header photo

Tuesday, June 22, 2010

தொட்டாச்சிணுங்கி..

சிணுங்குமெனத் தெரிந்திராத 
சீண்டலிலில்லை நஞ்சம்
மலருமெனத் தொடரும் 
மழலைத் தீண்டலுக்கும்
தெரிவதில்லை மூலம் 

நிலத்திற் புரளும் சிறு
நாலுமணிப் பூவிடம்
தலை சாய்த்து 
நலம் கேட்கும்
நந்தியாவட்டையின் 
நிட்களங்கம் 
அறிவீரா..  

ஏறி நின்று
கீறி விடுதலல்ல 
செறி நட்பு
சிணுங்கியது 
மலரும்வரை 
புலனடக்கிப் 
புலர்ந்திருப்பது
நட்பூ... 

_______________________________

50 ஊக்கம்::

vasu balaji said...

வாவ்! சின்னதாய்ப் பெரிதாய்ப் பாராட்டும் நட்பூ!

vasu balaji said...

/நிலத்திற் புரளும் சிறுநாலுமணிப் பூவிடம்தலை சாய்த்து நலம் கேட்கும்நந்தியாவட்டையின் நிட்களங்கம் அறிவீரா?//

சான்ஸே இல்லை! என்ன உவமை!!!

vasu balaji said...

/ஏறி நின்று
கீறி விடுதலல்ல
செறி நட்பு
சிணுங்கியது
மலரும்வரை
புலனடக்கிப்
புலர்ந்திருப்பது
நட்பூ... //

நட்பூக்கு உரம் இது மட்டுமே! அற்புதம்.

Riyas said...

//மலரும்வரை
புலனடக்கிப்
புலர்ந்திருப்பது
நட்பூ... //

ஆஹா... அழகு. வாழ்த்துக்கள்..

Riyas said...

//மலரும்வரை
புலனடக்கிப்
புலர்ந்திருப்பது
நட்பூ... //

ஆஹா... அழகு. வாழ்த்துக்கள்..

Paleo God said...

//சிணுங்கியது
மலரும்வரை
புலனடக்கிப்
புலர்ந்திருப்பது
நட்பூ... //

மிக அழகு! செம்மொழி வாழ்க!

Jey said...

இப்படிய்யே புரியாதமாறி கவுஜ எழுதுங்க, வெறுத்ததுபோயி கடைசில, நானும் கவுஜ எழுதப்போரேன் அப்புறம் நீங்க எல்லோரும், ப்திவுலகத்தை விட்டே ஓடப்போறீங்க.

ராஜ நடராஜன் said...

அய்!இன்னைக்கு நான் முதல் பூ!

ராஜ நடராஜன் said...

அதானே பார்த்தேன் மாடரேசன்!

இறுதி பாரா சொல்ல வருவதை என்னை மாதிரி மண்டுகளுக்கு உரக்கவே சொல்கிறது.

ருத்ர வீணை® said...

மிக அருமை தோழி..

vasu balaji said...

அய்யா சந்திரனே! சந்திரன்ல களங்கமிருக்கலாம். களங்கமே நீராய்யா. இப்படி ஒரு கவிதைக்கு தேடி வந்து எதிர் வாக்கு போட்டு ஒரு வாய் சோறு தின்ன முடியுதுன்னா நீ மனுசனா என்னா?

பனித்துளி சங்கர் said...

எதனுடன் இணைத்தாலும் அழகாகிப்போகிறது நட்பூ!

க ரா said...

அழகு.

கயல் said...

//
ஏறி நின்று
கீறி விடுதலல்ல
செறி நட்பு
சிணுங்கியது
மலரும்வரை
புலனடக்கிப்
புலர்ந்திருப்பது
//

இந்த கோர்வை அழகுங்க! :))

அது சரி(18185106603874041862) said...

