சொல்லும் பரிதாபம், நையாண்டி, கேலி, கிண்டல், கோவம் எல்லாத்தையும் கலந்துகட்டி அடிக்கிறிங்க, வாழ்த்துக்கள்.

அதென்னா, ஆக்கி வச்சு வீணா போனது....
உங்க எழுத்து எதுவும் வீணாபோறமாதிரி எனக்கு தெரியலை, ஒருவேளை உங்களுக்கு அப்படி தெரிந்தால் அதை அப்படியே விட்டுவிடுங்கள், இல்லையென்றால் மாற்றிவிடுங்கள்.
:-)

ஈரோடு கதிர் said...

//தரை மட்டமாகி.. கற்குவியல்களாகி.. இடுகாடாகி.. இரு வாரம் ஆகவில்லை.. அதையும் தாண்டி.. அதையும் கடந்து.. அங்கொன்றும் இங்கொன்றுமாய்.. காலியாகிக் கிடந்த வீடுகளில்.. வகுப்பறை அமைத்து..//

இதேபோல் மீண்டும் புதுப்பிக்கப்படவேண்டும் எல்லோர் வாழ்வும்

கலகலப்ரியா said...

//ஆ.ஞானசேகரன் said...

வார்த்தைகள் எல்லாம் விளையாடிவிட்டு சென்றது....//

நன்றி ஞானசேகரன்..

கலகலப்ரியா said...

//பிரபாகர் said...

அவலங்களை கண் முன்னே நிறுத்தி கலங்கடிக்கிறீர்கள் ப்ரியா...

பிரபாகர்.//

நன்றி பிரபாகர்..

கலகலப்ரியா said...

// முகிலன் said...

சகோதரி,

வானம்பாடிகள் சொன்னது போல அங்கே பிறந்து இதையெல்லாம் அனுபவித்து தமிழ் தெரியாத் தரைப்படையை எதிர்த்துப் போரிட்டு மாண்டிருக்கலாம். இங்கே பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உட்கார்ந்து கொண்டு எம் இனம் அழிவதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்ததை விட..

விடாமல் தொடருங்கள்.

பி.கு: உங்களின் தீபாவளி பற்றிய பதிவு உட்பட நான் பல பதிவுகளைப் படித்து வருகிறேன். பின்னூட்டம் போடக்கூட எனக்கு வார்த்தைகளில்லை.//

:-).. ம்ம்.. ரொம்ப நன்றி முகிலன்..

கலகலப்ரியா said...

//முரளிகுமார் பத்மநாபன் said...

வணக்கம் ப்ரியா, உங்கள் எழுத்து நடை வசீகரிக்கிறது. பட்டதை சொல்லும் வேகம், பாடுகளை சொல்லும் பரிதாபம், நையாண்டி, கேலி, கிண்டல், கோவம் எல்லாத்தையும் கலந்துகட்டி அடிக்கிறிங்க, வாழ்த்துக்கள்.//

நன்றி முரளி..

//அதென்னா, ஆக்கி வச்சு வீணா போனது....
உங்க எழுத்து எதுவும் வீணாபோறமாதிரி எனக்கு தெரியலை, ஒருவேளை உங்களுக்கு அப்படி தெரிந்தால் அதை அப்படியே விட்டுவிடுங்கள், இல்லையென்றால் மாற்றிவிடுங்கள்.
:-)//


அது தமாஷுக்கு.. அடிக்கடி மாத்துவோம்ல... :),,

கலகலப்ரியா said...

//கதிர் - ஈரோடு said...

//தரை மட்டமாகி.. கற்குவியல்களாகி.. இடுகாடாகி.. இரு வாரம் ஆகவில்லை.. அதையும் தாண்டி.. அதையும் கடந்து.. அங்கொன்றும் இங்கொன்றுமாய்.. காலியாகிக் கிடந்த வீடுகளில்.. வகுப்பறை அமைத்து..//

இதேபோல் மீண்டும் புதுப்பிக்கப்படவேண்டும் எல்லோர் வாழ்வும்//

நன்றி கதிர்..

velji said...

/ அடிக்கடி இருப்பினும்... அது சொர்க்க பூமி../

கண்ணீரை உள்ளுக்குள் தேக்கியோ, சுண்டியெறிந்தோ சொன்ன வார்த்தைகள்.

கலகலப்ரியா said...

//velji said...

/ அடிக்கடி இருப்பினும்... அது சொர்க்க பூமி../

கண்ணீரை உள்ளுக்குள் தேக்கியோ, சுண்டியெறிந்தோ சொன்ன வார்த்தைகள்.//

வாங்க வேல்ஜி.. நன்றி.. !

