header photo

Tuesday, June 29, 2010

சுஹ.. ஐஸ்வர்ய.. விக்ரமாயணம்.. ராவணவதாரம் ... ஹூரே ராவணா...

டைட்டில்ல A MANI RATNAM FILM அப்டின்னு விதம் விதமான ஃபாண்ட் சைஸ்ல பளிச்சுன்னு போட்டுக் காண்பிச்சாலும்... நெசம்மாவா? மணி ஃபில்ம்மா?.. அந்தப் ஃபாண்ட் பார்த்தே பாழாப்போன டவுட்டு வந்து தொலைக்குது... ஹ்ம்ம்.. எல்லாம் பழக்கதோஷம்.. (ஆமா.. நான் ஆன்லைன்ல பார்த்ததால அப்டித் தெரியுதா..? இல்ல க்ராஃபிக் டிஸைனரோட ஆர்வக் கோளாறா..? மணிக்கு அது புடிச்சிருந்திச்சா..?!)

ச்ச்செரி.. அது கெடக்கு... ஆனா எனக்குப் படம் புடிச்சுதுங்க... ஏன் அப்டின்னு அசட்டுப்பிசட்டுன்னு கேக்கப்டாது.. நம்ம ஊர்ல பொங்கல் சாப்டறப்போ.. சில நேரத்தில திகட்டினாலும்.. அதில இருக்கிற முந்திரிப்பருப்பும்.. திராட்சை வத்தலும் பொறுக்கிச் சாப்டுறதுக்காகவே... மூணு வேளையும் பொங்கல்ப் பானையச் சுத்தி வர்ற சென்மமுங்க நானு.. 

ஹிஹி... நான் பெண்ணீயவியாதி இல்லைன்னாலும்... இங்க முதல்ல ஐஸுவ சொல்லியே ஆவணும்.. படம் ஆரம்பிக்கறப்போ.. சிறக விரிக்கிற அந்தக் கழுக பார்த்து மிரண்டுக்கிட்டே.. அதை க்யூட்டா பார்க்கறதில ஆரம்பிக்குது ஐஸுவோட அழகான கலக்கல்... 

"ஆம்பள கூடப் போராட வக்கில்ல".. என்று பயத்தை மறைத்துச் சீறும் போதும்..  "ஜயமுண்டு பயமில்லை மனமே.. ".. என்று பாரதியார் பாடலை அழுத்தி உச்சரிக்கும் போதும்.. கறுப்புத் துணியால்க் கட்டப்பட்ட கண்களை மீறி.. உதடுகளும்.. கன்னங்களும் வெளிப்படுத்தும் நடிப்பு... பப்பப்பப்பா... 

துப்பாக்கியைப் பார்த்து அசையும் நயனங்களின் துல்லியமான உணர்ச்சி வெளிப்பாடு.. "என்னைக் கொல்றதுக்கு நீ யாரு?"-லிருக்கும் ஆதங்கம்..  கடைசியாக.. விழுந்து கொண்டிருந்த விக்ரமை நோக்கி நீளும் கைவிரல்களின் பிடிவாதம்.. இயலாமை.. கைவிரல்கள்.. கண்ணிமை முடிகள்... எல்லாமே நடிக்கின்றன... காட்டுச்சிறுக்கி... மிகப் பொருத்தம்.. 

பக்பக்பக்.... டண்டண்டண்டண்... டண்டனக்கா.. டண்டனக்கா.. சுடுசுடுசுடு... விடுவிடுவிடு... போன்ற மேனரிஸம்.. மிகையாகத் தோன்றுவதற்கு... சுஹாசினியைப் பொறுப்பாக்கினால்... விக்ரம் கனகச்சிதம்... "ய்யேய்.. முட்டாப்பய மவளே" என்று பதைத்துப் போவதும்... "பதிவுற்ற குலசக்தி சரணுண்டு"  என்று நிறுத்திப் "பகையில்லை" என்று தொடர்வதிலிருக்கும் உச்சரிப்பிலிருக்கும் அழகும்.. "நீங்க கண்ணைத் திறந்த உடன என் உசிரு என் கிட்டத் திரும்பி வந்திருக்கக் கூடாது" என்று அந்த முரட்டு உருவத்தினூடு மென்மையாக அங்கலாய்ப்பதும்.. "பொறாமையா இருக்கு சாமி.. அப்டியே அடி வயிறு எரியுது..." என்று குரல் தழைத்து உருகுவதும்.. "இந்தப் பொறாமை இப்போ உள்ள புகுந்து உங்க எல்லாரையும் விட என்னை உசரமாக்கிடிச்சு".. என்று குரலிலேயே அந்த உசரத்தைக் காண்பிப்பதும்.. "குருவம்மோய்.. குருவம்மோய்".. என்று சீண்டுவதும்.. ஃபன்டாஸ்ட்டிக்... 

