புலம்பிட்டே வந்து... இடைல நிறுத்திட்டேன்... என்ன எழுதுவது என்று எனக்கே தெரியவில்லை... எழுத ஆரம்பித்தாலே தொண்டை அடைத்துக் கொள்கிறது... எங்கேயோ தொலைந்துவிட்டது போன்ற உணர்வில் திகைப்பு மட்டுமே தோன்றுகிறது....
ஆனால்.... மக்கள் புலம்பாதிருக்க விட மாட்டேன் என்கிறார்கள்...
__________________________________________________________________
ஆக்கபூர்வமா ஒன்னும் செய்ய மாட்டேங்கிறாங்க... புதிய பாதை போடக் கடப்பாறையும்.... கல்லும் மண்ணும்... உருக்கி வச்ச தாரும்... கோடு போட லெட்சுமணனும் கூட ரெடி.... நிலத்தைத்தான் காணோம்... இப்போ பாதைய காத்தில போடுறதா...ஆகாசத்தில போடுறதான்னு புரியல... நீரில கூடப் போடலாம்... ம்ம்... நிலம்னா ஈஸி...
சரி என்ன பண்ணலாம்... நிலத்தைக் கண்டு புடிப்போம்... எப்டி.... எப்டின்னா... சிலோன சைனால இருந்து கொண்டு வந்து வச்சாங்களா... இந்தியாவில இருந்து துண்டு போட்டு வெட்டி விட்டாங்களா... சைனால இருந்து வந்தா அதில தமிழர்கள் இருந்தாங்களா.... சிங்களவர்கள் இருந்தாங்களா... இம்போர்ட்டட் ஃப்ரம் சைனான்னு எங்கயாவது கல்வெட்டுப் பொறிச்சு வச்சிருக்காங்களா... இங்க இருந்து ஆரம்பிக்கணும்...
அப்புறம்... நிலம் எப்டி காணாமப் போச்சு.... எங்க போச்சு... திரும்ப சைனாக்கே எடுத்துக் கொண்டு போனாங்களா... இல்ல அமெரிக்காக்கு எக்ஸ்போர்ட் பண்ணிட்டாங்களா.... எப்டிக் கண்டுபுடிக்கிறது... ஈழமக்கள் எல்லாரும் தூங்குறாங்க... அவங்கள எழுப்ப முடியாது... நாமதான் தேடனும்...
அந்த மண்ணில பிரபாகரன் அப்டின்னு ஒரு ஆள் இருந்தாரு... அவரு எங்க... இருக்காரா இல்லையா... அது கிடக்கட்டு... அப்போ.. அவர் யார் கிட்ட எங்க உக்காந்து காப்பி சாப்பிட்டாரு... என்ன பேசினாருன்னு பார்ப்போம்... எதனால கருணாவுக்கும்... கட்டையில போறவனுக்கும்... கருமாந்திரம் புடிச்சது... ஏன்னா அதும் பிரபாகரன் தப்புதான்... பிரபாகரன் கருணா கழுத்தில நாய்ச்சங்கிலி கட்டி வச்சிருந்திருக்கோணும்.... பண்ணலை... அதனாலதான் இப்டி ஆச்சு...
ராஜபக்ஸேயைப் பார்ப்போம்... அவன் எங்க இருந்து வந்தான்... நேரா சனிக்கிரகத்தில இருந்து குதிச்சானா... இல்ல ஒரிசாவில இருந்து வந்த சிங்கத்தோட வாரிசா... இல்ல டைனோசர் காலத்திலயே உருவாகிட்டாங்களா...
இப்டியே பேசிக்கிட்டே இருப்போம்... குழப்ப வேணாம்...
அம்மா செத்து ஒரு வருஷமாச்சு.... ஒரு பாட்டம் உக்காந்து புலம்புவோம்னு புலம்பினா.... ஜனங்க உலக அளவுக்குக் குழம்பிப் போறாங்க.... நாளைக்கு பிரபா பிறந்த நாளுக்கு இன்னொரு மூச்செடுத்து அழுதா... கோர்ட் கேஸுன்னு போனாலும் போவாங்க... அதெல்லாம் பண்ணப்டாது.... பிரபாகரன எங்க ஒளிச்சு வச்சிருக்காங்கன்னு தேட டார்ச் லைட் எடுத்துக்கிட்டு கிளம்பலாம்லன்னு தாலி அறுப்பாங்க... அவரின் ஒன்று விட்ட அக்கா... தங்க மகனே என்று புலம்பினால்.... பிரபாவைத் தங்க மகன் என்று சொல்வதன் மூலம்... மறைமுகமாக அவரைத் தாக்குவதாக அவருக்கே காது குத்தலாம்...
