Part 1
Part 2
Part 3
Part 4
Part 5
Part 6
Part 7
Part 8
Part 9
Part 10
Part 11
Part 12
Part 13
மறதி என்பது வரம்.. அதுவே மிகப் பெரிய சாபம்! எதைத் தின்றால் பித்தம் தெளியுமென்று வீதி வீதியாக அலைந்தது பல பிறவிகளுக்கு முன்பு போன்ற மாயத் தோற்றம். ஒன்றன் பின் ஒன்றாக எல்லாம் நடந்து முடிந்து விட்டது... முடிந்தே விட்டதா..?!
உடலின் ஒவ்வொரு பாகத்திலும் காயமேற்று, ஆத்மாவை மட்டும் இதயத்திற்கும் மனதுக்கும் இடையில் எங்கேயோ பிடித்து வைத்து குற்றுயிரும் குறையுயிருமாக அகால மரணத்துடன் போராடிக் கொண்டிருந்த தாய்க்கு அறுவைச் சிகிச்சை பலனளிக்கலாம் என்று நம்பியிருந்து, தெருத்தெருவாக இறங்கிப் பிச்சை கேட்டு, மாரடித்து, அழுது, ஆர்ப்பாட்டம் செய்து, உருண்டு புரண்டு, உண்ணாதிருந்து, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிப் பற்ற வைத்து, செத்தும் எதுவும் பலனளிக்கவில்லை.
மகா மகா மருத்துவர்கள் என்று அறியப்பட்டவர்கள் எல்லாம் கையை விரித்தார்கள். பாவம் வைத்தியம் மருத்துவருக்கே பலனளிக்காத போது அவர்கள் என்ன பண்ண முடியும். மறைமுகமாகவோ, நேரிடையாகவோ கிடைத்த பிராணவாயுவை அவ்வண்ணமே பிடுங்கிவிட்டு வேடிக்கை பார்ப்பதில் பல நன்மைகள் இருக்கும்போது எந்த மட மண்ணாங்கட்டியாவது வேறு யோசிக்க முடியுமா. சொந்தப் பிள்ளைகளே தப்பித் தவறிப் பிழைத்துக் கொண்டால் என்று கையில் விஷமேந்தி தாயாராக நின்று கொண்டிருக்கையில், வெளிநாட்டு மருத்துவர்கள் என்ன செய்து விட முடியும்.
ஆனால் நொந்து போய், தலையில் கை வைத்து அமர்ந்து விட்டவர்களும், அறிந்தும் அறியாதது போன்று, அறியும் விருப்பமற்று அல்லது அறியாமையால் சாவு வீட்டில் பல்லாங்குழி ஆடிக் கொண்டிருந்தவர்களும் தாயின் உயிருக்காகக் கடைசிவரை போராடியவர்களுக்குச் சற்றே அனுசரணையாக இருந்திருக்க முடிந்திருப்பின்... செயற்கைச் சுவாசத்திலாவது உயிரைப் பிடித்து வைத்துக் கொண்டிருந்திருக்கலாம்.
இரவு, பகல் படித்த அதே செய்தித்தாளை நிமிடத்திற்கு நிமிடம் புரட்டிப் புரட்டிப் பார்த்து, தமிழ் சினிமாவில் மஞ்சளுடுத்தி, மஞ்சள் நீரைத் தலையில் கொட்டி, முடி விரித்துதறி, கைகளில் வேப்பிலை ஏந்தி, உதறி, உடுக்கை அடித்து, கிடுகிடுவென்று ஆடி முடித்தவுடன் மரணப் படுக்கையிலிருப்பவர் நிமிர்ந்து உட்காருவது போல், அதிசயம் ஏதாவது நிகழ்ந்து செய்தி மாறி இருக்காதா என்று கொட்டக் கொட்ட விழித்திருந்து பார்த்துச் சலித்து, அழுது ஓய்ந்து போன நாட்களில்...
இணையத்தில் கூடி ஒப்பாரி வைத்த கூட்டத்திடை, ஒரு கூட்டம் எவனுக்கோ பல்லு முளைத்ததுக்கு யாருக்கோ பாலபிஷேகம் செய்தார்கள். எப்பவோ எதுக்காகவோ செத்துப் போனவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லி எனக்குப் பூச்செண்டு அனுப்பினார்கள். ஒரு வேளை, ஒரு கவளம் சோறு விழுங்க முடியாதிருந்த நேரத்தில், இணையத்தில் சாக்லட், வெண்ணெய், கேக், கோக் என்று அனுப்பிக் கொண்டிருந்தார்கள். கூடப் பிறந்தவர்களை அறுவடை செய்து கொண்டிருந்த போது, இணையத்தில் பண்ணைத் தோட்டம் ஆரம்பித்து, ஆள் ஆளுக்கு கழுதையும், எருமையும், வாத்தும், முட்டையும் பரிமாறிக் கொண்டிருந்தார்கள், இருக்கிறார்கள்.
இவர்களுக்கிடையில் நான் வித்தியாசமாக நிஜக் கழுதை வாங்கி மேய்த்து, சில பன்றிகளை உதைக்க வைக்க வேண்டுமென்று ரொம்ப நாளாக யோசித்துக் கொண்டிருக்கிறேன். இப்படி வித்யாசமாக யோசித்துக் கொண்டிருப்பதைத் தவிர என்னாலும் வேறு ஒன்றும் கிழிக்க முடியாது என்பது எனக்கும் நன்றாகவே தெரியும்...!
Part 2
Part 3
Part 4
Part 5
Part 6
Part 7
Part 8
Part 9
Part 10
Part 11
Part 12
Part 13
மறதி என்பது வரம்.. அதுவே மிகப் பெரிய சாபம்! எதைத் தின்றால் பித்தம் தெளியுமென்று வீதி வீதியாக அலைந்தது பல பிறவிகளுக்கு முன்பு போன்ற மாயத் தோற்றம். ஒன்றன் பின் ஒன்றாக எல்லாம் நடந்து முடிந்து விட்டது... முடிந்தே விட்டதா..?!
