header photo

Tuesday, June 1, 2010

என் கையாலாகாத்தனமும்... ஜாதியற்ற நிலமையும்..

//என்னோட மகளோ, மகனோ... நாளைக்கு... இங்கிருக்கும்... ஏதோ ஒரு மதம் சார்ந்த வெள்ளைக் காரனையோ... இங்கு எங்களைப் போல பிழைப்புகென்று வந்த ஆப்பிரிக்காவின் கறுப்பினத்தவனையோ... அல்லது என்னினம் என்று சொல்லிக்கொள்ளும் எவனையோ... திருமணம் செய்து கொள்வதானாலும்.... திருமணம் செய்து கொள்ளாது... துணையாகச் சேர்ந்து வாழ்வதாயிருந்தாலும்... நாலு தடவை விவாகரத்து செய்து மறுமணம் முடித்தாலும்... தனியாக இருந்தாலும்.. ஹோமோவானாலும்.. லெஸ்பியன் ஆனாலும்.. எனக்கு எந்தக் கவலையுமில்லை. அவர்களின் வாழ்க்கை, அவர்களின் சுதந்திரம்... அதையெல்லாம் விட... எனக்கு நான் எட்டித் துப்பும் வட்டத்திலிருப்பதல்ல என் வாழ்க்கை... உலகளாவியது... எல்லாரும் ஒண்ணுதான்... நம்பறதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குமே... வெத்து வேட்டுன்னு தோணுமே... ஏன் தெரியுமா... உங்களால அவ்ளோதான்யா சிந்திக்க முடியும்... மேல முடியாது...//

இதுக்கப்புறமும்... ஏதேதோ ஜாதி பெயர் சொல்லி ஏதோ ஒரு காரணத்தால் என்னை வன்மம் தீர்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு... நான் பதில் சொல்ல வேண்டுமா? என்னுடைய ஜாதி என்னவென்று தெரிய வேண்டுமா..? அதுக்காகவா..? பார்ப்பனர் என்றால்... பார்ப்பனத் திமிர் எனலாம். பார்ப்பனர் அல்லாதவரெனில்... பார்ப்பனருக்குக் குடை பிடிப்பவள் எனலாம்... இரண்டும் வசதிதானே. 

சரி... என்னுடைய அம்மம்மா ஒரு ஜாதி... என்னுடைய அம்மப்பா வேறு ஒரு ஜாதி... ஆதலால் என்னுடைய அம்மாவின் ஜாதி என்னவென்று எனக்குத் தெரியாது... என்னுடைய அப்பாவின் ஜாதி வேறு... ஆதலால் எனக்கு நான் என்ன ஜாதி என்று தெரியாது...! 

பதிவுலகில்... இவன் என்ன ஜாதி... இவள் என்ன ஜாதி என்று கேட்டுத் தெரிந்துகொண்டு அதன்பின் பின்னூட்டமிடும்... "ஜாதிவெறி".. மற்றும் ஜாதிவியாதி பீடித்த மரமண்டைகளுக்கு என்னால் சொல்ல முடிவது... என்னை ஜாதிவியாதி பீடிக்காதிருக்க மேற் சொன்னது மட்டும் காரணமன்று. நான் வாழும் நாடு, சூழல், இத்யாதி இத்யாதியுடன்... எனக்குள் இருக்கும் நானேயான நானும் ஒரு காரணம். 

ஜாதியை இழுத்து சந்தி சிரிக்க வைக்கும் பதிவுகளிலும்... பின்னூட்டங்களிலும்... ஜாதிகள் அடையாளம் காட்டப்படுகின்றன. அல்லது... நான் இந்த ஜாதி என்று பெருமையாகப் பீற்றிக்கொள்ளும் இடங்களிலும், நான் இந்த ஜாதி ஆனால் நான் என்னை விடக் குறைவான ஜாதியை மதிக்கிறேன் போன்ற மறைமுகமான பீற்றல்களிலும்... குமட்டல்தான் மிச்சம். 

____________________________________________________________________________

யாரென்றே தெரியாத... இங்கு கண்டேயிராத யார் யாரோ வந்து.. கண்டனமளிக்காத எனக்குக் கண்டனம் அளித்ததை விவரிக்க வார்த்தையன்று. 

இப்பவும்... மற்றவர்கள் இவ்வளவு தூரம் சொல்கிறார்கள் என்பதற்காகக் கண்டனம் அளிக்கலாம் என்றுதான் நினைத்தேன்... என் உள்மனதில் ஒரே சங்கடம்... என் மனதுக்கு உவப்பில்லாத எதையும் நான் செய்வதாக இல்லை. திட்டுவதானாலும் சரி.. பாராட்டுவதானாலும் சரி... எனக்குச் சரி என்று தோன்றுவதையே செய்கிறேன்.   வார்த்தைக்கும்... பூச்சுக்கும்... எனக்கும் ஒரு பின்னூட்டமும்... ஃபாலோயரும் கிடைப்பார் என்ற நம்பிக்கையிலும்... எங்கும் ஜால்ரா அடித்துப் பழக்கமில்லை. 

இதில்... எனக்குத் தெரியாத அந்தப் பெண்களுக்கோ... நர்சிம்முக்கோ சம்மந்தம் இல்லை. இது முழுக்க முழுக்க என் மனம் சம்மந்தப்பட்டது. 

________________________________________________________________________________
தன்னிலை விளக்கம்:

பாஸ்டர்ட் என்ற வார்த்தையின் முழு அர்த்தம் தெரிந்திருந்த போதிலும்... இந்த வார்த்தை சம்மந்தப்பட்ட அந்த ஆணை விட.. எதுவுமறியாத அவன் தாயை அதிகம் கேவலப்படுத்தும் என்ற ஒரே காரணத்தினாலேயே தவிர்த்து வந்திருக்கிறேன்... எனினும்... நிறைய இடங்களில் நான் இந்த வார்த்தையை மனதார உச்சரித்திருக்கிறேன். அது மட்டுமில்லை... என்னிடம் மிக மிக அன்பு செலுத்திய ஒரு உள்ளத்திடம்... பொரிந்து கொட்டியிருக்கிறேன். 

எதன் நிமித்தம் என்று கேட்டால்... ஆதங்கம்.. helplessness... மற்றும் கோபம்.. அது காரணம் எதுவாயிருப்பினும்... இந்த வார்த்தையை நான் பிரயோகித்ததற்கு.. எனக்கு நானே தண்டனை கொடுத்தாலும் கூட அது தீர்ந்து போய் விடாது. என்னுடைய மகனை யாராவது இந்த வார்த்தை கொண்டு திட்டும் பட்சத்தில்... அதில் ஒரு பகுதி தீர்ந்து போகலாம். அதற்கான நாளுக்காகக் காத்திருப்பதைத் தவிர எனக்கு வேறு வழி இல்லை. அதை விட இன்னும் அந்த வார்த்தையை எத்தனை தடவை பயன்படுத்தப் போகிறேனோ... அதுவும் எனக்குத் தெரியாது. 

தவறான ஒரு வார்த்தைப் பிரயோகம்... தவறான ஒரு ஏச்சு... தவறான ஒரு நடவடிக்கை... அது எங்கிருப்பினும்... அது தவறென்று எல்லாருக்கும் தெரியும்... அதைக் கலகலப்ரியாவாகிய நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமென்றில்லை. ஆனால்... அதைக் கண்டிக்கும் அருகதை எனக்கில்லை. நர்சிம் என்னுடைய மகனாக இருக்கும் பட்சத்தில் நான் அதைக் கண்டிக்கலாம். அதே நேரம் சந்தனமுல்லை என் மகளாக இருக்கும் பட்சத்தில் அந்தச் செய்கையையும் கண்டிக்கலாம். அல்லது என்னைத் தாக்குவதற்கென்று வரும் விஷ அம்புகளையும்... எய்தவர்களையும் எள்ளலாம். வேறு யாரையும் அல்ல. 

அப்போ அங்க... அது சொன்னா.. இங்க இது சொன்னா... அப்டின்னு கேட்பவர்களுக்கு... என்னுடைய இதற்கு முன்னரான இடுகையைச் சரியாகப் படிக்கவும்... 

அவ்ளோதான்... நான் கள்ள மௌனம் சாதிக்கும் கள்ளக் காரணத்திற்கு விளக்குப் பிடித்து வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளேன்... 

