சமாதானம்
வேலைப்பளு அதிகம்... வார இறுதியிலும் ஏதேதோ நிகழ்வுகள். நான் அவ்வப்போது படிக்கும் சில இடுகைகளைக் கூடப் படிக்க முடியவில்லை. நண்பர்கள் புரிந்து கொள்வார்களென்று எனக்குத் தெரியும், ஆனாலும் மன்னிக்க வேண்டுகிறேன். (செயல் முக்கியம் அமைச்சரே)
விளம்பரம் / அறிக்கை
நேற்று இஸ்லாமியக் காங்கிரஸ் ஒன்றிற்குச் சென்றிருந்தேன். காலையிலிருந்து மாலை வரை நேரம் போனதே தெரியவில்லை. மிகவும் சுவாரஸ்யமான அனுபவம். அதிற் கலந்து கொண்ட இஸ்லாமிய நண்பர்கள் "இஸ்லாம்" என்ற மார்க்கத்தில் பிரச்சனை இல்லை. பெரும்பாலும், நாடு மற்றும் அவரவர் சமுதாயம் சார்ந்தே பிரச்சனைகள் தோன்றுகின்றன. எங்களுக்கு ஒரு பிரச்சனை இருக்கிறது என்பதை ஒத்துக் கொள்கிறோம். சிலபல உவப்பில்லாத விடயங்களையும், மனிதர்களையும் வைத்து அனைத்து இஸ்லாமியர்களையும் எடை போடாதீர்கள். எதுவானாலும், கேளுங்கள், பேசுங்கள், விவாதியுங்கள், திறந்த மனதுடன் பங்களிக்கத் தயாராக இருக்கிறோம். நாங்கள் பிரச்சனையின் ஒரு பகுதியாக இருக்க விரும்பவில்லை, தீர்வின் பகுதியாக இருக்கவே விரும்புகிறோம் என்று சொன்னது மனதைத் தொட்டது.
சுவிற்சர்லாந்தில் மசூதிக் கோபுரங்கள் கட்டுவதற்கு எதிராக ஒரு வாக்கெடுப்பு நடாத்தி, கோபுரங்கள் எழுப்புவதற்குத் தடை விதித்திருக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து அவ்வப்போது இவ்வாறான நிகழ்வுகளை ஏற்பாடு செய்து நடத்திக் கொண்டிருக்கும் கிறிஸ்தவ மதத்தினர் மற்றும் மதம் துறந்த மற்றவர்களின் மனிதத்தையும் மெச்சுவதற்கு வார்த்தைகளில்லை. இவ்வாறான ஒன்று கூடல்களில் பங்கேற்பவர்கள், பாதிரியார்களாகவும், கிறிஸ்தவ சமயத்தைக் கடைப்பிடிப்பவர்களாகவும் இருந்தாலும், எம்மதமும் சம்மதமே, மனிதமே முக்கியமென்ற கொள்கையுடையவர்களாக இருப்பது குறிப்பிடத் தக்கது.
பேராசிரியர் Dr. Andreas Kley பேசும்போது, சுவிற்சர்லாந்தில் மசூதி கட்டுவது பற்றிய சர்ச்சையில், "சவுதி அரேபியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் ஒரு தேவாலயத்தைக் கட்டியெழுப்ப முடியுமா? போன்ற கேள்விகள் முன் வைக்கப் படுவதாகவும், அது அவரவர் நாட்டின் எண்ணக் கருத்துகள், பார்வைகளில் சார்ந்திருக்கிறதென்றும், நம்மைப் பொறுத்த வரையில் நம் நாட்டிலிருக்கும் சிறுபான்மை இஸ்லாமியர்களை ஆதரிப்பதும், பாதுகாப்பதும் நம் கடமை" என்றும் விளம்பியதில் மனிதம் பிரகாசித்தது.