//
ஏறி நின்று
கீறி விடுதலல்ல
செறி நட்பு
சிணுங்கியது
மலரும்வரை
புலனடக்கிப்
புலர்ந்திருப்பது
நட்பூ...
//

பழைய சைதாபேட்டை எம்.எல்.ஏ கிட்டு
தாம்ப‌ரத்துல அடுத்து ஜெயிக்கப் போறது குஷ்பூ

:))

(ஒண்ணுமில்ல, குடுகுடுப்பை தலைமறைவா இருக்கதால நான் எதிர்க்கவுஜ நான் எழுதிப் பார்த்தேன்)

அது சரி(18185106603874041862) said...

நன்னாயிட்டு உண்டு...பட்ஷே எனிக்கி கான்டெக்ஸ்ட் மனசிலாயில்லா...

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

Nice one Priya.

ஹேமா said...

நல்லதொரு நட்பின் வரிகள்
கொண்ட கவிதை ப்ரியா.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

நட்பூ பற்றிய மிக அழகான கவிதைப்பூ :) தொட்டாஞ்சிணுங்கி பொதுவாக சீக்கிரமே பழைய நிலைமைக்கு திரும்பிடும் :))

தேடிப் பார்த்து கண்டுபிடிச்சேன் ஒன்றிரெண்டு அர்த்தத்தை (நிட்களங்கம்).. அழகான வார்த்தைகள்..

உங்க உவமைகள் எல்லாமே சொல்ல வரும் பொருளோட அழகாகப் பொருந்தி வருகின்றன..

புலவன் புலிகேசி said...

நட்பூக்களுடன் உங்கள் நண்பன்...

சூர்யா ௧ண்ணன் said...

சூப்பர்! அருமையான கவிதை!..

க.பாலாசி said...

//நந்தியாவட்டையின்//

பலநாளாச்சுங்க.. இந்த வார்த்தையை கேட்டே... அந்த பூவ அடிக்கடி பார்த்திருக்கேன்... பட் ஞாபகம் வரமாட்டுது...

கவிதை... ம்ம்ம்ம்........

உண்மைத்தமிழன் said...

இந்த மூணு பாராவுல என்ன புரிஞ்சதுண்ணு பதினைஞ்சு பேர் ப்ளஸ் குத்து குத்திருக்காங்க..!

ஒண்ணுமே புரியலையே முருகா..!

கலகலப்ரியா said...

||வானம்பாடிகள் said...

வாவ்! சின்னதாய்ப் பெரிதாய்ப் பாராட்டும் நட்பூ!

நிலத்திற் புரளும் சிறுநாலுமணிப் பூவிடம்தலை சாய்த்து நலம் கேட்கும்நந்தியாவட்டையின் நிட்களங்கம் அறிவீரா?//

சான்ஸே இல்லை! என்ன உவமை!!!

/ஏறி நின்று
கீறி விடுதலல்ல
செறி நட்பு
சிணுங்கியது
மலரும்வரை
புலனடக்கிப்
புலர்ந்திருப்பது
நட்பூ... //

நட்பூக்கு உரம் இது மட்டுமே! அற்புதம்.||

நன்றி நன்றி நன்றி... (ரொம்ப நன்றி சார்..)

கலகலப்ரியா said...

||Riyas said...

//மலரும்வரை
புலனடக்கிப்
புலர்ந்திருப்பது
நட்பூ... //

ஆஹா... அழகு. வாழ்த்துக்கள்..||

நன்றி ரியாஸ்...

கலகலப்ரியா said...

||♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

//சிணுங்கியது
மலரும்வரை
புலனடக்கிப்
புலர்ந்திருப்பது
நட்பூ... //

மிக அழகு! செம்மொழி வாழ்க!||

நன்றி ஷங்கர்..

கலகலப்ரியா said...

||Jey said...