உங்கள் அளவுக்கு நல்லவர்களாக நான் இல்லாமற் போனது என் குற்றமென்றால்... அதையும் ஏற்றுக் கொள்கிறேன்... மன்னிக்க...! 

நன்றி... 


... lack of sleep... migraine... and... hmm.. well... wotever it is... am obliged/obligated to post this... am DONE! 
______________________________________________________________________________

57 ஊக்கம்::

vasu balaji said...

உன்னை எனக்கு அறிமுகம் செய்த கடவுளுக்கு என் நன்றி. நீ இப்படியே இரு. உன்னில் இருக்கும் உன்னை வணங்குகிறேன்.ஹேட்ஸ் ஆஃப் டு யூ.

சஞ்சயன் said...

முதலாவது பந்தி மிக அழகு.

Radhakrishnan said...

உங்கள் உடல்நலம் சரியாகட்டும் பிரியா. கவலை வேண்டாம்.

அது சரி(18185106603874041862) said...

//
பதிவுலகில்... இவன் என்ன ஜாதி... இவள் என்ன ஜாதி என்று கேட்டுத் தெரிந்துகொண்டு அதன்பின் பின்னூட்டமிடும்... "ஜாதிவெறி".. மற்றும் ஜாதிவியாதி பீடித்த மரமண்டைகளுக்கு என்னால் சொல்ல முடிவது...
//

ஜாதியை எதிர்ப்பதாக சொல்லிக் கொண்டே எப்படியாவது ஒருவரின் ஜாதியை தோண்டித் துருவி கண்டுபிடித்து, அவர் செய்யும்/எழுதும் எல்லாவற்றிற்கும் காரணம் அவர் ஜாதியே என்று ஜாதிப் பெயரை சொல்லி திட்டுவது தான் இங்கு பொர்ச்சி எனக் கொள்ளப்படுகிறது.

குப்புசாமி குறுக்குத் தெருவில் குப்புற விழுந்ததற்கு காரணம் அப்புசாமியின் ஜாதியே என்று உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லையா? இல்லை யாரேனும் தோண்டித் துருவி புலனாய்வு செய்து வினவோ வினவு என்று வினவி அதைக் கண்டுபிடித்து உலகம் அறிய சொன்ன பின்னும் உங்களால் ஜாதியை சொல்லித் திட்டமுடியவில்லையா? ஜாதியை சொல்லி திட்ட முடியாத நீங்கள் எப்படி ஜாதியை ஒழிக்க முடியும்?? அப்ப நீங்க பிற்போக்கு தான்...அப்படித் தான் சொல்வார்கள்!

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

அருமை ப்ரியா!

தூங்கியெழுந்து தெம்பா வாங்க.. பை!!

சத்ரியன் said...

ப்ரியா,

ஜாதியால் பிரிந்திருந்துதான் நம்மில் பாதியைக் கொள்ளிக்கு இறையாக்கினோம் (மிக அண்மையில்) என்பதை எப்போதுதான் உணருமோ நம்மினம்?

ஜாதிக்கூட்டத்திற்காய் கூவிக்கொண்டிருப்பவர்களுக்கு , எதிராய் நின்று வாதிட்டுக்கொண்டிருப்பதைத் தவிர்த்து உங்கள் பயணத்தைத் தொடருங்கள் சகோதரி.

தேவையற்ற மன உளைச்சலால், உங்கள் பணிகள் தடை படுவது புரியவில்லையா உமக்கு?

prince said...

எங்க அம்மா ஒரு கிறிஸ்தவங்க அப்பா ஒரு ஹிந்து..அதுனால என் அப்பவோ அம்மாவோ நீ இந்த கோவிலுக்கு தான் போகணும் நீ இங்க போகக்கூடாதுன்னு சொன்னது கிடையாது.. இது எல்லாமே தனி மனித சுதந்திரம்.அதேபோல நீங்க மௌனம்மாக இருப்பதும் அல்லது உங்கள் கருத்தை வெளியிடுவதும் உங்கள் விருப்பம்...எதோ ஒருவர் உங்களை மறைமுகமாக தாக்கி பேசியதற்காக நீங்க கண்ணகியாகி ஊரையே எரிச்சிருந்தீங்கன்னா சந்தோஷ பட்டிருப்பேன்.. அதை விட்டுட்டு நீங்களும் அவர்களுள் ஒருவர் போலவே பேசுவது. நல்லா இல்லீங்க. நாம யாருங்கிறதை இந்த உலகத்துக்கு காட்டனும் அதுக்கு வேற வழி இருக்குங்க..நாம கொஞ்சம் நிதானமா யோசிப்போமே.கோபம் மனிசனோட கண்ணை மறசிடும்னு சொல்லுவாங்க அதுதான் இங்க நடக்குது!! மீண்டும் கலிகாலம் என்பதை மறுக்க முடியவில்லை...ஜாதி என்பது அந்தகாலத்தில் ஒருவர் செய்கின்ற தொழிலை வைத்தே முடிவு செய்யப்பட்டது... இப்போதோ எல்லோரும் எல்லாமும் செய்கிறார்கள்...எல்லோரும் இந்நாட்டு மன்னரே! சாதி இரண்டொழிய வேறில்லை பாப்பான்னு சொன்னாரு இப்போ அந்த ரெண்டு சாதிக்கிடையே தான் சண்டையே நடக்குது (ஆண்ஜாதி,பெண்ஜாதி)...“Trying to forget someone you love is like trying to remember someone whom you have never met.”" live and let live". One God, one Nation, One life.............

எல் கே said...

தோழி அருமை.. வாழ்த்துக்கள்.

சீமாச்சு.. said...

”யாதுமாகி நின்றாய் காளி !! எங்கும் நீ நிறைந்தாய் !!!”

இங்கும் உண்மைத்தமிழன் இடுகையிலும் உங்கள் கருத்துக்களைப் படித்தேன். உங்கள் மொழியில் உள்ள நேர்மையும் உண்மையும், கருத்துத் தெளிவும் ஆணித்தரமாகப் அறைகிறது. சாதீய மனோபாவங்களில் ஊறித்திளைத்த மறுசாராருக்கு உங்கள் கோணங்கள் புரிய வாய்ப்பில்லை.. அப்படியேப் புரிந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளும் நேர்மை அவர்களுக்கில்லை..

நிறைய எழுதுங்கள்!!

அன்புடன்
சீமாச்சு...

Sabarinathan Arthanari said...

மத சாதி அரசியல் செய்பவர்களின் புத்தி எப்படி இருக்கும் ?

தாக்குபவர்களுக்கு பதிவர் என்ற உணர்வில்லை. மனிதர் என்பதும் நினைவில்லை. மதவெறி / சாதிவெறி பிடித்தவர்கள் அவர்கள்.

தாக்குபவரின் மதம் அது தான் அவர்களது நோக்கம். இரண்டாவது பார்ப்பான், அடிவருடி, சொம்புதூக்கி போன்ற பட்டங்கள் மூலம் தாக்குபவரின் சாதியை தெரிந்து கொண்டு அவர்களை பயமுறுத்துவது. நேற்று பின்னூட்ட விவாதத்தில் உங்களுக்கு நடந்ததும் அதுவே.

இவர்களுக்கு பயந்து நாமே ஒத்து கொள்ளாத சாதியை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

ramachandranusha(உஷா) said...

ரெளத்திரம் கொள். இந்த திமிர்தான் பெண்களுக்கு மிக தேவை.
வாழ்த்துக்கள். க.ப்ரியா இந்த நல்ல எழுத்துக்கும், எண்ணத்திற்கும்! அடிச்சி ஆடுங்க. முன்னாடி
மதுரா என்று ஒரு பதிவர் இப்படித்தான் எழுதுவார். உம்.. அவரையும் பதிவுலகில் இருந்து ஓட வெச்சாச்சு :-(

balavasakan said...

உங்களுக்கு migraine இருக்கோ... பிறகெதுக்கு தலைவலியை ரட்டிப்பாக்கிறீங்க.. நல்லா ரெஸ்ட் எடுங்க... stress ன்னா தலைவலி அதிகமாகும்...விரைவில் குணமைடய இல்லாத கடவுளை பிரார்த்திக்கிறேன்

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

இனிமே யாராவது உன் சாதி என்னன்னு கேட்டா - உன் சாதி தான் என்னுடையதும்ன்னு சொல்லுங்க.. :)

Anonymous said...

இதுக்கெல்லாம் கவலைப்படாதே, எப்பவும் எதாவது ஒரு குறை காண்பது இயல்பு. விட்டு ஒதுக்கு. எப்பவும் போல இருங்க.

