header photo

Tuesday, December 29, 2009

அவலமெய்திக் கவலையின்றி..
















தாரை தாரையான 
சாரைகளின் குவியலில்
சிரட்டை ஏந்தி நின்றது
சிறுநீர் வரண்டுவிட்ட
சின்னஞ்சிறிய சிட்டொன்று..

பிணங்கள் புதைந்திருந்த
மலையளவு உமிமேட்டில்
தவழ்ந்தமுங்கி - அரிசிக்
குறுணி பொறுக்கிக் கொண்டிருந்தது
தாய்ப்பறவை..

இரைப்பை புடைத்திருந்த
கழுகின் கழுத்துள்ளிருந்து
விழுந்த முள்ளொன்று
செங்குத்தாய் சிரம் விழுந்ததில்
சுருண்டது சிட்டு சிரட்டையுள் ..

கற்குறுணி கூடக் கிடைக்காத
தாய்ப்பறவையின் முன்
சிரட்டை நீக்கி வீசப்பட்டது சிட்டு..
சிறகொடிந்து சிதைந்து துடியாய்
துடித்தது தாய்ப்பறவை..

பருந்து தாண்டிப் பறந்து
சிறகிருந்துமிழந்து
சதா கண்களில்
குருதி சிந்த விட்டபடி
ஊர்க்குருவியான நான்...!
_______________________________________

Monday, December 28, 2009

'கலகல' மீள் - பதிவு..

எப்பவோ பேமஸ் ஆகியும்.. (ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா) இன்னும் ஒரு மீள் பதிவு கூடப் போடலையே நானுன்னு நினைக்கும்போது... எனக்கே முடியல... அவ்வ்வ்வ்..! எதுனா இருக்கா அப்டின்னு பார்த்தாக்க ஒண்ணுமே உருப்படியா காணோம்.. அவ்வ்வ்வ்..! இப்போதான் தெரியுது நம்ம லட்சணம்... ம்க்கும்..! ஆனாலும் விட்டுடுவோமாக்கும்..! இதோ எந்த ஒரு மாற்றமும் இல்லாத ஒரு மீள் பதிவு..! (மாத்த டயம் லேதுப்பா.... அப்பாலிக்க வந்து பேசிக்கறேன்.. வர்ட்டா... ஜூட்டு..)

ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த நான், என் வீட்டில் கருமமே கண்ணாக பள்ளிக்குத் தயாராகிக் கொண்டிருந்தேன். என்னுடைய அம்மா என்னைப் போக விடாது தடுப்பதில் மும்முரமாக இருந்தார்கள். பக்கத்து வீட்டில் சாவு வீடு, நீ பள்ளிக்குப் போறது சரியில்லை என்பது அவர்கள் வாதம். அவங்க இன்னும் சாகவே இல்லை, செத்தாலும் நான் என்ன பண்ணப் போகிறேன் என்பது என் விவாதம்.

"ஏண்டி ஒரு நாள் போகலைன்னா என்ன ஆய்டும்?"

"எனக்கு ஆங்கிலப் பரீட்ச இருக்கு"

"நல்லா இருக்குடி, உன் அண்ணா ஆங்கிலப் பாடம்னாலே பள்ளிக்கு போக மாட்டேன்னு அடம் பிடிப்பான், நீ பரீட்சைக்கு போகணும்னு அடம் பிடிக்கறா"

"நான் போகணும்"

"போறதில்லடி, சொல்லிண்டே இருக்கேன்ல"

இவ்வாறு நீண்டு கொண்டே போன விவாதத்தில், அம்மாவின் அதட்டல் வென்றது. என்னையும் இழுத்துக் கொண்டு அந்தம்மாவைப் பார்க்கச் சென்றார்கள். உர்ர்ர்ர் என்று மூஞ்சியை ஒரு முழத்திற்கு வைத்துக் கொண்டு நானும் இழுபட்டுக் கொண்டு போனேன்.

