header photo

Monday, June 7, 2010

தினவெடுத்த வினவும்.. வஞ்சினமும்.. அதுகள் தோழர்'காள்' செஞ்சினமும்..



பொல்லுக் கொடுத்துப் பல்லை உடைப்பித்து அதிற் கசியும் உதிரத்தின் ருசி கண்ட பேய்கள்.. மற்றவரைச் சுரண்டிச் சுரண்டி அவரின் திசுக்களின் இரத்தத்தை யாருமறியாது நக்கும் நாககரிகம் கற்ற தோழர்காளிவர்.. இரத்தச் சோகை கண்டு அந்த உயிர் மடிந்தால்.. மெதுவாக உதறி விட்டு.. வேறு திசு தேடிச்செல்லும் தினவு... அதுவே இறந்து மடியும் தருணத்தில்.. என் உதிரம் உறிஞ்சிய ஊளைநரி நீயெனக் கத்த எத்தனித்தால் போதும்... பாய்ந்து கழுத்தில் பல் பொருத்தி உறிஞ்சி எடுத்து விடும்..  எஞ்சிய உதிரத்துடன் அதன் உயிரையும்.. 


அதன் பிற்பாடு அவை எழுப்பும் ஊளைகளில் அந்தக் கொலைகள் மறைக்கப்பட்டுப்... புதுத் திசுக்கள் சுரண்டப்படும்.. 

இந்துப் பெண்பதிவர் என்ற ஊளையில் ஆரம்பித்த இரத்தக் கறை படிந்த அந்த அகோர நகங்கள் என்னை நோக்கி நீண்ட போது.. சற்றல்ல.. காத தூரம் விலகிப் போனேன்.. 

பார்ப்பனிய ஆதிக்கம் என்று தொடரும் ஊளையில் மீண்டும் ஆரம்பித்திருக்கிறது சுரண்டல்.. அதன் அகோரக் கரங்கள் பரவியிருக்கும் திசைகள் தெரியாது... ஐயோ என்றதானதொரு பரிதாபத்தைக் என் குருதிச் சிந்தலின் வழியே கசிய விட்டிருக்கிறேன்.. 

விலகிப் போ என்கின்றன சில ஆதரவுக் கரங்கள்... இரும்பாகு என்கின்றன சில... கண்ணை மூடிக்கொண்டு உறங்கி விடு அல்லது உறங்குவது போன்றிரு என்கின்றன சில... 

யோசித்தேன்.. அடக்குமுறை.. அடக்குமுறை.. அடக்குமுறை.. இதன் மடியிலேயே பிறந்து.. இதன் மடியிலேயே புரண்டு அனுபவித்தது கொஞ்சம் நஞ்சமா.. வீதிகளில் பிச்சைக் காரர்கள் போன்று... காப்பாற்று... காப்பாற்று... என் இரத்த சொந்தங்களைக் காப்பாற்று.. என்று ஓலமிட்டு ஓய்ந்த போது.. அங்கு சிந்தி விட்டிருந்த இரத்தத்தை வைத்து ஐந்தாறு கிரகங்களைக் கழுவி விடலாம். 

இனியும் என்ன இருக்கிறது இழப்பதற்கு? என் உயிர் தங்கப் போகும் காலங்களின் சராசரி அளவு எனக்குத் தெரியும். அது வரைக்கும் இந்த ஊளைகளுக்குப் பயந்து.. பயந்தே சாவதுதான் விதியா? 

"இந்துப்பெண்" என்றதும்... "மரணமொக்கை" என்றதும்.. "வேசி" என்ற சொல்லுக்கு ஈடாகுமா என்பது இந்த ஊளைகளின் வலுவான வாதம். 

ஆனால்.. அதன் தொடராக.. இந்த ஊளைகளைக் கேட்டுவிட்டு வந்து.. குருட்டுத்தனமாகக் குதறிச்சென்ற ஓநாய்களைக் கேட்பது யார்? அது வினவுவாகக் கூட இருக்கலாம். அல்லது தினவெடுத்து எழுதியனுப்பும் தோழர் குழாமாகவும் இருக்கலாம். ஊகங்கள் வினவின் தினவுக்கு மட்டுமே எழுதி வைக்கப்பட்ட சொத்தன்றே.  பாவம் அவர்களின் பின்னூட்டத்தின் பின் ஒளிந்திருக்கும் வேட்கை... அகோரத்தின் உச்சம். 

என்னை வக்கிரத்துடன் சொறிய வந்த ஒரு நரியின் ஊளையில்... சில திங்களுக்கு முன் இறந்த என் தாயாரும் அகப்பட்ட கொடுமையை என்னால் சகிக்க முடியவில்லை. தொண்டைக்கும், கண்களுக்குமிடையில் சில இழுபறிகள் நடந்து கொண்டே இருக்கின்றன. ஆனால்... எனக்குத் தெரியும்.. என் அன்னை அந்த நரியை மன்னித்து விட்டிருப்பார்... 

எந்த ஒரு காரணமுமன்றி என் பெயரை இழுத்ததன் பின்னால்... எனக்கு வந்த ஓரிரு பின்னூட்டங்களின் வக்கிரங்களுக்கு... அதன் பின்னால் விளைந்த வெட்டித் தம்பட்டங்களின் எதிர்வினைகளுக்கு... யார் பொறுப்பு..? என் பெயரை எழுதி வைத்து விட்டு... அதன்பால் எழுப்பும் கேள்விகளுக்குப் பதிலளிக்காது... பார்ப்பனத் திமிர் என்றெழுதும்... தினவெடுத்த திமிருக்கு என்ன பெயர்? சகோதரம்... மாமன்.. மச்சான்... உறவுகளின் பெயரில் கண்டனமெழுப்புவோர்... மிக மிகக் கவனமாக என் பெயர் தவிர்த்து விட்டு... மற்றவை தவிர்க்கலாமென்று சொல்வதன் பின்னணியிலிருக்கும் காழ்ப்புணர்ச்சியின் நியாயமான காரணம் என்ன? 

அனுதாபம் தேடிக் கொள்வதாகவும்.. கள்ள மௌனம் சாதிப்பதாகவும்.. சந்திக்குச் சந்தி சாதித்தவர்களின் ஃப்ளெக்ஸிப்ளிட்டி.. இப்பொழுது எந்த நிலையில் உள்ளது? 

இந்துவாகப் பிறந்தது தவிர.. நான் ஜாதியற்றவள்... ஜாதி.. மதங்களுக்கு அப்பாற்பட்டவள்... என்பதைப் புரிந்து கொண்டால்.. இவ்வளவு நாள் எழுதினவையெல்லாம் சப்பையென்றாகி விடுமே... அதைத் தினவுக்கூட்டம் செய்ய முடியுமா... ஒருக்காலும் முடியாது... யாருடைய இரத்தத்தையோ உறிஞ்சிச் சாப்பிட்டு வயிறு வளர்க்கும் இவை சுரண்டுவதற்கு ஏதுவாக... நான் அதன் அழுக்கேறிய கோர நகங்களைச் சீவி விடுகிறேனென்று அறிந்தே இதை எழுதுகிறேன்... 

ஏனென்றால்.. என்னிடம் எஞ்சியிருப்பது என் உயிர் மட்டுமே... சதைப் பிண்டங்களாகக் குவிக்கப்பட்ட என் இரத்த சொந்தங்கள் போன்று.. எனது இரத்தச் சோகையின் கடைசிக் கட்டத்தில் நான் வாய் திறக்கச் சந்தர்ப்பம் இல்லாமலே போகலாம்... அதனால் இப்பொழுதே எழுதி வைத்து விடுகிறேன்..  

இன்னும் எத்தனை விளம்பரங்கள் வேண்டுமானாலும் வரலாம்.. எத்தனை கோர நகங்கள் வேண்டுமானாலும் நீளலாம்... கீழே உள்ள பட்டியல் தவிர்ந்த இன்னும் நூறாயிரம் இணைப்புகள் உருவாகலாம்.. என் பணி அல்லது கடமை நிமித்தம் இங்கு இது வரைக்கும் உள்ளது போன்ற தேக்கங்கள் வரலாம்... ஆனால்... புறமுதுகிட மாட்டேன். 

சில (அ)சிங்கங்கள் தங்கள் முகங்களை மறைப்பதற்கென்றே... என்னைப் போன்றவர்களின் குருதியை வாரி அவற்றின் முகங்களில் பூசிக் கொள்வதால் ஆங்காங்கு வடியும் அவற்றின் சீழ்களை மூடி விடலாமென்ற சின்னத்தனம்... அந்தச் சீழ்களின் துர்நாற்றத்தில் தெரிந்துவிடாதா? 

கேளும் தோழர்காள்... அதற்கு இதுவல்ல வழி..! சீழ்வடியுமிடங்களை வெண்பஞ்சு வைத்துத் துடைத்து.. மருந்திட... மேலும் பல வழிகளிருக்கின்றன... அதை நானும் கூடச் செய்ய முடியும்.. என் திசுக்களில் இரத்தம் உறிஞ்சப்படும் பொழுதும் கூட..! 






இன்னும் எத்தனை எத்தனை விளம்பரங்களோ... அறிந்தவர் தெரிந்தவர்... அவற்றையும் கொடுத்து உதவுங்கள்.. 

137 ஊக்கம்::

அது சரி(18185106603874041862) said...

//

எந்த ஒரு காரணமுமன்றி என் பெயரை இழுத்ததன் பின்னால்... எனக்கு வந்த ஓரிரு பின்னூட்டங்களின் வக்கிரங்களுக்கு... அதன் பின்னால் விளைந்த வெட்டித் தம்பட்டங்களின் எதிர்வினைகளுக்கு... யார் பொறுப்பு..? என் பெயரை எழுதி வைத்து விட்டு... அதன்பால் எழுப்பும் கேள்விகளுக்குப் பதிலளிக்காது... பார்ப்பனத் திமிர் என்றெழுதும்... தினவெடுத்த திமிருக்கு என்ன பெயர்? சகோதரம்... மாமன்.. மச்சான்... உறவுகளின் பெயரில் கண்டனமெழுப்புவோர்... மிக மிகக் கவனமாக என் பெயர் தவிர்த்து விட்டு... மற்றவை தவிர்க்கலாமென்று சொல்வதன் பின்னணியிலிருக்கும் காழ்ப்புணர்ச்சியின் நியாயமான காரணம் என்ன?
//

எழுதிக் கொடுத்த சிவராமனும் அதை வெளியிட்டு, பார்ப்பன வெறி என்று ஊளையிட்டுக் கொண்டே சம்பந்தமில்ல்லாதவர்களை வம்புக்கிழுத்த வினவு கும்பலும், அறச்சீற்றத்தில் மற்றொரு பதிவருக்கு எழுதியது கண்டித்து இடுகை போட்டு ஆனால் இதற்கு மவுனம் சாதிக்கும் தோழர் மாதவராஜ் போன்றவர்களும் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள்.

நர்சிம்மின் எழுத்து வக்கிரம், ஆணாதிக்கம் என்றால் இவர்கள் தூண்டிவிட்டதால் உங்கள் மீது வீசப்பட்ட வார்த்தைகளுக்கு வினவுவும், சிவராமனும் தான் முழுப்பொறுப்பு...

ஆனால் அதற்கான நேர்மை அவர்களிடம் இருக்குமா என்பது பெரிய சந்தேகமே..

vasu balaji said...

/இந்துப் பெண்பதிவர் என்ற ஊளையில் ஆரம்பித்த இரத்தக் கறை படிந்த அந்த அகோர நகங்கள் என்னை நோக்கி நீண்ட போது.. சற்றல்ல.. காத தூரம் விலகிப் போனேன்.. //

யாரை திருப்திப்படுத்த, இதை இழுத்தார்கள் என்று இன்னும் புரியவில்லை. பார்ப்பனீயத்தில் பெண்பாலும் இருக்கவேண்டும் என்ற அவசரபுத்தி.

அது சரி(18185106603874041862) said...

உங்களை கள்ள மெளனம் சாதிப்பதாக வரிந்து கட்டி எழுதியவர்கள் உங்கள் மீது வீசப்பட்ட மனநோயாளிகளின் வெறிப்பிடித்த வக்கிரமான, பொறுக்கித் தனமான வார்த்தைகளுக்கு பதில் சொல்கிறார்களா இல்லை கள்ள மெளனம் சாதித்து தங்களின் உண்மை முகத்தை காட்டுகிறார்களா என்று பார்ப்போம்...

அது சரி(18185106603874041862) said...

தமிழில் இயங்குவது பதிவுலகமா இல்லை பொறுக்கிகள் பாப்பனீய எதிர்ப்பு என்ற பெயரில் தங்கள் மன வக்கிரத்தை வாந்தி எடுக்கும் இடமா?

அது சரி(18185106603874041862) said...

//
http://vidamaatendaadei.blogspot.com/2010/06/blog-post.html
//

இதை எழுதியவர் முழுக்க முழுக்க மனநோயாலும் வக்கிரத்தாலும் பாதிக்கப்பட்ட நபர் என்று தெரிகிறது. இவரை போன்றவர்கள் எழுதுவது மட்டுமல்ல பொதுமக்களுடன் நடமாடுவது கூட அந்த மக்களுக்கு மிகுந்த ஆபத்தாக முடியும்...

vasu balaji said...

//அடக்குமுறை.. அடக்குமுறை.. அடக்குமுறை.. இதன் மடியிலேயே பிறந்து.. இதன் மடியிலேயே புரண்டு அனுபவித்தது கொஞ்சம் நஞ்சமா.. வீதிகளில் பிச்சைக் காரர்கள் போன்று... காப்பாற்று... காப்பாற்று... என் இரத்த சொந்தங்களைக் காப்பாற்று.. என்று ஓலமிட்டு ஓய்ந்த போது.. அங்கு சிந்தி விட்டிருந்த இரத்தத்தை வைத்து ஐந்தாறு கிரகங்களைக் கழுவி விடலாம்.
இனியும் என்ன இருக்கிறது இழப்பதற்கு? என் உயிர் தங்கப் போகும் காலங்களின் சராசரி அளவு எனக்குத் தெரியும். அது வரைக்கும் இந்த ஊளைகளுக்குப் பயந்து.. பயந்தே சாவதுதான் விதியா? //

இதை வேறுமாதிரி முந்தைய பதிவில் சொன்ன பின்பும் கூட மன்னிப்புக்குக் குரல் கொடுக்கும் மாபுருஷர்கள் தன் தவறு வருந்தி மன்னிப்புக் கேட்டிருக்க வேண்டாம். ஆனால், ஆணாதிக்கம் என்று அலறி அய்யா கேளு அம்மா கேளு என்ற ஒரு மாமனிதன் மீள் இடுகைக்கு வந்து எதிர் ஓட்டுப் போட்டுப் போன வக்கிரம் சிரிப்பை மூட்டினாலும், இன்னொரு பிம்பமும் உடைந்த வருத்தம் இருக்கத்தான் செய்கிறது.

ஏழர said...

///இங்க விடமான்டேன்டா டேய் என்ற பெயரில் எழுதியிருக்கமு ஜந்து ம.க.இ.க ஆதரவாளர் என்ற போர்வையில் புகுந்திருக்கும் உளவுப் பன்றி.///
அர டிக்கெட்டு! said this on June7, 2010 at 2:17 pm
http://vrinternationalists.wordpress.com/2010/06/06/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8B-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8/#comment-847

விடமாட்டேன்டா டேய் என்ற பெயரில் ம.க.இ.க / வினவு ஆதரவு வலைப்பதிவு போர்வையில் ஒரு உளவுப் பன்றி சுற்றி வருகிறது. தோழர்கள் கவனமாக இருக்கவும்

http://www.vinavu.com/2010/06/07/agent-jegath-caper/#comment-24660

இதை படித்திருந்தால் இந்த பதிவு தேவைப்பட்டிருக்காதே.... hmmm

vasu balaji said...

கள்ள மௌனம் எனக் குரலெழுப்பியவருக்கு சுட்டியும் கூட படித்தோ படிக்காமலோ திரும்பத் திரும்ப கள்ள மவுனப் பாட்டு பாடிய கூத்தை என்ன சொல்ல. அதைக் கண்டும், இல்லை என மறுக்காமல் விட்ட பிம்பங்களை என்ன செய்ய?

vasu balaji said...

/என்னை வக்கிரத்துடன் சொறிய வந்த ஒரு நரியின் ஊளையில்... சில திங்களுக்கு முன் இறந்த என் தாயாரும் அகப்பட்ட கொடுமையை என்னால் சகிக்க முடியவில்லை. தொண்டைக்கும், கண்களுக்குமிடையில் சில இழுபறிகள் நடந்து கொண்டே இருக்கின்றன. ஆனால்... எனக்குத் தெரியும்.. என் அன்னை அந்த நரியை மன்னித்து விட்டிருப்பார்... //

என்றாவது சிவராமனைக் காணும்போது கண்டிப்பாகக் கேட்பேன். இந்த விளைவுக்குப் பொறுப்பு யார் ஏற்பார்கள். நான் எழுதியிருந்தாலும் இப்படித்தான் எழுதுவேன் என்ற சிவராமனா அல்லது வினவுத் தோழர்களா? சிவராமனின் இடுகையைப் படித்து அவரின் தாயைக் குறித்து எழுதியதைப் படித்து இவருக்காகக் கலங்கிய உனக்கு இவர் கொடுத்த பரிசைச் சொல்லியே ஆகவேண்டும். கண்பார்த்து சொல்லவேண்டும்.

