நரமாமிச உண்ணியின்
பேரையொற்ற விலங்கு..
கேட்பாரற்ற அநாதைகளை
அடக்கியாளும் கிருமி..
அடங்கப்போகும் துடிப்பறியாது
தடதடத்தாடும் பிண்டம்..
கொழுப்பின் திரள்களில்
களியாகிக் கிடக்கும் இருதயம்..
பறக்கும் திசை தொலைத்து
சிறகுடன் துடிக்கும் வெண்புறா...
http://news.bbc.co.uk/2/hi/europe/8389548.stm
_____________________________________________________
புரட்சியாளர்களின்
முதல் வெற்றி
அடிமைத்தளையின்
முதல் உடைப்பு
நூறு தாண்டியும் விலகாத
கருமை நிற வறுமைக்கோடு
வன்புணர்ந்த மிருகத்தால்
என் சகோதரமும் கூட..
இன்றும்..
குறி பார்த்து
உலுக்கிக் கொண்டிருக்கின்றன
வெறியடங்கா நரப்பேய்கள்...
http://news.bbc.co.uk/2/hi/americas/8469096.stm
_____________________________________________________
தேடிச் சோறு நிதந்தின்று - பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ!!!
எனக்காக... பாரதியிடம் கடன் வாங்கி...
____________________________________________________
Tuesday, January 19, 2010
Monday, January 18, 2010
வந்துட்டம்ல... வந்துட்டம்ல..
சர்ர்ர்ர்..... ம்ம்.. எனக்கு ஃப்ளுங்க.. எனக்கு ஃப்ளு... ஆக்சு'வலி'.. இந்தத் 'தலைவலி' நியூ இயர் அன்னிக்கே வரும்... திஸ் இயர் தப்பிச்சதுன்னு நினைச்சேன்... (என்னது தப்பிச்சதுன்னு சொல்றேன்னு பார்க்கறீங்களா... நம்ம கிட்ட ஃப்ளு மாட்டினாலும் அதுக்குதான் திண்டாட்டமுங்கோ..).. ஆனா அது சொந்த செலவில சூனியம் வச்சுக்கிட்டு அடுத்த ட்ரெயின் புடிச்சு நேரா இங்க வந்துடிச்சு... இதுவே ஸ்வைன் ஃப்ளுன்னா இன்ஜெக்ஷன் ஏதும் போடாமலேயே வக்சினேட் பண்ணிடலாமேன்னு பார்த்தா... அபசகுனமா பேசறேன்னு நட்பு வட்டாரம் துப்புது... ஃப்ளு மேல அவ்ளோ அக்கறை.. ஹும்...
புரியாத கவுஜ எல்லாம் இடுகை கணக்கில சேராது... ஒழுங்கா ஒரு மொக்கை இடுகை போடுன்னு மிரட்றாங்கோ.. யாரு? எல்லாம் நம்ம தொண்டப் பெருமக்கள்தான்.. (நம்பலைனா நானா பொறுப்பு... ) .. அதான் ஃப்ளு மொக்கை ஆரம்பிச்சிட்டேன்..
முதல்ல தமிழ்மணம் அவார்ட் கிடைச்ச எல்லாருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்... நாம பத்துக்குள்ள வந்ததே பெரிய மேட்டருபா... அதுக்கே எத்தன வாழ்த்து.. ஸ்ஸ்ஸ்ஸபா.. =)) முடியல... உங்களுக்கும் முடியலையா... அப்பச்செரி...
நம்ம கதிரு நட்சத்திர பதிவரானது ரொம்ப ஹாப்பியா கீதுபா.... நட்சத்திரம் பத்தி என்ன போட்டிருக்குன்னு.. க்ளிக் பண்றப்பவே கண்ணு பத்தி வரும்னு நினைச்சேன்... அப்டியே வந்திச்சி.. இன்னொண்ணு அவங்க ப்ளட் டொனேட் பண்ற மேட்டரு.. சிம்ப்ளி கிரேட்பா.. ஒரு வேளை தப்பித்தவறி நானு நட்சத்திர பதிவரிணி ஆனாக்க.. (ம்க்கும் ஆயிட்டாலும்) இது எனக்கு ரொம்ப ஹெல்ப்ஃபுல்லா இருக்கும்பா... எப்டின்னு கேட்டீங்கன்னா... என்னது கேக்க மாட்டீங்களா... நாம சொல்லுவோமில்ல...
முதல் வாட்டி ப்ளட் கொடுக்க போனேன்... யோசிச்சு யோசிச்சு எடுத்தாங்க... அப்புறம் மூணு மாசம் கழிச்சு போனேன்... ஆர் யூ வெஜிடேரியன்..? இன்னும் மூணு மாசம் கழிச்சு வான்னாங்க... திரும்பவும் டயரில டேட் குறிச்சு வச்சுக்கிட்டு போனேனுங்க... உதட்டைப் பிதுக்கி.. நோ வே உனக்குத்தான் நாம ப்ளட் கொடுக்கணும் அப்டின்னுட்டாங்க... வாட் அன் இன்சல்ட்... போங்கடா வெவரங்கெட்ட பயலுவளா... நான் கொசுவுக்கே கொடுக்கறேன் ப்ளட்ன்னு சொல்லிட்டு.. வெறுத்துப் போய் வந்துட்டேன்.. பின்னே என்னங்க.. இன்ஜெக்ஷன் பார்த்தாலே அலர்ற பார்ட்டி நாம... இவ்ளோ பண்ணது எவ்ளோ பெரிய மகத்தான சாதனைன்னு யாருக்காவது புரியுமா... அவ்வ்வ்வ்...