உடலின் ஒவ்வொரு பாகத்திலும் காயமேற்று, ஆத்மாவை மட்டும் இதயத்திற்கும் மனதுக்கும் இடையில் எங்கேயோ பிடித்து வைத்து குற்றுயிரும் குறையுயிருமாக அகால மரணத்துடன் போராடிக் கொண்டிருந்த தாய்க்கு அறுவைச் சிகிச்சை பலனளிக்கலாம் என்று நம்பியிருந்து, தெருத்தெருவாக இறங்கிப் பிச்சை கேட்டு, மாரடித்து, அழுது, ஆர்ப்பாட்டம் செய்து, உருண்டு புரண்டு, உண்ணாதிருந்து, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிப் பற்ற வைத்து, செத்தும் எதுவும் பலனளிக்கவில்லை.
மகா மகா மருத்துவர்கள் என்று அறியப்பட்டவர்கள் எல்லாம் கையை விரித்தார்கள். பாவம் வைத்தியம் மருத்துவருக்கே பலனளிக்காத போது அவர்கள் என்ன பண்ண முடியும். மறைமுகமாகவோ, நேரிடையாகவோ கிடைத்த பிராணவாயுவை அவ்வண்ணமே பிடுங்கிவிட்டு வேடிக்கை பார்ப்பதில் பல நன்மைகள் இருக்கும்போது எந்த மட மண்ணாங்கட்டியாவது வேறு யோசிக்க முடியுமா. சொந்தப் பிள்ளைகளே தப்பித் தவறிப் பிழைத்துக் கொண்டால் என்று கையில் விஷமேந்தி தாயாராக நின்று கொண்டிருக்கையில், வெளிநாட்டு மருத்துவர்கள் என்ன செய்து விட முடியும்.
ஆனால் நொந்து போய், தலையில் கை வைத்து அமர்ந்து விட்டவர்களும், அறிந்தும் அறியாதது போன்று, அறியும் விருப்பமற்று அல்லது அறியாமையால் சாவு வீட்டில் பல்லாங்குழி ஆடிக் கொண்டிருந்தவர்களும் தாயின் உயிருக்காகக் கடைசிவரை போராடியவர்களுக்குச் சற்றே அனுசரணையாக இருந்திருக்க முடிந்திருப்பின்... செயற்கைச் சுவாசத்திலாவது உயிரைப் பிடித்து வைத்துக் கொண்டிருந்திருக்கலாம்.
இரவு, பகல் படித்த அதே செய்தித்தாளை நிமிடத்திற்கு நிமிடம் புரட்டிப் புரட்டிப் பார்த்து, தமிழ் சினிமாவில் மஞ்சளுடுத்தி, மஞ்சள் நீரைத் தலையில் கொட்டி, முடி விரித்துதறி, கைகளில் வேப்பிலை ஏந்தி, உதறி, உடுக்கை அடித்து, கிடுகிடுவென்று ஆடி முடித்தவுடன் மரணப் படுக்கையிலிருப்பவர் நிமிர்ந்து உட்காருவது போல், அதிசயம் ஏதாவது நிகழ்ந்து செய்தி மாறி இருக்காதா என்று கொட்டக் கொட்ட விழித்திருந்து பார்த்துச் சலித்து, அழுது ஓய்ந்து போன நாட்களில்...
இணையத்தில் கூடி ஒப்பாரி வைத்த கூட்டத்திடை, ஒரு கூட்டம் எவனுக்கோ பல்லு முளைத்ததுக்கு யாருக்கோ பாலபிஷேகம் செய்தார்கள். எப்பவோ எதுக்காகவோ செத்துப் போனவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லி எனக்குப் பூச்செண்டு அனுப்பினார்கள். ஒரு வேளை, ஒரு கவளம் சோறு விழுங்க முடியாதிருந்த நேரத்தில், இணையத்தில் சாக்லட், வெண்ணெய், கேக், கோக் என்று அனுப்பிக் கொண்டிருந்தார்கள். கூடப் பிறந்தவர்களை அறுவடை செய்து கொண்டிருந்த போது, இணையத்தில் பண்ணைத் தோட்டம் ஆரம்பித்து, ஆள் ஆளுக்கு கழுதையும், எருமையும், வாத்தும், முட்டையும் பரிமாறிக் கொண்டிருந்தார்கள், இருக்கிறார்கள்.
இவர்களுக்கிடையில் நான் வித்தியாசமாக நிஜக் கழுதை வாங்கி மேய்த்து, சில பன்றிகளை உதைக்க வைக்க வேண்டுமென்று ரொம்ப நாளாக யோசித்துக் கொண்டிருக்கிறேன். இப்படி வித்யாசமாக யோசித்துக் கொண்டிருப்பதைத் தவிர என்னாலும் வேறு ஒன்றும் கிழிக்க முடியாது என்பது எனக்கும் நன்றாகவே தெரியும்...!
ஆனாலும் அம்மா இன்னும் ஆழ்நிலை மயக்கத்திலேயே இருக்கிறாள் என்று ஆழமாக நம்பி அவளின் கிழிந்த சேலையை இறுக்கமாகப் பற்றி, அதன் வாசனையைச் சுவாசித்தபடி நானும்...
விசையுறு பந்தினைப்போல் - உள்ளம் வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன், நசையறு மனங்கேட்டேன் - நித்தம் நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்
(தொடரும்..)
49 ஊக்கம்::
/மறதி என்பது வரம்.. அதுவே மிகப் பெரிய சாபம்!/
சத்தியமான வார்த்தை.
/உடலின் ஒவ்வொரு பாகத்திலும் காயமேற்று, ...
உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிப் பற்ற வைத்து, செத்தும் எதுவும் பலனளிக்கவில்லை. //
அந்த நாட்களின் வலிகள் என்றும் எதுவும் ஆறாது/ஆற்றாது.