வேறொன்றுமில்லை, என்னுடைய உறவு முறை மாமி ஒருத்தி திடீர் என்று நோய் வாய்ப்பட்டு மரணப் படுக்கையில் விழுந்து விட்டார். அவரை நான் வாழ்க்கையில் இரண்டே தடவைதான் சந்தித்திருக்கிறேன். காரணம் ஒன்றும் பெரிதாக இல்லை. அவர் மிகவும் தொலைவில், வேறொரு ஊரில் இருந்தமையால் சென்று பார்க்க அவகாசம் இருந்திருக்கவில்லை. அவர் நோய் வாய்ப்பட்டதும், அவரைப் படுக்கையுடன் தூக்கிக் கொண்டு வந்து நம்ம ஊரில் அவரின் அருமைப் புதல்வி வீட்டில் வைத்து விட்டார்கள்.

எங்கள் வீட்டிலிருந்து இரண்டு வீடு தள்ளி இருந்த அவர்கள் வீட்டில் கூட்டம் சேர்ந்து விட்டது. இப்பவோ, எப்பவோ என்று இழுத்துக் கொண்டிருந்த அந்தம்மா எப்போ உயிரை விடுவார்கள் என்று கடிகாரத்தைப் பார்த்தபடி குடும்பத் தலைவர்களும், தலைவிகளும் பொறுமையற்று உலவிக் கொண்டிருந்தார்கள். நெருங்கிய உறவினர்கள், குழந்தைகள் மாற்றி மாற்றி ஒரு திரவத்தை அவர் வாயில் ஊற்றிக் கொண்டிருந்தார்கள்.

நான் அங்கே கிடைத்த ஒரு ஒற்றைத் தூணில் என்னைச் சாய்த்துக் கொண்டு சோகத்தில் ஆழ்ந்திருந்தேன். என்னைத் தவிர எல்லாரும் ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டிருந்த சம்பவம், இறுதியில் நிகழ்ந்தே விட்டது. மற்றவர்களின் பொறுமையை மேலும் சோதிக்க விரும்பாது அந்தம்மா அதன் உயிரை நிறுத்தி விட்டிருந்தது. ஒரு தடவைக்குப் பத்துத் தடவை உறுதிப் படுத்திக் கொண்ட மக்கள், அப்பாடா என்று குரல் எடுத்து அழ ஆரம்பித்தார்கள்.

யாரோ திதி பார்த்துக் குறித்து வைத்துக் கொள்வதற்காக யாரிடமோ நேரம் கேட்டார்கள். மணி பத்தரை என்றது ஒரு பெருசு. அவ்வளவு நேரமும் எனக்கும் இதுக்கும் எந்த வித சம்மந்தமுமில்லை என்று தூணில் சாய்ந்து கொண்டிருந்த நான் திடுக்கிட்டு நிமிர்ந்தேன். பரீட்சை முடிந்து அரை மணி நேரம் ஆகி விட்டிருக்கும். ஐயோஓஓஓ என்று வெடித்து அழ ஆரம்பித்தேன்.

"என்னதான் இருந்தாலும் மாமி என்ற பாசம் இருக்குமில்ல, பாவம் குழந்தை" அம்மா யாரிடமோ அழுகைக்கிடையே அவர்கள் பொண்ணைப் பற்றிப் பெருமையாகப் பீற்றிக் கொண்டிருந்தார்கள்..! என்னுடைய அழுகை இன்னும் வலுக்க ஆரம்பித்தது.. !!!

அவ்வ்வ்வ்.... (இது ஒரு சின்ன மாற்றத்திற்காக...;))

__________

Tuesday, December 22, 2009

இன்றிங்கிப்போ...



















 வெண்பனியின் முன்னிரவில்
மரக்கூடுவிட்டகன்று
கதகதப்பானதொரு குடிசையின்
திறந்திருக்கும் கதவிடுக்கினிடை
பருந்தொன்றமர்ந்து  பறந்த
அதிர்வின் கிளையுதிர்வில்
செதுக்கிய சிறு கூட்டுவாசம்
பின்னிரவின் ஊதக்காற்றில்
கதவடைபடுவது தெரியாமலே
புறவிறகுகளில் சிரமழுந்தி
இகமோ பரமோ யாமறியோம்...!
 _____________________________________

Thursday, December 17, 2009

வல்லமை தாராயோ...