என்ன எழவு.... எல்லாரும் எல்லாம் புடுங்கலாம்.... அங்க பாரு... இந்தோனேசியால ஒரு செம்மறி ஆடு அதோட குட்டிய சிங்கமா வளர்த்திருக்கு.... பிறந்த உடனயே ஆட்டுக் குட்டியத் தூக்கிக் குரங்குக் கூட்டத்தில கொடுத்துட்டுது... அதனால அது சிங்கமா வளர்ந்திருக்கு.... மத்தவங்க எல்லாம் ஆடாட்டம் ஆட்டை வளர்த்தா இந்த நாடு உருப்படுமா... அப்டின்னு புரட்சி செய்யலாம்...
உன் கிட்ட ஒரு குட்டி இருக்கே... அத குரங்குக் கூட்டத்தில ஒப்படைக்கலயேன்னு கேட்டா.... அது என் கங்காருக்குட்டின்னு மடிக்குள்ள இடுக்கிக்கலாம்....
நிதர்சனம்... அப்டின்னு ஒரு எளவு இருக்கா இல்லையா.....
ஈழத்தில பிறந்தவங்க எல்லாருக்கும் பிரம்மை புடிச்சிருக்குன்னு சொன்னா... யாராவது இல்லைன்னு சொல்லப்போறியளா.... நான் சொல்றேன்... நான் இன்னும் அந்தப் பயங்கரக் கனவில இருந்து மீளலை.... எப்போல்லாம் பிரபாகரன நினைக்கறேனோ.... கதவைத் தாழ்ப்பா போட்டு விசும்பி விசும்பி அழுவேன்... எப்போ ஒரு குழந்தை தட்டை ஏந்திக்கிட்டு சோத்துக்கு வரிசைல நிக்கிற காட்சி வருதோ.... அப்பவும் அழுவேன்... தாய் மடில குழந்தையும்... குழந்தை மடில தாயும் மாறி மாறிச் செத்துக் கிடக்கிற காட்சி வர்றப்போ அழுவேன்....
ஆமாம்... நானும் தினமும் கஞ்சி குடிக்கிறேன்... உடுக்கிற உடுப்பு தோய்ச்சு, உலர்த்தி, அயர்ன் பண்ணித்தான் போட்டுக்கிறேன்... ராவணன் படம் பார்த்து விமர்சனம் எழுதுறேன்... வேற எதுவும் பிடுங்கலைதான்...
இப்போதான் இடி விழுந்து எல்லாம் பிரம்மை பிடிச்சு இருக்காங்க... அவங்கள எல்லாம் அடி அடின்னு அடிச்சு... ஓடிப்போய் இடி எப்டி வந்திச்சுன்னு பாரு... ஆகாசத்தில இருந்து வந்திச்சா... நிலத்தில இருந்து வந்திச்சா... இனிமே இடி விழாம இருக்கணும்னா என்ன செய்யணும்னு பாரு.... ஆகாசத்த புரட்டிப் போடலாமான்னு பாரு.... நிலத்த ஆகாசத்தில வைக்கலாமான்னு பாரு....
என்ன பேசிக்கிட்டிருக்காங்க மக்கள்...
அயலூரானுக்கு ஆத்தோரம் பயம்... உள்ளூரானுக்கு மரத்தடில பயம்...
___________________________________
அம்மா... என்னம்மா சொல்றாங்க... என்னம்மா நடக்குது அங்க...?! தெரியலடாம்மா.... இங்க ரூபவாஹினில காட்டிக்கொண்டே இருக்கிறாங்கள்... அந்தப் பிள்ளைய சாக்கொண்டு போட்டாங்களாம்.... படம் படமா போட்டுக் காட்டுறாங்கள்... இங்க எல்லாம் வெடிச்சுக் கொண்டாடுறாங்கள்.... எங்களயும் கொண்டாடச் சொல்லி வற்புறுத்துறாங்கள்....
என்னம்மா கதை மாதிரிச் சொல்றீங்க... இங்கயும் அப்டித்தான் பேசிக்கிறாங்க... அது எப்டி அவ்ளோ ஈஸியா சொல்றீங்க...