/சொந்தப் பிள்ளைகளே தப்பித் தவறிப் பிழைத்துக் கொண்டால் என்று கையில் விஷமேந்தி தாயாராக நின்று கொண்டிருக்கையில், வெளிநாட்டு மருத்துவர்கள் என்ன செய்து விட முடியும்.//
இந்த நூற்றாண்டின் மிகப் பெரும் துரோகம். ஒரு புல்லுருவியின் வெறிக்கு ஒரு தேசமே சோரம் போன அவலம். அழியாத கரை.
/போராடியவர்களுக்குச் சற்றே அனுசரணையாக இருந்திருக்க முடிந்திருப்பின்... செயற்கைச் சுவாசத்திலாவது உயிரைப் பிடித்து வைத்துக் கொண்டிருந்திருக்கலாம்.//
அவ்வப்போது போச்சா போச்சா என்று அவசரப்படுத்தத்தானே இவர்கள் உதவியதெல்லாம்.
/அதிசயம் ஏதாவது நிகழ்ந்து செய்தி மாறி இருக்காதா என்று கொட்டக் கொட்ட விழித்திருந்து பார்த்துச் சலித்து, அழுது ஓய்ந்து போன நாட்களில்.../
ஒரு மணித்துளி துள்ளிச் சிரித்து, அய்யோ சிரித்து விட்டோமே எனப் பயந்து, சிறிது நேரத்தில் அழுது, எழுதவொண்ணா நரகமது.
/இப்படி வித்யாசமாக யோசித்துக் கொண்டிருப்பதைத் தவிர என்னாலும் வேறு ஒன்றும் கிழிக்க முடியாது என்பது எனக்கும் நன்றாகவே தெரியும்...!/
இதுவே நல்ல தொடக்கம்.
/ஆனாலும் அம்மா இன்னும் ஆழ்நிலை மயக்கத்திலே இருக்கிறாள் என்று ஆழமாக நம்பி அவளின் கிழிந்த சேலையை இறுக்கமாகப் பற்றி, அதன் வாசனையைச் சுவாசித்தபபடி நானும்...//
இருக்கியா என்று சந்தேகத்துடனும், கைவிட்டுடாத என்ற கெஞ்சலுடனும் இன்னமும் நானும்..
சிலிர்த்து, சிதைந்து, சிந்தை குலைந்து உணவு தவிர்த்து உறக்கம் தொலைத்து நடைப்பிணமாய் பல நேரம், பச்சைக் குழந்தையாய் சில நேரம் வாழ்ந்த நாட்களை கண்முன் நிறுத்தி விட்டாய்.
காத்திருந்தது வீண் போகவில்லை.
விசையுறு பந்தின் வேகம் அபாரம்.
தொடர்க..இடைவெளி குறைத்து..
//ஆனாலும் அம்மா இன்னும் ஆழ்நிலை மயக்கத்திலேயே இருக்கிறாள் என்று ஆழமாக நம்பி அவளின் கிழிந்த சேலையை இறுக்கமாகப் பற்றி, அதன் வாசனையைச் சுவாசித்தபபடி நானும்...
//
அம்மாவின் ஞாபகங்களை படிப்பவர்களின் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்திட்டீங்க..
தொடர் முழுதும் சிறப்பான எழுத்துநடை...
//சொந்தப் பிள்ளைகளே தப்பித் தவறிப் பிழைத்துக் கொண்டால் என்று கையில் விஷமேந்தி தாயாராக நின்று கொண்டிருக்கையில், வெளிநாட்டு மருத்துவர்கள் என்ன செய்து விட முடியும்.//
நிதர்சனம். நல்ல பதிவு.
//இவர்களுக்கிடையில் நான் வித்தியாசமாக நிஜக் கழுதை வாங்கி மேய்த்து, சில பன்றிகளை உதைக்க வைக்க வேண்டுமென்று ரொம்ப நாளாக யோசித்துக் கொண்டிருக்கிறேன்.//
சிலசமயம் எனக்கும் இப்படித்தோணும்
கூர்மையான எழுத்துக்கள்!!
// ஆனாலும் அம்மா இன்னும் ஆழ்நிலை மயக்கத்திலேயே இருக்கிறாள் என்று ஆழமாக நம்பி அவளின் கிழிந்த சேலையை இறுக்கமாகப் பற்றி, //
என்ன ஆச்சு, அம்மாவிற்கு உடல் நலமில்லையா ?, பல நாட்களாக சுற்றுப்பயணத்தில் இருந்ததால் எனக்கு எதுவும் தெரியவில்லை.
பல்வேறு கஷ்டங்களில் தன் உயிரைப் பொருட்ப்படுத்தாது உங்களை காப்பாற்றியவர், படுக்கையில் இருந்தால் மனம் அடையும் வேதனை சொற்களால் ஆறுதல் தர முடியாது. ஆனாலும் என்ன செய்ய, எதுவும் நம் கையில் இல்லை அல்லவா? அவர் குணம் அடைய இறைவனை பிரார்த்திப்பது மட்டும் நாம் செய்ய முடியும். நானும் பிரார்த்திக்கின்றேன். கவனமாக பார்த்துக் கொள்ளூங்கள். விதியின் படி எல்லாம் நடக்கும். நன்றி. தைரியமாக இருங்கள்.
//ரிடையாகவோ கிடைத்த பிராணவாயுவை அவ்வண்ணமே பிடுங்கிவிட்டு வேடிக்கை பார்ப்பதில் பல நன்மைகள் இருக்கும்போது எந்த மட மண்ணாங்கட்டியாவது வேறு யோசிக்க முடியுமா. சொந்தப் பிள்ளைகளே தப்பித் தவறிப் பிழைத்துக் கொண்டால் என்று கையில் விஷமேந்தி தாயாராக நின்று கொண்டிருக்கையில், வெளிநாட்டு மருத்துவர்கள் என்ன செய்து விட முடியும்.//
கொடுமைங்க ப்ரியா...தொடருங்கள்...