இப்படிய்யே புரியாதமாறி கவுஜ எழுதுங்க, வெறுத்ததுபோயி கடைசில, நானும் கவுஜ எழுதப்போரேன் அப்புறம் நீங்க எல்லோரும், ப்திவுலகத்தை விட்டே ஓடப்போறீங்க.||

சும்மா மிரட்டாதீங்க ஜெய்.. :o)

கலகலப்ரியா said...

||ராஜ நடராஜன் said...

அய்!இன்னைக்கு நான் முதல் பூ!||

பல்"பூ"வா.. :))

கலகலப்ரியா said...

||ராஜ நடராஜன் said...

அதானே பார்த்தேன் மாடரேசன்!

இறுதி பாரா சொல்ல வருவதை என்னை மாதிரி மண்டுகளுக்கு உரக்கவே சொல்கிறது.||

என்னாச்சு என்னாச்சு... :-s

கலகலப்ரியா said...

||வானம்பாடிகள் said...

அய்யா சந்திரனே! சந்திரன்ல களங்கமிருக்கலாம். களங்கமே நீராய்யா. இப்படி ஒரு கவிதைக்கு தேடி வந்து எதிர் வாக்கு போட்டு ஒரு வாய் சோறு தின்ன முடியுதுன்னா நீ மனுசனா என்னா?||

சார் அவங்க எவ்ளோ தேவலாம்... அத விட மோசமானவைங்க இருக்காங்க சார்.. விடுங்க...

கலகலப்ரியா said...

||!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

எதனுடன் இணைத்தாலும் அழகாகிப்போகிறது நட்பூ!||

நன்றி சங்கர்..

கலகலப்ரியா said...

||ருத்ர வீணை® said...

மிக அருமை தோழி..||

நன்றி ருத்ர...

கலகலப்ரியா said...

||இராமசாமி கண்ணண் said...

அழகு.||

நன்றி கண்ணன்..

கலகலப்ரியா said...

|| கயல் said...

//
ஏறி நின்று
கீறி விடுதலல்ல
செறி நட்பு
சிணுங்கியது
மலரும்வரை
புலனடக்கிப்
புலர்ந்திருப்பது
//

இந்த கோர்வை அழகுங்க! :))||

நன்றி கயல்..

கலகலப்ரியா said...

||அது சரி said...

//
ஏறி நின்று
கீறி விடுதலல்ல
செறி நட்பு
சிணுங்கியது
மலரும்வரை
புலனடக்கிப்
புலர்ந்திருப்பது
நட்பூ...
//

பழைய சைதாபேட்டை எம்.எல்.ஏ கிட்டு
தாம்ப‌ரத்துல அடுத்து ஜெயிக்கப் போறது குஷ்பூ

:))

(ஒண்ணுமில்ல, குடுகுடுப்பை தலைமறைவா இருக்கதால நான் எதிர்க்கவுஜ நான் எழுதிப் பார்த்தேன்)||

எதிர்க்கவுஜ அவங்க அவங்க ப்ளாக்ல எழுதலைன்னா செல்லாதுன்னு தெரியாத இந்தப் பதிவருக்கு குஷ்பூ கையால ஒரு குட்டுக் கிடைக்கக் கடவ..

கலகலப்ரியா said...

||அது சரி said...

நன்னாயிட்டு உண்டு...பட்ஷே எனிக்கி கான்டெக்ஸ்ட் மனசிலாயில்லா...||

நன்னாயிட்டுண்டல்லே... அது மதி..

கலகலப்ரியா said...

||ஜெஸ்வந்தி said...

Nice one Priya.||

நன்றி ஜெஸ்வந்தி..

கலகலப்ரியா said...

||
ஹேமா said...

நல்லதொரு நட்பின் வரிகள்
கொண்ட கவிதை ப்ரியா.||

நன்றி ஹேமா

கலகலப்ரியா said...

|| எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

நட்பூ பற்றிய மிக அழகான கவிதைப்பூ :) தொட்டாஞ்சிணுங்கி பொதுவாக சீக்கிரமே பழைய நிலைமைக்கு திரும்பிடும் :))

தேடிப் பார்த்து கண்டுபிடிச்சேன் ஒன்றிரெண்டு அர்த்தத்தை (நிட்களங்கம்).. அழகான வார்த்தைகள்..