இல்லடாம்மா... இங்க இந்த ஒரு சானல்தான் வருது... அந்தப் பிள்ளை எங்களுக்காகப் பட்ட பாடு எவ்வளவு.... இங்க எல்லாருக்கும் கவலைதாண்டா.... ஆனா நாங்கள் என்னதான் செய்ய முடியும்... வாய் விட்டு அழக்கூட முடியாதுடா.. ஏதேதோ சொல்லுறாங்கள்... எதை நம்பறது எதை விடுறது ஒண்டும் விளங்கேல்ல.... நீங்கள் ஏதாவது சொன்னாத்தான் எங்களுக்கு நியூஸே தெரியுது... இல்லையெண்டா இவங்கள் சொல்லுறதக் கேட்டுக் கொண்டு... இங்க கிடந்து எமன் எப்ப வருவான் எண்டு பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்... வேற என்னத்தையடா சொல்றது.... ஃபோன்ல எதுவும் பேசவும் பயமா இருக்குடாம்மா.... வீட்டில ஒரு குமர்ப்பிள்ளை வேற இருக்குது...
ஹூம்... சரி வேற சொல்லுங்கோ....
______________________________ __
ஹாய்... தேனு... ஹவ் ஆர் யு டூயிங்.... ஹவ் இஸ் நியூஸிலாண்ட்....?!
ஓக்கேடி.... இட்ஸ் கோயிங்...
ஜஃப்னா போயிருந்தால்ல... அங்க எப்டி இருக்குன்னு கேக்கதான் ஃபோன் பண்ணேன்...
ம்ம்... சனங்கள் எல்லாம் நோர்மலா இருக்கினம்.. அதுகளுக்கு வெடிச்சத்தம் இல்லாம இருக்கிறதே பெரிய விஷயம் மாதிரி.... நிறைய கல்ச்சரல் சேஞ்ச் இருக்கு...
வவுனியா காம்ப்புக்குப் பேயிருந்தோம்... நமக்கு பிரச்சனை டைம்ல அங்க இருந்து மெடிகல் ஹெல்ப் கூடப் பண்ண முடியலயேன்னு மனசுக்கு ரொம்பக் கஷ்டமாப் போச்சு.... காம்ப்பில இருக்கிறவங்க கிட்டக் கேட்டா... அவங்கள் இப்ப இருக்கிற நிலமைல... அமைதிதான் தேவை அவங்களுக்கு.... ஒண்டும் வேண்டாம்... நிம்மதியா இருக்க விட்டா போதுமெண்டு அழுகை.... வெளிநாட்டில தமிழ்ச் சனங்கள் குரல் கொடுத்தா அவங்களுக்குதான் அடி விழுது... நாங்கள் பேசாம இருந்தாலே அவங்களுக்குச் செய்யுற நன்மையா அமையும்ன்னு நினைக்கிறாங்க.... ரொம்பப் பாதிக்கப்பட்டு இருக்காங்க..
ம்ம்... புரியுது... பிரபா..?!... நீ என்ன நினைக்கிற...
எனக்குத் தெரியேல்ல.... அந்தாள எல்லாரும் சேர்ந்து ஏமாத்திப் போட்டாங்கள்... அவர் சரியா ஏமாந்துட்டார் எண்டுதான் நினைக்கிறேன்... அந்தாளத் தனிமைப்படுத்தி தீவாக்கிட்டாங்க... அவருக்கு நிறைய விஷயம் தெரியாமலே போச்சு... எல்லாரயும் நம்பி ஏமாந்துட்டார்...
தொண்டைகள் அடைத்துக் கொள்ள... மௌனம் மொழியாகிறது...
______________________
வணக்கம் ப்ரியாக்கா எப்டி இருக்கீங்க... இண்டைக்கு மே 17... யாழ்ப்பாணத்தில கூட்டுப் பிரார்த்தனைன்னு போயிருந்தோம்... ஆர்மிக்காரங்கள் குவிஞ்சு நிக்கிறாங்கள்... அட்வைஸ் வேற... அதாவது ஒழுங்கா இருங்கோ இல்லைன்னா சுட்டுத் தள்ளிப்போடுவம் எண்டு....
_____________________
என்னையா செய்யச் சொல்றீங்க...?!!!!!!!! யார் என்ன செய்ய முடியும்...??!!!!