சகோதரி,
உங்களின் எழுத்துக்களின் இருக்கும் வீரியம், வார்த்தைகளை கையாளும் லாவகம், எடுத்துக் கொள்ளும் உதாரணம் யாவும் அருமையாக உள்ளன.
முன்பெல்லாம் உங்களைப் படித்து விஷய பாதிப்பில் சட்டென கோபம் வரும்.இப்போது மௌனமாய் சோகத்தைக் கூட அசைபோட்டு உங்களோடு பயணிக்கிறேன்...
அண்ணன்.
முடிந்தே விட்டதா..?!
முடிந்து விட்டது ... ஜீரணிக்கமுடியாத அந்த அவலத்தின் நினைவுகளை நெஞ்சின் ஓரத்தில் புதைத்துவிட்டு என்னவோ ஏதோ என்று வாழந்து தொலைப்போம்...
சொல்ல வேண்டும் என்று நினைத்தேன் - இயலாமல் திரும்ப சென்று விட்டேன். மறுபடியும் வந்தேன் அதற்க்காக. ஆறாம் பத்தியில் இருந்த உங்கள் கோபம் (அல்லது வலி) உங்கள் இடத்தில் இருந்து பார்த்தால் நியாயமானதாகவும், சொல்லப்பட்டவர்கள் இடத்தில் இருந்து பார்த்தால் நியாயம் சற்று குறைந்ததாகவும் பட்டது. மன்னித்துக்கொள்ளுங்கள்.
தொடர்க..இடைவெளி குறைத்து.."
வழி மொழிகிறேன்.
//எல்லாம் நடந்து முடிந்து விட்டது... முடிந்தே விட்டதா..?!
//
முடியவில்லை சகோதரி, தன் தாய் உயிர் பெற எதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட கடைக்கோடி தமிழன் உயிரோடு இருக்கும் வரைக்கும் அது முடியாது.
//தெருத்தெருவாக இறங்கிப் பிச்சை கேட்டு, மாரடித்து, அழுது, ஆர்ப்பாட்டம் செய்து, உருண்டு புரண்டு, உண்ணாதிருந்து, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிப் பற்ற வைத்து, செத்தும் எதுவும் பலனளிக்கவில்லை.
//
அகிம்சை வழியில் போராட வேண்டும் என்று அறிவுரை கூறும் அறிவீலிகளுக்கு இதெல்லாம் அகிம்சைப் போராட்டமாகத் தெரியவில்லையே.
//சொந்தப் பிள்ளைகளே தப்பித் தவறிப் பிழைத்துக் கொண்டால் என்று கையில் விஷமேந்தி தாயாராக நின்று கொண்டிருக்கையில், வெளிநாட்டு மருத்துவர்கள் என்ன செய்து விட முடியும்.
//
இதற்குத்தான் இப்படிப் பட்ட கருங்காலிகளை முதலில் களையெடுக்க வேண்டும் என்று புறப்பட்டால் அதை சகோதர யுத்தம் என்று கேலி செய்யவும் செய்கிறார்கள் அதே துரோகிகள்
//செயற்கைச் சுவாசத்திலாவது உயிரைப் பிடித்து வைத்துக் கொண்டிருந்திருக்கலாம்.//
அதே
//அதிசயம் ஏதாவது நிகழ்ந்து செய்தி மாறி இருக்காதா என்று கொட்டக் கொட்ட விழித்திருந்து பார்த்துச் சலித்து, அழுது ஓய்ந்து போன நாட்களில்...
//
சந்தோசச் செய்தி - அணை உடைந்து ஐயாயிரம் ஆர்மிக்காரன் பலி - கேட்டதும் பகிர்ந்து கொண்டாடியதும், பின்னடைவு செய்திகள் கேட்கும் போது உண்மை நிலவரம் அறிய தேடித் தேடி அலைந்ததும்..
//ஆனாலும் அம்மா இன்னும் ஆழ்நிலை மயக்கத்திலேயே இருக்கிறாள் என்று ஆழமாக நம்பி அவளின் கிழிந்த சேலையை இறுக்கமாகப் பற்றி, அதன் வாசனையைச் சுவாசித்தபபடி நானும்...
//
நானும்
பெரும்பாலான பத்திகளில் முற்றுப்புள்ளியற்ற மிக நீண்ட வரிகள் வலிமிகு வார்த்தைகளுடன்..... நம் வலியோடு கூடிய அந்த நீண்ட போராட்டம் போல. :-(
ஒவ்வொரு பகுதியையும் படிக்கும்போது நெஞ்சம் எடைகூடியது போல கனக்கிறது. :-((
//மறதி என்பது வரம்.. அதுவே மிகப் பெரிய சாபம்! //
உண்மை
சொல்லாமல் சொல்லும் யுக்தி, அர்மை. ப்ரியா.
ஊமைக்காயம்
பேசும் வலி
தொடருங்கள்....
மீண்டும் வருவோம் மீண்டு!!!!
அதே பாரதியின் பாடல்தான் .......
தேடிச் சோறுநிதந் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - (நாங்கள்
வீழ்வோம் மென்று நினைத் தாயோ...
மீண்டும் வருவோம் மீண்டு!!!! )
//ஒரு வேளை, ஒரு கவளம் சோறு விழுங்க முடியாதிருந்த நேரத்தில், இணையத்தில் சாக்லட், வெண்ணெய், கேக், கோக் என்று அனுப்பிக் கொண்டிருந்தார்கள். கூடப் பிறந்தவர்களை அறுவடை செய்து கொண்டிருந்த போது, இணையத்தில் பண்ணைத் தோட்டம் ஆரம்பித்து, ஆள் ஆளுக்கு கழுதையும், எருமையும், வாத்தும், முட்டையும் பரிமாறிக் கொண்டிருந்தார்கள், இருக்கிறார்கள்.//
ப்ச்...சொல்வதற்கொன்றுமில்லை. எத்தனை அவலங்கள்...