பங்கேற்றவர்கள் அனைவரும் அவரவர் தனித்தன்மையில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்களல்ல, எனினும், என்னை மிக மிகக் கவர்ந்தவர்களில் கிறிஸ்தவப் பெண் துறவி Ingrid Grave மிக முக்கியமானவர். கிறிஸ்தவப் பெண் துறவியாக இருந்த போதிலும், கிறிஸ்தவ மதத்திலுள்ள குறைபாடுகளை அவர் எடுத்துக்காட்டிய விதமும், சில உடைகளின் தோற்றத்திற்கான காரணங்களும், அது இப்பொழுது எவ்வாறு நடைமுறைச் சாத்தியமற்றிருக்கின்றதெனவும் கூறியது "வாவ்" சொல்ல வைத்தது. பெண் துறவிக்கான அந்த உடையில் சாதாரண மனிதர்களுடன் இயல்பாக நெருங்கிப் பேசுவது சிரமமாக இருக்கிறதென்றும், அதற்காக அவசியமில்லாத வேளைகளில் சாதாரண உடையுடனே வலம்வருகிறேன் எனவும், பல மனிதர்களின் மனத்தை நெருங்கியிருக்கிறேன் எனவும் அவர் சொன்ன போது அவரை இறுகக் கட்டிக் கொள்ள வேண்டும் போலெழுந்த உணர்ச்சியைக் கட்டுப் படுத்த முடியவில்லை. நல்ல வேளையாக நாங்கள் பங்கெடுத்த வொர்க்ஷாப்பில் அவர்களும் இருந்ததாலும், திரும்பி வரும்போது ரயில் பயணத்தில் பேச வாய்ப்புக் கிடைத்ததாலும் முடிந்த அளவு கையைப் பற்றிக் கொண்டு சிலாகிக்க முடிந்தது.
இன்னும் நிறைய எழுத வேண்டுமென்ற ஆசைதான், ஆனால் தூக்கத்தைக் கெடுத்துக் கொள்ளும் அபாயங்கள் இருப்பதால் இப்போதைக்கு இத்துடன் இந்த விடயத்திற்கு முற்றுப்புள்ளி.
சூனியம்
கவுஜையிலிருந்து தப்பித்தோமென்று சொல்லிச் சீண்டிச் சீண்டிச் சொந்தச் செலவில் சூனியம் வைத்துக் கொள்ளும் நண்பர்களுக்காக... எப்பவோ கிறுக்கிய கவிதையின் ஒரு பகுதியை... இங்கே சமர்ப்பிக்கிறேன்..
இதயக்குகையின்
உள்வெளிச்சுவர் தெறித்து
விழுந்த இடர்ப்பந்து
அழுந்திய தொண்டைக்குழி
விழுங்க விழுங்க
உருண்டெழுந்து
கருவிழி பின் சென்று
மீளும் கோளம்
இடறியிடறி
அடிவயிறு வரை
சென்று மீண்டும்
இதய அண்மையில்
வெடித்துப் பரவும்
வலி...
கண்டனம்
ராஜசேகர் ரேஞ்சுக்கு "நீங்க திருந்தவே மாட்டீங்கடா".. "நாசமாப் போங்கடா".. "நீ லூசு, உங்கப்பன் லூசு, உன் தாத்தன் லூசு" என்ற தொனியில் எங்களைக் கண்டபடி திட்டி, இப்போதைக்கு எழுதுவதை நிறுத்தியிருப்பதாக அறிவித்த (அல்லது சஞ்சய் அங்கிள் பாணியில் லீவு லெட்டர் கொடுத்த) அதுசரிக்கு என் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்யக் கடமைப்பட்டுள்ளேன்.
அஞ்சலி
திவாகர் அண்ணாவுக்கு ஆத்மார்த்தமான அஞ்சலிகள். பிரபா அண்ணாவுக்கு - நாமல்லாம் இருக்கோம்ணா.
____________________________________________________________________________________
வாசித்தது - லக்கலக்கலக்க...
38 ஊக்கம்::
மொத சீட் எனக்கு. :))
முதலில் கலகலவென ஒரு பதிவெழுதி லகலகவென புனைப்பெயரில் செய்தியாக்கியதை கண்டிப்போடு வரவேற்கிறேன்.
