இறந்தகாலப் பெயரடை
கருமை நிறமும்
கூரிய அறிவும்
காக்கையின் அடையாளம்
இறந்தகால வினை முற்று
கற்பித்தது...
ஒற்றுமையின் இலக்கணம்
செய்வினை | செயற்பாட்டு வினை
எடுப்பார் கைப்பிள்ளை
எதிரிக்கும் ஒற்றராகும்
ஏதிலியாகிக் குற்றுயிராகும்
நிகழ்கால வினையெச்சம்
காக்கையின் தொட்டிலில்
கூவிக் கொண்டிருக்கின்றன
குயிலின் குழந்தைகள்
கூடுகள் தேடிக் கானகமெல்லாம்..
கரைந்து கரைந்தே
கரைந்து கொண்டிருக்கின்றன
கருவிழந்த காக்கைகள்
எதிர்கால ஏவல்வினை
கட்டுங்கள் வெட்டப்படும்
கரையுங்கள் கரைக்கப்படும்
கூவுங்கள் கொடுக்கப்படும்
___________________________________
கருமை நிறமும்
கூரிய அறிவும்
காக்கையின் அடையாளம்
இறந்தகால வினை முற்று
கற்பித்தது...
ஒற்றுமையின் இலக்கணம்
செய்வினை | செயற்பாட்டு வினை
எடுப்பார் கைப்பிள்ளை
எதிரிக்கும் ஒற்றராகும்
ஏதிலியாகிக் குற்றுயிராகும்
நிகழ்கால வினையெச்சம்
காக்கையின் தொட்டிலில்
கூவிக் கொண்டிருக்கின்றன
குயிலின் குழந்தைகள்
கூடுகள் தேடிக் கானகமெல்லாம்..
கரைந்து கரைந்தே
கரைந்து கொண்டிருக்கின்றன
கருவிழந்த காக்கைகள்
எதிர்கால ஏவல்வினை
கட்டுங்கள் வெட்டப்படும்
கரையுங்கள் கரைக்கப்படும்
கூவுங்கள் கொடுக்கப்படும்
___________________________________
39 ஊக்கம்::
ஆஹா! இப்படியும் இலக்கணம் படிக்கலாமோ!
/எடுப்பார் கைப்பிள்ளை
எதிரிக்கும் ஒற்றராகும்
ஏதிலியாகிக் குற்றுயிராகும் /
நறுக்!
/காக்கையின் தொட்டிலில்
கூவிக் கொண்டிருக்கின்றன
குயிலின் குழந்தைகள்
கூடுகள் தேடிக் கானகமெல்லாம்..
கரைந்து கரைந்தே
கரைந்து கொண்டிருக்கின்றன
கருவிழந்த காக்கைகள் //
ம்ம்ம்ம்ம்ம்ம். அருமைன்னு சொல்லத்தான் தோணுது. வலி தடுக்குது.
/கட்டுங்கள் வெட்டப்படும்
கரையுங்கள் கரைக்கப்படும்
கூவுங்கள் கொடுக்கப்படும்/
கூவினாலும் மறுக்கப்படும்:(
இந்தக் கொடுமையை கேட்க யாருமே இல்லையா?
நம்மளுக்கு இலக்கணம் அவளவா தெரியாதுங்க. ஆனா காக்காய பத்தி நீங்க சொல்றிருக்கற்து அத்தனயும் நிசங்க. மனுசங்க நாம கத்துக்க வேண்டியதுங்க அத்தனயும்.
கவுஜலயே கேக்கலாமா சஞ்சய்:)
எத்தனை வலிகள்...
எதிர்கால ஏவல்வினையாவது பலிக்கட்டும்..
////கூடுகள் தேடிக் கானகமெல்லாம்..
கரைந்து கரைந்தே
கரைந்து கொண்டிருக்கின்றன
கருவிழந்த காக்கைகள்
///////////
வலிகள் சுமக்கும் வார்த்தைகள் . அருமை . பகிர்வுக்கு நன்றி
எதிர்கால ஏவல்வினை நடக்கும்
//ஏதிலியாகிக் குற்றுயிராகும் //
(:
//கட்டுங்கள் வெட்டப்படும்
கரையுங்கள் கரைக்கப்படும்
கூவுங்கள் கொடுக்கப்படும்//
ம்ம்ம்...
நடக்கட்டும்
புதிய இலக்கணங்கள்.
இலக்கிய உவமையில்
ஈழத் தமிழன்.
கனக்கும் அழகு வரிகள் ப்ரியா.