Anonymous said...

//தவறான ஒரு வார்த்தைப் பிரயோகம்... தவறான ஒரு ஏச்சு... தவறான ஒரு நடவடிக்கை... அது எங்கிருப்பினும்... அது தவறென்று எல்லாருக்கும் தெரியும்... அதைக் கலகலப்ரியாவாகிய நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமென்றில்லை. ஆனால்... அதைக் கண்டிக்கும் அருகதை எனக்கில்லை. நர்சிம் என்னுடைய மகனாக இருக்கும் பட்சத்தில் நான் அதைக் கண்டிக்கலாம். அதே நேரம் சந்தனமுல்லை என் மகளாக இருக்கும் பட்சத்தில் அந்தச் செய்கையையும் கண்டிக்கலாம். அல்லது என்னைத் தாக்குவதற்கென்று வரும் விஷ அம்புகளையும்... எய்தவர்களையும் எள்ளலாம். வேறு யாரையும் அல்ல.
அப்போ அங்க... அது சொன்னா.. இங்க இது சொன்னா... அப்டின்னு கேட்பவர்களுக்கு... என்னுடைய இதற்கு முன்னரான இடுகையைச் சரியாகப் படிக்கவும்...
அவ்ளோதான்... நான் கள்ள மௌனம் சாதிக்கும் கள்ளக் காரணத்திற்கு ...//

Very convenient. Nice.

You are seeking excuses for not coming to the rescue of a woman who is being subjected to male chavnistic attack.

At the same time, you did not forget to come to the rescue of Hindu women - your women! - when sumajla wrote about them disparagingly. Didn't you?

Our women are different from your women! ha...ha...ha...Arent u saying that?

This is pointed out by Vinavu. Where is your reply?

You are defending: 'I have no relationship with either Mullai or Narsim.'

Please dont adopt such cheap tricks. It is cowardice.

Condemn things condemnable.

Today, Narsim has apologised and that matter be treated as closed.

But you - with your boast - I am a fan of Bharathi ரவுத்திரம் பழகு - etc., should have felt angry with his behaviour of attacking a woman. Empty boast!

You are selectively 'worked up' - when your women are attacked as in the case of sumajla's NARKUDI.

Here, you are not.

All your writing in this blog is irrelevant.

Unknown said...

// வானம்பாடிகள் said...
உன்னை எனக்கு அறிமுகம் செய்த கடவுளுக்கு என் நன்றி. நீ இப்படியே இரு. உன்னில் இருக்கும் உன்னை வணங்குகிறேன்.ஹேட்ஸ் ஆஃப் டு யூ.
//

Repeat...

Be yourself Sister.. Don't get frustrated by these senseless idiots

Anonymous said...

//ரெளத்திரம் கொள். இந்த திமிர்தான் பெண்களுக்கு மிக தேவை.//

தேவையில்லை.

’ரெளத்திரம் கொள்’ என்பதை பாரதி இருபாலருக்கும் தன் ஆத்திசூடியில் சொன்னார். பெண்களுக்கு மட்டுமல்ல.

ஆண்களெல்லாம் ரெளத்திரம் கொள்கின்றனரா? இல்லை. அவர்களில் 99 விழுக்காடு கோழைகள் எனக்கண்டார். எனவே உரக்கச்சொன்னார்.

ரெளத்திரம் தேவையில்லை என்பது என் கருத்தல்ல. ஆனால் என்கே எப்போது ஆருடன் எவ்வளுவு என்பதில்தான் கருத்து வேறுபாடு.

பாரதியை பாராயணம் பண்ணி, சிறிதும் சிந்திக்காமல் தங்கள் வலைபதிவுகளில் போட்டுக்கொண்டு பீற்றிக் கொள்கிறார்கள்.

நேர்கொண்ட பார்வையும், நிமிர்ந்த நன்னடையும் என்றுதான் பெண்கள் இருக்கவேண்டும் என்றார்.

தயவு செய்து சிந்திக்கவும் முதலில்.

சூர்யா ௧ண்ணன் said...

டென்ஷன் ஆகாதிங்க.. உங்களின் நியாயத்தை புரிந்து கொண்டவர்கள் நிறைய பேர் உள்ளார்கள்..
உங்கள் ரெளத்திரத்திற்கு.. ஒரு சல்யூட்!..
ரிலாக்ஸ்!

Anonymous said...

ரெளத்திரம் என்றால் righteous indignation.

You should condemn things condemnable: when the meek and the weak are subjected to humiliating treatment, denied their rights, your righteous indignation should be aroused.

When the poor women are enslaved, when the teenage girls are killed by their own parents and brothers - yesterday one girl was killed by his father-brother duo in Delhi village - for marrying inside gothra, it is called Honour killing - you r.i shoudl be aroused.

When dalit women are raped, your r.i should be aroused.

When children are sent to labour at young age, when girl children are pushed into prostituion, your r.i should be aroused.

When men treat you as doormat, whichever role they play in your life - your r.i should be aroused.

Has your r.i even been aroused in such cases?

Only if so, you can write I am a fan of Bharati.

Here, in the case of Mullai, her r.i is not aroused. She is running helter-skelter to seek excuses.

Therefore, she is making empty boasts.

A few women who are fit to call themselves fans of Bharati, who come to mind right now - are Pateker, Roy and her mom Mary Roy who fought an interesting court battle to win rights of christian women for divorce, Padmini who was raped by chidambaram police but went to court and finally won, Ms Sridhar, d/o Jemini who lived with the Paris (Madras) prostitutues to write about AIDS, and so many who - I would dare say - possesse the ரெளத்திரம்.

Please stop abusing Bharti's words - all you others.

Santhappanசாந்தப்பன் said...

உங்கள் தன்னம்பிக்கைக்கும், நெஞ்சுரத்திறக்கும் வீர வணக்கங்கள்!

ப‌திவு, நிறைய‌ புத்துண‌ர்ச்சி த‌ருகிற‌து.

வாழ்த்துக்க‌ள்!!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

கவலை வேண்டாம் ப்ரியா!
Learn to ignore the people who try to upset you for no reason. Your health and peace are important than this bloging world.

ஈரோடு கதிர் said...

//எனக்குள் இருக்கும் நானேயான நானும் ஒரு காரணம்.//

அந்த ”உங்களுக்கு” ஒரு பெரு வணக்கம்..

//migraine//

குணமாகட்டும்...

பி.ஏ.ஷேக் தாவூத் said...

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு சகோதரி கலகலப்பிரியா,
எல்லாவற்றையும் கடந்து வந்து விட்டதாக நீங்கள் இங்கு அடித்திருக்கின்ற கதையை (ஒரு வேளை நீங்கள் இப்போது கடந்து விட்டீர்களோ என்னவோ) நினைத்து பெருமூச்சொன்றை மட்டுமே என்னால் விட முடிகின்றது.

//ஆனால் நர்சிம் என்ற நபர் இதே ரீதியில்தான் எல்லாப் பதிவுகளையும் எழுதி வந்திருக்கிறாரா?//

இந்த வார்த்தையை நீங்கள் மாதவராஜின் வலைத்தளத்தில் சொல்லியதாக ஞாபகம். இதே அளவுகோலை உங்களால் வசை பாடப்பட்ட எல்லோருக்கும் நீங்கள் பொருத்தி பார்த்தது உண்டா. (பழசை நினைக்க வச்சுட்டேனோ)

கலகலப்ரியா said...

அன்புள்ளங்கள் அனைவரின் கருத்துக்கும் மிக்க நன்றி... அப்புறம் வந்து தனித் தனியாகப் பதில் எழுதுகிறேன்..

இப்போது கிடைத்த அரை மணி நேர மதிய இடைவேளையில்... ஜோ அமலனுக்கும்... சகோதரன் தாவூத்துக்கும் பதில் எழுதலாம் என்று நினைக்கிறேன்...

கலகலப்ரியா said...

//Jo Amalan Rayen Fernando said..

Very convenient. Nice.

You are seeking excuses for not coming to the rescue of a woman who is being subjected to male chavnistic attack.//

WELCOME MR. JO AMALAN RAYEN FERNANDO!!!