அது சரி(18185106603874041862) said...

//
///
ஏழர said..
இங்க விடமான்டேன்டா டேய் என்ற பெயரில் எழுதியிருக்கமு ஜந்து ம.க.இ.க ஆதரவாளர் என்ற போர்வையில் புகுந்திருக்கும் உளவுப் பன்றி.///
அர டிக்கெட்டு! said this on June7, 2010 at 2:17 pm
http://vrinternationalists.wordpress.com/2010/06/06/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8B-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8/#comment-847

விடமாட்டேன்டா டேய் என்ற பெயரில் ம.க.இ.க / வினவு ஆதரவு வலைப்பதிவு போர்வையில் ஒரு உளவுப் பன்றி சுற்றி வருகிறது. தோழர்கள் கவனமாக இருக்கவும்

http://www.vinavu.com/2010/06/07/agent-jegath-caper/#comment-24660

இதை படித்திருந்தால் இந்த பதிவு தேவைப்பட்டிருக்காதே.... hmmm
June 7, 2010 11:09 ப்ம்//


ஐயா ஏழரை,

வினவு இடுகைக்கு சுமார் இருநூறு கமெண்ட் வருகிறது...எல்லாவற்றையும் படிக்க ஷிஃப்ட் முறையில் வேலை பார்த்தால் முடியும்...

அந்த மன வக்கிரம் பிடித்த நபர் போலியோ அல்லது வினவுக்கு எழுதிக் கொடுப்பவர்களில் ஒருவரோ யாருக்கு தெரியும்??

ஆனால், இந்த வக்கிரங்கள் ஊளையிட அடிப்படை காரணமே வினவுவும், சிவராமனும் தானே??

அது சரி(18185106603874041862) said...

//
வானம்பாடிகள் said...
கள்ள மௌனம் எனக் குரலெழுப்பியவருக்கு சுட்டியும் கூட படித்தோ படிக்காமலோ திரும்பத் திரும்ப கள்ள மவுனப் பாட்டு பாடிய கூத்தை என்ன சொல்ல. அதைக் கண்டும், இல்லை என மறுக்காமல் விட்ட பிம்பங்களை என்ன செய்ய?

June 7, 2010 11:10 PM
/./


இதற்கு அவர் கண்டிப்பாக பதில் சொல்வார் என்று எதிர்பார்க்கிறேன்....

அது சரி(18185106603874041862) said...

உங்கள் மீது பாய்ந்த வக்கிரங்களின் ஒட்டு மொத்த செயலுக்கும் வார்த்தைகளுக்கும் சிவராமனும், தோழர்களும் தான் முழுப் பொறுப்பு...

ஏழர said...

அது சரி, மேலே சுட்டியாய் கொடுக்கப்பட்டிருந்த ஒன்றின் கீழேயே நான் கொடுத்த சுட்டி இருந்தது.. ஒரு வேளை வினவின் தோழராய் இருந்தால் 'விடமாட்டேன்டா டேய்' என்னும் பேர்வழியை அம்பலப்படுத்தும் மறுமொழியை விட்டுவைத்திருப்பானேன்.. எனக்கென்னவோ வினவை கண்டித்து இது போன்ற பல பதிவுகள் வரவேண்டும் என்ற உள்நோக்கத்துடன் இடப்பட்ட இடுகை போல தெரிகிறது.. இதைத்தானே போலி டோண்டு விவகாரத்தில் கண்டோம்.. ஏற்கனவே வினவு, செந்தழல் ரவி, கோவி கண்ணன் முதலிய பதிவர்கள் தங்கள் பெயரில் போலி பின்னூட்டங்கள் வருவதை வெளிப்படையாக அறிவித்திருப்பதை கவனிக்க வேண்டும்.

vasu balaji said...

// ஏழர said...

///இங்க விடமான்டேன்டா டேய் என்ற பெயரில் எழுதியிருக்கமு ஜந்து ம.க.இ.க ஆதரவாளர் என்ற போர்வையில் புகுந்திருக்கும் உளவுப் பன்றி.///
அர டிக்கெட்டு! said this on June7, 2010 at 2:17 pm
http://vrinternationalists.wordpress.com/2010/06/06/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8B-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8/#comment-847

விடமாட்டேன்டா டேய் என்ற பெயரில் ம.க.இ.க / வினவு ஆதரவு வலைப்பதிவு போர்வையில் ஒரு உளவுப் பன்றி சுற்றி வருகிறது. தோழர்கள் கவனமாக இருக்கவும் //

ஏழர சார்! வினவுக்கு ஒரு கெட்ட பேருன்னு தெரிந்ததும் எதிர்க்கத் தோணுதில்லையா. அப்படித்தானே இந்தப் பெண்ணும். எத்தனை பொறுமையாய் பின்னூட்டமிட்டார். தன் பெயர் வரக் காரணமென்னவென? அதற்கு யாரோ வக்கிரமாய் அளித்த பின்னூட்டத்திற்கு என்ன பதில் சொல்லுவீர்கள் சார்? பதிவிட்டு, தான் மதம் சாராதவள் என்று விளக்கிய பிறகும், எதிர் ஓட்டு செலுத்திய வினவுத் தோழர்கள், அர டிக்கட் மாதிரி நேர்மையாக, தவறான தகவல் என்று ஏன் சொல்லவில்லை? சொல்லியிருந்தால் அல்லது இப்போதாவது வினவு கலகலப்ரியாவை பார்ப்பனீய வெறி, இந்து மத வெறி என்று தவறாக குறிப்பிட்டதை நீக்கி அறிவிக்கும் என நேர்மையாக எதிர் பார்க்கலாமா சார்?

vasu balaji said...

ஏழர சார், செந்தழல் ரவி பேரில் போலி பின்னூட்டம் வரலாம், மீள் இடுகைக்கு எதிர் ஓட்டுமா? போலி பின்னூட்டம் வருமுன்னரே நான், மாதவராஜ், காமராஜைப் படிக்கச் சொல்லியும், இங்கு வந்து கள்ள மவுனம் எனப் பின்னூட்டினார் நான் மிகவும் மதித்த ரவி சார்:(.

அது சரி(18185106603874041862) said...

//
ஏழர said...
அது சரி, மேலே சுட்டியாய் கொடுக்கப்பட்டிருந்த ஒன்றின் கீழேயே நான் கொடுத்த சுட்டி இருந்தது.. ஒரு வேளை வினவின் தோழராய் இருந்தால் 'விடமாட்டேன்டா டேய்' என்னும் பேர்வழியை அம்பலப்படுத்தும் மறுமொழியை விட்டுவைத்திருப்பானேன்.. எனக்கென்னவோ வினவை கண்டித்து இது போன்ற பல பதிவுகள் வரவேண்டும் என்ற உள்நோக்கத்துடன் இடப்பட்ட இடுகை போல தெரிகிறது.. இதைத்தானே போலி டோண்டு விவகாரத்தில் கண்டோம்.. ஏற்கனவே வினவு, செந்தழல் ரவி, கோவி கண்ணன் முதலிய பதிவர்கள் தங்கள் பெயரில் போலி பின்னூட்டங்கள் வருவதை வெளிப்படையாக அறிவித்திருப்பதை கவனிக்க வேண்டும்.
//

ஏழரை,

வினவுக்கு வரும் எல்லா பின்னூட்டங்களையும் எல்லாரும் படிக்க முடியாது.....அந்தளவு பின்னூட்டங்கள் வருகின்றன என்று உங்களுக்கும் தெரியும்..அவன் போலியாகவே இருக்கட்டும்...ஆனால், இந்த ஊளைகளுக்கு அடிப்படையே வினவில் வந்த வார்த்தைகள் தானே?? எதை எதையோ கண்டுபிடிக்கும் வினவு, இந்த போலியை ஏன் இன்னும் கண்டுபிடிக்கவில்லை? விரைவில் கண்டுபிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன்..

அது இருக்கட்டும்...வினவு இந்த போலியை கண்டித்து ஒரு இடுகை போடுவார்களா?? எத்தனை கேவலமான வார்த்தைகள் வீசப்பட்டிருக்கின்றன என்று நீங்களும் தான் படித்திருப்பீர்கள்..

ஏழர said...

/// யாரோ வக்கிரமாய் அளித்த பின்னூட்டத்திற்கு என்ன பதில் சொல்லுவீர்கள் சார்///

யாரோ யாருக்கோ வெல்லாம் பதில் சொல்ல முடியாதுங்களே..

இந்த இடைகையின் நியாயத்தை நான் கேள்விகேட்க்வில்லை என்பதை கவனிக்கவும்.
அதனால் தான் பதிவை பார்த்தவுடன் சர்ச்சைக்குறிய நபரை பற்றிய சந்தேகங்களை எழுப்பினேன்..

கலகலப்ரியா said...

||ஏழர said...

இதை படித்திருந்தால் இந்த பதிவு தேவைப்பட்டிருக்காதே.... hmmm||

எதைப் படித்திருந்தால்... ஏன் அந்தப் பதிவில் எனக்கு ஏற்பட்ட அகோரத்தாக்குதலுக்கு மருந்திடப்பட்டிருக்கிறதா...

மேலும்.. அவன் ம.கொ.மண்ணாங்கட்டியா.. எனக்குக் கவலையில்லை... யாரென்றாலும்.. என் பெயரை இழுப்பதற்கு வழி வகுத்தது யார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...

இதுதான் என் கேள்வி..

ஏழர said...

அது சரி மேலேயே நான் சொல்லயது போல இந்த இடுகையின் நியாயத்தை நான் கேள்வி கேட்க்வில்லை. ப்ரியா சதிக்கு பலியாகிவிட்டார் என்றுதான் கருதுகிறேன்.

அது சரி(18185106603874041862) said...

//
பொங்கி எழுந்த இந்துப்பதிவர்கள் இப்போது ஒரு ‘இந்து’ பெண் பதிவர் மீது நடத்தப்பட்டிருக்கும் கொடூரத்தைக் கண்டு மேல் கீழ் வாய்மூடி இருப்பதற்கு காரணமென்ன? சுஜம்லாவை எதிர்த்து பொங்கி எழுந்த மரண மொக்கை பதிவரான கலகலப்பிரியா என்ற வீராங்கனை இப்போது கயவன் நர்சீமுக்கு எதிராக ரவுத்திரம் பழகாமல் இருப்பது ஏன்? ஏனெனில் முல்லையின் மானத்தை விட ஒரு பாப்பானின் மானம் பெரிதல்லவா? ஆக இங்கும் இந்துப் பதிவுலகம் அப்படியேதான் செயல்படுகிறது
//

கலகலப்ரியா மீது வீசப்பட்ட அத்தனை மனநோயாளிகளின் வக்கிரமான வார்த்தைகளுக்கும் கம்பெடுத்து கொடுத்தது வினவும் சிவராமனும் எழுதிய இந்த வரிகள் தானே?

தான் எழுதிய வார்த்தைகளுக்கு சம்பந்தப்பட்ட பதிவரிடம் மன்னிப்பு கேட்பதாக நர்சிம் சொல்கிறார்...(அதை ஏற்பதா வேண்டாமா என்பது அந்த பதிவரின் உரிமை)...

இந்த பிரச்சினையில் எந்த விதத்திலும் சம்பந்தப்படாத ஒருவரை,
வினவுவும், சிவராமனும் கம்பெடுத்து கொடுத்து பொங்கியெழுந்த மன நோயாளிகளின் ஊளைக்கு யார் பொறுப்பு?? இதற்கு மன்னிப்பு கேட்க போவது யார்??

(ஆமாம், அது என்ன மேல்கீழ் வாய்?? இந்த வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம்?? இதை எழுதியது யார்?? மேதகு வினவு அவர்களா இல்லை மேதகு சிவராமன் அவர்களா?)

ஏழர said...

எதைப் படித்திருந்தால்... ஏன் அந்தப் பதிவில் எனக்கு ஏற்பட்ட அகோரத்தாக்குதலுக்கு மருந்திடப்பட்டிருக்கிறதா//

இந்த பதிவு நியாயமானது. அதை மீண்டும் குறிப்பிடுகிறேன். ஒரு சூழ்ச்சிக்கு பலியானதை உங்களுக்கு தெரியப்படுத்தவே
எனது பின்னூட்டம்

vasu balaji said...

//ஏழர said...

அது சரி மேலேயே நான் சொல்லயது போல இந்த இடுகையின் நியாயத்தை நான் கேள்வி கேட்க்வில்லை. ப்ரியா சதிக்கு பலியாகிவிட்டார் என்றுதான் கருதுகிறேன்.//

ஏழர சார். நீங்களும் அர டிக்கட் மாதிரி நேர்மையா பேசுறீங்க சார். அப்படின்னா அந்த சதி செய்தது யார்னு தெளிவு படுத்தும் கடமை வினவுக்கு இருக்கே சார். பண்ணுங்க சார்.

அது சரி(18185106603874041862) said...

//
ஏழர said...
அது சரி மேலேயே நான் சொல்லயது போல இந்த இடுகையின் நியாயத்தை நான் கேள்வி கேட்க்வில்லை. ப்ரியா சதிக்கு பலியாகிவிட்டார் என்றுதான் கருதுகிறேன்.

//

எழரை,

நியாயம் இருக்கிறது என்று ஒப்புக் கொண்ட உங்களுக்கு நன்றி.....

ப்ரியாவை சதியில் முதலில் இழுத்தது யார்? நீங்களே சொல்வது போல வினவுக்கும் அந்த போலிக்கும் தொடர்பு இல்லை என்றாலும், சம்பந்தமே இல்லாத ஒருவரை தேவையற்ற முறையில் இழுத்து இதை ஆரம்பித்து வைத்ததே சிவராமனும் தோழர்களும் தானே??

(நாங்கள் வெறுமனே விமர்சனம் வைத்தோம் என்று கூட நீங்கள் சொல்ல முடியாது...விமர்சனம் வைப்பதற்கு பல நேரடியான முறைகள் இருக்கின்றன...வினவுவில் அந்த இடுகையின் வாசகங்கள் அப்படியில்லை)

ஏழர said...

///ஏழர சார், செந்தழல் ரவி பேரில் போலி பின்னூட்டம் வரலாம், மீள் இடுகைக்கு எதிர் ஓட்டுமா?///

வானம்பாடி சார், இந்த ஓட்டரிசியல்ல எத்தன சதி இருக்குன்னு நாம போன வாரமே பார்த்தோம்.
இதில் யாரை நொந்து கொள்வது.. நல்ல வேளையாக தமிழ்மணத்தில் பரிந்துரை பகுதியை தூக்கிவிட்டனர்..

ஏழர said...

//உங்கள் மீது பாய்ந்த வக்கிரங்களின் ஒட்டு மொத்த செயலுக்கும் வார்த்தைகளுக்கும் சிவராமனும், தோழர்களும் தான் முழுப் பொறுப்பு...//

இந்த கருத்தை நான் முழுமையாக ஏற்கவில்லையெனினும் பகுதியளவிற்கு இதில் உண்மை இருக்கிறது

ஏழர said...

//விமர்சனம் வைப்பதற்கு பல நேரடியான முறைகள் இருக்கின்றன...வினவுவில் அந்த இடுகையின் வாசகங்கள் அப்படியில்லை//

இந்த கருத்தை நான் முழைமையாக ஏற்கிறேன்

ஏழர said...

//விமர்சனம் வைப்பதற்கு பல நேரடியான முறைகள் இருக்கின்றன...வினவுவில் அந்த இடுகையின் வாசகங்கள் அப்படியில்லை//

இந்த கருத்தை நான் முழைமையாக ஏற்கிறேன்

vasu balaji said...

இன்றைய வினவு இடுகை படித்தபின் அப்போதே தோன்றியது. எதிர்பாராமல் ஈழத்தமிழரின் வலியுணர்ந்த இடுகையாயிற்றே.ஒரு ஈழப்பெண்ணை, ஜாதி குறித்த தன் நிலை குறித்த விளக்கமளித்த பின்னும்,பார்ப்பனத் திமிர் என்ற தன் தவறான குறிப்புக்கு தன்னாலான அளவில், தான் ஏற்படுத்திய தவறான புரிதலுக்கு வினவு மன்னிப்பு கேட்கவேண்டாம், பொறுப்பேற்று நீக்கி அறிவிக்குமா எனக் கேட்கலாமென. ஒரு வேளை இன்னும் பொறுப்பற்ற பின்னூட்டங்களினால் பாதிப்பு வரலாம் என்பதால் வாளாவிருந்தேன். செய்வீர்களா ஏழரை சார்? முதலில் நம்மாலானதைச் செய்தால் தானே சார் தட்டிக் கேட்க முடியும்?