அப்புறம் கண்ணு பத்தி சொல்லணும்னா... நான் நிறையப் பேரு கண்ணை நோண்டணும் அப்டின்னு ஒரு பெரிய லிஸ்ட்டே வச்சிருக்கேன்... முதல்ல கோத்தபாயவோட ஒண்ணரைக்கண்ல ஆரம்பிக்கணும்... ரொம்ப ராசியான கண்ணு அப்டின்னு.. எனக்கு ரொம்பப் புடிச்ச புத்தரு சொல்லி இருக்காரு.. என்னது உங்க பேரு அந்த லிஸ்ட்ல இருக்கான்னு பார்க்கணுமா..? எப்டியும் கண்ணு நோண்டறதுக்கு முதல் நாள் உங்க வீட்ல லிஸ்ட் இருக்கிற மாதிரி பார்த்துக்கறேன்... டீல்.. ஒக்கே...?
அப்புறம் ஒரு சீரியஸ் மேட்டர்... அது என்னன்னா "நோ" சொல்லக் கத்துக்கணும்... நாம ஃப்ளு கூட மொக்கை போட்டுக்கிட்டிருக்கிறப்போ.. யாராவது ஃபோன் பண்ணி.. எனக்கு விரல் சுளுக்கிடிச்சு.. வீட்டுக்கதவு திறக்க முடியல.. நீ கொஞ்சம் வந்து சன்னல உடைச்சு உள்ள பாய்ஞ்சு கதவில கீ கொடுத்துட்டு.. எனக்கு வெந்நீர் வச்சு கொடுக்கிறியான்னு கேட்டா... த்தோ வந்துட்டே இருக்கேன்னு போகாம... ஐ வில் கால் த போலீஸ் அப்டின்னாவது சொல்ல தெரியணும்.. இல்லைன்னாக்க நோ... ஐ ஆம் வெரி பிஸி வித் மை ஃப்ளுன்னு சொல்லணும்.. என்ன ஓக்கேயா? அட நீங்க வேற.. நான் என்னைச் சொன்னேன்..... ம்ம்... அப்புறம் ஃப்ளு இருக்கிற வரைக்கும் பெரிய பதிவுக்கெல்லாம் ஒரு பெரிய "நோ."...ஐ ஆம் வெரி ஸாரி... அவ்வ்வ்வ்.. அப்ப வர்ட்டா...குட்டு நைட்டு..
புரியாத கவுஜ எல்லாம் இடுகை கணக்கில சேராது... ஒழுங்கா ஒரு மொக்கை இடுகை போடுன்னு மிரட்றாங்கோ.. யாரு? எல்லாம் நம்ம தொண்டப் பெருமக்கள்தான்.. (நம்பலைனா நானா பொறுப்பு... ) .. அதான் ஃப்ளு மொக்கை ஆரம்பிச்சிட்டேன்..
முதல்ல தமிழ்மணம் அவார்ட் கிடைச்ச எல்லாருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்... நாம பத்துக்குள்ள வந்ததே பெரிய மேட்டருபா... அதுக்கே எத்தன வாழ்த்து.. ஸ்ஸ்ஸ்ஸபா.. =)) முடியல... உங்களுக்கும் முடியலையா... அப்பச்செரி...
நம்ம கதிரு நட்சத்திர பதிவரானது ரொம்ப ஹாப்பியா கீதுபா.... நட்சத்திரம் பத்தி என்ன போட்டிருக்குன்னு.. க்ளிக் பண்றப்பவே கண்ணு பத்தி வரும்னு நினைச்சேன்... அப்டியே வந்திச்சி.. இன்னொண்ணு அவங்க ப்ளட் டொனேட் பண்ற மேட்டரு.. சிம்ப்ளி கிரேட்பா.. ஒரு வேளை தப்பித்தவறி நானு நட்சத்திர பதிவரிணி ஆனாக்க.. (ம்க்கும் ஆயிட்டாலும்) இது எனக்கு ரொம்ப ஹெல்ப்ஃபுல்லா இருக்கும்பா... எப்டின்னு கேட்டீங்கன்னா... என்னது கேக்க மாட்டீங்களா... நாம சொல்லுவோமில்ல...
முதல் வாட்டி ப்ளட் கொடுக்க போனேன்... யோசிச்சு யோசிச்சு எடுத்தாங்க... அப்புறம் மூணு மாசம் கழிச்சு போனேன்... ஆர் யூ வெஜிடேரியன்..? இன்னும் மூணு மாசம் கழிச்சு வான்னாங்க... திரும்பவும் டயரில டேட் குறிச்சு வச்சுக்கிட்டு போனேனுங்க... உதட்டைப் பிதுக்கி.. நோ வே உனக்குத்தான் நாம ப்ளட் கொடுக்கணும் அப்டின்னுட்டாங்க... வாட் அன் இன்சல்ட்... போங்கடா வெவரங்கெட்ட பயலுவளா... நான் கொசுவுக்கே கொடுக்கறேன் ப்ளட்ன்னு சொல்லிட்டு.. வெறுத்துப் போய் வந்துட்டேன்.. பின்னே என்னங்க.. இன்ஜெக்ஷன் பார்த்தாலே அலர்ற பார்ட்டி நாம... இவ்ளோ பண்ணது எவ்ளோ பெரிய மகத்தான சாதனைன்னு யாருக்காவது புரியுமா... அவ்வ்வ்வ்...