_____________________
||ஐக்கியநாடுகள் சபையின் முன்றலில் கவனயீர்ப்பு: சுவிஸ் ஈழத் தமிழரவை
அழைப்பு
மரணத்தை வெல்வோம்.
என்றென்றும் தணியாத விடுதலைத் தாகத்துடன் வாழ்ந்துவரும் எமது பேரன்பிற்கும்
பெருமதிப்பிற்கும் உரிய சுவிஸ் வாழ் தமிழ்த் தேசிய இன உறவுகள் அனைவருக்கும்
சுவிஸ் ஈழத் தமிழரவையின் விடுதலை வணக்கங்கள்.
மிகப்பெரும் நெருப்பாற்றைக் கடந்து மானுடமே வெட்கித் தலைகுனியும் விதத்தில்
சிங்கள இனவெறி அரசு நடாத்திய இனஅழிப்பின் அழியாத வடுக்களுடன் எமது விடுதலைக்கான
பயணம் களத்திலும் புலத்திலும் நகர்கிறது. சிங்கள இனவெறி அரசு தமிழர்களுக்கு
யூலையை கறுப்பாகவும் மேயை சிவப்பாகவும் மாற்றியுள்ளது.
இத்தகைய மிகப்பெரும் தமிழின அழிப்பின் ஒர்பகுதியை நடாத்திவிட்டு தமிழர்களின்
அறுபது வருடங்களுக்கும் மேலான சுதந்திரத்திற்கான போராட்டத்தை பிழையென உலக
அரங்கில் சித்தரித்து அடக்கி ஒடுக்கி தமிழ் இனத்தை வேரறுப்பதற்கு பாடுபட்டு
வருகிறது.
இப்படி தமிழர்கள் சிங்கள இனவெறி அரசால் வெந்திருக்க இம்முறை நடாத்தப்படும்
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்கான கூட்டத்தொடரில் சிறீலங்கா இனவெறி
அரசின் இன அழிப்பு மற்றும் போர்க்குற்றம் சார்ந்த எவ்வித விடயமும்
விவாதிக்கப் படாமல் திரு பான் கீ மூன் தலைமையிலான நிர்வாகம் வேண்டுமென்றே
மௌனித்து பக்கசார்பாக நடந்துகொள்வதுடன் உலகெங்கும் வாழும் தமிழினத்தை அவமானப்
படுத்தியுள்ளது.
இத் திட்டமிட்ட சதி நாடகத்தை உலகறியச் செய்வது தமிழர்களாகிய எமது வரலாற்றுக்
கடமை ஆகிறது.
எமது அன்பிற்கினிய மக்களே! சுவிஸ் ஈழத் தமிழரவை மற்றும் சுவிஸ் தமிழ் இளையோர்
அமைப்பினர் இணைந்து எதிர்வரும் ஆம்... ஆம்... ஆம் திகதிகளில் ஜெனிவா ஐநா
முற்றத்தில் பிற்பகல் 1 மணி தொடக்கம் மாலை 6 மணி வரை கண்டன ஒன்றுகூடலும் கவன
ஈர்ப்புப் போராட்டமும் நடாத்தவுள்ளோம்.
அனைத்து தமிழ்மக்களையும் பொது அமைப்புக்களையும் உணர்வோடு கலந்து கொள்ளுமாறு
சுவிஸ் ஈழத் தமிழரவையினராகிய நாங்கள் உரிமையுடன் வேண்டி நிற்கின்றோம்.\\\
_____________________________
இதைத்தான்... இருபது வருடங்களுக்கு மேலாகச் செய்து கொண்டே இருக்கிறார்கள்.... இதைத்தான் செய்ய முடியும்...
அல்லது.... நாலஞ்சு பேரைக் கூப்பிட்டு... இலங்கையில் தமிழரின் இன்றைய நிலவரம் என்று சொல்லி உட்கார்ந்து... பாருடியாத்த.... இப்டி ஆகிப்போச்சு.... அங்க அவ இப்டி சொல்றா... இவன் அப்டி சொல்றான்... என்ன கொடுமை... நாம யாருக்கு என்ன செஞ்சோம்ன்னு ஒப்பாரி வைக்கலாம்...