I AM NOT SEEKING EXCUSE FOR NOT RESCUING ANYBODY. I DO NOT THINK THAT ANYBODY WAS IN NEED OF RESCUE. I HAVE ENOUGH IMPORTANT OR RATHER MORE IMPORTANT THINGS TO DO. THERE ARE PPL WHO ARE STRUGGLING WITH A LACK OF BASIC NEEDS, LIKE FOOD, DRINKING WATER, CLOTHING, SHELTER, EDUCATION, JOB.. ETC. ETC. AND I AM BUSY WITH THESE STUFF.

MALE CHAUVINISM, FEMALE CHAUVINISM, HINDUISM, BUDDHISM.. ETC.. ETC.. ARE NOT MY SUBJECTS. AM NOT EXPERTISED.

//At the same time, you did not forget to come to the rescue of Hindu women - your women! - when sumajla wrote about them disparagingly. Didn't you?//

I CANNOT REMEMBER ANYTHING ABOUT THIS KIND OF HINDU AND WOMEN PROBLEM.

//Our women are different from your women! ha...ha...ha...Arent u saying that?//

THIS SAYS, WHAT A SHIT YOU ARE!!!!! WHAT THE HELL DO YOU KNOW, YOU BLOODY SHIT HEAD. THAT LADY SAID, THAT SHE'S DIGNIFIED AND THE OTHER MUSLIM WOMEN WITH NO BARDHA ARE NOT DIGNIFIED. GO AND ASK HER THIS BLOODY QUESTION.

//This is pointed out by Vinavu. Where is your reply?//

MY REPLY? SEE MY PREVIOUS POST. ... ER... DON'T YOU KNOW, WHICH ONE IS IT..? THE POST... WITH PORUKKI... PORAMBOKKU... BEMANI.. JO AMALAN... ETC... ETC.. TAKE A LOOK. IT WILL SUIT YOU TOO.

//You are defending: 'I have no relationship with either Mullai or Narsim.'//

I AM NOT DEFENDING. THIS IS THE BLOODY FACT GODDAMNIT.

//Please dont adopt such cheap tricks. It is cowardice.//

YOU COWARD... WHERE THE HELL ARE THE F********* CHEAP TRICKS. IN YOUR POCKET? GO AND SEARCH FOR IT...

//Condemn things condemnable.//

SUCH THINGS LIKE YOU? OF COURSE... YOU ARE RIGHT.

//Today, Narsim has apologised and that matter be treated as closed.//

I DO NOT KNOW. AND THIS IS NONE OF MY ************** BUSINESS.

//But you - with your boast - I am a fan of Bharathi ரவுத்திரம் பழகு - etc., should have felt angry with his behaviour of attacking a woman. Empty boast!//

HELLO YOU EMPTY POCKET... LISTEN... IF I WANT TO BOAST... THERE ARE THOUSANDS OF THINGS... WHICH ARE UNIMAGINABLE FOR YOU... JUST GET YOUR UGLY NOSE OUT FROM MY DIARY. AND... IF I BOAST.. IT'S MY OWN PROBLEM... IF IT DISTURBS YOU... CLOSE YOUR ******* EYES TIGHT... AND GET OUT.

//You are selectively 'worked up' - when your women are attacked as in the case of sumajla's NARKUDI.//

WHO ARE MY WOMEN... YOU *** ****... HAVE YOU READ THE VERY FIRST PARA OF THIS POST.. AT LEAST... AT LEASTTTTTTTTT???... WEH... YOU STINK...

கலகலப்ரியா said...

//Jo Amalan Rayen Fernando has left a new comment on your post "என் கையாலாகாத்தனமும்... ஜாதியற்ற நிலமையும்..":

//ரெளத்திரம் கொள். இந்த திமிர்தான் பெண்களுக்கு மிக தேவை.//

தேவையில்லை.

’ரெளத்திரம் கொள்’ என்பதை பாரதி இருபாலருக்கும் தன் ஆத்திசூடியில் சொன்னார். பெண்களுக்கு மட்டுமல்ல.

ஆண்களெல்லாம் ரெளத்திரம் கொள்கின்றனரா? இல்லை. அவர்களில் 99 விழுக்காடு கோழைகள் எனக்கண்டார். எனவே உரக்கச்சொன்னார்.

ரெளத்திரம் தேவையில்லை என்பது என் கருத்தல்ல. ஆனால் என்கே எப்போது ஆருடன் எவ்வளுவு என்பதில்தான் கருத்து வேறுபாடு.

பாரதியை பாராயணம் பண்ணி, சிறிதும் சிந்திக்காமல் தங்கள் வலைபதிவுகளில் போட்டுக்கொண்டு பீற்றிக் கொள்கிறார்கள்.

நேர்கொண்ட பார்வையும், நிமிர்ந்த நன்னடையும் என்றுதான் பெண்கள் இருக்கவேண்டும் என்றார்.

தயவு செய்து சிந்திக்கவும் முதலில்.//


சிந்திக்கிறதா? இதை நீங்க சொல்றீங்களா ஐயா.. எல்லாம் தெரிஞ்ச எழவாளி... உங்க ஒழைப்பும்... சேவையும்... பதிவுலகம் எல்லாம் கொட்டிக் கெடக்குன்னு எனக்குத் தெரியும். அதைச் சீண்டுவார்... யாராவது இருக்காங்களா தெரியாது. இல்லையென்றால்... ஒரு கடையைப் போட்டு அங்கு உட்கார்ந்து.... கூவிக் கூவி விற்கவும். எனக்கு இந்த வெட்டித் தம்பட்டம் தேவையில்லை.

அவளுக்கு புடலங்கா வேண்டாம்... இவனுக்கு புண்ணாக்கு வேண்டாம்... இதெல்லாம் அவங்க அவங்க தீர்மானிக்கட்டு... உன்னை என்ன சிவனும்... இயேசுவும்.. அல்லாவும்... அல்லது கடவுளில்லை என்று கூறிக்கொண்டிருக்கும் மனிதக்கடவுள்களும்... மற்றவங்க மூக்கு எப்டி இருக்கனும்.. வாய் எப்டி இருக்கனும்னு பார்த்து செரி பண்ணறதக்காகச் செஞ்சு விட்டாங்களா.. போய் வேலையைப் பாரு தம்பி. அப்டி வேலை எதுவும் இல்லையா... இங்க மட்டை அடிக்காத. அங்கதான் உன்னோட வல்ல்ல்ல்ல்லை மனத்தில எல்லாரைப் பத்தியும் ரொம்ம்ம்ப்ப்ப அறிவுபூர்வமா எழுதுவியே. அது பண்ணு... இப்பவே காறித்துப்பி தண்ணி தெளிச்சு விடுறேன். எது வேணா எழுது... போ.

கலகலப்ரியா said...

//Jo Amalan Rayen Fernando
to me

show details 9:51 AM (1 hour ago)

Jo Amalan Rayen Fernando has left a new comment on your post "என் கையாலாகாத்தனமும்... ஜாதியற்ற நிலமையும்..":

ரெளத்திரம் என்றால் righteous indignation.//

IS IT...? THANKS FOR YOUR TRANSLATION JOOOO... HOW SWEET... WHAT A SERVICE... PFFFFFFFTTTTTTT....

//You should condemn things condemnable: when the meek and the weak are subjected to humiliating treatment, denied their rights, your righteous indignation should be aroused.

When the poor women are enslaved, when the teenage girls are killed by their own parents and brothers - yesterday one girl was killed by his father-brother duo in Delhi village - for marrying inside gothra, it is called Honour killing - you r.i shoudl be aroused.//

AGAIN... ARE YOU NUTS? WHAT THE **** ARE YOU TALKING ABOUT..?..WHY ARE YOU TALKING ALL THESE STUFF HERE... DOES THIS POST SAY ANYTHING ABOUT GOTHRA... AND .....PURAMBOKKURAAA.....

//When dalit women are raped, your r.i should be aroused.

When children are sent to labour at young age, when girl children are pushed into prostituion, your r.i should be aroused.

When men treat you as doormat, whichever role they play in your life - your r.i should be aroused.

Has your r.i even been aroused in such cases?//

HAHAHA.... LOL... AND ROFL... YOU ARE TELLING ME ALL THESE STUFF...? VERY FINE... WOT A RESPONSIBILITY.... WOT AN IDIOT...

//Only if so, you can write I am a fan of Bharati.//

WELL... THEN... I THINK... I CAN WRITE MORE THAN THIS.. ER... AND I DON'T NEED YOUR BLOODY PERMISSION FOR THAT...

//Here, in the case of Mullai, her r.i is not aroused. She is running helter-skelter to seek excuses.//

Therefore, she is making empty boasts.