ஆனாலும் அம்மா இன்னும் ஆழ்நிலை மயக்கத்திலேயே இருக்கிறாள் என்று ஆழமாக நம்பி அவளின் கிழிந்த சேலையை இறுக்கமாகப் பற்றி, அதன் வாசனையைச் சுவாசித்தபபடி நானும்..........ஆழ்ந்த அன்புடன் எழுதப்பட்ட பாச வரிகள்.......... அருமை.
ஈழ மாதா எழுவாள் என்ற நம்பிக்கை எங்களுக்கும் இருக்கிறது ப்ரியா...
எவ்வளவு சொல்லி அழுதாலும் எம் சோகம் தீரப் போவதில்லை. எவ்வளவு மருந்து மாத்திரை உட் கொண்டாலும், எம் மயக்க நிலை மாறப் போவதில்லை. உங்கள் ஒவ்வொரு இடுகையையும் படிக்க பயமாய் உள்ளது. ஒவ்வொரு இடுகையை படிக்க துவங்கும்போது, இந்த இடுகை எவ்வளவு சோகத்தை சுமந்து வரப்போகிறதோ என்று.
//விசையுறு பந்தினைப்போல் - உள்ளம் வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன், நசையறு மனங்கேட்டேன் - நித்தம் நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்//
சூப்பா................ர்
//அதிசயம் ஏதாவது நிகழ்ந்து செய்தி மாறி இருக்காதா என்று கொட்டக் கொட்ட விழித்திருந்து//
நானும் சில பல நேரங்களில்
//யோசித்துக் கொண்டிருப்பதைத் தவிர என்னாலும் வேறு ஒன்றும் கிழிக்க முடியாது //
இதுதான் பல நேரங்களில்.. யோசிக்கும் வேகத்தையும் திசை மாற்றி விட்டு போய் விடுகிறது
கூர்மைப் பெண்!
weldone priya!
சமூகச் சாடல்கள், வலி மிகுந்த உள்ளுணர்வுகளை வார்த்தைகளில் வடிக்கும் அழகும்.......அருமை
//ஒரு வேளை, ஒரு கவளம் சோறு விழுங்க முடியாதிருந்த நேரத்தில், இணையத்தில் சாக்லட், வெண்ணெய், கேக், கோக் என்று அனுப்பிக் கொண்டிருந்தார்கள். கூடப் பிறந்தவர்களை அறுவடை செய்து கொண்டிருந்த போது, இணையத்தில் பண்ணைத் தோட்டம் ஆரம்பித்து, ஆள் ஆளுக்கு கழுதையும், எருமையும், வாத்தும், முட்டையும் பரிமாறிக் கொண்டிருந்தார்கள், இருக்கிறார்கள்.//
நியாயமான வாதம்..
உந்த மறதிதான் எனக்கும் வில்லங்கம்
நல்லாயிருக்கு கலகலப்ரியா
/மறதி என்பது வரம்.. அதுவே மிகப் பெரிய சாபம்!/
அதில்லையென்றால் வாழ்வில்லை பிரியா.
ஒரு மரணம் முடிவல்ல. பல இறந்த போனவர்கள் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். சரித்திரப்புத்தகங்களில்,.
நல்ல பதிவு ப்ரியா
நன்றி வானம்பாடிகள்..
நன்றி வசந்த்..
நன்றி ஜெஸ்வந்தி..
:) நன்றி சின்னம்மிணி...
நன்றி சந்தனா... ஆரோக்யமான விஷயங்கள் சொல்றதுக்கு தயக்கம் எதுக்கு... மன்னிப்பு எதற்கு.. ம்ம்... இது நான் விளக்கமாக எழுதாது விடுத்ததனால் அதன் தாக்கம் புரியவில்லை போலும்.. எந்த விதத்திலும் அதை என்னால் நியாயப் படுத்த முடியவில்லை....
நன்றி பித்தனின் வாக்கு.... (ம்ம்... என்னோட அம்மாவும் எதிர்பாராத விதமா இப்போ இல்லைதான்... ஆனால் இது என் தாய்நாடு பற்றியது....... படித்தால் புரியும்!)
நன்றி புலிகேசி..
நன்றி அண்ணா...
நன்றி வாசு.. வாழ்ந்து தொலைக்கலாம்... தொலைத்துவிட்டு இருப்பதற்குப் பெயர்... தெரியவில்லை...
நன்றி அண்ணாமலையான்... (முதல்ல எழுதி வச்சிருக்கிறத படிச்சிட்டு சொல்லுங்க...)
நன்றி முகிலன்... :).. ம்ம்..
நன்றி ரோஸ்விக்... முற்றுப்புள்ளி தேடிய பயணம்... அது எங்கே என்று தெரியவில்லை..
நன்றி ஞானசேகரன்...
நன்றி முரளி..
ம்ம்.. நன்றி மகேஸ்...
நன்றி பாலாசி...
நன்றி சித்ரா... (நீங்க படிச்சிட்டுதானே சொல்றீங்க..=))
நன்றி ராஜா... நம்பிக்கைதானே எல்லாம் ...
நன்றி தமிழுதயம்... நடந்ததை விடவா கொடுமையா எழுதிடப் போறேன்.. =)
நன்றி ராஜவம்சம்... ஆமாம்.. பாரதியின் வரிகள் சூப்பர்...
நன்றி கதிர்...
நன்றி பா ரா..
நன்றி ஆரூர்...
நன்றி சிவாஜி..
நன்றி தியா... (ம்ம்.. நம் சாபக்கேடு..)
நன்றி அருணா... (சரிதான்..)
நன்றி ஜோதி.. அதில் பேசுபவர்களையாவது கேட்க ஆளிருக்க வேண்டும் என்பதே வேண்டுதல்..