இப்படி எல்லாம் செய்யறத... சிலர் பதிவிட்டு.... புரட்சி பண்ணலாம்....ம்ம்ம்ம்.......!!!! லண்டனில் பேரணி... சுவிற்சர்லாந்தில் பேரணி...!!!! இப்டி பதிவு போட்டுட்டா... ரொம்பப் புரட்சி செய்து விட்டதாக அர்த்தம்....!!!!!! செய்யுங்க.... நாம பொத்திக்கிட்டு இருக்கோம்....
அதே மாதிரி...
தமிழன கொஞ்சம் ஓரமா உட்கார்ந்து அழ விடுங்க....கொஞ்சம் ஓய்வா உட்கார்ந்து அழட்டும்....
பனையால விழுந்தவன மாடேறி மிதிச்சதாம்னு... உங்க எழவுக்கெல்லாம் ஒரு அளவே இல்லையா... ?!
(இப்டிச் சொன்னாலே.... நான் கருணா கம்பனில காரியதரிசி வேலை பார்க்க போயிட்டேன்னு அர்த்தம்ம்ம்ம்....)
_________________________________________________
18 ஊக்கம்::
ம்ம். இந்த யதார்த்தத்தின் பின்னான வலியும், தவிப்பும், நிதர்சனமும், நேரடித் தகவலும் வார்த்தைக்கு வார்த்தை சத்தியம் சத்தியம் என்கிறது. புத்தகங்கள் படிக்கிறோம், ஊடகங்கள் கதை சொல்கின்றன. பார்த்துப் பார்த்து அழுததும், கேட்டுக் கேட்டுத் தவித்ததும், அதன் போலிகளையும், சுயத்தையும் தோலுரித்துக் காட்டுகிறது.
/மக்கள் புலம்பாதிருக்க விட மாட்டேன் என்கிறார்கள்... /
இதைப் படித்த பிறகு யாராவது புலம்பல் என்று சொல்லமுடியுமாம்மா? காலரில உக்காந்து ஆயிரம் சொல்லலாம். களத்தில இருந்து கடுகளவு கழித்தவங்களுக்குத் தெரியும் இது புலம்பல் இல்லை. ஆத்மாவின் அலறல் என்பது.
/ஈழத்தில பிறந்தவங்க எல்லாருக்கும் பிரம்மை புடிச்சிருக்குன்னு சொன்னா... யாராவது இல்லைன்னு சொல்லப் போறியளா..../
/இப்போதான் இடி விழுந்து எல்லாம் பிரம்மை பிடிச்சு இருக்காங்க... அவங்கள எல்லாம் அடி அடின்னு அடிச்சு... ஓடிப்போய் இடி எப்டி வந்திச்சுன்னு பாரு... ஆகாசத்தில இருந்து வந்திச்சா... நிலத்தில இருந்து வந்திச்சா... இனிமே இடி விழாம இருக்கணும்னா என்ன செய்யணும்னு பாரு.... ஆகாசத்த புரட்டிப் போடலாமான்னு பாரு.... நிலத்த ஆகாசத்தில வைக்கலாமான்னு பாரு....
என்ன பேசிக்கிட்டிருக்காங்க மக்கள்.../
பேச்சுத்தானே:). அதுக்கென்ன. பொட்டிமுன்ன உக்காந்தா எனக்குமே வீரம் பொங்கும். ஒரு ஆர்மியை எப்படி மடக்கி இருக்கணும்னு எல்லாம் தோணும். நாசமாப்போக, வெள்ளிக்கிழமை மாலை ஈழத்தில் உயிரிழந்தவருக்கு அஞ்சலின்னு படிச்சா, எங்க புடிச்சி சனி, ஞாயிறு உள்ள வச்சிருவானோ. 48 மணி நேரம் அரெஸ்ட்னா சஸ்பெண்ட் பண்ணிடுவானே. அப்புறம் நாயா அலையணுமேன்னு பயந்துகிட்டே வந்து சூடா ஒரு இடுகை, அவனைத் திட்டி இவனைத்திட்டி போட முடியும்.
//அயலூரானுக்கு ஆத்தோரம் பயம்... உள்ளூரானுக்கு மரத்தடில பயம்... //
இதான் நிதர்ஸனம்.
//அந்தப் பிள்ளைய சாக்கொண்டு போட்டாங்களாம்.... படம் படமா போட்டுக் காட்டுறாங்கள்... இங்க எல்லாம் வெடிச்சுக் கொண்டாடுறாங்கள்.... எங்களயும் கொண்டாடச் சொல்லி வற்புறுத்துறாங்கள்....