சமாதானம்: ஏற்றுக் கொள்ளப்பட்டது.
/நாங்கள் பிரச்சனையின் ஒரு பகுதியாக இருக்க விரும்பவில்லை, தீர்வின் பகுதியாக இருக்கவே விரும்புகிறோம் என்று சொன்னது மனதைத் தொட்டது. /
க்ரேட்.
/நம்மைப் பொறுத்த வரையில் நம் நாட்டிலிருக்கும் சிறுபான்மை இஸ்லாமியர்களை ஆதரிப்பதும், பாதுகாப்பதும் நம் கடமை" என்றும் விளம்பியதில் மனிதம் பிரகாசித்தது. /
/பெண் துறவிக்கான அந்த உடையில் சாதாரண மனிதர்களுடன் இயல்பாக நெருங்கிப் பேசுவது சிரமமாக இருக்கிறதென்றும், அதற்காக அவசியமில்லாத வேளைகளில் சாதாரண உடையுடனே வலம்வருகிறேன் எனவும், பல மனிதர்களின் மனத்தை நெருங்கியிருக்கிறேன் எனவும் அவர் சொன்ன போது அவரை இறுகக் கட்டிக் கொள்ள வேண்டும் போலெழுந்த உணர்ச்சியைக் கட்டுப் படுத்த முடியவில்லை. /
எவ்வளவு திறந்த மனதுடன் நிகழ்ச்சி நடைபெற்றிருக்கிறதென்பதை புரிந்துக் கொள்ள முடிகிறது.
ஆஹா! கவுஜ கவுஜ!
ம்ம். எப்போ கிறுக்கினாலென்ன? படிக்கிறப்ப நெஞ்சுக்கூட்டுக்குள் அடைப்பு என்னால் உணர முடிகிறது.
கண்டனம்அல்லோ! இது சரியில்லை. எங்களைன்னு சொல்லிட்டு கடமைப் பட்டிருக்கிறேன்னா எப்புடி. றோம். நானும் கண்டிக்கிறேன்.
அஞ்சலி: ஆம்! நாங்கள் இருக்கிறோம் பிரவு
மனிதனை மிதிக்காத மதம் மதிக்கப்படும்! கட்டாயமில்லாத ஆதிக்கம் இல்லாத நெறிப்படுத்துதல் மிகவும் வரவேற்க தக்கது. அந்த கிறித்துவ பெண் துறவியின் கருத்து மிகவும் நன்று.மீண்டும் ஒரு அருமையான பதிவு பிரியா! வாழ்த்துக்கள்!
//
இதய அண்மையில்
வெடித்துப் பரவும்
வலி...
//
இதைப் படித்ததும் எனக்கும் ஏற்பட்டது :)))
எப்பொழுதோ இருக்கியது என்று நீங்கள் சொன்ன கவிதை இப்பொழுதும் மிகவும் அருமை .
//
வேலைப்பளு அதிகம்...
//
இதுக்கு பேரு தான் விளம்பரம்...அதுக்கு என்ன சமாதானம்னு டைட்டில்??
//
பல மனிதர்களின் மனத்தை நெருங்கியிருக்கிறேன் எனவும் அவர் சொன்ன போது அவரை இறுகக் கட்டிக் கொள்ள வேண்டும் போலெழுந்த உணர்ச்சியைக் கட்டுப் படுத்த முடியவில்லை. நல்ல வேளையாக நாங்கள் பங்கெடுத்த வொர்க்ஷாப்பில் அவர்களும் இருந்ததாலும், திரும்பி வரும்போது ரயில் பயணத்தில் பேச வாய்ப்புக் கிடைத்ததாலும் முடிந்த அளவு கையைப் பற்றிக் கொண்டு சிலாகிக்க முடிந்தது.
//
கடைசியில அவங்க கை யாரு கையில இருந்தது?? அதை சொல்லாம விட்டா எப்படி?