ஏழர said...

///ஏழர சார். நீங்களும் அர டிக்கட் மாதிரி நேர்மையா பேசுறீங்க சார். அப்படின்னா அந்த சதி செய்தது யார்னு தெளிவு படுத்தும் கடமை வினவுக்கு இருக்கே சார். பண்ணுங்க சார்.//

யார் சதி செய்திருப்பார்கள் என செந்தழல் ரவி கோடிட்டு காட்டியிருக்கிறார். பதிவுலகில் இன்னுமொரு போலி டோண்டு உருவாகி வருகிறார் பார்ப்போம் எப்படியும் சிக்கிவிடுவார்.

ஏழர said...

வானம்பாடி சார், வினவுக்காக நான் பேச இயலாது. இருந்தாலும் உங்கள் கருத்துக்களை நீங்கள் பின்னூட்டமாக இடாவிட்டாலும் மின்மடலாக அனுப்புங்கள்.

vasu balaji said...

// ஏழர said...

வானம்பாடி சார், வினவுக்காக நான் பேச இயலாது. இருந்தாலும் உங்கள் கருத்துக்களை நீங்கள் பின்னூட்டமாக இடாவிட்டாலும் மின்மடலாக அனுப்புங்கள்.//

நன்றிங்க ஏழர சார். வினவுக்கு பின்னூட்டங்களில் நீங்கள் பல நேரங்களில் நேர்மையாக விளக்கமளித்ததைப் பார்த்திருக்கிறேன். திரு சிவராமன் அவர்கள் இடுகையிலுமே கூட. ஒரு தமிழனாக, வினவின் தார்மீகப் போராட்டங்களில் பங்கேற்பவராக உங்களுக்கும் இந்தப் பொறுப்பிருக்கிறதே சார். நீங்களும் எழுதுங்கள் சார்,ப்ளீஸ். இது உங்கள் கடமையும் கூட. உங்கள் மேலான என் நம்பிக்கை பொய்க்கவில்லை என்பதே எனக்கு ஆறுதல். நன்றி சார்.

ஏழர said...

வானம்பாடிகள் சார், எனது கருத்துக்களை நான் இங்கே பதிவதன் நோக்கமே அது எல்லா தரப்புக்கும் போய் சேரவேண்டும் என்பதால் தான்.
நீங்கள் சொல்வது போல நானும் எனது எண்ணங்களை வினவு
தோழர்களுக்கு தெரியப்படுத்துவேன்.

ஏழர said...

கடந்த வாரம் மிகுந்த கொந்தளிப்புகளையும் அயர்ச்சியையும் ஒரு சேர ஏற்படுத்தியுள்ளது. அனைவரும் தங்களை சுய விமரிசனம் செய்துகொள்ள கால அவகாசம் தேவை ஆனால் சூழ்நிலையின் தீவிரத்தை தணியவிடாமல் இருப்பதற்கும் ஒரு கூட்டம் உருவாகியிருப்பது தெரிகிறுது.. அதன் விளைவாக விடமாட்டேன்டா டேய் (இரசனையின் யோக்கியதையை பார் - விடாது கருப்பு போலவே) போன்ற பலவகையினர் தோன்றலாம். அவர்களுடையை எண்ணம் வினவை தமிழ்மணத்திலிருந்து ஒழிப்பது என்றாலும் அதை நேரடி மோதலில் செய்யாமல் இது போன்ற ஈனத்தனமான முறைகளை தேர்ந்தெடுப்பர். இதுவும் பழைய மூர்த்தி பாணிதான் என்றாலும், மன உளைச்சலை கடுமையாக ஏற்படுத்தும் ஒன்று. இங்கு ப்ரியாவை இலக்காக்கியிருப்பதற்கு என்ன உள்குத்து காரணங்கள் இருக்கிறது என்று புரியவில்லை.
இது போன்ற அநாமதேயங்களை உதாசீனப்படுத்துவதன் மூலம்தான் ஒழிக்க முடியும் என்று நான் கருதுகிறேன், எனினும் உங்கள் பதிவின் நியாயத்தை ஆதரிக்கின்றேன்.

vasu balaji said...

//ஏழர said...

வானம்பாடிகள் சார், எனது கருத்துக்களை நான் இங்கே பதிவதன் நோக்கமே அது எல்லா தரப்புக்கும் போய் சேரவேண்டும் என்பதால் தான்.
நீங்கள் சொல்வது போல நானும் எனது எண்ணங்களை வினவு
தோழர்களுக்கு தெரியப்படுத்துவேன்.//

மிக மிக நன்றிங்க ஏழர

ரவி said...

வானம்பாடிகள் சார். கலகலப்பிரியா பழகிய ரவுத்திரத்தில் பதிவுலகை விட்டே வெளியேறினாரே சுஜ்மலா அக்கா ? நீங்கள் அதனை அமைதியாக பார்த்திருந்தீர்கள் அல்லவா ? அதே போல இந்த கள்ள மவுனக்கேள்வியையும் ?

ஓட்டரசியல் ? பாசிடிவ் நெகடிவ் ? கொஞ்சம் பிடிபடவில்லை. எந்த பதிவுக்கு ? எப்போது ? விளக்கம் தேவை.

மற்றபடி நீங்கள் மதிப்பளிக்கும் அளவுக்கு நானில்லை. மிகச்சிறியோன். எளியோன்.

ஏழர said...

இங்கே நீங்கள் சுட்டியளித்திருக்கும் ஷேக் தாவூத் வினவின் பரம வைரி.. இசுலாமிய மதவெறியர்களை அம்பலப்படுத்தும் வினவு தோழர்களை திட்டுவதற்காகவே பதிவு
திறந்து வைத்திருக்கிறார், அவரை நீங்கள் வினவு கூட சேர்த்து எழுதியதை படித்தால் மனிதர் நொந்து நூடில்ஸாகிப் போய் விடுவார்...பாவம்

ஏழர said...

//மிக மிக நன்றிங்க ஏழர//

இதுக்கு எதுக்கு சார் நன்றி. நீங்க என்னை மட்டுமல்ல வினவு தோழர்களையே கூட உரிமையோடு கேட்கலாம்..

கலகலப்ரியா said...

//செந்தழல் ரவி said...
வானம்பாடிகள் சார். கலகலப்பிரியா பழகிய ரவுத்திரத்தில் பதிவுலகை விட்டே வெளியேறினாரே சுஜ்மலா அக்கா ? நீங்கள் அதனை அமைதியாக பார்த்திருந்தீர்கள் அல்லவா ?//

ரவி அண்ணே... இந்த சுமா அக்காவை வச்சு நீங்க எத்தனை நாள் அரசியல் பண்றதா முடிவு... அதில ஏதாவது புரிஞ்சுதான் பேசுறியளா...

அண்ணே.. நீங்க இஸ்லாமிய சகோதரர்களை இழுத்து எனக்கெதிராக நிறுத்தி வைக்கலாமென்று எண்ணுவது நன்றாகப் புரிகிறது...

பாருங்கண்ணே.. .உங்க ஃப்ளெக்ஸிப்ளிட்டி...

அப்புறம் அந்தக் கவிதா அக்கா மேட்டர் என்னங்க ஆச்சு..

ஏழர said...

அன்புள்ள ரவி, போலி பின்னூட்ட விவகாரத்தில் ஏதாவது முன்னேற்றம் உள்ளதா? இங்கு கேட்பதற்காக தவறாக எண்ண வேண்டாம்..
இந்த பதிவும் கூட ஒரு போலியின் விளைவால் வந்ததாக சந்தேகிப்பதால்...

ஏழர said...

///ஓட்டரசியல் ? பாசிடிவ் நெகடிவ் ? கொஞ்சம் பிடிபடவில்லை. எந்த பதிவுக்கு ? எப்போது ?//

எனக்கும் இது பிடிபடவில்லை, ஆனால் யாரோ ஸ்மார்டாக மைனஸ் குத்துகிறார்களோ என்று தோன்றுகிறது...

vasu balaji said...

// செந்தழல் ரவி said...

வானம்பாடிகள் சார். கலகலப்பிரியா பழகிய ரவுத்திரத்தில் பதிவுலகை விட்டே வெளியேறினாரே சுஜ்மலா அக்கா ? நீங்கள் அதனை அமைதியாக பார்த்திருந்தீர்கள் அல்லவா ? அதே போல இந்த கள்ள மவுனக்கேள்வியையும் ?

ஓட்டரசியல் ? பாசிடிவ் நெகடிவ் ? கொஞ்சம் பிடிபடவில்லை. எந்த பதிவுக்கு ? எப்போது ? விளக்கம் தேவை.

மற்றபடி நீங்கள் மதிப்பளிக்கும் அளவுக்கு நானில்லை. மிகச்சிறியோன். எளியோன்.//

சுமஜ்லா பதிவுலகை விட்டுப் போக காரணம் கலகலப்ரியா என்று உங்களிடம் சொன்னாரா? எந்த ஆதாரத்தில் சொல்கிறீர்கள் எனத்தெரியவில்லை. இருக்கட்டும். கேள்விக்குறியான அந்த இடுகையிலாவது வந்து தன் கருத்தைச் சொன்னாரா? போகட்டும். அந்தக் கவிதையைப் படித்தீர்களா?
அயல் நாட்டில் வாழும், தன் முஸ்லீம் சோதரியும் நற்குடிதான் பர்தா அணியாவிடினும் என்பதைத்தான் கவிதையின் கரு சொல்கிறது. அதற்குப் பின்னான பின்னூட்டத்தில் கலகலப்ரியா விளக்கமும் அளித்திருந்தார். தான் மதம் சார்ந்தவளல்ல என்று. நீங்கள் திரும்பத் திரும்ப சுமஜ்லா அவர்கள் பதிவுலகை விட்டுப் போகக் காரணம் எனக்கூறுவதை நிரூபித்தாக வேண்டும். அதன் பிறகும் அவர் பல இடுகைகள் இட்டிருக்கிறார். இங்கோ எங்குமோ அவர் ப்ரியாவைப் பொறுப்பாக்கவில்லை எனக்குத் தெரிந்தவரை. அப்படி கலகலப்ரியாவுக்கு தெரியவந்திருக்குமேயானால் கண்டிப்பாக யார் தூண்டலுமின்றி தானாகவே வலியச்சென்று புரியவைக்கவோ, தன்னிடம் தவறாக ஏதேனும் இருந்திடில் மன்னிப்புக் கேட்கவோ தயங்காதவர்.

போகட்டும்

வினவின் இடுகை ஒரு பெண்ணைத் தரக்குறைவாக எழுதியதற்காக. இதில் கலகலப்ரியா தான் ஜாதி பார்ப்பவர் இல்லை என்றும், பார்ப்பனீயத்துக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என தெளிவு படுத்திய பின்னும், இன்னும் வந்து சுமஜ்லா எழுதாமல் போனதற்கு காரணம் சொல்கிறீர்களே ஏன் ரவி?

ஏழர said...

சரிங்க நான் கிளம்பறேன் நேரமாயிடுச்சு, அந்த போலி பதிவுக்கு எனது கண்டனங்களையும், இந்த பதிவின் நியாத்திற்கான ஆதரவையும் மீண்டும் பதிகிறேன். விவாதத்தில் பங்கு பெற்ற ப்ரியா, வானம்பாடிகள், அது சரி மற்றும் ரவிக்கு நன்றி

vasu balaji said...

ஏழர said...

சரிங்க நான் கிளம்பறேன் நேரமாயிடுச்சு, அந்த போலி பதிவுக்கு எனது கண்டனங்களையும், இந்த பதிவின் நியாத்திற்கான ஆதரவையும் மீண்டும் பதிகிறேன். விவாதத்தில் பங்கு பெற்ற ப்ரியா, வானம்பாடிகள், அது சரி மற்றும் ரவிக்கு நன்றி//

மீண்டும் நன்றி ஏழர சார்.

அது சரி(18185106603874041862) said...

//
செந்தழல் ரவி said...
வானம்பாடிகள் சார். கலகலப்பிரியா பழகிய ரவுத்திரத்தில் பதிவுலகை விட்டே வெளியேறினாரே சுஜ்மலா அக்கா ? நீங்கள் அதனை அமைதியாக பார்த்திருந்தீர்கள் அல்லவா ? அதே போல இந்த கள்ள மவுனக்கேள்வியையும் ?

ஓட்டரசியல் ? பாசிடிவ் நெகடிவ் ? கொஞ்சம் பிடிபடவில்லை. எந்த பதிவுக்கு ? எப்போது ? விளக்கம் தேவை.

மற்றபடி நீங்கள் மதிப்பளிக்கும் அளவுக்கு நானில்லை. மிகச்சிறியோன். எளியோன்.
June 8, 2010 12:22 AM
//

ரவி,

நீங்கள் வானம்பாடிகளை கேட்டிருந்தாலும் நான் எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்..

சுமஜ்லா இடுகை பற்றி உங்களுக்கே தெரியும்...அது பொதுவான இடுகையே தவிர, எந்த ஒரு பதிவரையும் தனிப்பட்ட முறையில் குறிவைத்து எழுதப்பட்ட இடுகை அல்ல...அதனாலேயே பலராலும் அதை அவர்களுக்கு தெரிந்த முறையில் புரிந்து கொள்ள முடிந்தது..

ஆனால், நர்சிம் இடுகை அப்படியல்ல என்றும் உங்களுக்குத் தெரியும்...இரண்டு பதிவர்களுக்கான பிரச்சினையில் அவ்வளவு எளிதாக கருத்து சொல்ல முடியாது. (இது அவர்களின் தனிப்பட்ட பிரச்சினை என்று நான் சொல்ல வரவில்லை..ஆனால் தனிப்பட்ட பிரச்சினையாகத் தான் ஆரம்பித்திருக்கிறது என்றே எனது புரிதல்) என்ன நடக்கிறது என்றே புரிந்து கொள்வது கடினம். அப்படி இருக்கும் போது எப்படி கருத்து சொல்ல முடியும்? உங்களுக்கும் மற்ற சில பதிவர்களுக்கும் கூட பிரச்சினை நடந்திருக்கிறது...இன்றைக்கு வரைக்கும் எனக்கு அது என்ன பிரச்சினை என்றே புரியவில்லை..அதனாலேயே நான் அந்த பிரச்சினையில் எந்த கருத்தும் சொல்லவில்லை..

இதற்காக கருத்து சொல்லி இடுகையிடாதவர்கள் எல்லாம் கள்ள மவுனம் என்று சொல்ல முடியுமா?

(அவர் பதிவுலகு விட்டு போனதே எனக்கு தெரியாது...அதனால், நான் கள்ள மவுனம் சாதிக்கிறேனா என்று கேட்டு விடாதீர்கள்..)

vasu balaji said...

/ஓட்டரசியல் ? பாசிடிவ் நெகடிவ் ? கொஞ்சம் பிடிபடவில்லை. எந்த பதிவுக்கு ? எப்போது ? விளக்கம் தேவை./

vaanampadigal Priya adhusari saandahs wartwt biogenes geraldindia prabhagar Rasmi subankan minnaluae lemurian karthikvlk ilanthendral pattapatti gulf_tamilan Srini kmuralie kummi sganeshmurugan senthazalravi Anamika Simachu chithu anijaya murli03 pillaival

நேற்றய இடுகை ரவி சார். ஓட்டு உங்களது. பின்னூட்டம் இல்லை. தவிர இது மீள் இடுகை. இதில் அரசியல் இல்லை ரவி. பிடிக்கவில்லையெனில் எதிரோட்டு நியாயமே. இப்போதாவது சொல்லுங்கள். கவிதை புரிந்ததா?

vasu balaji said...

செந்தழல் ரவி said...

வானம்பாடிகள் சார். கலகலப்பிரியா பழகிய ரவுத்திரத்தில் பதிவுலகை விட்டே வெளியேறினாரே சுஜ்மலா அக்கா ? நீங்கள் அதனை அமைதியாக பார்த்திருந்தீர்கள் அல்லவா ? //

மன்னிக்க வேண்டும் ரவி உங்கள் தவறான புரிதலுக்கு. வேண்டுமானால் சரிபார்த்துக் கொள்ளுங்கள். அந்த நேரம் நான் வலைச்சரத் தொகுப்பாசிரியராக இருந்தேன். சீனா அய்யாவின் மீதிருந்த மரியாதையும், வலைச்சரத்தின் சட்டத்துக்கு கட்டுப்பட்டு மத சம்பந்தமான கருத்துச் சொல்வதையும் தவிர்த்திருந்தேன். அந்த நேரம் கலகலப்ரியாவின் கவிதையை சாக்கிட்டு எதிர்வினை வந்தபோது நான் மட்டும் குரல் கொடுக்காமல் இருந்தது எனக்கு இன்னும் வருத்தமளிக்கிறது.