ஆனா நாங்கள் என்னதான் செய்ய முடியும்... வாய் விட்டு அழக்கூட முடியாதுடா.. ஏதேதோ சொல்லுறாங்கள்... எதை நம்பறது எதை விடுறது ஒண்டும் விளங்கேல்ல.... இங்க கிடந்து எமன் எப்ப வருவான் எண்டு பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்... வேற என்னத்தையடா சொல்றது.... ஃபோன்ல எதுவும் பேசவும் பயமா இருக்குடாம்மா.... வீட்டில ஒரு குமர்ப்பிள்ளை வேற இருக்குது... //
//கூட்டுப் பிரார்த்தனைன்னு போயிருந்தோம்... ஆர்மிக்காரங்கள் குவிஞ்சு நிக்கிறாங்கள்... அட்வைஸ் வேற... அதாவது ஒழுங்கா இருங்கோ இல்லைன்னா சுட்டுத் தள்ளிப்போடுவம் எண்டு.... //
இடையில் எத்தனை மாதங்கள்? எத்தனை கமிஷன்கள். எத்தனை பழிவாங்கல்கள். ஒரு தேர்தலுமே கூட. தமிழனில் மாற்றம்? எதுவுமில்லை. வலையத்துக்குள்ளும் வெளியிலும் பீதி மட்டுமே.
/தமிழன கொஞ்சம் ஓரமா உட்கார்ந்து அழ விடுங்க....கொஞ்சம் ஓய்வா உட்கார்ந்து அழட்டும்..//
ஆமாம். இதுமட்டுமாவது செய்யலாம்.:(
இருக்கற புண்ண ஆற விடுங்க.. மேல மேல போட்டுக் கீறாதீங்கன்னு சொல்லியிருக்கீங்கன்னு நினைக்கறேன்..
வேகமா எழுதியிருக்கீங்க போல.. யாரும் இதை தவறா புரிஞ்சிக்காம இருந்தா சரி தான்..
ப்ரியா.......தாங்க முடியலைம்மா.....உன் போன்று மௌனமாக அழக்கூடத் திராணியில்லாமல் எத்தனை உயிர்கள் வதைப்பட்டுக் கொண்டிருக்கிறதென்பதைத் தான் ஊடகங்கள் வழியாக பார்த்து, பார்த்து செய்வதறியாது நொந்து கொண்டிருக்கிறோமே.......இது எப்படியம்மா புலம்பலாகும்......சில நேரங்களில் அந்த கடவுள் ஏன் இப்படி கண்ணைக் கட்டிக் கொண்டு கல்லாகவே ஆகி விடுகிறான் என்றே புரியவில்லை.........
படித்து மனம் கனக்கிறது சகோதரி... ஆயிரம்தான் ஆறுதல்கள் சொன்னாலும் அது எந்த அளவிற்கு தேற்றும் என்பது பாதிக்கப்பட்டவர்களுக்கே தெரியும்.
பிரபாகர்...
மிக அருமையான பதிவு
http://denimmohan.blogspot.com/
mmm....more to say...later...
படித்து மனம் கனக்கிறது சகோதரி.
மிக அருமையான பதிவு.
கனக்கும் வரிகள் பல.....
முதலில் படித்தபோது, மனது கஷ்டமா இருந்தது. பேசாம படித்து விட்டு சென்று விட்டேன். தவிக்கும் உள்ளங்களின் மனநிலை புரிகிறது. நல்ல ஒரு சுமுகமான தீர்வுக்கு உங்களை போன்ற மக்களிடம் எனது பிரார்த்தனைகள்.
.... நான் இன்னும் அந்தப் பயங்கரக் கனவில இருந்து மீளலை.... எப்போல்லாம் பிரபாகரன நினைக்கறேனோ.... கதவைத் தாழ்ப்பா போட்டு விசும்பி விசும்பி அழுவேன்... எப்போ ஒரு குழந்தை தட்டை ஏந்திக்கிட்டு சோத்துக்கு வரிசைல நிக்கிற காட்சி வருதோ.... அப்பவும் அழுவேன்... தாய் மடில குழந்தையும்... குழந்தை மடில தாயும் மாறி மாறிச் செத்துக் கிடக்கிற காட்சி வர்றப்போ அழுவேன்......