Part 1
Part 2
Part 3
Part 4

Part 5
Part 6
Part 7

Part 8
Part 9
Part 10
Part 11
Part 12

Part 13


மறதி என்பது வரம்.. அதுவே மிகப் பெரிய சாபம்!  எதைத் தின்றால் பித்தம் தெளியுமென்று வீதி வீதியாக அலைந்தது பல பிறவிகளுக்கு முன்பு போன்ற மாயத் தோற்றம். ஒன்றன் பின் ஒன்றாக எல்லாம் நடந்து முடிந்து விட்டது... முடிந்தே விட்டதா..?!

உடலின் ஒவ்வொரு பாகத்திலும் காயமேற்று, ஆத்மாவை மட்டும் இதயத்திற்கும் மனதுக்கும் இடையில் எங்கேயோ பிடித்து வைத்து குற்றுயிரும் குறையுயிருமாக அகால மரணத்துடன் போராடிக் கொண்டிருந்த தாய்க்கு அறுவைச் சிகிச்சை பலனளிக்கலாம் என்று நம்பியிருந்து, தெருத்தெருவாக இறங்கிப் பிச்சை கேட்டு, மாரடித்து, அழுது, ஆர்ப்பாட்டம் செய்து, உருண்டு புரண்டு, உண்ணாதிருந்து, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிப் பற்ற வைத்து, செத்தும் எதுவும் பலனளிக்கவில்லை.

மகா மகா மருத்துவர்கள் என்று அறியப்பட்டவர்கள் எல்லாம் கையை விரித்தார்கள். பாவம் வைத்தியம் மருத்துவருக்கே பலனளிக்காத போது அவர்கள் என்ன பண்ண முடியும். மறைமுகமாகவோ, நேரிடையாகவோ கிடைத்த பிராணவாயுவை அவ்வண்ணமே பிடுங்கிவிட்டு வேடிக்கை பார்ப்பதில் பல நன்மைகள் இருக்கும்போது எந்த மட மண்ணாங்கட்டியாவது வேறு யோசிக்க முடியுமா. சொந்தப் பிள்ளைகளே தப்பித் தவறிப் பிழைத்துக் கொண்டால் என்று கையில் விஷமேந்தி தாயாராக நின்று கொண்டிருக்கையில், வெளிநாட்டு மருத்துவர்கள்  என்ன செய்து விட முடியும்.

ஆனால்  நொந்து போய், தலையில் கை வைத்து அமர்ந்து விட்டவர்களும், அறிந்தும் அறியாதது போன்று,  அறியும் விருப்பமற்று அல்லது அறியாமையால் சாவு வீட்டில் பல்லாங்குழி ஆடிக் கொண்டிருந்தவர்களும் தாயின் உயிருக்காகக் கடைசிவரை போராடியவர்களுக்குச் சற்றே அனுசரணையாக இருந்திருக்க முடிந்திருப்பின்... செயற்கைச் சுவாசத்திலாவது உயிரைப் பிடித்து வைத்துக் கொண்டிருந்திருக்கலாம்.

இரவு, பகல் படித்த அதே செய்தித்தாளை நிமிடத்திற்கு நிமிடம் புரட்டிப் புரட்டிப் பார்த்து, தமிழ் சினிமாவில் மஞ்சளுடுத்தி, மஞ்சள் நீரைத் தலையில் கொட்டி, முடி விரித்துதறி, கைகளில் வேப்பிலை ஏந்தி, உதறி, உடுக்கை அடித்து, கிடுகிடுவென்று ஆடி முடித்தவுடன்  மரணப் படுக்கையிலிருப்பவர் நிமிர்ந்து உட்காருவது போல், அதிசயம் ஏதாவது நிகழ்ந்து செய்தி மாறி இருக்காதா என்று கொட்டக் கொட்ட விழித்திருந்து பார்த்துச் சலித்து, அழுது ஓய்ந்து போன நாட்களில்...