ப்ருத்வி... பேபி ஃபேஸ் வச்சுக்கிட்டே.. இப்டி ஒரு குரூரம் வெளிப்படுத்த முடியுமென்று காண்பித்ததுக்கு சபாஷ்.. கை வெட்டுப்பட்டு வலியில் துடித்துக் கொண்டிருந்தவன் கையை நிமிண்டியபடி பேசும் ஒரு காட்சி போதும்.. யப்பா... ஆனா... இங்கயும் வசனமா.. இயக்கமா... என்ன கோளாறோ... கட்டிவைத்திருக்கும் ஒருவன் தொண்டை வறண்டு போக விளக்கம் சொல்லுவானாம்.. இவரு மெதுவா கேட்டுக்கிட்டே அடி அடியா எடுத்து வச்சு வருவாராம்.. அப்புறம் திடீருன்னு ஆயிரம் கிலோமீட்டர் ஓடி வந்த மாதிரி இளைச்சுக்கிட்டே.. "அவங்கள பாத்தீங்களா? எப்டி இருந்தாங்க?" என்று பதைபதைப்பாராம்.. டூ மச்.. செயற்கைத்தனம்... 

கார்த்திக்.. அடுத்த காமடி பீஸ்... வால் வைக்கல... சஞ்சீவி மலையைக் கைல கொடுத்து.. தூக்கச் சொல்லலை... மத்தபடி நாந்தேன் அனுமாரு அப்டின்னு காண்பிக்கறதுக்காக அவரு பறந்து பறந்து கிடைச்சதில எல்லாம் தொங்குவதும்.. கிரிகிரிகிரி உட்டாலங்கடி கிரிகிரிம்பதும்... எரிச்சல்..

"ஆட்ட வெட்டிச் சூப்பு வைக்கச் சொல்லுதீய.. நெஞ்செலும்பு சூப்பு வைக்கேன்".. "சோக்கடிச்சா சிரிக்கறதில்ல.. துப்பாக்கி காட்டினா பயப்டறதில்ல... என்ன வாழ்க்கைடா சாமி.." பிரபு க்யூட்... 

பிரியாமணி தைரியமா வந்து.. "மய்யிரு.. மாட்டிட்டேன்... ஏன் பேசப்டாதோ" .. என்று எகிறி.. "எல்லாம் போச்சு.." .. பரிதாபமா செத்துப் போறா... ரஞ்சிதா பரிதாபமா இருக்கா... ம்ம்.. 

அழகான லொகேஷன்.. அருமையான காட்சி அமைப்பு... ஒளிப்பதிவு.. அந்தச் சிலை.. மலை... அருவி... பள்ளத்தாக்கு... பாலம்.. காடு.. கழுகு... ஐஸ்வர்யா.. ஸ்க்ரீன் முழுக்க வியாபித்திருக்கும் விக்ரமின் பராக்கிரம முதுகு... எல்லாம் இருந்தும்... ஏதோ நெருடல்... திருப்தியாக இல்லை... என்னவோ மிஸ்ஸிங்.. .

என்னது? அப்டின்னு யோசிச்சா..ம்ம்... சுஹாசினி மேடம்ம்.. அவ்வ்வ்... படத்தைத் தூக்கி படத்தின் ஆரம்பத்தில் விக்ரம் நின்ற இடத்தில் நிறுத்த வேண்டிய கதை வசனம்... மொத்தத்தையும் அறுந்த பாலத்துடன் விழுந்த ப்ருத்வி நிலமைக்கு ஆளாக்கி விடுகிறது... "என் முடிவு உன் கைல இல்லை.." என்று சொல்லிவிட்டு ஆற்றில் விழுந்திருந்தா நச்-ன்னு இருந்திருக்குமா இல்லையா.. கூடவே... "நான் சாகமாட்டேன்..".. அப்டின்னும் எதுக்கு சொல்லணும்கிறேன்.. பாலத்தில தொங்குறப்போ... விக்ரம் ஐஸ் பத்தி நறுக்குன்னு ஒரு வார்த்தை நல்லதா சொன்னா போதாதா... வேற என்ன... "தங்கம்.."... வேற என்ன.. "வைரம்..".. அலுப்பா இருக்கு.. விக்ரம் சிரிக்க சிரிக்கப் பேசுவாரு அப்டிங்கிறாங்க.. அது எப்டின்னு அவரு நம்பியார் மாதிரி மிமிக்ரி செஞ்சு காண்பிக்கிறாரு... என்னாத்தச் சொல்ல.. 