ப்ரியா,
சீஸரை கொன்றதில் ப்ரூட்டஸுக்கு எந்த அளவு பங்குண்டோ அதே அளவு பங்கு நீங்கள் மருத்துவர் என்று நம்பிய பலருக்கும் ஈழப் போராட்டத்தில் உண்டு...குற்றுயிரும் குலையுருமாக நோய் வந்து போராடவில்லை...முதுகில் குத்தப்பட்டதால் தானே ஈழ அன்னைக்கு வந்தது இந்த உயிர்ப்போராட்டம்??
மகாமகா மருத்துவர்கள் ஏதேனும் செய்திருக்கலாம்...ஆனால் மருத்துவர் வேடத்தில் இருந்த/இருக்கும் மற்றொரு பேட்டை ரவுடியை பகைத்துக் கொள்ள துணிவின்றி மற்றவர்கள் ஏதும் செய்யாமல் இருந்ததும் உண்மை...பேட்டை ரவுடி யார் என்று உங்களுக்கும் தெரியும்...ஈழ அன்னையின் முதுகில் பாய்ந்த முதல் வாள் இந்த மருத்துவர் வேஷத்தில் இருக்கும் பேட்டை ரவுடியினுடையது...பேட்டை ரவுடி விரைவில் உலக ரவுடியாகும் ஆசையில் இருக்கிறது....பார்ப்போம்!
//
ஆனாலும் அம்மா இன்னும் ஆழ்நிலை மயக்கத்திலேயே இருக்கிறாள் என்று ஆழமாக நம்பி அவளின் கிழிந்த சேலையை இறுக்கமாகப் பற்றி, அதன் வாசனையைச் சுவாசித்தபபடி நானும்..
//
உண்மை நிலை என்னை விட உங்களுக்கு நன்றாகவே தெரியும்...கரிகால் வளவனுக்கு பிறகு சுமார் 300 வருடங்கள் சோழ நாடே இல்லாது இருந்தது...விஜயாலய சோழன் மீண்டும் சமயோசிதமாக செயல்பட்டு தஞ்சையை கைப்பற்றும் வரை...அதன் பின்னரே நமக்கெல்லாம் தெரிந்த சோழ மகா சாம்ராஜ்யம் சுந்தர சோழர் காலத்தில் ஆரம்பிக்கிறது...ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் என்று அடுத்து 300 வருடங்களுக்கு இன்றைய மும்பையிலிருந்து இந்தோனேஷியா வரை விரிந்து பரந்தது....இந்திய வரலாற்றிலேயே கடல் கடந்து படை எடுத்து சென்ற ஒரே சாம்ராஜ்யம் ராஜராஜ சோழன்/ ராஜேந்திர சோழன் தலைமையிலான சோழ சாம்ராஜ்யமே...
இன்றைக்கு இல்லாமல் இருப்பது நாளை எங்காவது இருந்து தோன்றலாம்...காலம் பதில் சொல்லும்...வீரர்கள் புதைக்கப்பட்டாலும் விதைக்கப்பட்டாலும் துரோகங்கள் மறக்கப்படுவதில்லை...என்றாவது ஒரு நாள்...வரலாறு மாற்றி எழுதப்படலாம்...அன்றைக்கு துரோகிகளின் அசிங்க முகங்கள் அடுத்து வரும் ஆயிரம் வருடங்களுக்கு பேசப்படும்....ஆனால், கத்தியை உபயோகிப்பதை விட புத்தியை உபயோகிக்க வேண்டும் என்றே எனக்கு தோன்றுகிறது...
அது சரி said...
ப்ரியா,
சீஸரை கொன்றதில் ப்ரூட்டஸுக்கு எந்த அளவு பங்குண்டோ அதே அளவு பங்கு நீங்கள் மருத்துவர் என்று நம்பிய பலருக்கும் ஈழப் போராட்டத்தில் உண்டு...குற்றுயிரும் குலையுருமாக நோய் வந்து போராடவில்லை...முதுகில் குத்தப்பட்டதால் தானே ஈழ அன்னைக்கு வந்தது இந்த உயிர்ப்போராட்டம்?? //
குத்தப்பட்டதல்ல... ஆள் ஆளுக்குக் கொத்திக் குதறியது...
//மகாமகா மருத்துவர்கள் ஏதேனும் செய்திருக்கலாம்...ஆனால் மருத்துவர் வேடத்தில் இருந்த/இருக்கும் மற்றொரு பேட்டை ரவுடியை பகைத்துக் கொள்ள துணிவின்றி மற்றவர்கள் ஏதும் செய்யாமல் இருந்ததும் உண்மை...பேட்டை ரவுடி யார் என்று உங்களுக்கும் தெரியும்...ஈழ அன்னையின் முதுகில் பாய்ந்த முதல் வாள் இந்த மருத்துவர் வேஷத்தில் இருக்கும் பேட்டை ரவுடியினுடையது...பேட்டை ரவுடி விரைவில் உலக ரவுடியாகும் ஆசையில் இருக்கிறது....பார்ப்போம்!//
:) ம்ம்..
//
ஆனாலும் அம்மா இன்னும் ஆழ்நிலை மயக்கத்திலேயே இருக்கிறாள் என்று ஆழமாக நம்பி அவளின் கிழிந்த சேலையை இறுக்கமாகப் பற்றி, அதன் வாசனையைச் சுவாசித்தபபடி நானும்..
//
உண்மை நிலை என்னை விட உங்களுக்கு நன்றாகவே தெரியும்...கரிகால் வளவனுக்கு பிறகு சுமார் 300 வருடங்கள் சோழ நாடே இல்லாது இருந்தது...விஜயாலய சோழன் மீண்டும் சமயோசிதமாக செயல்பட்டு தஞ்சையை கைப்பற்றும் வரை...அதன் பின்னரே நமக்கெல்லாம் தெரிந்த சோழ மகா சாம்ராஜ்யம் சுந்தர சோழர் காலத்தில் ஆரம்பிக்கிறது...ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் என்று அடுத்து 300 வருடங்களுக்கு இன்றைய மும்பையிலிருந்து இந்தோனேஷியா வரை விரிந்து பரந்தது....இந்திய வரலாற்றிலேயே கடல் கடந்து படை எடுத்து சென்ற ஒரே சாம்ராஜ்யம் ராஜராஜ சோழன்/ ராஜேந்திர சோழன் தலைமையிலான சோழ சாம்ராஜ்யமே...//
மறுக்க முடியாத வரலாற்றுண்மை... (கோடீஸ்வர வீட்டில் மருமகனாவது போல் ஆட்சி பிடித்தவர் வரலாறும் உண்டு..)