இணையத்தில் கூடி ஒப்பாரி வைத்த கூட்டத்திடை, ஒரு கூட்டம் எவனுக்கோ பல்லு முளைத்ததுக்கு யாருக்கோ பாலபிஷேகம் செய்தார்கள். எப்பவோ எதுக்காகவோ செத்துப் போனவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லி எனக்குப் பூச்செண்டு அனுப்பினார்கள். ஒரு வேளை, ஒரு கவளம் சோறு விழுங்க முடியாதிருந்த நேரத்தில், இணையத்தில் சாக்லட், வெண்ணெய், கேக், கோக் என்று அனுப்பிக் கொண்டிருந்தார்கள். கூடப் பிறந்தவர்களை அறுவடை செய்து கொண்டிருந்த போது, இணையத்தில் பண்ணைத் தோட்டம் ஆரம்பித்து, ஆள் ஆளுக்கு கழுதையும், எருமையும், வாத்தும், முட்டையும் பரிமாறிக் கொண்டிருந்தார்கள், இருக்கிறார்கள்.

இவர்களுக்கிடையில் நான் வித்தியாசமாக நிஜக் கழுதை வாங்கி மேய்த்து, சில பன்றிகளை உதைக்க வைக்க வேண்டுமென்று ரொம்ப நாளாக யோசித்துக் கொண்டிருக்கிறேன். இப்படி வித்யாசமாக யோசித்துக் கொண்டிருப்பதைத் தவிர என்னாலும் வேறு ஒன்றும் கிழிக்க முடியாது என்பது எனக்கும் நன்றாகவே தெரியும்...!

ஆனாலும் அம்மா இன்னும் ஆழ்நிலை மயக்கத்திலேயே இருக்கிறாள் என்று ஆழமாக நம்பி அவளின் கிழிந்த சேலையை இறுக்கமாகப் பற்றி, அதன் வாசனையைச் சுவாசித்தபடி நானும்...

விசையுறு பந்தினைப்போல் - உள்ளம்
வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்,
நசையறு மனங்கேட்டேன் - நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்


(தொடரும்..)

Tuesday, December 15, 2009

கவிதையில் மொக்கை காண்பதென்பது...

ஜடத்தின் உயிரோட்டம்
சிலாகிக்கும் மனம் 
உயிரின் செயற்கைத்தனம்
வெறுக்கும் செயல்
இயற்கைக்கு விரோதம்-ஆம்!


ஞாபகம் தொலைத்த
தொன்மைகள்
இம்மையில் வரலாறு
தன்மையறுத்தவர் இம்மை
மறுமையில் எவ்வாறு...?!


இத்தால் நான் அறியத்தருவது யாதெனில்... அட ஒண்ணுமில்லீங்க...
_________________________________________________________________________


வழிப் போக்கனின்
வாள் காதறுத்த போதும் 
உடையில் தரித்த என் வாள்
அப்படியே இருக்கிறது

வாளாவிருக்கும் வாளால்
வாழையும் நறுக்கலாம்
வாலையும் அறுக்கலாம்
விருந்தினர் வசதி எவ்விதம்...?!


இதனால் அறியப்படும் நீதி  யாதெனில், என்னிடமும் ஒரு வோட்டு இருக்கிறது, அதை நேராகவும், மறையாகவும் பயன்படுத்த என்னால் இயலும்!  (அட  நல்ல புள்ளைக்கு இருந்து எத்தன நாள்தான் புல்லுருவிகளின் அட்டகாசத்தைப் பொறுத்துக்கிறதுங்க. பயங்கரவாதின்னு சொல்லிடுவாங்கன்னு அடக்கி வாசிச்சு குழிக்குள்ள போனதுதான் மிச்சமுங்க) மைனஸ் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டவர்கள், குறிப்பெடுத்துக் கொள்ளவும்: உங்கள் பக்கங்களில் ஒரு மைனஸ் விழுந்தால், அது உங்களுக்கான என் பதில் ஓட்டாக இருக்கலாம். >:)
________________________________________________________________________

Monday, December 14, 2009

பிய்ந்து போன டயரி... நைந்து போன நரி..