அப்புறம் கண்ணு பத்தி சொல்லணும்னா... நான் நிறையப் பேரு கண்ணை நோண்டணும் அப்டின்னு ஒரு பெரிய லிஸ்ட்டே வச்சிருக்கேன்... முதல்ல கோத்தபாயவோட ஒண்ணரைக்கண்ல ஆரம்பிக்கணும்... ரொம்ப ராசியான கண்ணு அப்டின்னு.. எனக்கு ரொம்பப் புடிச்ச புத்தரு சொல்லி இருக்காரு.. என்னது உங்க பேரு அந்த லிஸ்ட்ல இருக்கான்னு பார்க்கணுமா..? எப்டியும் கண்ணு நோண்டறதுக்கு முதல் நாள் உங்க வீட்ல லிஸ்ட் இருக்கிற மாதிரி பார்த்துக்கறேன்... டீல்.. ஒக்கே...?
அப்புறம் ஒரு சீரியஸ் மேட்டர்... அது என்னன்னா "நோ" சொல்லக் கத்துக்கணும்... நாம ஃப்ளு கூட மொக்கை போட்டுக்கிட்டிருக்கிறப்போ.. யாராவது ஃபோன் பண்ணி.. எனக்கு விரல் சுளுக்கிடிச்சு.. வீட்டுக்கதவு திறக்க முடியல.. நீ கொஞ்சம் வந்து சன்னல உடைச்சு உள்ள பாய்ஞ்சு கதவில கீ கொடுத்துட்டு.. எனக்கு வெந்நீர் வச்சு கொடுக்கிறியான்னு கேட்டா... த்தோ வந்துட்டே இருக்கேன்னு போகாம... ஐ வில் கால் த போலீஸ் அப்டின்னாவது சொல்ல தெரியணும்.. இல்லைன்னாக்க நோ... ஐ ஆம் வெரி பிஸி வித் மை ஃப்ளுன்னு சொல்லணும்.. என்ன ஓக்கேயா? அட நீங்க வேற.. நான் என்னைச் சொன்னேன்..... ம்ம்... அப்புறம் ஃப்ளு இருக்கிற வரைக்கும் பெரிய பதிவுக்கெல்லாம் ஒரு பெரிய "நோ."...ஐ ஆம் வெரி ஸாரி... அவ்வ்வ்வ்.. அப்ப வர்ட்டா...குட்டு நைட்டு..
Friday, January 15, 2010
"கோள்"களும் அவை சார்ந்தவையும்..
______________________________ _________________
பத்தில் வியாழன்
சுழித்த கீழுதட்டுக்கும்
பற்களின் மேற்றொடருக்குமான
பக்க இடைவெளிவழி
வளியுடன் கிழிக்கும்
வகரத்தை
விகாரத்துடனும்
ககரத்தின் குற்றை
காரத்துடனும்
அழுத்தித் துப்பும்
ஒவ்வொரு வினாடியும்
இதய அறைகளில்
ஏதோவொன்று
இறுக மூடிக் கொள்கிறது..
நரம்புமண்டலத்தில்
தெறித்தழுத
குழந்தைகளின்
குருதிக்கண்ணீர்
மூளையின் மூலையொன்றில்
முடங்கி உறைகிறது..
______________________________ _________________
சனி
பிணமாகிவிட்ட
கழுகுகள்..
கழுகாகத் துடிக்கும்
காக்கைகள்..
பாம்பை விழுங்கிய
முட்டைகள்..
உடைந்த
ஓடுகளை
அடைகாக்கும்
பேடுகள்..
கத்தாத வாயினால்
கெடுக்கப்படும் நுணல்கள்..
பழக் களியில் தேங்கிய
எறும்பின் உழைப்புகள்..
கொம்புடன்
காம்புமிழந்த
ஆக்களில்
முட்டி மோதும்
வாயகன்ற கன்றுகள்..
சிராய்க்கப்படாத முட்கள்
எரிக்கப்படாத எட்கள்..
இவற்றுடன் பெயர்ந்த
இக்கவிதையின் தலைப்பு..
______________________________ _________________
பத்தில் வியாழன்
சுழித்த கீழுதட்டுக்கும்
பற்களின் மேற்றொடருக்குமான
பக்க இடைவெளிவழி
வளியுடன் கிழிக்கும்
வகரத்தை
விகாரத்துடனும்
ககரத்தின் குற்றை
காரத்துடனும்
அழுத்தித் துப்பும்
ஒவ்வொரு வினாடியும்
இதய அறைகளில்
ஏதோவொன்று
இறுக மூடிக் கொள்கிறது..
நரம்புமண்டலத்தில்
தெறித்தழுத
குழந்தைகளின்
குருதிக்கண்ணீர்
மூளையின் மூலையொன்றில்
முடங்கி உறைகிறது..
______________________________
சனி
பிணமாகிவிட்ட
கழுகுகள்..
கழுகாகத் துடிக்கும்
காக்கைகள்..
பாம்பை விழுங்கிய
முட்டைகள்..
உடைந்த
ஓடுகளை
அடைகாக்கும்
பேடுகள்..