A few women who are fit to call themselves fans of Bharati, who come to mind right now - are Pateker, Roy and her mom Mary Roy who fought an interesting court battle to win rights of christian women for divorce, Padmini who was raped by chidambaram police but went to court and finally won, Ms Sridhar, d/o Jemini who lived with the Paris (Madras) prostitutues to write about AIDS, and so many who - I would dare say - possesse the ரெளத்திரம்.

Please stop abusing Bharti's words - all you others.//

THANKS FOR DA LIST... MR. BUSYBODY... I WILL TAKE CARE OF THIS.... BUT... YOU PUDALANKAA.... UGLY NOSE.. YOU DON'T SPELL THOSE PEOPLE'S NAME... STOP ABUSING THEM!!!!

AND... I DO NOT WANT TO SEE YOUR BLOODY COMMENTS AGAIN... YOU ARE TOOOOOOOOOOOOOOOOOOOO INTELLIGENT... AND TOOOOOOOOOOO GOOD FOR ME TO ANSWER... SO.... GET AWAY...

கலகலப்ரியா said...

ஜோஓஓஓஒ அமலன்... நீ எப்போ... யாரோட போஸ்ட்ட ஒரு வரியாவது படிச்சிருக்கா... எப்போ அதுக்கு ஒழுங்கா கேள்வியோ... பதிலோ போட்டிருக்கா...

உன் அம்மா யாரு... அப்டின்னா... உனக்கு கிளிண்டன் பொண்டாட்டிய தெரியுமான்னு கேப்ப...

உன் அப்பா யாருன்னா... உனக்கு முஷரஃப்ஃபுக்கும் ஒஸாமாவுக்கும் உள்ள ஒத்துமை தெரியுமா அப்டிம்ப...

உன்னோட மண்டைய எங்கயாவது கொண்டு போய் ஸ்கேன் பண்ணு... இங்க ஏதாவது ஒளறிட்டிருந்த...அப்புறம் நல்லா இருக்காதுடியோ...

vasu balaji said...

ஆஹாஆஆஆஆ! ரெண்டு மூணு நாளா எவ்ளோ வேல இருந்திச்சி இவரு அங்கல்லாம் போகாம இங்க வந்துட்டாரா:)). பேசாம இந்தாள போர்க்குற்ற விசாரணைக்கு நாட்டாமையா போட்டா நல்லாருக்குமே? ஸ்ரீலங்கா பிரச்சனைக்கு கொரியாக்கு தீர்ப்பு குடுப்பாரு:))

கலகலப்ரியா said...

||பி.ஏ.ஷேக் தாவூத் said...

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு சகோதரி கலகலப்பிரியா,
எல்லாவற்றையும் கடந்து வந்து விட்டதாக நீங்கள் இங்கு அடித்திருக்கின்ற கதையை (ஒரு வேளை நீங்கள் இப்போது கடந்து விட்டீர்களோ என்னவோ) நினைத்து பெருமூச்சொன்றை மட்டுமே என்னால் விட முடிகின்றது.

//ஆனால் நர்சிம் என்ற நபர் இதே ரீதியில்தான் எல்லாப் பதிவுகளையும் எழுதி வந்திருக்கிறாரா?//

இந்த வார்த்தையை நீங்கள் மாதவராஜின் வலைத்தளத்தில் சொல்லியதாக ஞாபகம். இதே அளவுகோலை உங்களால் வசை பாடப்பட்ட எல்லோருக்கும் நீங்கள் பொருத்தி பார்த்தது உண்டா. (பழசை நினைக்க வச்சுட்டேனோ)||

அஸ்ஸலமு அலைக்கும்.. அன்பின் சகோதரர் தாவூர். வணக்கம். (இது தமிழ்)

நீங்கள் அப்பவும் சரி இப்பவும் சரி... நான் சொன்னவை எவற்றையும் புரிந்து கொள்ளவும் இல்லை... அக்கறையுமில்லையென்பது நன்றாகத் தெரிகிறது. அது அப்படியே இருக்கட்டும். எனக்கும் அதே பெருமூச்சுதான். மொழி மாத்திரமே communication ஆகி விடாது என்பது எவ்வளவு சரி. :)...

அந்த வார்த்தையைச் சொன்ன ஒரு பதிவரை வழிமொழிந்திருக்கிறேன். ஆம்... ஏனென்றால்.. நான் நர்சிம் அவர்களை தொடர்ச்சியாகப் படித்து வந்திருக்கிறேன். அவரைப் பற்றி எதுவும் தெரியாதெனிலும்... அந்த எழுத்துகள் எனக்குப் பிடித்திருக்கின்றன.

மற்ற எதைத் தொடர்பு படுத்திப் பார்க்கணும்..? சுமஜ்லா அவர்களின் படைப்புகளா..? அவரை நான் படித்ததில்லை... அந்தப் பதிவு வந்தபோது.. ஏதோ தட்டிப் பார்த்தேன்.. ம்ம்.. சொல்வதற்கெதுவுமில்லை...

மேலும்.. மக்களுக்குப் பழி எண்ணம் நிறைந்து கிடக்கிறது என்று தெரிகிறது... கறுவிக்கொண்டிருக்கிறீர்கள் என்று தெரிகிறது.. சந்தர்ப்பத்திற்காகக் காத்துக் கொண்டிருக்கிறீர்களென்று தெரிகிறது... நடத்துங்கள்... அக்கறையில்லை... :)

உங்களுக்கும் இது பற்றி உலக அளவில கண்டனங்கள் தெரிவிக்க வேண்டியிருப்பின்... நீங்களும் ஒரு இடுகையோ... எதுவோ செய்யுங்கள்... கொஞ்சம் மனமாவது ஆறட்டும்... நான் எதுவும் சொல்வதற்கில்லை...

அப்புறம்... இங்கு... இந்து... கிறிஸ்தவ... இஸ்லாம்.. மற்றும் பௌத்த... வேற என்ன மதங்கள்.. சமயங்கள் இருக்கின்றனவோ... அவை எதுவும் விளம்பரம் செய்யப்பட மாட்டாது. இதற்கு அது உகந்த இடமல்ல. உங்களுக்கு அதன் அவசியம் எதுவுமிருப்பின்... இந்த இடத்தைப் பயன்படுத்தாதீர்கள்.

நன்றி... (இப்பவும் நீங்கள் எதுவும் புரிந்து கொள்ள விழைய மாட்டீர்களென்று தெரியும்..)

வாழ்க மனிதம்..

கலகலப்ரியா said...

அலைக்கும் அஸ்ஸலமு..* மன்னிக்கவும்... சூடான் முஸ்லிம் சகோதரர் ஒருவரிடம் தொலைபேசியில் கேட்டுத் தெளிந்து கொண்டது.

வானமே எல்லை said...
This comment has been removed by the author.
கலகலப்ரியா said...
This comment has been removed by the author.
Soona Paana said...

// டென்ஷன் ஆகாதிங்க.. உங்களின் நியாயத்தை புரிந்து கொண்டவர்கள் நிறைய பேர் உள்ளார்கள்..
உங்கள் ரெளத்திரத்திற்கு.. ஒரு சல்யூட்!..
ரிலாக்ஸ்! // நானும் இதையே சொல்லிக்குறேன்

வானமே எல்லை said...

hi,

i wrote this in lighter sense. But it seems u r offended.

i deleted . ask u to delete ur comment on mine.

Another misunderstanding. But as a writer never expect all comments should be in support of your view.

Anyway i am sorry if u r really wounded.

கலகலப்ரியா said...

//வானமே எல்லை said...

hi,

i wrote this in lighter sense. But it seems u r offended.

i deleted . ask u to delete ur comment on mine.

Another misunderstanding. But as a writer never expect all comments should be in support of your view.

Anyway i am sorry if u r really wounded.//

well... too late realization... vaname ellai... neway i do delete yer previous comment...

but... DO LEARN TO DIFFERENTIATE CRITICISM AFROM SADISM..

best wishes..
Priya

கலகலப்ரியா said...

FROM * (spello)

சீனு said...

//பாஸ்டர்ட் என்ற வார்த்தையின் முழு அர்த்தம் தெரிந்திருந்த போதிலும்... இந்த வார்த்தை சம்மந்தப்பட்ட அந்த ஆணை விட..//

ஆங்கில வார்த்தைக்கும் தமிழ் வார்த்தை என்று சொல்லும் வார்த்தைக்கும் வித்தியாசம் வேறு வேறு.