நாம இப்டியும் மொக்கை போடுவோம்ல... (copy right கேட்பவர்கள் என்னுடன் தனிப்பட்ட முறையில் பேசவும்..)




என்னுடைய அலுவலகத் தோழி பாலிவுட் புண்ணியத்தில் என்னுடைய ரசிகையானது ஒரு கொடுமை. என்னை மாதிரியே கையில் அபிநயம் பிடித்துப் பேசிப் பழகிவிட்டு, அவளையே அவள் மெச்சிக் கொள்வது இன்னொரு கொடுமை. விகடன் மின்னிதழில் வந்த என்னுடைய கவிதையில் ஒரு எழுத்துக் கூடப் புரியா விட்டாலும் அதைக் கவனமாகப் பிரிண்ட் எடுத்து அவள் வரவேற்பறையில் மாட்டி வைத்திருப்பது மகா கொடுமை. என் ஊர் வீட்டு முகப்பின் ஒரு பகுதியை டெஸ்க்டாப்பில் போட்டு வைத்திருப்பது அருமை. அவளை தோழியாகப் பெற்றது எனக்குப் பெருமை.





_____________________________________________________________________________________________



ஸ்விம்மிங் ஞானம் மிக மிகக் குறைவாக இருந்தும் நேற்றைய முன்தினம் அவளுடன் ஸ்விம்மிங் கிளம்பியது என்னுடைய அசட்டுத் துணிச்சல். ஃபைண்டிங் நிமோவில் ஸ்டிங் ரே முதுகில் ஏறிச் சென்ற கடற்குதிரை போல்... அவள் முதுகைப் பற்றியபடி கழுத்தளவு நீரில் நீந்திக் கொண்டிருந்தபோது அனிமேஷன் ஃபிகராக (அஹெம்) மாறிப் போனேன்.


_______________________________________________________________________________________________




முப்பது வருஷமாக நெட்பால் ஆடும் ஒரு டீமில் கத்துக்குட்டியாக join பண்ணி அவர்களின் வேகத்திற்கும், பலத்திற்கும் ஈடு கொடுக்க முடியாது, அமெரிக்கன்  ஃபூட்பால் டீமுக்கிடையில் சாரி சுற்றிக் கொண்டு ஸ்லோ மோஷனில் ஓடி அனிமேஷன் புறாவைக் கையில் பிடித்து, அதே ஸ்லோ மோஷனில் பறக்க விடுவது போல் நான் பந்தைப் பாவித்தது எனக்கே கொடுமையா தெரிஞ்சாலும், அவங்க பெருந்தன்மையா bravo என்று தட்டிக் கொடுத்தது இதமாக இருந்தது. எதுக்கும் இருக்கட்டுமென்று நியூ இயர் வரை தள்ளிப் போட்டு விட்டேன். நியூ இயர் resolution - இற்கு மேட்டர் தேட வேண்டாம் பாருங்க.
_______________________________________________________________________________________________



வீட்டுத் தோட்டத்திலிருந்த ரப்பர் பூட்ஸ் பாதியைக் காணவில்லை. மீதி பிய்ந்து தொங்கிக் கொண்டிருந்தது. என்ன கொடுமை சரவணி என்று பக்கத்து வீட்டு அம்மணியிடம் கேட்டேன். சற்றுத் தள்ளிக் காடு இருப்பதால் நரி நடமாட்டம் இருக்கிறது என்று சொன்னாள். அப்புறம் தோட்டப் பக்கம் பார்க்கவே ப்ப்ப்பயமாக இருக்கிறது. ஆனாலும் அந்த ரெண்டு பூட்ஸ்ஸிலிருந்தும் பிய்த்தெடுத்ததை ஒட்டி ஷூ செய்து நைந்து போயிருக்குமா அந்த நரி என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