ம்ம்... எப்டியோ.. ஆரம்பத்திலயே சொன்ன மாதிரி எனக்குப் படம் புடிச்சதுங்க.. ஆனா மணிரத்னம் சார்.. இவ்ளோ துணிச்சலா ஒரு கதைய சொல்றீங்க... ராவணன் பக்கத்தில இருந்து சொல்றீங்க... ரயில்ல சங்கிலிய புடிச்சு இழுத்து நிறுத்துற மாதிரி... நச்-ன்னு... முடிச்சிருக்கலாமின்னு எனக்கு ஒரே ஆதங்கமாத்தேன் இருக்கு... 

ஆனாலும்... ஹூரே ராவணா...~

__________________________________________________________________

62 ஊக்கம்::

கலகலப்ரியா said...

நேயர் விருப்பம்...

vasu balaji said...

புடி புடி, நடு ரோவில ஓர சீட்டு நம்மது:)

vasu balaji said...

மொதல்ல என்ன மாதிரி தரடிக்கட்டுக்கு விமரிசனம் போட்டதுக்கு நன்றி.மொத விமரிசனம், மேட்டுக்குடி, கார்போரேட்டுன்னு பயமுறுத்தாம படத்துல வர ஐசு மாதிரியே அழகான விமரிசனம்.

vasu balaji said...

/ "பொறாமையா இருக்கு சாமி.. அப்டியே அடி வயிறு எரியுது..." என்று குரல் தழைத்து உருகுவதும்.. "இந்தப் பொறாமை இப்போ உள்ள புகுந்து உங்க எல்லாரையும் விட என்னை உசரமாக்கிடிச்சு".. என்று குரலிலேயே அந்த உசரத்தைக் காண்பிப்பதும்./

இது எனக்கும் ரொம்பப் பிடிச்சது. எனக்கு ஐஸ் கண்ணும் அதில உணர்ச்சியும்தான் தெரிஞ்சது. அதுக்கு கீழ வயசு, கருவளையம் கண்றாவியெல்லாம் தெரியலை. உனக்கும் தெரியலைல்ல.

/ரயில்ல சங்கிலிய புடிச்சு இழுத்து நிறுத்துற மாதிரி... நச்-ன்னு... முடிச்சிருக்கலாமின்னு எனக்கு ஒரே ஆதங்கமாத்தேன் இருக்கு... /

ஒரே கடல் மாதிரியெல்லாம் மணிரத்னம்னாலும் தமிழ்ல எடுத்துற முடியுமாம்மா.

படம் பிடிச்சிருக்கு. விமரிசனம் பிடிச்சிருக்கு. சொல்லியிருக்கிற காட்சியெல்லாம் எனக்கும் பிடிச்சதுதான். :). நேயர் விருப்பம் நிறைவேற்றினதுக்கு நன்றி.

Chitra said...

சரளமா விமர்சித்து கலக்கிட்டீங்க!

அது சரி(18185106603874041862) said...

எல்லாத்தையும் தெளிவா அலசிருக்கீங்க...அதே சமயம் ஒட்டு மொத்த கதையையும் சொல்லாம கரெக்டா சொல்ல வேண்டியதை மட்டும் சொல்லிருக்கீங்க....நல்ல விமர்சனம்..

உங்க விமர்சனம் பிடிச்சிருக்கு....:))

அது சரி(18185106603874041862) said...

//
"ய்யேய்.. முட்டாப்பய மவளே" என்று பதைத்துப் போவதும்... "பதிவுற்ற குலசக்தி சரணுண்டு" என்று நிறுத்திப் "பகையில்லை" என்று தொடர்வதிலிருக்கும் உச்சரிப்பிலிருக்கும் அழகும்.. "நீங்க கண்ணைத் திறந்த உடன என் உசிரு என் கிட்டத் திரும்பி வந்திருக்கக் கூடாது" என்று அந்த முரட்டு உருவத்தினூடு மென்மையாக அங்கலாய்ப்பதும்.. "பொறாமையா இருக்கு சாமி.. அப்டியே அடி வயிறு எரியுது..." என்று குரல் தழைத்து உருகுவதும்.. "இந்தப் பொறாமை இப்போ உள்ள புகுந்து உங்க எல்லாரையும் விட என்னை உசரமாக்கிடிச்சு".. என்று குரலிலேயே அந்த உசரத்தைக் காண்பிப்பதும்..
//

கரெக்ட்..படத்தோட ஒட்டு மொத்த கருவே அது தான்...

விக்ரம்!! விஸ்வரூபம்!