ப்ரியமுடன் வசந்த் said...

[b]:( [/b]

கலகலப்ரியா said...

// பிரியமுடன்...வசந்த் said...

[b]:( [/b]//

?!

பித்தனின் வாக்கு said...

//மின்சாரம் போய்.. மின்குமிழ்களில் சிலந்திவலை படர்ந்து.. பெட்ரோமாக்ஸ் போய்.. மண்ணெண்ணெயும் அற்றுப் போய்.. மட்டுப் படுத்தப்பட்ட.. தேங்காய் எண்ணெயில்.. கொஞ்சம் சமைக்க.. கொஞ்சம் தலையில்.. மீதி .. பழைய ஜாம் போத்தலில்.. பாதி வரை தண்ணீர் விட்டு.. உப்புப் போட்டு.. எண்ணெய் மேலே விட்டு.. திரிக்கு ஸ்டாண்ட் வைத்து.. பழைய வேஷ்டி கிழித்து.. திரி செய்து.. இரு துளி எண்ணெயில் விடிய விடிய விளக்கெரித்த காலம்.. தாத்தாவின் ரால்லி சைக்கிள் ஸ்டாண்ட் போட்டு.. டைனமோவில் இணைப்புக் கொடுத்து.. பெடல் மிதித்து ஆனந்தமாய்.. பாட்டுக் கேட்ட காலம்... இன்னும் எத்தனை எத்தனை.. புதுப் புதுக் கண்டு பிடிப்புகள்..

தமிழறியாத் தரைப்படை.. இல்லாதிருந்த காலம்.. கையாலாகாத்தனமாய் விமானப்படையனுப்பி.. படை படையாகக் குண்டு பொழியப்பட்ட காலம்.. கடற்படையினரால்.. கண்மூடித்தனமாய்.. எறிகணைகள் எறியப்பட்ட காலம்.. தரைப்படையால் எரிகுண்டு வீசப்பட்ட காலம்..//
பிரியா உண்மையில் உங்களுடய வலைப்பக்கம் கலகலப்பாக இருக்கும் என்றுதான் நான் படிக்க ஆரம்பித்தேன். எப்பிடி இதுமாதிரி எழுதுறாங்க என்று கூட ஆச்சரியப் பட்டேன். அனால் இந்த தொடரைப் படிக்கும்போது தான் உண்மையில் நிங்கள் அனைவரும் எவ்வளவு இழந்துள்ளீர்கள் என்பது புரிகின்றது. நீங்க, ஹேமா கவிதைகளைக் படிக்கும் போது உங்களின் உண்மையான வலிகள் புரிகின்றது.
எங்களுக்கு ஈழம் பற்றி குட்டிமணி, ஜெகன், தங்கதுரை வாழ்க்கை வரலாறு படித்துதான் தெரியும், யாழ் வனிகர்கள், தோயிலைத் தோட்டத் தொழிளாளர்கள். மற்றும் கண்டி முருகர் கோயில் மட்டும் தெரியும். அங்கேயும் நான் வாழ்ந்த மாதிரி ஒரு ஊரும் மக்களும் இருந்து,அதைப் பிரிவது என்பது வேதனை. எங்களுக்காவது ஒரு நாளில் நினைத்தால் சென்றுவிடமுடியும்,அப்படியும் எதையே இழந்த வேதனை அயல் மண்ணில் பணி புரியும் போது. ஆனால் எல்லாம் கனவாய் விட்டு போவது என்பது மிகவும் வேதனையும் வலியும் தருவது. கண்டிபாக வாழ்ந்த காலங்கள் மீண்டும் வரும். அது இரணங்களை ஆற்றும். காத்துருப்போம். நன்றி. தொடரை எழுதுங்கள் படிக்கின்றேன்.

கலகலப்ரியா said...

//பித்தனின் வாக்கு said...//

நன்றிங்க..

Maheswaran Nallasamy said...

அவ்வளவு இடர்பாடுகளுக்கும், இடிபாடுகளுக்கு இடையேயும் ஆசிரிய பணி செய்த ஆசிரியர்கள் காலில் விழுந்து கும்பிடனும்.

கலகலப்ரியா said...

ம்ம்.. அப்போ படிச்சவங்க கால்ல யார் விழுறது.. =))... நன்றிங்க சாரே.. பின்னூட்டம் போடுற அளவு டைம் இருக்கே உங்களுக்கு.. ஹ்ம்ம்..