ஆமாம் ....... இன்னும் பலபேர் அழுதுகொண்டு தான் இருக்கிறோம். இபோதைக்கு அதுதான் முடியும். ....... ஆனால்..... எல்லாமே மாறும்.... மனதின் எங்கோ ஒரு முலையில் நம்பிக்கை என்ற ஒளிகீற்று மட்டும் தான் இப்போது வாழ்வித்துகொண்டு இருக்கிறது.
வணக்கம் பிரியா, மொழி நன்றாக வருகிறது உங்களுக்கு.
நீண்ட நாள்களாக என் மனதில் இருக்கும் கடுமையான அழுத்தங்களை உங்கள் எழுத்தில் பிரதிபளிக்க கண்டேன். பல தருணங்களில் கடவுள் மீதே கடும் சினம் உண்டாகிறது. ஏன் ஏன் என்று பல கேள்விகளுக்கு பதில் இல்லை யாரிடமும். ஒரு சொரணை உணர்வும் இல்லாத இனத்தில் பிறந்த பாவத்தின் பலன் தான் இதெல்லாம் என நினைக்க தோண்டுகிறது. இன உணர்வு கூட வேண்டாம், மனித உணர்வு கூட மழுங்கிப்போன ஒரு சமுதாயத்தில் வாழ்வது......... மனதுக்குள்ளேயே மன்னிக்கமுடியவில்லை.
நக்கி பிழைக்கும் நாதாரிகள் கூட்டம் இருக்கும் வரை இந்த அவலங்களுக்கு விடிவு இல்லை.
உங்களின் பல இடுகைகள் புரிவதில்லை. இதில் என்ன சொல்ல வருகிறீர்கள் என அனுமானிக்கவும் தெரியவில்லை.
ஆனால்..........
நெஞ்செல்லாம் கனமாக வரும் பெருமுச்சும், இயலாமையின் வேதனை வலியும், கருணை இல்லா கருமாந்திர சமுகத்தின் மன்னிக்க முடியாத அமைதியையும், பரிதவிப்புடன் பார்ப்பதை தவிர்த்து வேறு எதுவும் செய்ய இயலாத பாவிகளாய் தான் இன்னும் இருக்கிறோம்.
ஐ.நா மன்றம் சீட்டாட்ட க்ளப். நாட்டமை தீர்ப்பை மாத்துன்னு கூட இல்லை, இப்பிடி தீர்ப்பு சொல்லுன்னு உள்ளூர் சண்டியரு சவுண்டு விட்டா வாய பொத்தி காலை நக்குற கும்பல் அது.
ஆனா, காலம் ரொம்ப வலிமையானது. அடிச்ச கல்லும் சுட்ட குண்டும் ஒரு நாள் அடிச்சவனுக்கும் சுட்டவனுக்குமே வரும். அது விதியில்லை, கயஸ் தியரி.
ஏஷியாவுல பாதி, யூரோப்ல பாதின்னு இருந்த சோவியத் யூனியன் இன்னைக்கு குப்பையா கூட இல்லை. ப்ரிட்டிஷ் அரசுன்னா இன்னைக்கு இந்த சின்ன தீவு மட்டும் தான். முகலாய பேரரசும், கெங்கிஸ்கானும் போன இடம் தெரியலை. ஊழல்ல புழுத்து அழுகிக்கிட்டு இருக்க உள்ளூர் சண்டியர் எவ்ளோ நாள்? நடக்கட்டும்.
போனவங்க போனவங்க தான். என்ன செஞ்சாலும் அவங்களுக்கு இனிமே எந்த பிரயோஜனமுமில்லை. ஆனா, அதோட வலி எப்படின்னு ஊழல் பெருச்சாளிங்களுக்கு ஒரு நாள் தெரியத் தான் போகுது.
என்ன சொல்லன்னு தெரியலை
ம் ம் ம்
நன்றி பாலா சார்..
நன்றி சந்தனா...
நன்றி நித்திலம்..
நன்றி அண்ணா..
நன்றி அது சரி... ரெண்டு இடுகை போட வேண்டிய மேட்டர்..
நன்றி குமார்..
நன்றி ஞானசேகரன்..
நன்றி சேது..
நன்றி V.R..
நன்றி ரோஷ்மா.. ம்ம்..
நன்றி Gene..
நன்றி முகிலன்..
நன்றி நர்சிம்...
Post a Comment