header photo

Saturday, June 26, 2010

உயிர்மனக்குரல்..

சுகமெவ்வகை சகி சுரக்கும் சிரிப்பினிடையனுப்பும் 
செய்தி சொடுக்கும் நொடியில் பிடியிந்தா நலமெனப்
புன்னகைத்தனுப்பும் மின்னல்விரைவஞ்சல் தாங்கிய
ஆனந்தக்கனம் தாங்காது விசும்பும் மனம் விகசித்து
அடங்கியமர்ந்து வேடிக்கை காட்டும் தருணம்.. 
உடலின் விளிம்புவரையெட்டியெட்டித் தொட்டுத்
தட்டியலையும் கண்ணாமூச்சியாட்டம் தாண்டும்
சொல்லாத எல்லை "செல்லாது"  வாவெனக் கூறி
மெல்லச் செல்லமாய்க் காதுபிடித்திழுத்திழுத்தமர்த்தும்
கருவிருப்பின் உயிரீர்ப்பு விசையின் திசைகாட்டும்
அருவுருவப் பலகையின் மேலொலிக்கும் அசரீரி
சுகமெவ்வகை சகி சகித்துச் சுகி சாகார சமயத்தில் 
சாகரித்திருக்கும் வினாடி வாழ்வெனும் நொடி... 

________________________________________________________________

திருநடமிடும் வாத்தியக் குயில்கள் மாதிரி ஒன்று வேணும் ப்ரியா, உரிமையுடன் கேட்கும் கயலுக்காக.. முயற்சி செய்தது.. 

________________________________________________________________

சில வருடங்களுக்கு முன் எனக்குத் தெரிந்த ஒரு ஆசானுக்கு எதிர்பாராத விதமாக cerebral haemorrhage ஏற்பட்டுச் சில வாரங்கள் கோமா நிலையிலிருந்து, முழுவதுமாக மீண்டு வந்து, சில வார்த்தைகள் பேசிக் கொண்டிருந்தார். வாழ்க்கை என்பது தூங்கி விழிப்பது போன்றது, நீங்கள் விழித்திருக்கும் ஒவ்வொரு நொடியும் "வாழுங்கள்" என்று சொன்ன அந்தக் குரலும்,, அதன் தொனியும் மறக்கக் கூடியதன்று.. 

||சாகார சமயத்தில் சாகரித்திருக்கும் வினாடி வாழ்வெனும் நொடி..|| சாகாரம் - துயிலெழுதல் , சாகரம் - விழித்திருத்தல்.. 

அன்று வீட்டிற்கு வந்த போது வாகனம் தவிர்த்து நடந்து வந்து கொண்டிருந்தேன்.. 

||சுகமெவ்வகை சகி சுரக்கும் சிரிப்பினிடையனுப்பும் 
செய்தி சொடுக்கும் நொடியில் பிடியிந்தா நலமெனப்
புன்னகைத்தனுப்பும் மின்னல்விரைவஞ்சல் தாங்கிய
ஆனந்தக்கனம் தாங்காது விசும்பும் மனம் || 

நமக்குள்ளேயே நடந்து கொண்டிருக்கும்.. குசல விசாரிப்புகள்.. சில சமயங்களில் அப்பட்டமாகக் கவனிக்கலாம்... அல்லது :o) ஏதோ கோளாறு காரணமாக... எனக்கு அது நிகழ்ந்து கொண்டிருக்கலாம்.. அதை வைத்து உங்களை இவ்வாறு இம்சை செய்யலாம்.. ம்ம்.. 
________________________________________________________________

49 ஊக்கம்::

அது சரி(18185106603874041862) said...

//
செய்தி சொடுக்கும் நொடியில் பிடியிந்தா நலமெனப்
புன்னகைத்தனுப்பும் மின்னல்விரைவஞ்சல்
//

சொடுக்கும் நொடியில் பிடியிந்தா...