அப்படி இல்லையெனில் கண்டிப்பாக சுமஜ்லாவின் தவறான புரிதலுக்கு துணை போயிருக்கமாட்டேன். ஒரு வேளை என்னையும் பார்ப்பனீயம் எனச் சொல்லியிருக்கலாம். ஆக நீங்களும் பர்தா அணிந்தவர்தான் நற்குடி என்ற கருத்தைக் கொண்டிருக்கிறீர்களா ரவி?

ரவி said...

வானம்பாடிகள் அய்யா. ஏற்கன்வே கலகலப்ரியா வால்பையன் பதிவில் தனக்கு சுகமில்லை என்று சொன்னதாக நியாபகம். கோபம் குறைக்கவேண்டும் என்று நானும் கேட்கிறேன்.

நான் ரொம்ப டீசண்டுங்க என்ற பதிவில் ஆரம்பித்து இது நாலாவது.

ஆதார பிரச்சினை வேறு தளத்தில் முடிந்துவிட்டது.

மறப்போம் மன்னிப்போம் என்று சம்பந்தப்பட்டவர்களே நினைக்கும் நிலையில் இது தேவையா ?

சுஜ்மலா அக்கா விடயத்தில் ப்ரியா பொங்கியது ஏன் என்பது வெள்ளிடைமலை, குழந்தைக்கு கூட தெரியும். புது விளக்கம் ஏனோ ?

கவிதைகள் எல்லாம் புரியும் அளவுக்கு எனக்கு அறிவு முதிர்ச்சியில்லை.

கலகலப்ரியா said...

//மறப்போம் மன்னிப்போம் என்று சம்பந்தப்பட்டவர்களே நினைக்கும் நிலையில் இது தேவையா ?//

ஹல்லோ அண்ணே... ரவி அண்ணே.. சம்மந்தப்பட்டவர்களா..? அப்போ நான் சம்மந்தப்படலையா...

உங்க ஃப்ளெக்ஸிப்ளிட்டிக்கு ஒரு அளவு கணக்கே இல்லையா...

எனக்கு மட்டும்ம்ம்தான் சம்மந்தம் இருக்கிற மாதிரி பாய்ஞ்சு பாய்ஞ்சு பேசினீங்க.. இப்போ என்னடான்னா.. யாரோ பஞ்சாயத்து வச்சு ப்ரச்ச்ன தீர்ந்துடுத்தாம்ல...

அண்ணே கேட்டுக்குங்கண்ணே... அவங்க பிரச்ச்ன தீர்ந்திருக்கலாம்.. அப்பவும்ம் செரி இப்பவும்ம் செரி... நான் அதில சம்மந்தப் படலை... அதனாலயே என்னோட ப்ரச்ச்ன தீரலை...

உங்க நிய்ய்யாயம்ம்ம்ம் இருக்கே... அப்ப்ப்பப்பா... முடியலீங்கண்ணே...

அது சரி(18185106603874041862) said...

//

நான் ரொம்ப டீசண்டுங்க என்ற பதிவில் ஆரம்பித்து இது நாலாவது.
//

ஒரே ஒரு வேறுபாடு ரவி...நான் ரொம்ப‌ டீசண்டுங்க என்பதில் இது ஆரம்பிக்கவில்லை...வினவின் இடுகையில் சிவராமன் ஆரம்பித்தது..

vasu balaji said...

/சுஜ்மலா அக்கா விடயத்தில் ப்ரியா பொங்கியது ஏன் என்பது வெள்ளிடைமலை, குழந்தைக்கு கூட தெரியும். புது விளக்கம் ஏனோ ? /

அந்த வெள்ளிடை மலை சத்தியமாக புரியலை சார். புரிய வையுங்களேன். கவிதை புரிய வேண்டாம். பின்னூட்டம் புரியுமே. தெளிவாகச் சொல்லியிருந்தாரே. தன் நாட்டில் இஸ்லாமிய சோதரிகள் பர்தா அணிவதில்லை. நோன்புக் காலங்களில் அவர்களோடு உணவுண்பதையும் அவர்களுக்குள் நேயமாக இருப்பதையும். இதையும் தாண்டி எந்த வெள்ளிடைமலை உங்களுக்கு தெரிந்தது சொல்லுங்களேன். விளக்கவேண்டியது கலகலப்ரியாவின் கடமை. செய்வார்.

vasu balaji said...

புது விளக்கம் ஏனோ ?

//இல்லையே ரவி சார். இடுகை இருக்கிறது. இன்னமும் வன்மத்துடன் அடிக்கடி படிக்கப் படுகிறது. சமயம் கிடைக்கும்போதெல்லாம் சம்பந்தமின்றி கேட்க முடிகிறது. நிதானமாக படித்துவிட்டு சொல்லுங்கள். ஏதாவது புது விளக்கம் இருக்கிறதாவென?//

//கவிதைகள் எல்லாம் புரியும் அளவுக்கு எனக்கு அறிவு முதிர்ச்சியில்லை.//

இது கிண்டலாகச் சொல்வது புரிகிறது. ஆனாலும், புரியாத ஒரு விஷயத்தில் கூட கருத்துச் சொல்லியாகவேண்டுமா சார். எதிர் ஓட்டு புரியாமலே போட்டீர்களா? எனக்கு ஒன்று பிடிக்காது என்றால் ஒதுங்கிப் போவேன். புரியாது என்றால் புரிய முயற்சிப்பேன். அல்லது கேட்பேன். எனக்குப் புரியாததற்கு படைப்பாளியை சபித்து என்ன பயன்?

பிரபாகர் said...

வணக்கம் ரவி...

சுமஜ்லா அவர்களுக்கு மிக நாகரிகமாக பர்தா விஷயமாக ஒரு பின்னூட்டம் இட்டும் வெளியிடவில்லை.

அது விஷயமாய் அவர்களின் அணுகுமுறையும் சரியில்லை. அய்யா சொன்னதுபோல் அதன் பின்னும் எழுதித்தான் வந்தார்.

பிரபாகர்...

பிரபாகர் said...

இன்னொரு விஷயம் ரவி, எல்லோரும் எல்லா விஷயங்களையும் கேட்கனும் என எதிர்ப் பார்ப்பதில் நியாயம் இல்லை. இடுகை எழுதுவது என்பது வேலை, குடும்பம் எல்லாம் தவிர்த்து கிடைக்கும் ஒய்வில் நம்மை ஓய்வில்லாமல் ஆக்கி செய்யும் ஒன்று. கிடைக்கும் சொற்ப நேரத்தில் எழுதி படித்து...

பிரபாகர்...

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

நீங்கள் சொல்ல வந்ததையெல்லாம் உங்கள் ப்ரொஃபைல் போட்டோவே சொல்லிவிட்டது ப்ரியா..

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

//இன்னும் எத்தனை விளம்பரங்கள் வேண்டுமானாலும் வரலாம்.. எத்தனை கோர நகங்கள் வேண்டுமானாலும் நீளலாம்... கீழே உள்ள பட்டியல் தவிர்ந்த இன்னும் நூறாயிரம் இணைப்புகள் உருவாகலாம்.. என் பணி அல்லது கடமை நிமித்தம் இங்கு இது வரைக்கும் உள்ளது போன்ற தேக்கங்கள் வரலாம்... ஆனால்... புறமுதுகிட மாட்டேன்.//

குட்..

Anonymous said...

அக்கா, இந்து மதம் என்பது 6 வகை பிரிவைக் கொண்டது; சைவம், வைஷ்ணவம், சாக்தம், காணபத்தியம், கௌமாரம், சௌரம். அது இந்த மரமண்டைகளுக்குத் தெரியுமா தெரியாது. எல்லா இந்துக்களும் பிராமணர்கள் அல்ல. அதுவும் இந்தக் கூட்டத்துக்கு புரிவதில்லை. இந்து என்பது மதம். பிராமணர் என்பது ஜாதி. என்ன அந்த ஜாதிக்காரன் தான் கோவிலில் பூசை செய்யறாள். மதம் எது ஜாதி எதுன்னு அடிப்படையே புரியாத அறிவிலிகளுடன் என்ன பேச்சுன்னு அப்படியே விட்டுடுங்கோ.

விடமாட்டேன்ட்டா என்ற வலைத்தளத்தில் போய் REPORT ABUSE போய் HATE/VIOLENCE க்ளிக் பண்ணி புளொக்கை மூடச்செய்யுங்கள்.

It's proven that this was written by araiticket. Go flag that blog people. ஒவ்வொரு நாளும் கிளிக் பண்ணுங்கள் ப்ளீஸ். ஒரு நிமிடம் கூட எடுக்காது. புல்லுருவிகள் மாதிரி முளைக்கும் வலைத்தளங்களை விடாமல் ஃபிளாக் பண்ணுங்கள்.

//அப்புறம் சந்தன முல்லை அளவுக்கு சிறிது கூட குறை இல்லாமல் கலகலப் பிரியா வருத்தப் பட்டாராமே .. என்ன வருத்தமாம் .. கக்கூசில் சரியாக தண்ணீர் வரவில்லையா ?.. (அவர் பதிவில் அதிகமாக கக்கூசைத் தான் எழுதி நாரடிக்கிறார் ) . கலகலப்பிரியா ஒரு பெண்ணிற்கு நேர்ந்த அசிங்கத்தை ஒரு பெண்ணாக இருந்தும் கண்டனம் தெரிவிக்காமல் நர்சிம்மின் சொந்த ஜாதி பாசத்தில் நிலை தடுமாறி கக்கூசில் விழுந்தவர் தான் .. இன்னும் எழுந்த பாடில்லை . இவளை "இந்து பதிவர் " என்று வினவு தோழர்கள் போட்டு விட்டார்களாம். ஆம் . அது தவறு தான் . மாறாக , இவளை எல்லாம் "பார்பனிய ஜாதி வெறி கக்கூஸ் பதிவர்" என்று போட்டிருக்க வேண்டும். விட்டுவிட்டார்கள். சந்தனமுல்லையை வெறும் பகடி பேசியதற்கு மிக கேவலமாக சித்தரித்து நரசிம் என்ற பொருக்கி எழுதியதை கண்ட போது அவர் எவ்வளவு மனம் வெறுத்து புண் பட்டிருப்பாரோ அதே அளவுக்கு கலகலப் பிரியாவும் வருத்தப் படும் அளவுக்கு வினவு தோழர்கள் என்ன அவரை "------------- பதிவர் " என்றா கூறினார்கள் . இந்து பதிவர் என்று உண்மையைத்தானே கூறினார்கள் //


இந்த ரவி இருக்காறே கரெக்ட்டா முக்கியமாக கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் விட்டுவிடுவார். .

அவரால் பதிவுலகை விட்டுட்டு போற பதிவரைப் பத்தி நூறுவாட்டி கேட்டும் பதில் இல்லை. அதுக்கு முதலில் பதில் சொல்லுமோய். ஆளப்பார்.

வானம்பாடிகள் சார் எதிலேயோ என் பெயர் இருக்கு. நான் பிரியாக்காவின் எந்த பதிவுக்கும் மைன்ஸ் ஓட்டு போட்டதில்லை. என்னங்க இது?

குடுகுடுப்பை said...

மன்னிப்பு கேட்டாலும் வெக்கமாட்டாங்க.

//
செந்தழல் ரவி உங்கள் நடுநிலைமை வியக்க வைக்கிறது,இன்றும் கலகலப்பிரியாவின் கவிதை உள்ளது, அதில் என்ன தவறு என்று கண்டுபிடிக்கவும். பர்தா போடாதாவர் எல்லாம் நற்குடி இல்லை என்று சொன்னபோதும், திருநீறு வைத்தவர்கள் எல்லாம் தேவடியாள்கள் என்று சொன்னபோதும் தாங்கள் எந்தக்கருத்தும் சொல்லவில்லை,அது உங்கள் உரிமை.அதே உரிமை அனைவருக்கும் உள்ளது.உங்களிடம் இருந்து இப்படி ஒரு சப்பை வாதம் வருத்தமளிக்கிறது.

VR said...

............ ஆனால்... புறமுதுகிட மாட்டேன் ..........
நண்பர் கல கல, உங்கள் கருத்துக்களுடன் முழுவதும் உடன்படுகிறேன். உங்கள் வலிமையையும் விவேகமும் எனக்கு கற்றுத்தந்த பாடங்கள் பல. இது போன்ற ஈனபிறவிகளை எதிர்க்கும் உங்களின் போர்குணம், நைந்து போன ரணம் வடியும் எங்கள் மனதுக்கு தெம்பையும் பலத்தையும் தருகின்றன. வனம்பாடிகளுக்கும் உங்களுக்கும் என் வணக்கங்கள். நம் போன்றோர் செல்லும் வழி கரடு முரடகதான் இருக்கும்..........

ஈரோடு கதிர் said...

//செந்தழல் ரவி said...
வானம்பாடிகள் சார். கலகலப்பிரியா பழகிய ரவுத்திரத்தில் பதிவுலகை விட்டே வெளியேறினாரே சுஜ்மலா அக்கா ? //

ரவி..

பஞ்சாயத்துப் பண்ண வேற மேட்டர் கிடைக்கலையா...

பதிவர். சுமஜ்லா தன்னுடைய மேற்படிப்பு, வேலைப் பளுவின் காரணமாகத்தான் அதிகம் எழுதுவதில்லை எனக் குறிப்பிட்டதாக அறிகிறேன்...

போங்க........ முதல்ல...
2010ல் சுமஜ்லா அவர்கள் எழுதிய எல்லா இடுகைகளையும் ஒரு முறை படிச்சுட்டு வாங்க....

Anonymous said...

ரவி,

பிரச்சினை முடிந்துவிட்டதாகச் சொல்கிறீர்களே? தகவல் தர முடியுமா?

லதானந்த், அபி அப்பா, சிவா, கலகலப் ப்ரியாவிற்கு என்ன நியாயம் கிடைத்தது கொஞ்சம் சொல்லுங்களேன்?

தகவல் தெரிந்துகொள்ளத்தான் கேட்கிறேன். மாதவராஜும் நர்சிம்மை எழுதச் சொல்கிறார். நான் நர்சிம்மிடம் பேசின வரையில் ஏதும் உடன்பாடு எட்டப்பட்டதாக தெரியவில்லை.

சொல்லுங்க ரவி. இந்த நாலு பேருக்கும் உங்க தரப்பிலிருந்து என்ன தீர்வு?

உங்க ஃப்ளெக்ஸிபிலிட்டி மாதிரியே இவங்க நாலு பேரும் இதுல ப்ளெக்ஸிபிலா இருக்கணும்னு எதிர்பார்க்கிறீங்களா ரவி?

VR said...

ரவி போன்ற அரை வேக்காட்டு ஆணதிக்கவாதிகளுக்கு உங்கள் தளத்தில் என்ன வேலை? ஒழுக்க நியதிகளை பற்றி இவர் பேசுவதுதான் வேடிக்கையாக இருக்கிறது. இவரால் பதிவுலகை விட்டே வெளியேறினாரே கிருபா நந்தினி என்ற பெண் பதிவர்? பெண் பதிவர் என்பதால் சமையல் குறிப்பு எழுத சொன்ன நபர் தானே இவர்? இவர் வாய் கிழிய பேசும் பெண்ணுரிமையும் நியாய நியதிகளும் அப்போ எங்கே போனது? ரௌத்ரம் பழகுவதும் பழகாததும் அவரவர் உரிமை. அதற்கு யாருடைய கருத்து மயிரும் இங்கு தேவையில்லை.

ரவி, யாருக்கு எது பிடித்ததோ, எது தேவையோ, எதில் மகிழ்சி கிடைக்கிறதோ, அதை செய்வது அவரவர் உரிமை. நீங்கள் வினவு கும்பலின் வக்கிரங்களுக்கு கும்மி அடிப்பதை போல. முதலில் உங்கள் கைகளில் இருக்கும் அழுக்கை கழுவிவிட்டு மற்றவர்களை குற்றம் சாடுங்கள்!

சில முக்கியமில்லா பின் குறிப்புகள்: 1 . கிருபா நந்தினியின் கருத்துக்களில் எனக்கு உடன்பாடு எப்போதுமே இல்லை. 2. ஆறுமாதத்தில் உங்களுக்கு சில உண்மைகள் புரியலாம் அல்லது உங்கள் தவறுகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம் (as per your ப்ளக்ஸிபிள் theory). 3. வினவு கும்பல் சக பதிவர்களின் மீது வீசும், வீசிய வன்மங்களுக்கு திடீர் நியாயவாதியாகிய நீங்கள் ஏன் கள்ளமவுனம் கொண்டுருக்கிறீர்கள்? .......

Anonymous said...

"இலக்கணம் மாறுதோ? இலக்கியம் ஆகுதோ?" என்ற வரிகளை உண்மையாக்கும் வகையில் இன்றைய பதிவுலகம் போய்க்கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை.மதம், ஜாதி, பாலினம், சொந்த காழ்ப்புணர்ச்சி போன்றவற்றின் அடிப்படையில் கண்மூடித்தனமான ஆதரவும் எதிர்ப்பும்!. சீ.. சீ.. சகிக்க முடிய வில்லை.பிரியா, உங்கள் நிலைப்பாட்டில், கருத்தில் நான் 100% உடன்படுகிறேன்.
வாய்மையே வெல்லும்.

vasu balaji said...