_______________________________________________________________________________________________
சமீபத்தில் எந்தப் படமும் பார்க்கவில்லை, எந்தப் பாட்டும் கேட்கவில்லை. ப்ளாக் மட்டும் அவ்வப்பொழுது (!) பார்த்துக் கொண்டிருக்கிறேன். இன்றைக்கு யாரோ மேலிருந்து வெண்பஞ்சுகளைப் பிய்த்துப் போட்டுக் கொண்டிருந்தார்கள். சாளரம் திறந்து எட்டிப் பார்த்தால் குளிர்ந்தது. மேல் விழுந்த பஞ்சு கையில் கரைந்து நீராக ஓடியது. அட ஸ்னோ. வின்டர் ஆரம்பித்து விட்டது. குளிர் முதுகுத் தண்டில் சில்லிடுகிறது. இப்போ இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்கப் போகிறேன். குட் நைட்..




_______________________________________________________________________________________________

Monday, December 7, 2009

நுனிக்கரும்பு...

_________________________________
நகல் 

பார்க்கத் தவறியே
மறந்து விடுகிறது
மற்றவர் குத்துவதற்கு
தனக்குமொரு
முதுகிருப்பது..!
_________________________________
அசல் 

பாதங்கள் வருடிய நாவின்
கோரப்பற்துவார வழி
வியர்க்குமாலம் நாசி வருடி
மூளையின் நுண்ணிய திசு தடவி
உயிரணுக்கள் முகம் சுழித்து
வாயாலெடுத்துமிழும் பித்தநீர்க்கசப்பு
நாடி-நாளங்களில் வழிந்தோடியபடி...!
_________________________________

Tuesday, December 1, 2009

சிரிக்கலாம்... திட்டலாம்.. குட்டலாம்...

"கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத் - தானும் தன்
பொல்லாச் சிறகைவிரித்தாடினால் போலுமே
கல்லாதான் கற்ற கவி"

(இது ஔவையிடமிருந்து முதல் காப்பி.. எனக்கு எனக்கு.. எனக்கே எனக்கு அறிவுரையாக..)

யார் யாரோ... எப்டி எல்லாமோ காப்பி அடிக்கிறாங்க.. நானும்.. ஒரு காப்பி இடுகை... அல்லது இடுகை மொழியில் சொன்னால் மொக்கை..! மொக்கை போட்டு ரொம்ப நாளாச்சில்ல... (யாரது... அங்க.. ம்க்கும் எல்லாம் அதுதான்னு நொடிக்கிறது... இருடி ஆட்டோ அனுப்பறேன்..)

தம்பி வசந்து... நீ கேட்டுக் கொண்டதுக்கிணங்க...பு(ப)டிச்சவிக மாஆஆதிரி... எழுதுறேன்..! பார்த்துக்க..! அப்புறம் உன்னை யாரும் கண்டுக்கலை.. காதுக்கலைன்னு எல்லாம் சொல்லப்டாது..!

படிக்கிறப்போ யாருக்காவது கொலைவெறி வந்திச்சின்னா பலியாடா வசந்த்த புடிச்சிட்டுப் போங்க..! நாம சாமாதானமா போய்டலாம்..!
_____________________________________________________________
வசந்து கவிதை:

அரை அடி கூட இல்லை..
நமக்கிடையில் இடைவெளி..
இடையில் ஒரு இதயம்..
எங்கோ துடிக்கிறது..
ஓருடலில் தங்கி..
ஒன்றாய் சுவாசித்து..
ஆனாலும் கைக்கெட்டிய நீ..
வாய்க்கெட்டவில்லை பார்..
இதுதான் வாழ்க்கை...!

டிஸ்கி: சும்மா கற்பனைய பறக்க விட வேண்டாம்... இது ஒரு சுவாசப்பை மத்த சுவாசப்பைய பாத்து சொல்லுறது.. நேத்து போட்டது கிட்னி பத்தி.. அதுக்கு போட்ட பின்னூட்டம் எல்லாம் ரொம்ப ஓவர்.. அவ்வ்வ்வ்.... (நான் மாசி மாசம் சாம்பார் சாப்ட போறேன்.. என்னைப் போய்..)