வார்த்தை பிரயோகம் சொல்லும் கரு போலவே...மிக வேகம்...

அது சரி(18185106603874041862) said...

//

சுகமெவ்வகை சகி சகித்துச் சுகி சாகார சமயத்தில்
சாகரித்திருக்கும் வினாடி வாழ்வெனும் நொடி...
//

சகி...சகித்து சுகி...

சில நேரங்களில் சகிப்பில் தான் அடங்கியிருக்கிறது சுகிப்பு...சகிப்பே இல்லாத வாழ்க்கையில் சுகிப்பும் இல்லை..

//
சாகார சமயத்தில்
சாகரித்திருக்கும் வினாடி வாழ்வெனும் நொடி.
//

நீளமான கனவில் நான் துயிலாதிருக்கும் சில கனவுகளில் வந்து போகும் காட்சியின் எஞ்சிப் போன பிம்பங்கள்...என்றைக்காவது தோன்றலாம்...அது தான் அதுவென்று..

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

//சுகமெவ்வகை சகி சகித்துச் சுகி சாகார சமயத்தில்
சாகரித்திருக்கும் வினாடி வாழ்வெனும் நொடி..//

அருமையான வரிகள்.. விளக்கத்திற்கு நன்றி..

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

//அல்லது :o) ஏதோ கோளாறு காரணமாக... எனக்கு அது நிகழ்ந்து கொண்டிருக்கலாம்.. //

இருக்கலாம்.. :))

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

சுகமெவ்வகை சகி சுரக்கும் சிரிப்பினிடையனுப்பும்
செய்தி சொடுக்கும் நொடியில் பிடியிந்தா நலமெனப்
புன்னகைத்தனுப்பும் மின்னல்விரைவஞ்சல் தாங்கிய
ஆனந்தக்கனம் தாங்காது விசும்பும் மனம்
//

ஆகா.. தமிழல இப்படியெல்லாம் எழுதமுடியுமா மேடம்?..
வாவ்...

( புரிஞ்சமாறி இருக்கு..எதுக்கும் இன்னொரு முறை படிக்கிறேன்..)

Chitra said...

வாழ்க்கை என்பது தூங்கி விழிப்பது போன்றது, நீங்கள் விழித்திருக்கும் ஒவ்வொரு நொடியும் "வாழுங்கள்" என்று சொன்ன அந்தக் குரலும்,, அதன் தொனியும் மறக்கக் கூடியதன்று..

.... ஆழமான கருத்து. அருமை.

Jey said...

என் வூட்டுக்கு வந்தா உங்களுக்கு இலவச கவுஜ புக் காத்திகிட்டு இருக்கு மேடம். ( டிஸ்கி படிக்கவும்) :)

vasu balaji said...

அம்மாடி! காலையில மனசு நிறைய நிரைய, கண்ணும்..வார்த்தைக்கு சக்தி உண்டு..இந்தக் கவிதை அதுக்கு நிரூபணம். அல்லது நீ சொன்னா மாதிரி
“ அல்லது :o) ஏதோ கோளாறு காரணமாக... எனக்கும் அது நிகழ்ந்து கொண்டிருக்கலாம்..”

vasu balaji said...

’’சுகமெவ்வகை சகி சுரக்கும் சிரிப்பினிடையனுப்பும்
செய்தி சொடுக்கும் நொடியில் பிடியிந்தா நலமெனப்
புன்னகைத்தனுப்பும் மின்னல்விரைவஞ்சல்”

திருநடமிடும் வார்த்தைக் குயில்கள். இது பாட்டா, கவிதையா, அலையா, சூறாவளியா, தென்றலா, நதியா? ம்ம்ம்

vasu balaji said...