//இன்றைக்கு இல்லாமல் இருப்பது நாளை எங்காவது இருந்து தோன்றலாம்...காலம் பதில் சொல்லும்...வீரர்கள் புதைக்கப்பட்டாலும் விதைக்கப்பட்டாலும் துரோகங்கள் மறக்கப்படுவதில்லை...என்றாவது ஒரு நாள்...வரலாறு மாற்றி எழுதப்படலாம்...அன்றைக்கு துரோகிகளின் அசிங்க முகங்கள் அடுத்து வரும் ஆயிரம் வருடங்களுக்கு பேசப்படும்....ஆனால், கத்தியை உபயோகிப்பதை விட புத்தியை உபயோகிக்க வேண்டும் என்றே எனக்கு தோன்றுகிறது...//
புத்தியைக் கத்தியாகத் தீட்டியதில்தான் சிலர் இன்னும் உயிருடன் இருந்து கொண்டிருக்கிறார்கள்... தற்காலிகமாக... (தாயைக் கொன்று..)
Priya - It was and is a very painful moment for everyone of us. If u had meant Tamilians in that paragraph, that anger is totally acceptable - because they know everything and "should" feel for their fellows dying there.
But, how can we expect people here - who donot know much about slaughters happening there - to give up all their activities? Putting us in their shoes, when Israel was attacking Palestinians, did we give up all our activities? Of course, we would have felt bad and prayed for few minutes for those who were being killed. But, did we or shall we stop the whole of our fun for them? That was what I wanted to convey.
From your position, from my position - expectations that others should get to understand these sufferings and pain are 100% right. But, it is not necessary that they should do that. Thats why I said - the anger that they didnot do that is not correct.
Hope u got me right!! U expressed ur agony in ur writing, and I dont want to argue about this and make the rest of the pathivu to lose its sharpness. U made us feel the excruciating pain that everyone is going through.
U need not publish this - I am again afraid that this may divert other readers from the actual content. I wrote this just for our clarification.
//எல் போர்ட் said...
Priya - It was and is a very painful moment for everyone of us. If u had meant Tamilians in that paragraph, that anger is totally acceptable//
Ty for yer comment chandana.. sry.. i had to publish dis to answer yer q.. cudn't find ne email id..!
well... i just am talking abt tamilians, tamilians only..! nobody else.. not even singalese..!
of course it was an endless agony.. wotever happened.. has happened..! da agony has come to an end..! more or less.. it's over..!
you knw... am not in a position.. whr i can indicate someone else for nething...! whether.. they're tamilians or singalese.. no matter.. they've their own problems.. own lives..!
but..tk for an instance.. in da facebook.. they must've seen.. how i suffered from all those unimaginable horror...!
i had been seeing how our ppl were struggling to get a few drops water to drink.. & had been expressing my agonies and emotions.. all the time..! at that painful moment.. i got lotz of fancy 'virtual' food on da net.. from our ppl only..!.. it was damned irritating.. ya knw..!
well.. i didn't wanna go into detail... but.. i hope.. this clarification may help ya..!
tc..
// ஆனால் இது என் தாய்நாடு பற்றியது....... படித்தால் புரியும்!) //
மன்னிக்கவும், நான் சபரிமலைப் பயணத்தால் இடையில் படிக்கவில்லை. ஆதலால் தவறாக சொல்லிவிட்டேன். நன்றி பிரியா.
நிறைய பேர் அந்தி சுவாசித்து கொண்டு தான் இருக்கிறார்கள் அல்லது சுவசிப்பதொடு நிறுத்தி கொள்கிறார்கள் உங்களையும் என்னையும் போல...,
உங்கள் ஒவ்வொரு வரிகளும் கூரிய வாளாக உணர்வுகளைக் கிழித்துச் செல்கிறது. உள்ளே விதைகளாக ஊன்றிக் கொள்கிறது. அருமையான நடை.
மறதி என்பது வரம். முற்றிலும் உண்மை.
அதனால்தான் மனிதனால் எத்தனை தரம் வீழ்ந்தாலும் மீண்டும் எழவும் வாழவும் முடிகிறது.
//i had been seeing how our ppl were struggling to get a few drops water to drink.. & had been expressing my agonies and emotions.. all the time..! at that painful moment.. i got lotz of fancy 'virtual' food on da net.. from our ppl only..!.. it was damned irritating.. ya knw..!//
I can understand the suffering u went through. Both ur expectation and anger are justified. Sorry for the diversion :(((
Btw, it is a bit difficult to read this sms English.. I should start getting adapted to this now :)or may be left well behind in a few years!
//பித்தனின் வாக்கு said...
// ஆனால் இது என் தாய்நாடு பற்றியது....... படித்தால் புரியும்!) //
மன்னிக்கவும், நான் சபரிமலைப் பயணத்தால் இடையில் படிக்கவில்லை. ஆதலால் தவறாக சொல்லிவிட்டேன். நன்றி பிரியா//
பரவால்ல... :))மன்னித்து விட்டேன்.. =))
//பேநா மூடி said...
நிறைய பேர் அந்தி சுவாசித்து கொண்டு தான் இருக்கிறார்கள் அல்லது சுவசிப்பதொடு நிறுத்தி கொள்கிறார்கள் உங்களையும் என்னையும் போல...,//
ம்ம்... நன்றி பேநா...