/வானம்பாடிகள் சார் எதிலேயோ என் பெயர் இருக்கு. நான் பிரியாக்காவின் எந்த பதிவுக்கும் மைன்ஸ் ஓட்டு போட்டதில்லை. என்னங்க இது?/

உங்களை மைனஸ் ஓட்டு போட்டீங்கன்னு யாரு சொன்னா. அது யார் யாரெல்லாம் ஓட்டு போட்டாங்கன்னு இருக்கிறது. அதில யாரு மைனஸ் போட்டாங்கன்னு பார்த்துண்டிருந்ததால தெரிஞ்சது.

ரோஸ்விக் said...

வினவு தோழர்கள் ஒரு பதிவு எழுதும்போது அதில் சம்பந்தப்படாதவர்களை இழுப்பதை என்று நிறுத்துவீர்கள்.

எந்த பிரச்சனையில் தலையிடவேண்டும் என்பது அவரது விருப்பம். இதில் கலகலப்ரியாவோ, மற்ற பதிவர்களோ தலையிடவில்லை என்பதை கேட்க நீங்கள்/நாம் யார்?

தலையிட்டால் ஒரு சாயம், தலையிடவில்லையென்றால் ஒரு சாயம் பூசும், சாயம்பூசுத் தொழில் ஏன்?

இந்தப் பிரச்சனையில் வினவு எழுதிய பதிவு முதற்கொண்டு அனைத்திலும் அழிக்கப்பட்ட நர்சிம்மின் பதிவைக் கொடுத்து மேலும் மேலும் தோழி சந்தணமுல்லையை நீங்களும் மற்றவர்களும் அறியாத அனைவரும் அறியும் வண்ணம் செய்தது சரியா? ஒருவேளை இதில் தவறு செய்தவரை கண்டிக்க / தண்டிக்க வேண்டுமெனில், தேவையான சமயத்தில் மட்டும் அந்த பதிவுகளைப் பயன்படுத்தியிருக்கலாமே!

ரோஸ்விக் said...

இதை இங்கு சொல்வதற்காக எனக்கும் ஒரு சாயம் பூச முனைய வேண்டாம். மீறி முனைந்தால் ம*#$#ரே போச்சுன்னு போய்கிட்டே இருப்பேன்.

இங்கு பதிவு எழுதுவது எவருக்கும் தொழிலும் அல்ல. வர்ற பிரச்சனை எல்லாத்தையும் தட்டிக் கேக்குறதுக்கு எல்லாரும் வேலையில்லாமல் திரியவில்லை.

எப்போதுமே மனிதன் தனக்கு இருக்கும் பிரச்சனைகளுக்குத் தான் முக்கியத்துவம் கொடுப்பான். அடுத்தவர் பிரச்சனை எப்போதுமே Optional தான்.

Anonymous said...

சுமஜ்லா கடைசியாக ஒரு மாதத்திற்கு முன்பு இடுகை இட்டிருக்கிறார். டீச்சர் டிரெயினிங் படிப்பதால் வேலைப்பளு அதிகம் என்று எழுதுவதை குறைத்துவிட்டதாக அவர் நண்பர்கள் சொன்னார்கள்

ரோஸ்விக் said...

வினவுத்தோழர்கள் இந்த விசயத்தை தட்டிக்கேட்பதில் யாருக்கும் ஆட்சேபனையில்லை. ஆனால், அனுகிய விதங்களும், போகிற போக்கில் சில பதிவர்களை பெயர் குறிப்பிட்டு தாக்கியது எந்த வகையில் நியாயம்?

அனைத்துப் பதிவர்களையும் நாய்கள் என்றீர்களே... இதில் நீங்கள் எந்த வகையில் இருக்கிறீர்கள். மொக்கை என்று சொல்லிவிட்டுப் போங்கள். எனக்கு ஆட்சேபனையில்லை.

தட்டிக்கேட்க வேண்டும் என்றால், நம் தமிழகத்தில் அரசியல்வாதிகளால், அதிகாரிகளால் நிகழும் அக்கிரமங்களைத் தட்டிக்கேளுங்கள். இந்த பதிவுலகம் மிக மிக சிறியது என்பது நீங்களும் அறிந்தது தானே?? இதில் எத்தனை பேர்தான் நாட்டாமையாக இருக்க முடியும்??

ரோஸ்விக் said...

ரவி அண்ணா! இந்த பிரச்சனை உங்களுக்கு வேண்டிய குடும்பத்துக்கு ஏற்பட்டதால், நீங்கள் தீவிரமாக ஈடுபடுவதில் யாருக்கும் ஆட்சேபனை இல்லை. இதில் யாராவது நர்சிம் செய்தது சரியென்று சொன்னார்களா? பிறகு ஏன் ஒவ்வொருவருக்கும் ஒரு சாயம் தேடித்தேடிப் பூசுகிறீர்கள்?

இப்போது இது உங்களுக்கு இரத்தம். அடுத்தவர்களுக்கு “தக்காளி சூசாக” இருப்பதில் என்ன அதிர்ச்சி இருக்க முடியும்.

இப்போது கலகலப்பிரியாவுக்கு ஏற்பட்ட கலங்கம் உங்களுக்கு தக்காளி சூசு தானே! (உடனே என்னையும் எதாவது ஒரு குழுவில் திணிக்க முயல வேண்டாம். இதுவரை எந்த குழுவிலும் நான் இல்லை. அனைவரும் எனக்கு நண்பர்கள் தான் நீங்கள் உட்பட)

ரோஸ்விக் said...

கவிதை எழுதுறவனுக்கு கதைப் பதிவுகள் மொக்கையாக இருக்கலாம். vise versa.

கருத்து சொல்லி பதிவு எழுதினால், எத்தனை பேருக்கு எரிச்சல் வருமென்று உங்களுக்கும் தெரியும்தானே!

சிலருக்கு நகைச்சுவை பதிவுகளைக் கண்டாலே கடுப்பு ஏறும்... ஏன் இந்த பதிவுலகை சமுதாய மாற்றத்திற்கு பயன்படாமல் இப்படி வெட்டியாக எழுதிக்கொண்டிருக்கிறார்கள் என்று...

இலக்கியப் பதிவுகள் கேட்கவே வேண்டாம்... அது பெரும்பாலோருக்கு வெறுப்பேற்றும்.

அவரவர் ரசனைகளை யார் மாற்ற முடியும்?? மாற்றவேண்டும்??

ரோஸ்விக் said...

அநியாயத்தை எங்கு பார்த்தாலும் தட்டிக்கேட்பேன் என்று எல்லோராலும் திரியமுடியுமா?

அப்படி யாரும் இருந்தீர்கள் என்றால் என் குடும்பத்துக்கு ஏற்பட்ட அநீதிகள் நிறைய இருக்கு என்னை தனிப்பட்ட முறையில் தொடர்புகொள்ளவும்.

ரோஸ்விக் said...

இங்கு இது போன்று பின்னூட்டமிடுவதற்கு என்னை மன்னிக்கவும் ப்ரியா!

தகவலுக்காக, நர்சிம் எழுதிய இடுகைக்கு வக்காளத்து வாங்கவும் இல்லை. அந்த பதிவிற்கு எனது கண்டனங்கள்.

ரோஸ்விக் said...

இப்போ கலகலப்ரியாவுக்கு ஏற்பட்ட இந்த கலங்கத்தை நீக்க... அவர் பெண் பதிவர்களைத் திரட்ட வேண்டுமா? கூடாதா என்பதையும் நாட்டாமைகளே சொல்லிவிடுங்கள்.

அவர் கூப்பிட்டு யாரும் அவருக்கு ஆதரவு(?) தந்தால், அவர்களுக்கு என்ன சாயம் பூசி நாங்கள் அழைக்க வேண்டும்?

Sabarinathan Arthanari said...

/கலகலப்பிரியா பழகிய ரவுத்திரத்தில் பதிவுலகை விட்டே வெளியேறினாரே சுஜ்மலா அக்கா ? //

என்ன கொடுமைங்க இது. கருத்துக்களுக்கு எதிர்வினை தெரிவிப்பதற்கும், பதிவரை தனிப்பட்ட முறையில் தகாத வார்த்தைகளில் திட்டுவதற்கும் கூடவா வித்தியாசம் தெரியவில்லை ? தூங்குபவர்களை போல நடிப்பவர்களை எழுப்ப இயலாது.

நேரடியாக ஒரு கேள்வி பிரியாவிற்கும் நர்சிம் பிரச்சிணைக்கும் என்ன சம்பந்தம் ? ஆயிரக்கணக்கானோர் பதிவு எழுதும் போது அவருடைய பெயர் ஏன் தேவையில்லாமல் கோர்த்து விடப்பட்டு முஸ்லிம்களுக்கு எதிரானவராக சித்தரிக்க பட்டார் ?

கலகலபிரியாவை குறிவைத்து உங்களுடைய குழு எதிர்ப்பதற்கு அவருடைய மதம் மட்டும் தானே காரணம் ? இது மதத்தின் காரணமாக அவரை பதிவுலகில் துரத்த செய்யப்படும் ஒரு Character assasination முயற்சி.

முற்போக்கு புரட்சியாளர்களின் இலட்சணம் எல்லாம் இப்படி தான் இருக்கிறது

ரவி said...

//வி,

பிரச்சினை முடிந்துவிட்டதாகச் சொல்கிறீர்களே? தகவல் தர முடியுமா?

லதானந்த், அபி அப்பா, சிவா, கலகலப் ப்ரியாவிற்கு என்ன நியாயம் கிடைத்தது கொஞ்சம் சொல்லுங்களேன்?

தகவல் தெரிந்துகொள்ளத்தான் கேட்கிறேன். மாதவராஜும் நர்சிம்மை எழுதச் சொல்கிறார். நான் நர்சிம்மிடம் பேசின வரையில் ஏதும் உடன்பாடு எட்டப்பட்டதாக தெரியவில்லை.

சொல்லுங்க ரவி. இந்த நாலு பேருக்கும் உங்க தரப்பிலிருந்து என்ன தீர்வு?

உங்க ஃப்ளெக்ஸிபிலிட்டி மாதிரியே இவங்க நாலு பேரும் இதுல ப்ளெக்ஸிபிலா இருக்கணும்னு எதிர்பார்க்கிறீங்களா ரவி?//

வேலன் சார். என்னுடைய சொம்பு நசுங்கிய சொம்பு. ஆகவே நீங்களே தீர்ப்பை எழுதவும். நான் வெறும் தகவல்தான் கொடுத்தேன்.

ரவி said...

ஈரோடு கதிர்.

பதிவு சந்திப்புக்கு பர்தாவோடு சென்றேன் பர்தாவோடு வந்தேன் என்று யார் எழுதினால் என்ன ?

அவர் யாரையோ திருப்திப்படுத்துவதற்காக எழுதுகிறார் என்று சொன்னது யார் ?

உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களேன். அந்த மூஞ்சி எது என்று பார்ப்போம்.

ரவி said...

ரோஸ்விக்.

கலகல பிரியாவுக்கு எந்த களங்கமும் ஏற்பட்டதாக நான் நினைக்கவில்லை.

உறைந்து கிடக்கும் அந்த உண்மையை ஏற்றுக்கொள்ளாமல் தான் குதிக்கிறார்கள்.

அதனை சப்பைக்கட்டு கட்டத்தான் இம்புட்டு கூட்டம் என்று என்னுடைய பார்வையில் தெரிகிறது.

நன்றாக கவனிக்கவேண்டும். என்னுடைய பார்வை மட்டுமே.

vasu balaji said...

செந்தழல் ரவி said...

ரோஸ்விக்.

// கலகல பிரியாவுக்கு எந்த களங்கமும் ஏற்பட்டதாக நான் நினைக்கவில்லை.//

ஓ. அதற்கும் உங்களுக்குதான் உரிமையா ரவிசார். எங்கு கிடைக்கும் அந்த உரிமை? கலகலப்ரியாவோ, வேறு யாரோ அப்படி நினைத்து வாளாவிருந்தால் ஏன் கள்ள மவுனம் என்று கேட்பீர்களோ? சுமஜ்லா எழுதாத காரணம் சொன்ன பிறகும் முடிந்தால் தவறான புரிதலுக்கு மன்னிப்பு கேளுங்கள் சார்.

//உறைந்து கிடக்கும் அந்த உண்மையை ஏற்றுக்கொள்ளாமல் தான் குதிக்கிறார்கள்.//

நீங்கள் சொல்வதுதான் உண்மையா? பதிவிட்டவர் சொல்வதெல்லாம் பொய்யா? என்னாச்சு உங்களுக்கு?

//அதனை சப்பைக்கட்டு கட்டத்தான் இம்புட்டு கூட்டம் என்று என்னுடைய பார்வையில் தெரிகிறது.//

வெரி குட். உங்களுக்கு கூடிய கூட்டம் எதைச் சப்பைக்கட்டு கட்ட என்பதையும் அப்படியே சொல்லிவிடுங்களேன்.

// நன்றாக கவனிக்கவேண்டும். என்னுடைய பார்வை மட்டுமே.//

அதைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறோம். காமாலைப் பார்வை. அதற்கு அவசியம் என்ன என்பதைச் சொன்னால் நலம்.

கலகலப்ரியா said...

//செந்தழல் ரவி said...
ரோஸ்விக்.

கலகல பிரியாவுக்கு எந்த களங்கமும் ஏற்பட்டதாக நான் நினைக்கவில்லை.

உறைந்து கிடக்கும் அந்த உண்மையை ஏற்றுக்கொள்ளாமல் தான் குதிக்கிறார்கள்.

அதனை சப்பைக்கட்டு கட்டத்தான் இம்புட்டு கூட்டம் என்று என்னுடைய பார்வையில் தெரிகிறது.

நன்றாக கவனிக்கவேண்டும். என்னுடைய பார்வை மட்டுமே.//

யார் இங்கு சப்பைக்கட்டுக் கட்டிக் கொண்டிருக்கிறார்களென்பது.. அறிவும்.. நேர்மையும் உள்ளவர்களுக்குத் தெரியும்..

உங்களுக்கு வேறு ஏதோ தேவை இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.. இதுவும் என்னுடைய தனிப்பட்ட அபிப்பிராயம்தான்...

பதில் சொல்ல முடியாத கேள்விகளைத் தவிர்த்து மற்றவைக்கு நீர் கட்டும் சப்பை... ரொம்பத் தெளிவா தெரியுது...

இன்னும் ஆறு மாசம் கழிச்சு உங்க ஃப்ளெக்ஸிபிளிட்டி என்ன சொல்லுதுன்னு பார்க்கலாம்...

இப்போ கிளம்புங்க...

எனக்கென்னமோ.. என்னைப் பற்றி என் தாயாரைப் பற்றிக் கேவலமா எழுதினது நீங்களாகவும் இருக்கலாமென்றும் தோன்றுகிறது...

ஊகங்கள்... ஊகங்கள்... ஊகங்கள்...

ரவி said...

.///எப்போதுமே மனிதன் தனக்கு இருக்கும் பிரச்சனைகளுக்குத் தான் முக்கியத்துவம் கொடுப்பான். அடுத்தவர் பிரச்சனை எப்போதுமே Optional தான்//

அதனை தான் நான் சொல்கிறேன். இங்கு நடுநிலை என்பதே கிடையாது. அப்படி யாராவது சொன்னால் அது நடிப்புதான்.ஏதாவது ஒரு பக்கம் சாய்ந்துதான் இருக்கவேண்டும் என்று உறுதியாக சொல்கிறேன்.

மங்களூர் சிவா பதிவு போட்டால் அது அவரது பிரச்சினையை தீர்க்க. அவருக்கு பதிவுலகில் பற்றியெரியும் பிரச்சினை ரெண்டாம் பட்சமே.

பிரியா பொங்குகிறார் என்றால் அது அவரது பெயரை மரண மொக்கை பதிவர் என்று குறிப்பிட்டமைக்கே.

இங்கே பின்னூட்டத்தில் அனன்யா மஹாதேவன் என்ற பதிவர் என்பவர் என்னுடைய பதிவில் என்னை கீழ்த்தரமாக பேசியுள்ளார். அதை யாராவது சென்று படித்துவிட்டு ஏன் என்று கேளுங்களேன். நான் இப்போது ரவுத்திரம் பழகவா என்று அந்த அம்மையிடம் கேளுங்களேன் ?

ஈரோடு கதிர் said...

@@ செந்தழல் ரவி

பாருங்க மயில் கூட சொல்லியிருக்காங்க..