//தாங்கியஆனந்தக்கனம் தாங்காது விசும்பும் மனம் விகசித்துஅடங்கியமர்ந்து வேடிக்கை காட்டும் தருணம்.. உடலின் விளிம்புவரையெட்டியெட்டித் தொட்டுத்தட்டியலையும் கண்ணாமூச்சியாட்டம் தாண்டும்சொல்லாத எல்லை "செல்லாது" வாவெனக் கூறிமெல்லச் செல்லமாய்க் காதுபிடித்திழுத்திழுத்தமர்த்தும்கருவிருப்பின்//

ஒரு தேர்ந்த கண்டக்டரின் கைக்குச்சி அசைவுக்கு அலைஅலையாய்ப் பெருகும் இசை வெள்ளம் மனதில். படிக்கும் சொற்கள் கைக்குச்சி. எழும் உணர்வு இசை.

vasu balaji said...

//சகி சகித்துச் சுகி சாகார சமயத்தில் சாகரித்திருக்கும் வினாடி வாழ்வெனும் நொடி... //

பேஹாக் தில்லானா மாதிரி இருக்கு.

vasu balaji said...

//சாகார சமயத்தில் சாகரித்திருக்கும் வினாடி வாழ்வெனும் நொடி... //

இது சாதாரண வரியில்லை. ஜாக்ரத்துக்கும் ஸ்வப்னத்துக்குமான ஒரு அவஸ்தை.:((. வாழ்க்கையின் மொத்த விளக்கமும் இதற்கு நடுவில். Its simply great. Thank you for this ecstasy.

க.பாலாசி said...

நல்லதாப்போச்சு... கொஞ்சமாச்சும் விளக்கம் சொன்னீங்களே... நன்றிங்கா...

மணிஜி said...

வார்த்தை பிரயோகம் ..பிரவாகம்..வாழ்த்துக்கள் ப்ரியா

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

Blogger வானம்பாடிகள் said...

’’சுகமெவ்வகை சகி சுரக்கும் சிரிப்பினிடையனுப்பும்
செய்தி சொடுக்கும் நொடியில் பிடியிந்தா நலமெனப்
புன்னகைத்தனுப்பும் மின்னல்விரைவஞ்சல்”

திருநடமிடும் வார்த்தைக் குயில்கள். இது பாட்டா, கவிதையா, அலையா, சூறாவளியா, தென்றலா, நதியா? ம்ம்ம்
//

என்ன பாஸ் ஆளாளுக்கு பயமுறுத்திரீங்க..

( படி..படின்னு எங்கப்பா அப்பவே சொன்னார்.. கேட்கலையே..

இப்ப பாருங்க ..ஒன்ணுமே புரியாம(?)!!!!..

போங்க சார்...)

Katz said...

வார்த்தைகளில் பயமூட்டுறீங்க

கயல் said...

என்ன அழகான கவிதை பிரியா!
//
ஆனந்தக்கனம் தாங்காது விசும்பும் மனம் விகசித்து
//

அருமை அருமை!

//
கருவிருப்பின் உயிரீர்ப்பு விசையின் திசைகாட்டும்
அருவுருவப் பலகையின் மேலொலிக்கும் அசரீரி
சுகமெவ்வகை சகி சகித்துச் சுகி சாகார சமயத்தில்
சாகரித்திருக்கும் வினாடி வாழ்வெனும் நொடி...
//

அடடா! அழகோ அழகு!

இத்தனை வார்த்தைச் செறிவுடன் அழுத்தமான ஒரு கவிதை! மிகவும் ஆனந்தம்

விகசித்து - அறுவுருவம் -சகாரித்து

விளையாடிட்டீங்க போங்க!

மிக்க நன்றி!

கயல் said...

என் உயிர் தொட்டது உங்கள் உயிர்மனக்குரல். இத்தனை அழகான கவிதைக்கு நன்றி!

பா.ராஜாராம் said...

ரொம்ப நல்லாருக்கு ப்ரியா!

ஈரோடு கதிர் said...

||க.பாலாசி said...
நல்லதாப்போச்சு... கொஞ்சமாச்சும் விளக்கம் சொன்னீங்களே... நன்றிங்கா... ||

உன்ற அலும்பு தாங்கலய்யா

Bibiliobibuli said...