கத்தாத வாயினால்
கெடுக்கப்படும் நுணல்கள்..
பழக் களியில் தேங்கிய
எறும்பின் உழைப்புகள்..
கொம்புடன்
காம்புமிழந்த
ஆக்களில்
முட்டி மோதும்
வாயகன்ற கன்றுகள்..
சிராய்க்கப்படாத முட்கள்
எரிக்கப்படாத எட்கள்..
இவற்றுடன் பெயர்ந்த
இக்கவிதையின் தலைப்பு..
______________________________
Tuesday, January 12, 2010
காமரோனும்.. அவதாரும்...நடுவே நாமும்...
ம்ம்... இல்ல... வேண்டாம்.. பார்க்கலாம்.. வேண்டாம்.. ம்ம்.. ஊஹும் (பூ... இதழ் எல்லாம் வச்சுக்கலை..) பதினெட்டாவது தடவையா யோசித்து... பார்க்கலாம்னு முடிவெடுத்த படம் அவதார். சயன்ஸ் ஃபிக்ஷன்னாலே காத தூரம் ஓடுற என்னை.. ஜேம்ஸ் காமரோனுடன் இன்னும் எதுவோ சேர்ந்து இழுத்துக் கொண்டே இருந்தது. ஸ்னோவில் கால் புதையப் புதைய காட்டுக்குள் வாக்கிங் போகலாமென்று அழைத்த என்னோட பாலிவுட் ரசிகத் தோழியை தற்காலிகமாகத் திசைதிருப்ப அப்போதைக்கு கிடைத்த ஒரே வழி அவதார் மட்டுமே.
நெட்ல எல்லாம் புக் பண்ணத் தோணலை... அதுதான் ரொம்பப் பழசாப் போன படமாச்சேன்னு.. கைய வீசிக்கிட்டு.. படம் தொடங்க முக்கால் மணி நேரம் முன்னாடிப் போய் க்யூவில் நின்றோம். என்ன இவ்ளோ ஜனங்க? என்ற கேள்விக்கு... "ஆல்வின் அண்ட் த சிப்மங்க்ஸ்" பார்க்க வந்திருப்பாங்கன்னு சமாதானம் சொன்னேன்.
எங்கள் முறை வந்தபோது இரண்டே இரண்டு சீட் தான் இருக்கு.. அதுவும் முன் வரிசைலன்னான். எனக்கு அப்பவே லேசா தலைய சுத்திச்சு. பின் வரிசைல நாலாவது வரிசை தாண்டி முன்னாடி போனதில்லை... (நிறைய டிவிடி + யூ ட்யூப் புண்ணியம்..). சரி இதுவாவது கிடைச்சதே, பெரிய புண்ணியம்ன்னு.. முப்பாரிமாணக் கண்ணாடி சகிதம் களத்தில் இறங்கினோம்.
சீட்டில் உட்கார்ந்ததும் காலை நல்லா நீட்டி உட்கார்ந்த பாலிவுட்டிடமிருந்து.. "முன் சீட்ல இது ஒரு வசதி"ன்னு ஒரு ஆப்டிமிஸ்டிக் காமென்ட் வந்தது. ம்க்கும்னு முனகிக்கிட்டே 3D கண்ணாடிய விளம்பரத்துக்கும் மாட்டிக்கணுமான்னு யோசிச்சுக்கிட்டு இருக்கிறப்பவே, தலையைப் பின்னாடி சாய்த்துக் கொண்டு... "இப்டி சாய்ஞ்சுக்கிட்டே பார்க்கலாம்" என்று ரெண்டாவது காமென்ட் வந்தது. விளம்பரம் முடியுறதுக்குள்ளேயே எனக்கு பின் கழுத்து சுளுக்கிக்கொண்டு விட்டது.
ஒரு வழியா படம் ஆரம்பிச்சது... கண்ணில 3D மாட்டிக்கொண்டு நிமிர்ந்து உட்கார்ந்தேன். பிடித்தது சனியன்... தலை கிர்ர்ர்ர் என்று எங்கேயோ போனது. முப்பரிமாண எஃபெக்ட்டா அல்லது சீட் எஃபெக்ட்டா.. ஜேம்ஸ் காமரோனின் மூழ்கிப்போன டைட்டானிக் எஃபெக்ட்டா தெரியல. இப்போதானே ஆரம்பிச்சிருக்கு, முடியுற வரைக்கும் எப்படித் தாக்குப் பிடிக்க போறோம்னு புரியல. பாதில முடியல ஸாரின்னு சொல்லிட்டு போக வழியில்லாம, இரண்டு வாரம் முன்னாடிப் பார்த்த 2012 இல்... படம் முடிய முன்னாடி எழுந்து போன இரண்டு பேரைப் பார்த்து சிரித்த என் பாழாப் போன சிரிப்பு என்னைப் பார்த்து கை கொட்டிச் சிரித்தது.