// மயில் said...
சுமஜ்லா கடைசியாக ஒரு மாதத்திற்கு முன்பு இடுகை இட்டிருக்கிறார். டீச்சர் டிரெயினிங் படிப்பதால் வேலைப்பளு அதிகம் என்று எழுதுவதை குறைத்துவிட்டதாக அவர் நண்பர்கள் சொன்னார்கள்//

பதிவர் சுமஜ்லா தன் தனிப்பட்ட கல்வி, வேலை போன்ற காரணங்களுக்காக எழுதமுடியாமல் இருக்கிறார் என்றே நானும் அறிகிறேன்..

எனவே... அவர்கள் பதிவுலகத்தை விட்டு போய்விட்டதாக திரும்ப திரும்ப சொல்ல வேண்டாம் என்றே நினைக்கிறேன்..

இதற்காகவே என்னுடைய அந்தப் பின்னூட்டம்

மேலும் தகவல் தேவைப்பட்டால் நீங்கள் சுமஜ்லா மின் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்...

அதைவிடுத்து அவர் பெயரை நாம் இங்கு உபயோகிப்பது தவறு என்றே நினைக்கிறேன்.

//செந்தழல் ரவி said...
ஈரோடு கதிர்.
பதிவு சந்திப்புக்கு பர்தாவோடு சென்றேன் பர்தாவோடு வந்தேன் என்று யார் எழுதினால் என்ன ?
அவர் யாரையோ திருப்திப்படுத்துவதற்காக எழுதுகிறார் என்று சொன்னது யார் ?
உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களேன். அந்த மூஞ்சி எது என்று பார்ப்போம்.//

நான் சொன்னது வேறு, அதற்கு நீங்க இப்போ சொன்னது ஒன்னும் புரியலைங்க..

ரவி said...

//ஊகங்கள்... ஊகங்கள்... ஊகங்கள்...

June 8, 2010 11:17 AM//

கனவிலும் கூட நான் அதுபோல கீழ்த்தரமாக செயல்படமாட்டேன் அட நினைக்க கூட மாட்டேன் என்று என் எதிரிகளும் உறுதியாக நம்புவார்கள்.

இதன் பிறகு இந்த பதிவில் விவாதம் செய்ய எதுவும் இல்லை. விடைபெறுகிறேன்.

vasu balaji said...

//இங்கே பின்னூட்டத்தில் அனன்யா மஹாதேவன் என்ற பதிவர் என்பவர் என்னுடைய பதிவில் என்னை கீழ்த்தரமாக பேசியுள்ளார். அதை யாராவது சென்று படித்துவிட்டு ஏன் என்று கேளுங்களேன். நான் இப்போது ரவுத்திரம் பழகவா என்று அந்த அம்மையிடம் கேளுங்களேன் ?//

கேட்கலாம். அவரும் என் பார்வை மட்டுமே. அது கீழ்த்தரமானதாக நான் கருதவில்லை என்று சொன்னால் என்ன செய்ய.

கலகலப்ரியா said...

// செந்தழல் ரவி said...
//ஊகங்கள்... ஊகங்கள்... ஊகங்கள்...

June 8, 2010 11:17 AM//

கனவிலும் கூட நான் அதுபோல கீழ்த்தரமாக செயல்படமாட்டேன் அட நினைக்க கூட மாட்டேன் என்று என் எதிரிகளும் உறுதியாக நம்புவார்கள்.//

உங்க ஃப்ளெக்ஸிபிளிட்டி எனக்குப் பிடிச்சிருக்கு...

அதாவது எனக்கு அவ்வளவு கீழ்த்தரமான களங்கம் நிகழ்ந்திருக்கின்றது என்பதை இந்தக் கூற்றுத் தெளிவு படுத்துகிறது...

சப்பையும் கட்டும் எங்கேயென்றும் தெரிகிறது...

செல்க...

ரோஸ்விக் said...

//செந்தழல் ரவி said...
ரோஸ்விக்.

கலகல பிரியாவுக்கு எந்த களங்கமும் ஏற்பட்டதாக நான் நினைக்கவில்லை.

உறைந்து கிடக்கும் அந்த உண்மையை ஏற்றுக்கொள்ளாமல் தான் குதிக்கிறார்கள்.

அதனை சப்பைக்கட்டு கட்டத்தான் இம்புட்டு கூட்டம் என்று என்னுடைய பார்வையில் தெரிகிறது.//

நல்லது ரவி அண்ணே...

இங்கே எதையோ சப்பைக்கட்டு கட்டத்தான் இம்புட்டு கூட்டம் கூடுது...

நீங்கள் உட்பட, பலர் சேர்ந்து ஒரு கூட்டம் கூட்டினீர்களே! எதை சப்பைக்கட்டு கட்ட அந்த கூட்டம்.

நீங்கள் கூட்டினால் நீதி கேட்டு..

வேறு எவராவது கூட்டினால்... சப்பைக்கட்டு...

இதுவும் நல்லாயிருக்கே!

இன்னும் என்னுடைய பின்னூட்டங்கள் நிறைய இருக்கே... பதில் யார் சொல்லுவா??

vasu balaji said...

//மங்களூர் சிவா பதிவு போட்டால் அது அவரது பிரச்சினையை தீர்க்க. அவருக்கு பதிவுலகில் பற்றியெரியும் பிரச்சினை ரெண்டாம் பட்சமே. //

அவருடைய பிரச்சினைதான் அவருக்கு முதல் பட்சம். அது பத்தி எரிவதா புகைவதா எனச் சொல்ல வேறு யாருக்கு உரிமை இருக்கிறது. நீங்கள் சொல்லுவதுதான் அவருக்கு பத்தி எரியும் பிரச்சனையாக இருக்க வேண்டுமா என்ன?

//பிரியா பொங்குகிறார் என்றால் அது அவரது பெயரை மரண மொக்கை பதிவர் என்று குறிப்பிட்டமைக்கே.//

சிரிக்கிறதா என்ன செய்ய. அதை அவரே சொல்லியிருக்கிறார். மரணமொக்கை என்று. அப்படியானால் சுமஜ்லா பிரச்சினையை ஏன் முன் வைத்தீர்கள்? அதைப் பிடித்துக் கொண்டு இல்லாத கதை சொன்னீர்கள். இப்போது காரணம் தெரிந்ததும் மரணமொக்கை என்று தடுமாற்றம் ஏன்? Why this hatred Mr.Ravi? In what way you are affected? She has clearly questioned the people who dragged her name and the reason in unequivocal terms. Why you tried to defend with some other reason and change your stands? Anyway, its a shock that you are acting in this manner. I always held you in high esteem.

கலகலப்ரியா said...

// I always held you in high esteem.//

பாலா சார்... அந்த ஆளுக்கு நீங்க எவ்ளோ மதிப்பு வச்சிருந்தீங்கன்னு சொல்லியாச்சு.. அதையும் அவங்க எள்ளியாச்சு.. அதுக்கப்புறமும் இப்டிச் சொல்லிக்கிட்டிருந்தா... எனக்கு கெட்ட கோபம் வரும்...

உங்களுக்கென்று ஒரு மரியாத இருக்கு பாலா சார்... இப்படி இவர்களிடம் தாழ்ந்து போக உங்களுக்கு எந்த அவசியமும் ஏற்படவில்லை...

(இனிமே மரியாத புண்ணாக்குன்னா.. உங்களையும் திட்டுவேன்.. :o))

Anonymous said...

ரவி,

லூசா நீ?

தகவல் தாயான்னு சொன்னா நசுங்கின சொம்பு, நாட்டமை தீர்ப்புன்னு ஜல்லி அடிக்கிறே?

எதையாவது சரியாச் சொல்லு.

ஏன் ஓடுறே?

ஈரோடு கதிர் said...

@ ரவி

எனக்கும் பதில் சொல்லலை...
பிரியாதான் சுமஜ்லாவை பதிவுலகை விட்டுத் துரத்தியதாக சொன்னதற்கு, நான் மறுத்திருக்கிறேன், அதற்கு இன்னும் உங்களிடமிருந்து நேரடியான பதில் வரவில்லை...

அன்றும் கூட பழமைபேசி இடுகையில் பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்று கூறி விட்டுப் போனீர்கள், அங்கு கேட்டதற்கும் பதில் இல்லை...

பொத்தாம் பொதுவில் எது வேண்டுமானாலும் சொல்லிவிட்டு போவதுதான் உங்கள் பழக்கமா..

கலகலப்ரியா said...

||ஈரோடு கதிர் said...
@ ரவி

எனக்கும் பதில் சொல்லலை...
பிரியாதான் சுமஜ்லாவை பதிவுலகை விட்டுத் துரத்தியதாக சொன்னதற்கு, நான் மறுத்திருக்கிறேன், அதற்கு இன்னும் உங்களிடமிருந்து நேரடியான பதில் வரவில்லை...

அன்றும் கூட பழமைபேசி இடுகையில் பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்று கூறி விட்டுப் போனீர்கள், அங்கு கேட்டதற்கும் பதில் இல்லை...

பொத்தாம் பொதுவில் எது வேண்டுமானாலும் சொல்லிவிட்டு போவதுதான் உங்கள் பழக்கமா..||

கேள்வி வேறயா..? விடுங்க பாவம்... அவங்க கொஞ்ச நாளா ஓடி ஓடிப் பஞ்சாயத்துப் பண்ணதில குழம்பிப் போய் இருக்காங்க போல..

(எப்பவுமே இப்டித்தானான்னு எனக்குத் தெரியாது... இது வரை அந்தப் பக்கம் எட்டிக் கூடப் பார்த்ததில்லை... அது கூடக் கடுப்பாக இருக்கலாம்.. ம்ம்.. எதுக்கும் மகா மரியாதை வச்சிருந்த வானம்பாடி சார்ட்ட கொஞ்சம் கேட்டு சொல்லுங்க..)

vasu balaji said...

இப்புடி ஆளாளுக்கு பதில் கேட்டுட்டிருந்தா எப்புடி. யம்மா. நீ டோக்கன் குடு. நான் நம்பர் ஒன்னு, அது சரி ரெண்டு, நீ மூணு, அப்புறம் தள்ளுமுள்ளு நடக்கும்.

Sathyan said...

பதிவுலக நாட்டாமை; இல்லையில்லை எருமை. வினவுக் குழுமம் கண்டது ஓர் கனவு; விணை செய்தால் திணை விளையுமென்று; பிரிவினை செய்தாய் கபடத்துடன் கனியுமென்று....
வினவின் கனவை உடைப்போம் வாரீர்
http://tamilcause.blogspot.com/2010/06/blog-post_2119.html

***************
வினவு தளம்: எச்சரிக்கை! எச்சரிக்கை!
http://tamilcause.blogspot.com/2010/06/blog-post_7110.html

vasan said...

"உலக்கைக் கொழுந்துகள்.."
மிக‌ நீண்ட‌ வ‌ருட‌ங்க‌ளுக்குப்பின்
பார்க்கும் அருமையான‌ வார்த்தைக‌ள்.
நீங்க‌ள் ஏன் இவ‌ர்க‌ளுக்குப் போய் இவ்வ‌ள‌வு தூர‌ம்
ப‌தில‌ளித்து, ம‌ற்ற‌ எத்த‌னையோ விட‌ய‌ங்க‌ள்
எழுதுவ‌தை த‌விர்கிறீர‌க‌ள்.
உங்க‌ளை தாக்கிக் கோவ‌ப்ப‌டுத்துவ‌தில் அவ‌ர்க‌ள்
உவ‌கைய‌டைகிறார்க‌ளென்பது தெரியும் தானே?
அவ‌ர்க‌ளின் மொழி அதுதான். அதே மொழியில்
நீங்க‌ள் ஏன் க‌தைக்கிறீர்க‌ள்.
எங்கும், பார்வையாள‌ர்க‌ள் தான் கூட்ட‌மாய்
க‌த்திக் கூச்ச‌லிடுவார்கள். ப‌ங்கேற்ப‌வ‌ர்க‌ள்
போட்டியின் மீதுதான் க‌வ‌னம் கொள்வ‌ர்.
உங்க‌ளின் க‌ள‌ம், மைதான‌ம். கால‌ரிய‌ல்ல‌.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ரவிக்கு பதில் சொல்வது வேஸ்ட்...

ஏன்னா.. அவருக்கு ஆறு மாசத்துக்கு ஒரு தடவை கருத்தை மாற்றுவாரு...

கேட்டா முற்போக்கு வாதினு சொல்லுவாரு...

ரவி said...

கேட்கலாம். அவரும் என் பார்வை மட்டுமே. அது கீழ்த்தரமானதாக நான் கருதவில்லை என்று சொன்னால் என்ன செய்ய-----------

வானம்பாடிகள் அய்யா. அவரது கருத்து அது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

ரவி said...

ஈர்ரோடு கதிர்ர்ரு ?

நீங்கள் எட்டிப்பார்க்க நான் என்ன பொட்டிக்கடையா வைத்துள்ளேன் ?

அதுவும் இல்லாமல் நான் உலகத்தரமாக எழுத்தை கொட்டி, அதை லயன்ஸ் க்ளப்பில் இருந்து நீங்கள் வந்து எட்டி பார்க்கவேண்டும் என்று நான் எப்போதும் உங்களை கேட்டதேயில்லையே ?

நானும் ஒரு மொக்கைப்பதிவர் தான் அய்யா.

ரவி said...

&&&இப்புடி ஆளாளுக்கு பதில் கேட்டுட்டிருந்தா எப்புடி. யம்மா. நீ டோக்கன் குடு. நான் நம்பர் ஒன்னு, அது சரி ரெண்டு, நீ மூணு, அப்புறம் தள்ளுமுள்ளு நடக்கும்.

June 8, 2010 12:19 PM&&&

இங்கே இருப்பவர்கள் அளவுக்கு நான் வெட்டியாக இல்லாததால் தொடர்ந்து பதில் சொல்லமுடியவில்லை வானம்பாடிகள் அய்யா. மன்னித்தருள்க. அடுத்த கவிதை போட்டு நீங்கள் திட்டினாலும் எனக்கு புரியாது. கவிதை எழுதுவது முட்டாள்களின் வேலை என்று நான் கவிதைப்போட்டி நடத்துபவர்களிடமே சொன்னவன்.

ரவி said...

&&&இன்னும் என்னுடைய பின்னூட்டங்கள் நிறைய இருக்கே... பதில் யார் சொல்லுவா??

June 8, 2010 11:34 AM&&&

கண்ட இடத்திலும் எதையாவது கிறுக்கிவிட்டு என்னை பதில் சொல்ல சொன்னால் எப்படி சார் ? எனக்கு தனிமடல் அனுப்புங்க பதில் சொல்கிறேன்.

ரவி said...

&&&ரவி,

லூசா நீ?

தகவல் தாயான்னு சொன்னா நசுங்கின சொம்பு, நாட்டமை தீர்ப்புன்னு ஜல்லி அடிக்கிறே?

எதையாவது சரியாச் சொல்லு.

ஏன் ஓடுறே?

June 8, 2010 11:^^^^

வடகரையாரே ? கோவையில் அதிஷாவின் வீட்டு விஷேசத்தில் என்னை பார்த்திர்களே ? நேரில் சந்தித்தால் கூடவா புரிதல் இல்லாமல் போகிறது ? ஏன் மரியாதை குறைவாக பேசுகிறீர்கள் ? வாய்யா போய்யா அவன் இவன் என்று ? நான் அதே அஸ்திரத்தை உபயோகித்தால் நலமா ?

Bibiliobibuli said...

வானம்பாடிகள், பாலா ஐயா நீங்கள் ப்ரியாவுக்கு ஆதரவாய் இருப்பது நெகிழிச்சியாயுள்ளது. ஒரு காலத்தில் என்னைப்பற்றிய பதிவுலக விமர்சனத்தில் வினவு (நான் மதிக்கும் நண்பர் அரடிக்கெட் உட்பட) எனக்கு உறுதுணையாய் இருந்ததைப்போல். அது முற்றிலும் வேறுபட்ட பிரச்சனை. ஆனால், அன்று தன் தோழர்கள் சிலரைக் கூட எதிர்த்து வினவு எனக்கு செய்த உதவிதான் மனதில் பதிந்து போய்விட்டது. அது ஏனோ இன்று எனக்கு ஞாபகத்திற்கு வந்து தொலைக்கிறது.

நன்றி வானம்பாடிகள் ஐயா, தொடருங்கள்.

ப்ரியா, "பூக்காரி" புனைவு/பதிவிற்கு வினவு எழுதிய எதிர்வினையில் உங்கள் பெயர் இழுக்கப்பட்டதில் எனக்கும் உடன்பாடு இல்லை. இதற்கு மேல் எனக்கு சொல்ல எதுவும் இல்லை. இன்று பதிவுலகம் இருக்கும் நிலையில் எதுவும் சொல்லவும் தெரியவில்லை.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

follow up

Anonymous said...

இல்லை ரவி நேரில் சந்தித்ததால்தான் உரிமையுடன் கேட்கிறேன். சரி இனி மரியாதையுடனே பேசுகிறேன்.