நசரேயன் said...

உங்க விமர்சனத்துக்காக படம் கண்டிப்பா பார்ப்பேன்

veeramanikandan said...

ha ha ha... comic analysis... nalla vimarsanam...

கபிலன் said...

என்னமோ கொஞ்சம் பயமாவே இருந்துச்சு....
இருந்தாலும் ஒரு வழியா தைரியத்தை வரவெச்சு....
என் முதல் பின்னூட்டம்...
நேரில் விவாதிப்பதை போன்ற எழுத்து நடை....
nalla irukkungakka........

அன்பேசிவம் said...

ம்ம் சில,பல நீங்கலாக படம் நல்லாத்தான் இருக்கு, ஆனா இது மணி படமாச்சே, அதான் அப்படி அட்ஜஸ்ட் ஆகிக்க முடியலை. :-(

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

நல்லாத்தேன் எழுதிருக்கீய.. படம் பிடிச்சிருக்கா இல்ல பிடிக்கலியான்னு (எனக்குத் தான்) பாத்த நாளுலேர்ந்து கொழம்பிப் போயி கெடக்கேன்.. ராவணாய நமஹ.. :))

Cable சங்கர் said...

ரயிலை நிறுத்தி ராவணனிடம் போய் நிற்பதோடு படம் முடிந்திருந்தால் இவ்வளவு விமர்சனஙக்ளையும் தூக்கி அடிட்திருக்கும் பிரியா..

vasu balaji said...

அடடா! பெண்ணீயம்னு சொல்லீட்டியாம். ஒருத்தருக்கு பொத்துகிட்டு வந்து நெகடிவ் போட்டாரு. ஆனா அத பின்னூட்டத்துல சொல்ல துணிவில்லை. தெரியாம கேக்குறேன். ஒருத்தருக்கு படம் பிடிச்சிருக்குன்னு சொல்ல உரிமையிருக்கா? இல்லையா? இன்னொரு முறையும் படித்தேன். எங்கேயும் விமரிசனத்தில் படம் பார்க்கலாம் என்றோ ஊத்திக்கும் என்றோ மார்க்கட்டிங் இல்லையே?

ஒரு வேளை மணிரத்தினத்தை விமரிசிக்காம படத்தை மட்டும் விமரிசிச்சது தெய்வ குத்தமோ? சொம்புக்கே வெளிச்சம்.:)

pudugaithendral said...

படம் பாக்கணுமா வேணாமான்னு இன்னும் முடிவாகலை. மணிரத்தினத்தின் ரசிகைதான ஆனாலும் கொஞ்சம் டெர்ரராத்தான் இருக்கு. யோசிச்சிட்டு பாக்கறேன்

ராஜ நடராஜன் said...

முந்திரிப்பழம்,திராட்சையை மட்டும் சாப்பிட்டு விட்டு பொங்கல் நல்லாயிருக்குதுன்னு சொல்லக்கூடாது.மொத்தமா பொங்கல் சாப்பிட்டு ஏப்பம் வரணும்.நல்லாயிருக்குது பொங்கல்ன்னு சொல்லனும்.

இயக்குநர் மணிரத்னத்தின் தடுமாற்றம் நிறைய.ராவணன்,வீரப்பன்,மாவோயிஸ்ட் கிச்சடி.

ஊர்ல வேற நல்ல சமையல்(காரர்) கிடைக்காததால் இருக்குறத வெச்சு சமாளிக்க வேண்டியதுதான்.

பொன்கார்த்திக் said...

அருமையான விமர்சனம் ஓய் !! உமது சேவை தொடர எமது வாழ்த்துக்கள்..

Bala said...

Ennathu Siva Perumaan silai yaa? Athu Vishnu silai thaana. Hari um Sivanum onnu nu sonnathukkaga ippadiyaa?

Anonymous said...

எனக்கும் படம் பிடிச்சிருந்துது. ஆனா முடிவு என்னமோ சப்னு இருந்த மாதிரி தோணிச்சு

Jayadev Das said...

//சிவபெருமான் சிலை// அது சிவபெருமான் சிலை இல்லை, பெருமாள் சிலை. இந்த மாதிரி படத்தப் பாத்தா ராவணன் படம் கூட புடிச்ச படமாத்தான் தெரியும், எப்படியோ இத்தினை நாள் தேடி கடைசியா இந்தப் படத்தையும் புடிச்சிருக்குன்னு சொன்ன ஒரே ஆளை இப்பத்தான் பாக்கிறேன்.

ஆ.ஞானசேகரன் said...

அருமை... நான் இன்னும் படம் பார்க்கவில்லை

கலகலப்ரியா said...