சமாளிப்போம்னு... கண் மூடியபடி கொஞ்சம்.. பாதிக் கண் மூடியபடி கொஞ்சம்.. ஒற்றைக் கண் (நெற்றிக்கண் இல்லப்பா) திறந்தபடி கொஞ்சம்.. முழுக்கண்ணும் திறந்தபடி கொஞ்சம்.. 3D கண்ணாடி கழற்றிக் கொஞ்சம்.. என்று இடைவேளை வரை பார்த்து/கேட்டு சமாளித்தாயிற்று. அலுவலகத்தின் மூன்றாவது மாடியில் நாலு அடி பின்னால் நின்று மிக மிக ஜாக்கிரதையாக யன்னல் வழி தெரியும் காட்சிகளை வேடிக்கை பார்க்கும் எனக்கு விதி "பண்டோரா" அவதாரத்தில் வந்தது. பேசாம ஷில்ட்ஹோர்ன் மூவிங் ரெஸ்டாரன்டுக்கே போயிருக்கலாம் என்று மனதுக்குள் புலம்பிக் கொண்டேன்.
இடைவேளையின் அருமை தெரிந்தது அன்றைக்குத்தான். நேரா பாத்ரூமுக்கு ஓடி குளிர்தண்ணீர் வாரி முகத்தில் இறைத்துக் கொண்டு வெளியில் வந்து ஒரு கோலா வாங்கி சாப்ட்டு தெம்பா உள்ளே சென்றேன்.
அப்புறம் ஏனோ எனக்குத் தலை சுற்றல் நின்று விட்டிருந்தது. கழுத்துச் சுளுக்கு போன இடம் தெரியவில்லை. அவதார் உருவங்கள் எல்லாம் நிஜமாக மாறிப் போயின. அவர்களின் வால்கள் மறைந்து விட்டிருந்தன, அவர்கள் கண்களில் தெரிந்த உணர்ச்சிகள் என் கண்ணிலும் தொற்றிக் கொண்டன. பக்கத்திலிருந்தவள் பக்கம் சரிந்து "இது எங்கள் கதை".. என்று சொன்னேன். ஆமோதிப்பாய் தலையசைத்தாள். அதன் பின்... சில மாதங்களுக்கு முன்... நான் அங்கிருக்க வேண்டுமென்று ஏங்கிய... என் தேசத்தில்.. அவதாரங்களுடன் அவதாரமாக...
இராட்சத ஹெலிகாப்ட்டர்களின் சத்தங்களுக்கு மத்தியில்... எரி குண்டுகளுக்கு நடுவே... ஜேம்ஸ் காமரோனின் நீர்நாரையின் அவதாரமான tetrapteron - இல் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தேன்... தாய்க்குத் தாயான தாய்மண் போல்... மரம் விழுந்தபோது விழுந்தேன்... அவதாரங்கள் சிதறியபோது சிதறினேன்... கதறிய போது கதறினேன்... நெற்றிக்கு நேர் குழல் துப்பாக்கி நீட்டிச் சுட்ட போது... நெற்றியில் உள்வாங்கினேன்... ஐ டிசர்வ் இட் என்று சொல்லிக் கொண்டேன்.. தீயின் கொடு வெப்பம் உணர்ந்தேன்...
வெறுமை... கொடுமை... வீரம்.. துரோகம்... துளியாக ஆதரவு... காற்றிலாடும் அந்தத் தூய ஆத்மாக்களான ஜெல்லிகளில் ஆத்மா பறப்பது போன்றும்... அதே சமயம் நீரில் வாழும் ஜெல்லிகளின் விஷத்தன்மை உணர்வது போன்றும்... மாற்றி மாற்றி அலைக்கழித்தது...
கடைசியில்... ஒற்றுமையின் சக்தியை உணர வைத்தார்கள்... தோளுடன் தோளணைத்து நின்றால்.. போன உயிரைக் கூடக் கொண்டுவர முடியும் போலும்... ஆனால் அது பண்டோராவில் மட்டும் சாத்தியமான ஒன்று... பூமியில் நடக்கச் சாத்தியக் கூறுகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை..
திரும்பி வரும்போது... "இவர்களுக்கு உதவுவதற்கு சில பேர் வந்தார்கள்... ஆனால் உங்களுக்கு..?" என்று என் தோழி கேட்டபோது... மெளனமாக வெற்றுப் புன்னகை ஒன்றை மட்டுமே.. பதிலாக அளிக்க முடிந்தது..!
Saturday, January 9, 2010
சாகத் துணியிற் சமுத்திர மெம்மட்டு...
Part 14
ஸ்பெஷல் இங்கிலீஷ் கிளாஸ் சுந்தரலிங்கம் மாஸ்டர் அவர்களை யாழ் இடுகையாளர்கள் சில..பல பேருக்குத் தெரிந்திருக்கும். டியர் என்றால் பெண், டேய் என்றால் ஆண் என்று ஆங்கிலம் கற்று வைத்திருந்தவர்களுக்கு ஷால் எங்கே, வில் எங்கே போன்ற நுணுக்கங்கள் கற்றுக் கொடுக்க முயற்சி செய்து கொண்டிருந்த மனிதர்.
அவரோட இங்கிலீஷ் ஸ்பெஷலோ இல்லையோ... அவர் பிறந்த இடம் ஸ்பெஷல். தமிழினத் தலைவர் பிறந்த... கடல் சார்ந்த.. அழகிய.. மறத்தமிழ் மண் அது. (தமிழினத் தலைவர் அவரில்லை என்று சொல்லும் டமிலர்ஸ்.. சாரி... திஸ் இஸ் நாட் ஃபார் யூ..)