பின்னூட்டம்

ப்ரியா: //இடையில் ஒரு இதயம்.. // போட்டேன்னா... இதயம் இடையிலயாடா துடிக்குது..? முதல்ல டாக்டர் கிட்ட போ நீயி..!


____________________________________________________________
வானம்பாடிகள்:

நறுக்: 345.2 v.56

"ஜெனரல் சரத் பொன்சேகாவின் கிரக நிலை சிறப்பாக அமைந்துள்ளது: அனோமா பொன்சேகா"

அவனே ஒரு கிரகம்.. அவனே வீடு வாடகைக்கு கிடைக்காம அலையுறான்... இதில நிலை வேறயா... பன்னாரிப் பொன்சேகா.. பரதேசி சரத்.. பேரப் பாரு அவிஞ்சு போன மாங்காய்க்கு.. ஆரஞ்சுத் தோல் போத்தின மாதிரி!

பின்னூட்டம்

ப்ரியா: ஜெனரல் பதவி போனாலும் பாரியார் அம்மணி சோதிடம் சொல்லி குடும்பத்த காப்பாத்திடும்பா..!

வானம்பாடி கவிதை:

மழைமுகில்கள் விலக்கி
எட்டிப் பார்த்துக் கண்ணடித்த
பிறைநிலவைப்
புறக்கணித்துச் சிரித்தேன்
என்னவள் புருவத்தின்
ஒரு முடிக்கு ஈடாகுமா
உன்னழகு..!

பின்னூட்டம்

ப்ரியா: tweezer புண்ணியமா..? நல்லா இருக்கு சார் கவிதை..!


____________________________________________________________
அது சரி:

கிடைக்கோடுகள்... நெடுங்கோடுகள்...
பாலஸ்தீனியம்.. இஸ்ரேல்.. ஒபாமா..
எக்ஸ் ஈகுவல் டு மைனஸ் டூ
ப்ளஸ் ஸ்குவாயர்ட் பிராக்கெட்
மைனஸ் வை மைனஸ் த்ரீ
பிராக்கெட் க்ளோஸ்ட்
கூட்டிக் கழித்துப் பார்த்தால்
பதில் கிடைக்காது போகலாம்..
கிடைத்த பதில் இரண்டாக இருக்கலாம்
இதில் எது சரி அது சரி என்று
கேட்டுக் கொண்டே இருக்கிறேன்
என்றும் மனம் தளராத..
விக்ரமாதித்தன் போல்..!

பின்னூட்டம்:

ப்ரியா: விக்ரமாதித்தன் பதில்தானே சொல்லணும்?

அது சரி: பதிலே கேள்வியாகவும் இருக்கலாம்..! கேள்வியே பதிலாகவும் இருக்கலாம்..! (ஸ்ஸப்பா எப்டி எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு..)


____________________________________________________________
கதிர்:

கை வளையலின் கல்யாணி ராகமும்
பாதக் கொலுசின் பைரவி ராகமும்
பரவசப்படுத்துகிறது பரபரவெனப் பெருக்கும்
பரிமளம் விளக்குமாற்றுடன் நிமிரும் வரை..!

பின்னூட்டம்

ப்ரியா: பிய்ச்சு உதறிட்டீங்க கதிர்..!


____________________________________________________________
(அண்ணா) பிரபாகர்:

சரளா கிட்ட வடிவேலு அடி வாங்கிப் பார்த்திருப்பீங்க.. அண்ணன் அண்ணிகிட்ட அடி வாங்கிப் பார்த்ததில்லையே..

ஒரு நாள் எங்க வீட்டு வாசல்ல நின்னு தபூ சங்கர் கவிதை படிச்சுக்கிட்டிருந்தேன்.. பக்கத்தில பக்கத்து வீட்டு ரங்கமணி, எங்க வீட்டு தோட்டக்காரன் மாரியப்பனோட மகன் கிட்டா கிட்ட வெத்தல வாங்க வந்திருந்தான். எதிர் வீட்டுக் கிணத்தடில ஒரு பாட்டி குளிச்சுக்கிட்டு இருந்திருக்கு.. எனக்கு சத்தியமா அதப் பத்தி ஒண்ணும் தெரியாது...