மன்னிச்சுக்கோங்கப்பா.. அது எனக்கு சிவபெருமான் சிலை மாதிரி தோணிடுத்து.. பெருமாள் சிலையாம்ல...

கலகலப்ரியா said...

||Jayadeva said...
//சிவபெருமான் சிலை// அது சிவபெருமான் சிலை இல்லை, பெருமாள் சிலை. இந்த மாதிரி படத்தப் பாத்தா ராவணன் படம் கூட புடிச்ச படமாத்தான் தெரியும், எப்படியோ இத்தினை நாள் தேடி கடைசியா இந்தப் படத்தையும் புடிச்சிருக்குன்னு சொன்ன ஒரே ஆளை இப்பத்தான் பாக்கிறேன்||

வணக்கமுங்கோ... மத்தவங்க எல்லாருக்கும் புடிச்சது எனக்குப் புடிக்கனும்னும் இல்ல... புடிக்காதது புடிக்கக் கூடாதுன்னும் இல்ல... நானு நானுதேன்... நீரு நீருதேன்... அதில்லாம... சிவபெருமான் சிலைன்னு தப்பு பண்ணது ரொம்பக் குத்தம்தானுங்கோ.. அத நாம பெருமாள் கிட்ட டீல் பண்ணிக்கறோம்...

ஒரிஜினல் நேம்ல வரத் தைரியம் லேதா... ஹிஹி... பை பை..

கயல் said...

அட சும்மா ஜோராகீதும்மா!
புடிச்சிருந்திச்சு சொன்னாங்காட்டி நானும் இந்த தபா ‘ராவ(ண்)ணன்’ கட்டாயம் தியேட்ட்ரு போய் பாப்பேங்கண்ணு! வர்ட்டா.....

Anonymous said...

இன்னும் படம் பார்க்கலை :(( ப்ரித்வி கோவிச்சுப்பானே என்னவோ.. சீக்கிரம் பார்க்கனும்..

RAMYA said...

விமர்சனம் நல்லா இருக்கு.. அப்போ கண்டிப்பா நான் படம் பார்க்கறேன்..

எல் கே said...

arumai priya... nermayana vimarsanam

Jey said...

படம் பழசாகி எங்கூரு கொடாயில போடும்போது பாகலாம்னு இருக்கேன், ககபி மேடம்.

'பரிவை' சே.குமார் said...

சரளமா விமர்சித்து கலக்கிட்டீங்க!

உங்க விமர்சனத்துக்காக படம் கண்டிப்பா பார்ப்பேன்

கலகலப்ரியா said...

|| வானம்பாடிகள் said...

புடி புடி, நடு ரோவில ஓர சீட்டு நம்மது:)||

அடச்சே... இந்தப் புத்தி போகவே மாட்டேங்குதே சார்..

கலகலப்ரியா said...

||வானம்பாடிகள் said...

மொதல்ல என்ன மாதிரி தரடிக்கட்டுக்கு விமரிசனம் போட்டதுக்கு நன்றி.மொத விமரிசனம், மேட்டுக்குடி, கார்போரேட்டுன்னு பயமுறுத்தாம படத்துல வர ஐசு மாதிரியே அழகான விமரிசனம்.||

ஆகா... நன்றி சாரே..

கலகலப்ரியா said...

||வானம்பாடிகள் said...

/ "பொறாமையா இருக்கு சாமி.. அப்டியே அடி வயிறு எரியுது..." என்று குரல் தழைத்து உருகுவதும்.. "இந்தப் பொறாமை இப்போ உள்ள புகுந்து உங்க எல்லாரையும் விட என்னை உசரமாக்கிடிச்சு".. என்று குரலிலேயே அந்த உசரத்தைக் காண்பிப்பதும்./

இது எனக்கும் ரொம்பப் பிடிச்சது. எனக்கு ஐஸ் கண்ணும் அதில உணர்ச்சியும்தான் தெரிஞ்சது. அதுக்கு கீழ வயசு, கருவளையம் கண்றாவியெல்லாம் தெரியலை. உனக்கும் தெரியலைல்ல.

/ரயில்ல சங்கிலிய புடிச்சு இழுத்து நிறுத்துற மாதிரி... நச்-ன்னு... முடிச்சிருக்கலாமின்னு எனக்கு ஒரே ஆதங்கமாத்தேன் இருக்கு... /

ஒரே கடல் மாதிரியெல்லாம் மணிரத்னம்னாலும் தமிழ்ல எடுத்துற முடியுமாம்மா.