//
இன்னும் நிறைய எழுத வேண்டுமென்ற ஆசைதான், ஆனால் தூக்கத்தைக் கெடுத்துக் கொள்ளும் அபாயங்கள் இருப்பதால் இப்போதைக்கு இத்துடன் இந்த விடயத்திற்கு முற்றுப்புள்ளி.
//
டேங்ஸூ :)))
//
கவுஜையிலிருந்து தப்பித்தோமென்று சொல்லிச் சீண்டிச் சீண்டிச் சொந்தச் செலவில் சூனியம் வைத்துக் கொள்ளும் நண்பர்களுக்காக...
//
ஆமா...யாரோ பண்ணதுக்கு இப்படி எல்லாருக்கும் தண்டனை கொடுத்தா எப்படி? அப்பாவி மக்கள் பாவம்...விட்டுடுங்கப்பா...
//
ராஜசேகர் ரேஞ்சுக்கு "நீங்க திருந்தவே மாட்டீங்கடா".. "நாசமாப் போங்கடா".. "நீ லூசு, உங்கப்பன் லூசு, உன் தாத்தன் லூசு" என்ற தொனியில் எங்களைக் கண்டபடி திட்டி, இப்போதைக்கு எழுதுவதை நிறுத்தியிருப்பதாக அறிவித்த (அல்லது சஞ்சய் அங்கிள் பாணியில் லீவு லெட்டர் கொடுத்த) அதுசரிக்கு என் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்யக் கடமைப்பட்டுள்ளேன்.
//
அய்யா, அம்மா, தாயே, பாட்டியே..
நான் சொன்னது வேற...இப்படி வதந்தி கெளப்பி முதுகுல டின்னு கட்டிடாதீங்க....ஏற்கனவே புண்ணாகிப் போயிருக்கு...
//
திவாகர் அண்ணாவுக்கு ஆத்மார்த்தமான அஞ்சலிகள். பிரபா அண்ணாவுக்கு - நாமல்லாம் இருக்கோம்ணா
//
இதையே நானும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
சகோதரனை இழந்து தவிக்கும் பிரபாகர் மற்றும் அவர் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்!
//சுவிற்சர்லாந்தில் மசூதிக் கோபுரங்கள் கட்டுவதற்கு எதிராக ஒரு வாக்கெடுப்பு நடாத்தி, //
இதைப்பற்றி நானும் கேள்விப்பட்டேன் சகோதரி. அந்த கோபுரங்கள் அவர்களின் வழிபாட்டிற்கு எவ்வளவு முக்கியமென்ற விஷயத்தை மக்களிடம் எடுத்துரைத்து அதற்கான வாக்கெடுப்பில் உங்களின் உழைப்பு பற்றியும் அறிந்தபோது மிகவும் நெகிழ்சியாக இருந்தது. இதெல்லாம் விளம்பரமல்ல. இது போன்ற நிகழ்ச்சிகளை விரிவாக பகிருங்கள்.
--
// எதுவானாலும், கேளுங்கள், பேசுங்கள், விவாதியுங்கள், திறந்த மனதுடன் பங்களிக்கத் தயாராக இருக்கிறோம். நாங்கள் பிரச்சனையின் ஒரு பகுதியாக இருக்க விரும்பவில்லை, தீர்வின் பகுதியாக இருக்கவே விரும்புகிறோம் //
அனைவரும் இதுபோன்று நினைப்பின் போர் என்ற வார்த்தையும், ஆயுதங்களும் துருப்பிடித்துப்போகும்.
--
//நடாத்தி,//இதெல்லாம் நாங்கள் பயன்படுத்துகிற வார்த்தை :))
--
பிரபா மனவலிமையுடன் மீண்டு வருவார். வரவேண்டும் என்பதே என் ப்ரார்த்தனையும்.
You have expressed what exactly was in my mind.
நல்லா வாசிக்கறீங்க... நியூசு
||
வானம்பாடிகள் said...