//Dr.எம்.கே.முருகானந்தன் said...
உங்கள் ஒவ்வொரு வரிகளும் கூரிய வாளாக உணர்வுகளைக் கிழித்துச் செல்கிறது. உள்ளே விதைகளாக ஊன்றிக் கொள்கிறது. அருமையான நடை.
மறதி என்பது வரம். முற்றிலும் உண்மை.
அதனால்தான் மனிதனால் எத்தனை தரம் வீழ்ந்தாலும் மீண்டும் எழவும் வாழவும் முடிகிறது.//
ரொம்ப நன்றி டாக்டர்...
உண்மை...
//எல் போர்ட் said...
//i had been seeing how our ppl were struggling to get a few drops water to drink.. & had been expressing my agonies and emotions.. all the time..! at that painful moment.. i got lotz of fancy 'virtual' food on da net.. from our ppl only..!.. it was damned irritating.. ya knw..!//
I can understand the suffering u went through. Both ur expectation and anger are justified. Sorry for the diversion :(((
Btw, it is a bit difficult to read this sms English.. I should start getting adapted to this now :)or may be left well behind in a few years!//
no problem at all chandana..! & sorry..! shall try to write normally henceforth.. (only for your comments) =))
//இப்படி வித்யாசமாக யோசித்துக் கொண்டிருப்பதைத் தவிர என்னாலும் வேறு ஒன்றும் கிழிக்க முடியாது என்பது எனக்கும் நன்றாகவே தெரியும்...! //
ப்ரியா,
தன் கன்னத்தில் தானே அறைந்துக் கொண்டு வலி உணர்பவர்கள் இங்கு அபூர்வம்..!
சிறப்பாயிருக்கு!
எப்போதோ மாறிவிட்ட உலக அரசியல் ஒழுங்கை அடுத்த தலைமுறைப் போராட்டக்காரர்கள் தயவு செய்து புரிந்து கொள்ள வேண்டும். குற்றச்சாட்டுகளுக்கோ விரக்தியடைந்து போவதற்கோ இது நேரமல்ல. சத்தியமாக இது ஆழ்ந்த உறக்கம்தான்.
//சத்ரியன் said...
//இப்படி வித்யாசமாக யோசித்துக் கொண்டிருப்பதைத் தவிர என்னாலும் வேறு ஒன்றும் கிழிக்க முடியாது என்பது எனக்கும் நன்றாகவே தெரியும்...! //
ப்ரியா,
தன் கன்னத்தில் தானே அறைந்துக் கொண்டு வலி உணர்பவர்கள் இங்கு அபூர்வம்..!
சிறப்பாயிருக்கு!//
நன்றி அண்ணே..!
//புளியங்குடி said...
எப்போதோ மாறிவிட்ட உலக அரசியல் ஒழுங்கை அடுத்த தலைமுறைப் போராட்டக்காரர்கள் தயவு செய்து புரிந்து கொள்ள வேண்டும். குற்றச்சாட்டுகளுக்கோ விரக்தியடைந்து போவதற்கோ இது நேரமல்ல. சத்தியமாக இது ஆழ்ந்த உறக்கம்தான்.//
ம்ம்... வருகைக்கு நன்றி.. :)
புதுவருட வாழ்த்துகளுடன் உங்களுக்கு என் சிறிய பரிசு :-)
http://singakkutti.blogspot.com/2009/12/blog-post_25.html
//சிங்கக்குட்டி said...
புதுவருட வாழ்த்துகளுடன் உங்களுக்கு என் சிறிய பரிசு :-)
http://singakkutti.blogspot.com/2009/12/blog-post_25.html//
நன்றி சிங்கக்குட்டி... :)...
அன்புள்ள பிரியா,
அணு மிகச் சிறியது என்பது உண்மை, அணுவை விடப் பெரியது வேறெதுவும் கிடையாது.. இதுவும் உண்மைதான்.
உங்களது படைப்புகள் ஒவ்வொன்றும் அணுவினை ஒத்தவை.
தங்கள் எழுத்துகளில் வெளிப்படும் வலிகளின் பரிமாணங்கள் தமிழரின் பரிணாம வளர்ச்சியினை சீர்படுத்தும் முகமாக அமையக்காண்கிறேன்.
அதற்கு என் வணக்கங்கள்.
இன அடையாளங்களை சில நூறு வருடங்களுக்கு முன்பாகவே தொலைத்து விட்ட சமூகத்தை சேர்ந்தவன் நான்.
எங்களில் பலருக்கு அந்த வலி மிகுந்த வரலாறு சிறிதும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தமிழோடு திரிபுற்ற மொழி பேசி, இந்தியாவின், தமிழ்நாட்டில் சுகமாக வாழ்த்து வருகிறோம். எம் தந்தையார் அடைந்த அறிவின் மேன்மைகளும், ஆன்ம நிலைபாடும் தரப்பெராத போதும், தமிழின் நிழலில் இளைபாரிக்கொண்டிருக்கிறோம்.
தமிழ் வெறும் மொழியோ, இடம் மற்றும் மக்கள் சார்ந்த அடையாளமோ கிடையாது. தமிழ் முதிர்ந்த ஒரு பக்குவம், ஆயிரமாயிரம் வருடங்களாக வாழ்ந்து வரும் அனுபவச் சாரல். இயற்கையின் இயல்பைச் சார்ந்த யாவும் தமிழே. இது மருவலாம், மங்கலாம் அனால் மறையாது.
ஆதியானது... அகதியானது... அகமும் புறமும் விரிந்து பரவுவதாய்!!!
அவ்... இதுக்கு மேல என்னால முடியல.
நல்லா எழுதுறீங்க பிரியா, நானே பின்னூட்டம் எழுதரன்னா பாருங்களேன். உங்களுக்கு நான் நிச்சயம் நட்பாய் அமைவேன்.
//Kamatchi shanker said...//
ரொம்ப நன்றி காமாட்சி...
Post a Comment