என்னையும் பல பேர் பல சந்தர்ப்பங்களில் என்னை இந்த வார்த்தை சொல்லி திட்டியிருக்கிறார்கள். ஆனால், அப்பொழுதெல்லாம் நினைத்துக் கொள்வது என் அம்மாவை பற்றி தான். எனக்கு தெரியுமே அவள் நல்லவள் என்று...அப்புறம் ஏன் சொல்பவர்களை பற்றி கவலை படவேண்டும்?

//ஜாதியை எதிர்ப்பதாக சொல்லிக் கொண்டே எப்படியாவது ஒருவரின் ஜாதியை தோண்டித் துருவி கண்டுபிடித்து, அவர் செய்யும்/எழுதும் எல்லாவற்றிற்கும் காரணம் அவர் ஜாதியே என்று ஜாதிப் பெயரை சொல்லி திட்டுவது தான் இங்கு பொர்ச்சி எனக் கொள்ளப்படுகிறது.//

எனக்கு தெரிந்து இந்த வலைப்பதிவுலகில், ஜாதி தேவையில்லை என்று சொல்பவர்கள் தான் அதிகமாக ஜாதியை இழுக்கிறார்கள், நோன்டி நோன்டி தெரிந்து கொள்கிறார்கள். இந்த கேவலம் இந்த தமிழ் வலையுலகில் தான் நடக்கிறது.

நர்சிமை பற்றி விமர்சித்த பதிவில் கூட இருவரின் ஜாதியை பற்றி சொல்லியாகிவிட்டது. ஆனால், அது அந்த மொத்த விஷயத்தையும் டைவர்ட் செய்ததை அறியவில்லை. அப்புறம் எப்படி ஜாதி ஒழியும் என்று தெரியவில்லை.

//ஜாதியால் பிரிந்திருந்துதான் நம்மில் பாதியைக் கொள்ளிக்கு இறையாக்கினோம் (மிக அண்மையில்) என்பதை எப்போதுதான் உணருமோ நம்மினம்?//

ஓ! ஜாதி தான் காரணமா? நான் நினைக்கவில்லை.

ரவி said...

சகோதரி சுஜ்மலாவை பதிவுலகை விட்டு வெளியேற்றியது உங்கள் ரவுத்திரம் தான் என்பதை உணர்ந்திருக்கிறீர்களா ?

அந்த ரவுத்திரம் ஏன் இப்போது இன்னொரு சகோதரிக்கு எதிராக ஆணாதிக்க வெறியர்கள் கிளம்பும்போது எழவில்லை என்பதாலேயே அவர்கள் அப்படி எழுதினார்கள் என்று நினைக்கிறேன்.

நல்ல உடல் நலம் பெற்று வாருங்கள் சகோதரி முதலில். நீங்கள் நலமாக இருப்பது தான் முக்கியம். இதை எல்லாம் போட்டு குழப்பிக்கொள்ளாதீர்கள்.பிறகு விவாதித்துக்கொள்ளலாம்.

பி.ஏ.ஷேக் தாவூத் said...

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு சகோதரி கலகலப்பிரியா,

//நீங்கள் அப்பவும் சரி இப்பவும் சரி... நான் சொன்னவை எவற்றையும் புரிந்து கொள்ளவும் இல்லை... அக்கறையுமில்லையென்பது நன்றாகத் தெரிகிறது. //
புரிதல் ஆளுக்கு தகுந்த மாதிரி வேறுபடுகின்றது சகோதரி. ஆகையால் தான் என்னால் சரியாக புரிந்து கொள்ள முடியவில்லையோ என்னவோ. நர்சிம்க்கு ஒரு மாதிரியும் சுமஜ்லாவுக்கு ஒரு மாதிரியும் புரிதல்கள் வேறுபடலாமல்லவா ...

//மக்களுக்குப் பழி எண்ணம் நிறைந்து கிடக்கிறது என்று தெரிகிறது... கறுவிக்கொண்டிருக்கிறீர்கள் என்று தெரிகிறது.. சந்தர்ப்பத்திற்காகக் காத்துக் கொண்டிருக்கிறீர்களென்று தெரிகிறது.//

கண்டிப்பாக கிடையாதுங்க சகோதரி. அப்படி பழி எண்ணம் இருந்தால் நானும் தக்காளி பச்ச்சடின்னு கவிதையோ கட்டுரையோ எழுதியிருக்கலாம்.

//அப்புறம்... இங்கு... இந்து... கிறிஸ்தவ... இஸ்லாம்.. மற்றும் பௌத்த... வேற என்ன மதங்கள்.. சமயங்கள் இருக்கின்றனவோ... அவை எதுவும் விளம்பரம் செய்யப்பட மாட்டாது. இதற்கு அது உகந்த இடமல்ல. உங்களுக்கு அதன் அவசியம் எதுவுமிருப்பின்... இந்த இடத்தைப் பயன்படுத்தாதீர்கள். //
நான் விளம்பரதாரர் இல்லைங்கோ. தன்னளவில் இஸ்லாத்தை பின்பற்றும் ஒருத்தர் உங்களுக்கு விளம்பரதாரரா தெரிஞ்சா நான் பொருப்பில்லைங்க.

//நன்றி... (இப்பவும் நீங்கள் எதுவும் புரிந்து கொள்ள விழைய மாட்டீர்களென்று தெரியும்..)//
இப்போவும் நர்சிம் சுமஜ்லானு எதுவமே புரிய மாட்டேங்குது என்பது உண்மை தான்.

கலகலப்ரியா said...

//செந்தழல் ரவி said...
சகோதரி சுஜ்மலாவை பதிவுலகை விட்டு வெளியேற்றியது உங்கள் ரவுத்திரம் தான் என்பதை உணர்ந்திருக்கிறீர்களா ?//

இல்லை... அவர்கள் வெளியேறி விட்டார்களா.. தெரியாது... என்னுடைய கவிதையில் எந்தத் தப்பும் இல்லை... எந்த அவதூறும் இல்லை... அது அவரை வெளியேற்றியதென்றால்.. ஹ்ம்.. எனக்கே தெரியாம என்னோட எழுத்துக்கு பய்ய்ய்ய்ய்ய்யங்கர பவர் இருக்கும் போலருக்கே...

||அந்த ரவுத்திரம் ஏன் இப்போது இன்னொரு சகோதரிக்கு எதிராக ஆணாதிக்க வெறியர்கள் கிளம்பும்போது எழவில்லை என்பதாலேயே அவர்கள் அப்படி எழுதினார்கள் என்று நினைக்கிறேன்.||

இங்க பாருங்க ப்ரதர்... ஆணாதிக்க வெறியர்களென்று உங்களுக்கு ஒருத்தர் தென்பட்டார் என்றால்.. எனக்கு வினவுக் குழு முழுவதுமாக பச்சை ஆணாதிக்க வெறியர்களென்றுதான் தோன்றுகிறது... ஈயத்தைப் பார்த்து பித்தளை இளிச்சதாம் கதையா இது...

உங்கள் சகோதரிக்கு நேர்ந்த அவமானத்தை அவர்கள் பயன்படுத்திக் கொண்டு இன்னும் அந்தப் பெண்ணைக் கேவலப் படுத்தி... தங்களுடைய ஜாதிவெறியையும்.. தனிமனித தாக்குதல்த் தாகத்தையும் தீர்த்துக் கொண்டிருக்கிறார்களென்பது உங்களுக்குப் புரியக் கொஞ்சக் காலமாகும்.. பொறுத்திருங்கள்...

they just used you ppl..

||நல்ல உடல் நலம் பெற்று வாருங்கள் சகோதரி முதலில். நீங்கள் நலமாக இருப்பது தான் முக்கியம். இதை எல்லாம் போட்டு குழப்பிக்கொள்ளாதீர்கள்.பிறகு விவாதித்துக்கொள்ளலாம்.//

பரவாயில்லீங்க... என்னோட உடல்நலம் பற்றி நான் கூறியது இப்படிப்பட்ட அனுதாபத்தைச் சம்பாதித்துக் கொள்வதற்காக அல்ல... i only know my physical condition...

நான் சொல்ல வந்தது.. என்னை பதிவிட வற்புறுத்தியமையை.. இது எனக்கு நேர விரயம்..

you ppl make me sick..

நான் இங்கே எத்தனை போஸ்ட் போட்டிருக்கிறேன்... அதில் எத்தனை பேரைக் கண்டித்திருக்கிறேன்.. தெரியுமா..?