மொத சீட் எனக்கு. :))||
திருந்தவே மாட்டீங்களா சார்..
||வானம்பாடிகள் said...
முதலில் கலகலவென ஒரு பதிவெழுதி லகலகவென புனைப்பெயரில் செய்தியாக்கியதை கண்டிப்போடு வரவேற்கிறேன்.||
புனைபெயரா.. அடங்கொக்கமக்கா.. அநேகமா எல்லாருக்கும் தெரிஞ்ச பேரு அதுதான்..
||வானம்பாடிகள் said...
ஆஹா! கவுஜ கவுஜ!
ம்ம். எப்போ கிறுக்கினாலென்ன? படிக்கிறப்ப நெஞ்சுக்கூட்டுக்குள் அடைப்பு என்னால் உணர முடிகிறது.
கண்டனம்அல்லோ! இது சரியில்லை. எங்களைன்னு சொல்லிட்டு கடமைப் பட்டிருக்கிறேன்னா எப்புடி. றோம். நானும் கண்டிக்கிறேன்.
அஞ்சலி: ஆம்! நாங்கள் இருக்கிறோம் பிரவு||
நன்றி சார்..
||கயல் said...
மனிதனை மிதிக்காத மதம் மதிக்கப்படும்! கட்டாயமில்லாத ஆதிக்கம் இல்லாத நெறிப்படுத்துதல் மிகவும் வரவேற்க தக்கது. அந்த கிறித்துவ பெண் துறவியின் கருத்து மிகவும் நன்று.மீண்டும் ஒரு அருமையான பதிவு பிரியா! வாழ்த்துக்கள்!||
நன்றி கயல்...
||அது சரி said...
//
இதய அண்மையில்
வெடித்துப் பரவும்
வலி...
//
இதைப் படித்ததும் எனக்கும் ஏற்பட்டது :)))||
தெரிஞ்சது... தெரிஞ்சது... இருக்கட்டு...
||!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
எப்பொழுதோ இருக்கியது என்று நீங்கள் சொன்ன கவிதை இப்பொழுதும் மிகவும் அருமை||
நன்றி சங்கர்..
||அது சரி said...
//
வேலைப்பளு அதிகம்...
//
இதுக்கு பேரு தான் விளம்பரம்...அதுக்கு என்ன சமாதானம்னு டைட்டில்??||
ஸ்லிப் ஆய்டுத்து... :o)
||அது சரி said...
//
பல மனிதர்களின் மனத்தை நெருங்கியிருக்கிறேன் எனவும் அவர் சொன்ன போது அவரை இறுகக் கட்டிக் கொள்ள வேண்டும் போலெழுந்த உணர்ச்சியைக் கட்டுப் படுத்த முடியவில்லை. நல்ல வேளையாக நாங்கள் பங்கெடுத்த வொர்க்ஷாப்பில் அவர்களும் இருந்ததாலும், திரும்பி வரும்போது ரயில் பயணத்தில் பேச வாய்ப்புக் கிடைத்ததாலும் முடிந்த அளவு கையைப் பற்றிக் கொண்டு சிலாகிக்க முடிந்தது.
//
கடைசியில அவங்க கை யாரு கையில இருந்தது?? அதை சொல்லாம விட்டா எப்படி?||
அவங்க கைலதான்... இப்டி கேள்வி கேக்கறவைங்க கைய ஒடைக்க முடியலயே...
||அது சரி said...
//
இன்னும் நிறைய எழுத வேண்டுமென்ற ஆசைதான், ஆனால் தூக்கத்தைக் கெடுத்துக் கொள்ளும் அபாயங்கள் இருப்பதால் இப்போதைக்கு இத்துடன் இந்த விடயத்திற்கு முற்றுப்புள்ளி.
//
டேங்ஸூ :)))||
இம்பூட்டு சந்தோஷமா... இது நீடிக்க விட மாட்டோம்ல...
||அது சரி said...