கிராமத்து நாகரிகத்தை விஞ்சி "இதென்னடா கோதாரி" என்று ஒருத்தி (பாவம் அப்போ அவளுக்கு மிஞ்சி மிஞ்சிப் போனா பன்னிரண்டு வயதிருக்கும்) சலித்துக் கொண்டதற்கு, கிளாஸ் விட்டு வெளியில் அனுப்பப்பட்டாள். நிறையத் தடவை கேட்டிருந்தும் அந்தச் சொல்லின் அர்த்தம் இது வரை எனக்குத் தெரியவில்லை.. திட்டுவதற்குப் பயன்படுவது என்பது தவிர. சரி... இதை இங்கு சொல்ல வேண்டியதன் அவசியம் என்ன..?
அடிமைத்தனம் பற்றியோ.. விடுதலை பற்றியோ... போர் பற்றியோ... நான் கொஞ்சமும் அறிந்திராத வயதில்... அவ்வளவு கண்டிப்பான ஒரு ஆசான்.. தமிழினத் தலைவர் பெயர் சொல்லிச் சிலாகித்த சில நொடிகள் ஏனோ மனதில் ஆழமாகப் பதிந்து விட்டிருக்கிறது..! ஒரு மகாத்மா காந்தியையோ, ஆபிரகாம் லிங்கனையோ, விவேகானந்தரையோ அல்லது நாவலரையோ அவர் மேற்கோள் காட்டி இருக்கலாம்..
"அவன்" தாயிடமும், தந்தையிடமும் வாங்கிய வசவுகள் எத்தனை? ஆனால் இப்பொழுது இவர்கள் "அவனை"ப் பார்க்கச் சென்றால் மரியாதையுடன்தான் பேச வேண்டுமென்றார். இதைக் கேட்டபோது எதுவும் தோன்றவில்லை... ஆனால் இப்பொழுது... திரு. திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள்... அவர் தனயனை எவ்வாறெல்லாம் வைதிருப்பார் என்று கற்பனை விரிகிறது.. "அவனும் இருக்கான்... நீயும் இருக்கியேடா"... "உன்னைப் பெற்றதுக்கு ஒரு வாழைக்கன்றோ... தென்னம்பிள்ளையோ.."... "கழுதை.. குட்டிச்சுவர்.."... இன்னும்... என்னவெல்லாமோ... இருந்திருக்கலாம்..
"அவன்" உன் மகனாகப் பிறக்கும் பாக்கியம் கிட்டியிராவிடில்... இன்று நீயும்... வேடிக்கை மனிதரைப் போல்... உண்டு உறங்கி.. கதைகள் பேசி... நாலுபேர் சூழ... நாற்பது பேர் ஒப்பாரிக்கு மத்தியில்... பாடையில் ஏற்றப்பட்டிருப்பாய்.
ஆனால் இன்று.. உனக்காக இரத்தக் கண்ணீர் வடிக்கும் உயிர்கள் எத்தனை எத்தனை தெரியுமா..? இது உன் தனயனால் மட்டுமே ஆன சாத்தியம் என்பது... சத்தியம். நீ பெற்றதை... தமிழ் தத்தெடுத்துக் கொண்டது. கண்ணுக்குப் புலப்படாத மிக வலிமையான அடிமை விலங்குகள் மாட்டப்பட்டிருக்கும் தமிழை "அவன்" தத்தெடுத்துக் கொண்டான். குதறியெடுக்கும்.. நரி போன்ற "கோதாரி" விலங்குகள் மத்தியில்... ஒரு வேட்டைக்காரன்... படைத்தது வரலாறு...!
நம்மைப் போல் நாய்ப்பிழைப்பு உமக்கில்லை ஐயா... "..மகனைச் சான்றோன் எனக் கேட்ட தந்தையாக" நீர் தலை நிமிர்ந்து போகலாமையா அக்னி தேவனிடம்.
இப்பொழுது உன்னுடைய காற்பெருவிரல்களைப் பிடித்துக் கட்டிக்கொண்டிருக்கும்... அந்தச் சிறிய வெள்ளைத் துணியாக நான் இருக்க மனம் மிகவும் ஏங்கிப் போகிறது ஐயா..! இன்னொரு பிறவியிலும் இப்படி ஒரு பிள்ளையைக் கொண்டு வர.. தமிழ் செய்த புண்ணியம் ஏதாவது மிச்சமிருக்கிறதா பார்க்கலாம்... அப்பொழுது... அந்தத் துணியாக... நானும்..!
ஸ்பெஷல் இங்கிலீஷ் கிளாஸ் சுந்தரலிங்கம் மாஸ்டர் அவர்களை யாழ் இடுகையாளர்கள் சில..பல பேருக்குத் தெரிந்திருக்கும். டியர் என்றால் பெண், டேய் என்றால் ஆண் என்று ஆங்கிலம் கற்று வைத்திருந்தவர்களுக்கு ஷால் எங்கே, வில் எங்கே போன்ற நுணுக்கங்கள் கற்றுக் கொடுக்க முயற்சி செய்து கொண்டிருந்த மனிதர்.
அவரோட இங்கிலீஷ் ஸ்பெஷலோ இல்லையோ... அவர் பிறந்த இடம் ஸ்பெஷல். தமிழினத் தலைவர் பிறந்த... கடல் சார்ந்த.. அழகிய.. மறத்தமிழ் மண் அது. (தமிழினத் தலைவர் அவரில்லை என்று சொல்லும் டமிலர்ஸ்.. சாரி... திஸ் இஸ் நாட் ஃபார் யூ..)