தகவலைத் தராமல் ஏன் திசை திருப்புகிறீர்கள் திரு.ரவி அவர்களே? இப்பொழுதாவது சொல்லுங்களேன் என்ன சமாதானம் செய்தீர்கள்?

லூசா நீன்னு கேட்டா இவ்ளோ கோவம் வருது ஆனா //கலகல பிரியாவுக்கு எந்த களங்கமும் ஏற்பட்டதாக நான் நினைக்கவில்லை//

ந்னு சொல்லுகிறீர்களே என்ன அர்த்தம் திருவாளர் இரவி அவர்களே?

தனக்கென்றால் ஒரு நீதி. பிறர்க்கென்றால் ஒரு நீதி. நல்லா இருக்கு உங்க நியாயம் திரு இரவி அவர்களே.

குறிப்பு : திருவாளர் இரவி இதைச் சொல்ல வேண்டும் என்பதால் தான் லூசா எனக் கேட்டேன் பதிவுலகில் நான் யாரையும் தவறாகப் பேசமாட்டென் என்பது என்னை அறிந்தவர்கள் அறிவார்கள்.


லூசா என்பது ஒன்றும் கெட்ட வார்த்தை அல்லவே? அதே சமயம் அந்த மூவரும் மோசமான ஆட்கள் என கேரக்டர் அசாசினேசன் செய்த போதும் உங்களுகு இதே அறச்சீற்றம் வரவில்லையே? ஏன் திருவாளார் இரவி அவர்களே?

Sanjai Gandhi said...

ஒரு பெண்ணின் அறச்சீற்றம் என்பது இது தான்.. யாருகிட்ட வந்து சவுண்டு குடுக்கிறானுங்க... கொய்யால..


சபாஷ் ப்ரியா..

Sanjai Gandhi said...

//இந்த பதிவு நியாயமானது. அதை மீண்டும் குறிப்பிடுகிறேன். ஒரு சூழ்ச்சிக்கு பலியானதை உங்களுக்கு தெரியப்படுத்தவே
எனது பின்னூட்டம்//

ஏழர, இதென்னங்க அக்கிரமம்? ஒரு பெண்ணை இழிவு படுத்த, 1000 கணக்கானவங்க படிக்கிற மாதிரி பதிவு போட்டு இழிவு படுத்துவீங்க. ஆனா வருத்தம் மட்டும் சில நூறு பேருக்கு மட்டுமே தெரியற மாதிரி பின்னூட்டத்துல தெரிவிப்பிங்களா? ஏன் இந்த வருத்தத்தை பதிவில் சொல்லக் கூடாது? உங்கள் சர்வரின் இடம் இதனாலெல்லாம் நிரம்பிவிடாதென்று நம்புகிறேன்.

Sanjai Gandhi said...

////செந்தழல் ரவி said...
வானம்பாடிகள் சார். கலகலப்பிரியா பழகிய ரவுத்திரத்தில் பதிவுலகை விட்டே வெளியேறினாரே சுஜ்மலா அக்கா ? நீங்கள் அதனை அமைதியாக பார்த்திருந்தீர்கள் அல்லவா ?////

ரவி, ஏன் இப்படி? திடீரென உமக்கு என்னா ஆச்சி ராசா? இந்த நற்குடி அம்மணி சென்ற மாதம் கூட ( மே 2010) 2 பதிவுகள் எழுதி இருக்கிறார்.. மார்ச் மாதம் 7 பதிவுகள் எழுதி இருக்கிறார்.. பதிவுலகை விட்டு வெளியேறிவிட்டார் என்று உமக்கு தகவல் கொடுத்த ஒற்றனை கொஞ்சம் நையப் புடைக்கவும்..

vasu balaji said...

செந்தழல் ரவி said...

//கேட்கலாம். அவரும் என் பார்வை மட்டுமே. அது கீழ்த்தரமானதாக நான் கருதவில்லை என்று சொன்னால் என்ன செய்ய-----------

வானம்பாடிகள் அய்யா. அவரது கருத்து அது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?//

ரவி சார், கொஞ்சம் குழம்பிட்டீங்க போல. இங்க பின்னூட்டம் போட்டது எங்கள படிக்கிறது அனாமிகா துவாரகன். நீங்க சொல்ற அநன்யா இங்க பின்னூட்டம் போட்டதா தெரியல. அவங்களை எனக்குத் தெரியவும் தெரியாது. நான் இதில் கருத்துச் சொல்வது நியாயமும் இல்லை. உங்களுக்கு தவறாகப் பட்டால் நட்பாகக் கூடக் கேட்கலாமே ரவி? ஏனம்மா இப்படி என்பது தராத பதிலா ரவுத்திரம் தந்துவிடும்?

vasu balaji said...

செந்தழல் ரவி said...
&&&இப்புடி ஆளாளுக்கு பதில் கேட்டுட்டிருந்தா எப்புடி. யம்மா. நீ டோக்கன் குடு. நான் நம்பர் ஒன்னு, அது சரி ரெண்டு, நீ மூணு, அப்புறம் தள்ளுமுள்ளு நடக்கும்.

June 8, 2010 12:19 PM&&&

இங்கே இருப்பவர்கள் அளவுக்கு நான் வெட்டியாக இல்லாததால் தொடர்ந்து பதில் சொல்லமுடியவில்லை வானம்பாடிகள் அய்யா. மன்னித்தருள்க. அடுத்த கவிதை போட்டு நீங்கள் திட்டினாலும் எனக்கு புரியாது. கவிதை எழுதுவது முட்டாள்களின் வேலை என்று நான் கவிதைப்போட்டி நடத்துபவர்களிடமே சொன்னவன்.//

எவ்வளவோ வேலைகளுக்கிடையிலும் இந்த வெட்டிகளுக்காக பின்னூட்டமிட்டதற்கு நன்றி ரவி. கவிதை போட்டு திட்டுமளவுக்கு நீங்கள் மன்னருமல்ல நான் ஏழைப் புலவனுமல்ல. கைக்கு வரத எழுதறது தான். கவுஜன்னு லேபில் போடுறதுதான்.

உண்மைத்தமிழன் said...

[[[ஏழர said...
அது சரி, மேலே சுட்டியாய் கொடுக்கப்பட்டிருந்த ஒன்றின் கீழேயே நான் கொடுத்த சுட்டி இருந்தது.. ஒரு வேளை வினவின் தோழராய் இருந்தால் 'விடமாட்டேன்டா டேய்' என்னும் பேர்வழியை அம்பலப்படுத்தும் மறுமொழியை விட்டுவைத்திருப்பானேன்.. எனக்கென்னவோ வினவை கண்டித்து இது போன்ற பல பதிவுகள் வரவேண்டும் என்ற உள்நோக்கத்துடன் இடப்பட்ட இடுகை போல தெரிகிறது.. இதைத்தானே போலி டோண்டு விவகாரத்தில் கண்டோம்.. ஏற்கனவே வினவு, செந்தழல் ரவி, கோவி கண்ணன் முதலிய பதிவர்கள் தங்கள் பெயரில் போலி பின்னூட்டங்கள் வருவதை வெளிப்படையாக அறிவித்திருப்பதை கவனிக்க வேண்டும்.]]]
அட நம்ம ஏழர அண்ணனா..?
ஏன் வினவு தளத்தில் இது போன்ற வாக்கியங்களை இனிமேல் அனுமதிக்க வேண்டாம் என்ற செயற்குழுவின் முடிவின்படி உங்களுடைய ஆட்களை வைத்தே இதைச் செய்திருக்கலாமே..? யார் கண்டது..? என்னுடைய சந்தேகம் இதுதான் ஏழர அண்ணே..!

போலி பின்னூட்டம் என்பதை போலி டோண்டு மட்டுமே போடவில்லை. நிறைய போலிகள் இட்டார்கள். இப்போதும் இருக்கிறார்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஏழர said...
///யாரோ வக்கிரமாய் அளித்த பின்னூட்டத்திற்கு என்ன பதில் சொல்லுவீர்கள் சார்///

யாரோ யாருக்கோவெல்லாம் பதில் சொல்ல முடியாதுங்களே.. இந்த இடைகையின் நியாயத்தை நான் கேள்வி கேட்க்வில்லை என்பதை கவனிக்கவும்.

அதனால்தான் பதிவை பார்த்தவுடன் சர்ச்சைக்குறிய நபரை பற்றிய சந்தேகங்களை எழுப்பினேன்..]]]

அப்படீன்னா வினவு தளத்தில் எங்களை அநாகரிகமாகத் திட்டித் தீர்த்திருக்கும் சில பெயர் தெரியாதவர்களுக்கெல்லாம் நீங்கள் பதில் சொல்லியிருக்கிறீர்களே.. அப்போது அவர்களெல்லாம் உங்களுக்குத் தெரிந்த, உங்களுடைய தோழர்கள்தானா..?

இடுகையில் இருப்பது நியாயமான வார்த்தைகள் என்பதை உணர்ந்திருந்தும் இடுகையின் நியாயத்தை நான் கேள்வி கேட்கவில்லை என்று ஒரே ஜம்ப்பில் தாவி விட்டீர்கள்.. குட்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஏழர said...
அது சரி மேலேயே நான் சொல்லயது போல இந்த இடுகையின் நியாயத்தை நான் கேள்வி கேட்க்வில்லை. ப்ரியா சதிக்கு பலியாகிவிட்டார் என்றுதான் கருதுகிறேன்.]]]

யாருடைய சதிக்கு..? அதையும் உங்களுடைய புலனாய்வு புலிகளை வைத்துக் கண்டுபிடித்து வீட்டீர்களேயானால் எங்களுக்கும் சந்தோஷமாக இருக்கும்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஏழர said...
எதைப் படித்திருந்தால்... ஏன் அந்தப் பதிவில் எனக்கு ஏற்பட்ட அகோரத் தாக்குதலுக்கு மருந்திடப்பட்டிருக்கிறதா//

இந்த பதிவு நியாயமானது. அதை மீண்டும் குறிப்பிடுகிறேன். ஒரு சூழ்ச்சிக்கு பலியானதை உங்களுக்கு தெரியப்படுத்தவே
எனது பின்னூட்டம்]]]

என்னப்பா இது? இப்பத்தான் இந்த இடுகையை கேள்வி கேட்க விருப்பமில்லைன்னு சொல்லிட்டு இப்போது இடுகை நியாயமானதுதான்னு பல்டி அடிக்கிறாரு ஏழர..!

இந்த இடுகை நியாயமானதுதான்னா அதுக்கு நேரடியா பதில் சொல்லலாமே..? மன்னிப்பு கேட்கலாமே..? வினவு தளத்திலும் மன்னிப்பு போஸ்ட் போடலாமே..?

உண்மைத்தமிழன் said...

[[[ஏழர said...
///ஏழர சார், செந்தழல் ரவி பேரில் போலி பின்னூட்டம் வரலாம், மீள் இடுகைக்கு எதிர் ஓட்டுமா?///
வானம்பாடி சார், இந்த ஓட்டரிசியல்ல எத்தன சதி இருக்குன்னு நாம போன வாரமே பார்த்தோம்.
இதில் யாரை நொந்து கொள்வது.. நல்ல வேளையாக தமிழ்மணத்தில் பரிந்துரை பகுதியை தூக்கிவிட்டனர்..]]]

இந்த ஓட்டரசியலை நீங்க எவ்வளவு லாவகமா பயன்படுத்தியிருக்கீங்கன்றது இப்போ வெட்ட வெளிச்சமானவுடனேயே நைஸா கழண்டுக்குறீங்களே ஏழர..! இதில் யாரை நொந்து கொள்வதுன்னு ஒரு பச்சாபாத வார்த்தை வேறு..!

உண்மைத்தமிழன் said...

[[[ஏழர said...
//உங்கள் மீது பாய்ந்த வக்கிரங்களின் ஒட்டு மொத்த செயலுக்கும் வார்த்தைகளுக்கும் சிவராமனும், தோழர்களும்தான் முழுப் பொறுப்பு...//

இந்த கருத்தை நான் முழுமையாக ஏற்கவில்லையெனினும் பகுதியளவிற்கு இதில் உண்மை இருக்கிறது]]

அடேயப்பா.. ஏழர அண்ணே.. என்னண்ணே.. தனி ஆளா வந்து நின்னுக்கிட்டு வெள்ளைக் கொடி காட்டிக்கிட்டிருக்க..!

இதை தெரிஞ்சுக்கிறதுக்கு உங்களுக்கு மூணு நாளு ஆச்சா..? அப்போ உங்க வினவை கண்டிச்சு நீங்களே ஒரு போஸ்ட் போடுங்களேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஏழர said...
//விமர்சனம் வைப்பதற்கு பல நேரடியான முறைகள் இருக்கின்றன...வினவுவில் அந்த இடுகையின் வாசகங்கள் அப்படியில்லை//

இந்த கருத்தை நான் முழைமையாக ஏற்கிறேன்.]]

சுத்தம்.. இப்ப நீங்க இந்த இடுகைல சொல்ற அத்தனை வார்த்தைகளையும் வினவு டீம் சொல்ற சத்தியப்பிரமாணங்கள், வருத்தங்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா..? எனக்கு அப்படித்தான் தோணுது..!?

யாரோ ஒருத்தர் போய் மெதுவா துக்கம் விசாரிச்சிட்டு வந்திருங்கன்னு சொல்லி விட்டாங்களோ..?

உண்மைத்தமிழன் said...

[[[ஏழர said...
///ஏழர சார். நீங்களும் அர டிக்கட் மாதிரி நேர்மையா பேசுறீங்க சார். அப்படின்னா அந்த சதி செய்தது யார்னு தெளிவு படுத்தும் கடமை வினவுக்கு இருக்கே சார். பண்ணுங்க சார்.//
யார் சதி செய்திருப்பார்கள் என செந்தழல் ரவி கோடிட்டு காட்டியிருக்கிறார். பதிவுலகில் இன்னுமொரு போலி டோண்டு உருவாகி வருகிறார் பார்ப்போம் எப்படியும் சிக்கிவிடுவார்.]]]

அட இன்னொரு போலி டோண்டு..!

ஐயோடா சாமி.. இல்லாதவன் மேல பழியைப் போட்டு தப்பிக்கிறது மலைக்கள்ளன் காலம் ஸார்..!

அப்படியே அவன் உங்ககிட்ட சொல்லியிருந்தாலும் நீங்க ஏன் போட்டீங்க..? பதில் கிடைக்குமா..?

உண்மைத்தமிழன் said...

[[[ஏழர said...
வானம்பாடி சார், வினவுக்காக நான் பேச இயலாது. இருந்தாலும் உங்கள் கருத்துக்களை நீங்கள் பின்னூட்டமாக இடாவிட்டாலும் மின்மடலாக அனுப்புங்கள்.]]]

ஓ.. இவ்ளோ நேரமா பேசினது ஏழர என்ற மனிதர் மட்டும்தானா..? எதுக்கு சூட்டைத் தணிக்கிறதுக்கா..? இல்லை உங்களை மட்டும் தனிச்சுக் காண்பிக்கிறதுக்கா..? இல்லாட்டி வினவு தளத்துல இருந்து விலகிட்டீங்களா..?

அண்ணே.. சமாளிக்கிறதுக்கும் ஒரு அளவு இருக்குண்ணே..!

உண்மைத்தமிழன் said...

[[[ஏழர said...
வானம்பாடிகள் சார், எனது கருத்துக்களை நான் இங்கே பதிவதன் நோக்கமே அது எல்லா தரப்புக்கும் போய் சேரவேண்டும் என்பதால்தான். நீங்கள் சொல்வது போல நானும் எனது எண்ணங்களை வினவு தோழர்களுக்கு தெரியப்படுத்துவேன்.]]]

அப்போ இந்த வினவு என்பது ஒரு முகமூடி.. ஆள், அடையாளம் இல்லாத ஒரு நபர்.. சரியா..? நீங்களே ஒத்துக்குறீங்களா..?

உண்மைத்தமிழன் said...

[[[ஏழர said...
//மிக மிக நன்றிங்க ஏழர//
இதுக்கு எதுக்கு சார் நன்றி. நீங்க என்னை மட்டுமல்ல வினவு தோழர்களையே கூட உரிமையோடு கேட்கலாம்..]]]

ஆமாமாம்.. கேட்டவுடனேயே அர டிக்கெட்டு, கால் டிக்கெட்டுன்னு வரிசையா வந்து என் பரம்பரையே இழுத்து விட்டுட்டு மறுவேலை பார்ப்பாங்க. நீங்க அப்பவும் வந்து வேடிக்கை பார்ப்பீங்க..

ஆனாலும் இம்புட்டு நடிப்பு கூடாதுங்கண்ணே..!

உண்மைத்தமிழன் said...