//
கவுஜையிலிருந்து தப்பித்தோமென்று சொல்லிச் சீண்டிச் சீண்டிச் சொந்தச் செலவில் சூனியம் வைத்துக் கொள்ளும் நண்பர்களுக்காக...
//
ஆமா...யாரோ பண்ணதுக்கு இப்படி எல்லாருக்கும் தண்டனை கொடுத்தா எப்படி? அப்பாவி மக்கள் பாவம்...விட்டுடுங்கப்பா...||
உங்களுக்கு இருக்கற இரக்க குணம் எனக்கு வர மாட்டேங்குதே... அவ்வ்வ்...
||அது சரி said...
//
ராஜசேகர் ரேஞ்சுக்கு "நீங்க திருந்தவே மாட்டீங்கடா".. "நாசமாப் போங்கடா".. "நீ லூசு, உங்கப்பன் லூசு, உன் தாத்தன் லூசு" என்ற தொனியில் எங்களைக் கண்டபடி திட்டி, இப்போதைக்கு எழுதுவதை நிறுத்தியிருப்பதாக அறிவித்த (அல்லது சஞ்சய் அங்கிள் பாணியில் லீவு லெட்டர் கொடுத்த) அதுசரிக்கு என் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்யக் கடமைப்பட்டுள்ளேன்.
//
அய்யா, அம்மா, தாயே, பாட்டியே..
நான் சொன்னது வேற...இப்படி வதந்தி கெளப்பி முதுகுல டின்னு கட்டிடாதீங்க....ஏற்கனவே புண்ணாகிப் போயிருக்கு...||
அதுக்குள்ள ஒரு போஸ்ட்ட போட்டு சமாதானமா போற வழிய பாருங்க சாமி... இல்லைன்னா இன்னும் அஞ்சாறு பிட்-அ போட்டு... ஒரு வழி பண்ணிடுவோம்..
||அது சரி said...
//
திவாகர் அண்ணாவுக்கு ஆத்மார்த்தமான அஞ்சலிகள். பிரபா அண்ணாவுக்கு - நாமல்லாம் இருக்கோம்ணா
//
இதையே நானும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.||
ம்ம்..
||கயல் said...
சகோதரனை இழந்து தவிக்கும் பிரபாகர் மற்றும் அவர் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்!||
நன்றி கயல்..
|| 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
//சுவிற்சர்லாந்தில் மசூதிக் கோபுரங்கள் கட்டுவதற்கு எதிராக ஒரு வாக்கெடுப்பு நடாத்தி, //
இதைப்பற்றி நானும் கேள்விப்பட்டேன் சகோதரி. அந்த கோபுரங்கள் அவர்களின் வழிபாட்டிற்கு எவ்வளவு முக்கியமென்ற விஷயத்தை மக்களிடம் எடுத்துரைத்து அதற்கான வாக்கெடுப்பில் உங்களின் உழைப்பு பற்றியும் அறிந்தபோது மிகவும் நெகிழ்சியாக இருந்தது. இதெல்லாம் விளம்பரமல்ல. இது போன்ற நிகழ்ச்சிகளை விரிவாக பகிருங்கள்.
--
// எதுவானாலும், கேளுங்கள், பேசுங்கள், விவாதியுங்கள், திறந்த மனதுடன் பங்களிக்கத் தயாராக இருக்கிறோம். நாங்கள் பிரச்சனையின் ஒரு பகுதியாக இருக்க விரும்பவில்லை, தீர்வின் பகுதியாக இருக்கவே விரும்புகிறோம் //
அனைவரும் இதுபோன்று நினைப்பின் போர் என்ற வார்த்தையும், ஆயுதங்களும் துருப்பிடித்துப்போகும்.
--
//நடாத்தி,//இதெல்லாம் நாங்கள் பயன்படுத்துகிற வார்த்தை :))
--
பிரபா மனவலிமையுடன் மீண்டு வருவார். வரவேண்டும் என்பதே என் ப்ரார்த்தனையும்.||
ரொம்ப நன்றி ஷங்கர்...
||V R said...