கவிதை ரொம்ப இண்டரஸ்டிங்கா போச்சு "கர்ப்பக் கிரகம் தன்னைத் தானே அபிஷேகம் செய்து கொள்ளுமா என்ன?" என்று உரத்துப் படித்துவிட்டு மீண்டும் மௌனமாகத் தொடர்ந்தேன்.

முதுகில் ஏதோ விழுந்ததில் உயிர் பறந்து போய் எதிர் வீட்டு ஓட்டில் அமர்ந்து கொண்டது. பக்கத்தில் நின்று கொண்டிருந்த ரங்கமணி தெறித்து ஓடினான். அப்புறம்தான் தெரிந்தது முதுகில் விழுந்தது பூரிக் கட்டையென்று . என்ன சொன்னீங்க என்று கேட்டபடி என் மனைவி நின்று கொண்டிருந்தாங்க. ஒன்றும் புரியாம கேட்டதுக்கு பதில் சொல்லணும்னு "கோபித்துக் கொண்டு என்னைக் கைவிட்டு விடாதே என்றேன்" அதுவும் கவிதைதான்.

மீண்டும் கண் மூடித் திறப்பதற்குள் இருபது முப்பது அடிகள் விழுந்தன. அப்புறம் ஒன்றும் பேசாமல் போயி அடுப்பங்கரைல உக்காந்துட்டாங்க. அப்புறம் நாலு நாள் கழித்து ரங்கமணி சொன்னப்போதான் விஷயம் தெரிஞ்சது. உடனேயே ஒரு கவிதை கிறுக்கிக் கொண்டு போய் என் மனைவியிடம் நீட்டினேன்.

"இந்தா என் இதயம்
அதை நீ விளையாடும் வரை
விளையாடி விட்டு
தூக்கிப் போட்டு விடு

அதற்குத்தான் இது
படைக்கப்பட்டது"

அதுவும் தபூ சங்கர் கவிதைதான். அப்புறம் சமாதானமாயிட்டாங்க. பாவம் ரங்கமணி அவன் சொந்த செலவில வெத்தல வாங்கினதா சொல்லி ரொம்ப வருத்தப்பட்டான்.

பிடிச்சிருந்தா சொல்லுங்க.. இல்லைனா முடிவு மாத்தி எழுதிடலாம்.

பின்னூட்டம்

ப்ரியா: அண்ணி அடி பின்னிட்டாங்க..! (ஏற்கனவே பாசமலர், டி ஆர் ன்னு நக்கல் ஜாஸ்தி ஆய்டுத்து..! இதுக்கு என்ன சொல்லுவாய்ங்களோ...)


____________________________________________________________
நேசமித்ரன்:

ஆண்ட்ரோஜன் அடுக்குகளின் இடுக்கில்
மோனலிசாக்களின் மோனப்புன்னகையில்
சைட்டோ டாக்சிக் ஏறிய செல்களுடன்
பிகாசஸ் வரையும் பிக்காசோ பாப்லோக்கள்

பின்னூட்டம்:

ப்ரியா: ஐயோ நான் இல்லீங்க..!


____________________________________________________________


மக்கா... இங்க திட்டுறது சரி... நோ ப்ரோப்ளம்... அது திட்டின கையோட.. இன்னைக்கு போட்ட இன்னொரு இடுகை (கவிதைன்னு பேரு வச்சிருக்கேன் அதுக்கு..) அங்கன கிடக்கு.. அதுக்கும் ஏதாவது சொல்லிட்டு போங்க.. சொல்லிப்புட்டேன்..! (இன்னும் மூணு நாளைக்கு ஆபீஸ்ல வெட்டி முறிக்கணும்... அதான் ஒரு நாள்ல ரெண்டு இடுகை... ஹிஹி..) நோ பாட் வோர்ட்ஸ் ப்ளீஸ்..! (இன்னும் கொஞ்ச பேரு லிஸ்ட்ல இருந்து தப்பிச்சிட்டாங்க.. அப்புறம் பார்த்துக்கறேன்..)
____________________________________________________________