உங்க உவமைகள் எல்லாமே சொல்ல வரும் பொருளோட அழகாகப் பொருந்தி வருகின்றன..||

நன்றி சந்தனா... ம்ம்.. :)..

கலகலப்ரியா said...

||புலவன் புலிகேசி said...

நட்பூக்களுடன் உங்கள் நண்பன்...||

நன்றி புலிகேசி..

கலகலப்ரியா said...

||சூர்யா ௧ண்ணன் said...

சூப்பர்! அருமையான கவிதை!..||

நன்றி சூர்யா :D.. பஸ்ல டிக்கெட் இல்லாம லக்கேஜ் கொண்டு போறதுக்கும்.. :O)

கலகலப்ரியா said...

||க.பாலாசி said...

//நந்தியாவட்டையின்//

பலநாளாச்சுங்க.. இந்த வார்த்தையை கேட்டே... அந்த பூவ அடிக்கடி பார்த்திருக்கேன்... பட் ஞாபகம் வரமாட்டுது...

கவிதை... ம்ம்ம்ம்........||

நன்றி பாலாஜி... நந்தியாவட்டை மறந்திடிச்சா... அனுப்பி வைக்க ஏற்பாடு செய்றேன்.. :))

கலகலப்ரியா said...

||உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

இந்த மூணு பாராவுல என்ன புரிஞ்சதுண்ணு பதினைஞ்சு பேர் ப்ளஸ் குத்து குத்திருக்காங்க..!

ஒண்ணுமே புரியலையே முருகா..!||

முருகா... மருதமலை மாமணியே.. என் சார்பில.. உங்க பக்தனுக்கு கொஞ்சம் புரிய வைக்கப்டாதா...

(ஓட்டு மேலயே கண்ணு... அல்லாரும் ஓட்டுப் போடல பார்த்தியளா...)

ஈரோடு கதிர் said...

நட்பூ...

நறுமணமாய்!!!

கலகலப்ரியா said...

||ஈரோடு கதிர் said...
நட்பூ...

நறுமணமாய்!!!||

நன்றி கதிர்...

Thenammai Lakshmanan said...

புலனடக்கிப்
புலர்ந்திருப்பது
நட்பூ... //

மிக அருமை ப்ரியா..

கலகலப்ரியா said...

||thenammailakshmanan said...

புலனடக்கிப்
புலர்ந்திருப்பது
நட்பூ... //

மிக அருமை ப்ரியா..||

நன்றி தேனம்மை..

அது சரி(18185106603874041862) said...

//
உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
இந்த மூணு பாராவுல என்ன புரிஞ்சதுண்ணு பதினைஞ்சு பேர் ப்ளஸ் குத்து குத்திருக்காங்க..!
//

பதினஞ்சு பக்கத்துக்கோ இல்லை பதினஞ்சாயிரம் லைனுக்கோ குறைஞ்சா அதை அண்ணன் ஒரு இடுகையாவே ஏத்துக்கிறதில்லை..:)))

//
ஒண்ணுமே புரியலையே முருகா..!
June 23, 2010 10:57 AM
//

ஆஹா...ஞானப்பழத்தை பிழிஞ்சவரு அண்ணனுக்கு அதுல கொஞ்சூண்டு ஒரு சொட்டாவது குடுத்திருக்கலாம்...ஏமாத்திட்டாய்ங்க போலருக்கே :))))))

மா.குருபரன் said...

//மலரும்வரை
புலனடக்கிப்
புலர்ந்திருப்பது
நட்பூ..//
ம்...
நல்லாருக்குங்க

கலகலப்ரியா said...

நன்றி குருபரன்..