[[[ஏழர said...
கடந்த வாரம் மிகுந்த கொந்தளிப்புகளையும் அயர்ச்சியையும் ஒரு சேர ஏற்படுத்தியுள்ளது. அனைவரும் தங்களை சுய விமரிசனம் செய்துகொள்ள கால அவகாசம் தேவை ஆனால் சூழ்நிலையின் தீவிரத்தை தணிய விடாமல் இருப்பதற்கும் ஒரு கூட்டம் உருவாகியிருப்பது தெரிகிறுது.. அதன் விளைவாக விடமாட்டேன்டா டேய் (இரசனையின் யோக்கியதையை பார் - விடாது கருப்பு போலவே) போன்ற பலவகையினர் தோன்றலாம். அவர்களுடையை எண்ணம் வினவை தமிழ்மணத்திலிருந்து ஒழிப்பது என்றாலும் அதை நேரடி மோதலில் செய்யாமல் இது போன்ற ஈனத்தனமான முறைகளை தேர்ந்தெடுப்பர். இதுவும் பழைய மூர்த்தி பாணிதான் என்றாலும், மன உளைச்சலை கடுமையாக ஏற்படுத்தும் ஒன்று. இங்கு ப்ரியாவை இலக்காக்கியிருப்பதற்கு என்ன உள்குத்து காரணங்கள் இருக்கிறது என்று புரியவில்லை.
இது போன்ற அநாமதேயங்களை உதாசீனப்படுத்துவதன் மூலம்தான் ஒழிக்க முடியும் என்று நான் கருதுகிறேன், எனினும் உங்கள் பதிவின் நியாயத்தை ஆதரிக்கின்றேன்.]]]

ப்ச்.. கலகலப்பிரியா.. பாவம்மா நீ.. ஏழர அண்ணன் உனக்காக எவ்ளோ பாசத்தைக் கொட்டிருக்காரு.. படிச்சுத் தெரிஞ்சுக்க..

எவனோ ஒரு ஊர் பேர் தெரியாத ஆளு, அவனோட பதிவுல உன்னை இந்து மத வெறியர்ன்னு எழுதிருக்கானாம். அது ஏதோ சதியாம்.. உனக்கு மன உளைச்சலை கொடுத்திருக்காம்..

அந்த அனாமதேயத்துக்கும், அண்ணன் ஏழர அவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லையாம்.. நம்பும்மா நம்பு..!

எத்தனையோ நம்பிட்டோம்.. இதை நம்ப மாட்டோமா..?

உண்மைத்தமிழன் said...

[[[ஏழர said...
சரிங்க நான் கிளம்பறேன் நேரமாயிடுச்சு, அந்தப் போலி பதிவுக்கு எனது கண்டனங்களையும், இந்த பதிவின் நியாத்திற்கான ஆதரவையும் மீண்டும் பதிகிறேன். விவாதத்தில் பங்கு பெற்ற ப்ரியா, வானம்பாடிகள், அது சரி மற்றும் ரவிக்கு நன்றி]]]

ச்சே.. என்ன மரியாதை.. என்ன மரியாதை..!

கலகலப்பான ப்ரியா.. கொடுத்து வைச்ச ஆளும்மா நீ..!

முதல் மரியாதை உனக்குத்தான்.. என்ஜாய்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஏழர said...
அன்புள்ள ரவி, போலி பின்னூட்ட விவகாரத்தில் ஏதாவது முன்னேற்றம் உள்ளதா? இங்கு கேட்பதற்காக தவறாக எண்ண வேண்டாம்.. இந்த பதிவும்கூட ஒரு போலியின் விளைவால் வந்ததாக சந்தேகிப்பதால்...]]]

போலியால் இல்ல சாமி.. போலி பதிவர்களான வினவு எழுதின பதிவால வந்தது..

இதை உடைக்கணும்னா விஷயங்களை நீங்களே வெளியிட்டிரலாமே..? யார் உங்களுக்கு கலகலப்பிரியா பற்றிய தகவலை கொடுத்தது..? அவர் பெயர் என்ன? ஊர் என்ன..? மெயில் ஐ.டி. என்ன? வெளிப்படையாகச் சொல்லுங்கள் உண்மையாக இருந்தால்..?

ச்சும்மா பாசத்தைக் கொட்டி பிலிம் காட்ட வேணாம்ண்ணே..!

vasu balaji said...

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
[[[ஏழர said...
//மிக மிக நன்றிங்க ஏழர//
இதுக்கு எதுக்கு சார் நன்றி. நீங்க என்னை மட்டுமல்ல வினவு தோழர்களையே கூட உரிமையோடு கேட்கலாம்..]]]

ஆமாமாம்.. கேட்டவுடனேயே அர டிக்கெட்டு, கால் டிக்கெட்டுன்னு வரிசையா வந்து என் பரம்பரையே இழுத்து விட்டுட்டு மறுவேலை பார்ப்பாங்க. நீங்க அப்பவும் வந்து வேடிக்கை பார்ப்பீங்க..

ஆனாலும் இம்புட்டு நடிப்பு கூடாதுங்கண்ணே..!//

இல்லைங்க. எனக்கு அவர் நேர்மையாத்தான் சொன்னதா படுது. அவ்வளவு நேரம் இருந்து பொறுமையா பதில் சொல்லிட்டிருந்தாரு. அவரால முடிஞ்ச வழி சொன்னாரு. செய்யலாமே.

ஈரோடு கதிர் said...

//செந்தழல் ரவி said...

ஈர்ரோடு கதிர்ர்ரு ?//

செந்தழல் ரவி.... (ர-க்கும் முன்னாடி ர்ர்ர்ர்ர்ர் போடனுமா)... ர் உங்க விசைப்பலகையில மாட்டிக்கிச்சா!!

ஒரு வெளக்கமும் உங்ககிட்ட சொல்லி பிரயோசனப்படாது

விளக்கம் சொன்னா எதுவும் புரியாத மாதிரி விளக்கெண்ணையில கால் வச்ச மாதிரி தாறுமாறா இழுத்துக்கிட்டு ஓடப்படாது...

பொட்டிக்கடை.. சட்டிக்கடை எதுவேணா நடத்துங்க...

யாவாரம் நல்லா நடக்கட்டும்...

ஈரோடு கதிர் said...

//நீங்கள் எட்டிப்பார்க்க நான் என்ன பொட்டிக்கடையா வைத்துள்ளேன் ? //

ரவி சார்.... ரவி சார் நீங்க அப்போ பொட்டிக் கடை வைக்கலையா?

அப்போ என்ன கடை சார் வச்சிருக்கீங்க ரவி சார்...

நீங்க ர்ர்ர்ர்ர்ர்ர் போட்ட மாதிரி எனக்கு ர்ர்ர்ர் வரலை சார்...

தப்பா நினைச்சுக்காதீங்க ரவி சார்..

ஈரோடு கதிர் said...

அப்புறமேட்டிக்கு ரவி சார்..

உங்க ஊர்ல பொட்டிக்கடை வைக்காத நேரத்துல ஏதாவது லயன்ஸ் கிளப்புல சேருங்க சார்...

அப்போதான் உங்களை ச்சிங்கம்னு சொல்வாய்ங்க சார்...

இல்லாங்காட்டி ஊருக்கு வர்றப்போ தபால் போடுங்க சார்... இங்கே ஏதாவது லயன்ஸ்கிளப்பு சேர்ந்து ரெண்டு பேர் வேற எங்காவது நீங்க சொன்ன மாதிரி எட்டியெட்டி பார்க்கலாம்

ச்சரியா ரவி சார்

(அய்யோ, இங்கேயும் ர்ர்ர்ர் போடாம வுட்டுட்டேன், மன்னிச்சிடுங்க ரவி சார்)

ஈரோடு கதிர் said...

கேள்வி கேட்டா பதில் வர்றதில்ல... என்ன பஞ்சாயத்து இது..

நானும் பொட்டிக்கடை வெச்சிருக்காததால், இத்தோடு இந்தப் பின்னூட்டங்களிலிருந்து வடை ச்ச்சீ.. விடை பெறுகிறேன்..

(ஹிஹி ஹி... அப்படியெல்லாம் போயிர மாட்டேன், திருப்பியும் ர்ர்ர்ர் கிர்ர்ர்ரு வந்துச்சுன்னு லிங்க் போட்டீங்கனா வந்து சத்தம் பெருசா, சின்னதான்னு பார்க்க வருவேன்)

கலகலப்ரியா said...

தனித் தனியாகப் பதில் சொல்ல எனக்குச் சற்றுக் கால அவகாசம் வேண்டும்..

நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டவர்களுக்காக ஒரு இடுகை தேற்றி விடுகிறேன்...

ஏழர said...

பிரச்சனையை தணிய விடாமல் யாரோ செயல்படுகிறார்கள் என்று எழுதியிருந்தேன்....
உ.த.வின் பின்னூட்டம் பல ஐயங்களை தீர்த்தது. நன்றி அண்ணே

உண்மைத்தமிழன் said...

[[[ஏழர said...
பிரச்சனையை தணிய விடாமல் யாரோ செயல்படுகிறார்கள் என்று எழுதியிருந்தேன்.... உ.த.வின் பின்னூட்டம் பல ஐயங்களை தீர்த்தது. நன்றி அண்ணே]]]

அண்ணே..

செய்றதையெல்லாம் செஞ்சுட்டு பழியை எங்க மேல போடாதீங்கண்ணா..!

என்னிக்கும் இல்லாத திருநாளா திடீர்ன்னு இந்தப் பூனையும் பால் குடிக்குமான்ற கதையா ரொம்பத் தன்மையா இந்தப் பதிவுல மட்டும் பாசத்தைக் கொட்டி பின்னூட்டங்களை போட்டதுக்குத்தான் நான் பதில் போட்டேன்..!

பிரச்சினையை வளர்க்க இல்ல..! இப்படித்தான் நீங்க நினைப்பீங்கன்னு எனக்குத் தெரியும்.. ஏன்னா நீங்கள் அரசியல்வாதிகள்.. நடத்துவது அரசியல்..!

நான் இதற்கு மேல் எதுவும் இது பற்றி பேசப் போவதில்லை..!

எனக்கு ஆயிரத்தெட்டு வேலை இருக்கு.. சினிமா விமர்சனம் ஒண்ணு டிராப்ட்லயே இருக்கு..!

குட்பை..!

ரோஸ்விக் said...

// செந்தழல் ரவி said...
&&&இன்னும் என்னுடைய பின்னூட்டங்கள் நிறைய இருக்கே... பதில் யார் சொல்லுவா??

June 8, 2010 11:34 AM&&&

கண்ட இடத்திலும் எதையாவது கிறுக்கிவிட்டு என்னை பதில் சொல்ல சொன்னால் எப்படி சார் ? எனக்கு தனிமடல் அனுப்புங்க பதில் சொல்கிறேன்.//

ரவி - ”எதையாவது கிறுக்கிவிட்டு” என்ற வாசகத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன். எதுவும் இதில் உளறல் இல்லை.

நீங்கள் எழுதுவதை நான் என்றும் விமர்சிக்கவில்லை. நினைவு இருக்கட்டும்.

பதில் உங்களை சொல்லச் சொல்லவில்லை. பிரச்சனையில் சம்பந்தம் இல்லாத பதிவர்கள் பலரையும் இந்த விவகாரத்தில் தேவையில்லாமல் இழுத்த அனைவரையும் தான் கேட்கிறேன்.

இந்த இழவில் உங்களை மட்டும் கேட்கவில்லை. மனசாட்சி இருப்பவர்கள் பதில் சொல்லட்டும்.

ரவி said...

---உங்க ஊர்ல பொட்டிக்கடை வைக்காத நேரத்துல ஏதாவது லயன்ஸ் கிளப்புல சேருங்க சார்...
---

எந்த தொழில் செய்தாலும் அதை பெருமையாக நினைப்பவன் நான். லயன்ஸ் கிளப்பில் சேரும் அளவுக்கு வெட்டி ஆப்பீசர் அல்ல.

ரவி said...

&&&செந்தழல் ரவி.... (ர-க்கும் முன்னாடி ர்ர்ர்ர்ர்ர் போடனுமா)... ர் உங்க விசைப்பலகையில மாட்டிக்கிச்சா!!
&&&&

என் மகள் விசைப்பலகையின் பொத்தான்கள் சிலவற்றை பிய்த்துவிட்டது உண்மைதான். ஆனால் அந்த இர்ர்ர்ரு ரொம்ப மரியாதையானவர்ர்ருக்கு நானே போட்டேன்.

ரவி said...

&&எவ்வளவோ வேலைகளுக்கிடையிலும் இந்த வெட்டிகளுக்காக பின்னூட்டமிட்டதற்கு நன்றி ரவி. கவிதை போட்டு திட்டுமளவுக்கு நீங்கள் மன்னருமல்ல நான் ஏழைப் புலவனுமல்ல. கைக்கு வரத எழுதறது தான். கவுஜன்னு லேபில் போடுறதுதான்.

June 8, 2010 5:54 PM&&&

வானம்பாடிகள் அய்யா. வினவு தோழர்களுக்கு அலைபேசியில் அழைத்து சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களை நீக்குமாறு நேற்று கேட்டேன். என்ன நடந்திருக்கிறது என்று பார்ப்போம்.

ரவி said...

//தகவலைத் தராமல் ஏன் திசை திருப்புகிறீர்கள் திரு.ரவி அவர்களே? இப்பொழுதாவது சொல்லுங்களேன் என்ன சமாதானம் செய்தீர்கள்?//

உங்களிடம் ஏன் சொல்லவேண்டும் ? நீங்கள் எந்த ஊருக்கு நாட்டாமை ?

ந்னு சொல்லுகிறீர்களே என்ன அர்த்தம் திருவாளர் இரவி அவர்களே?

தனக்கென்றால் ஒரு நீதி. பிறர்க்கென்றால் ஒரு நீதி. நல்லா இருக்கு உங்க நியாயம் திரு இரவி அவர்களே.

குறிப்பு : திருவாளர் இரவி இதைச் சொல்ல வேண்டும் என்பதால் தான் லூசா எனக் கேட்டேன் பதிவுலகில் நான் யாரையும் தவறாகப் பேசமாட்டென் என்பது என்னை அறிந்தவர்கள் அறிவார்கள்.

லூசா என்பது ஒன்றும் கெட்ட வார்த்தை அல்லவே? அதே சமயம் அந்த மூவரும் மோசமான ஆட்கள் என கேரக்டர் அசாசினேசன் செய்த போதும் உங்களுகு இதே அறச்சீற்றம் வரவில்லையே? ஏன் திருவாளார் இரவி அவர்களே?


////

லூசு என்று சொல்லிவிட்டீர்கள் அப்புறம் எப்படி உங்களிடம் மரியாதையாக பேசமுடியும் ?

ஏற்கனவே உங்கள் முட்டாள்தனமான நாட்டாமை பின்னூட்டங்களை பார்த்து, உங்கள் அச்சகத்தில் வேலை செய்யும் பூனை பின்னூட்டம் போட தொடங்கிவிட்டது என்று சொன்னேன்.

எப்படி பிரச்சினை முடிந்தது என்று உங்களுக்கு சொல்வதால் என்ன பயன் ?

பிரச்சினையை அலைபேசியில் அழைத்தோ தனிமடல் அனுப்பியோ பேசுவோம். அது தான் நட்பு.

வெறுமனே பின்னூட்டங்களில் பஞ்சாயத்து செய்துகொண்டிருந்தால் எந்த நன்மையும் ஏற்படாது.

இந்த பிரச்சினைக்கு மூலகாரணமே நீங்கள் தான் என்று கேள்விப்பட்டேன். நல்லா இருங்க சாமீ.

Unknown said...

நாந்தான் லேட்டா...

இப்பிடி கும்மியடிக்கப்போறீங்கன்னா கொஞ்சம் சொல்லலாமுல்ல. நானும் வந்து கும்மியிருப்பேன்ல?

ஈரோடு கதிர் said...

// செந்தழல் ரவி said...
லயன்ஸ் கிளப்பில் சேரும் அளவுக்கு வெட்டி ஆப்பீசர் அல்ல.//

அப்புறம் எந்த வெண்ண வெட்டி ஆப்பீஸ்ஸ்ஸர்... வேலையில்லாம
எவனெவன் லயன்ஸ் கிளப்புல இருக்கிறாருன்னு எட்டியெட்டி பார்த்தது.....

vasu balaji said...

செந்தழல் ரவி said...
&&எவ்வளவோ வேலைகளுக்கிடையிலும் இந்த வெட்டிகளுக்காக பின்னூட்டமிட்டதற்கு நன்றி ரவி. கவிதை போட்டு திட்டுமளவுக்கு நீங்கள் மன்னருமல்ல நான் ஏழைப் புலவனுமல்ல. கைக்கு வரத எழுதறது தான். கவுஜன்னு லேபில் போடுறதுதான்.

June 8, 2010 5:54 PM&&&

வானம்பாடிகள் அய்யா. வினவு தோழர்களுக்கு அலைபேசியில் அழைத்து சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களை நீக்குமாறு நேற்று கேட்டேன். என்ன நடந்திருக்கிறது என்று பார்ப்போம்//

மிக்க நன்றி ரவி.

கலகலப்ரியா said...

ம்ம்.. அப்புறம் வர்றேன்..