படம் பிடிச்சிருக்கு. விமரிசனம் பிடிச்சிருக்கு. சொல்லியிருக்கிற காட்சியெல்லாம் எனக்கும் பிடிச்சதுதான். :). நேயர் விருப்பம் நிறைவேற்றினதுக்கு நன்றி.||

ஆகா.. கலவரத்த உண்டு பண்றாய்ங்களே... எனக்கு ஏதாவது தோணினாலும் சொல்றதுக்கு நான் என்ன கேனயா..

கலகலப்ரியா said...

||Chitra said...

சரளமா விமர்சித்து கலக்கிட்டீங்க!||

நன்றி சித்ரா...

கலகலப்ரியா said...

||அது சரி said...

எல்லாத்தையும் தெளிவா அலசிருக்கீங்க...அதே சமயம் ஒட்டு மொத்த கதையையும் சொல்லாம கரெக்டா சொல்ல வேண்டியதை மட்டும் சொல்லிருக்கீங்க....நல்ல விமர்சனம்..

உங்க விமர்சனம் பிடிச்சிருக்கு....:))||

உங்க விமர்சனத்துக்கு நன்றிங்கோ..

கலகலப்ரியா said...

||அது சரி said...

//
"ய்யேய்.. முட்டாப்பய மவளே" என்று பதைத்துப் போவதும்... "பதிவுற்ற குலசக்தி சரணுண்டு" என்று நிறுத்திப் "பகையில்லை" என்று தொடர்வதிலிருக்கும் உச்சரிப்பிலிருக்கும் அழகும்.. "நீங்க கண்ணைத் திறந்த உடன என் உசிரு என் கிட்டத் திரும்பி வந்திருக்கக் கூடாது" என்று அந்த முரட்டு உருவத்தினூடு மென்மையாக அங்கலாய்ப்பதும்.. "பொறாமையா இருக்கு சாமி.. அப்டியே அடி வயிறு எரியுது..." என்று குரல் தழைத்து உருகுவதும்.. "இந்தப் பொறாமை இப்போ உள்ள புகுந்து உங்க எல்லாரையும் விட என்னை உசரமாக்கிடிச்சு".. என்று குரலிலேயே அந்த உசரத்தைக் காண்பிப்பதும்..
//

கரெக்ட்..படத்தோட ஒட்டு மொத்த கருவே அது தான்...

விக்ரம்!! விஸ்வரூபம்!||

கரீட்டு.. இப்பூடித்தான் விமர்சனம் எழுதனும்..

கலகலப்ரியா said...

||நசரேயன் said...

உங்க விமர்சனத்துக்காக படம் கண்டிப்பா பார்ப்பேன்||

நன்றி நசரேயன்... (மணி கிட்ட யாராவது சொல்லுங்கப்பா..)

கலகலப்ரியா said...

||veeramanikandan said...

ha ha ha... comic analysis... nalla vimarsanam...||

ஹிஹி.. நன்றி மணிகண்டன்..

கலகலப்ரியா said...

||கபிலன் said...

என்னமோ கொஞ்சம் பயமாவே இருந்துச்சு....
இருந்தாலும் ஒரு வழியா தைரியத்தை வரவெச்சு....
என் முதல் பின்னூட்டம்...
நேரில் விவாதிப்பதை போன்ற எழுத்து நடை....
nalla irukkungakka........||

அடப்பாவமே... அப்டி என்ன பயம்.. ம்ம்.. நன்றிங்கோ..

கலகலப்ரியா said...

||முரளிகுமார் பத்மநாபன் said...

ம்ம் சில,பல நீங்கலாக படம் நல்லாத்தான் இருக்கு, ஆனா இது மணி படமாச்சே, அதான் அப்படி அட்ஜஸ்ட் ஆகிக்க முடியலை. :-(||

அதும் செர்தேன்...

கலகலப்ரியா said...

||எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

நல்லாத்தேன் எழுதிருக்கீய.. படம் பிடிச்சிருக்கா இல்ல பிடிக்கலியான்னு (எனக்குத் தான்) பாத்த நாளுலேர்ந்து கொழம்பிப் போயி கெடக்கேன்.. ராவணாய நமஹ.. :))||

நன்றி சந்தனா... (இந்தக் குழப்பம் நிறைய்ய்யப் பேருக்கு இருக்கும் போலருக்கே)

கலகலப்ரியா said...

||Cable Sankar said...

ரயிலை நிறுத்தி ராவணனிடம் போய் நிற்பதோடு படம் முடிந்திருந்தால் இவ்வளவு விமர்சனஙக்ளையும் தூக்கி அடிட்திருக்கும் பிரியா..||

அப்டித்தான் நினைக்கேன் கேபிள்ஜி... நன்றி...

கலகலப்ரியா said...

||வானம்பாடிகள் said...