//செய்வினை//
சரியான அர்த்தம் இன்று புரிந்தது!
ஆஹா! நல்லாருக்குங்க. இலக்கணமும் மீறலும்
நல்லாயிருக்குங்க!
துக்குஉள் ரிதிமா தேயுரிதெ...?
எழுவாய் தொக்கிக்கொண்டாவது நிற்கவேண்டும், காணவில்லையே? சரிதானா?
வந்தவர்... வராதவர்... பின்னூட்டியவர்... பின்னூட்டாதவர்.. ஓட்டுப் போட்டவர்... போடாதவர்... தமிழிஷுக்கு குத்தி... தமிழ்மணத்துக்கு குத்தாதவர்... தமிழ்மணத்துக்கு குத்தி தமிழிஷுக்கு குத்தாதவர்... இரண்டுக்குமே குத்தாதவர்... எல்லாருக்கும் நன்றிங்கோ...
வந்து தனித்தனியா பதில் சொல்லிக்கறேன்.. ஹி.. ஹி..
(அப்புக்"gud"done.. எங்கயோ பார்த்த பேரா இருக்கே...நீரும் ஓட்டுப் போடாம எஸ்ஸா... பெயரிலதான் குட்... வெரி வெரி பேட் மேன்..)
//
இறந்தகால வினை முற்று
கற்பித்தது...
ஒற்றுமையின் இலக்கணம்
//
வாழ்க்கையிலிருந்து இலக்கியம்...இலக்கியத்தில் இருந்து தான் இலக்கணம்!...புதிய வரையறைகள்..
மிகவும் அருமையான கவிதைன்னு சொல்ல முடியல.. அர்த்தம் வலி தரதால.. புரிஞ்சிப்பீங்கன்னு நினைக்கறேன்..
மூன்று விஷயங்கள் ஒன்னா... கால இலக்கணம் - காக்கா/குயில் - ஈழம்.. இதுல இலக்கண வார்த்தைகள் மட்டும் புரியல.. கூட மொழிபெயர்ப்பும் கொடுத்திருந்தா நல்லாயிருந்திருக்கும் .. மத்த ரெண்டும் நல்லா பொருந்தியிருக்கு..
//கட்டுங்கள் வெட்டப்படும்
கரையுங்கள் கரைக்கப்படும்
கூவுங்கள் கொடுக்கப்படும்//
இத நிறைய பேர் காக்கா அறைகூவல் விடுக்கற மாதிரி எடுத்துப்பாங்கன்னு நினைக்கறேன்.. எனக்கென்னமோ நீங்க நெகடிவ்வா முடிச்சிருக்கற மாதிரி இருக்கு :(
காலம் வரும் வரை, கரையாம, சத்தமில்லாம காத்திருக்கனும்.. முடிஞ்சா வேறு கானகத்துக்கு உயிர் தப்பி..
||வானம்பாடிகள் said...
ஆஹா! இப்படியும் இலக்கணம் படிக்கலாமோ!||
வெளங்கிரும்...
||வானம்பாடிகள் said...
/எடுப்பார் கைப்பிள்ளை
எதிரிக்கும் ஒற்றராகும்
ஏதிலியாகிக் குற்றுயிராகும் /
நறுக்!||
நன்றி சார்...
|| SanjaiGandhi™ said...
இந்தக் கொடுமையை கேட்க யாருமே இல்லையா?||
ஏன் கொடுமையக் கேக்க உங்களுக்கு இன்னும் லைஸன்ஸ் கிடைக்கலியா...
||இராமசாமி கண்ணண் said...
நம்மளுக்கு இலக்கணம் அவளவா தெரியாதுங்க. ஆனா காக்காய பத்தி நீங்க சொல்றிருக்கற்து அத்தனயும் நிசங்க. மனுசங்க நாம கத்துக்க வேண்டியதுங்க அத்தனயும்.||
அட... செரிதானுங்கோ... நன்றிங்க..
||க.பாலாசி said...
எத்தனை வலிகள்...
எதிர்கால ஏவல்வினையாவது பலிக்கட்டும்..||
அது பலிக்கும்... ஆனா சர்வநாசமாச்சே... :)
||!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
////கூடுகள் தேடிக் கானகமெல்லாம்..
கரைந்து கரைந்தே
கரைந்து கொண்டிருக்கின்றன
கருவிழந்த காக்கைகள்
///////////
வலிகள் சுமக்கும் வார்த்தைகள் . அருமை . பகிர்வுக்கு நன்றி||
நன்றி சங்கர்..
||VELU.G said...