ஆஹா.. ஆஹாஹா .. செம்மொழி effect தெரியுதே!! செம்மொழி மாநாட்டில் தமிழ் வளர்த்துவிட்டு வந்த கையோடு புறநானூற்று செய்யுள் மாதிரி எழுதினா ஒண்ணுமே புரியல.

அறிஞர் குழாமுக்கு மட்டும் எழுதாமல் பாமரனுக்கும் சேர்த்து பாட்டு படியுங்களேன்.

Unknown said...

//சாகாரம் - துயிலெழுதல் , சாகரம் - விழித்திருத்தல்.//

எந்த மொழியில?

vasu balaji said...

முகிலன் said...
//சாகாரம் - துயிலெழுதல் , சாகரம் - விழித்திருத்தல்.//

எந்த மொழியில?//

ஆஹா! எளக்கியம் கேக்குற கேள்வியா இது. தமிழ்தேன்! tamilvu.org தமிழ் அகரமுதலி :-

சாகாரம் -- துயிலொழித்தல்
சாகரம் -- விழித்திருக்கை

அது சரி(18185106603874041862) said...

//
வானம்பாடிகள் said...
முகிலன் said...
//சாகாரம் - துயிலெழுதல் , சாகரம் - விழித்திருத்தல்.//

எந்த மொழியில?//

ஆஹா! எளக்கியம் கேக்குற கேள்வியா இது. தமிழ்தேன்! tamilvu.org தமிழ் அகரமுதலி :-

சாகாரம் -- துயிலொழித்தல்
சாகரம் -- விழித்திருக்கை
June 26, 2010 11:44 PM
//

சரியான கேள்வி..

முகிலன் (எ) போலிப் பாண்டியனை உடனடியாக குஜமுகவின் அனைத்துப் பொறுப்புகளிலும் இருந்து நீக்குமாறு கோரிக்கை விடுக்கிறேன். தலைமறைவாக இருக்கும் குடுகுடுப்பை எதிர்கவுஜ போடும் முன் நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்கிறேன்...

Unknown said...

//முகிலன் said...
//சாகாரம் - துயிலெழுதல் , சாகரம் - விழித்திருத்தல்.//

எந்த மொழியில?//

ஆஹா! எளக்கியம் கேக்குற கேள்வியா இது. தமிழ்தேன்! tamilvu.org தமிழ் அகரமுதலி :-

சாகாரம் -- துயிலொழித்தல்
சாகரம் -- விழித்திருக்கை//

தெரியும் பாஸ், சும்மா ஜாலிக்குக் கேட்டேன்.. (மேல சொன்னதுல எத்தன வார்த்தை தமிழ்?) :)

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

அழகான கவிதைக்கு நன்றி!

கலகலப்ரியா said...

||அது சரி said...
//
செய்தி சொடுக்கும் நொடியில் பிடியிந்தா நலமெனப்
புன்னகைத்தனுப்பும் மின்னல்விரைவஞ்சல்
//

சொடுக்கும் நொடியில் பிடியிந்தா...

வார்த்தை பிரயோகம் சொல்லும் கரு போலவே...மிக வேகம்...||

ம்ம்.. நன்றி அதுசரி..

கலகலப்ரியா said...

||அது சரி said...
//

சுகமெவ்வகை சகி சகித்துச் சுகி சாகார சமயத்தில்
சாகரித்திருக்கும் வினாடி வாழ்வெனும் நொடி...
//

சகி...சகித்து சுகி...

சில நேரங்களில் சகிப்பில் தான் அடங்கியிருக்கிறது சுகிப்பு...சகிப்பே இல்லாத வாழ்க்கையில் சுகிப்பும் இல்லை..