அடடா! பெண்ணீயம்னு சொல்லீட்டியாம். ஒருத்தருக்கு பொத்துகிட்டு வந்து நெகடிவ் போட்டாரு. ஆனா அத பின்னூட்டத்துல சொல்ல துணிவில்லை. தெரியாம கேக்குறேன். ஒருத்தருக்கு படம் பிடிச்சிருக்குன்னு சொல்ல உரிமையிருக்கா? இல்லையா? இன்னொரு முறையும் படித்தேன். எங்கேயும் விமரிசனத்தில் படம் பார்க்கலாம் என்றோ ஊத்திக்கும் என்றோ மார்க்கட்டிங் இல்லையே?

ஒரு வேளை மணிரத்தினத்தை விமரிசிக்காம படத்தை மட்டும் விமரிசிச்சது தெய்வ குத்தமோ? சொம்புக்கே வெளிச்சம்.:)||

அடச்சே... இந்த வோட்டு மானிட்டர் பண்ற உத்யோகத்தில இருந்து உங்கள முதல்ல தூக்கணும் சார்... :)).. பாவம் அவங்களுக்கு அது மெண்டல் தெரபி மாதிரி.. விடுவீங்களா...

கலகலப்ரியா said...

||புதுகைத் தென்றல் said...

படம் பாக்கணுமா வேணாமான்னு இன்னும் முடிவாகலை. மணிரத்தினத்தின் ரசிகைதான ஆனாலும் கொஞ்சம் டெர்ரராத்தான் இருக்கு. யோசிச்சிட்டு பாக்கறேன்||

பார்த்துட்டும் யோசிக்கலாமில்ல... பாருங்... பாருங்..

கலகலப்ரியா said...

||ராஜ நடராஜன் said...

முந்திரிப்பழம்,திராட்சையை மட்டும் சாப்பிட்டு விட்டு பொங்கல் நல்லாயிருக்குதுன்னு சொல்லக்கூடாது.மொத்தமா பொங்கல் சாப்பிட்டு ஏப்பம் வரணும்.நல்லாயிருக்குது பொங்கல்ன்னு சொல்லனும்.

இயக்குநர் மணிரத்னத்தின் தடுமாற்றம் நிறைய.ராவணன்,வீரப்பன்,மாவோயிஸ்ட் கிச்சடி.

ஊர்ல வேற நல்ல சமையல்(காரர்) கிடைக்காததால் இருக்குறத வெச்சு சமாளிக்க வேண்டியதுதான்.||

அது செரி... அம்மா சமைச்சது எது வேணா சாப்டற மாதிரி... மணி என்ன எளவ எடுத்தாலும் பார்ப்போமின்னு ஆயிடுத்தில்ல... அவ்வ்வ்...

கலகலப்ரியா said...

|| Ponkarthik said...

அருமையான விமர்சனம் ஓய் !! உமது சேவை தொடர எமது வாழ்த்துக்கள்..||

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஓய்...

கலகலப்ரியா said...

|| Bala said...

Ennathu Siva Perumaan silai yaa? Athu Vishnu silai thaana. Hari um Sivanum onnu nu sonnathukkaga ippadiyaa?||

ஹிஹி... lateral thinkin.. (ம்க்கும்... அவ்ளோ தூரம் ரோசன பண்ணி இருந்தா ஏன் இவ்ளோ கஷ்டம்ங்கிறேன்... ஏதோ சிலை... அத ஆராய்ச்சி பண்ணத் தோணல.. அவ்வ்வ்..)

கலகலப்ரியா said...

||சின்ன அம்மிணி said...

எனக்கும் படம் பிடிச்சிருந்துது. ஆனா முடிவு என்னமோ சப்னு இருந்த மாதிரி தோணிச்சு||

அதேதான் சின்னம்முணியோ..

கலகலப்ரியா said...

||ஆ.ஞானசேகரன் said...

அருமை... நான் இன்னும் படம் பார்க்கவில்லை||

நன்றி ஞானசேகரன்... ம்ம்.. பாருங்க..

கலகலப்ரியா said...

||கயல் said...

அட சும்மா ஜோராகீதும்மா!
புடிச்சிருந்திச்சு சொன்னாங்காட்டி நானும் இந்த தபா ‘ராவ(ண்)ணன்’ கட்டாயம் தியேட்ட்ரு போய் பாப்பேங்கண்ணு! வர்ட்டா.....||

ச்ச்செரிங்கண்ணு... மவராசியாப் பார்த்துட்டு வா கண்ணு..

கலகலப்ரியா said...

||மயில் said...