எதிர்கால ஏவல்வினை நடக்கும்||
நடக்கட்டும்... அதுக்குதானே வழி பண்ணியிருக்கோம்..
||ஈரோடு கதிர் said...
//ஏதிலியாகிக் குற்றுயிராகும் //
(:
//கட்டுங்கள் வெட்டப்படும்
கரையுங்கள் கரைக்கப்படும்
கூவுங்கள் கொடுக்கப்படும்//
ம்ம்ம்...
நடக்கட்டும்||
நன்றி கதிர்...
||ராஜ நடராஜன் said...
புதிய இலக்கணங்கள்.||
நன்றி நடராஜன்..
||ஹேமா said...
இலக்கிய உவமையில்
ஈழத் தமிழன்.
கனக்கும் அழகு வரிகள் ப்ரியா||
நன்றி ஹேமா..
|| 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
//செய்வினை//
சரியான அர்த்தம் இன்று புரிந்தது!||
நன்றி ஷங்கர்...
||அப்புகுட்டன் said...
ஆஹா! நல்லாருக்குங்க. இலக்கணமும் மீறலும்||
நன்றி அப்பு..
||கயல் said...
நல்லாயிருக்குங்க!||
நன்றி கயல்..
||BIGLE ! பிகில் said...
துக்குஉள் ரிதிமா தேயுரிதெ...?||
அப்டியா..? உங்க டெக்னிக் நல்லாருக்குங்க... ஆனா எதுக்கு இவ்ளோ கஷ்டப்படறீங்க..
|| Rathi said...
எழுவாய் தொக்கிக்கொண்டாவது நிற்கவேண்டும், காணவில்லையே? சரிதானா?||
செரிதான்.. பயனிலை ஆதலால் முற்றும்.. :))
||
அது சரி said...
//
இறந்தகால வினை முற்று
கற்பித்தது...
ஒற்றுமையின் இலக்கணம்
//
வாழ்க்கையிலிருந்து இலக்கியம்...இலக்கியத்தில் இருந்து தான் இலக்கணம்!...புதிய வரையறைகள்..||
ம்ம்.. அப்டியா ப்ரோஃப்? நன்றி :o)..
//பயனிலை ஆதலால் முற்றும்//
எழுவாய் பற்றி கேட்டால் பயனிலை என்கிறீர்கள். எழுவாய், பயனிலை இரண்டுமின்றி செயற்படு பொருள் (ரெளத்திரம்??) மட்டும் பொருள் தருமா? எனக்கு இதெல்லாம் புரிவதில்லை. நீங்க நடத்துங்க. நானும், "முற்றும்". :)))
//காக்கையின் தொட்டிலில்
கூவிக் கொண்டிருக்கின்றன
குயிலின் குழந்தைகள்
கூடுகள் தேடிக் கானகமெல்லாம்..
கரைந்து கரைந்தே
கரைந்து கொண்டிருக்கின்றன
கருவிழந்த காக்கைகள் //
நல்லா இருக்கு ப்ரியா...இலக்கணத்தை இப்புடி சுட்டிக் காட்டிட்டீங்களே..
||Rathi said...
//பயனிலை ஆதலால் முற்றும்//
எழுவாய் பற்றி கேட்டால் பயனிலை என்கிறீர்கள். எழுவாய், பயனிலை இரண்டுமின்றி செயற்படு பொருள் (ரெளத்திரம்??) மட்டும் பொருள் தருமா? எனக்கு இதெல்லாம் புரிவதில்லை. நீங்க நடத்துங்க. நானும், "முற்றும்". :))||
நான் சொன்ன பயனிலை - சிலேடை - பயன் இல்லை... என்று சொன்னேன் ரதி... அப்புறம் ரௌத்ரம் அப்டிங்கிற சொல் நிறைய பேர டிஸ்டர்ப் பண்ற மாதிரி இருக்கே.. ஏன்.. எனக்கும் புரியல போங்க...
|| புலவன் புலிகேசி said...
//காக்கையின் தொட்டிலில்
கூவிக் கொண்டிருக்கின்றன
குயிலின் குழந்தைகள்
கூடுகள் தேடிக் கானகமெல்லாம்..
கரைந்து கரைந்தே
கரைந்து கொண்டிருக்கின்றன
கருவிழந்த காக்கைகள் //
நல்லா இருக்கு ப்ரியா...இலக்கணத்தை இப்புடி சுட்டிக் காட்டிட்டீங்களே..||
வாங்க புலிகேசி... ரொம்ப நன்றி..
Post a Comment