கிராமத்து நாகரிகத்தை விஞ்சி "இதென்னடா கோதாரி" என்று ஒருத்தி (பாவம் அப்போ அவளுக்கு மிஞ்சி மிஞ்சிப் போனா பன்னிரண்டு வயதிருக்கும்) சலித்துக் கொண்டதற்கு, கிளாஸ் விட்டு வெளியில் அனுப்பப்பட்டாள். நிறையத் தடவை கேட்டிருந்தும் அந்தச் சொல்லின் அர்த்தம் இது வரை எனக்குத் தெரியவில்லை.. திட்டுவதற்குப் பயன்படுவது என்பது தவிர. சரி... இதை இங்கு சொல்ல வேண்டியதன் அவசியம் என்ன..?
அடிமைத்தனம் பற்றியோ.. விடுதலை பற்றியோ... போர் பற்றியோ... நான் கொஞ்சமும் அறிந்திராத வயதில்... அவ்வளவு கண்டிப்பான ஒரு ஆசான்.. தமிழினத் தலைவர் பெயர் சொல்லிச் சிலாகித்த சில நொடிகள் ஏனோ மனதில் ஆழமாகப் பதிந்து விட்டிருக்கிறது..! ஒரு மகாத்மா காந்தியையோ, ஆபிரகாம் லிங்கனையோ, விவேகானந்தரையோ அல்லது நாவலரையோ அவர் மேற்கோள் காட்டி இருக்கலாம்..
"அவன்" தாயிடமும், தந்தையிடமும் வாங்கிய வசவுகள் எத்தனை? ஆனால் இப்பொழுது இவர்கள் "அவனை"ப் பார்க்கச் சென்றால் மரியாதையுடன்தான் பேச வேண்டுமென்றார். இதைக் கேட்டபோது எதுவும் தோன்றவில்லை... ஆனால் இப்பொழுது... திரு. திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள்... அவர் தனயனை எவ்வாறெல்லாம் வைதிருப்பார் என்று கற்பனை விரிகிறது.. "அவனும் இருக்கான்... நீயும் இருக்கியேடா"... "உன்னைப் பெற்றதுக்கு ஒரு வாழைக்கன்றோ... தென்னம்பிள்ளையோ.."... "கழுதை.. குட்டிச்சுவர்.."... இன்னும்... என்னவெல்லாமோ... இருந்திருக்கலாம்..
"அவன்" உன் மகனாகப் பிறக்கும் பாக்கியம் கிட்டியிராவிடில்... இன்று நீயும்... வேடிக்கை மனிதரைப் போல்... உண்டு உறங்கி.. கதைகள் பேசி... நாலுபேர் சூழ... நாற்பது பேர் ஒப்பாரிக்கு மத்தியில்... பாடையில் ஏற்றப்பட்டிருப்பாய்.
ஆனால் இன்று.. உனக்காக இரத்தக் கண்ணீர் வடிக்கும் உயிர்கள் எத்தனை எத்தனை தெரியுமா..? இது உன் தனயனால் மட்டுமே ஆன சாத்தியம் என்பது... சத்தியம். நீ பெற்றதை... தமிழ் தத்தெடுத்துக் கொண்டது. கண்ணுக்குப் புலப்படாத மிக வலிமையான அடிமை விலங்குகள் மாட்டப்பட்டிருக்கும் தமிழை "அவன்" தத்தெடுத்துக் கொண்டான். குதறியெடுக்கும்.. நரி போன்ற "கோதாரி" விலங்குகள் மத்தியில்... ஒரு வேட்டைக்காரன்... படைத்தது வரலாறு...!
நம்மைப் போல் நாய்ப்பிழைப்பு உமக்கில்லை ஐயா... "..மகனைச் சான்றோன் எனக் கேட்ட தந்தையாக" நீர் தலை நிமிர்ந்து போகலாமையா அக்னி தேவனிடம்.
இப்பொழுது உன்னுடைய காற்பெருவிரல்களைப் பிடித்துக் கட்டிக்கொண்டிருக்கும்... அந்தச் சிறிய வெள்ளைத் துணியாக நான் இருக்க மனம் மிகவும் ஏங்கிப் போகிறது ஐயா..! இன்னொரு பிறவியிலும் இப்படி ஒரு பிள்ளையைக் கொண்டு வர.. தமிழ் செய்த புண்ணியம் ஏதாவது மிச்சமிருக்கிறதா பார்க்கலாம்... அப்பொழுது... அந்தத் துணியாக... நானும்..!
(தொடரும்...)
Tuesday, January 5, 2010
Monday, January 4, 2010
குடுகுடுப்பையாரின் துண்டு பீடியும்... முகிலனின் போமிக்ரேனட் மார்ட்டினியும்..
குடுகுடுப்பையாரின் தலைப்புக்கு எதிர்த் தலைப்பு முதல்ல...
அயுகி நொயுகி வியுந்த வாயைப்பயத்தை பயக்கவயக்கம் தெரியாத குயந்தை எடுத்து மயமயவென்று வியுங்கியது...!!! (நன்றி தமியாசான்..)
இது எதிர்க்கவுஜ மற்றும் எதிரெதிர்க் கவுஜ காக்டெயில்...
கருவாடு குவார்ட்டர்..
கோழிமுட்டை..
கொக்கரக்கோ..
கோழி கொக் கொக்..
காக்டெயில்..
துண்டுபீடி
வாவ்.. வவ்வாலு..
