Part 1
Part 2
Part 3
Part 4
Part 5
Part 6
Part 7
Part 8
Part 9
Part 10
Part 11
Part 12
இரைப்பையில் இன்னமும் இருந்து கொண்டிருந்த ஐஸ் கிரீம்... இடைச்சிறுகுடல் தாண்டிக் கொண்டிருந்த இடியப்பம் ஆகியவற்றை தொண்டையை நோக்கி இழுத்து... வாய் வழியாக வெளியேற்ற வழி செய்து கொண்டிருந்த மெதனோல் நெடியுடன்... இன்ன பிற இரசாயன நெடிகள்...
கையில் கைக்குட்டை வைத்து மூக்கை அழுத்தியபடி நான்... யாழ் பல்கலைக்கழக... மருத்துவபீடத்தின்... பரிசோதனைக்கூடத்தில்.. கண்ணாடிக் குவளைகளில்... சுருண்டிருந்த... பலவிதப் பாம்புகள்... பல்லிகள்.. தவளைகள்... ஓட்டை விழுந்த... மற்றும் விழாத இதயங்கள்... புகையைச் சுவாசித்து... கார்பனால் நிறைந்து கறுத்திருந்த நுரையீரல்கள்... நல்ல காற்றைச் சுவாசித்த நுரையீரல்கள்.. வேலை நிறுத்தம் செய்து.. டயாலிசிஸ் டெக்னாலஜி கண்டு பிடிக்க உதவிய சிறுநீரகங்கள்... சாதாரண சிறுநீரகங்கள்... ஆல்கஹோல் ஈரல்... முழு ஈரல்.. மண்ணீரல்... மண்புழு... இவற்றுடன்...
ஒரு மாதமான மனிதக் கரு.... தொப்புட்கொடியுடன் சுருண்டிருந்த... குறை மாதத்தில் இறந்து பிறந்த குழந்தை...! அவற்றுக்கெல்லாம் நடுவில்... சரணாலயத்தில்... அழகாக அமைக்கப்பட்ட நீர்த்தாரை போன்று... கண்ணாடிப் பெட்டியில்... எனக்குப் பதினெட்டு வயதாக முன்னரே நான் பார்த்த ஒரு முழு ஆணின் நிர்வாண உடல்...! மூக்கைப் பொத்தியபடி திரும்ப... "திலீபன்" என்ற சொல் காதில் அறைந்து... மீண்டும் பெட்டியை நோக்கித் திரும்ப வைத்தது...!
தோல் ரோஸ் நிறத்தில் வெளிறியிருக்க... போஸ்டர்களில் பார்த்த அதே அமைதியுடன்... பார்த்தீபன் என்று அழைக்கப்பட்ட... முன்னாள் மருத்துவபீட மாணவன்... உடலையும்... உயிரையும்... தமிழுக்கு அர்ப்பணித்த... தியாகம்... திலீபன்... அஹிம்சை... அமிலத்தில் மிதந்து கொண்டிருந்தது...! இல்லை..! அகிம்சையைக் கொன்று அமிலத்தில் மிதக்க விட்டிருந்தார்கள்..!
எது ஹிம்சை..? எது அஹிம்சை..? ஒருவனைக் கொல்வது ஹிம்சை..? 'உன்னைக் கொல்ல வந்த பசுவையும் கொல்' என்று... தன்னைக் கொல்லவரும்.. கொடும்பாவியை எரித்தல் ஹிம்சையா..?
உன் வீடு புகுந்து.. உன் தாயின் சேலையுருவும் ஒரு புல்லுருவியை வேடிக்கை பார்ப்பது அஹிம்சையா..? அதே சேலையில் அவளைத் தூக்கிலிடுவதைப் பார்த்துக் கொண்டிருப்பது அஹிம்சையா..? அவள் சேலையில் கண் படமுன்... கண்ணை நோண்டுதல் ஹிம்சையா..? இதுதான் தீவிரமான வாதமா..? பக்கவாதத்தில் படுத்திருப்பவன்போல்.... கையாலாகாதிருப்பதுதான் அஹிம்சையா..?
திலீபன்... ஒரு பானைச் சோற்றுப் பதம்..! அஹிம்சாவழி போற்றப்பட்டிருப்பின்... தீவிரவாதம் வழியல்ல என்று தவளையாகக் கத்திக் கொண்டிருப்பவர்களின் கூற்று மெய்ப்பட்டிருக்க வேண்டுமெனில்... திலீபன் அமிலத்தில் மிதந்து கொண்டிருப்பதற்குப் பதில்... அமிலத்தைக் கையில் வைத்து... பல காயங்களைத் துடைத்துக் கொண்டிருந்திருப்பான்.. இருந்திருக்க வேண்டும்! கல்லறைக் குழிகளில் கனவு கண்டுகொண்டிருப்பவர்களின் கனவு மெய்ப்பட்டிருக்கும்... அவர்கள் கனவுகளில் மட்டுமன்றி... நனவுகளிலும் உலவிக் கொண்டிருந்திருப்பர்...!