ராஜபக்சே... ஹனிபல்... கடாஃபி..etc.. etc...

எங்கே... நீங்கள் ரொம்ப நியாயமானவரா தெரியுது... சொல்லுங்க பார்க்கலாம்... அந்தக் கவிதை நான் இந்துப் பெண்களுக்காக எழுதினேன்னு...

அப்டிச் சொல்வதும் ஈஸி...

ஆனா... எனக்கு என்னுடைய ப்ரச்சனைகள்... நான் முக்கியத்துவமளிக்கும் வேறு பிரச்சனைகள் நிறைய உண்டு... எழுத வந்தது.. மன உளைச்சலை வாங்கிக் கொள்ள அல்ல... என்னுடைய மன உளைச்சலைக் கொட்டுவதற்கு...

ஒன்று சொல்றேன்... நீங்க ஜாதி.. மதம்.. மட்டை... என்ன வேணா எடுத்துக்குங்க... அதுன்னு சொல்லுங்க... இதுன்னு சொல்லுங்க.. ஆனா.... அதிலெல்லாம் இல்லை இந்தப் பிரச்சனை... இவ்ளோ பேர் அடித்துக் கொள்வதற்கும்.. முட்டிக் கொள்வதற்கும் காரணமானவர்கள்... கோர்த்து விட்டவர்கள்... மிக மிக அமைதியாக இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள்... மிகவும் நல்ல பிள்ளைகளாக வலம் வந்து கொண்டிருப்பார்கள்.. அப்பாடா நாம எதிலும் பட்டுக்கொள்ளவில்லையென்று திருப்தியாக இருப்பார்கள்...

அவர்கள்தான் இதற்கெல்லாம் முக்கிய காரணம்..

அப்பாவிகளாக ஒன்றும் பேசாம இருப்பவர்கள் வேறு.. அப்பாவிகள் போன்று ஒன்றும் பேசாம இருக்காங்க பாருங்க... கொஞ்சம் யோசிங்க...

எதிலும் சம்மந்தப் படாத நான் எதற்கு இத்தனை பாடுபட வேண்டும்...

சுமஜ்லா அவர்கள் போய்விட்டார்கள் என்பதற்காக நான் போய் விட வேண்டுமென்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா.. மன்னிக்கவும்... அதுவும் கஷ்டம்.. எனக்குத் தோணுறப்போ நான் போயிட்டே இருப்பேன்...


உங்கள் சகோதரியின் காயம் புரிகிறது.. எனக்கு வருத்தமா இருக்கு... :).. அது ரொம்பக் கஷ்டம்தான்...

சில பேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்... என்னை அப்படியெல்லாம் அவதூறு செய்தால் உங்கள் சகோதரியின் கஷ்டம் போயிடும்ன்னு... எனக்கு எந்த லின்க்கும் பிடிபடவில்லை... இத்தனை எழுதியதற்கப்புறமும்...

ம்ம்.. அப்புறம் விவாதிக்க என்ன இருக்கு..? உடல்நிலை சரியாகித் திரும்ப வந்து.. கெடுத்துக் கொள்ள வேண்டுமா... மன்னிக்கணும்.. நான் தயாரா இல்லை...

leave me alone... let me in peace..!!!

கலகலப்ரியா said...

//பி.ஏ.ஷேக் தாவூத் said...
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு சகோதரி கலகலப்பிரியா,

//நீங்கள் அப்பவும் சரி இப்பவும் சரி... நான் சொன்னவை எவற்றையும் புரிந்து கொள்ளவும் இல்லை... அக்கறையுமில்லையென்பது நன்றாகத் தெரிகிறது. //
புரிதல் ஆளுக்கு தகுந்த மாதிரி வேறுபடுகின்றது சகோதரி. ஆகையால் தான் என்னால் சரியாக புரிந்து கொள்ள முடியவில்லையோ என்னவோ. நர்சிம்க்கு ஒரு மாதிரியும் சுமஜ்லாவுக்கு ஒரு மாதிரியும் புரிதல்கள் வேறுபடலாமல்லவா ...

//மக்களுக்குப் பழி எண்ணம் நிறைந்து கிடக்கிறது என்று தெரிகிறது... கறுவிக்கொண்டிருக்கிறீர்கள் என்று தெரிகிறது.. சந்தர்ப்பத்திற்காகக் காத்துக் கொண்டிருக்கிறீர்களென்று தெரிகிறது.//

கண்டிப்பாக கிடையாதுங்க சகோதரி. அப்படி பழி எண்ணம் இருந்தால் நானும் தக்காளி பச்ச்சடின்னு கவிதையோ கட்டுரையோ எழுதியிருக்கலாம்.

//அப்புறம்... இங்கு... இந்து... கிறிஸ்தவ... இஸ்லாம்.. மற்றும் பௌத்த... வேற என்ன மதங்கள்.. சமயங்கள் இருக்கின்றனவோ... அவை எதுவும் விளம்பரம் செய்யப்பட மாட்டாது. இதற்கு அது உகந்த இடமல்ல. உங்களுக்கு அதன் அவசியம் எதுவுமிருப்பின்... இந்த இடத்தைப் பயன்படுத்தாதீர்கள். //
நான் விளம்பரதாரர் இல்லைங்கோ. தன்னளவில் இஸ்லாத்தை பின்பற்றும் ஒருத்தர் உங்களுக்கு விளம்பரதாரரா தெரிஞ்சா நான் பொருப்பில்லைங்க.

//நன்றி... (இப்பவும் நீங்கள் எதுவும் புரிந்து கொள்ள விழைய மாட்டீர்களென்று தெரியும்..)//
இப்போவும் நர்சிம் சுமஜ்லானு எதுவமே புரிய மாட்டேங்குது என்பது உண்மை தான்.//


ம்ம்.. ஆமாங்க... நீங்க சொல்றது ரொம்ப நியாயமாதான் இருக்கும்... ஏன்னா நீங்க சொல்றது என்னன்னே புரியல.. அதனால எனக்கு அறிவுக்கு எட்டாத விஷயம் போல..

நான் சொல்றது உங்க அறிவுக்கு எட்டலை.. நீங்க சொல்றது என்னோட அறிவுக்கு எட்டலை... அப்புறம் எதுக்குங்க...

நான் பழிதீர்த்துக்கிட்டது போதாதுன்னா இன்னும் நாலஞ்சு கவிதை எழுதிப் போடுறேனுங்க...

உங்க அறிவுக்கு என்ன எட்டுதோ பார்த்துக்குங்க...

சீனு said...

//உங்கள் சகோதரிக்கு நேர்ந்த அவமானத்தை அவர்கள் பயன்படுத்திக் கொண்டு இன்னும் அந்தப் பெண்ணைக் கேவலப் படுத்தி... தங்களுடைய ஜாதிவெறியையும்.. தனிமனித தாக்குதல்த் தாகத்தையும் தீர்த்துக் கொண்டிருக்கிறார்களென்பது உங்களுக்குப் புரியக் கொஞ்சக் காலமாகும்.. பொறுத்திருங்கள்...//

U r right..."ஆள் சேர்க்கும் படலத்தையும்" சேர்த்துக்கொள்ளவும்.

thiyaa said...

அருமை, வாழ்த்துக்கள்

KASBABY said...

priya,

i used to write comment very rarely,but i do read all your blogs.please try to concentrate on your writings,not on other writers.i personally feel that your writings have been misdirected on unwanted peoples.good or bad nobody going to change themselves.nothing is right or wrong.but it is question of how realistic it is....!

பனித்துளி சங்கர் said...

பெருமைப்படுகிறேன் தோழி வாழ்த்துக்கள் .

உயர்ந்த ஜாதி என்பதனால் எவனும் ஒரு நாளைக்கு நூறு முறை உண்ணப்போவதும் இல்லை .

தாழ்ந்த சாதி என்பதனால் எவனும் உண்ணாமல் தினமும் உயிர் வாழப்போவதுமில்லை .

மனிதனாக வாழ்வதற்கு மதங்கள் தேவை இல்லை .

சந்தோசமா வாழ்வதற்கு ஜாதிகள் தேவை இல்லை .

Unknown said...

முற்பகல் செயின் பிற்பகல் விளையும்!!!!
////தங்கச்சிய நாய் கடிசுடுச்சுபா////

கலகலப்ரியா said...

//pillaival said...
முற்பகல் செயின் பிற்பகல் விளையும்!!!!
////தங்கச்சிய நாய் கடிசுடுச்சுபா////

நாய்ப்பகல் செய்யில் பேய்ப்பகல் விளையும்..