ச்சீ... நோ காப்பி...
பீடித்துண்டு வாலுவவ்வு..
'விக்கும்' பொழுது
கோக் கூட இல்லாது..
பை தடவி
பேனா மை குடித்து
விக்கல் அடக்கும்
கொடுமை
குடுகுடுப்பைக்கும்
வேண்டாம்...!!!
எதிர்க்கவுஜ இங்க...
எதிரெதிர்க்கவுஜ இங்க...
இதுக்கும் யாராவது ஓட்டு போட விரும்பினா... தமிழ்மணம்/தமிழிஷ்-ற்கு அனுப்பி ஓட்டுப் போடலாம்... =))... ஆட்சேபனையில்லை... ௦))
எதிரெதிரெதிரெதிரெதிர்க் கவுஜைக்கெல்லாம் வெயிட்டிங்கு.. =))
அயுகி நொயுகி வியுந்த வாயைப்பயத்தை பயக்கவயக்கம் தெரியாத குயந்தை எடுத்து மயமயவென்று வியுங்கியது...!!! (நன்றி தமியாசான்..)
இது எதிர்க்கவுஜ மற்றும் எதிரெதிர்க் கவுஜ காக்டெயில்...
கருவாடு குவார்ட்டர்..
கோழிமுட்டை..
கொக்கரக்கோ..
கோழி கொக் கொக்..
காக்டெயில்..
துண்டுபீடி
வாவ்.. வவ்வாலு..
ச்சீ... நோ காப்பி...
பீடித்துண்டு வாலுவவ்வு..
'விக்கும்' பொழுது
கோக் கூட இல்லாது..
பை தடவி
பேனா மை குடித்து
விக்கல் அடக்கும்
கொடுமை
குடுகுடுப்பைக்கும்
வேண்டாம்...!!!
எதிர்க்கவுஜ இங்க...
எதிரெதிர்க்கவுஜ இங்க...
இதுக்கும் யாராவது ஓட்டு போட விரும்பினா... தமிழ்மணம்/தமிழிஷ்-ற்கு அனுப்பி ஓட்டுப் போடலாம்... =))... ஆட்சேபனையில்லை... ௦))
எதிரெதிரெதிரெதிரெதிர்க் கவுஜைக்கெல்லாம் வெயிட்டிங்கு.. =))
Saturday, January 2, 2010
தொட்டில் பழக்க-வழக்கம்..
சமிபாடு
உமிழ்நீர்..
இரைப்பை..
செவிகளற்ற
செதிற்பாம்புகள்
இத்யாதி
இத்யாதி
பற்றியெல்லாம்
பாட்டனுக்கு
பாடமெடுத்தாலும்
நின்று சாப்பிடாத
கால்லதான் சேரும்..
இரவில விசில் அடிக்காத
பாம்பு வரும்..
பாட்டியின்
பலநூறு
பாடங்களை
பின்பற்றியபடி...
'அரவ'மற்ற
தேசத்திலும்
விசிலடித்து
விதிர்த்து
வெடுக்கென்று
பாதம் தூக்கி
விழிப்பதே
வழக்கமாயிருக்கிறது..!
___/\___
Friday, January 1, 2010
பதுங்குகுழிப் பயோடேட்டா..
- பெயர் - தமிழச்சி
- வயது - சொற்பம்
- படிப்பு - முடிக்கவில்லை
- மொழி - தமிழல்ல
- தகுதி - தகுதி அற்றிருப்பது
- தொழில் - அடிமை
- உபதொழில் - அடிமைக்குரல் எழுப்புவது
- பொழுதுபோக்கு - ஒப்பாரி
- தற்காலிக முகவரி - சிறை c/o முகாம்
- நிரந்தர முகவரி - எதுவுமில்லை
- பிறந்த இடம் - காணவில்லை
- பிரஜா உரிமை - தெரியாது
- மதம் - பௌத்தமல்லாதவை
- அங்க அடையாளம் - அங்கங்களற்றிருப்பது / அடையாளமற்றிருப்பது
- உடன்பிறப்பு - உயிருடன் இல்லை
- வேறு சொந்தங்கள் - செத்துவிட்டன
- சமீபத்திய சாதனை - பிணக்குவியல்கள் மத்தியில் புதைந்திருந்தது
- நிரந்தர சாதனை - அகதியாகி எங்கும் நிறைந்திருப்பது
- அதிர்ஷ்டம் - உணர்வற்றிருப்பது
- துரதிர்ஷ்டம் - உயிருடனிருப்பது
- பயம் - நிரந்தரம்
- நம்பிக்கை - புதைகுழிகள்
- பலம் - பதுங்கு குழிகளல்ல
- பலவீனம் - புல்லுருவிகள்
- ஆச்சரியம் - தமிழ் முனகல்கள்
- அதிர்ச்சி - அதிர்வற்றிருப்பது
- கவலை - வெளி அதிர்வுகள்
- நிம்மதி - வெடிச்சத்தம் இல்லாதது
- பிடித்தது - சனியன்
- பிடிக்காதது - அனைத்தும்
- பிடித்த பழமொழி - ஆறிலுஞ்சாவு நூறிலுஞ்சாவு
- பிடிக்காத பழமொழி - இட்ட உறவு எட்டு நாளைக்கு, நக்கின உறவு நாலு நாளைக்கு
Subscribe to:
Posts (Atom)