//
சாகார சமயத்தில்
சாகரித்திருக்கும் வினாடி வாழ்வெனும் நொடி.
//

நீளமான கனவில் நான் துயிலாதிருக்கும் சில கனவுகளில் வந்து போகும் காட்சியின் எஞ்சிப் போன பிம்பங்கள்...என்றைக்காவது தோன்றலாம்...அது தான் அதுவென்று.||

ம்ம்.. எதுதான் எதுவென்று.. இப்டி புதிர் போட்டா கஷ்டம்டா சாமீ.. (இத நானே சொல்றேன்னு எனக்கும் கஷ்டமாதான் இருக்கு என்ன பண்ண..)

கலகலப்ரியா said...

||எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...
//சுகமெவ்வகை சகி சகித்துச் சுகி சாகார சமயத்தில்
சாகரித்திருக்கும் வினாடி வாழ்வெனும் நொடி..//

அருமையான வரிகள்.. விளக்கத்திற்கு நன்றி..||

நன்றி சந்தனா..

கலகலப்ரியா said...

||எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...
//அல்லது :o) ஏதோ கோளாறு காரணமாக... எனக்கு அது நிகழ்ந்து கொண்டிருக்கலாம்.. //

இருக்கலாம்.. :)||

கன்ஃபர்ம் பண்றியளோ.. இருக்கட்டு இருக்கட்டு..

கலகலப்ரியா said...

||பட்டாபட்டி.. said...
சுகமெவ்வகை சகி சுரக்கும் சிரிப்பினிடையனுப்பும்
செய்தி சொடுக்கும் நொடியில் பிடியிந்தா நலமெனப்
புன்னகைத்தனுப்பும் மின்னல்விரைவஞ்சல் தாங்கிய
ஆனந்தக்கனம் தாங்காது விசும்பும் மனம்
//

ஆகா.. தமிழல இப்படியெல்லாம் எழுதமுடியுமா மேடம்?..
வாவ்...

( புரிஞ்சமாறி இருக்கு..எதுக்கும் இன்னொரு முறை படிக்கிறேன்..)||

ரொம்ப நன்றி பட்டாபட்டி..

கலகலப்ரியா said...

||Chitra said...
வாழ்க்கை என்பது தூங்கி விழிப்பது போன்றது, நீங்கள் விழித்திருக்கும் ஒவ்வொரு நொடியும் "வாழுங்கள்" என்று சொன்ன அந்தக் குரலும்,, அதன் தொனியும் மறக்கக் கூடியதன்று..

.... ஆழமான கருத்து. அருமை||

நன்றி சித்ரா..

கலகலப்ரியா said...

||Jey said...
என் வூட்டுக்கு வந்தா உங்களுக்கு இலவச கவுஜ புக் காத்திகிட்டு இருக்கு மேடம். ( டிஸ்கி படிக்கவும்) :)||

நன்றி ஜெய்..

கலகலப்ரியா said...

||வானம்பாடிகள் said...
அம்மாடி! காலையில மனசு நிறைய நிரைய, கண்ணும்..வார்த்தைக்கு சக்தி உண்டு..இந்தக் கவிதை அதுக்கு நிரூபணம். அல்லது நீ சொன்னா மாதிரி
“ அல்லது :o) ஏதோ கோளாறு காரணமாக... எனக்கும் அது நிகழ்ந்து கொண்டிருக்கலாம்..||

நன்றி சார்... ம்ம்..

கலகலப்ரியா said...

|| வானம்பாடிகள் said...
’’சுகமெவ்வகை சகி சுரக்கும் சிரிப்பினிடையனுப்பும்
செய்தி சொடுக்கும் நொடியில் பிடியிந்தா நலமெனப்
புன்னகைத்தனுப்பும் மின்னல்விரைவஞ்சல்”

திருநடமிடும் வார்த்தைக் குயில்கள். இது பாட்டா, கவிதையா, அலையா, சூறாவளியா, தென்றலா, நதியா? ம்ம்ம்||

ஆ... ரொம்பப் புகழ்றீங்க சார்.. அவ்வ்வ்..