(இந்த இடுகையை நீ வாசித்தாலே தெரியும்.. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.. அப்டிங்கிறத எனக்கு நீ சொல்ல வேண்டிய அவசியம் இல்லையென்பதை..)

சொம்பு தூக்கனும்ங்கிறதுக்காகவே வருவீங்களா... அந்த அருமையான நாய் கடிச்சிடுத்து காமெடிய வெச்சு நீங்க பண்ண காமெடி... இன்னும் முடியலயாடா அப்பு...

உங்க யக்கா இங்க வந்து காச்மூச்சுன்னு என்னமோ கத்திச்சு... அப்புறம் அவங்க இடுகைலயும் என்னமோ கத்திச்சு...

(என்னை மொக்கையென்று யாரோ ஒருத்தன்|ஒருத்தி அங்க பின்னூட்டத்தில சொன்னான்|ள்.. அதனால் ஆமாம் மொக்கைதானென்று ஆமோதித்துப் போட்ட இடுகை அது.. - முதலும் கடைசியுமா ஒரு விளக்கம்... நம்புவதும்.. நம்பாமல் போவதும் உங்க க்ரூப் இஷ்ட்ட்டம்..)

என்னோட ஒரு பதிவைக் கூடப் படிக்காத அந்தப் பெண்மணி... தான் ரொம்பப் பெட்டர்ன்னு சொல்லிட்டு போச்சு... அதுக்கு நான் சட்டையப் புடிச்சு இல்ல நாந்தான் பட்டர்ன்னு வாதாடனுமா... அப்டின்னு நெனச்சு நான் பாட்டுக்கு தலையால சுத்தி தூக்கிப் போட்டுட்டு வேலை பார்த்தேன்...

உங்கக்காவும் நீங்களும்.. அதைத் தூக்கித் தலைல வச்சுக்கிட்டு... எங்கடா சைக்கிள் கேப்ல மாட்டுவண்டி ஓட்டலாம்ன்னு ட்ரை பண்ணிக்கிட்டிருக்கியளாக்கூ.. ம்ம்... நடத்துங்கடி... அதுக்கும் நியாயம் வேணுமுன்னாக்க... கொஞ்சம் வெய்ட் பண்ணுபா... முதல்ல எங்க ஈழப் பிரச்சனையும்.. சோமாலிய.. எரித்திரியப் பிரச்சனையும் கொஞ்சம் தீரட்டும்... அப்புறம் உங்க பிரச்சனையத் தீர்த்துப்புட்டு... மேல திபெத்... சூடான் பிரச்சனை பத்திப் பேசுவோம்..

பிற்பகல் விளைஞ்சா சாம்பார் வச்சு சாப்டற மாதிரி.. கத்ரிக்கா... முருங்கக்கான்னு பார்த்து பயிர் பண்ணுங்கப்பு... இங்க வந்து அலரிக்கொட்டைய விதைக்க வேணாம்..

குடுகுடுப்பை said...

அடிச்சி ஆடீட்டீங்க.

குடுகுடுப்பை said...

நான் எதிர் கவுஜ போடும் மனநிலையில் உள்ளேன்.

Sathyan said...

நெற்றியடி சகோதரம். பாரதியே விரும்பிய ரெளத்திரம் சகோதரியின் எழுத்துக்களில் தெரியுது. பதிவுலகில் சாதி, மத, ஆன்மீக, பகுத்தறிவுப் பேய்கள் கூடி சதிராட்டம் போடுதுகள். உதுகளுன்றை ஆட்டத்துக்கு ஆடினா எங்களுக்குத் தான் உடல் நலம் பாதிக்கும். தங்கள் எழுத்துக்கள், கவிகளை அமைதியாக வாசித்தின்புறும் நூற்றுக்கணக்கான அன்பர்களில் நானுமொருவன். Fernando மாதிரியும் 'வீனாப்போன நா'ஆன வினவு போன்ற 'பதிவுலகச் சொறி நாய்கள்' உங்கள் நலத்தைப் பாதிக்க விடாதீர்கள். தொடர்ந்து ஆக்கங்களைக் காண ஆவலுடன் காத்திருக்கிறோம். நன்றி.

சாதி சாதியென்று சாதிப்பேயாடும் பதிவுலகம்
http://tamilcause.blogspot.com/2010/06/blog-post_4376.html

முல்லை மயூரன் said...

என்ன ஒரு ரௌத்திரம் ,,keep it up

Anonymous said...

Why did you delete all that I wrote and all that you replied?

I am disappointed.

Today, I have posted a new post in my blog, congradulating you for the words used and holding them as an example worthy of emulation by all sorority.

Welcome and read the post and start shooting your words against me in my comments arena.

I promise not to delete them.

Your dear தம்பி. (the way you called me, remember?)

கலகலப்ரியா said...

//Jo Amalan Rayen Fernando said...

Why did you delete all that I wrote and all that you replied?

I am disappointed.

Today, I have posted a new post in my blog, congradulating you for the words used and holding them as an example worthy of emulation by all sorority.

Welcome and read the post and start shooting your words against me in my comments arena.

I promise not to delete them.

Your dear தம்பி. (the way you called me, remember?)//

அட கருமாந்திரம் புடிச்ச மை டியர் தம்பி... நல்லாதான்யா சொறியறா... இங்க என்ன delete பண்ணேன்.. உனக்கு கண்ணிலயே பிரச்சனையா.. இல்ல மூளைலயா...

அண்ட் நல்லா பாரு... இப்பவே காறித்துப்பி விட்டுட்டேன்னு சொன்னேன்... அதாவது நீ என்ன புடலங்கா எழுதினாலும் எனக்கு அக்கறையில்லை... உன்னை எல்லாம் நான் மனுஷங்க லிஸ்ட்லயே சேர்க்கலை..

எல்லாரும் கேட்டுக்குங்கைய்யா... இந்தப் புறம்போக்குத் தம்பி.. உதவாக்கர ஜோ அமலன் என்னைப் பொறுத்த அளவில செத்துட்டான்... இவன என் தம்பின்னு சொல்லவே எனக்குப் பிடிக்கலை... ச்சீ இப்டி ஒரு தம்பி எனக்குன்னு நினைக்கவே எரிச்சல் எரிச்சலா வருது...

இப்பவே இவனைத் தலை முழுகி விடுறேன்... நாசமா போ...

எழுதிக்கிட்டே இரு... என் கிட்ட இருந்து ஒரு ........ பின்னூட்டமும் தேறாது... ஆச தோச அப்பளம் வட... போடா என்னோட எக்ஸ் தம்பி... போ.. இனிமே இந்தப் பக்கம் எட்டிப் பார்த்த... நான் திட்டுறது பய்ய்ய்ய்ய்யங்கரமா இருக்கலாம்...

Unknown said...

Hi prea
You have wonderful writing skill, please don't waste it with these kind of matters. Please try to focus and use this time for your imported things and eelam matters.

regards
Ravi

Sri said...

Good - worth reading it :)

Srini

கலகலப்ரியா said...

பாலா சார் பெரிய பெரிய வார்த்தை எல்லாம் எதுக்கு... நன்றி சார்..

நன்றி விசரன்..

நன்றி ராதாகிருஷ்ணன்..

நன்றி அதுசரி...

நன்றி சந்தனா..

நன்றி சத்ரியன்..

நன்றி ப்ரின்ஸ்..

நன்றி எல்.கே..

நன்றி சீமாச்சு..

நன்றி அர்த்தநாரி..

உஷா... உங்க வார்த்தைகள் என்னைச் சற்று உசுப்பி விட்டன... ரொம்ப நன்றி..

நன்றி வாசு.. ம்ம்.. இப்பவே ஆரம்பிச்சாச்சா டாக்டர்... ம்ம் பார்த்துக்கறேன்..

நன்றி மயில்..

நன்றி முகிலன்..

நன்றி சூர்யா...

நன்றி பிள்ளையாண்டான்..

நன்றி ஜெஸ்வந்தி..

நன்றி கதிர்..

நன்றி முழுடிக்கட்..

நன்றி சீனு..

நன்றி தியா...

நன்றி kasbaby..

நன்றி சங்கர்..

நன்றி குடுகுடுப்பையார்..

நன்றி சூர்யாண்ணா..

நன்றி மயூரன்..

நன்றி ரவி.. சிதம்பரப்பிள்ளை..

நன்றி ஸ்ரீ...