You have expressed what exactly was in my mind.||
thank you V R...
||ஈரோடு கதிர் said...
நல்லா வாசிக்கறீங்க... நியூசு||
அட... அப்போ சன் நியூஸ் வாசிக்கச் சான்ஸ் கிடைக்குமா... :o)
அருமையான கவிதை. ஆழ்ந்த கருத்துக்கள். ஆகச் சிறந்த சொல்லாடல். காத்திரமான படிமங்கள். உவமைகளின் உன்னதம். உருவகங்களின் உன்மத்தம். நெடு நேரம் கவிதையின் பாதிப்பினின்றும் மீள முடியாமல் மறுபடியும் மறுபடியும் வாசித்துக்கொண்டே இருக்கிறேன். “நவில்தொறும் நூல் நயம் என்றாரே வள்ளுவர்! அது இது போல் சால்ச் சிறந்த கவிதைகளைத் தானோ!
அருமையான கவிதை. ஆழ்ந்த கருத்துக்கள். ஆகச் சிறந்த சொல்லாடல். காத்திரமான படிமங்கள். உவமைகளின் உன்னதம். உருவகங்களின் உன்மத்தம். நெடு நேரம் கவிதையின் பாதிப்பினின்றும் மீள முடியாமல் மறுபடியும் மறுபடியும் வாசித்துக்கொண்டே இருக்கிறேன். “நவில்தொறும் நூல் நயம் என்றாரே வள்ளுவர்! அது இது போல் சால்ச் சிறந்த கவிதைகளைத் தானோ!
||லதானந்த் said...
அருமையான கவிதை. ஆழ்ந்த கருத்துக்கள். ஆகச் சிறந்த சொல்லாடல். காத்திரமான படிமங்கள். உவமைகளின் உன்னதம். உருவகங்களின் உன்மத்தம். நெடு நேரம் கவிதையின் பாதிப்பினின்றும் மீள முடியாமல் மறுபடியும் மறுபடியும் வாசித்துக்கொண்டே இருக்கிறேன். “நவில்தொறும் நூல் நயம் என்றாரே வள்ளுவர்! அது இது போல் சால்ச் சிறந்த கவிதைகளைத் தானோ!||
ஆகா... கொஞ்சம் பயமாத்தான் இருக்கு... ரொம்ம்ம்ம்பப் பாராட்டறீங்க... நன்றிங்க சார்...
சமாதானத்த ஒத்துக்கிறேன்...
விளம்பரமாயினும் அறிக்கையாயினும் அந்த அனுபவம் சுவாரசியம்தான்.. அந்த பெண் துறவியின் செயல் பிடித்திருக்கிறது...
கவுஜை ‘வயக்கம்’போல...
மறுபடியும் கண்டனமா!!!!!!
மொத்தத்துல ஓ.கே.
இந்த போஸ்ட்க்கு அடுத்ததா நேத்து ஒண்ணு போட்டிருக்கீங்களே.. ஏகத்துக்கும் என்னமோ இருக்குறமாதிரியே இருக்கு... அப்டியா?
||க.பாலாசி said...
சமாதானத்த ஒத்துக்கிறேன்...
விளம்பரமாயினும் அறிக்கையாயினும் அந்த அனுபவம் சுவாரசியம்தான்.. அந்த பெண் துறவியின் செயல் பிடித்திருக்கிறது...
கவுஜை ‘வயக்கம்’போல...
மறுபடியும் கண்டனமா!!!!!!
மொத்தத்துல ஓ.கே.
இந்த போஸ்ட்க்கு அடுத்ததா நேத்து ஒண்ணு போட்டிருக்கீங்களே.. ஏகத்துக்கும் என்னமோ இருக்குறமாதிரியே இருக்கு... அப்டியா?||
நன்றி பாலாசி...
ம்க்கும்... நீயி ஓட்டுப்போடாம போனதிலயே தெரியுதே... இருக்கட்டு இருக்கட்டு...
Post a Comment