கலகலப்ரியா said...

||வானம்பாடிகள் said...
//தாங்கியஆனந்தக்கனம் தாங்காது விசும்பும் மனம் விகசித்துஅடங்கியமர்ந்து வேடிக்கை காட்டும் தருணம்.. உடலின் விளிம்புவரையெட்டியெட்டித் தொட்டுத்தட்டியலையும் கண்ணாமூச்சியாட்டம் தாண்டும்சொல்லாத எல்லை "செல்லாது" வாவெனக் கூறிமெல்லச் செல்லமாய்க் காதுபிடித்திழுத்திழுத்தமர்த்தும்கருவிருப்பின்//

ஒரு தேர்ந்த கண்டக்டரின் கைக்குச்சி அசைவுக்கு அலைஅலையாய்ப் பெருகும் இசை வெள்ளம் மனதில். படிக்கும் சொற்கள் கைக்குச்சி. எழும் உணர்வு இசை||

அவ்வ்வ்வ்... ரொம்ப நன்றி சார்..

கலகலப்ரியா said...

||வானம்பாடிகள் said...
//சகி சகித்துச் சுகி சாகார சமயத்தில் சாகரித்திருக்கும் வினாடி வாழ்வெனும் நொடி... //

பேஹாக் தில்லானா மாதிரி இருக்கு||

கிழிஞ்சது..

கலகலப்ரியா said...

||வானம்பாடிகள் said...
//சாகார சமயத்தில் சாகரித்திருக்கும் வினாடி வாழ்வெனும் நொடி... //

இது சாதாரண வரியில்லை. ஜாக்ரத்துக்கும் ஸ்வப்னத்துக்குமான ஒரு அவஸ்தை.:((. வாழ்க்கையின் மொத்த விளக்கமும் இதற்கு நடுவில். Its simply great. Thank you for this ecstasy.||

ம்ம்.. :(... நன்றி சார்..

கலகலப்ரியா said...

||க.பாலாசி said...
நல்லதாப்போச்சு... கொஞ்சமாச்சும் விளக்கம் சொன்னீங்களே... நன்றிங்கா...||

நன்றி பாலாசி..

கலகலப்ரியா said...

||மணிஜீ...... said...
வார்த்தை பிரயோகம் ..பிரவாகம்..வாழ்த்துக்கள் ப்ரியா||

நன்றி மணிஜி.. :)

கலகலப்ரியா said...

||பட்டாபட்டி.. said...
Blogger வானம்பாடிகள் said...

’’சுகமெவ்வகை சகி சுரக்கும் சிரிப்பினிடையனுப்பும்
செய்தி சொடுக்கும் நொடியில் பிடியிந்தா நலமெனப்
புன்னகைத்தனுப்பும் மின்னல்விரைவஞ்சல்”

திருநடமிடும் வார்த்தைக் குயில்கள். இது பாட்டா, கவிதையா, அலையா, சூறாவளியா, தென்றலா, நதியா? ம்ம்ம்
//

என்ன பாஸ் ஆளாளுக்கு பயமுறுத்திரீங்க..

( படி..படின்னு எங்கப்பா அப்பவே சொன்னார்.. கேட்கலையே..

இப்ப பாருங்க ..ஒன்ணுமே புரியாம(?)!!!!..

போங்க சார்..||

ஆகா.. ம்ம்... விளக்க உரை எழுதலாம்.. எழுதினா அதோட அழகு போய்டுமோன்னு பயம்மா இருக்கு..

கலகலப்ரியா said...

||வழிப்போக்கன் said...
வார்த்தைகளில் பயமூட்டுறீங்க||

நன்றி வழிப்போக்கன்..

கலகலப்ரியா said...

||கயல் said...
என்ன அழகான கவிதை பிரியா!
//
ஆனந்தக்கனம் தாங்காது விசும்பும் மனம் விகசித்து
//

அருமை அருமை!