Part 2
Part 3
Part 4
Part 5
Part 6
Part 7
Part 8
Part 9
Part 10
Part 11
Part 12
இரைப்பையில் இன்னமும் இருந்து கொண்டிருந்த ஐஸ் கிரீம்... இடைச்சிறுகுடல் தாண்டிக் கொண்டிருந்த இடியப்பம் ஆகியவற்றை தொண்டையை நோக்கி இழுத்து... வாய் வழியாக வெளியேற்ற வழி செய்து கொண்டிருந்த மெதனோல் நெடியுடன்... இன்ன பிற இரசாயன நெடிகள்...
கையில் கைக்குட்டை வைத்து மூக்கை அழுத்தியபடி நான்... யாழ் பல்கலைக்கழக... மருத்துவபீடத்தின்... பரிசோதனைக்கூடத்தில்.. கண்ணாடிக் குவளைகளில்... சுருண்டிருந்த... பலவிதப் பாம்புகள்... பல்லிகள்.. தவளைகள்... ஓட்டை விழுந்த... மற்றும் விழாத இதயங்கள்... புகையைச் சுவாசித்து... கார்பனால் நிறைந்து கறுத்திருந்த நுரையீரல்கள்... நல்ல காற்றைச் சுவாசித்த நுரையீரல்கள்.. வேலை நிறுத்தம் செய்து.. டயாலிசிஸ் டெக்னாலஜி கண்டு பிடிக்க உதவிய சிறுநீரகங்கள்... சாதாரண சிறுநீரகங்கள்... ஆல்கஹோல் ஈரல்... முழு ஈரல்.. மண்ணீரல்... மண்புழு... இவற்றுடன்...
ஒரு மாதமான மனிதக் கரு.... தொப்புட்கொடியுடன் சுருண்டிருந்த... குறை மாதத்தில் இறந்து பிறந்த குழந்தை...! அவற்றுக்கெல்லாம் நடுவில்... சரணாலயத்தில்... அழகாக அமைக்கப்பட்ட நீர்த்தாரை போன்று... கண்ணாடிப் பெட்டியில்... எனக்குப் பதினெட்டு வயதாக முன்னரே நான் பார்த்த ஒரு முழு ஆணின் நிர்வாண உடல்...! மூக்கைப் பொத்தியபடி திரும்ப... "திலீபன்" என்ற சொல் காதில் அறைந்து... மீண்டும் பெட்டியை நோக்கித் திரும்ப வைத்தது...!
தோல் ரோஸ் நிறத்தில் வெளிறியிருக்க... போஸ்டர்களில் பார்த்த அதே அமைதியுடன்... பார்த்தீபன் என்று அழைக்கப்பட்ட... முன்னாள் மருத்துவபீட மாணவன்... உடலையும்... உயிரையும்... தமிழுக்கு அர்ப்பணித்த... தியாகம்... திலீபன்... அஹிம்சை... அமிலத்தில் மிதந்து கொண்டிருந்தது...! இல்லை..! அகிம்சையைக் கொன்று அமிலத்தில் மிதக்க விட்டிருந்தார்கள்..!
எது ஹிம்சை..? எது அஹிம்சை..? ஒருவனைக் கொல்வது ஹிம்சை..? 'உன்னைக் கொல்ல வந்த பசுவையும் கொல்' என்று... தன்னைக் கொல்லவரும்.. கொடும்பாவியை எரித்தல் ஹிம்சையா..?
உன் வீடு புகுந்து.. உன் தாயின் சேலையுருவும் ஒரு புல்லுருவியை வேடிக்கை பார்ப்பது அஹிம்சையா..? அதே சேலையில் அவளைத் தூக்கிலிடுவதைப் பார்த்துக் கொண்டிருப்பது அஹிம்சையா..? அவள் சேலையில் கண் படமுன்... கண்ணை நோண்டுதல் ஹிம்சையா..? இதுதான் தீவிரமான வாதமா..? பக்கவாதத்தில் படுத்திருப்பவன்போல்.... கையாலாகாதிருப்பதுதான் அஹிம்சையா..?
திலீபன்... ஒரு பானைச் சோற்றுப் பதம்..! அஹிம்சாவழி போற்றப்பட்டிருப்பின்... தீவிரவாதம் வழியல்ல என்று தவளையாகக் கத்திக் கொண்டிருப்பவர்களின் கூற்று மெய்ப்பட்டிருக்க வேண்டுமெனில்... திலீபன் அமிலத்தில் மிதந்து கொண்டிருப்பதற்குப் பதில்... அமிலத்தைக் கையில் வைத்து... பல காயங்களைத் துடைத்துக் கொண்டிருந்திருப்பான்.. இருந்திருக்க வேண்டும்! கல்லறைக் குழிகளில் கனவு கண்டுகொண்டிருப்பவர்களின் கனவு மெய்ப்பட்டிருக்கும்... அவர்கள் கனவுகளில் மட்டுமன்றி... நனவுகளிலும் உலவிக் கொண்டிருந்திருப்பர்...!
உப்பென்றும் சீனியென்றும்
உள்நாட்டுச் சேலை என்றும்
செப்பித் திரிவாரடி கிளியே
செய்வதறியாரடி...
நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி
வஞ்சனை சொல்வாரடி கிளியெ
வாய்ச் சொல்லில் வீரரடி..!
(இறந்த திதியில் மட்டும் தாயினை நினைப்பவள் நானல்ல..! கண்ணினை நனைக்கும்... பல ஞாபகத் துளிகளில்... இதுவும் ஒரு...°)
(தொடரும்..)