இன்னும் படம் பார்க்கலை :(( ப்ரித்வி கோவிச்சுப்பானே என்னவோ.. சீக்கிரம் பார்க்கனும்..||

ஆமாம் மயில்.. படத்திலயே அந்தாளு கடுப்பாவே அலைறாரு.. சாக்கிரத..

கலகலப்ரியா said...

||RAMYA said...

விமர்சனம் நல்லா இருக்கு.. அப்போ கண்டிப்பா நான் படம் பார்க்கறேன்..||

பாருங்க... ஆனா படம் பார்த்துட்டு என்னை வந்து அடிக்கப்டாது.. என்னை விமர்சனம் எழுதத் தூண்டினவங்களுக்கு அடிக்கலாம்.. பாராட்டனும்னா என்னைப் பாராட்டினா போதும்.. அவங்களுக்கு வெளம்பரம் எல்லாம் புடிக்காது..

கலகலப்ரியா said...

||LK said...

arumai priya... nermayana vimarsanam||

நன்றி எல்கே

கலகலப்ரியா said...

|| Jey said...

படம் பழசாகி எங்கூரு கொடாயில போடும்போது பாகலாம்னு இருக்கேன், ககபி மேடம். ||

செரிங்.. ஜெய்... அதுக்குள்ள உங்களுக்கு வயசாய்டும்... அதும் செர்தேன்..

கலகலப்ரியா said...

||சே.குமார் said...

சரளமா விமர்சித்து கலக்கிட்டீங்க!

உங்க விமர்சனத்துக்காக படம் கண்டிப்பா பார்ப்பேன்||

நன்றிங்கோ... ஆனா விமர்சனத்துக்காகப் பார்த்தேன்னு... என்னை விமர்சனம் பண்ணித் தாளிக்கலைன்னா ச்செரி..

மங்குனி அமைச்சர் said...

வானம்பாடிகள் said...

புடி புடி, நடு ரோவில ஓர சீட்டு நம்மது:)///


சார், நமக்கு ஜன்னல் ஓரம்

Jey said...

என்ன அம்மனி, தினத்துக்கும், ஏதவது 4 வரி கவுஜயாவது எழுதுவீங்க, நானும் அதப்படிச்சி, என்னோட கஜ அறிவ டெவலப் பன்னிட்டிருந்தேன், இப்போ நொம்ப நாளா ஒன்னும் காணோம்?.( நாம டீச்சர மாத்திர வேண்டிதுதான்)

கலகலப்ரியா said...

||மங்குனி அமைச்சர் said...
வானம்பாடிகள் said...

புடி புடி, நடு ரோவில ஓர சீட்டு நம்மது:)///


சார், நமக்கு ஜன்னல் ஓரம்||

வருகைக்கு நன்றி

கலகலப்ரியா said...

||Jey said...
என்ன அம்மனி, தினத்துக்கும், ஏதவது 4 வரி கவுஜயாவது எழுதுவீங்க, நானும் அதப்படிச்சி, என்னோட கஜ அறிவ டெவலப் பன்னிட்டிருந்தேன், இப்போ நொம்ப நாளா ஒன்னும் காணோம்?.( நாம டீச்சர மாத்திர வேண்டிதுதான்)
||

அடடா இப்பூடி ஒரு வாசகர் இருக்கிறது எனக்குத் தெரியாமப் போச்சே... வெளம்பரதார்ஸ்... ப்ளீஸ் லுக் அட் இட்...

ஆமா.. தினம் ஒரு கவுஜ பேஜ் நிர்ர்றைய இருக்கு... அங்க லெஸன் டேக் பண்றது ஈஸி... காப்பி அண்ட் பேஸ்ட்... கவுஜ பேஜ் கூட இருக்கு... பாருங்க... தேறிடுவீங்கோ..

pinkyrose said...

hi priya vanakkam?
aama epdi intro pannikrathu pathivu cinema so pch i`ve no interest but unga vimarsanam mmm nice
(happa periya aal mathiri pesiyachu..)

ok ok ..

கலகலப்ரியா said...

||pinkyrose said...
hi priya vanakkam?
aama epdi intro pannikrathu pathivu cinema so pch i`ve no interest but unga vimarsanam mmm nice
(happa periya aal mathiri pesiyachu..)

ok ok ..||

வாங்க பிங்கிரோஸ்... வணக்கம்... நன்றி... இது நம்ம முதல் முதல் சினிமா விமர்சனமுங்கோ...

Karthick Chidambaram said...

Nalla vimarsanam. Better luck next time Mani Sir endurthaan solla vendi ullathu ennai poruththavarai.

கலகலப்ரியா said...

நன்றி கார்த்திக்...