//
கருவிருப்பின் உயிரீர்ப்பு விசையின் திசைகாட்டும்
அருவுருவப் பலகையின் மேலொலிக்கும் அசரீரி
சுகமெவ்வகை சகி சகித்துச் சுகி சாகார சமயத்தில்
சாகரித்திருக்கும் வினாடி வாழ்வெனும் நொடி...
//

அடடா! அழகோ அழகு!

இத்தனை வார்த்தைச் செறிவுடன் அழுத்தமான ஒரு கவிதை! மிகவும் ஆனந்தம்

விகசித்து - அறுவுருவம் -சகாரித்து

விளையாடிட்டீங்க போங்க!

மிக்க நன்றி||

ரொம்ப நன்றி கயல்..

கலகலப்ரியா said...

|| கயல் said...
என் உயிர் தொட்டது உங்கள் உயிர்மனக்குரல். இத்தனை அழகான கவிதைக்கு நன்றி!||

மோட்டிவேஷனுக்கு உங்களுக்கு நன்றி கயல்..

கலகலப்ரியா said...

||பா.ராஜாராம் said...
ரொம்ப நல்லாருக்கு ப்ரியா||

நன்றி பா.ரா.

கலகலப்ரியா said...

||ஈரோடு கதிர் said...
||க.பாலாசி said...
நல்லதாப்போச்சு... கொஞ்சமாச்சும் விளக்கம் சொன்னீங்களே... நன்றிங்கா... ||

உன்ற அலும்பு தாங்கலய்யா||

நன்றி கதிர்.. வருகைக்கு... :o)

கலகலப்ரியா said...

||Rathi said...
ஆஹா.. ஆஹாஹா .. செம்மொழி effect தெரியுதே!! செம்மொழி மாநாட்டில் தமிழ் வளர்த்துவிட்டு வந்த கையோடு புறநானூற்று செய்யுள் மாதிரி எழுதினா ஒண்ணுமே புரியல.

அறிஞர் குழாமுக்கு மட்டும் எழுதாமல் பாமரனுக்கும் சேர்த்து பாட்டு படியுங்களேன்.||

நன்றி ரதி.. இது அறிஞர் குழாமுக்கு இல்ல ரதி.. இது ஆத்மாவுக்கு.. ஆத்ம ஸ்நேகத்துக்குன்னும் சொல்லலாம்..

தொட்டாசிணுங்கி எல்லாம் படிச்சா இப்பூடிச் சொல்ல முடியுமா... அவ்வ்வ்... அறிஞர் குழாமுக்கு இது மட்டும்தான் கண்ணில படுதோ.. அவ்வ்...

கலகலப்ரியா said...

|| முகிலன் said...
//சாகாரம் - துயிலெழுதல் , சாகரம் - விழித்திருத்தல்.//

எந்த மொழியில?||

எனக்குத் தெரிஞ்சு தமிழ்தான்..

நான் படிச்ச ஊர்ல... கதிரை, வாங்கில், அலமாரி எல்லாம் தமிழ் மொழியாத்தான் கற்றோம்.. அதே மாதிரி இந்த வார்த்தைகள் தமிழுக்கு எந்த மொழிகளிலிருந்து வந்தன என்றும் சொல்லிக் கொடுத்தார்கள்..

அதே மாதிரி... உண்மைக்கு ஒத்த கருத்துச் சொல் சத்தியம்... சத்தியம் சுத்தத் தமிழா என்று கேட்டால் வாதாடக் கூடிய திறமை எனக்கில்லை...

அதே மாதிரி... சாகரமும்.. சாகாரமும்.. எனக்குத் தமிழ்.. எந்த மூலம் என்று தெரிந்து சொன்னால் நானும் தெரிந்து கொள்கிறேன்..

மீண்டும் நன்றி..

கலகலப்ரியா said...

||ஜெஸ்வந்தி said...
அழகான கவிதைக்கு நன்றி!||

நன்றி ஜெஸ்வந்தி..